Saturday 25 May 2013

Smartphone turned into handheld biosensor to detect toxins, pollutants and pathogens







               University of Illinois at Urbana-Champaign researchers have developed a cradle and app for the iPhone that uses the phone's built-in camera and processing power as a biosensor to detect toxins, proteins, bacteria, viruses and other molecules. 



              Having such sensitive biosensing capabilities in the field could enable on-the-spot tracking of groundwater contamination, combine the phone's GPS data with biosensing data to map the spread of pathogens, or provide immediate and inexpensive medical diagnostic tests in field clinics or contaminant checks in the food processing and distribution chain. 




            "We're interested in biodetection that needs to be performed outside of the laboratory," said team leader Brian Cunningham, a professor of electrical and computer engineering and of bioengineering at the U. of I. 











               " Smartphones are making a big impact on our society - the way we get our information, the way we communicate. And they have really powerful computing capability and imaging. A lot of medical conditions might be monitored very inexpensively and non-invasively using mobile platforms like phones. They can detect molecular things, like pathogens, disease biomarkers or DNA, things that are currently only done in big diagnostic labs with lots of expense and large volumes of blood," Cunningham noted. 







              The wedge-shaped cradle contains a series of optical components - lenses and filters - found in much larger and more expensive laboratory devices. The cradle holds the phone's camera in alignment with the optical components. 




             At the heart of the biosensor is a photonic crystal. A photonic crystal is like a mirror that only reflects one wavelength of light while the rest of the spectrum passes through. When anything biological attaches to the photonic crystal - such as protein, cells, pathogens or DNA - the reflected color will shift from a shorter wavelength to a longer wavelength. 




               For the handheld iPhone biosensor, a normal microscope slide is coated with the photonic material. The slide is primed to react to a specific target molecule. The photonic crystal slide is inserted into a slot on the cradle and the spectrum measured. Its reflecting wavelength shows up as a black gap in the spectrum. After exposure to the test sample, the spectrum is re-measured. The degree of shift in the reflected wavelength tells the app how much of the target molecule is in the sample. 










               The entire test takes only a few minutes; the app walks the user through the process step by step. Although the cradle holds only about 200 dollars of optical components, it performs as accurately as a large 50,000 dollars spectrophotometer in the laboratory. So now, the device is not only portable, but also affordable for fieldwork in developing nations. 




              The team demonstrated sensing of an immune system protein, but the slide could be primed for any type of biological molecule or cell type. 




                The researchers are working to improve the manufacturing process for the iPhone cradle and are working on a cradle for Android phones as well. They hope to begin making the cradles available next year.


வெளிநாட்டிலிருந்து டி.வி.வாங்கி வரப் போகிறீர்களா? உங்கள் கவனத்திற்கு!







                         சாதாரணமாக சிங்கப்பூர் .துபாய் மலேஷியா என சுற்றுலா சென்று வருபவர்களும் ,அங்கு வேலை பார்த்துவிட்டு வருபவர்களும் சந்தோசமாக வாங்கி வருவது LED அல்லது LCD டி.வி. மேலும் சில எலெக்ட்ரானிக் பொருட்கள்..இனி இப்படி வெளிநாடுகளில் வாங்கி இங்கு கொண்டு வரப்படும் டி.வி க்களுக்கு இங்கு வாரண்ட்டி ,சர்வீஸ் சப்போர்ட் ஆகியவை இருக்காது என சோனி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன



                    பொதுவாக எலெக்ட்ரானிக் பொருட்கள் இந்தியாவில் விற்கும் விலையை விட அந்த நாடுகளில் இவற்றின் விலை மிகவும் குறைவு. 


உதாரணமாக:- 


             SONY 46 அங்குல LCD TV யின் இந்திய விலை ஏறக்குறைய 60000 ரூபாய் அதே TVயை துபாயில் வாங்கினால் வெறும் 37000 ரூபாய்தான்.


              அதே போன்று இந்தியாவில் ஏறக்குறைய 25,500 ரூபாய்க்கு விற்பனையாகும் LG 32 INCH LED TV சிங்கப்பூரில் 14000 ரூபாய்க்கு கிடைக்கிறது .


