Friday 27 September 2013

டெல்லி செங்கோட்டை- சுற்றுலாத்தலங்கள்!


      டெல்லி செங்கோட்டை
லகளவில் பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள  யுனெஸ்கோ அவற்றை உலக பண்பாட்டுச் சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவில் 27இடங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 23இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பண்பாட்டுச் சின்னங்களை டூரிசம் பகுதியில் வாரம்தோறும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்தவாரம்....
 
டெல்லி செங்கோட்டை
 
டெல்லி நகரின் இன்னொரு கம்பீரம் 'செங்கோட்டை'. இந்திய சுதந்திரதினத்தன்று பிரதமர் தேசியக்கொடியேற்றி உரையாற்றும் பிரம்மாண்ட இடம். இதை உருவாக்கியவர் மொகலாய மன்னர் ஷாஜஹான்.
 
தனது தலைநகரத்தை ஆக்ராவில் இருந்து ஷாஜஹானா பாத்திற்கு (தற்போதைய பழைய டெல்லி) ஷாஜஹான் மாற்றியபோது செங்கோட்டை உருவானது. இதனைக் கட்டிமுடிக்க 1638-48 வரை பத்தாண்டு ஆனது. செலவிட்ட தொகை அப்போதைய மதிப்புக்கு ஒருகோடி ரூபாயாம்.
 
யமுனை நதிக்கரையில் ஒப்பிலா அழகுடன் எழுந்து நிற்கும் செங்கோட்டை, பாரசீக, ஐரோப்பிய, இந்திய கட்டடக் கலைகளை குழைத்து எழுப்பப்பட்டது. கண்களை மயக்கும் கலைநயம், சவால்விடும் கட்டுமானம், ஆச்சரியப்படுத்தும் தோட்டக்கலை போன்றவை இன்றளவும் போற்றப்படுகிறது. டெல்லிகேட், லாகூர்கேட் என இருபெரும் நுழைவாயில்கள் உள்ளன.
 
கோட்டைக்குள் இருக்கும் அரசவை மண்டபங்களில் மட்டுமின்றி அந்தப்புரங்களிலும்கூட கலைநயம் கண்சிமிட்டுகிறது. 'திவான்- இ- ஆம்' எனப்படும் தர்பார் மண்டபம் பொதுமக்களும் பிரதிநிதிகளும் அமரும் வகையில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கே மன்னருக்காக அமைக்கப்பட்டிருக்கும் உப்பரிகையும் கம்பீரமானது.
 
'ஜெனானா' என்றழைக்கப்படும் அந்தப்புரம், மும்தாஜ் மஹால், ரங் மஹால் போன்றவையும் குறிப்பிடத்தக்கவை. இங்குள்ள சலவைக்கல் பதிக்கப்பட்ட நீருற்று புதுமையின் பதிப்பு.அவுரங்கசீப்பின் வழிபாட்டுக்காக கட்டப்பட்ட மோத்திமஸ்ஜித் எனப்படும் பியர்ல் மஸ்ஜித் (முத்து மசூதி) முழுவதும் சலவைக்கல் மயமே.

 
இவைதவிர அரச குடியிருப்புகள் அமைந்திருந்த 'நஹ்ர்-இ-பேஹிஸ்ட்' என்ற பகுதி அசத்தல் ரகம். வீடுகளுக்கு உள்ளேயே யமுனை ஆற்றின் நீர் ஓடும் வகையில் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்படி, கற்பனைகளுக்கும் கனவுகளுக்கும்கூட கால்வாய்வெட்டி நனவாக்கிய மொகலாய மன்னர்கள். இதை 'சொர்க்கத்தின் நீரோடை' என்றும் அழைத்து வந்தனர். நீரோடையை இன்றும் காணலாம்.
 
