Friday 25 October 2013

கண்களுக்கு மேக்கப்!

Eye makeup

கண்ணுக்கு மை அழகு என்றது அந்தக் காலம். இன்று கண்ணழகுக்கு ஏகப்பட்ட விஷயங்கள் வந்தாச்சு. கண்களுக்கான மேக்கப்பிலும் எக்கச்சக்க  புதுமைகள்! ஐ மேக்கப் என்னவெல்லாம் லேட்டஸ்ட்? எந்த சந்தர்ப்பத்துக்கு எப்படி ஐ மேக்கப் செய்ய வேண்டும்? விளக்கமாகப் பேசுகிறார்  அழகுக்கலை நிபுணர் ஹசீனா சையத்.

கண்கள் தான் மனசைப் பிரதிபலிக்கிற கண்ணாடி. நம்ம மனசுக்குள்ள சந்தோஷமோ, சோகமோ, எது இருந்தாலும், அது கண்கள்ல தான் தெரியும்.  என்னதான் பிரமாதமா மேக்கப் போட்டாலும் கண்களுக்கு மேக்கப் இல்லைனா அந்த அழகு கொஞ்சங்கூட எடுபடாது. வெறுமனே மையும் ஐ லைனரும்  மட்டுமே கண்களுக்கு போதும்னு நினைக்குறதில்லை இன்றைய இளம் பெண்கள். சாதாரண காஜல்னு ஆரம்பிச்சு, மஸ்காரா வரைக்கும்  எல்லாத்துலயும் புதுமைகள் வந்தாச்சு.

கண்களுக்கான மேக்கப்னு சொன்னதும் முதல்ல நினைவுக்கு வர்றது மை. கருப்பான விஷயங்களுக்கு மையோட கருமையை உதாரணம் காட்டுவோம்.  ஆனா இப்ப சிகப்பு சிகிச்சை, பச்சை, கிரேனு எல்லா கலர்கள்லயும் கண் மை வருது. அதே மாதிரி பர்ப்பிள், ப்ளு பென்சில்களும் வருது. கண் இமைகள்  இயற்கையாகவே நீளமாக, அடர்த்தியாக காட்டலாம். முன்னல்லாம் மஸ்காராவும் கருப்பு கலர்ல மட்டும் தான் வந்திட்டிருந்தது.

இப்ப அதுலயும் நிறைய மாற்றங்கள் வந்திருக்கு. முக்கியமாக கலர்லெஸ் மஸ்காரா ரொம்ப பிரபலம். போட்டதே தெரியாது. ஆனா இமைகள்  தனித்தனியா நீளமா, அடர்த்தியா தெரியும். மஸ்காரா உபயோகப்படுத்த முடியாதவங்க, செயற்கையா கிடைக்கிற கண் இமைகளை வாங்கி  ஒட்டிக்கலாம். ஐ மேக்கப்ல ரொம்ப ரொம்ப லேட்டஸ்ட் என்ன தெரியுமா. புருவங்களுக்கு கீழே, டிராகன், சிறுத்தை, மயில், மண்டை ஓடு ஸ்டிக்கர்களை  ஓட்டிக்கிறதுதான்.

பார்ட்டிக்கு போற பெண்கள் இதை ரொம்ப விரும்பறாங்க என்கிற ஹசீனா ஐ மேக்கப் குறித்த சில டிப்ஸ் தருகிறார்.

முகத்துக்கு தினமும் கிளென்சர், டோனர், மாயிச்சரைசர், உபயோகிக்கணும். அதன் பிறகு ஃபவுண்டேஷன் போடணும். கண்களுக்கடியில் கருவளையம்  அதிகமிருக்கிறவங்க கண்சீலர் உபயோகிச்சு அதை மறைக்கலாம். அதுக்கு மேலே மேக்கப் போட்டா கருவளையம் தெரியாது.

வேலைக்கு போறவங்களும் காலேஜ் பொண்ணுங்களும் நேச்சுரல் ஷேடு ஐ மேக்கப் சாதனங்களை செலக்ட் பண்ணலாம். லைட் பிரவுன் கலர்  லைனரால கண்களோட ஒரங்கள்ல வரைஞ்சுக்கலாம். பிங்க் அல்லது பேபி பிங்க் நிற ஐ ஷேடோ பெஸ்ட்.

பார்ட்டி போகும் போது கிளிட்டர்னு சொல்ற பளபளக்கிற ஐ ஷேடோ உபயோகிக்கலாம். லென்ஸ் உபயோகிக்கிறவங்க, மேக்கப் போடறதுக்கு  முன்னாடியே லென்ஸ் போட்டுக்கணும். பாதாம் ஆயில் அல்லது விளக்கெண்ணெய் தடவினா கண் இமைகள் அடர்த்தியா வளரும். சுத்தமான  பன்னீரை கண்களுக்குள்ள ஒவ்வொரு சொட்டு விட்டா அழுக்குகள் நீங்கி கண்கள் சுத்தமாகும். எந்தக் காரணம் கொண்டும் கண்கல்ள மேக்கப்போட  தூங்கவே கூடாது.

திண்டுக்கல் மாவட்டத்தின் வரலாறு !


திண்டுக்கல் என்றதும் பூட்டு ஞாபகத்திற்கு வரும். ஆனால் இந்நகருக்கு பன்முகங்கள் இருக்கின்றன. திண்டுக்கல் வரலாற்றின் திசைகள் செல்லும் கோட்டை தலையணை திண்டுபோல் இருப்பதால் இந்நகருக்கு திண்டுக்கல் எனப் பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதற்கு முன் இருந்த பெயர் திண்டீஸ்வரம். இது புராணப் பெயர். திண்டி என்ற மன்னன் இந்நகரை ஆண்டபோது, மக்களை துன்புறுத்தினார். மக்கள் ஈசனை வேண்டி தவம் புரிந்தனர். திண்டி மன்னனை சிவனாகிய, ஈஸ்வரன் அழித்ததால் இந்த ஊர் திண்டீஸ்வரம் என்று அழைக்கப்பட்டது.

மேலும் வெங்காயம், நிலக்கடலையின் மொத்தச் சந்தையாகத் இவ்வூர் திகழ்கிறது. இங்கிருந்து பிரியும் சாலைகள் கோவை, ஈரோடு, சேலம், திருச்சி, கரூர், மதுரை, சிவகங்கை மாவட்டங்களோடு இணைகின்றன. தமிழகத்தின் முக்கிய கோடை வாழிடமான மலைகளின் இளவரசியான கோடைக்கானல் இந்த மாவட்டத்தில்தான் உள்ளது. இது மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் 2133 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. பேரணை, சிறுமலை ஆகிய இரு சிறந்த உல்லாச ஓய்விடங்களும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளன.

திண்டுக்கல் வரலாறு

திண்டுக்கல் தொன்று தொட்டு பாண்டியர் ஆட்சியில் இருந்து வந்தது. குறிப்பாக விஜய நகர ஆட்சியில்தான் ஏற்றம் பெற்றது. வெவ்வேறு ஆட்சிகளில், படிப்படியாக இவ்வூர் சிறந்த இராணுவத்தளமாக முன்னேறியது. நாயக்க மன்னர்கள், ஆர்க்காட்டு நவாபுகள், மைசூர் மன்னர்கள், ஆங்கிலேயர் ஆகியோரால் இங்குள்ள கோட்டை பலவாறாகப் பலப்படுத்தப்பட்டது. இக்கோட்டையை வெற்றி கொள்ள, இவர்கள் ஒவ்வொருவரும் மாறிமாறிப் போரிட்டதை வரலாற்றால் அறிகிறோம். பாண்டிய நாட்டை அதன் பல இன்னல்கள் இடையூறுகளிலிருந்து தடுத்துக் காப்பாற்றியது திண்டுக்கல்.திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலியின் முக்கியமான படை தளங்களில் ஒன்று .