               சாம்சங் நிறுவனத்தின் 40-inch 3D LED TV இங்கு 74000 ரூபாய் பாங்காங்கில் அதன் விலை 42000 ரூபாய்தான்.. டி.வி. மட்டுமின்றி நிறைய எலெக்ட்ரானிக் பொருட்களும் மற்ற நாடுகளில் விலை குறைவு.






              இதன் காரணமாக இந்திய விமான நிலையங்களில் வந்து இறங்கும் பயணிகள் மூலமாக ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 3000 டி.வி க்கள் வருகிறது.என Consumer Electronics and Appliances Manufacturers Association என அழைக்கப்படும் CEAMA தெரிவிக்கிறது.






                இவ்வாறு குறைந்த விலைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் காரணமாக இந்தியாவில் மார்க்கெட் நடுநிலை, ,வியாபாரத்திட்டங்கள் மற்றும் சட்டப்படியான விநியோகத்திட்டம் ஆகியவை தடுமாறுகிறது.மேலும் இந்திய சந்தையில் பொருள் வாங்கும் மனநிலை குறைகிறது.என சோனி நிறுவனத்தின் இந்தியத் தலைவர் சுனில் நய்யார் தெரிவித்தார்.



                    இதனால் பல்லாயிரம் கோடி முதலீடு செய்து இந்தியாவில் தொழிற்சாலையை தொடங்கியுள்ள சாம்சங்,சோனி ,எல்ஜி மற்றும் பேனசானிக் போன்ற கம்பெனிகள் பாதிக்கப்பட்டுள்ளன.




                 எனவே இப்படி வெளிநாடுகளில் வாங்கி இங்கு கொண்டுவரப்படும் டி.வி க்களுக்கு இனி இங்கு வாரண்ட்டி ,சர்வீஸ் சப்போர்ட் ஆகியவை இனி இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன் பனசானிக் நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து இங்கு கொண்டுவரப்பட்டுள்ள பொருட்கள் வாரண்டியுடன் இருந்தாலும் உதிரி பாகங்கள் மற்றும் சர்வீசுக்கு கட்டணம் வசூலிக்கப் போவதாக தெரிவித்துள்ளது.




             மேலும் வெளிநாடுகளில் உள்ள தங்கள் கிளைகம்பெனிகளிடம் பேசி சர்வதேச வாரண்டிமுறையை நிறுத்தும் படி கேட்டுக்கொள்ளப்படும் எனவும் தெரிவித்ததனர்.




              இதற்கிடையில் வெளிநாடுகளில் விலை மலிவாக கிடைக்கும் டிவி இங்கு ஏன்அதிக விலைக்கு விற்கப்படுகிறது என கேட்டபோது இங்கு மற்ற நாடுகளை விட வரி விதிப்பு முறைகளின் காரணமாக 30% முதல் 40% அதிக வரி ,உற்பத்தி செலவு மற்றும் பலகட்ட விநியோக முறை ஆகியவை இருப்பதால் இந்த கூடுதல் விலை என்று சாம்சங் நிறுவன தரப்பில் கூறினார்.மேலும் இப்படி வெளி நாடுகளில் இருந்து கொன்து வருவதன் காரணமாக அரசுக்கு வர வேண்டிய வரியிலும் பெரும் இழப்பு ஏற்படுவதாக கூறுகின்றனர்.




                  இதுபற்றி அரசு தெளிவான முடிவு எடுக்காத நிலையில் இனி வெளி நாடுகளிலிருந்து வாங்கி வரும் டி.வி.க்களை இங்கு சர்வீஸ் செய்வது என்பது இனி கடினம்தான்.அரசு வரிவிதிப்பு முறைகளை மாற்றி இங்கும் குறைந்த விலையில் டிவிக்கள் கிடைக்க ஏற்பாடு செய்தால்தான் இதற்கு ஒரு விடை கிடைக்கும்.

ஸ்மார்ட் போன் மூலம் உணவு மற்றும் நீரில் உள்ள பாக்டீரியா, வைரஸ்களைக் கண்டறியமுடியும்!1 புதுசு கண்ணா புதுசு!







                     இப்போதெல்லாம் ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப் படும் மென்பொருள்கள் நாள்தோறும் புதிது புதிதாக கண்டுபிடித்து கொண்டே இருக்கிறார்கள்.  




