Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Tuesday, 3 June 2014

காதலிப்பது குறித்து ஊடகங்களில் வெளியான செய்தி.. : மனம் திறக்கிறார்கள் ஸ்ருதி, ரெய்னா...!




தாங்கள் இருவரும் காதலில் உள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவலை நடிகை ஸ்ருதிஹாசன் மற்றும் ரெய்னா இருவரும் மறுத்துள்ளனர். நடிகர் கமலின் மூத்த மகளும், பிரபல நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பன்முகத்திறமைகளைக் கொண்டவருமான ஸ்ருதிஹாசன், பிரபல கிரிக்கெட் வீரர் ரெய்னாவைக் காதலிப்பதாகவும், இருவரும் படு ரகசியமாக காதலை வளர்ப்பதாகவும் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால், தற்போது அத்தகவலை சம்பந்தப்பட்ட இருவரும் மறுத்துள்ளனர்.

பிரபல கிரிக்கெட் வீரரான ரெய்னா, ஏற்கனவே பல நடிகைகளுடன் காதலில் உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்நிலையில் தற்போது ஸ்ருதியுடன் இணைத்துப் பேசப்பட்டார். ஆனால், இக்காதல் செய்தி உண்மையில்லை என ரெய்னா மறுத்துள்ளார்.

 இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் மறுப்புத் தகவல் வெளியிட்டுள்ளார் ரெய்னா. அதில் அவர், ‘நிறைய ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.ஆனால் யாருமே இதனை ஊர்ஜிதப்படுத்த முடியவில்லை. எல்லோருக்கும் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திக் கொள்கிறேன். நான் யாரையும் காதலிக்கவில்லை’ என இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.

இதேபோல், இப்பிரச்சினை தொடர்பாக ஸ்ருதியின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சுரேஷ் ரெய்னாவை ஸ்ருதி ஹாசன் காதலிப்பதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை. சுருதிஹாசன் சினிமாவில் பிசியாக இருக்கிறார்’ எனக் கூறப்பட்டுள்ளது.

Sunday, 5 January 2014

``அப்பா`` ஆன “விக்ரம்``...!



ஷங்கர் இயக்கத்தில் “விக்ரம் “நடித்துள்ள படம் “ஐ”. இந்த படத்துக்காக கடந்த இரண்டு வருடங்களாக கடினமாக உழைத்து வந்த விக்ரம், தற்போதுதான் அந்த மேக்கப்பை கலைத்து விட்டு, புதிய படங்களுக்காக கதை கேட்டு வருகிறார்.

தாண்டவம், ராஜபாட்டை உள்பட சில படங்கள் தோல்வி காரணமாக இப்போது ரொம்பவே உஷாராகி வருகிறார் விக்ரம். அவர் சில நாட்களாக நடித்த “கரிகாலன்” படமும் கிடப்பில் போடப்பட்டதால், இனி அதுபோன்ற பிரச்னைகள் தனக்கு ஏற்படக்கூடாது என்றும் கவனமாக செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் மற்ற மொழிகளிலும் வெளியான தரமான கதைகளாக இருந்தாலும் நடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கும் விக்ரம், சமீபத்தில் மலையாளத்தில் மோகன்லால் நடித்த “த்ரிஷ்யம்” படத்தை பார்த்து அசந்து விட்டார். மோகன்லாலின் நடிப்பும், படத்தின் கதையும் அவருக்குள் ஏறபடுத்திய தாக்கம் காரணமாக அந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தில் கமல் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்றொரு கருத்தும் கோலிவுட்டில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இப்போது விக்ரமே முன்வந்திருப்பதால், அப்படத்தின் தமிழ் ரீமேக்கில் மோகன்லால் வேடத்தில் விக்ரம் நடிப்பதற்கு சாத்தியங்கள் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் அஜித்துடன் மோதும் சத்யராஜ்..!



நக்கல் மன்னன் சத்யராஜ் நடித்துள்ள கலவரம் திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

சத்யராஜ் ஹீரோவாக நடித்திருக்கும் கலவரம் திரைப்படத்தை எஸ்.டி.ரமேஷ்செல்வம் இயக்கியுள்ளார். ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு இக்கதை இருக்குமென்றும் கூறப்படுகிறது. யுனிவர்சல் புரொடக்சன்ஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

பொங்கல் கொண்டாட்டங்களை முன்னிட்டு இளைய தளபதி விஜய் மற்றும் தல அஜித்தின் முறையே ஜில்லா மற்றும் வீரம் ஆகிய திரைப்படங்கள்
வெளியாகவிருப்பது அனைவரும் அறிந்ததே. இப்படங்கள் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதும், ஏற்கெனவே இப்படங்களுக்கான முன்பதிவு தொடங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து சத்யராஜின் கலவரம் திரைப்படமும் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. பொங்கல் வெளியீடாக இப்படம் பொங்கல் தினமான ஜனவரி 14ல் வெளியாகுமா அல்லது ஜனவரி 10 லேயே வெளியாகுமா என்பது சரியாகத் தெரியவில்லை.

விஜயுடன் - தனுஷ் .....!




இளைய தளபதி விஜயுடன் தான் பாட்டுப்பாடி, நடனமாடி மகிழ்ந்ததாக தனுஷ் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

சமூக ஊடகமான ட்விட்டரில் தனுஷ் பெரும்பாலும் ஏக்டிவாக இருக்கிறார். அவரது அப்டேட்டுகளை தனது ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்ள டிவிட்டர் அவருக்கு மிகவும் உதவிகரமாக அமைந்துள்ளது. சமீபமாக தனுஷின் டிவிட்டர் ஐடி வெரிஃபை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனவரி 4 ஆம் தேதி இளையதளபதி விஜயுடன் அவர் ஆடிப்பாடி மகிழ்ந்ததாக விஜயுடன் தான் இருக்கும் புகைப்படத்தைத் டிவிட்டரில் வெளியிட்டிருந்தார். nஉடனே விஜய் ரசிகர்கள் இளையதளபதியைத் தங்களுக்கு ஒரு ஹாய் சொல்லச் சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டனர். உடனே விஜய் தனது ரசிகர்களுக்கு ஹாய் சொல்லும் புகைப்படத்தையும் பகிர்ந்தார். இதுகுறித்து தனுஷ் மற்றும் விஜய் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றனர்.

