Tuesday 5 November 2013

கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி - நாட்டுக்கு தலைவர் யார்? அரசியல்வாதிகளுடன் விவாதம் நடத்த தயார்!

 
 நாட்டுக்கு நான்தான் தலைவர் என அரசியல்வாதி கூறினால் அவருடன் விவாதம் நடத்த தயாராக இருக்கிறேன் என்றார் நடிகர் கமல்ஹாசன். ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு கமல்ஹாசன் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: விஸ்வரூபம் 2ம் பாகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தால் ஏற்கனவே சொன்னதுபோல் நான் நாட்டைவிட்டு வெளியேறுவேன். பொழுதுபோக்குகள் சமுதாயத்தை எப்படி வழிநடத்த உதவுகின்றன என்கிறார்கள். சமூகம்தான் பொழுதுபோக்கை வழிநடத்துகிறது. சமூகத்தில் உள்ளதைதான் பொழுதுபோக்கு அம்சங்கள் பிரதிபலிக்கின்றன.

தென்னிந்திய நடிகர்கள் பலர் அரசியலில் இருப்பதுபோல் கமல்ஹாசன் 2014ம் ஆண்டு அரசியலுக்கு வருவாரா?’ என்று கேட்கிறார்கள். கமல்ஹாசனுக்கு பார்வையாளர்கள் மட்டுமே தேவை. எப்போதுமே நான் வித்தியாசமாக செய்பவன். குறிப்பிட்ட விஷயத்தில் எதற்காக மற்றவர்கள் செய்ததைப்போல் நானும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.

5 வருடத்துக்கு ஒருமுறை எனது அரசியல் பணியை செய்துகொண்டுதான் இருக்கிறேன். அது தொழில் ரீதியானதல்ல. ஓட்டு போடும்போது ஒவ்வொருவரும் தங்கள் குரலை உறுதியாக எதிரொலிக்க வேண்டும். அதன்பிறகு, இலவசமாக நாங்கள் சேவை செய்கிறோம் என்று சொல்லும் அரசியல் தொழில் தெரிந்தவர்களிடம் அந்த பொறுப்பை விட்டுவிட வேண்டும். அரசியல்வாதிகளுக்கு நாம் நல்ல சம்பளம் தந்துவிட்டு நாட்டை நல்லமுறையில் வழிநடத்திச் செல்ல அவர்களிடம் கேட்க வேண்டும். அவர்கள் நமது பிரதிநிதிகள்தான். தயவுசெய்து அவர்களை தலைவர்கள் என்று எண்ணிவிடாதீர்கள். மக்கள்தான் தலைவர்கள். எந்த அரசியல்வாதியாவது நான்தான் தலைவர் என்றால் அவர்களுடன் விவாதம் நடத்த நான் தயாராக இருக்கிறேன். இவ்வாறு கமல் கூறினார்.

தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள்!

தோல்வி என்பது மறைமுக ஆசீர்வாதமே !

 ~ 01. தோல்வி எப்போதும் மறைந்திருக்கும் ஓர் ஆசீர்வாதமாக மாறுகிறது. ஏனெனில் செய்ய திட்டமிட்ட நோக்கங்களில் இருந்து மக்களை வேறு திசைக்கு மாற்றுகிறது, புதிய வாய்ப்புக்களின் கதவுகளை அது திறக்கிறது. ~


02. தோல்வி அகந்தையை அழித்து வாழ்வின் உண்மைகளை பற்றிய உபயோகமான அறிவை தருகிறது.


  ~ 03. டாக்டர் அலக்சாண்டர் கிரஹாம் பெல் தனது மனைவியின் காதை கேட்க வைக்க ஓர் கருவியை தேடித் தோல்வியடைந்தாலும், கடைசியில் தொலைபேசியை கண்டு பிடித்தார்.

  * 04. இனி கல்வி கற்க முடியாது என்று பாடசாலையில் இருந்து விரட்டப்பட்டதால் உண்டான தோல்வியே தாமஸ் அல்வா எடிசனை பெரும் கண்டு பிடிப்பாளராக்கியது.


* 05. சிறு வயதில் இருந்தே ஏராளம் தோல்விகளை சந்தித்த ஆபிரகாம் இலிங்கன் அனைத்துத் தோல்விகளையும் மதிப்பிட்டு கடைசியில் அனைவரும் அறிந்த அமெரிக்க அதிபரானார்.


