Saturday 7 September 2013

உங்களுக்காக கூகுள் ஒரு புதிய விநோதம்!


கூகில் தேடுபொறியில் நாம் தேடும் வார்த்தையை சேமித்து
ரெக்காட் செய்து ஒரு புதிய முகவரியை கொடுக்கும் இணையதளம்
ஒன்று உள்ளது.முற்றிலும் மாறுபட்ட இணையதளமாகவே உள்ளது.
இனி இதை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

”லெட் மி கூகுள் தட் பார் யு “இணையதள முகவரி : www.lmgtfy.com
இந்த இணையதளத்திற்கு செல்லவும் கூகுல் போன்றே தோற்றம்
அளிக்கும் இதில் நீங்கள் தேடும் வார்த்தையை டைப் செய்து
“Google search ” பட்டனை அழுத்தவும்.






இப்போது படம் 1- ல்காட்டியபடி அதே முகப்பு திரையில் கட்டத்திற்குள்
இணையதள முகவரி ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும் இதன் அருகில்
மவுஸை கொண்டுசெல்லும் போது “copy” மற்றும் “shorten”  இரண்டு
பட்டன் தெரியும். இப்போது “shorten ” என்ற பட்டனை அழுத்தவும் சில
நொடிகளில் ஒரு shorten முகவரி தெரியும்.அதை ”Copy ”  செய்து
New window -ல் அந்த இணையதள முகவரியை “Paste” செய்யவும்.
இப்போது நீங்கள் எற்கனவே கூகிலில் தேடிய வார்த்தை அதுவாகவே
தானாக டைப் செய்யப்பட்டு கூகுலில் விடைகளை காண்பிக்கும்.
வேடிக்கைகாக மட்டும் இல்லை இதன் பயன் என்னவென்றால் சில
நேரங்களில் பெரிய நிறுவனத்திற்கு நாம் இணையதளம் வடிவமைத்து
கொடுக்கும் போது கூடவே அந்த நிறுவனத்தின் பெயரை கூகுலில்
டைப் செய்தால் தேடுதல் முடிவில் உங்கள் நிறுவனம் முதலிடம் வரும்
என்று சொல்வதை விட இந்த மாதிரி ஒரு இணையதளமுகவரி
கொடுத்தால் அவர்கள் அந்த முகவரியை க்ளிக் செய்யும் போது
அதுவாகவே கூகுலில் அந்த நிறுவனத்தின் பெயரை டைப் செய்து
இவர்களது நிறுவனத்தின் இணையதளம் வருவது போன்ற இந்த முறை
இன்னும் சிறப்பாக இருக்கும்.உதாரணமாக நாம் goodluckanjana என்று டைப்
செய்து ஒரு முகவரி உருவாக்கியுள்ளோம்.  http://bit.ly/1cShbJa


உலகநாடுகளின் பணத்தில் உங்கள் புகைப்படம் இருக்க!

நம் நணபருக்கு பிறந்தநாள் என்றால் எதாவது பரிசு கொடுப்போம்
ஆனால் அவர் வேறு எந்த நாட்டில் ஆவது இருந்தால் என்ன
செய்வோம் இமெயில் மூலம் எதாவது வாழ்த்து அட்டை
அனுப்புவோம். நம் நண்பர் எந்த நாட்டில் இருக்கிறாறோ அந்த
நாட்டின் பணத்தில் அவர் உருவம் பதித்து அனுப்பினால் எவ்வளவு
நன்றாக இருக்கும்.ஆனால் எனக்கு போட்டோ எடிட் செய்யும் எந்த
மென்பொருளும் தெரியாது என்கிறீர்களா ? , அல்லது தெரியும்
ஆனாலும் நேரம் இல்லை என்கிறீர்களா ?  5 நிமிடம் போதும்.
உங்களுக்காகவே ஒரு இணையதளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.festisite.com/money/
இதை எப்படி உருவாக்குவது என்று பார்ப்போம்.
எந்த நாட்டின் பணத்தில் உங்கள் நண்பரின் புகைப்படம் சேர்க்க
வேண்டுமோ அந்த பணத்தை முதலில் தேர்வு செய்து கொள்ளவும்.
அடுத்து உங்கள் நண்பரின் புகைப்படத்தை தேர்வு செய்து அப்லோட்
செய்யவும்.ஒரு சில நிமிடங்களில் தேர்வு செய்த பணத்தில் உங்கள்
நண்பரின் புகைப்படம் வந்துவிடும். வலது , இடது , மேல், கீழ் என்று
அம்புக்குறியை அழுத்தி புகைப்படத்தை சரிசெய்து கொள்ளவும்.
+ என்ற பட்டன் மூலம் படத்தை பெரியதாக்கலாம்.  -  என்ற பட்டன்
மூலம் படத்தை சிறியதாக்கலாம். எல்லாம் சரி செய்யபட்டவுடன்
” Finalize image “ என்ற பட்டனை அழுத்தவும்.
அடுத்து தோன்றும் பகக்த்தில் படத்தின் மேல் “Right clik”
செய்து “Save Image” என்பதன் மூலம் சேமித்துக்கொள்ளவும்.
பின் உங்கள் நண்பருக்கு அனுப்புங்கள்.
உதாரணமாக நாம் நம் தேசதந்தை காந்திஜி-யின் படத்தை
அமெரிக்காவின் ஒன் மில்லியன் டாலர் நோட்டில் சேர்த்துள்ளோம்.
பொருத்தமாகவே உள்ளது. இதே போல் உங்கள் புகைப்படம்
அல்லது உங்கள் நண்பரின் புகைப்படத்தையும் வைத்து உருவாக்கலாம்.