மலைக்கோட்டை கோவில்

திண்டுக்கல் மலையில் கி.பி.13ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட மன்னன் முதலாம் சடைவர்மன் குலசேகர பாண்டியன் இக்கோவிலை கட்டினார். அன்று முதல் இக்கோவில் ராஜராஜேஸ்வரி கோவில் என்றழைக்கப்பட்டது. தற்போது இந்த மலைக்கோவிலில் ஐந்து கடவுள்களுக்கான கருவறைகள் தனித்தனியாக இருந்த போதிலும் எந்தக் கருவறையிலும் சிலைகள் இல்லை. எனவே இந்தக் கோவிலில் வழிபாடும் இல்லை. இந்தமலைக்கோட்டை முழுவதும் இந்திய அரசின் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இருப்பினும் இங்குள்ள கருவறை ஒன்றிலிருந்த சிவலிங்கத்தின் லிங்கமில்லாத ஆவடைப்பகுதி கருவறைக்கு வெளியே தனியே கிடக்கிறது.

இ-மெயில் கிடையாது பிரதமரிடம் தனியாக செல்போனும் இல்லை!


 பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தனியாக செல்போனும் இல்லை. இ-மெயில் முகவரியும் கிடையாது.

உலகம் முழுவதும் 35 நாட்டு தலைவர்களின் தொலைபேசி, செல்போன் பேச்சுகளை அமெரிக்க உளவுத்துறை ஒட்டு கேட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மார்கெல்லின் செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்பட்டதற்கான ஆதாரத்தை, அமெரிக்க உளவுத்துறை முன்னாள் அதிகாரி எட்வர்ட் ஸ்னோவ்டென் சமீபத்தில் வெளியிட்டார்.


இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கின் செல்போன் பேச்சுகளையும் அமெரிக்க உளவுத்துறை ஒட்டு கேட்டிருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது பற்றி பிரதமர் அலுவலக தகவல் தொடர்பாளரிடம் கேட்டபோது, ‘‘பிரதமர் மன்மோகன் சிங் தனிப்பட்ட முறையில் செல்போன் வைத்து கொள்ளவில்லை.


அதேபோல், தனியாக இ& மெயில் முகவரியும் வைத்து கொள்ளவில்லை. அவருடைய அலுவலகம் சார்பில்தான் இ-மெயில் உள்ளது. இதனால், பிரதமரின் செல்போன் பேச்சுகளை ஒட்டு கேட்பது, இ&மெயில் தகவல்களை திருடுவது என்ற கேள்விக்கே இடமில்லை என்று பதிலளித்தார்.

இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும்-05

வேத காலம்
                   உலோக காலத்தை தொடர்ந்து வந்த காலம் வேதகாலம்  என்றழைக்கபடுகிறது. கி.மு1000 லிருந்து  வேதகாலம்  ஆரம்பமாகிறது. நாடோடிகளாக வாழ்ந்த மக்கள் நாகரீக வாழ்வை அடைந்ததும் மொழிகள் தோன்ற ஆரம்பித்தன  மொழிகள் தோன்ற ஆரம்பித்ததும் வேதங்களும், புராணங்களும்  தோன்றியது.

                  இப்படி படிப்படியாக முன்னேறிய மனித சமுதாயம் ஒரு சீரிய முன்னேற்றத்தை அடைந்தது வேத காலத்தில் தான். இந்தியாவின் பழமையான வேதங்களாக கருதப்படும் ரிக், யசுர், சாம, அதர்வண வேதங்கள், உபநிடதங்கள் இக்காலக்கட்டத்தில்  எழுதப்பட்டன, மேலும் இந்தியாவின் பெரும்பான்மையான மக்களால் பின்பற்றப்படும் ஹிந்து மதம் தோண்டியது, உலகில் மூன்றாவது பெரிய மதம் நம் ஹிந்து மதம் தான், புத்த மதம், சமண மதம் தோன்றியது வேத காலத்தில் தான். இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் நடந்ததும் இயற்றப்பட்டதும் இக்காலகட்டத்தில் தான் .

                   தென்இந்தியாவை பொறுத்தவரை திராவிட மொழி தோன்றியது, மதுரையை தலைநகராக கொண்டு பாண்டியர்கள்  தென்இந்தியாவை ஆண்டு வந்தனர். தமிழ் சங்கம் தொடங்கப்பட்டது மேலும் தமிழின் பழமையான நூலான தொல்காப்பியம் இயற்றப்பட்டது. இனி வேத கால வரலாற்றை பற்றி படிப்படியாக பார்ப்போம்.

                   கி.மு1200 ஆண்டு வாக்கில் சிந்துசமவெளி நாகரிகம் அழிந்த பின்பு வட இந்தியா முழுவதிலும் பல இடங்களில் சிற்றரசுகளும், பேரரசுகளும் தோன்றி வளர ஆரம்பித்தன. இதில் முக்கியமானதாக கருதப்படுவது மகாஜனபதங்கள் என்றழைக்கபடும் 16 பேரரசுகள் அல்லது நாடுகள் ஆகும். இவற்றின் காலம் கி.மு1000 இல் இருந்து கி.மு 400 வரை.



 .

மகாஜனபதங்கள்
                மகாஜனபதங்கள் என்பது பண்டைய இந்தியாவில் காணப்பட்ட பேரரசுகள் அல்லது நாடுகளைக் குறிக்கும். இவை இந்திய உபகண்டத்தின் வடமேற்கிலுள்ள காந்தாரம் முதற்கொண்டு கிழக்குப் பகுதியில் காணப்பட்ட அங்கம் வரையிலான பதினாறு அரசுகளாகும். 



1. அங்கம் (anga)

2. கோசலை (kosala)
 
3. காசி (kashi)

4. மகதம் (magadha)

5. வஜ்ஜி (vajji)

6. மல்லம் (malla)

7. சேதி (chedi or cheti)

8. வத்சம் (vatsa or vamsa)

9. குரு (kuru)

10. பாஞ்சாலம் (panchala)

11. மத்சம் (matsya or machcha)

12. சூரசேனம் (surasena)



13. அஸ்மகம் (ashmaka or assaka)

14. அவந்தி (avanti)

15. காந்தாரம் (gandhara)

16. காம்போஜம் (kamboja)

அங்க நாடு

            அங்க நாடு என்பது கி.பி. 6ம் நூற்றாண்டில் இந்திய உபகண்டத்தில் காணப்பட்ட ஒரு ராச்சியமாகும். அதே நூற்றாண்டில் மகதத்தால் ஆக்கிரமிக்கப்படும் வரை மிகவும் சிறப்பான நிலையில் இருந்தது. மேலும் பதினாறு மகாஜனபதங்களில் ஒன்றாக அங்கம் உள்ளது. ராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் பல இடங்களிலும் அங்க நாடு வருகிறது.


 

 
மகாபாரதம் (I.104.53-54) மற்றும் புராண இலக்கியங்கள் அங்கம் எனும் பெயர் அதனைத் தோற்றுவித்த இளவரசர் அங்கன் பெயரால் ஏற்பட்டதாகக் கூறுகின்றன.