                   அவைகளும் பெரும்பாலானோரால் பயன்படுத்தப்படுகிறது. அந்த வரிசையில் தற்போது நோய்க் கிருமிகளை கண்டறியும் ஒரு புதிய மென் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 







                 இதனை அமெரிக்காவின் இலினோய்ஸ் மாகாணத்தில் உள்ள இலினோய்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 








                  இந்த மென்பொருள் ஸ்மார்ட் போனில் உள்ள கேமரா மற்றும் அதன் செயல்பாட்டுத் திறனை உயிர் உணரும் கருவியாக பயன்படுத்தி சுற்றுச் சூழலில் உள்ள நச்சுக்கள், பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றை கண்டறியும் திறன் கொண்டது.




               இந்த முறையின் மூலம் தற்காலிக கள மருத்துவமனைகளில் சோதனைகளையும், உணவுப் பொருட்களின் மாசுகளையும் மிகக் குறைந்த செலவில் உடனடியாக கண்டறியலாம் என்று ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்தனர். 





               இதனைக்கொண்டு நிலத்தடி நீரில் உள்ள நோய்க்கிருமிகளைக் கூட கண்டறிய முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.




  <<<<O>>>>>   GoodLuckAnjana    <<<<<O>>>>>



 Smartphone turned into handheld biosensor to detect toxins, pollutants and pathogens:-

      Washington:


                       University of Illinois at Urbana-Champaign researchers have developed a cradle and app for the iPhone that uses the phone’s built-in camera and processing power as a biosensor to detect toxins, proteins, bacteria, viruses and other molecules. 


 மேலும் தகவல்களுக்கு இங்கே வரவும்...




ஆப்லைனில் மின்னஞ்சல் பார்க்கலாம்! & மின்னஞ்சல் அனுப்பலாம்!







                   ஏதாவது ஒரு நேரத்தில் நமக்கு ஏதேனும் முக்கியமான மின்னஞ்சல் வந்துள்ளதா என சோதிக்க வேண்டும் அல்லது யாருக்கேனும் முக்கிமாக ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் சரியாக அந்த நேரம் பார்த்து நம்முடைய கணணியில் இணைய இணைப்பு துண்டிக்கபட்டிருக்கும் அல்லது நாம் வேறு எங்காவது வெளியில் இருப்போம் மடிக்கணணியில் இணைய இணைப்பு இருக்காது. அது போன்ற சமயங்களில் நமக்கு உதவி செய்யவே கூகுள் ஒரு அருமையான வசதியை வெளியிட்டுள்ளது.




                  ஆப்லைனில் நம்முடைய ஜிமெயிலுக்கு வந்துள்ள மின்னஞ்சலை பார்க்கலாம் மற்றும் நாம் மற்றவர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பலாம் மற்றும் ஆன்லைனில் செய்யும் அனைத்து வேலைகளையும் நாம் இன்டர்நெட் இணைப்பு இல்லாமலே செய்யலாம்.






                   இதற்கு நீங்கள் கூகுள் குரோம் உலவியை பயன்படுத்த வேண்டும். அடுத்து இந்த லிங்கில் Offline Google Mail சென்று நீட்சியை உங்கள் உலவியில் இன்ஸ்டால் செய்யுங்கள்.







                  இந்த நீட்சியை உங்கள் உலவியில் இணைத்தவுடன் ஒரு புதிய டேப்(tab) உருவாகும் அல்லது நீங்களே ஒரு New tab உருவாக்குங்கள்.




               இப்பொழுது புதிய டேபில் நீங்கள் தற்பொழுது இணைத்த Offline Google Mail ஐகானும் இருக்கும் அதில் கிளிக் செய்யுங்கள்.








              உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் Allow OfflineMail என்பதை தேர்வு செய்யவும்.



             இந்த விண்டோவில் கீழே பகுதியில் உங்களின் மின்னஞ்சல் ஐடி காட்டும் அதில் எந்த ஐடிக்கு நீங்கள் னில் பார்க்க வேண்டுமோ அதை தேர்வு செய்து கொண்டு Continue பட்டனை அழுத்துங்கள்.



              அவ்வளவு தான் Continue அழுத்தியவுடன் உங்களின் மின்னஞ்சல் திறக்கும் அந்த ஐடிக்கு வந்த அனைத்து மின்னஞ்சல்களும் காட்டும்.