செங்கோட்டையைக் கட்டியவர் ஷாஜஹான் என்றாலும் அவருக்குப் பின்னர் அவுரங்கசீப் உள்ளிட்ட மன்னர்களும் சில மாற்றங்களை செய்தனர். ஆங்கிலேயர் ஆட்சியின்போது கண்டோன்மென்ட்டாக (ராணுவமுகாம் மற்றும் குடியிருப்பு பகுதி) செங்கோட்டை பயன்படுத்தப்பட்டது. அப்போது சில கட்டடங்கள் இடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்திய விடுதலைக்குப்பிறகும் ராணுவக்-கட்டுப்பாட்டில் இருந்துவந்த செங்கோட்டை, 2003ம் ஆண்டில் இந்திய சுற்றுலாத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
 
இங்குள்ள மும்தாஜ் மஹாலில் மொகலாய மன்னர்கள் பயன்படுத்திய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அனைத்துமே வரலாற்றுப் பொக்கிஷங்கள். பெருமைக்குரிய டெல்லி செங்கோட்டை, யுனெஸ்கோவால் 2007ம் ஆண்டில் உலக பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.

வேப்பமரமும்...சிறுவனும் (நீதிக்கதை)






வேப்பமரம் ஒன்றின் கீழே அமர்ந்து ராமன் அழுது கொண்டிருந்தான்.அதைக் கண்ட மரம் 'தம்பி ஏன் அழறே' என்றது. அதற்கு ராமன் எனக்கு யாரையுமே பிடிக்கவில்லை

.காலையில் எழுந்ததுமே 'முதலில் பல் தேய்த்துவிட்டு வா' என அம்மா அதட்டுகிறாள். பின் அப்பா 'காலை எழுந்ததும் படிப்பு. உன் பள்ளிப் பாடங்களைப் படி' என்று கண்டிக்கிறார்.பின் குளித்து முடித்து 'பசிக்கலை' என்று சொன்னால் அம்மா திட்டி சாதம் சாப்பிடச் சொல்கிறாள்.

பள்ளிக்கு வந்தாலோ 'பாடம் படிக்கலைன்னும்,பாடம் சொல்லிக்கொடுக்கும் போது வேடிக்கைப் பார்க்கக்கூடாது என்று டீச்சர் திட்டராங்க"

எல்லாருமே நாள் முழுக்க என்னை திட்டிக்கிட்டேயிருக்காங்க. எனக்கு யாரையுமே பிடிக்கலை" என்றான் அழுது கொண்டே.

வேப்பமரம் "என் இலைகளை நீ சாப்பிட்டு இருக்காயா?" என்றது.'ஓ...இலை மட்டுமா உன் இலை,குச்சி எல்லாமே ஒரே கசப்பு.சாப்பிட்டால் வாந்தி வந்துடும் என்றான் ராமன்.

"ஆனால் பல வியாதிகளுக்கு நான் மருந்தாக இருக்கிறேன்.நான் கசந்தாலும் பலர் வாழ்க்கையில் இனிமை உண்டாகக் காரணமாக இருந்திருக்கிறேன்.

அது போல் பெற்றோர்,ஆசிரியர்கள் சொல்வது இப்போது உனக்கு கசப்பாக இருக்கிறது.ஆனால் அந்த கசப்பை ஏற்று அதன் படி நடந்தால் பின் உன்னோட வாழ்க்கை இனிமையாக அமையும் என்றது.

நாமும் நம்முடைய மூத்தவர்கள் சொல்லும் அறிவுரையை ஏற்று அதன்படி நடந்தால் அனைவராலும் விரும்பபப்டுவது அல்லாது மிகவும் சிறந்தவராகவும் ஆவோம்.

இதையும் பாருங்க.....





 இதையும் பாருங்க ... 



நாங்கன்னா சுனாமில சும்மிங் போடுவோம்......  



நாங்கன்னா எவ்வளவு தைரியசாலி தெரியுமா?......



அப்ப நீங்கதான் இதைப் பார்க்கனும்............... 




பாருங்களேன்..................... 



கருத்தை கீழே தட்டி விடுங்களேன்.....


பறவைக்கு இவர்தான் GOD!






 இவரைப் போன்ற கருணை உள்ளம் கொண்ட கருணாமூர்த்திகள் 



இருப்பதால்தான் தரணி தழைக்கிறது  நண்பர்களே!.......



தங்கள் கருத்துகளைக் கீழே பகிரவும்........