 * 06. தோல்வி வந்தவுடன் அதற்குள் வெற்றி என்பது ஏதோ பெரிய கனி போல இருப்பதாக எண்ணி விடாதீர்கள். வெற்றி விதை போலவே இருக்கும், அதை வளர்த்து மரமாக்கி கனி பறிக்க வேண்டியதே உங்கள் பொறுப்பு.


* 07. உடல் ஊனமுற்றிருந்த மைலோசி என்பவர் தனக்கு ஒரு மனம் இருப்பதை கண்டறிந்தார். அதை பயன்படுத்தி வாழ்வில் உயர்வு பெறும் புதிய கண்டு பிடிப்பை கண்டு பிடித்தார். உங்களிடம் ஒன்றுமே இல்லை ஆனால் ஒரு மனம் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி உயர்வடையுங்கள்.


 * 08. ஒருவனது பலவீனங்களை அளவிடும் அளவு கோலாக தோல்வி இருக்கிறது. ஆனால் அதுவே அவற்றை சரி செய்யும் ஒரு வாய்ப்பையும் தருகிறது. இந்தவகையில் தோல்வி ஓர் ஆசீர்வாதம்தான்.

* 09. நீங்கள் தோல்விகளை கையாளும் விதத்தைப் பார்த்தால் உங்களிடம் தலைவராகும் தகுதி இருக்கிறதா இல்லையா என்பது புரிந்துவிடும்.


 * 10. யார் மீண்டெழுந்து மறுபடியும் போரிடப் போகிறார்கள் என்பதை அறியவே இயற்கை நமக்கு தோல்வியைத் தருகிறது. மீண்டெழுந்தவர்களே மனித குலத்திற்கு தலைமை தாங்குகிறார்கள்.


* 11. தோல்வி என்று கருதப்படுபவை தற்காலிக சரிவுகள்தான். அதை நேர் மறையான மனோபாவத்துடன் எடுத்துக் கொண்டால் விலை மதிப்பற்ற செல்வமாக மாற்றலாம்.


* 12. தோல்வியை ஏற்று தொடர்ந்து போராடுபவனை உலகம் மதிக்கிறது, ஆனால் பிரச்சனை தீவிரமாகும்போது கைவிடும் மனோபாவம் உடையவனை உலகம் மன்னிப்பதில்லை.


* 13. ௨வது உலகப் போரில் ஜப்பானியர் அடைந்த தோல்வி அவர்களது மிகச்சிறந்த வெற்றியாகும். ஏனெனில் அந்தத் தோல்விதான் ஜப்பானியரை பெரும் மூட நம்பிக்கையில் இருந்து விடுபடச் செய்து இன்றய நிலைக்கு உயர்த்தியது.

சில கண்டிபிடிப்புகள் உருவான கதைகளை அறிந்து கொள்வோம் !!


காலணிகள், பேக்குகள் போன்றவற்றில் உள்ள ‘வல்க்ரோ’ என்ற ஒட்டும் பட்டையைப் பார்த்திருப்பீர்கள். அது எப்படி உருவானது தெரியுமா?
...
ஜார்ஜெஸ் டீ மெஸ்ட்ரால் என்ற பிரெஞ்சு என்ஜினீயர் காட்டுப் பகுதியில் நடந்துகொண்டிருந்தார். அப்போது தனது சாக்ஸில் காட்டுத் தாவரங்களின் விதைகளும், முட்களும் ஒட்டிக்கொள்வதைக் கவனித்தார்.

ஓர் உருப்பெருக்கியை எடுத்துக்கொண்டார். தாவரத்தின் பகுதிகளால் எப்படி இப்படி ஒட்டிக்கொள்ள முடிகிறது என்று ஆராய்ந்தார். அப்போது, துணியில் ஒட்டிக்கொள்ளும் வகையில் அவற்றில் சிறிய முட்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார். அதே யோசனையைக் கொண்டு, ஒட்டும் பட்டையை உருவாக்க முடியுமா என்று மெஸ்ட்ரால் சிந்தித்தார். அதற்காகப் பல ஆண்டு காலம் உழைத்தார்.

ஒரு முயற்சியாக, இரண்டு துண்டுத் துணிகளைப் பயன்படுத்திப் பார்த்தார். ஒன்றில், நூற்றுக்கணக்கான சிறு கொக்கிகள் இருந்தன. மற்றொன்றில், நூற்றுக்கணக்கான சிறு வளைவுகள் இருந்தன. இரண்டையும் சேர்த்தபோது அவை அட்டகாசமாகப் பற்றிக் கொண்டன. இழுத்தால், இரண்டு துணிகளும் பிரிந்தன. தனது கண்டு
பிடிப்புக்கு ‘வல்க்ரோ’ என்று பெயரிட்ட டீ மெஸ்ட்ரால், 1957-ல் அதற்குக் காப்புரிமை பெற்றார்.