              இதில் உங்கள் இன்பாக்ஸில் உள்ள அனைத்து மின்னஞ்சல்களும் காட்டும். அந்த மின்னஞ்சலுக்கு நீங்கள் Reply போடலாம் அல்லது அந்த மின்னஞ்சலை அப்படியே Forward செய்யலாம் அல்லது புதியதாக நீங்களே ஒரு மின்னஞ்சலை Compose பட்டனை அழுத்தி அனுப்பலாம் மற்றும் ஏதாவது ஒரு பைலை attachment செய்து அனுப்பும் வசதியும் உள்ளது அனைத்தும் இணைய இணைப்பு இல்லாமலே.




               மேலும் ஓன்லைனில் உள்ள Move, Label, Mute, Report Spam,Print,Mark as Read போன்ற இதர முக்கியமான வசதிகளும் நீங்கள் ஆப்லைனில் பயன்படுத்தி கொள்ளுங்கள். மேலும் Menu பட்டனை அழுத்தினால் இன்னும் பல வசதிகள் உள்ளது. இதன் மூலம் Chat History கூட பார்த்து கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு. இவ்வாறு ஒட்டுமொத்த வசதிகளையும் நாம் இணைய இணைப்பு இல்லாமேலே பயன்படுத்தி கொள்ளலாம்.

பாட்டுத் தலைவனின்(T.M.Soundararajan) - நினைவுகள்






                  பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் டி.எம். சௌந்தரராஜன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 91. உடல் நலக் குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக அவ்வப்போது மருத்துவமனையில் டி.எம். சௌந்தரராஜன் சிகிச்சை பெற்று வந்தார். 



                  இந்த நிலையில், கடந்த வாரம் அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சௌந்தரராஜன் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சௌந்தரராஜன் இன்று மதியம், சென்னை மந்தைவெளியில் உள்ள அவரது இல்லத்தில் மரணம் அடைந்தார்.

 

 
                   டி.எம்.எஸ்…. தமிழ் மக்களைத் தனது காந்தர்வக் குரலால் கட்டிப்போட்ட எழிலிசை வேந்தன்: தமிழ் மொழியை அதற்கே உரிய அழகோடு தெள்ளத் தெளிவாக உச்சரித்துப் பாடிய பாட்டுத் தலைவன்!



                டி.எம்.எஸ். என்பதில் உள்ள `எஸ்’ என்றால், செளந்தரராஜன்: `எம்’ என்பது அவரின் தந்தை மீனாட்சி அய்யங்கார்: `டி’ என்பது அவரின் குடும்பப் பெயர் `தொகுளுவா’, கர்ப்பம் தரித்திருக்கும் பெண்களுக்கு சத்து மாவு தயாரித்துத் தருவதில் பிரபலமான குடும்பம் அவருடையது!







                 டி.எம்.எஸ்- ஸீக்கு டி.எம்.எஸ்ஸே சொல்லும் வேறு சில விளக்கங்கள் சுவையானவை. தியாகராஜ பாகவதர் (டி), மதுரை சோமு (எம்), கே.பி.சுந்தராம்பாள் (எஸ்) ஆகிய மூவரையும் தன் மானசீக குருமார்களாக வைத்திருப்பதையே இது குறிக்கிறது என்பார். தவிர, தியாகைய்யர் (டி), முத்துசாமி தீட்சிதர் (எம்), சியாமா சாஸ்திரிகள் (எஸ்) ஆகிய இசை மும்மூர்த்திகளின் அனுக்கிரகமும் தனக்குக் கிடைத்துள்ளதையே இது குறிப்பிடுகிறது என்று மகிழ்வார்!



               மதுரை வரதராஜப் பெருமாள் கோயிலில் பூசாரியாகப் பணியாற்றியவர் டி.எம்.எஸ்ஸின் தந்தை மீனாட்சி அய்யங்கார்.



              டி.எம்.எஸ்ஸின் முதல் பாடல் `ராதே என்னை விட்டு ஓடாதேடி’ ஒலிப்பதிவான இடம் கோவை சென்ட்ரல் ஸ்டுடியோ 60 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு தொலைக்காட்சித் தொடருக்காக, மீண்டும் அங்கே போய், இடிபாடாகக்கிடந்த அதே பழைய ஒலிப்பதிவு அறையில் நின்று மீண்டும் அதே பாடலைப் பாடி மகிழ்ந்திருக்கிறார்!