அபார சிந்தனை! வேலை மிச்சம்!






அபார சிந்தனை! வேலை மிச்சம்! 


என்னமா யோசிக்கறாங்க பாருங்க...... 


பாருங்கள் மக்களே! .... பாருங்கள் மக்களே! ....   


உங்கள் கருத்துகளைக் கீழே கிறுக்கி வையுங்கள்.......



புதிய தலைமுறை கணனியை கண்டுபிடித்து இந்திய விஞ்ஞானி !!



உலகிலேயே முதன்முறையாக உலோகமற்ற கரிம நுண் குழாய் (கார்பன்-நானோடியூப்) மூலம் புதிய தலைமுறை கணனியை உருவாக்கி அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.



அமெரிக்காவில், இந்திய வம்சாவளி விஞ்ஞானி சுபாஸிஷ் மித்ரா தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினரே இந்த சாதனையை படைத்துள்ளர்.



சிலிக்கானைவிட மேம்பட்ட கார்பன் நானோடியூபுகளால் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கணனி, மின்னணுவியல் பயன்பாட்டில் புதிய அத்தியாயமாகும்.



குறைந்த ஆற்றலில், மிக வேகமான செயல்திறனை இந்தக் கணினி பெற்றிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.



இது குறித்து ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக மின்னியல் பொறியாளரும், கணிப்பொறி விஞ்ஞானியுமான சுபாஸிஷ் மித்ரா கூறுகையில்,


“புதிய சாகாப்தத்தைச் சேர்ந்த கார்பன் நானோடியூப், சிலிக்கானைவிட சிறப்பானது என பேசப்பட்டு வந்தது.



அந்த நம்பிக்கையை நிரூபிக்கும் வகையில், அந்த கணினியில் நடத்தப்பட்ட தொழில்நுட்ப பரிசோதனைகள் அமைந்துள்ளன’ என்றார்.


ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - பக்கா திரை விமர்சனம்!




‘பன்னியும் கன்னுக்குட்டியும்’ டைப் படங்களையே பார்த்து பழகிய நம்மை இந்த ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ வாய் பிளக்க வைக்கிறது. படத்தில் மருந்துக்கு கூட பகல் இல்லை. ஆனால்



தமிழ்சினிமாவையே வெளிச்சமாக்கியிருக்கிறார் மிஷ்கின். இந்த கதை ‘சுட்டக்கதை’யாக இல்லாத பட்சத்தில் அரசு தயவில்லாமல் அவரவர் செலவில் நேரு ஸ்டேடியத்தில் கூடி மிஷ்கினுக்கு தங்க ஜரிகையிட்ட பரிவட்டமே கட்டலாம். (உலகப்படங்களை மேய்பவர்களே… அலசி ஆராய்ஞ்சு அஞ்சு நாளுக்குள்ளே உத்தரவாதம் கொடுங்க)
மருத்துவக் கல்லுரி மாணவரான ஸ்ரீ நள்ளிரவில் வீடு திரும்பும்போது துப்பாக்கியால் சுடப்பட்டு கிடக்கும் மிஷ்கினை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்க முயல்கிறார். 


ஆனால் அனைவரும் அந்த உயிர் மீது அலட்சியம் காட்ட, தன் வீட்டிலேயே கொண்டு போய் ஆபரேஷன் செய்கிறார். அடுத்தடுத்த நாட்களுக்குள் அங்கிருந்து தப்பிக்கும் மிஷ்கின் ஒரு பயங்கர கிரிமினல் என்பது அதற்கப்புறம்தான் தெரிகிறது ஸ்ரீக்கு. இவரது குடும்பமே போலீஸ் கையில் சிக்க, ‘நீயே அவனை சுட்டுடு’ என்கிற அசைன்ட்மென்ட் தரப்படுகிறது மாணவருக்கு. தன்னை தேடி வரும் மிஷ்கினை ஸ்ரீ சுட்டாரா? போலீஸ் கையில் மிஷ்கின் சிக்கினாரா? இவ்வளவு பரபரப்பையும் ஆறே காகிதத்தில் வசனங்களாகவும், மிச்ச நுறு காகிதத்தில் சொல்ல வேண்டியதை இசைஞானி இளையராஜாவின் ‘முன்னணி’ இசையாலும், ரத்தமும் ஜீவனும் ஆக்கியிருக்கிறார் மிஷ்கின்.


