Pages - Menu

Thursday, 28 November 2013

திட்டிய நாகார்ஜூனா... அழுத சமந்தா...

 

நாகேஸ்வரராவ், நாகார்ஜுனா, நாக சைதன்யா என மூன்று தலைமுறை நடிகர்களும் 'மனம்' என்ற படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

இதில் நாகார்ஜூனாவுக்கு ஜோடியாக ஸ்ரேயாவும், நாக சைதன்யாவுக்கு ஜோடியாக சமந்தாவும் நடிக்கிறார்கள்.

இப்படத்தை நாகார்ஜுனா தயாரிக்கிறார். 45 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் இந்தப் படத்தின் இறுதிக் காட்சியில் ஒரு ட்விஸ்ட் உள்ளது.

இந்த ட்விஸ்ட் யாருக்கும் தெரியக் கூடாதென்று  மிக ரகசியமாக படம் பிடித்தனர்.

அந்த ட்விஸ்ட் காட்சியில் சம்பந்தப்பட்ட நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் தவிர வேறு யாரையும் ஸ்பாட்டில் இருக்க அனுமதிக்கவில்லை.

ஆனால், சமந்தா இந்த ரகசியத்தை சூசகமாக டுவிட்டரில் தெரிவித்துவிட்டாராம்.

இதனால் கடும் கோபமான நாகார்ஜூனா சமந்தாவை அழைத்து கடுமையாக திட்டித் தீர்த்துவிட்டாராம். சமந்தா அழுதுகொண்டே நாகார்ஜுனா அறையில் இருந்து ஓடி வந்து விட்டாராம்.

இந்தப் படம் முடியும்வரை  யாரும் ஃபேஸ்புக், டுவிட்டர் பக்கமே போகக்கூடாது என்று சொல்லிவிட்டாராம் நாகார்ஜுனா.

No comments:

Post a Comment