              மதுரை, வரதராஜப் பெருமாள் கோயில் வளாகத்திலேயே ஓர் ஓரமாக பெஞ்சுகள் போட்டு, இந்தி வகுப்புகள் நடத்தியது தவிர வேறு ஏதும் வேலை பார்த்தது இல்லை. மற்றபடி எல்லாக் கோயில் விஷேங்களுக்கும் சென்று, பஜனைப் பாடல்கள் பாடி, கிடைக்கும் ஐந்து ரூபாய், பத்து ரூபாய், வெற்றிலை பாக்கு, பழத்தில்தான் அவரின் ஜீவனம் ஒடியது!






            டி.எம்.எஸ்ஸின் முருக பக்தி அனைவருக்கும் தெரியும் `கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்….’ `உள்ளம் உருகுதய்யா முருகா’, `சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா’, `மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் போன்ற உள்ளம் உருக்கும் பலப்பல முருகன் பாடல்களுக்கு இசையமைத்துப் பாடியவர்!



              டி.எம்.எஸ். இசையமைத்துப் பாடிய `கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்’ இன்றளவிலும் நேயர்களால் விரும்பிக் கேட்கப்படும் பக்திப் பாடல். இந்திப் பாடலில் ஒவ்வொரு பாராவிலும் ஒரு குறிப்பிட்ட ராகத்தின் பெயர் இடம் பெறும். அந்தந்தப் பாராவை அந்தந்த ராகத்திலேயே இசையமைத்துச் சாதனை செய்தார்!



             `அடிமை பெண்’ படத்தின் போதுதான் டி.எம்.எஸ்ஸின் மகளுக்குத் திருமணம். `பாடி முடித்துவிட்டுத்தான் போக வேண்டும்’ என்று எம்.ஜி.ஆர். உத்தரவிட்டும் கோபத்தில் கிளம்பிச் சென்றுவிட்டார் டி.எம்.எஸ். அந்தப் பாடல் வாய்ப்பு. அப்போதுதான் திரையுலகில் இளம் பின்னணிப் பாடகராக நுழைந்திருந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்குக் கிடைத்தது. அந்தப் பாடல்தான். `ஆயிரம் நிலவே வா!’





                 பொது நிகழ்ச்சிகளுக்குத் தங்க நகைகள் அணிந்து செல்வதில் விருப்பம் உள்ளவர். `இல்லாட்ட ஒருத்தனும் மதிக்க மாட்டான்யா! `பாவம், டி.எம்.எஸ்ஸீக்கு என்ன கஷ்டமோ!’ன்னு உச்சுக் கொட்டுவான். அதனால, இந்த வெளிவேஷம் தேவையா இருக்கு’ என்பார்!




               கவிஞர் வாலியை த் திரை உலகுக்கு அழைத்து வந்தது டி.எம்.எஸ். அந்த நன்றியை இன்று வரையிலும் மறவாமல்.`இப்போ நான் சாப்பிடுற சாப்பாடு டி.எம்.எஸ் போட்டது’ என்று சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நெகிழ்வார் வாலி!



                  `நீராரும் கடலுடுத்த..’ என்னும் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலையும், `ஜன கண மன’ என்னும் தேசிய கீதத்தையும் யாரும் பாட முன் வராத நிலையில் டி.எம்.எஸ்ஸீம் பி.சுசீலாவும் இணைந்து பாடித் தந்தது அந்நாளில் பரபரப்புச் செய்தியாக இருந்தது!



                 தனலட்சுமி என்ற பெண்ணைக் காதலித்தார். அவர்கள் சற்று வசதியான குடும்பம் என்பதால், டி.எம்.எஸ்ஸீக்குப் பெண் தர மறுத்துவிட்டார்கள். காதல் தோல்வி பாடலைப் பாட நேரும்போதெல்லாம், அந்த தனலட்சுமியின் முகம் தன் மனக் கண்ணில் தோன்றுவதாகச் சொல்வார் டி.எம்.எஸ்!