இந்த படத்தில் காதல் இல்லை, குத்தாட்டம் இல்லை, காமெடிக்கென தனியாக சந்தான சூரி போன்ற தர்ம பாலகர்கள் இல்லை. இத்தனைக்கும் மேல் மிஷ்கின் படங்களுக்கென்றே நேர்ந்துவிடப்பட்ட மஞ்சப்புடவை ஆட்டமும் இல்லை. கம்பிமேல் நடக்கிற வித்தை மிஷ்கினுக்கு ரொம்பவே பிடிக்கும் போலிருக்கிறது. ஆச்சர்யம் என்னவென்றால் இந்த கம்பிமேல் அவரும் ஓடி, நம்மையும் பரபரவென இழுத்துக் கொண்டு ஓடியிருக்கிறார் என்பதுதான்.




தன்னை போலீஸ் சூழ்ந்துவிட்டதை அறிந்ததும் ஸ்ரீயையும் இழுத்துக் கொண்டு எலக்ட்ரிக் ட்ரெய்னில் தப்பிக்கிற அந்த காட்சியில் கொஞ்சம் கூட பூச்சுற்றல் இல்லை. அதற்கப்புறம் ஒரு புறம் கமிஷனர் உள்ளிட்ட போலீஸ் டீம் துரத்திக் கொண்டேயிருக்க, மற்றொரு புறம் இவ்விருவரும் ஓடிக் கொண்டேயிருப்பது கொஞ்சமாவது சலிக்க வேண்டுமே? ஒவ்வொரு முறையும் இவர்கள் செக்போஸ்டில் தப்பிப்பது ‘பலே’ சீன்கள் என்றால், அவ்வளவு நெருக்கடியிலும் நகைச்சுவையை இழையோட விட்டிருக்கும் மிஷ்கினின் ஆளுமையை என்னவென்று பாராட்ட? அந்த போலீஸ்காரர் விதவிதமான டெஸிபலில் உச்சரிக்கும் அந்த ‘ஐயா…’ காட்சியில் இறுக்கம் மறந்து ரிலாக்ஸ் ஆகிறது மொத்த தியேட்டரும். வில்லனின் கையாளாக வரும் அந்த கருப்பு போலீஸ் அதிகாரியை எங்கு பிடித்தாரோ, மனுஷன் செம லைவ்…


ஒரு மருத்துவக் கல்லுரி பேராசிரியர் தனது தாய் இறந்து போன அவ்வளவு துக்கத்திலும், படித்த படிப்புக்கு தரும் மரியாதை மெய்சிலிர்க்க வைக்கிறது. (நடித்திருப்பவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனின் கணவராம். ‘ஆக்ட் ஃபார் ஈச் அதர்…!’)


தன்னிடம் கதை கேட்கும் பார்வையில்லாத குழந்தைக்கு கதை சொல்வது போல நமக்கும் பிளாஷ்பேக் சொல்கிறார் மிஷ்கின். டைட்டாக வைக்கப்பட்ட பிரேமில் மிக நீண்ட நிமிடங்களை விழுங்கிக் கொள்ளும் அந்த காட்சியில் மிஷ்கினின் நடிப்பு கலங்க வைக்கிறது. ஒரே டேக்கில் எடுத்திருக்கிறார்கள் என்பதை அந்த எரியும் மெழுகுவர்த்தியின் நீளம் சொல்கிறது. அதே போல ஆக்ஷன் காட்சிகளிலும் மின்னலென சுழன்று பரம்பரை ஆக்ஷன் ஹீரோக்களுக்கே கூட எனிமா கொடுக்கிறார் மிஷ்கின். டொப்பு டொப்பென போலீஸ் அதிகாரிகளை அவர் சுட்டுக்கொல்லும் காட்சிகள் நகைப்பையும், நடுக்கத்தையும் ஒருசேர ஏற்படுத்துகிறது.