விஜயின் ஜில்லா திரைப்படம் வருகிற ஜனவரி 10ல் வெளியாகவிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்கவுள்ளார்.

தனுஷ் தற்பொழுது தனது இருபத்தைந்தாவது படமான வேலையில்லாப் பட்டதாரி படத்திலும், கே.வி.ஆனந்த இயக்கும் அனேகன் படத்திலும் நடித்துவருகிறார்.

எல்லாரும் மறக்காம திருட்டு வீசிடில படம் பாருங்கள் : உளறிய ஐீவா!! -




தனது பிறந்த நாள் விழாவின் போது இரசிகர்கள் மத்தியில் பேசிய ஜீவா தவறுதலாக எல்லாரும் மறக்காம திருட்டு வீசிடில படம் பாருங்க என வாய் தவறிப் பேசியதால் சிரிப்பில் அரங்கம் கலகலத்தது.

நடிகர் ஜீவாவுக்கு நேற்று முப்பதாவது பிறந்த நாள். தன் பிறந்த நாளையொட்டி 20 பெண்களுக்கு இலவச தையல் எந்திரங்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சி சென்னை ஆர்கேவி அரங்கில் நடந்தது. உதவிகள் வழங்கிய பிறகு ஜீவா பேசுகையில்..

இந்த முறை ஒரு நடிகராக மட்டுமல்ல, தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறேன். அண்ணன் விஜய் நடிக்கும் ஜில்லா படத்துக்கு நானும் அண்ணனும் இணைத் தயாரிப்பாளர்கள். எல்லோரது படங்களும் நன்றாக ஓடணும்.

சினிமா என்பது ஒருவரையொருவர் சார்ந்து இயங்கும் உலகம். அதனால் படங்கள் ஓடணும். அதற்கு நீங்கள் எல்லாம் படத்தை தியேட்டரில் போய் பார்க்கணும். எல்லாரும் மறக்காம திருட்டு வீசிடில பாருங்க, என்றார் வாய் தவறி.

உடனே வந்திருந்தவர்கள் சத்தமாக சிரித்து வைக்க, சாரி விஜய் – அஜித் பற்றி பேசினாலே இப்படித்தான் தடுமாறுகிறது. டெலிட் பண்ணிடுங்க, என்றார்.
மீண்டும் மறக்காம திருட்டு வீசிடில படம் பார்க்காதீங்க என்பதற்கு பதில், பாருங்க என்றே தவறுதலாகக் குறிப்பிட்டார். மூன்றாவது முறைதான் திருட்டு வீசிடில பார்க்காதீங்க என்றார்.

இளையராஜா இன்று முதல் மீண்டும் இசையமைக்கிறார்!





சினிமா இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கடந்த மாதம் 23–ந்தேதி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ‘ஆஞ்ஜியோ பிளாஸ்ட்’ சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின் கடந்த மாதம் 27–ந் தேதி அவர் வீடு திரும்பினார். சில நாட்கள் வீட்டில் ஓய்வு எடுத்தபின், மீண்டும் இசையமைக்க தொடங்கியிருக்கிறார்.

இன்று (திங்கட்கிழமை) சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெறும் ‘ராஜராஜ சோழனின் போர்வாள்’ என்ற படத்தின் பாடல் பதிவில் கலந்து கொண்டு அவர் இசையமைக்கிறார். இந்த படத்தை கவிஞர் சிநேகன் தயாரித்து கதாநாயகனாக நடிக்கிறார். அமுதேஸ்வர் டைரக்டு செய்கிறார்.

தொடர்ந்து அமீதாபச்சன் நடிக்கும் ஒரு இந்திப்படத்துக்கும், இன்னொரு புதிய இந்திப்படத்துக்கும் இசையமைக்கப்போவதாக நிருபர்களிடம் இளையராஜா தெரிவித்தார்.

கஹானி இந்தி ரீமேக்கில் நடிக்கும் நயன்தாராவுக்கு விருது கிடைக்கும்: டைரக்டர் சேகர்முல்லா



இந்தியில் வெற்றிகரமாக ஓடிய கஹானி படம் தமிழ், தெலுங்கில் அனாமிகா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.

இந்தியில் வித்யாபாலன் முக்கிய கேரக்டரில் நடித்து இருந்தார். காணாமல் போன கணவனை தேடும் கர்ப்பிணி பெண் வேடத்தில் அவர் வந்தார். தமிழ், தெலுங்கு பதிப்பில் வித்யாபாலன் கேரக்டரில் நயன்தாரா நடிக்கிறார். ஸ்ரீராம ராஜ்ஜியம் படத்தில் நயன்தாரா நடிப்பை பார்த்து வியந்து இப்படத்துக்கு தேர்வு செய்தார்களாம். சேகர்முல்லா இப்படத்தை இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.

இதில் நயன்தாராவும், கர்ப்பிணி வேடத்தில் நடிக்கிறார் என்று செய்திகள் வந்தன. ஆனால் படக்குழுவினர் அதை மறுத்தனர். புதிதாக திருமணமான பெண் காணாமல் போன தனது கணவனை தேடி அலைவது போன்று கதையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து டைரக்டர் சேகர்முல்லா கூறும்போது, கஹானி இந்திப் படம் இந்தியா முழுவதும் திரையிடப்பட்டு விட்டதால் அந்த படத்தை அப்படியே படமாக்கினால் ரசிகர்களிடம் வரவேற்பு இருக்காது. எனவேதான் கதையில் மாற்றங்கள் செய்துள்ளேன். அனாமிகா படத்தில் நயன்தாரா சிறப்பாக நடித்து இருக்கிறார். அவருக்கு நிச்சயம் விருது கிடைக்கும் என்றார்.

அனாமிகா படத்தில் பசுபதி, வைபவ் போன்றோரும் நடித்துள்ளனர். விரைவில் ரிலீசாக உள்ளது.