உலகத்தின் அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் நேரடியாக பயர்பாக்ஸ் இணையஉலாவி மூலம் பார்க்கலாம்!

 
 
உலகத்தில் இருக்கும் அனைத்து டிவி நிகழ்ச்சிகளையும்
எந்த ஒரு டிவி டியூனர் கார்டு துனையும் இல்லாமல்
பார்க்க முடியுமா ? அதுவும் நேரடியாக ?  ஆம் உங்களால்
பார்க்க முடியும். எந்த இணையதளத்துக்கும் செல்ல வேண்டாம்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிவி சானல்கள். குழந்தைகளின்
கார்ட்டூன் நிகழ்ச்சி முதல் அனைத்து தொழில்நுட்ப செய்திகளையும்
உடனுக்கூடன் நேரடியாக பார்க்கலாம். எந்த கட்டணமும் செலுத்த
வேண்டியதில்லை.இதையெல்லாம் விட சிறப்பு நம்மூர்
“Vijay Tv ” கூட பார்க்கலாம். எப்படி என்பதை இனி பார்ப்போம்.
 
 
 
 
உங்கள் “ Firefox ” இணைய உலாவியை திறந்து கீழ்கண்ட
முகவரியை Addresbar-ல் கொடுக்கவும்.
 
 
வரும் இணையபக்கத்தில் ” Add to Firebox ” என்ற பட்டனை
அழுத்தவும்.
 
 
அதுவாகவே டவுன்லோட் ஆகி இன்ஸ்டால் ஆகும்
இன்ஸ்டால் ஆகி முடிந்ததும். பயர்பாக்ஸ் உலாவியை “Restart”
செய்யவும். இப்போது படம்-2 ல் காட்டியபடி ” TV Toolbar “
தானாக வ்ந்துவிடும். இப்போது எந்த நாட்டு சானல் பார்க்கவேண்டுமோ
அதை தேர்வு செய்து பார்க்கலாம்.
 
 
உதாரணமாக நாம் விஜய்டிவி தேர்வு செய்துள்ளோம்.
 

இணையதள சொந்தகாரருக்கும் வடிவமைப்பாளருக்கும் ஒரு வரப்பிரசாதம்!

நாம் சொந்தமாக இணையதளம் ஒன்று வைத்து இருந்தால்
அது எல்லா கம்யூட்டரிலும் மற்றும் எல்லா இணைய உலாவி
(web browser)-களிலும் எப்படி தெரியும் ? நாம் வடிவமைத்தபடி
தெரியுமா ?  எந்த உலாவிகளில் எல்லாம் நம் இணையதளம்
வேறுபட்டு தெரிகிறது ? லினக்ஸ்(Linux ) ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில்
நன்றாக தெரியுமா ?  மெக் (Mac OS) ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில்
எப்படி தெரியும் ? இப்படி பல கேள்விகள் அத்தனைக்கும்
ஒரே பதில் இந்த இணையதளம் வழங்குகிறது.
 