வழக்கு எண் 18/9 பட ஹீரோ ஸ்ரீதான் இப்படத்தின் இன்னொரு ஹீரோ. அவ்வளவு பெரிய மிஷ்கினை முதுகில் சுமந்து கொண்டு அவர் பரிதவிக்கும் அந்த ஆரம்ப காட்சிகளில், நிஜமாகவே பொதிமூட்டை கனத்தை பொறுத்திருக்கிறார். அப்படியே இந்த படத்தின் விறுவிறுப்பையும் சுமக்கிற பொறுப்பும் அவருக்கு. சிறப்பாகவே இருக்கிறது எல்லாமும்.


படத்தில் வரும் வில்லன்தான் ‘எனக்கு அவன் உயிரோட வேணும்’ என்று அலறி, எதார்த்தத்தை கெடுத்து வைக்கிறார். அவரது அல்லக்கைகளும் அப்படியே ‘மைம் ஷோ’ நடிகர்கள் மாதிரி எரிச்சலுட்டுகிறார்கள். ஹ்ம்ம்ம், வில்லன்னா இப்படிதான் இருக்கணும் என்பதை நீங்களாவது மாற்றியிருக்கலாமே மிஷ்கின்.


குடிசை ஜன்னலில் இருந்து கொண்டு கோட்டையை பார்ப்பது போல, வியப்பை மட்டுமே வாரி வழங்குகிறது ஜுனியர் ரங்காவின் ஒளிப்பதிவு. எதிலும் அவசரமில்லாமல் நிறுத்தி நிதானமாக உள்வாங்குகிற அந்த கேமிரா, மிக நுணுக்கமான உணர்ச்சிகளை கூட விட்டு வைக்கவில்லை.


கண்ணுக்கு தெரியாத காற்று மாதிரி, மனம் தடவுகிறது இசைஞானியின் பின்னணி இசை. டைட்டிலில் முன்னணி இசை என்று கவுரவம் சேர்க்கிறார் மிஷ்கின். இது எவ்வளவு பெரிய சத்தியம் என்பதை இப்படத்தை ‘மியூட்’ செய்துவிட்டு பார்த்தால்தான் புரியும்.


யாரு வேணும்னாலும் என்ன வேணும்னாலும் சொல்லிட்டு போகட்டும்… நான் இப்படிதான். என் படம் இப்படிதான் என்கிற மிஷ்கினின் திமிருக்கு தலைவணங்கியே ஆக வேண்டும் ரசிகர்கள்.

ராஜா ராணி சினிமா விமர்சனம்!



ஒவ்வொரு திருமணத்திலும் இணையும் மணமக்கள் திருமணத்திற்கு பின் கிடைத்த வாழ்க்கையை மனமுவந்து வாழ்கிறார்களா இல்லையா என்பது தெரியாது. அப்படி வாழவில்லையென்றால் அதற்கு காரணம் அவர்களது வாழ்க்கையில் இளமை பருவத்தில் மலரும் காதலும் அதனால் ஏற்பட்ட வலியுமாகத்தான் இருக்கும்.

காதலிக்கும் எல்லோருக்கும் நினைத்த வாழ்க்கை கிடைத்துவிடுவதில்லை. காதல் மிகவும் ரம்மியமானதுதான் ஆனால் அது தோல்வியில் முடியும்போது வாழ்க்கை அனைத்தையும் இழந்துவிட்டதுபோல தோற்றும். காதலை இழந்தவரிக்ன் மூளையிலும் ஒரு இருட்டு குடிக்கொண்டு விடுகிறது.  பிறகு வேருஒருவருடன் திருமணம் நடந்தாலும் இந்த இருட்டு விலகாமல் இருந்துவிடுகிறது. திருமணத்தம்பதிகள் தங்களுக்குள் இருக்கும் இருட்டுகளை விலக்கினால்தான் அந்த வாழ்க்கை இனிக்கும். அப்படியில்லையென்றால்...?