ராமாயணம், (1.23.14) காமதேவனை எரித்து அவனின் உடல் பாகங்கள் (அங்கம்) சிதறிய இடமே இது எனக் குறிப்பிடுகிறது.


மகாபாரதத்தில் குறிப்பிட்டுள்ளபடி அங்க தேசம் என்பது இன்றைய பீகாரிலுள்ள மாவட்டங்களான பகல்பூர், பங்கா, பூர்னியா, மங்கர், கதிகார் மற்றும் ஜமுய் ஆகியவற்றையும், ஜார்க்கண்டிலுள்ள தியோகார், கொட்டா மற்றும் சகேப்கஞ் ஆகிய மாவட்டங்களையும் உள்ளடக்கிய ஒரு பிரதேசமாகும். பிற்பகுதியில் இதன் எல்லைகள் வங்காளத்தின் சில பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தன. சம்பா நதி மகதத்தையும் அங்கத்தையும் பிரிக்கும் எல்லைக்கோடாகும். அங்கத்தின் வடபகுதி எல்லையில் கோசி நதி காணப்பட்டது. மகாபாரதத்தின் படி துரியோதனன் கர்ணனை அங்கத்தின் மன்னனாக முடிசூட்டினான். 

மகாபாரதத்தின் சபா பர்வம் (II.44.9) அங்கம் மற்றும் வங்கம் ஆகியன இணைந்து ஒரே தேசமானதாகக் குறிப்பிடுகிறது. கதா சரித சாகரம் எனும் நூலின் படி விதங்கபூர் எனும் கடலோர நகரம் அங்க தேசத்தில் இருந்ததாக அறிய முடிகிறது. எனவே அங்கத்தின் எல்லைகள் கிழக்குப்பகுதியின் கரையோரம் வரை வளர்ந்திருந்ததென அறியலாம்.

                    அங்கத்தின் தலைநகராக சம்பா காணப்பட்டது. மகாபாரதம் மற்றும் ஹரிவம்சத்தின்படி சம்பா என்பது மாலினி என அழைக்கப்பட்டது.. சம்பா நதி கங்கையுடன் கலக்குமிடத்தில் கங்கையின் வலது கரையில் சம்பா அமைந்திருந்தது. இந்த நகரம் மிகவும் வளமான நகராகும். இது பண்டைய இந்தியாவின் ஆறு முக்கிய நகரங்களில் ஒன்றாக இருந்தது.

கோசல நாடு

                  கோசல நாடு என்பது பண்டைய இந்தியாவில் அமைந்திருந்த ஒரு பகுதியாகும். இப்பிரதேசம் இன்றைய இந்தியாவின் உத்திரப்பிரதேசத்திலுள்ள அவாத் பிரதேசத்தில் அமைந்திருந்தது. கி.மு.6ம் நூற்றாண்டில் காணப்பட்ட பதினாறு பெருங் குடியேற்றங்களுள்(மகா ஜனபதங்கள்) இதுவும் ஒன்றாகும். கி.மு. 4ம் நூற்றாண்டளவில் மகதத்தினுள் உள்வாங்கப்பட்டுவிட்டது. கோசல நாட்டில் அயோத்தி, சாகெத், சிராவஸ்தி ஆகிய மூன்று முக்கிய நகரங்கள் காணப்பட்டன.  புராணங்களின் அடிப்படையில், இஷ்வாகு மற்றும் அவரது வழிவந்தோரின் ஆட்சியின்கீழ் கோசலையின் தலைநகரமாக அயோத்தி அமைந்திருந்தது. 

ராமாயணம், மகாபாரதம் மற்றும் புராணங்களில் கோசல நாட்டின் ஆட்சியாளர்கள் இஷ்வாகுவின் வழிவந்தவர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர். புராணங்களில் இஷ்வாகு முதற்கொண்டு பிரசன்னஜித் வரையான இஷ்வாகு வம்ச அரசர்களின் பெயர்கள் தரப்பட்டுள்ளன.  மச்சிம நிக்காய என்ற பௌத்த நூல் புத்தரை கோசல நாட்டவர் எனக் குறிப்பிடுவதோடு  சமண மதத்தின் 24வது தீர்த்தங்கரரான மகாவீரர் கோசலையில் கல்வி போதித்ததாகவும் குறிப்பிடுகின்றது.


காசி நாடு

         காசி ராச்சியம், பிரதிஸ்தனவின் சோமவன்ச குலத்தைச் சேர்ந்த அயுசின் மகனான சேத்திரவிரதனால் உருவாக்கப்பட்டது.

பண்டைய பிராமண வழக்கப்படி காசியின் மன்னர் உணவருந்துவதை எவரும் பார்த்ததில்லை. மேலும் எந்தவொரு மன்னரும் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவில்லை. இவ்வாறு தமது பிராமணச் சட்டங்களை அம்மன்னர்கள் பேணி வந்தனர்.  





 


         காசியின் மன்னரின் விருந்தினராக பிஷ்வேஷ்வர் பிரசாத் கொய்ராலா, பண்டித ஜவகர்லால் நேரு, ராஜேந்திரப் பிரசாத், இந்திரா காந்தி, இரண்டாம் எலிசபெத், நெல்சன் மண்டேலா, தலாய் லாமா, கோச்செரில் ராமன் நாராயணன் மற்றும் அவரது பர்மிய மனைவி போன்றோர் சென்றுள்ளனர்.


மகத நாடு

           மகத நாடு மகாஜனபதங்களில் குறிப்பிடப்படும் 16 சிறப்பான நாடுகளுள் ஒன்றாகும். இதன் முதன்மை நிலப்பகுதி கங்கை ஆற்றுக்குத் தெற்கே அமைந்துள்ள பீகாரின் பகுதி ஆகும். இதன் தலைநகரம் ராஜககா (இன்றைய ராஜ்கிர்) என்பதாகும். கிழக்கு உத்தரப் பிரதேசம், பீகாரின் பெரும்பகுதி, வங்காளம் ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கி இது விரிவாக்கப்பட்டது. இராமாயணம்,மகாபாரதம், புராணங்கள் ஆகியவற்றில் மகத நாடு பற்றிய குறிப்புக்கள் உள்ளன. பௌத்த, சமண நூல்களிலும் மகதம் பற்றிப் பெருமளவு குறிப்புக்கள் உள்ளன. மகதம் பற்றிய மிகப் பழைய குறிப்புஅதர்வண வேதத்தில் காணப்படுகின்றது.




         கி.மு 684 இல் மகத நாடு  தோற்றுவிக்கப்பட்டது. ப்ரிஹ்றத ராஜ்ஜியம், பிரத்யோட ராஜ்ஜியம், ஹரயங்க ராஜ்யம், சிசுங்க ராஜ்ஜியம் போன்ற பலதரப்பட்ட ராஜ்யதால் கி.மு684 முதல் கி.மு424 வரை ஆளப்பட்டுள்ளது.
          இந்தியாவின் பெரிய சமயங்கள் இரண்டு மகத நாட்டிலேயே உருவாயின. இந்தியாவின் மிகப்பெரிய இரண்டு பேரரசுகளான மௌரியப் பேரரசு, குப்தப் பேரரசு ஆகியவற்றின் மூலமும் இதுவே. இப் பேரரசுகளின் காலத்திலேயே இந்தியா அறிவியல், கணிதம், வானியல், சமயம், தத்துவம் ஆகிய துறைகளில் பெரும் முன்னேற்றங்களைக் கண்டது. இது இந்தியாவின் பொற்காலம் எனக் கருதப்படுகின்றது.