 
 
 
உங்கள் இணையதள முகவரியை கொடுக்க வேண்டும்.
எந்தெந்த ஆப்ரேட்டிங் சிஸ்டம் , எந்தெந்த உலாவி ,
பக்கதின் அளவு , ஜாவா துணை வேண்டுமா என்பதை
எல்லாம் தேர்வு செய்த பின் ” Submit ” பட்டனை அழுத்த்வும்.
அவ்வளவு தான் அடுத்த பக்கத்தில் இரண்டு நிமிடம் காத்திருக்க
சொல்லும். அதன் பின் அந்த பக்கத்தை “Refresh ”  செய்யவும்.
உங்கள் இணையதளம் எப்படி எல்லாம் தெரியும் என்று
பார்க்கலாம் சேமித்தும் வைத்துக்கொள்ளலாம்.
இணையதள முகவரி:  www.browsershots.org
 
 
 
 

2016 ஒலிம்பிக்குடன் ஓய்வுபெற உசைன் போல்ட் திட்டம்!



பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 2016ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்குப் பின்பு ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக ஜமைக்காவின் உசைன் போல்ட் அறிவித்துள்ளார்.


உலகின் அதிவேக மனிதர் என்றழைக்கப்படும் போல்ட், களத்தில் மின்னல் வேகத்தில் இலக்கைக் கடந்து பதக்கங்களை குவித்து வருபவர். இவர், களத்தில் இருக்கும் வரை மற்றவர்கள் பதக்கம் வெல்வது இயலாது என்ற சூழல் தற்போது நிலவி வருகிறது.


இந்நிலையில், 2016 ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு தனது ஓய்வு குறித்து பரிசீலிக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் கூறுகையில், ரியோ ஒலிம்பிக் போட்டியில் அதிக தங்கப் பதக்கங்களை வெல்ல வேண்டும். 200 மீற்றர் ஓட்டப் பந்தயப் போட்டியில் மீண்டும் உலக சாதனை படைக்க வேண்டும்.


காமன்வெல்த் விளையாட்டிலும் தங்கம் வெல்ல வேண்டும். அதற்குப் பிறகு ஓய்வு பெறுவது குறித்து பரிசீலிப்பேன் என்றும் விளையாட்டில் உச்சத்தில் இருக்கும்போதே ஓய்வு பெறுவது நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் எனவும் தெரிவித்தார்.


போல்ட் வென்ற தங்கங்கள்:


ஒலிம்பிக் போட்டியில் போல்ட் இதுவரை 6 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். 2008ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 100 மீ, 200 மீ, 4*100 தொடர் ஓட்டம் ஆகியவற்றிலும், 2012 லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 100மீ, 200 மீ, 4*100 தொடர் ஓட்டம் ஆகியவற்றிலும் தங்கம் வென்றுள்ளார்.


மாத்திரை சாப்டாச்சு! வயிற்றுக்குள் இருந்து கைபேசிக்கு குறுஞ்செய்திகளை அனுப்பும் சென்சார்!


 tablet_sensor_002

மனிதர்கள் தமது உடலுக்குள் உள்ளெடுக்கும் பொருட்களை துல்லியமாகக் காட்டிக் கொடுப்பதற்கு இலத்திரனியல் மாத்திரை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.


சாதாரண மாத்திரைகளைப் போன்று இதனையும் உள்ளெடுக்க வேண்டும்.
அவ்வாறு உள்ளே சென்று குடலின் அடிப்பகுதியில் தங்கிக் கொள்ளும்.
அதன் பின்னர் ஒவ்வொரு தடவையும் வாய்மூலம் உள்ளெடுக்கப்படும் பொருட்களை துல்லியமாக அறிந்து உங்கள் ஸ்மார்ட் செல்பேசிகளுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பிக்கொண்டே இருக்கும்.
இதில் பொருத்தப்பட்டுள்ள விசேட சென்சார் ஆனது ஈரலிப்பாகும்போது தகவல்களை கையில் பொருத்தப்பட்டிருக்கும் விசேட சாதனத்திற்கு அனுப்புகின்றது.