மன்சூர் அலிகானின் அடுத்த ‘அதிரடி’ ஆரம்பம்



சினிமாவில் எதையாவது வித்தியாசமாக செய்வது மன்சூரலிகானின் வாடிக்கை. பூனையை குறுக்கே விடுவது. ராகுகாலத்தில் படபூஜை போடுவது என்பது இவரது முந்தைய செயல்படுகள்.

அவரது ராஜ்கென்னடி பிலிம்ஸ் சார்பில் ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட... என்ற நீளமான பெயர் கொண்ட படத்தை எடுத்தார். வாழ்க ஜனநாயகம் என்ற அரசியல் கிண்டல் படம் எடுத்தார். இவர் எடுத்த படங்கள் பிளாப் ஆனாலும் அடுத்தடுத்து படம் எடுப்பது அவரது தன்னம்பிக்கை.

இன்று காலை ஆர்கேவி ஸ்டூடியோவில் 50 முட்டைகளை விழுங்கி, வயிற்றில் பாறாங்கல்லை உடைத்து, தனது குழந்தைகளுடன் பாட்டுபாடி என பல அதிரடி வேலைகளை செய்து படத்தை துவக்கினார். விழாவுக்கு வந்திருந்தவர்கள் மிரண்டு ஓடாத குறையாக இருந்தது அவரது அதிரடிகள்.

விஜய்க்கு கிடைத்த இணையதள பெருமை..?



ஜில்லா’ வெளியாகப் போகும் உற்சாகத்தில் இருக்கும் விஜய்க்கு, இந்த புத்தாண்டில், அவரின் உற்சாகத்தை, மேலும் அதிகரிக்கும் வகையிலான செய்தி கிடைத்துள்ளது.

 கடந்தாண்டில், இந்தியாவில், இணையதளங்கள் மூலம், அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியலில், விஜயின் பெயரும் இடம் பிடித்துள்ளது. ஆனாலும், இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டம் எதிலும், விஜய் பங்கேற்கவில்லையாம்.

புத்தாண்டை, முழுக்க முழுக்க, தன் குடும்பத்தினருடன் மட்டுமே செலவிட்டாராம். ‘ஜில்லா’ படம் வெளியாகும் வரை, வேறு எந்த படப் பிடிப்பிலும் பங்கேற்காமல், ஓய்வு எடுக்கவும் திட்டமிட்டுள்ளாராம், விஜய். படம் வெளியான பின், முருகதாஸ் இயக்கத்தில் உருவாகப் போகும் படத்தில், நடிக்கவுள்ளார்.

உதயநிதியின் “நண்பேன்டா“...



உதயநிதி ஸ்டாலின் நண்பேன்டா படத்தின் லோகோவை வெளியிட்டுள்ளார்.

தயாரிப்பாளராக இருந்து நடிகராக மாறியுள்ள உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து மூன்றாவது முறையாக நடிகர் சந்தானத்துடன் 'நண்பேன்டா' என்ற தனது சொந்தப் படத்தில் இணைகின்றார்.

இயக்குனர் ராஜேஷின் இணை இயக்குனரான ஜெகதீஷ் இந்தப் படத்தை இயக்க உள்ளார்.

ராஜேஷ் இயக்கி நடிகர் ஆர்யா நடித்து வெளிவந்த 'பாஸ் என்ற பாஸ்கரன்' படத்தில் சந்தானம் பேசி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற 'நண்பேன்டா' என்ற வசனமே இந்தப் படத்தின் தலைப்பாக மாறியுள்ளது.



தற்போது இணையதளத்தில் இந்த லோகோவை வெளியிட்டுள்ள உதயநிதி, பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

உதயநிதி, சந்தானம் மற்றும் நடிகை காஜல் நடிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் பொறுப்பினையும், பாலசுப்ரமணியன் ஒளிப்பதிவையும் ஏற்றுள்ளனர்.

தொடரும் வெற்றிப்பட ஃபார்முலா...



சந்தேகமே வேண்டாம். தெலுங்கு சினிமாதான் ஒரே பாடம். தென்னிந்திய கமர்ஷியல் சினிமாவில் கால் பதிக்க நினைக்கும் அனைவரும் கசடற கற்க வேண்டிய பால பாடங்கள் ஆந்திராவில்தான் தயாராகின்றன.

ஆக்ஷனா... இந்தா பிடி என கொடுக்கிறார்கள். லோ பட்ஜெட் கொத்து பரோட்டாவா... எடுத்துக்கோ என பரிமாறுகிறார்கள். நெகிழ வைக்கும் குடும்பச் சித்திரங்களா... வாங்க வாங்க என அழைக்கிறார்கள். த்ரில்லரா... இந்த பயம் போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா என அலற வைக்கிறார்கள். மொத்தத்தில் எல்லா ஜானரையும் நீக்கமற கொடுக்கிறார்கள். க்ளாமருக்கான எல்லைக்கோட்டை பிரமாதமாக வரையறுக்கிறார்கள்.

1980களில் தமிழ்ச் சினிமா இப்படித்தான் இருந்தது என்பது கடந்தகால வரலாறானது நமது துர்பாக்கியம்.

இதெல்லாம் இட்டுக்கட்டிய கதைகள் என முஷ்டியை உயர்த்துபவர்கள் ரூம் போட்டு சென்ற ஆண்டு வெற்றிப் பெற்ற தெலுங்குப் படங்களை ஒரு பார்வை பார்த்துவிடுவது நல்லது.

அது வேற வாய்... இது வேற வாய்... என்று நக்கலடிக்க முடியாத அளவுக்கு இந்த ஆண்டும் ரவுண்டு கட்டி அடிக்க சுந்தரத் தெலுங்கு திரையுலகம் தயாராகிவிட்டது. அதை முரசடித்து அறிவிக்கும் விதமாகத்தான் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்த நிநொக்கடினே (1) படம் சங்கராந்தியை (பொங்கலை) ஒட்டி வெளியாகிறது. ஆர்யா புகழ் சுகுமார் இயக்கியிருக்கும் இந்தப் படம் ஆக்ஷன் த்ரில்லர். இந்தப் படத்துக்காக மகேஷ் பாபு சிக்ஸ் பேக் ஆக மாறியிருப்பது படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது. ஒளிப்பதிவு வேறு ரத்னவேலுவா... படம், ஸ்டைலிஷ் ஆக இருக்கும் என்று கூரை மீதேறி வசூல் அம்மன் கூவ ஆரம்பித்துவிட்டார். போதும் போதாததற்கு இந்தப் படத்தை முடித்துவிட்டு இயக்குநர் சீனு வைட்டாலா படத்தில் மகேஷ் பாபு நடிக்கப் போகிறார். தூகுடு மெகா ப்ளாக் பஸ்டருக்கு பிறகு இருவரும் இணைகிறார்கள். ஸ்கிரிப்ட் ஒர்க் முடிந்துவிட்டது. அநேகமாக இந்தப் படம் ஆண்டு இறுதியில் வெளியாகும்.