அதற்குப் பிறகு, ஸ்நூக்கர், ஸ்னோசூட் போன்ற சிறப்பு உடைகளிலும் இவை பயன்படுத்தப்பட்டன. விண்வெளி வீரர் உடையிலும், செயற்கை இதயத்திலும் பயன்படுத்தப்படும் பெருமையும் ‘வல்க்ரோ’வுக்கு உண்டு.

சோப்


குளியலறைகள் கட்டப்படும் முன்பே சோப்பு கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்தது பல ஆண்டுகாலம் கழித்துத்தான்.

ஆரம்பத்தில், எண்ணை, மணலைக் கலந்து தேய்த்துக் குளித்தனர். சிலர், வேலையாட்களை வைத்து மரக்கிளைகளால் உடலைத் தேய்த்துவிடக் கூறினர்.

சோப்புகளில் குறிப்பிடத்தக்கது, 1789-ல் ஆண்ட்ரு பியர்ஸ் கண்டுபிடித்த, கண்ணாடி போன்ற சோப். அடுத்து, மிதக்கும் சோப் போன்ற பலவித சோப்புகள் வந்துவிட்டன.

சக்கரம்

உலகை நகர வைத்த முக்கியக் கண்டுபிடிப்பு, சக்கரம். தற்போது ஈராக் நாடாக உள்ள மெசடோமியாவில் வாழ்ந்த சுமேரியர்கள் கி.மு. 3000 ஆண்டுவாக்கில் சக்கரத்தைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. சக்கரம் இல்லையேல் இன்றைய உலக இயக்கமே இல்லை.

‘டூத் பிரஷ்’

1400-ல் சீனர்களால் கண்டுபிடிக்கப்பட்டது இது. முதலில் விலங்குகளின் முடியைப் பயன்படுத்தினர். பன்றியின் முடியைக் கூடப் பயன்படுத்தி உள்ளனர். 1938-ல் முதல் நைலான் டூத்பிரஷ் உருவாக்கப்பட்டது.

‘பற்பசை’ எனப்படும் ‘டூத் பேஸ்ட்’, நூறு ஆண்டுகளுக்கும் மேலாகவே புழக்கத்தில் உள்ளது. அதை ஒரு டியூப்பில் அடைத்து விற்கலாம் என்பதை 1892-ல் வாஷிங்டன் ஷெப்பீல்டு என்ற பல் மருத்துவர் கண்டுபிடித்தார்.

எச்சரிக்கை! பெண்களுக்காக…



56 பெண்கள் இதுவரைக்கும் whisper, stayfree, etc. உபயோகித்ததால் இறந்திருப்பதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

உண்மையா ….என தெரியவில்லை….
காரணம், அதிகபட்சமான பெண்கள் இதையே உபயோக படுத்துகிறார்கள்...

எனினும் இந்த Ultra Napkin களில் chemical கள் உபயோகிக்கப் படுவதாகவும், இது வெளிவரும் திரவத்தை gel நிலைக்கு மாற்றுவதாகவும், இதனால் சிறுநீர்ப்பை மற்றும் கருப்பை புற்றுநோய்கள் ஏற்படுகின்றதாகவும் குறிப்பிடப்படுகிறது.

Ultra pad கள் பயன்படுத்துபாவர்கள் 5 மணி நேரத்திற்கு ஒரு முறை கட்டாயம் மாற்ற வேண்டும் அல்லது cotton pad களை பயன்படுத்துமாறும் மருத்துவ ஆலோசனைகள் தெரிவிக்கிறது…

நேரம் நீடிக்கும் என்றால் இரத்தம் பச்சை நிறம் அடைவதுடன் பக்றீரியா தொழிற்பாடு அந்த gel ல் இடம் பெற்று உடல் மீண்டும் உள்ளே பெறுகின்றது எனவும்… செய்திகள் பரவலாக வருகிறது.

எனவே மக்கள் நலன் கருதி இதை பகிர்கிறேன்…

இந்த செய்தியை பகிர வெட்கப்படத்தேவையில்லை ..

இதை பகிர்ந்து கொள்வதன் மூலம் நமது சகோதரிகளுக்கு உதவிடுவோம் …

வயிற்றின் நண்பன் தேன்!

