Tuesday 21 May 2013

கர்ப்பிணி பெண்கள் நினைத்தால் ஸ்டெம்செல்( STEM CELL ) மூலம் புற்றுநோயாளிகளைக் காப்பாற்றலாம்!







                           ஸ்டெம் செல் சேமிப்பை மேம்படுத்தி, தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பொது ரத்த வங்கியான ஜீவன் ரத்த வங்கி மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு 9 கோடி ரூபாய் நிதியை வழங்க முடிவு செய்துள்ளது.



ஸ்டெம் செல் சிகிச்சை என்றால் என்ன?



                     தொப்புள் கொடியை வெட்டியவுடன் அதிலிருந்து வரும் ரத்தம், பிரத்யேகமான தனித்தன்மையான செல்களால் ஆனது. இதுதவிர தொப்புள் கொடியில் உள்ள திசுக்களிலும் சக்தி வாய்ந்த மெசன்கைமல் (mesenchymal) எனப்படும் செல்கள் உள்ளன. இவையே ஸ்டெம் செல்கள் எனப்படும் மூல செல்கள். 



                     இந்த மூல செல்களில் இருந்துதான், நம் உடல் உருவாகியுள்ளது. உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் உருவாக அடிப்படையானது இந்த மூல செல்கள். தொப்புள் கொடி ரத்த திசுக்களில் உள்ள சக்தி வாய்ந்த செல்களைப் பாதுகாத்து வைத்தால், பின்னாளில், உறுப்புகள் நோய்வாய்ப்படும்போது  இவற்றைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கலாம்.




              இந்தியா முழுவதும் 3 லட்சம் ரத்தப் புற்று நோயாளிகள் உள்ளார்கள் (ஆண்டுதோறும் புதிதாக 20 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகிறார்கள்). ரத்த சிவப்பணுக்கள் பாதிப்பால் ஏற்படுவது தலஸ்சீமியா. இந்த 2 பிரச்சினைகளுக்கும் ஒரே நிரந்தரத் தீர்வு ஸ்டெம் செல் சிகிச்சை மட்டுமே.




       ஆனால், தற்போது ஸ்டெம் செல்லை இறக்குமதி செய்து, சிகிச்சை செய்துகொள்ள 25 லட்ச ரூபாய் ஆகிறது. இதனால், பொருளாதார நிலையில் பின்தங்கியவர்கள், சிகிச்சை பெற முடியாத நிலை இருந்து வருகிறது. ஆனால், இந்த ஏழைகளுக்கு உதவ தமிழக அரசு ஒரு முற்போக்கான நடவடிக்கையை அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஸ்டெம் செல்களைப் பாதுகாத்து வரும் ரத்த வங்கியான ஜீவன் வங்கிக்கு ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் வீதம் 3 ஆண்டுகளுக்கு 9 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க உள்ளது.




           ஒரு தொப்புள் கொடியைப் பெற்று, அதிலிருந்து ஸ்டெம் செல்லைப் பிரித்தெடுத்து 24 ஆண்டுகளுக்குப் பாதுகாக்க 30 ஆயிரம் ரூபாய் செலவாகும். இப்போதைக்கு எங்களிடம் 750 ஸ்டெம் செல்கள்தான் பாதுகாக்க பொருளாதார வசதி உள்ளது. தமிழக அரசின் இந்த நிதி உதவியினால் 2014 ஜூன் மாதத்திற்குள் 7,500 ஸ்டெம் செல்கள் சேமிக்க திட்டமிட்டு உள்ளோம்.



       சேமிக்கப்படும் ஸ்டெம் செல்லில் 75 சதவிகிதத்தை அரசு பரிந்துரைக்கும் நோயாளிகளுக்கு, ஜீவன் ரத்த வங்கி அளிக்கும். முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிகிச்சை பெறும் புற்றுநோயாளிகள் மற்றும் தலஸ்சீமியா நோயாளிகளுக்கு ஸ்டெம் செல்கள் இலவசமாக வழங்கப்படும்



          மீதி  25 சதவிகிதம் நோயாளியின் ஆண்டு வருமானத்திற்கு ஏற்ப 5 முதல் 10 லட்சம் ரூபாய் ஆண்டு வருவாய் உள்ளவர்களுக்கு,  50 ஆயிரம் ரூபாய் என்கிற கட்டண அடிப்படையில் வழங்கப்படும். இவ்வாறு வசூலிக்கப்படும் கட்டணம், ஸ்டெம் செல் சேமிப்பை மேம்படுத்த பயன்படுத்தப்படும்".