பின்னர் அங்கிருந்து ஸ்மார்ட் கைப்பேசிக்கு தகவலை அனுப்பிவிடுகின்றது.
இதனால் வைத்தியர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


அதாவது நோயாளிக்கு வழங்கப்பட்ட மாத்திரைகளை ஒழுங்காக உள்ளெடுக்கின்றாரா? என்பதனை பரிசோதிக்க முடிகின்றது.
இதுதவிர குழந்தைகள் அநாவசியமான பொருட்களை விழுங்கிவிட நேர்ந்தால் அப்பொருளினை கண்டறிந்து தகுந்த சிகிச்சை அளிக்கக்கூடியதாகவும் காணப்படுகின்றது.


இஸ்ரோவில் கூட ஊழல்! : சி.ஏ.ஜி-யின் அறிக்கையில் தகவல்!!


உலக மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தை வகிக்கும் இந்தியாவால் லண்டன் ஒலிம்பிக்கில் ஜொலிக்க முடியவில்லை , உலக பதக்க பட்டியலில் 41வது இடத்தை பிடிக்கதான் முடிந்தது. இந்த விரக்க்த்தியினால் தானோ எண்ணவோ. இந்தியாவை எப்படியும் உலக ஊழல் பட்டியளிலாவது முன்னுக்கு கொண்டு வந்தே தீருவது என நம்மை ஆள்பவர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவதாகவே தோன்றுகிறது.

இந்தியா சுதந்திரமடைந்ததிலிருந்து நடைபெற்ற ஊழல்கள் அனைத்தும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. நடநதவை இவை மட்டுமே அல்ல. இவை மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டு மக்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டவை. இதில் புழ்ங்கிய மொத்தத் தொகை கிட்டத்தட்ட ரூபாய். 910,603,234,300,000 இது அமெரிக்க டாலரில் 20.23 டிரில்லியன். இத்தனை பெரிய தொகையை வைத்து, இந்தியா ஓர் இரவில் மிகப்பெரும் வல்லரசாக மாற்றிவிடமுடியும், அனைத்து சமூகப் பிரச்சினைகளையும் முக்கியமாக வறுமையையும் வேலையில்லாத் திண்டாட்டத்தையும் நிரந்தரமாக ஒழித்துவிடலாம் என்று சொல்லி வந்த நிலையில் சாதாரண மக்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லாத விண்வெளி ஆராய்ச்சி துறையான இஸ்ரோவிலும் முறைகேடுகள் நடந்துள்ளதாக வெளியான செய்தியால் தேசிய அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. .

sep 7 scams detail

 


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் பெரிய அளவிலான ஊழல் நடந்துள்ளதாக மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி சி.ஏ.ஜி-யின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு சொந்தமான விண்வெளி சுற்றுப்பாதையில் பன்னாட்டு தனியார் நிறுவன செயற்கைகோளை நிலைநிறுத்த இஸ்ரோ அனுமதி வழகங்கியதாக அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இண்டெல் சட் என்ற இந்த செய்றகைகோளை இந்தியாவின் 55இ என்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த பெரிய அளவில் பணம் கைமாறி இருக்க வாய்ப்பு உள்ளதாக சி.ஏ.ஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இந்தியாவின் செயற்கைகோள் தொலைதொடர்பு கொள்கையை மீறிய செயல் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச தொலைதொடர்பு யூனியனின் ரேடியோ ஒழுங்குமுறை விதிகளும் மீறப்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த விதிமீறலுக்கு பின்னால் ஊழல் நடந்துள்ளதாக கருதுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. 

2003ஆம் ஆண்டு பிப்ரவரி ஒர் ஆண்டு காலத்திற்கு இண்டெல் சட்டிடம் 16 டிரான்ஸ்பாண்டர்களை கூத்தகைக்கு எடுத்ததில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் தணிக்கையில் தெரியவந்துள்ளதாக சி.ஏ.ஜி தெரிவித்துள்ளது. 


CAG raps ISRO for allowing foreign satellites in Indian orbit slot

********************************************************* 

The Comptroller and Auditor General (CAG) Friday rapped space agency ISRO for allowing a foreign private satellite service provider to park its satellite in an orbit slot meant for Indian satelites in violation of nation’s SATCOM policy and extending “undue benefit” to a foreign firm. 

TABLET BUYING GUIDE : 2013!



E Book உங்களுக்காக....