இப்படி மகேஷ் பாபு குறித்து ஆர்ப்பாட்டமாக சொல்லிவிட்டு அவருக்கு சமமாக தெலுங்கு திரையுலகை ஆட்சி செய்யும் பவன் கல்யாண் குறித்து குறிப்பிடாவிட்டால் அலுவலகம் தேடி வந்து அடிப்பார்கள். காரணம், சம பலத்துடன் மோதிக் கொண்டிருப்பவர்கள் இவர்கள் இருவரும்தான். இருவரும் கதாநாயகனாக அறிமுகமாகி இந்த ஆண்டுடன் 20 ஆண்டுகளை பூர்த்தி செய்கிறார்கள். தவிர, கபார் சிங், கேமராமேன் கங்கா தோ ராம்பாபு, அதாரின்டிகி தாரென்டி என தொடர் வெற்றிப் படங்களை கொடுத்துவிட்டு சிம்மாசனத்தில் ஜம்மென்று பவன் கல்யாண் அமர்ந்திருக்கிறார். ஸோ, அதை தக்கவைக்கவும் மகேஷ் பாபுவுக்கு சவால் விடவும் தன் சார்பில் ஒரு படத்தை இந்த ஆண்டும் கொடுக்கிறார். அதுதான் கபார் சிங் 2. நடிப்பதுடன் இந்தப் படத்தை தயாரிப்பதும் பவன்தான்.

இந்தி சினிமாவை புரட்டப் போகிறேன் என்று சென்ற ஆண்டு சூளுரைத்த ராம் சரண், இப்போது பெட்டிப் பாம்பாக அடங்கிவிட்டார். இருப்பதை தக்க வைத்துக் கொண்டால் போதும் என்ற மனநிலைக்கு வந்திருப்பவர், சென்ற ஆண்டே தயாராகிவிட்ட எவடு பட வெளியீட்டுக்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறார். ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான பிருந்தாவனம் படத்தை எழுதி, இயக்கிய வம்சி பைடபள்ளிதான் எவடுவை இயக்கியிருக்கிறார். அதனால் எதிர்பார்ப்பும் இருக்கிறது.

இதோ வருகிறது கோச்சடையான் கீதம்...

இதோ வருகிறது கோச்சடையான் கீதம்...


கோச்சடையான் படத்தின் இசை பிப்ரவரி 15ம் திகதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘கோச்சடையான்' திரைப்படத்தின் ஓடியோ ரிலீஸை ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிசம்பர் 12 ம் திகதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்ட விழாவாக நடத்த ஏற்பாடு நடந்து வந்தது.

குறிப்பிட்ட நாட்களுக்குள் படத்தின் வேலைகள் முடிவடைவதில் தாமதம் ஏற்படுவதால் டிசம்பர் 12 ம் திகதி வெளியாகவிருந்த ஓடியோ வெளியீட்டு விழா ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் கோச்சடையான் படத்தின் இசை உரிமையை வாங்கியிருக்கும் சோனி நிறுவனம், பிப்ரவரி 15ம் திகதி இசை வெளியிடப்படும் என்று தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருக்கிறது.

தற்போது பிப்ரவரியில் இசை வெளியீடு முடிந்து, படத்தை ஏப்ரலில் வெளியிட முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

நாட்டில் முதன்முறையாக 3டி அனிமேசன் தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படத்தை ஈராஸ் நிறுவனத்துடன் இணைந்து மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தினர் தயாரிக்கின்றனர். இப்படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம் ஆகிய பொறுப்புக்களை கே. எஸ். ரவிக்குமார் ஏற்றுள்ளார்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

ஐ திரைப்படத்தின் கதை இதுதானா..?




அந்நியன் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு மறுபடியும் ஷங்கர், விக்ரம் இணையும் திரைப்படமாதலால் ‘ஐ’ திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

இயக்குனர் ஷங்கர் ‘ஐ’ திரைப்படத்தைப் பற்றிய எவ்வித தகவல்களையும் வெளியிடாமல் படப்பிடிப்பு நடத்தியதால் ’ஐ’ திரைப்படத்தின் கதை என்று பல கதைகள் பேசப்பட்டன. ஆனால் தற்போதோ ஐ திரைப்படத்தின் கதை இதுதான் என்று அடித்து சொல்கிறது கோடம்பாக்கம். விஷ இரசாயணங்களால் பாதிக்கப்பட்ட 5 நபர்களின் கதை தான் ஐ திரைப்படமாம்.

ஐ திரைப்படத்திற்காக விக்ரம் பல்வேறு கெட்-அப்புகளில் தன்னை மாற்றிக்கொண்டிருந்த படங்களைப் பார்த்த ரசிகர்கள், ஐந்து கதாபாத்திரத்திலும் விக்ரமே நடிக்கிறாரா? அல்லது ஒரே கதாபாத்திரத்திற்கு மாறுபட்ட தோற்றமா? இது தான் ஐ திரைப்படத்தின் கதையா? என்ற குழப்பத்தில் இருக்கின்றனர்.

வீரத்தை பின்தள்ளிய ஜில்லா..!



தலைவா தடுமாறியதால் ஜில்லாவை விஜய்யும் அவரது இரசிகர்களும் ரொம்பவே எதிர்பார்க்கிறார்கள்.

முந்தைய படம் எதிர்கொண்ட எந்த சிலுவையையும் ஜில்லா சுமக்கக் கூடாது என்பதற்காக அடக்கியே வாசித்தார் விஜய். அப்படியும் பேனர் கட்டக் கூடாது கட்அவுட் வைக்கக் கூடாது என பல்முனை தாக்குதல்கள்.