இயற்கை அளித்த அருங்கொடை தேன். குழந்தைகள் இருக்கும் எல்லா வீடுகளிலும் தேனை வைத்திருப்பது அவசியம். 70 வகையான வைட்டமின் சத்துகள் இதில் அடங்கியுள்ளன. தேனில் உள்ள சத்துகள் உடலில் உள்ள ஜீரண பாதையில் சுலபமாக கிரகிக்கும். தேன...் ஏழு வகைப்படும். ஆனால் ஒரு தேனீ எந்த செடியில் இருந்து தேனை சேகரிக்கிறதோ, அதன் மருத்துவ குணத்தை பெற்றுவிடுகிறது. கொம்பு தேன், மலைத்தேன், மரப்பொந்து தேன், மலைத்தேன், புற்றுத்தேன், புதிய தேன், பழைய தேன் என ஏழு வகை உள்ளன.

ஆனால், இவற்றில் மலையில் உள்ள மரம் செடிகளில் இருந்து சேரிக்கப்படும் தேனில் மூலிகை மருத்துவ குணம் சேர்ந்து இருப்பதால் மருந்து பொருட்களுடன் சேர்ந்து உண்பதற்கு ஏற்றது. பித்தம், வாந்தி, கபம் சம்பந்தமான நோய்கள் வாயுத்தொல்லை, ரத்தத்தில் கலந்துள்ள விஷ அணுக்களை நீக்கி சுத்தம் செய்யக்கூடிய சக்தி தேனுக்கு உண்டு. பொதுவாக தேனுடன் மருந்துகளை கலந்து கொடுப்பதால் ஜீரண பாதையில் வெகு விரைவில் மருந்து உறிஞ்சப்பட்டு விடும். ரத்த ஓட்டத்தில் மருந்து விரைவில் செயல்படும்.

மருந்துகளில் வீரியம் அதிகமாக இருந்தால், தேனை கலந்து சாப்பிடும் போது குடல்களுக்கு ஏற்படும் பின்விளைவுகளை தடுத்து நிறுத்திவிடும். தேன் சேர்த்து தயாரிக்கும் உணவுகள் மருந்து, நீண்ட நாள் கெடுவதில்லை. தேனில் சர்க்கரை சத்து அதிகமாக இருப்பதால் கடும் உழைப்பாளிகள், விளையாட்டு போட்டிகளில் ஈடுபடுவோர் அவ்வப்போது தேன் கலந்த பானம் பருகலாம். இதனால், உடலில் ஏற்படும் களைப்பு நீங்கும். தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய ரத்த நாளங்களை சீராக விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதனால், இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படும். கண் நோய், தோல் நோய்களுக்கும் தேனை பயன்படுத்தலாம்.

தேனுடன் இஞ்சி, விதை நீக்கிய பேரிச்சம் பழம் இரண்டையும் ஊற வைத்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதுடன், மலச்சிக்கல் ஏற்படுவதும் குறையும். ஒரே டம்ளர் வெந்நீர் அல்லது சூடுபடுத்தப்பட்ட பாலில் மூன்று டீஸ் பூன் தேன் கலந்து இரவு படுக்கைக்கு செல்லும் முன் அருந்தினால் தூக்கம் நன்றாக வரும். நோய் எதிர்ப்பு தன்மை பெருகி, உடல் ஆரோக்கியம் ஏற்படும். நாள்தோறும் 100 கிராம் தேன் கலந்த பானம் பருகினால், ரத்த சோகை ஏற்படுவது தடுக்கப்படும்.

தொடர்ந்து ஆறு வாரம் அருந்தினால் ரத்தத்தில் சிவப்பு அனுக்களின் எண்ணிக்கை அதிகரித்து ரத்த சோகை முற்றிலும் நீங்கி விடும். உடல் அழகையும், குரல் இனிமையையும் ஏற்படுத்தி தரும் குணம் தேனுக்கு உண்டு. வயிற் றுக்கு சிறந்த நன்பன் என்றால் அது தேன் தான். தினமும், 3 டீஸ்பூன் தேனை 100 மில்லி லிட்டர் வெந்நீரில் காலை அல்லது இரவு நேரத்தில் வெறும் வயிற்றில் அருந்தினால், வயிற்றுப்புண், இரைப்பை அலர்ஜி, ஈரல், பித்தப்பை நோய்கள் குணமாகும். குறிப்பாக அமிலத் தன்மையை கட்டுப்படுத்தி அல்சர் நோயை குணப்படுத்தும்.