அனைவருக்கும் பயன்படும் என்ற நோக்கில்  Make Of Use இணைய தளத்தால் வெளியிடப்பட்ட "TABLET BUYING GUIDE" என்ற மின் புத்தகம்.


tabletbuying 176x250 MakeUseOf Tablet Buying Guide: Summer 2013

So what makes an iPad worth all the hype? What’s Android? Windows 8? From Samsung to Surface, the list of tablet terms goes on and on. There are many manufacturers making tablets of all shapes and sizes running a great variety of software, and how do you know which one is right for you? This guide will put in simple language the facts you need to know about all the kinds of tablets out there, and based on some key facts which one you should ultimately purchase.

 
 

பல் ஏன் துலக்க வேண்டும்? எப்படி துலக்குவது??


நம் அன்றாட வாழ்வில் பல துலக்குதல் ஓர் அத்தியாவசியமான அங்கமாகிவிட்ட காலமிது. காலையில் கண் விழித்ததும் நாம் ஒவ்வொருவரும் செய்ய நினைக்கும் முதல் காரியம் பல் துலக்குதலே. துலக்கி முடிக்கும் வரை நாம் வாயில் எச்சில் கூட்டி விழுங்கவும் தோன்றாது, துப்பவும் தோன்றாது படும் அவதி ஓர் தனி விதம். துலக்கிய பின் தோன்றும் புத்துணர்வும், தூய்மை உணர்வும் ஓர் தனி இன்பமே. எனவே பல் துலக்குதல் காலைக் கடன்களில் ஒன்றாகவே கருதப்பட்டு, அனைவராலும் சாதி, மத பேதமின்றி, அனைத்து நாடுகளிலும் கடைபிடிக்கப் பட்டு வருகிறது.பல் துலக்குதல் வாயின் சுகாதாரத்தை பாதுகாப்பது மட்டுமில்லாமல், பற்சிதைவையும், ஈறுகளில் உண்டாகும் நோய்களையும், மற்றும் வாய் துர்நாற்றத்தையும் தவிர்க்க வல்லது.

sep 5 - tooth brush
 
ஏன் பல் துலக்க வேண்டும்?

பல் துலக்குதல் என்பது நம் வாயிலும் பற்களிலும் உள்ள அழுக்கை நீக்கத்தான். இந்த அழுக்கை ஆங்கிலத்தில் plaque என்றும் tartar என்றும் கூறுவர். இந்த அழுக்கானது, பல் ஈறுகளிலிருந்து நீக்கப்படாத உணவுத் துகளும், கிருமிக் கூட்டங்களும் கலந்த ஓர் கலவையே. பல் துலக்கிய இரண்டு அல்லது மூன்று மணிகளுக்குள்ளே இந்த அழுக்கு (plaque) பல் ஈறுகளில் படியத் துவங்கும். இவைகள் பல்லை மட்டுமல்லாமல் பல் ஈறுகளுக்கும் பாதிப்புகளை அதிகமாக்குவதோடு, பற்களை இழப்பதற்கும்
காரணமாகிவிடுகிறது.எனவே பற்களை இருமுறை துலக்குதலும், உணவு உண்டபின் ஒவ்வொரு முறையும் மிக நன்றாக வாய் கொப்பளித்தலும் மிக மிக இன்றியமையாத ஒன்றாகும். இதற்கு தண்ணீரையோ, கொப்பளிக்கும் திரவத்தையோ உபயோகிக்கலாம்.

எப்படி பல்லை துலக்குவது


பல் துலக்குவதற்கு ஒரே ஒரு சரியான முறைதான் உள்ளது என்ற நிலை இல்லை. அந்நுட்பம் ஒவ்வொருவரின் வாய், தாடையில் பற்கள் அமைந்துள்ள தன்மையினைப் பொருத்து மாறுபடும். பரவலாக, பல் மருத்துவர் பலராலும் பயன்பாட்டுக்குப் பரிந்துரைக்கப் படும் அழுக்கினை (plaque) நீக்கும் வழியினை இங்கு பார்ப்போம்.