மகாஜனபதங்களில் உள்ள மற்ற ராஜ்ஜியங்களை பற்றியும் வேத காலத்தில் தென் இந்தியாவின் வரலாறு பற்றியும் அடுத்த பதிவில் சிந்திப்போம்...
              அடுத்த பதிவு அடுத்த வெள்ளிக்கிழமை பதிவிடப்படும்,. இனி பிரதி வெள்ளிக்கிழமை பதிவிடப்படும்...

                பதிவு பற்றிய கருத்துக்களும் கேள்விகளும் வரவேற்க்கபடுகின்றன...

மூட்டு பிரச்னைக்கு நவீன சிகிச்சை வேண்டுமா?



பொதுவாக முதுமையை அடையும்போது ஆண், பெண் இருபாலருக்கும் மூட்டுகளில் தேய்மானம் ஏற்பட்டு வலுவிழந்து வலி ஏற்படக்கூடும். மூட்டுகளிலுள்ள குறுத்தெலும்பு வளராமல் தேய்மானம் அடைந்தாலும், அங்குள்ள வழுவழுப்பான திரவம் குறைந்துபோனாலும், மூட்டுகளில் உராய்வு ஏற்படும்.


இதனால், மூட்டுகளில் அசைவு பாதிக்கப்பட்டு இறுக்கம் அதிகரிக்கும். அப்போது வலி ஏற்படும். சிலருக்கு வீக்கத்துடன் வலி இருக்கும். அதிலும் காலையில் மூட்டுகளில் இறுக்கமும் வலியும் அதிகமாக இருக்கும்போது நீட்டவும் மடக்கவும் அவதிப்படுவார்கள். மூட்டு வலி விட்டு விட்டோ அல்லது தொடர்ந்து நாள்பட்டோ இருக்கலாம். பொதுவாக சுமார் 55 வயதில் ஆண்களைவிட பெண்களுக்கே இப்பிரச்னை அதிகமாக உள்ளது.


காரணம்: இதற்கு வளர்சிதை மாற்றம், மரபு, உடல் பருமன், தசைகளின் பலவீனம் மற்றும் இதர மூட்டுக் கோளாறுகளைக் காரணமாகக் கூறலாம். இடுப்பு, கைகள், விரல்கள், கணுக்கால், கழுத்து, பின் கழுத்து, முழங்கால் போன்ற இடங்களில் வலி அதிகமாக இருக்கலாம்.


பரிசோதனைகள்: மூட்டுகளில் வலியும் இறுக்கமும் இருப்பதை எக்ஸ்-ரே மூலம் கண்டு அறியலாம். மேலும் இரத்த சிவப்பணுக்கள் தொடர்பான சோதனை (உநத), புரோட்டீன் சோதனை, மூட்டுகளிலுள்ள வழுவழுப்பான திரவத்தை சோதித்தல், இரத்த அணுக்களைச் சோதித்தல் என பல சோதனைகளைச் செய்யலாம். சிலவேளைகளில் சாதாரண எக்ஸ்-ரே மூலம் குறுத்தெலும்பு தேய்மானம், மூட்டுகளுக்கிடையில் குறைந்துள்ள இடைவெளி, திரவத்தின் அளவு போன்றவை தெரியவராது. அந்த நிலையில் எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை மூலம் மூட்டுகளின் நிலையைக் கண்டறியலாம்.


வழக்கமான சிகிச்சைகள்: வலியைக் குறைத்து மூட்டுகளில் இறுக்கத்தை இலகுவாக்கி இயல்பாகச் செயல்பட வைக்கவும், மேலும் மூட்டுகளில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் சிகிச்சை அளிக்க வேண்டும். பெரும்பாலான நேரங்களில் வலிநிவாரண மாத்திரைகளும், ஸ்டீராய்டு மாத்திரைகளுமே வழங்கப்படுவதால் தாற்காலிக நிவாரணமே கிடைக்கும். இதில் பக்கவிளைவுகள் நிறைய உண்டு.


புதிய எமிட்ரான் பிஎஸ்டி (Pulsed Signal Therapy) சிகிச்சை: அதிநவீன, அறுவை சிகிச்சையற்ற, புதுமையான ஒரு சிகிச்சை முறைதான் பிஎஸ்டி. அதாவது, எமிட்ரான் எனும் சாதனம் மூலம் மிகக் குறைந்த சக்தி கொண்ட மின்காந்த அதிர்வலைகள் பாதிக்கப்பட்ட மூட்டுகள் பகுதியில் செலுத்தப்படும். இதனால் அப்பகுதியில் ரத்த ஓட்டம் தூண்டப்பட்டு, பாதிக்கப்பட்ட திசுக்களை சீரடையச் செய்கிறது அல்லது புதிய திசுக்களை ஏற்படுத்துகிறது. இயல்பான முறையில் குணமடையும் சக்தியை அதிகரிக்கிறது.


சிகிச்சைக்கு நல்ல பலன்: ஆக்ஸிமெட் மருத்துவமனையின் எலும்பு மருத்துவப் பிரிவில் இந்த எமிட்ரான் சிகிச்சை கடந்த 5 ஆண்டுகளாக அளிக்கப்பட்டு வருகிறது. இது அறுவை சிகிச்சையல்ல. மருத்துவமனையில் தங்க வேண்டியதில்லை. பதினைந்து நாள்களுக்கு தினம் ஒரு மணி நேரம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குறைந்த செலவில் சுமார் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த சிகிச்சை பலனளித்துள்ளது.


கட்டணச் சலுகை: உலக மூட்டுவலி விழிப்புணர்வு தினத்தையொட்டி சிகிச்சைக்கான பரிசோதனைக் கட்டணத்தில் 50 சதவீத சலுகை வழங்கப்படுகிறது.


மேலும் விவரங்களுக்கு...
ஆக்ஸிமெட் மருத்துவமனை, அண்ணா சாலை, நந்தனம், சென்னை.

நான் ஈ இயக்குனரின் ‘மகாபலி’



ராஜமௌலி இயக்கி வரும் தெலுங்கு படத்திற்கு தமிழில் ‘மகாபலி’ என்று பெயர் வைத்துள்ளனர்.

நான் ஈ பட இயக்குனர் ராஜமௌலி அடுத்து பாஹுபாலி தெலுங்கு படத்தை இயக்கி வருகிறார். சரித்திர பின்னணியிலான இப்படத்தில் அனுஷ்கா ராணி வேடம் ஏற்றிருக்கிறார். ‘ரிபெல் ஸ்டார்’ பிரபாஸ்தான் கதையின் நாயகன்.
இவர்களுடன் சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் மற்றும் தெலுங்கின் முன்னணி நடிகர் - நடிகைகள் பலர் நடிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெறுகிறது. தெலுங்கு திரையுலகில் இதுவரை இல்லாத அளவிற்கு பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருகிறது.


இந்நிலையில் படத்தின் ‘மேக்கிங்’ சம்பந்தமான வீடியோ ஒன்றை, கதாநாயகன் பிரபாஸின் பிறந்த நாளையொட்டி வெளியிட்டுள்ளனர். தெலுங்கின் முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவரான எம்.எம்.கீரவாணி இசை அமைக்க, கே.கே.செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். படத்திற்கு சாபு சிரில் கலை இயக்குனராக பணியாற்ற, பீட்டர் ஹெய்ன் சண்டை காட்சிகளை அமைக்கிறார். ஸ்ரீகர் பிரகாஷ் எடிட்டிங் செய்யும் இந்தப் படத்தின் கிராஃபிக்ஸ் வேலைகளை ஹாலிவுட் கலைஞர்கள் கவனிக்கிறார்கள்.