வீரம் படத்தின் இரண்டு டீஸர்கள் வெளிவந்த பிறகே ஜில்லாவின் ட்ரெய்லரை வெளியிட்டார்கள். காத்திருந்து கண்கள் பூத்திருந்தவர்களுக்கு கூலிங்கிளாஸ் மாட்டியதுபோல் கரைகடந்த உற்சாகம். இதுவரை 10.7 இலட்ங்களுக்கும் மேல் யூ டியூபில் ஹிட்கள் அள்ளியிருக்கிறது ஜில்லா டீஸர்.

ஏற்கனவே இரண்டு டீஸர்கள் வெளிவந்துவிட்டதால் வீரத்துக்கு ஜில்லாவைவிட குறைவான ஹிட்கள். ஜில்லாவில் மோகன்லாலும் இருப்பதால் மலையாளிகளும் ஜில்லா டீஸரை ஆர்வமோடு பார்த்து வருகிறார்கள்.

Saturday, 4 January 2014

பிரபலங்களின் பியூட்டி சீக்ரெட்ஸ்!




சினிமா நட்சத்திரங்களின் அழகு ரகசியங்களைத் தெரிந்து கொள்வதில் சாமானிய மக்களுக்கு எப்போதும் ஒரு ஆர்வம் உண்டு. அழகுசாதனப் பொருள்களுக்கான விளம்பரங்களில், முன் எப்போதையும் விட, கடந்த சில வருடங்களில் நடிகர், நடிகைகளின் ஆதிக்கம் அதிகரித்திருப்பதன் பின்னணியும் அதுவே. ஆஸ்தான நடிகையோ, நடிகரோ உபயோகிக்கிற அனைத்தையும் தானும் உபயோகித்தால் அவர்களைப் போலவே மாறிவிடலாம் என நம்புகிற  மனிதர்கள் நம்மிடையே பலர் உண்டு. அதெல்லாம் விளம்பர உத்தி என்பதை அறியாத அப்பாவிகள் அவர்கள்!

நடிகர், நடிகைகள் என்ன வேற்று கிரகத்திலிருந்து பூமிக்கு வந்தவர்களா என்ன? அவர்களும் நம்மைப் போல மனிதர்கள்தானே? முதுமையும் தள்ளாமையும் அவர்களுக்கும் உண்டு. அவர்களுக்கும் முடி கொட்டும். நரைக்கும். வழுக்கை விழும். சருமத்தில் சுருக்கங்கள் வரும். அழகு மெல்ல விடைபெறும். சாதாரண மக்களுக்கும் பிரபலங்களுக்கும் ஒரே ஒரு விஷயத்தில்தான் வித்தியாசம். அழகை ஆராதிப்பதிலும், கட்டிக் காப்பதிலும் அவர்கள் காட்டுகிற அக்கறை. அது நம்மிடம் மிஸ்ஸிங். அதனால்தான் நமக்கு சீக்கிரமே வரும் முதுமை, அவர்களுக்கெல்லாம் தாமதமாகிறது.
அழகைப் பேண பிரபலங்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள்? அழகுக்கலை நிபுணர் மேனகா பேசுகிறார்...

தலைக்கு...

* பிரபலங்கள், சாமானிய மனிதர்களைப்போல, நரைத்த முடியுடனும் வழுக்கைத் தலையுடனும் வெளியில் தலை காட்ட முடியாது. அதை மறைக்கும் டெக்னிக்குகளை பின்பற்றியே ஆக வேண்டும். நடிகைகளைப் பொறுத்த வரை முடியை ரொம்பவும் நீளமாகவோ, ரொம்பவும் குட்டையாகவோ வைத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள். மீடியம் நீளமுள்ள, அதாவது, தோள்பட்டை அளவுக்கு வைத்துக் கொள்வார்கள். அப்போதுதான் அவர்களால் எப்படிப்பட்ட ஹேர் ஸ்டைலுக்குள்ளும் பொருந்திப் போக முடியும்.

* வெஸ்டர்ன் லுக்கோ... ட்ரெடிஷனல் லுக்கோ... எதுவும் அவர்களுக்குப் பிரச்னையே இல்லை. எப்படிப்பட்ட ஸ்டைலுக்கும் ஹேர் அட்டாச்மென்ட்டுகள் கிடைக்கின்றன இன்று. கிளிப் உடன் கூடிய அவற்றை அப்படியே ஒரிஜினல் கூந்தலில் பொருத்திக்கொள்ள வேண்டியதுதான். கலரிங், அயர்னிங், பெர்மிங் என எதை வேண்டுமானாலும், அந்த செயற்கை அட்டாச்மென்ட்டின் மேல் செய்து கொள்ளலாம். கூந்தலுக்கு 1 சதவிகிதம்கூட பாதிப்பே இருக்காது. வெளியிலிருந்து பார்க்கிறவர்களுக்கு அவர்கள் ஒரிஜனல் கூந்தலில் செய்து கொண்டது மாதிரியே தெரியும்!

* நரையை மறைப்பதிலும் நட்சத்திரங்கள் ரொம்பவே கவனமாக இருப்பார்கள். ஒரு இன்ச் கூட நரை முடி வெளியே தெரியாமலிருக்க வேண்டும் என்கிற ஜாக்கிரதை உணர்வில் வாரம் ஒரு முறை கூந்தலுக்கு டச் அப் செய்கிறவர்களும் உண்டு. இன்னும் சொல்லப் போனால், சம்பந்தப்பட்ட நடிகருக்கோ, நடிகைக்கோ வெள்ளை முடி இருப்பது, அவர்களது வாழ்க்கைத்துணைக்குக் கூட தெரியாமலிருக்கலாம். எக்கா ரணம் கொண்டும், தரக் குறைவான ‘டை’யே  அவர்கள் உபயோகிக்கவே மாட்டார்கள். அமோனியா கலக்காத வாட்டர் பேஸ்டு ஹேர் கலரிங்கை மட்டுமே உபயோகிப்பார்கள்.