பெரியவர்கள் கடைபிடிக்க வேண்டிய முறை;


பல் துலக்கியின் (plaque) குச்சுகள் 45 டிகிரி கோணத்தில் ஈறுகளின் மேல் சாய்த்துப் பிடித்து, ஒவ்வொரு முறையும் மூன்று பற்களின் மேல், முன்னும், பின்னும் நகர்த்தி, சிறிது அதிர்வுடன் கூடிய சுழற்றும் முறையிலும் தேய்க்க வேண்டும். இம் முறையை கடைவாய் பற்களில் துவக்கி முன் பற்கள் வரை, மூன்று, மூன்று பற்களாக முன்னேற வேண்டும். மேல் தாடையின் வலது, இடது, உள், வெளி பக்கங்களிலும், அதே போல் கீழ் தாடையிலும் வலது, இடது, உள் வெளி பக்கங்களிலும் தேய்க்க வேண்டும்.

இச்சுழற்சியினை சுமார் 15 முதல் 20 முறைகள் ஒவ்வொர் இடத்திலும் மேற்கொள்ள வேண்டும்.

முன் பற்களுக்கு மட்டும் பல் துலக்கியை செங்குத்தாக பிடித்து 45 டிகிரி கோணத்தில் மேலும் கீழும் நகர்த்தி, உள்ளும் வெளியும் தேய்த்து விட வேண்டும்.

கடைவாய் பற்களின், மெல்லும் மற்றும் கடிக்கும் பகுதிகளில் பல்துலக்கியின் குச்சுகளால் நன்றாக அழுத்திப் பிடித்து முன்னும் பின்னுமாக தேய்த்து விட வேண்டும். பற்களைத்தான் செம்மையாக தேய்த்து முடித்தாயிற்றே என்று முடித்து விடாமல் மறவாது நமது நாக்கின் புற பகுதிகளில் பல் துலக்கியால் முன்னும் பின்னும் அசைத்து நகர்த்தி தேய்த்தால், வாய் துர்நாற்றம் வீசக் காரணமான கிருமிகளை அகற்றி விட முடியும்.

சிறியவர்களுக்கான முறை

சிறார்களை பல் முற்றும் ஈறுகளில் பல் துலக்கியின் குச்சுகளால் வட்ட வடிவில் சுழற்சி முறையில் தேய்க்க அறிவுறுத்த வேண்டும்.

உங்களுக்கு தெரியுமா, பச்சிளம், பல் முளைக்காத பாலகர்களுக்கும் பக்குவமாக ஈறுகளை விரல்களால் தேய்த்து விடுதல் சாலச் சிறந்த முறை. குழந்தைகளை பாசப் பரிவுடன் ஒரு கையில் ஏந்திக்கொண்டு மறு கையில், ஆள்காட்டி விரலில் ஈர துணி சுற்றி ஈறுகளில் இதமாக முழுதாக தடவி துடைத்து விட வேண்டும்.

எத்தகைய பல்துலக்கிகளை உபயோகித்தல் நல்லது.
மிருதுவான, கூர்முனை இல்லாத, வட்ட வழுவழுப்பான முனைகள் கொண்ட நைலான் குச்சுகளுடன் கூடிய பல் துலக்கியால் பல் துலக்குவது நல்லது. கூர் முனை குச்சுகளை தவிர்க்க வேண்டும். கடினமான மற்றும் விரைப்பான குச்சுகள் கொண்ட பல் துலக்கிகள் பல்லின் எனாமல் மற்றும் ஈறுகளை சேதப்படுத்தி விடக்கூடும். அவைகளை தவிர்த்தல் நலமே.

எவ்வித பற்பசைகளை உபயோகிக்கலாம்


பற்சிதைவை தடுக்கும் தன்மை வாய்ந்த புளூரைடு கொண்ட பற்பசைகளை உபயோகித்தல் நல்லது. சிறுவர்களுக்கு ஒரு பட்டாணியின் அளவிலான பற்பசையினை உபயோகித்தலே போதுமானது. ஏனெனில் சில சிறுவர்கள் அதிக பற்பசை வைத்தால் துலக்கும்போது விழுங்கிவிட வாய்ப்புண்டு . இது அவர்களுக்கு உடலில் அதிக அளவிலான புளூரைடு நிறைந்து பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பளிக்கும்.