                வசந்தமாளிகை’ படத்தில் வரும் `யாருக்காக’ பாடலை பாடும்போது, அதற்கு எக்கோ எஃபெக்ட் (எதிரொலி) வைக்கச் சொன்னார். `அதெல்லாம் வீண் வேலை’ என்று தயாரிப்பாளர் மறுத்துவிட `எக்கோ எஃபெக்ட்’ வைத்தால்தான் பாடுவேன் என்றார் தீர்மானமாக. தியேட்டரில் எக்கோ எஃபெக்ட்டுடன் அந்தப் பாடல் பிரமாண்டமாக ஒலித்தபோது ரசிகர்களிடையே எழுந்த கைத்தட்டலைக் கண்டு வியந்தார் தயாரிப்பாளர்!



                         வெஸ்டர்ன் டைப்பில் விஸ்வநாதன் இசையமைத்த பாடல் `யாரந்த நிலவு… ஏன் இந்தக் கனவு’. கனத்த குரலுடைய டி.எம்.எஸ்ஸால் இதைப் பாட முடியுமா என்று தயாரிப்பாளருக்குச் சந்தேகம். எதிர்பார்த்தை விட அற்புதமாகப் பாடி அத்தனை பேரையும் அசத்திவிட்டார் டி.எம்.எஸ்!







                        காஞ்சிப் பெரியவர். புட்டபர்த்தி சாய்பாபா இருவரிடமும் மிகுந்த பக்திகொண்டவர் டி.எம்.எஸ். இவரது வீட்டுக்கு சாய்பாபா ஒரு முறை வருகை தந்திருக்கிறார். காஞ்சிப் பெரியவர், டி.எம்.எஸ்ஸை `கற்பகவல்லி’ பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்து, தான் போர்த்தியிருந்த சிவப்புச் சால்வையைப் பரிசாக அளித்ததைத் தனது பாக்கியமாகச் சொல்லி மகிழ்வார்!



                      கடவுள் பக்தி அதிகம் உள்ளவர் டி.எம்.எஸ். கண்ணதாசன் எழுதிய `கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்: அவன் காதலித்து வேதனையில் `சாக வேண்டும்’என்ற வரிகளைப் பாட மறுத்துவிட்டார். பின்னர், கவிஞர் `சாகவேண்டும்’ என்பதை `வாடவேண்டும்’ என்று மாற்றித் தந்த பிறகே பாடினார்!



                          *நீளமான குடுமியும் வடகலை நாமமும் டி.எம்.எஸ்ஸின் ஆதி நாளைய அடையவாளங்கள். சினிமாவில் வாய்ப்புத் தேடும் பொருட்டு கோயம்புத்தூர் வருவதற்கு முன்பாக இதே கோலத்தில் தன்னை ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு விட்டு. பின்பு குடுமியை எடுத்துவிட்டுக் கிராப் வைத்துக்கொண்டார். நாமம் அகன்று, பட்டையாக விபூதி பூசியதும் அப்போது தான்!



                            *எம்.ஜி.ஆர்., சிவாஜி, கருணாநிதி ஜெயலலிதா என அனைவைரிடமும் நெருங்கிப் பழகியிருந்தாலும், இன்று வரையில் தனக்காக எந்த ஒரு விஷயத்துக்கும், யாரிடமும் சிபாரிசுக்காக அணுகாதவர்!



                         *`பாகப் பிரிவினை’ படத்தின் 100- வது நாள் விழாவில் இயக்குநர், நடிகர் எனப் பலருக்கும் விருது வழங்கப்பட பாடகர்களுக்கு மட்டும் விருது இல்லை. இது பாரபட்சமானது என்று கருதிய டி.எம்.எஸ். விழாவில் `கடவுள் வாழ்த்து’ பாட மறுத்துவிட்டார். அதன் பின்னர்தான் பட விழாக்களில் பாடகர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன!







                         `நவராத்திரி’ படத்தில் சிவாஜி கணேசனின் ஒன்பது வித்தியாச வேடங்களுக்கு ஏற்ப தன் குரலை வித்தியாசப்படுத்திப் பாடியிருப்பார் டி.எம்.எஸ்!



                      `பட்டினத்தார், `அருணகிரிநாதர்’ என இரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்!