* சரி... திடீரென ஒரு ஃபங்ஷன்... அல்லது போட்டோ ஷூட்... கலரிங் செய்யவோ, பார்லர் போகவே நேரமில்லை... நரையையும் மறைத்தாக வேண்டும்... என்ன செய்வது? ‘டை ஸ்டிக்’ என ஒன்று இருக்கிறது. கருப்பு நிறத்தில் லிப்ஸ்டிக் மாதிரி இருக்கும்... அதை நரை உள்ள இடங்களில் டச் அப் செய்து கொண்டால் போதும்.

கண்களுக்கு...

கேமரா வெளிச்சமும், கண்ட நேரத்து வேலையும் அவர்களின் கண்களையும் பதம் பார்க்கும். அதிலிருந்து விடுபட கண்களுக்கான மசாஜ் செய்து கொள்வார்கள். நடிகைகளுக்கு கண்களின் கவர்ச்சி மிக முக்கியம். முகத்தில் மேக்கப்பே இல்லாவிட்டாலும், கண்களுக்கு மட்டும் மேக்கப் செய்துகொள்ள விரும்புவார்கள். கண் இமைகளை நீளமாகக் காட்ட, ஐ லேஷ் எக்ஸ்டென்ஷன்ஸ் இப்போது பிரபலமாகி வருகிறது. கூந்தல் இல்லாதவர்கள் ஹேர் எக்ஸ்டென்ஷன் செய்து நீளமான முடியிருப்பது போலக் காட்டிக் கொள்வது போல, இது கண் இமைகளுக்கானது. ஒருமுறை செய்து கொண்டால் ஒன்றரை மாதம் வரை அப்படியே இருக்கும்.

நகங்களுக்கு...

நடிகைகளின் கைகளை கவனித்தீர்களானால், நகங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதைப் பார்க்கலாம். அவர்களது நகங்கள் நீளமாகவும், பளபளப்பாகவும் இருக்கும். நெயில் ஆர்ட் செய்து கொள்வதை விரும்புவார்கள். அதில் என்னவெல்லாம் லேட்டஸ்ட்டோ அதையெல்லாம் முயற்சி செய்து பார்ப்பார்கள். நகங்களே இல்லாவிட்டாலும் நோ பிராப்ளம். செயற்கையாக ஒட்டிக்கொள்ளக் கூடிய ஜெல் மற்றும் அக்ரிலிக் நகங்கள் கிடைக்கின்றன. ஏற்கனவே உள்ள நகங்களின் மேல் இவற்றை ஒட்டிக் கொண்டு விட்டால் போதும், வித்தியாசம் தெரியாது!

வாக்கிங்...

நடிகைகள் உபயோகிக்கிற எல்லா அழகுசாதனங்களுமே ஸ்பெஷல் வகையறாதான். அதில் வாக்சும் ஒன்று. சாதாரணப் பெண்கள் உபயோகிக்கிற ஹாட் வாக்ஸ், கோல்ட் வாக்ஸெல்லாம் இவர்களுக்குப் பிடிக்காது. ஃப்ரூட் வாக்ஸ் என ஒன்று வந்திருக்கிறது. விதம் விதமான வாசனைகள் கொண்ட இதை உபயோகிக்கும் போது, மறுபடி முடி வளர நேரம் பிடிக்கும். ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்புதான் இதை உபயோகிப்பார்கள். முகத்துக்குக் கூட இந்த வாக்ஸ் உபயோகிக்கிற நடிகைகள் இருக்கிறார்கள். இதில் வாக்ஸ் செய்வதற்கு முன் உபயோகிக்கக் கூடிய ப்ரீ லோஷனும், வாக்ஸ் செய்த பிறகு உபயோகிக்கக்    கூடிய லோஷனும் இருப்பதால், சருமமும் அழகாக மின்னும்.

உடைகள் மற்றும் நகைகள்...

ஆள் பாதி, ஆடை பாதி என்பது நடிகைகள் விஷயத்தில் மிகச் சரி. எந்த நடிகையாவது அவர்களுக்குப் பொருந்தாத உடை அணிந்து பார்த்திருக்கிறீர்களா? தைத்துப் போட்டார்களா? போட்டுக் கொண்ட பின் தைத்தார்களா எனக் கேட்க வைக்கிற அளவுக்கு அத்தனை கச்சிதமாக உடை அணிவார்கள்.

பெரும்பாலான நடிகைகள் பொது நிகழ்ச்சிகளிலும், சாதாரண நேரத்திலும் நகைகள் அணிய மாட்டார்கள். கழுத்தில் சின்னதாக ஒரு சங்கிலி கூட இருக்காது. தொடர்ந்து நகைகள் அணிவதுகூட சருமத்தில் சில அடையாளங்களைப் பதிக்கும். ஷூட்டிங்கின் போதும், பிரமாண்ட நிகழ்ச்சியின் போதும் மட்டும்தான் அவர்கள் நகைகள் அணிவார்கள்.

அழகு சம்பந்தப்பட்ட பிரச்னைகளை மறைக்கிற டெக்னிக்குகள் இவையெல்லாம். அதை வைத்து நடிகைகள் எல்லாம் அவலட்சணமானவர்கள் என்றும், இப்படித்தான் ஏமாற்று வேலைகளைச் செய்து, அவர்களது குறைகளை மறைத்து, அழகாகக் காட்டிக் கொள்கிறார்கள் என்றும் அவசரப்பட்டு நீங்களாக ஒரு முடிவுக்கு வர வேண்டாம். அழகைத் தக்க வைத்துக் கொள்வதில் அவர்களது அக்கறை நம்மையெல்லாம் பிரமிக்க வைக்கும். அப்படி என்ன செய்வார்கள் என்கிறீர்களா?

கூந்தலோ, சருமமோ அதற்கான சிகிச்சைகளை முறையாக எடுத்துக் கொள்வார்கள். வாரம் 2 முறை கூந்தலுக்கான ஹேர் பாலிஷிங்கும், 4 வாரங்களுக்கு ஒரு முறை ஹேர் கட்டும், வாரம் ஒரு முறை ஹேர் ஸ்பாவும் செய்து கொள்வார்கள். கூந்தல் வளர்ச்சிக்கு உதவக்கூடிய ஷாம்பு, கண்டிஷனர் மற்றும் சீரம்தான் உபயோகிப்பார்கள். வாரம் ஒரு முறை கூந்தலுக்கு மசாஜ் செய்து கொள்வார்கள். கூந்தலை அடர்த்தியாகக் காட்டக் கூடிய ‘வால்யூம் ட்ரீட்மென்ட்’ செய்து கொள்வார்கள்.