  
       ஸ்டெம் செல் கிசிச்சை இலவசமாக மக்களுக்குக் கிடைக்க, ஒரு மாநில அரசு நிதியுதவி செய்வது இந்தியாவில் இதுதான் முதல்முறை. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளில் உள்ள அரசுகள், இதுபோல நிதியுதவி செய்து வருகின்றன. ஆனால், இந்தியாவில் தமிழ்நாடுதான் முதல்.




      ஓராண்டில் தமிழகத்தில் மட்டும் லட்சக்கணக்கான  குழந்தைகள் பிறக்கின்றன. குழந்தை பிறந்தவுடன் வேஸ்ட் என்று தூக்கிப் போடும் தொப்புள் கொடியை எங்களிடம் கொடுத்தால், இன்னொரு உயிரைக் காப்பாற்ற அதிலுள்ள ஸ்டெம் செல்கள் பயன்படலாம்.



 நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கர்ப்பம் தரித்த 28-ஆவது வாரத்தில் எங்களை தொடர்புகொண்டு பதிவு செய்தால் போதும். மற்ற நடைமுறைகளை நாங்கள் பார்த்துக் கொள்வோம்" என்கிறார், டாக்டர். சீனிவாசன்.


விவரங்களுக்கு : 044 - 28351200, 044 - 28150300 அல்லது http://www.bethecure.in/ (or) srinivasanjeevan.org.





கூடுதல் தகவல்களுக்கு,







Note:- 

உங்களால் முடிந்தவரை அனைவருக்கும் பகிரவும்


தரம் நிறைந்த குறைந்த விலையில்( ரூ.10,000 ) - " 3D ஸ்மார்ட் போன் " வந்தாச்சு!




3 m - Tec - phone
             


                         பொதுவாக சாம்சங், ஆப்பிள்,  எச்.டி.சி.  போன்ற பல்வேறு மிகப் பெரிய நிறுவனங்கள் எக்கச்சக்க விலையில் ஸ்மார்ட் போன்களை தயாரித்து வருவது தெரிந்த விஷ்யம்தான்.   அதே சமயம் சில சின்ன நிறுவனங்கள் இது போன்ற படாபடா பிராண்டிங்களின் ஸ்மார்ட் போனுக்கு இணையான சாதனங்களை குறைந்த விலையில் தயாரித்து வருவது தெரியுமா?.


அந்த லிஸ்டில் குறிப்பிடத்தக்க நிறுவனமாக மைக்ரோமெக்சை சொல்லலாம். 



                         குறிப்பாக இந்த மைக்ரோமெக்சின் கென்வாஸ் வரிசை ஸ்மார்ட் போன்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உண்டு. விலையுயர்ந்த ஸ்மார்ட் போன்கள் வழங்கக் கூடிய அத்தனை வசதியையும் இவையும் வழங்குகின்றன. மேலும் இவற்றின் விலையும் ரொம்ப குறைவானதாகும்.


                        
                            அத்துடன் ஆங்காங்கே சர்வீஸ் செண்டர் வைத்திருப்பதால் இந்த பிராண்டை நம்பி வாங்குபவர்கள் அதிகமாம். பெரும்பாலும் மைக்ரோமெக்ஸ் இந்த ‘விலை குறைவு – தரம் அதிகம்’ (Less Pay – Get More) உத்தியைக் கையாண்டு சந்தையில் குறிப்பிடக்க அளவு வளர்ச்சியைக் கண்டுள்ளது என்றே சொல்லல்லாம். அப்பேர் பட்ட கம்பெனி தற்போது வழக்கம் போல் குறைந்த விலையில் முப்பரிமாண ஸ்மார்ட் போன் ஒன்றை வெளியிட்டுள்ளது.




                      இதற்கு   Micromax A115 Canvas 3D  என பெயரிடப்பட்டுள்ளது.









                     இதில் முப்பரிமாண திரை மட்டுமன்றி 1 GHz டுவல் கோர் புரசசர், 512 எம்.பி. ரெம் மற்றும் 5 மெகாபிக்ஸல் காமராவினையும் இது கொண்டுள்ளது. இது மட்டுமன்றி அண்ட்ரோய்ட் 4.1.2 ஜெலி பீன் மூலம் இது இயங்குவதுடன் டுவல் சிம் வசதியையும் கொண்டுள்ளது. 




இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட் போனின் விலை இந்திய நாணயப்படி ஜஸ்ட் 10 ஆயிரம் ரூபாயாதான்!.

அரிய தகவல்களைத் தேடுபவரா நீங்கள்? உங்களுக்காக இது!





                         எத்தனையோ விஷயங்கள் குறித்த தகவல்கள் அன்றாடம் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன.  சில தகவல்களைப் படித்தவுடன், அட! இது இப்படியா! என ஆச்சரியப்பட வைக்கின்றன.  சில, நாம் அதுவரை தவறாக எண்ணியிருந்தனவற்றை மாற்றி சரியாக நம்மைத் திருத்துகின்றன. 


                         நாம் தொடர்ந்து சிலவற்றைக் கற்றுக் கொண்டே இருப்பதும் நம் மூளையைத் தீட்டுவதற்கு ஒப்பானதாகும்.  இதனால், நம் அறிவும் விசாலமாகிறது.  இது போன்ற தகவல்களை அன்றாடம் நமக்கு ஓர் இணையதளம் வழங்கினால் எவ்வளவு எளிதாக இருக்கும்.  இந்த இலக்குடனே ஓர் இணையதளம் இயங்குகிறது.  



அதன் முகவரி, 






                     இந்த தளத்தில் நுழைந்தவுடனேயே, அன்றைக்குப் புதியதாக பதியப்பட்டிருக்கும் கட்டுரைகளின் தலைப்புகள் நம்ம வியப்பில் ஆழ்த்துகின்றன.  



                    ஒவ்வொரு கண்டத்திற்கும் எப்படி அந்த பெயர் வந்தது என்ற சுவையான தகவல் தரப்பட்டிருந்தது




                    மேலும் சில தலைப்புகள்  உங்களுக்காக இதோ....













அரிய தகவல்கள் தேடுவோர் அவசியம் காண வேண்டிய இணைய தளம் இது..

அவன திருப்பிக் கடி -1


பச்சபுள்ள ஜோக்ஸ்







" ஏன்டா சட்டை போடாம வாக்கிங் போற?"






" டாக்டர்தான் என்னை டெய்லி வெறும் வயித்தோட நடக்கணும்னு சொன்னாரு! "





வியக்கவைக்கும் இணைய தளம் - கல்லூரி மாணவர்களுக்கு......







                 கல்லூரிகளில் தேர்வுகள் படு வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. பல மாணவர்கள் அடுத்த ஆண்டுக்கு தங்களைத் தயார் செய்து கொள்ளும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 


                    இவர்களுக்கு நூல்களை வழங்க, கல்லூரி மற்றும் தனியார் நூலகங்கள் இருந்தாலும், தங்களுக்கென எடுத்து வைத்து, விரும்பும் நேரத்தில் படிப்பதனையே இவர்கள் விரும்புவார்கள்.


                      இவர்களுக்கு உதவிடும் வகையில் பல இணைய தளங்கள் உள்ளன. அவற்றில் மிக மிக சிறப்பான ஒன்றை அண்மையில் காண நேர்ந்தது. அதன் இணைய தள முகவரி






                       இந்த தளத்தில், நமக்குத் தேவைப்படும் நூலின் பெயர் அல்லது எழுதிய ஆசிரியர் அல்லது பொருள் குறித்து தேடல் கட்டத்தில் டைப் செய்தால், நாம் தேடும் பொருள் குறித்த அனைத்து நூல்களும் வரிசையாகப் பட்டியலிடப்படும். தேவையான நூல் தலைப்பு அருகே, டபுள் கிளிக் செய்தால், உடன் நாம் எந்த நாட்டில் இருந்து இந்த நூலினைத் தரவிறக்கம் செய்ய இருக்கிறோம் என்ற தகவலைத் தர வேண்டும். 






                       உடனே அந்நூல் பி.டி.எப். வடிவில், கம்ப்யூட்டரில் தரவிறக்கம் செய்யப்படும். நம் பெயரைப் பதிவு செய்வதோ, அக்கவுண்ட் உருவாக்குவதோ இதில் தேவை இல்லை. 






                        கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் என உயர்கல்வி பயில்வோருக்கு இந்த தளம் மிகவும் உதவி செய்வதாய் அமைந்துள்ளது.



           கற்க விரும்பும் அனைவரும் சென்று பார்க்க வேண்டிய தளம் இது.



Note:-

  { மிக அருமையாக உள்ளது இத்தளம் }