ராஜமெளலி இயக்கிவரும் 'பாஹுபாலி' திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவரவிருக்கிறது. 'ரத்த சரித்திரா' படத்தினைத் போன்று ஒரே சமயத்தில் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பையும் இப்போதே முடித்துவிட முனைப்புடன் செயல்படுகிறாராம் ராஜமெளலி. இந்தப் படத்திற்கு தெலுங்கில் ‘பாஹுபாலி’ என்றும் தமிழில் ‘மகாபலி’ என்றும் பெயர் வைத்துள்ளார்.

சர்வதேச திரைப்பட விழாவை தொடங்கி வைக்கும் ராம் லீலா!



மொராக்கோவின் சர்வதேச திரைப்பட விழாவை தொடங்கிவைக்கிறது ‘ராம் லீலா’.


ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் நவம்பர் 29ம் தேதி முதல் டிசம்பர் 7ம் தேதி வரை 13வது மராக்கெஷ் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது.
இந்த விழாவில் திரையிடுவதற்காக இந்தியாவில் இருந்து பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் ராம் லீலா தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதுவும் சர்வதேச திரைப்பட விழா இந்திய சினிமாவை கொண்டாடும் வகையில், விழாவின் தொடக்கமாக ராம் லீலா படம் இடம்பெறுகிறது.


இதன்மூலம் சர்வதேச திரைப்பட விழாவை தொடங்கி வைக்கும் முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை ராம் லீலா பெறுகிறது. திரைப்பட விழாவில் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, தீபிகா படுகோன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.




ரன்வீர் சிங், தீபிகா படுகோன் நடித்துள்ள ராம் லீலா, நவம்பர் 15ஆம் தேதி திரைக்கு வருகிறது. ரோமியோ-ஜூடிவயட் காலகத்திய காட்சிகளை தத்ரூபமாக வெளிப்படுத்தியிருக்கும இப்படத்தின் டிரைலர் மற்றும் தீபிகாவின் நடனம் இடம்பெற்ற பாடல் ஒன்று வெளியிடப்பட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

'அத்தரின்டிக்கி தாரெடி' ரீமேக்கில் விஜய்!


தெலுங்கில் ஹிட்டான 'அத்தரின்டிக்கி தாரெடி' படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜய் நடிப்பது உறுதியாகிவிட்டது.

சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்தோடு வசூல் சாதனையும் படைத்த படம் 'அத்தரின்டிக்கி தாரெடி'. இதில் நாயகன், நாயகியாக பவன் கல்யாண், சமந்தா நடித்திருந்திருந்தனர்.

தற்போது இந்தப் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இதன் தமிழ் ரீமேக்கில் விஜய் நடிப்பது உறுதியாகி விட்டதாம். தெலுங்கில் சமந்தா நடித்த வேடத்தில் தமிழிலும் அவரே நடிக்க உள்ளார். இதன்மூலம் அவர் விஜய்க்கு ஜோடியாக முதன் முறையாக நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் தயாரிக்கிறார். படத்துக்கு இயக்குனர் இன்னும் முடிவாகவில்லை.

விஜய் தரப்போ காவலன் படத்தை இயக்கிய சித்திக் இயக்கினால் நன்றாக இருக்கும் என விரும்புகிறதாம். ஆனால் சித்திக்கோ ஜான் ஆப்ரஹாம் நடிக்கும் இந்தி படத்தை இயக்க உள்ளார். இதனால் வேறொரு இயக்குனர் இப்படத்தை இயக்கலாம் என கூறப்படுகிறது.

ஏற்கெனவே விஜய் பல தெலுங்கு ரீமேக் படங்களை தமிழுக்கு கொண்டு வந்துள்ளார். அந்த வரிசையில் 'அத்தரின்டிக்கி தாரெடி' படமும் இணைய இருப்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணனுக்காக உடல் எடையை குறைக்கும் தம்பி!


ஜெயம் ரவி, தனது அண்ணன் ராஜா இயக்கும் படத்துக்காக உடல் எடையை குறைக்க உள்ளார்.

தற்போது ஜெயம் ரவி பூலோகம், நிமிர்ந்து நில் ஆகிய இரண்டு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் அவர் 'பூலோகம்' படத்தில் குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். இதற்காக அவர், தனது உடல் எடையை அதிகரித்து ஜிம் பாய் தோற்றத்துக்கு மாறினார். இதே தோற்றத்துடன் அவர் 'நிமிர்ந்து நில்' படத்திலும் நடித்து வருகிறார்.

இவ்விரு படங்களுக்குப் பிறகு ஜெயம் ரவி அவருடைய அண்ணன் ராஜா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இன்னும் பெயரிப்படாத இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் ஆக்ஷனுக்கு நிகராக ரொமான்டிக் காட்சிகளும் இருப்பதால் ஜெயரம் ரவியிடம் எடையை குறைக்குமாறு ராஜா சொல்லியிருக்கிறாராம்.

மேலும் ஜெயம் ரவி தனது பழைய படங்களில் எப்படி இருந்தாரோ அப்படியே இருக்க வேண்டும் எனவும் விரும்புகிறாராம். இதையடுத்து ஜெயம் ரவி தனது உடல் எடையை 12 கிலோ வரை குறைக்க இருக்கிறார்.

அஜீத் படப்பிடிப்பிற்கு எதிர்ப்பு!

'வீரம்' படப்பிடிப்பின் போது தெலுங்கு திரைப்பட ஸ்டண்ட் கலைஞர்கள் போர்க்கொடி தூக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

சிவா இயக்கத்தில் அஜீத்-தமன்னா நடித்து வரும் வரும் வீரம். இப்படத்திற்கான படப்பிடிப்பு ஐதராபாத்தில் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு, படத்தின் சண்டைக்காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. இதன் சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா வடிவமைக்கிறார். 

இந்த சூழ்நிலையில் படப்பிடிப்பு தளத்திற்கு வந்த தெலுங்கு ஸ்டண்ட் யூனியனைச் சேர்ந்தவர்கள் தங்களது சங்கத்தை சேர்ந்த்வர்களுக்கும் படத்தில் வேலை கொடுக்கவேண்டும் என போர்க்கொடி தூக்கினார்கள். ஆந்திராவில் வேறு மொழி பட படப்பிடிப்பு நடத்தும் போது, தெலுங்கு திரைப்பட ஸ்டண்ட் கலைஞர்கள் குறிப்பிட்ட சதவீதம் பேரை பயன்படுத்த வேண்டும். 

இதை செய்யாததால் 'வீரம்' பட படப்பிடிப்பிற்கு எதிராக அவர்கள் கோஷம் போட்டனர். இதனால் படப்பிடிப்பு தடைபட்டு, பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இரண்டு ஸ்டண்ட் யூனியனையும் சேர்ந்தவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. 

நிலைமையை கவனித்த சிறுத்தை சிவா ஸ்டண்ட் காட்சிகளை ஒதுக்கிவைத்துவிட்டு அஜீத், தமன்னா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க ஆரம்பித்துவிட்டாராம்.

இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும்-04

புதியகற்காலத்தை அடுத்து வந்த காலம் உலோககாலம்.  உலோக காலம் இந்தியாவில் கி.மு 3300 ஆண்டு வாக்கில் தொடங்கியது. உலோக காலத்தை செம்பு-கற்காலம், இரும்பு காலம் என இரண்டாக வகைபடுத்தலாம்.


செம்பு கற்காலம்:
               கல் ஆயுதங்களுக்கு பதிலாக செம்பு, வெண்கலம் போன்ற பல வகையான உலோகங்களை உருக்கி கருவிகளை செய்தனர்.  உலோகங்களின் வருகையால் பொருளாதாரம், நாகரிகம் சற்று வேகமாக வளர்ச்சியடைய ஆரம்பித்தது. சில நுண் கற்கருவிகளும் இக்காலத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்தன. உலோகங்களின் பயன்களை அறிந்த மக்கள் உலோகங்களை தேடி நெடுந்தூர பயணம் மேற்கொண்டனர்.



தென்இந்தியாவில் கோதாவரி, காவிரி, துங்கபத்ரா, பென்னாறு நதிகளின் பள்ளதாக்குகளில் குடியானவ சமுதாயங்கள் தோன்றி வளர்ந்தன. கி.மு 2000 ஆண்டு வாக்கில் தென்னிந்தியாவில் உலோகங்கள் பயன்படுதியதர்க்கான சான்றுகள் காணப்படுகின்றன. இந்தியாவின் மிக பழமையான நாகரிகமாக கருதப்படும் மேலும் எகிப்து, மெசொப்பொத்தேமியா, சீனா போன்ற இடங்களில் தழைத்தோங்கியிருந்த, உலகின் மிகப் பழைய நாகரிகங்களையொத்ததாக கருதப்படும் ஹரப்பா நாகரிகம் ஆரம்பமானது செம்பு கற்காலத்தில் தான் .

ஹரப்பா பண்பாடு:

           கி.பி 1856 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கிழக்கிந்திய ரயில்வே கம்பனியை சார்ந்த பொறியாளர்கள்  பிரிட்டிஷ் கால இந்தியாவின் கராச்சி-லாகூர் நகரங்களை  இணைக்க இருப்பு பாதை பணிகள் மேற்கொண்ட பொழுது பூமிக்கடியில் கட்டிடங்களின் தடயங்கள் இருப்பதை கண்டறிந்தனர். இதுவே ஹரப்பா என்னும் தொன்மையான  நாகரிகம் வெளிவந்ததற்கான முதல் படி. பின்னர் அரை  நூற்றாண்டுகள் கழித்து 1912 ஆண்டில் ஹரப்பா நாகரிகத்தின்  முழுமையான பெருமைகள் வெளிவர தொடங்கின. கடந்த156 ஆண்டுகளாக அகழ்வாராய்ச்சிகள் மேற்கொண்ட வண்ணமே  உள்ளனர்.




          1931 ஆம் ஆண்டிலிருந்தே ஒவ்வொரு வரலாற்று ஆசிரியர்களும் ஹரப்பா நாகரிகத்தின் காலத்தை ஒவ்வொரு விதமாக கணிக்கின்றனர். இவை அனைத்தையும் தொகுத்து  பார்க்கும் பொழுது ஹரப்பா நாகரிகத்தின் காலம் கி.மு 3300 இல்  இருந்து கி.மு 1500. எதிர்காலத்தில் வேறு மாற்றம் கூட வரலாம்.
 .
                 சிந்து பள்ளத்தாக்கின் மேற்கு பஞ்சாப்பிலுள்ள ஹரப்பா மற்றும் சிந்து மாகாணத்திலுள்ள மொகஞ்சதாரோ ஆகிய இரு  இடங்களில் தான் முதன் முதலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தற்போது இவ்விரு இடங்களுமே பாகிஸ்தானில் உள்ளன. தொடக்கத்தில் இப்பண்பாடு சிந்து சமவெளி நாகரிகம் என்றழக்கபட்டது. பின்பு சிந்துசமவெளி நாகரிகத்திற்கு அப்பாலும் இந்நாகரிகத்தின் தடயங்கள்  இருந்ததால், முதன்  முதலில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட இடத்தை நினைவு  கூறும் விதமாக ஹரப்பா பண்பாடு என்றளைக்கப்படுகிறது .


 உலகின்  மிக பழமையான நாகரிகமாக கருதப்படும் மெசபடோமியா, எகிப்திய நாகரிகத்திற்கு இணையானது ஹரப்பா பண்பாடு.  ஹரப்பா நாகரிகத்திற்கு முந்தய கால மக்களின் தடயங்கள் கிழக்கு பாலுச்தீனத்தில் காணப்படுகின்றன. எனவே ஹரப்பா  நாகரிகம் அங்கிருந்த மக்களின் குடிப்பெயர்தளால்  ஆரம்பித்திருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.


                சிந்து சமவெளி நாகரிக மக்கள் சிறப்பு வாய்ந்த நாகரீக  வாழ்வை பெற்றிருந்தனர் பெரும்பாலான இடங்களில் செங்கற்களாலான கோட்டைகளும் கட்டிடங்களும்  இருந்துள்ளன. பாதாள சாக்கடை அமைத்து கழிவுநீரை அகற்றும் அளவுக்கு நாகரீக வளர்ச்சியும் பெற்றிருந்தனர். மேலும்  மொகஞ்சதாரோவில் கண்டுபிடிக்கப்பட்ட 38 அடி நீளமுள்ள  மாபெரும் குளியல்குலம் அவர்களின் மேம்பட்ட வாழ்க்கையை  பறைசாற்றுகிறது. சிந்துவெளி நாகரிகப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட செரமிக் பொருட்கள் தெற்கு துர்க்மெனிஸ்தானிலும், வடக்கு ஈரானிலும் காணப்பட்ட செரமிக் பாண்டங்களுடன் ஒத்துப்போகின்றன. இதன் மூலம் சிந்துவெளி மக்கள் அப்பகுதிகளுடன் வணிகத்தில் ஈடுபட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.


       
                   ஹரப்பா மக்கள்  சிவா  வழிபாட்டை  மேற்கொண்டிருந்ததற்கான சான்றுகள் நிறைய உள்ளன. சிந்து சமவெளி நாகரிக மக்கள் ஹிந்துக்களே என்ற முடிவுக்கு வரமுடிகிறது. இருப்பினும் வழிபாட்டு கூடங்கள், கோவில்கள்  இருந்ததற்கான சான்றுகள் இன்று வரை ஏதும் இல்லை.


 


         மத்திய ஆசியாவிலிருந்து வந்த ஆரியர்களின்  படையெடுப்பினால், வறட்சி, புயல், பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களால் சிந்து சமவெளி நாகரீகம் அழிந்திருக்கலாம் என்று  பலதரப்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. மேலும் ஆரியர்களின்  படையெடுப்பிற்கு பின் அங்கிருந்த மக்கள் தென்இந்தியாவை  நோக்கி வந்தனர் எனவே ஹரப்பா மக்கள் பயன்படுத்திய மொழி  தமிழ் என்று கூறும் வரலாற்று ஆசிரியர்களும் உண்டு. இதற்கு சான்றாக நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறையில் 2007ல் சிந்துவெளி எழுத்துக்கள் பொறித்த கற்கோடரி ஒன்று கிடைத்துளது. இதிலிருந்து சிந்துவெளி மக்களும் தமிழரும் ஒரே மொழியையோ அல்லது ஒரே தாய்மொழியிலிருந்து பிரிந்த கிளை மொழிகளையோ பேசியதாக தெரிகிறது.
                        தமிழ்நாட்டின் காவிரிக் கழிமுகப் பகுதியில் சமீபத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் துறையின் அகழ்வாய்வின்போது பத்துக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த முதுமக்கள் தாழிகளில் காணப்பட்ட சில குறியீடுகள், ஹரப்பா, மொஹஞ்சதாரோ ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட சிந்து சமவெளி நாகரிகக் குறியீடுகளைப் போன்றே இருப்பதாக, பழங்கால எழுத்துக்களை ஆய்வு செய்துவரும் ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.