இப்போது கதை உங்களுக்கே புரிந்திருக்கும் ஒரு திருமண ஜோடிக்கு விருப்பமில்லாத திருமணம் நடக்கிறது. ஏன் அவர்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்ற வேள்வி எழும்போது இதற்கு முன் இருவரும் ‌வேறு ஒருவருடன் தனித்தனியே அழகிய காதலில் ரசித்து வாழ்கிறார்கள்... 

விதிவசத்தால் அந்த காதல் கைகூடாமல் போய்விடுகிறது. இப்படியிருக்க... காதலை பறிகொடுத்த இருஜோடியும் இணையும்போது பழைய பாதிப்பில் இருந்து விலகி இவர்களின் தற்போதை திருமண வாழ்க்கையை எப்படி வாழ ஆரம்பிக்கிறார்கள் என்பதுதான் கதை.

ராஜா ராணி... டைட்டில் பேர்டும் போது ஆர்யா-நயன் திருமணம் நடக்கிறது (ஜான்-ரெஜினா). திருமணம் முடிந்த இருவரும் இல்லறவாழ்க்கையில் விருப்பமில்லாமல் எதையோ பறிகொடுத்ததுபோல் வாழ்கிறார்கள். ஒரு வீட்டுக்குள் தனித்தனியே யார் என்பது தெரியாததுபோல் ஒரு வாழ்க்கையை நடத்துகிறார்கள்..

ஆர்யாவுடன் ஏன் சேர்ந்து வாழ மறுக்கிறார் நயன்தாரா என்று நினைக்கும் போது பிளாஸ்பேக்....

நயன்தாரா தன்னுடைய செல்போன் வேலை செய்யவில்லை என்பதற்காக கஸ்டமர்கேர்-க்கு போன் செய்கிறார். அங்கு இருப்பது சூர்யாவாக ஜெய்...  சண்டை திட்டில் ஆரம்பிக்கும் இவர்களது பழக்கம் கடைசியில் காதலில் முடிகிறது. அதன்பிறகு விழுந்து விழுந்து காதலிக்கும் இவர்கள் பதிவு திருமணம் செய்ய காத்திருக்கிறார் நயன்.. 


கடைசி வரை ஜெய் வராததால் ஏமாந்து திரும்பும் ‌நயன்.. ஜெய் ‌‌அமெரிக்கா சென்றதும் அதன்பிறகு அங்கு தற்கொலை செய்துக்கொண்டதும் தெரியவருகிறது... பிறகு அப்படியே நெடிந்துப்போகிறார்... வாழ்க்கையை வெறுக்கிறார்....

தைரியமற்ற கொஞ்சம் வெகுளி கதாபாத்திரத்தில் அடிக்கடி பயத்தில் அழுதாலும் படம்பார்ப்பவர்களை சிரிக்கவைத்து கைத்தட்டல் வாங்குகிறார் ஜெய்...


இடைவேளைக்கு பிறகு... குடும்ப வாழ்க்கையை ஏன் ஆர்யா வெருக்கிறார் என்பதற்கு அதற்கு ஒரு பிளாஸ்பேக்....

ஆர்யாவும் சந்தானமும் செக் வாங்க செல்லும் ஒரு வீட்டில் ஆர்யா.. நஸ்ரியாவை பார்க்க இருவருக்கும் பற்றிக்கொள்கிறது காதல்... பிரதர் என்று வெறுக்கும் நஸ்ரியாவை விரட்டி விரட்டி காதலிக்க வைக்கிறார் ஆர்யா...

ஒரு கோயிலில் யாருக்கும் தெரியாமல் தனியாகவே திருமணம் செய்துக்கொண்டு... வெளியில் செல்லும்போது ஒரு விபத்தில் நஸ்ரியா இறந்துவிடுகிறார். இதைநேரில் பார்க்கும் ஆர்யா வாழக்கைவெறுத்து வாழ்கிறார்.