தவறான பல்துலக்கும் நுட்பம் தரும் பாதிப்புகள் என்ன

உடலிலேயே மிக மிக கடினமானது, கெட்டியானது எதுவென்றால் அது பல்லின் வெளிப்புறமுள்ள எனாமல்தான். இது எலும்பை விட உறுதியானது. தவறான, முறையற்ற வகையில் பல் துலக்கும் பழக்கமான இந்த உறுதியான எனாமலையும் பாதித்து, செயலிழக்கச் செய்து, பற்சிதைவை உருவாக்கிவிடக் கூடும். அத்தோடு ஈறுகளை சிதைத்து, இரத்தம் வழியவிட்டு, புண்ணாக்கி பல பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

எப்பொழுதும் பதமாக, மெதுவாக பல் துலக்கிகளை உபயோகிப்பீர். மூன்று மாதத்திற்கு ஒருமுறை பல் துலக்கிகளை மாற்றிவிடுவது அவசியம்.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..! – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் சமீப காலத்தில் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து பிரமாண்டமான வளர்ச்சியை (சம்பளத்தில் மட்டும்) பெற்றவர் சிவகார்த்திகேயன்.இவர் நடிப்பில் வெளிவந்திருக்கிற படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’… முழுப்படமும் காமெடியை மையப்படுத்தி எடுக்க வேண்டும் என இயக்குனர் பொன்ராம் முயற்சித்திருக்கிறார்… பாவம் பல இடங்களில் காமெடிக்கு பதில் ‘நற…நற…’ கடிதான் மிஞ்சுகிறது.


கதை என பார்த்தால் பெருசாக எதுவும் இல்லை. சிவகார்த்தியும், சத்யராஜூம் கிராமத்தில் எதிர் எதிர் பார்ட்டிகள்… சத்யராஜ் மகள் மீது சிவகார்த்திக்கு காதல்… இந்த காதல் கைகூடியதா… சத்யராஜ் வில்லத்தனம் ஏதாவது செய்தாரா? என்பதுதான் கதை.

sep 7 Varutha-Padatha-Valibar

 

படத்தின் தலைப்பை போலவே எந்த காட்சிக்கும்… பாடலுக்கும்… கதைக்கும்… ஏன் படத்துக்குமே இயக்குனரும், நடிகர்களும் வருத்தப்படாமல் இஷ்டம்போல எடுத்திருக்கிறார்கள்… படம் பார்க்கிற நமக்குத்தான் வருத்தமோ… வருத்தம்… இருக்காதா எதுவுமே புரியமாம போனா…
சத்யராஜ் இதுவரை நடித்த கதாபாத்திரங்களில் இருந்து மிகவும் மாறுபட்டு மிகவும் கீழே இறங்கி வந்து போயிருக்கிறார்… அவரின் வழக்கமான நடிப்பு கூடஇந்த படத்தில் இல்லை.

தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளின் இரு பெரும் தலைவர்கள் மோதிக் கொண்ட விஷயத்தை ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ பேரில் நக்கல் செய்திருப்பது இயக்குனரின் குசும்புத்தனத்துக்கு ஒரு உதாரணம்…(எந்த கட்சின்னு நாங்க சொல்ல மாட்டோம்மில்ல)
ஊருக்கே தெரிந்த சத்யராஜின் மகள்தான் ஹீரோயின் என்பது சிவகார்த்திக்கு தெரிந்த பிறகும்… ‘ஊதா கலரு ரிப்பன்… யாரு உனக்கு அப்பன்’ என பாடலிலும் லாஜிக் மீறியிருக்கிறார்கள்..(சினிமாவுல ஏதுப்பா லாஜிக்னு யோசிக்கிறது தெரியுது…)

சிவகார்த்தியை மட்டுமே மையப்படுத்தி படம் ஓடுகிறது… இயக்குனர் ராஜேஷ் வசனம் பெருசாக எடுபடவில்லை… இமானின் இசையில் இளையராஜாவின் பாடல்கள் ஒலிக்கிறது… பாலசுப்பிரமணியின் ஒளிப்பதிவு மட்டும் ஓகே ரகம்… கிளைமாக்ஸ் முடியும் என பார்த்தால் நீ…..ண்டு கொண்டே போகிறது… மொத்தத்தில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் பார்க்கிற ரசிகர்களை கூட சேர்த்துக் கொள்ளாது என்பதுதான் வெளியே தெரியாத உண்மை..!
படத்துல கதைன்னு எதுவும் இல்லாம போனாலும் போட்டிக்கு எந்த படமும் ரிலீஸ் ஆகாதது இந்த பட வசூலுக்கு வாய்ப்பா அமையலாம்..!