ஹரப்பா பண்பாட்டிற்கு பிறகு ஆரம்பித்த காலம் வேத காலம். இக்காலக்கட்டத்தில் ஆரியர்களின் படையெடுப்பு மற்றும் இந்தோ-ஆரிய கலாச்சாரம் உருவாகியது. இதை பற்றி விரிவாக அடுத்த பதிவில் பார்ப்போம்!

‘விஸ்வரூபம்’ வெறும் குழந்தை : டெக்னீஷியன் கருத்து

'Viswaroopam' only child: technician Feedback‘விஸ்வரூபம்‘ 2ம் பாகம் முன் முதல்பாகம் வெறும் குழந்தைதான் என்று அதில் பணியாற்றும் டெக்னீஷியன் கூறினார். ‘விஸ்வரூபம் 2ம் பாகம்‘ இயக்கி நடித்து வருகிறார் கமல். ஆண்ட்ரியா, பூஜாகுமார் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் டிரைலரை 2வது கட்டமாக வெளியிட்டுள்ளார் கமல். ஆக்ஷன் பகுதிகள் நிறைந்த படமாக இப்படம் உருவாகி வருகிறது.


திரையுலகை சேர்ந்த சிலர் டிரைலரை பார்த்து பாராட்டினர். விஷுவல் எபக்ட்ஸ் சூபர்வைசர் மதுசூதனன் தனது இணைய தள டுவிட்டர் பக்கத்தில், ‘விஸ்வரூபம் 2ம் பாக  டிரைலர் என்னை பெரிதும் கவர்ந்தது. இந்த டிரைலரை பார்க்கும்போது ஏற்கனவே வெளியான விஸ்வரூபம் முதல் பாகம் இந்த 2ம்பாகத்தின் முன் வெறும் குழந்தைதான். இப்படத்தின் விஷுவல் எபக்ட் பணிகள் ரசிகர்களை ஆச்சரியத்துக்குள்ளாக்கும்‘ என குறிப்பிட்டுள்ளார். அதேபோல் டிரைலரை பார்த்த உதயநிதி ஸ்டாலின்,‘விஸ்வரூபம் 2ம் பாக டிரைலர் பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். உலகநாயகன் கமல் மட்டும்தான் இதுபோன்ற படத்தை செய்ய முடியும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

நாயகன் வேடம் வேண்டாம்!


‘ரகளபுரம்‘ படத்தில் கருணாசுடன் சேர்ந்து மற்றொரு ஹீரோவாக நடித்திருப்பவர் பரத் ரெட்டி. அவர் கூறும்போது, ‘தமிழில் கமல் நடித்த வேட்டையாடு விளையாடு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தேன். இந்த படத்தை பார்த்துதான் ‘ரகளபுரம்‘ படத்தில் கருணாஸ் எனக்கு போலீஸ் அதிகாரியாக நடிக்க வாய்ப்பு தந்தார்.

 Do not play the hero

அடுத்து சுந்தரபாண்டியன் இயக்கும் ‘இது கதிர்வேலன் காதல்‘, ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் தயாரிக்கும் படம், ‘சேட்டை‘ இயக்குனர் கண்ணன் இயக்கும் படங்களில் நடிக்கிறேன். ஐதராபாத்தில் இதய அறுவை சிகிச்சை டாக்டராக பணிபுரிந்தாலும் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்த விஷயம். ஹீரோ ஆக வேண்டும் என்ற ஆசை எனக்கில்லை. குணசித்திரம் உள்ளிட்ட வேடங்களே போதும். நடிப்புக்காக டாக்டர் பணியை விடமாட்டேன்’ என்றார்.

நோக்கியா லூமியா 1320 பேப்லட் அறிமுகம்


மைகேரோசாப்ட் நோக்கியாவை வாங்கிய பிறகு  இப்போது முதன்முறையாக பேப்லட் ஒன்றை வெளியிட்டுள்ளது. நோக்கியா லூமியா 1320 என்ற பெயர் கொண்ட இந்த பேப்லட், 6 இன்ச் நீளம் கொண்ட டிஸ்பிளே உடையது.

மேலும், மொபைலில் அதிகம் ஸ்கேரட்ச்(scratch) ஆகாமல் இருக்க கொரில்லா கிளாஸ் இதில் உள்ளது. 1.7GHz dual-core Qualcomm Snapdragon 400 processor கொண்டுள்ளது, இது மற்ற பிராஸஸர்களை விட மிக வேகமாக செயல்படக்கூடியதாகும்.

மேலும் இதில் 1GB ரேம், விண்டோஸ் 8 OS, மற்றும் 5MP கேமரா ஆகியவற்றுடன் சந்தையில் கிடைக்கிறது. இதில் 8GB க்கு இன்டர்நெல் மெமரியும் 32GB க்கு மெமரி கார்டு ஆப்ஷனும் இந்த பேப்லட்டில் உள்ளது. இந்த பேப்லட் வாங்கும் நபர்கள் கிளவுட் ஸ்டோரேஜ் மூலம் 7GB க்கு ஆன்லைனில் தங்களது தகவல்களை சேமித்து கொள்ளலாம்.

லூமியா 1320 ல் மைக்ரோசாப்டின் வேர்டு, எக்ஸல், பவர்பாயிண்ட் என அனைத்தையும் இதில் பயன்படுத்தும் வகையில் இந்த பேப்லட் உள்ளது. இதன் தற்போதைய விலை ரூ.20,900 என்று மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. இது அடுத்த வரும் 2014 ஜனவரி மாதம் முதல் சந்தையில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா லூமியா 1320 பேப்லட் அம்சங்கள்:


1280 x 720 என்ற pixel resolution கொண்டுள்ளது

1.7GHz dual-core Qualcomm Snapdragon 400 processor கொண்டுள்ளது

5MP கேமரா

0.3MP ப்ரண்ட் கேமரா,

8GB க்கு இன்டர்நெல் மெமரி,

1GB ரேம்,

விண்டோஸ் 8 OS

4G,

3G,

WiFi 802.11 b/g/n

எடை 220 கிராம்

எல்ஜி Fireweb, பயர்பாக்ஸ் ஓஎஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்

                                            



எல்ஜி நிறுவனம் பயர்பாக்ஸ் ஓஎஸ் இல் இயங்கும் முதல் ஸ்மார்ட்போன் Fireweb என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. இந்த சாதனம் பயர்பாக்ஸ் OS 1.1 இயங்குதளத்தில் இயங்குகின்றது. Fireweb ஸ்மார்ட்போன் பிரேசில் முதல் நாட்டில் ரூ. 12,700 விலையில் முதன் முதலாக தொடங்கப்பட்டது.