இப்படி தனித்தனியாக காதலை பறிக்கொடுத்த இருவரும் திருமணத்தில் இணையும்போது இருவரும் ஒட்ட மனவரவில்லை. அதன்பிறகு இவருவருக்கும் இவர்கள் வாழ்வில் நடக்கும் பழைய சம்பவங்களை தெரியவரும்போது ஏன் நாம் அதையெல்லாம் மறந்து புதிய வாழ்க்கையை துவங்கக்கூடாது என்று இல்லறத்தில் இணைகிறார்கள். (அம்புட்டுதாங்க... இன்னும் கதை ஞாபகம் வரலின்னா நம்ம மௌன ராகம் படத்தை மனசுல ஓடவிட்டுக்கங்க)

ஆர்யா பிளேபாய் கேரட்டர் நன்றாக வந்திருக்கிறது. திருமணம் செய்தபிறகும் தன்னை மதிக்காத நயன்தாராவை வெறுப்பேத்தும் காட்சியிலும், நஸ்ரியாவை காதலிக்கும் போதும் சந்தானத்துடன் இணைந்து கலக்கும்போதும் கலக்கியிருக்கிறார்.


நயன்தாரா படத்தில் அழுதுவடியும் காட்சிகள் இருந்தாலும் படம் முழுக்க அழகாக காட்டிருக்கிறார் இயக்குனர். ஜெய்யுடனான காட்சிகள் இன்னும் ரசிப்பதற்குறியது... தந்தை சத்தியாராஜ்க்கு பீர் வாங்கி கொடுத்து நனக்கு தேவையா‌னதை பெரும் போது அப்பா-மகள் இப்படி நண்பர்களாக இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்...

படத்தில நகைச்சுவைக்கு யாருன்னு எந்தபோஸ்டரிலும் போடவில்லைன்னு பார்த்தா படத்தில சந்தானம் இருக்காரு... நகைச்சுவைக்கு என்று ஆர்யாவுடன் சந்தானம், ஜெய்யுடன் சத்யன்...  செல்லும்படியான நகைச்சுவை இல்லையென்றாலும் அழகிய நகைச்சுவைதனம் படத்தில் இழையோடியிருக்கிறது...

இன்னும் சத்தியராஜ் அவர்களைப்பத்தி சொல்லியே ஆகனும்... படத்தில் அம்புட்டு இளமையாக வந்திருக்கிறார். நயன்தாராவின் அப்பாவாக மகளுக்கு ஒரு நல்ல நண்பராகவும் நடித்திருக்கிறார்...

பாடல்கள் பராவாயில்லை... இசையைபொருத்த வரை எந்தகுறையும் சொல்லமுடியாது. ஜி.வி.பிரகாஸின் கைவண்ணம் இதில்தெளிவாகத்தெரிகிறது. பிண்ணனி இசை அசத்தியிருக்கறார்.

நம்முடைய முந்தைய வாழ்க்கையை மனதில் வைத்துக்கொண்டு தற்போது கிடைக்கும் வாழ்க்கையை பாழடிக்ககூடாது. காதலித்த  பழைய வாழ்க்கையை  மறந்துவிட்டு கிடைத்த வாழ்க்கையை காதலிக்க பழகிக்கொள்ளுங்கள் என்று ஒரு எதார்த்தமான காதையை கையிலெடுத்துக்கொன்டு திரையில் அதை அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் அட்லி.


அட்லி ஷங்கரிடம் உதவிஇயக்குனராக இருந்தவர் என்பது படத்தில் தெரிகிறது... காட்சிகளை அழகாகவும் தெளிவாகவும் படமாக்கியிருக்கிறார். திரைக்கதையில் நன்றாக கையாண்ட அல்லி கிளைமாக்ஸ் பொருத்த வரை கொஞ்சம் இழுத்திருக்கிறார். மற்றபடி பரவாயில்லை.

எப்படியும் இருவரும் இணைந்துவிடுவார்கள் என்று நினைக்கும்போது  அது இது என்று இழுத்துவிடுகிறார்.... என்று படத்தின் இறுதி காட்சிகளை இழுக்காமல் இன்னும் கொஞ்சம் சுருக்கமாக முடித்திருந்தால் படம் நன்றாகவே இருந்திருக்கும்.

கிடைக்கும் வாழ்க்கையில் பழைய நினைவுகளை போட்டு குழப்பிக்கொள்ளாமல் கிடைத்த வாழ்க்கையை விரும்பி காதலித்து வாழுங்கள் என்கிறது...  இந்த ராஜா ராணி...
 