சுத்தமான தேனை தேர்வு செய்வது எப்படி


சுத்தமான தேனில் மகரந்தம் கலந்திருக்கும். இடத்திற்கு இடம் இது மாறுபடும். இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். நாளடைவில் மங்கிய நிறத்திற்கு மாறிவிடும். ஆறு மாதத்திற்கு தேனை வைத்திருந்து சாப்பிடலாம். தேனில் உள்ள சர்க்கரை சத்து, வைட்டமின் சத்து, உலோகச்சத்து உடலுக்கு ஏற்றது. சில சமயங்களில் தேனில் கலந்துள்ள மகரந்தம் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும்.

தேன் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிய சிறிதளவு தேனில், தீக்குச்சியை சில விநாடிகள் ஊற வைத்து துடைத்து தீப்பற்ற வைக்க வேண்டும். குச்சி சீக்கிரம் எரிந்தால் தேனில் சர்க்கரை கலப்படம் இல்லை என்பதை அறியலாம். அல்லது மை உறிஞ்சும் காகிதத்தில், செய்திதாளில் சிறிதளவு தேனை ஊற்றி சில நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். பேப்பர் தேனை உறிஞ்சாமல் இருந்தால் அது நல்ல தேன் என்பதை அறிந்து கொள்ளலாம்.

எடையைக் குறைக்க சுலபமான வழி – ஜெனரல் மோட்டார்ஸ் டயட்

                                  


மேற்கத்திய நாடுகளில் குண்டு உடல்காரர்கள் மிகுதி. அவர்களின் பிரச்சினையை குறைக்க அமெரிக்காவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு முடிவில் உடல் எடையைக் குறைக்க சுலபமான வழியை அறிமுகப்படுத்தினார்கள்.
                                              
7 நாட்களுக்கு உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டால் சுமார் 6 கிலோ வரை எடை குறையும் என்று அந்த ஆய்வு முடிவில் உறுதியளிக்கப்பட்டது.

                                               

அந்த ஆய்வின்படி முதல்நாள் முழுக்க முழுக்க பழ வர்க்கங்களை மட்டும் உண்ண வேண்டும்.

1. ஆரஞ்சு, ஆப்பிள், அன்னாசி, மாதுளை, தர்பூசணி, சப்போட்டா என்று எந்தப் பழங்களை வேண்டுமானாலும் சாப்பிடலாம். தண்ணீர் சத்து நிறைந்த தர்ப்பூசணி மிகவும் நல்லது. ஆனால் வாழைப்பழம் தவிர்க்க வேண்டும்.

2. இரண்டாம் நாள் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். ருசிக்காக உப்பு, காரம் சேர்த்துக் கொள்ளலாம். வயிறு நிரம்ப சாப்பிடலாம். காலையில் உருளைக்கிழங்கு மட்டும் சாப்பிட வேண்டும். காய்கறிகளை வேக வைத்து சாப்பிடுபவர்கள் எண்ணெய், தேங்காய் சேர்க்கக்கூடாது.

3. மூன்றாவது நாள் பழங்கள், காய்கறிகள் கலந்து சாப்பிட வேண்டும். அன்றைய தினம் உருளைக்கிழங்கு, வாழைப்பழம் தவிர்க்க வேண்டும்.

4. நான்காவது நாள் வாழைப்பழமும், பாலும் தான் சாப்பாடு. அதிகபட்சமாக 3 டம்ளர் பாலும், 8 பழங்களும் உண்ணலாம். விரும்பினால் காய்கறி சூப் ஒரு கப் சாப்பிட்டுக் கொள்ளுங்கள்.
ஐந்தாம் நாள் சிறிதளவு(ஒரு கிண்ணம்) அரிசி சாதம் சேர்க்கலாம். மீதி பசிக்கு பெரிய தக்காளிப் பழங்கள் 6 சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். அதற்கு மேல் பசியெடுத்தால் தண்ணீர் தான் குடிக்க வேண்டும். வழக்கத்தைவிட கூடுதலாக 4 டம்ளர்(மொத்தம் 12 டம்ளர்) தண்ணீர் பருக ஆய்வு அறிவுறுத்துகிறது.

5. ஆறாம் நாள் சிறிது அரிசி சாதமும், மீதிக்கு காய்கறிகளும் சாப்பிடுங்கள். காய்கறிகளை வேக வைத்தோ, பச்சையாகவோ வயிறு நிரம்ப சாப்பிடலாம்.