பயர்பாக்ஸ் OS 1.1 அடிப்படையாக கொண்டு எல்ஜி Fireweb வருகிறது, 4 இன்ச் HVGA (320x480) டிஎஃப்டி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. 1GHz குவால்காம் ப்ராசசர், மற்றும் microSD அட்டை ஸ்லாட் கொண்ட inbuilt சேமிப்பு 4GB கொண்டுள்ளது. 1540mAh பேட்டரி மற்றும் Wi-Fi, ப்ளூடூத், மைக்ரோ-USB, 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் 3 ஜி போன்ற இணைப்பு விருப்பங்களும் கொண்டுள்ளது.

எல்இடி ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் பின்புற ஆட்டோ ஃபோகஸ் கேமரா. கூடுதலாக எல்ஜி புதிய பயர்பாக்ஸ் ஸ்மார்ட்ஃபோனில் HTML5 துணைபுரிகிறது. வெப் ப்ரவ்சர், காலெண்டரை, கடிகாரம் மற்றும் வரைபட அப்ளிக்கேஷன் உடன் ஏற்றப்பட்டதாக வருகின்றது.

எல்ஜி Fireweb முக்கிய குறிப்புகள்:


4 இன்ச் HVGA (320x480) டிஎஃப்டி டிஸ்ப்ளே

1GHz குவால்காம் ப்ராசசர்

MicroSD அட்டை ஸ்லாட் உடன் inbuilt சேமிப்பு 4GB

1540mAh பேட்டரி

பயர்பாக்ஸ் OS

எல்இடி ப்ளாஷ் உடன் 5 மெகாபிக்சல் பின்புற ஆட்டோ ஃபோகஸ் கேமரா

Wi-Fi,,

ப்ளூடூத்,

மைக்ரோ-USB,

3.5mm ஆடியோ ஜாக்

3G

பேபால் மணி கிராம் – இதில் உடனடியாக பணம் !

பேபால் மூலம் பரிவர்த்தனை நடத்துவதுதான் இப்ப ஃபேம்ஸாக இருக்கிறது. உடனே பணம் அனுப்ப‌ இன்னொரு முறை வெஸ்ட்டர்ன் யூனியன் அல்லது மணி கிராம் என்ற சேவை. இப்போது பேபால் மனி கிராமுடன் இனைந்து அற்புதமான திட்ட்த்தை உருவாக்கியுள்ளது.



25 - ravi paypal


1. அதாவது பேபாலுக்கு தேவையான கிரடிட் கார்ட் அல்லது வங்கி கணக்கு இனி மேல் தேவையில்லை. நேராக மணி கிராம் கடைக்கு சென்று காசை கட்டி பேபால் அக்கவுன்ட்டில் வரவு வைத்து அனுப்ப வேண்டியவங்களுக்கு பேபால் மூலம் பணத்தை அனுப்பலாம்.


2. பேபாலில் பணம் வந்தாலோ அல்லது பணம் எடுக்க 7 – 10 நாட்கள் ஆகும் ஏன் என்றால் பேபால் பணத்தை வங்கியில் தான் நேரடியாய் செலுத்தும். அது வரை நமக்கு ஸ்டக் ஆகிவிடும். இப்போது பணத்தை வித்டிரா செய்யலாம் எப்படி – பணத்தை மணி கிராமாக டிரான்ஸஃபராக மாற்றி உடனே உலகத்தின் எந்த ஒரு மூலையிலும் பணத்தை மணி இன் செகன்ட்ஸ் பிரகாரம் உடனே பெறலாம்.

இப்போதைக்கு இது அமெரிக்காவில் மட்டும் சாத்தியம் ஆனால் விரைவில் உலகெம்ங்கும்….

இதை தவிர இப்போது பேபால் ப்ரீபேய்ட் மாஸ்டர் கார்டை இலவசமாக தருகின்றனர். இதன் மூலமும் பேபாலில் நமக்கு வரும் பணத்தை கிரடிட் அல்லது டெபிட் கார்ட் மாதிரி உபயோகிக்கலாம் மற்றும் உலகத்தின் எந்த ஒரு ஏடிஎம் இயந்திரத்திலும் பணம் எடுக்கலாம்.

சார்ஜ் வழக்கம் போல உண்டு.இதுவும் உடனே எடுக்க கூடிய ஒரு விஷயம் தான்.

எனக்கு வேணா ஒரு ஆயிரம் அமெரிக்க டாலர் அனுப்பினா பக்காவா வேலை செய்தான்னு பார்த்து சொல்றேன் – வசதி எப்படி..???

ராடாருக்கு புது யுக்தியை கொடுத்த டால்பின்கள்!

டால்பின்கள், பாலூட்டி வகையை சார்ந்தவை. அவை சமுதாயமாக வாழும் தன்மை கொண்டவை. உணவைப் பெறுவதிலும், குட்டிகளைப் பராமரிப்பதிலும் அவை ஒன்றுக்கொன்று கூட்டாக செயல்படும்.
உலகில் 37 வகை டால்பின்கள் இருக்கின்றன. இவற்றில் 32 வகை டால்பின்கள் கடலில் வாழ்கின்றன. 5 டால்பின் இனங்கள் ஏரிகளில் காணப்படுகின்றன.

25 - tec dolhin rador.2

டால்பின்கள் கடல் மட்டத்தில் இருந்து 260 மீட்டர் ஆழம் வரை வாழும் தன்மை பெற்றவை. அவை சுவாசிப்பதற்காக அடிக்கடி கடல்மட்டத்திற்கு வந்து `டைவ்’ அடித்துவிட்டுச் செல்லும். ஆபத்து சமயங்களில் 15 நிமிடம் வரை தண்ணீரில் மூழ்கியிருக்கும்.அத்துடன் டால்பின்கள் `எகோலொகேசன்’ எனும் முறையில் எதிரொலி முறைப்படி உணவு தேடல் மற்றும் இடப்பெயர்ச்சியை மேற்கொள்கிறது.


மொத்தத்தில் மிகவும் அமைதியான விலங்கான டால்பின்,மனிதர்களுக்கு பல்வேறு வழிகளில் உதவி வருகிறது. எனவே டால்பினை வைத்து பல ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.


பொதுவாக டால்பின்கள், நீரில் மூழ்கி உள்ள பொருட்களை ஒலி அலைகளை அனுப்பி அவை என்ன என்று கண்டறிகின்றன. இந்த யுக்தி பயன்படாத நேரங்களில் நீர்குமிளிகளை எழுப்பி பொருட்கள் மீதுள்ள தூசுகளை அகற்றிவிட்டு இரையை அடையாளம் காண்கின்றன.


டால்பின்களின் இந்த ஆய்வு முறையை பின்பற்றி வெடி பொருட்களை துல்லியமாக கண்டறிய உதவும் புதிய ராடார் ஒன்றை லண்டன் சவுத் ஆம்ப்டன் பல்கலைகழக விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். தற்போதுள்ள ராடார் முறையில் நீரில் மூழ்கியுள்ள அனைத்து பொருட்களுமே தெரிய வரும்.

25 - tec dolhin rador



இதன் மூலம் பல நேரங்களில் தவறான பொருட்கள் அடையாளம் காணப்படுகின்றன. இந்நிலையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ராடார் மூலம் நீரில் மூழ்கியுள்ள வெடி பொருட்களை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும் என்கிறார்கள்.

Dolphins Inspire Rescue Radar Device

**************************************


 British engineers said Wednesday they had taken inspiration from dolphins for a new type of radar device that could easily track miners trapped underground or skiers buried in an avalanche. The device, like dolphins, sends out two pulses in quick succession to allow for a targeted search for semiconductor devices, canceling any background “noise,” the team wrote in the journal Proceedings of the Royal Society A: Mathematical and Physical Sciences.