                     *தமிழில் மட்டும் 10,000-க்கும் மேற்பட்ட சினிமா பாடல்களைப் பாடியுள்ளார். தவிர, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் சில பாடல்களைப் பாடியுள்ளார்.(அவரே இசையமைத்துப் பாடிய பக்திப் பாடல்கள் மேலும் சில ஆயிரங்கள் இருக்கும்.)



                     *சக பாடகர்கள், தொழிலோடு தொடர்புடையவர்கள் தவிர தனிப்பட்ட நண்பர்கள் வட்டாராம் என்று டி.எம்.எஸ்ஸீக்கு எதுவும் இல்லை.



                     *எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவருக்கும் ஏராளமான பாடல்களைப் பாடியிருந்தாலும், அவர்களோடு ஒட்டாமல் தனித்தே கடைசி வரை இருந்தார் டி.எம்.எஸ் சொல்லப்போனால், இருவருக்கும் பலப்பல பாடல்களைப் பாடிய பின்புதான், அவர்களை ஏதேனும் விழாக்களில் நேரிலேயே சந்தித்திருக்கிறார்!






 Awards and honours

  • Padma Shri by the Indian government in 2003.
  • Kalaimamani from Tamil Nadu
  • Tamil Nadu state awards many years continuously from early 60's and in 1975,it was shared with [[K. J. Yesudas]
  • T.M.S. was the beneficiary of the first stereo recording in South India for a Tamil devotional song "Mannanalum Thiruchenthooril Mannaven"
  • "Padakar Thilakam" pattam
  • "Singha Kuralon" pattam
  • "Bharat Kalajar" award
  • "Isai Chakravarthi" pattam
  • "Pesum Padam" award over 21 times, out of which from 1954 to 1969, continuously 15 times.
  • "Gnanakala Bharathi" Pattam
  • "Geethavaari" Pattam
  • "Karpagath Tharu Mannar" Pattam
  • "Geetharanjana Vaarithi" Pattam
  • "Arutpa Isaimani" Pattam
  • Honorary Doctorate
  • MGR gold medal winner
  • Former chief minister Tamil Nadu.M D Bhakthavalsalam recognition award 1963
  • Former Chief Minister Tamil Nadu Kamaraj Nadar recognition award
  • "IsaiKadal pattam" from KaviArasar Kannadasan award 1969
  • "EzhilIsai Mannar" from Former Chief Minister K.Karunidhi award 1970
  • Former Chief Minister"Arinjor AnnaDhuaria" recognition award 1964
  • "Kural Arasar" Pattam
  • Chief Minister "JayaLalitha" recognition
  • M. K. Thyagaraja Bhagavathar Lifetime achievement award from Tamil Nadu.
  • Tamil Nadu Musical Artist lifetime achievements award.
  • Tamil Film Fans award,(a very old )more than 22 times early 1950s, 1960s and 1970s.
  • P.Susheela trust recognition award
  • "Mega TV Amutha Ghanam" recognition award
  • Lifetime achievement for "MGR memorial award"
  • Lifetime achievement for "Shivaji memorial award".
  • "Sourashtra community recognition" award
  • Tamil Nadu Chief minister M. Karunanidhi recognition at Madurai,conducted by Alagiri.2010
  • Karuppai Muppanar recognition 1992
  • Periyar RamaSwami Naikkor recognition 1959
  • Raj TV for Raja Geetham recognition award 2006
  • Malaysian Tamil fans recognition award
  • Singapore Tamil Fans recognition award more than several times
  • French Tamil Fans recognition award
  • United Kingdom Tamil fans recognition award
  • 20th Century top play back singer from South African,City Mayor through Tamil fans 1995
  • U.S.A Tamil fans recognition award
  • Tamil Fans recognition from Canada award
  • Personal appreciations from the Prime Minister late Mrs. Indira Gandhi
  • Personal appreciations from President Dr. Sarvepalli Radhakrishnan
  • Personal appreciation from President VenkatRaman
  • Personal appreciation from President V V Giri
  • Personal appreciation from Prime Minister late Morarji Desai
  • Australian Tamil Fans appreciations in Sydney,Brisbane, Melbourne,and Perth awards
  • Personal appreciation from Sonia Gandhi in the year 1992 at Perumpathoor
  • Kairali Swaralaya Yesudas lifetime achievements award for the year 2012.