மிகச்சிறந்த மேக்கப் சாதனங்களை மட்டுமே உபயோகிப்பார்கள். அவை எஸ்.பி.எஃப் உள்ளதும், வாட்டர் பேஸ்டுமானதாக இருக்கும். மேக்கப் முடித்த பிறகு ஒருவித ஸ்பிரேவை அடித்துக்கொண்டால், பல மணி நேரத்துக்கு மேக்கப் அப்படியே இருக்கும்.

மேக்கப் செய்து கொள்வதில் எடுத்துக் கொள்கிற அக்கறையை, மேக்கப்பை நீக்குவதிலும் எடுத்துக் கொள்வார்கள். சரும அழகுக்கும், ஆரோக்கியத்துக்கும் மேக்கப்பை முறையாக சுத்தப் படுத்த வேண்டியது மிக முக்கியம். எத்தனை தாமதமாக ஷூட்டிங் முடித்துத் திரும்பினாலும், மேக்கப்பை நீக்கி 100 சதவிகிதம் சுத்தமான பிறகுதான் தூங்கச் செல்வார்கள். கூந்தலுக்கும் அப்படித்தான். தவறாமல் நைட் கிரீம் உபயோகிப்பார்கள். வாரம் தவறாமல் ஃபேஷியலும், பாடி பாலிஷும் செய்து கொள்வார்கள். எங்கே வெளியில் சென்றாலும், உடல் முழுவதற்குமான சன் பிளாக் உபயோகிப்பார்கள்.

எல்லாவற்றையும் விட முக்கியம்... அவர்களது சாப்பாடு. நிறைய காய்கறிகள், பழங்கள், பழச்சாறுகள் சேர்த்துக் கொள்வார்கள். தூக்கத்தை
விட்டுக் கொடுக்க மாட்டார்கள். தவறாமல் உடற்பயிற்சி செய்வார்கள்.

கைகளுக்கும், கால்களுக்கும் ஸ்பா மெனிக்யூர் மற்றும் ஸ்பா பெடிக்யூர் செய்து கொள்வார்கள். டென்ஷனை விரட்ட ரெஃப்ளெக்சாலஜி செய்து கொள்வார்கள். என்னதான் வேலை இருந்தாலும் ஓய்வைத் தியாகம் செய்ய மாட்டார்கள்.

‘ஒன்பதுல குரு’ இயக்குனருடன் விஜய்..?




‘ஒன்பதுல குரு’ இயக்குனர் படத்தில் நடிக்கவிருக்கிறாராம் விஜய்.

ஜில்லா படத்தை தொடர்ந்து ஏ.ஆர் முருகதாசின் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார்,

அதனைத் தொடர்ந்து பி.டி செல்வக்குமார் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர் நடிகர் விஜயின் பிஆர்ஓவாக இருந்தவர். ஒன்பதில் குரு படம் மூலமாக இயக்குனர் அவதாரம் எடுத்த அவர் அடுத்து தயாரிப்பாளராவும் அவதாரம் எடுக்கிறார்.

எனினும், படத்திற்கான தலைப்பு, நடிகர்கள் மற்றும் மற்ற விவரங்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இந்த படத்தை பி.டி.செல்வகுமாருடன் சேர்ந்து தமீன் என்பவரும் தயாரிக்கிறார்.

கராத்தே கற்கிறார் நயன்...



தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான விளங்கும் நயன்தாரா கராத்தே பயிற்சியில் ஈடுபட்டுள்ளாராம்.

மலையாள நடிகையான நயன்தாரா தமிழில் சரத்குமார் நடித்த 'ஐயா' திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார், பின்னர் சூப்பர் ஸ்டாரின் ஜோடியாக சந்திரமுகியில் நடித்தார்.

தனது குடும்பப் பாங்கான நடிப்பில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நயன்தாரா, பின்னர் தனுஷின் 'யாரடி நீ மோகினி' திரைப்படத்தில் நடித்த அவருக்கு அது பெரிய வெற்றியை தந்தது.

அன்றிலிருந்து இன்றுவரை காதல் நாயகியாக நீண்டகாலம் வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா, தற்போது ஆக்சனுக்கு மாறியுள்ளார்.

அண்மையில் வெளியான, 'ராஜாராணி', 'ஆரம்பம்' திரைப்படங்களில், அசத்தலாக நடித்த அவர், தற்போது வித்யா பாலன் நடித்த, 'கஹானி' திரைப்படத்தின் ரீ-மேக்கான, 'அனாமிகா'வில் நடிக்கவிருக்கிறார்.

'அனாமிகா' முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படம் என்பதால் முதன் முறையாக, ஆக்சன் நாயகியாக அவதரித்துள்ளார் நயன்தாரா. 'அனாமிகா'வை தொடர்ந்து, 'ஜெயம்' ரவியுடன் ஜோடி சேரவுள்ளார், அந்த திரைப்படத்திலும் ஆக்சன் ரோல் தானாம்.

அதாவது, கராத்தே மாஸ்டராக நடிக்கும் நயனுக்கு, ஹீரோவுக்கு இணையான வெயிட்டான வேடமாம். இதற்காக, சில மாதங்களாக கராத்தே பயிற்சியில் தீவிரமாக இருந்து வருகிறாராம் நயன்தாரா.

மேலும் வில்லன்களுடன் மோதி, துவம்சம் செய்யும் காட்சியிலும், ஆவேசமாக நடித்து, கைதட்டல் வாங்கியுள்ளாராம்.

ரஜினி நடித்த நான் சிகப்பு மனிதன் பட தலைப்பில் விஷால்!