7 வருடத்துக்கு பின் மோதும் அஜீத் - விஜய் படங்கள்!





ஏழு வருடங்களுக்கு பிறகு, அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் விஜய், அஜீத் நடித்த படங்கள் நேருக்கு நேர் மோத உள்ளன. விஜய் நடிக்கும் ‘ஜில்லா‘ படத்தை நேசன் இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வந்தது. இப்படத்தை பொங்கலுக்கு முன் ரிலீஸ் செய்ய எண்ணி இருந்தனர். 



திடீரென்று விஜய் தந்தையாக நடிக்கும் மோகன்லாலுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே ஷூட்டிங் பாதிக்கப்பட்டது. இதனால், ஏற்கனவே அவர் கால்ஷீட் கொடுத்த படங்களில் நடிப்பதிலும் குழப்பம் ஏற்பட்டது. தற்போது அவர் நடிக்கும் படங்களில் எந்த படம் முதலில் ரீலீஸ் ஆகுமோ, அந்த படங்களுக்கு மட்டும் கால்ஷீட் கொடுத்து வருகிறார். அந்த வரிசையில்தான் ‘ஜில்லா‘ படத்துக்கும் கால்ஷீட்டை ஒதுக்கி தருகிறார் மோகன்லால். இதில் ஹீரோயினாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இதனால் ‘ஜில்லா’ அடுத்த பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.


இதற்கிடையில் அஜீத் நடித்துள்ள ‘ஆரம்பம்’ படம், தீபாவளிக்கு ரிலீஸ் ஆனபிறகு அவர் நடித்து வரும் ‘வீரம்‘ படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 7 வருடங்களுக்கு பிறகு விஜய்அஜீத் படம் பொங்க லுக்கு நேருக்கு நேர் மோத உள்ளன. இதனால் ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடைசியாக, கடந்த 2007ம் ஆண்டு விஜய் நடித்த போக்கிரி, அஜீத் நடித்த ஆழ்வார் படங்கள் நேருக்கு நேர் மோதின.

உண்மை எது...பொய் எது...(நீதிக்கதை)




 
ஒரு சமயம் முகலாய பேரரசராய்த் திகழ்ந்த அக்பருக்கு..உண்மை எது பொய் எது என எப்படிக் கண்டு பிடிப்பது,..அதற்கான தூரம் எவ்வளவு என்ற சந்தேகம் வந்தது.


தன் அரசரவை மந்திரிகளை எல்லாம் கூப்பிட்டு..தனது சந்தேகத்தைச் சொல்லி அதை தீர்த்துவைக்குமாறு கோரினார்.


எந்த அமைச்சருக்கும் அதற்கான விடை தெரியவில்லை.அக்பர் அரசவையில் அமைச்சராக இருந்த பீர்பால் என்பவர் மிகவும் புத்திசாலி...


அவர் அரசரைப் பார்த்து 'மன்னா..உண்மைக்கும் பொய்க்குமான இடைவெளி நான்கு விரற்கடை தூரம்' என்றார்...


அக்பர்...'அது எப்படி..தங்களால் நிரூபிக்கமுடியுமா' எனக் கேட்டார்.


உடன் பீர்பால்...தன்  இடது கையை எடுத்து இடது கண்ணிலிருந்து  இடது காதுக்கு தன் நான்கு விரல்களை வைத்துக் காட்டினார்.பின் 'அரசே...இது தான் உண்மைக்கும் பொய்க்கும் ஆன தூரம்.எந்த ஒரு விஷயத்தையும் காதால் கேட்பது பொய்யாக முடியலாம்.ஆனால் கண்ணால் பார்ப்பது பொய்யாக ஆக வாய்ப்பில்லை.கண்ணால் கண்டதை சற்று தீர விசாரித்தால் அதுவே மெய்யாக முடியும்' என்றார்.
 

நாமும் எந்த ஒரு விஷயத்தையும் கேட்பது மூலம் அதை நம்பிவிடாது அதை பார்த்து தீர விசாரித்து உண்மையை உணரவேண்டும்.