படத்தின் பப்ளிசிட்டிக்காக வெற்றி பெற்ற ரஜினி பட டைட்டில்களை வளர்ந்து வரும் ஹீரோக்கள் தங்கள் படத்திற்கு வைத்துக்கொள்வது வழக்கமாக நடந்து வருகிறது. முன்பு தனுஷ் உள்ளிட்ட சில நடிகர்கள் பின்பற்றினார். இப்போது கார்த்தி பின்பற்றி வருகிறார். இந்த பட்டியலில் தற்போது விஷாலும் சேர்ந்து கொண்டுள்ளார்.

பாண்டியநாடு படத்தையடுத்து தீராதவிளையாட்டு பிள்ளை, சமர் படங்களை இயக்கிய திரு இயக்கத்தில் விஷால் நடிப்பது உறுதியாகியுள்ளது.இந்த படத்தையும் தனது விஷால் பிலிம் பேக்டரி மூலமே தயாரிக்கும் விஷால், இந்த படத்திற்கும் பாண்டியநாடு கதாநாயகி லட்சுமிமேனனையே ஜோடி சேர்த்திருக்கிறார்.

காரணம் பாண்டியநாடு படத்திற்கு லட்சுமிமேனன் காட்டிய ஈடுபாடு மட்டுமின்றி, விஷால்-லட்சுமிமேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிக உயிரோட்டமாக இருப்பதாக படம் பார்த்த விஷாலின் திரையுலக நண்பர்கள் கருத்து சொல்லியிருக்கிறார்களாம். அதனால், அடுத்த படத்தில் வேறு சில முன்னணி நடிகைகளின் பெயர்களை பரிசீலனையில் வைத்திருந்தவர்கள், இப்போது லட்சுமிமேனனையே கமிட் பண்ணி விட்டனர்.

மேலும், இந்த படத்தின் தலைப்பு பேசப்படுவதாக இருக்க வேண்டும் என்று டைரக்டர் திருவிடம் சொல்லியிருந்தாராம் விஷால். ஆனால் அதையடுத்து அவர் சில டைட்டில்களை சொன்னவர், பின்னர் ரஜினி நடித்த நான் சிகப்பு மனிதன் தலைப்பு இந்த கதைக்கு மிகப்பொருத்தமாக இருக்கும் என்றாராம். அதைக்கேட்ட விஷால் குஷியாகி விட்டாராம்.

அதையடுத்து அப்படத்தை தயாரித்தவர்களிடம் முறைப்படி பேசி சிகப்பு மனிதனாகியிருக்கிறாராம் விஷால்.

விஸ்வரூபம் 2: கமல் ஒப்பன் டாக்!



விஸ்வரூபம் 2 முதல் பாகத்தை மிஞ்சும் என்று கூறியுள்ளார் உலகநாயகன்.

கமலின் விஸ்வரூபம் படத்தின் வெற்றியும், அந்தப்படம் இந்திய அளவில் ஏற்படுத்திய தாக்கமும் மிகப்பெரிது. அதனால்தான் சூட்டோடு சூடாக விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுத்து முடித்துவிட்டார் கமல்.

இந்தப்படத்திற்கு முதல் பாகத்தைவிட எதிர்பார்ப்பு இருமடங்காக இருக்கிறது.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் பேஸ்புக் நண்பர்களுக்காக தான் பேசிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார் கமல்.

அதில், புத்தாண்டு வாழ்த்துக்களை கூறியதுடன் விஸ்வரூபம் இரண்டாம் பாகம் முதல் பாகத்தைவிட மிக அற்புதமாக வந்திருக்கிறது. மேலும் திகதி இன்னதென்று குறிப்பிட முடியவில்லையே தவிர விரைவில் ‘விஸ்வரூபம்-2’ வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒன்றரை நிமிட காணொளியில் கமல் பேச்சுடன் விஸ்வரூபம் 2 படத்தின் மேக்கிங் காட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

கடவுள் வேடத்தை விக்ரம் ஏற்பாரா?





டோலிவுட் நடிகர் வெங்கடேஷ் நடிக்கும் படத்தில் முக்கிய வேடம் ஏற்க விக்ரமிடம் கால்ஷீட் கேட்கப்பட்டிருக்கிறது. தெலுங்கில் சோலோ ஹீரோவாக வலம் வந்துக்கொண்டிருந்தார் வெங்கடேஷ். மகேஷ்பாபு, ராம் சரண் தேஜா போன்ற இளம் ஹீரோக்களின் மவுசால் அவருக்கு வாய்ப்பு குறைந்தது. இந்நிலையில் சீதம்மா வாகிட்லோ சிறுமல்லே சிட்டு என்ற படத்தில் மகேஷ்பாபுவுக்கு அண்ணனாக நடித்தார். மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக சமந்தா நடித்தார். ஆனால் வெங்கடேஷ் ஜோடியாக நடிக்க பல ஹீரோயின்கள் மறுத்துவிட்டனர். கடைசியில் அங்காடி தெரு அஞ்சலி ஜோடியாக நடித்தார். இப்படம் ஹிட்டானது.

இதைத் தொடர்ந்து மீண்டும் சோலோ ஹீரோவாக ஷேடோ, மசாலா என 2 படங்களில் வெங்கடேஷ் நடித்தார். அப்படங்கள் தோல்வி அடைந்தது. தற்போது இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ஓ மை காட் என்ற படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளார் வெங்கடேஷ். இப்படத்தில் தனது நெருங்கிய நண்பரான விக்ரமை நடிக்க கேட்டிருக்கிறார் வெங¢கடேஷ். பாலிவுட்டில் ஹிட்டான ஓ மை காட் படத்தில் அக்ஷய் குமார் கிருஷ்ணர் வேடம் ஏற்று நடித்திருந்தார். அதேபோல் கடவுள் வேடத்தில் விக்ரமை நடிக்க கேட்டிருக்கிறார்.

அவர் கால்ஷீட் தந்தால் இப்படத்தை தமிழ், தெலுங்கு இருமொழியிலும் தயாரிக்க உள்ளார். இந்தியில் பரேஷ் ராவல் நடித்த வேடத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். இதே படத்தைதான் தமிழில் ரஜினி நடிப்பில் அவரது மகள் ஐஸ்வர்யா இயக்க இருந்தார். ரஜினி மறுத்ததால் ஐஸ்வர்யா இப்படத்தை கைவிட்டார்.