6. ஏழாவது நாள் ஒரு கப் சாதம் – காய்கறிகளுடன், பழ ஜுஸ் பருகுங்கள். மற்ற நாட்களில் பழங்களை ஜுஸ் செய்து சாப்பிடக்கூடாது. அவ்வளவுதான் டயட் முடிந்தது.

7. 8-ம்நாள் எடை இயந்திரத்தில் ஏறிப் பாருங்கள். மாற்றம் தெரியும் என்கிறது அந்த ஆய்வு.

இந்த டயட் முறைக்கு வேறு கட்டுப்பாட்டு விதிகள் இல்லை என்பது சிறப்பானது. டீ, காபி சாப்பிடுபவர்கள் பால், சர்க்கரை தவிர்த்து பருகலாம். டீயில் எலுமிச்சை பிழிந்து சாப்பிட்டால் நல்லது தான்.
எண்ணெய் தவிர்த்து வருவது சிறந்த பலன் தரும். முடியாத பட்சத்தில் ஒரு டீஸ்பூன் எண்ணை சேர்த்துக் கொள்ளலாம்.

முதல் இரண்டு நாட்களில் சேர்க்கும் பழங்கள், காய்கறிகள் உடலுக்கு போதிய ஆற்றலை வழங்கும்.

3-வது நாளில் இருந்து கொழுப்பு எரிக்கும் பணி உடலில் நடைபெறுகிறது. அதை நீங்களே உணர முடியும்.

நான்காம் நாளில் சேர்க்கப்படும் வாழைப்பழம், உடல் இழக்கும் பொட்டாசியம், சோடியம் சத்துக்கள் கிடைக்க உதவுகிறது.

5-ம் நாள் அதிகப்படியான தண்ணீர் சேர்க்கப்படுவது உடல் உறுப்புகளை சுத்தம் செய்யும். சிறிது அரிசி சாதம் சேர்ப்பதால் 5, 6-வது நாட்களில் உடலுக்கு போதுமான சத்து கிடைக்கிறது. 7-வது நாளில் மாற்றங்களின் பலனை உடல் சுறுசுறுப்பில் இருந்து உணரலாம்.

அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் ஆய்வு மையம் இந்த ஆய்வை மேற்கொண்டது. பிரசித்தி பெற்ற ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், ஆய்வை அங்கீகரித்து தங்கள் ஊழியர்களின் எடை குறைப்பிற்காக கடைப்பிடிக்க வைத்தது.

அதற்கு நல்ல பலன் கிடைத்ததால் அது ஜெனரல் மோட்டார்ஸ் டயட் என்று அழைக்கப்படுகிறது. மேலும் எடை குறைய விரும்புபவர்கள் 3 நாள் இடைவெளிவிட்டு மீண்டும் இதே டயட் முறையை கடைபிடிக்கலாம் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஸ்வநாதன் ஆனந்துக்காக சிறப்பு பதிவு!


anand-1 

சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திப்பது போல சதுரங்க ராஜா விஸ்வநாதன் ஆனந்தை நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் சென்னையில் சந்திக்கிறார். நடப்பு சாம்பியனான ஆனந்தும் உலகின் முதல் நிலை வீரருமான கார்ல்சனும் மோதும் உலக சாம்பியன்ஷிப் போட்டியின் துவக்க விழா வரும் 7 ம் தேதி நடைபெறுகிறது. 9 ம் தேதி முதல் சதுரங்க ஆட்டங்கள் ஆரம்பமாகின்றன. 


5 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆனந்த் 6 வது முறையாக பட்டம் வென்று சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். சொந்த மண்ணில் களம் காண்பதால் ஆனந்த் கூடுதலான எதிர்பார்ப்புக்கும் நெருக்கடிக்கும் அளாகி இருக்கிறார்.


43 வயதான ஆனந்துக்கும் 22 வயதான கார்ல்சனுக்கும் இடையிலான இந்த போட்டி அனுபவத்துக்கும் இளைமை துடிப்புக்குமான மோதலாக கருதப்படுகிறது. செஸ் உலகில் கடந்த பத்தாண்டுகளில் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாகவும் இந்த மோதல் வர்ணிக்கப்படுகிறது.
கிரிக்கெட்டை மதமாகவும் சச்சினை கடவுளாகவும் கொண்டாடும் தேசம் இது. செஸ் விளையாட்டில் இந்தியாவை தலைநிமிற வைத்த ஆனந்தை நாம் உரிய முறையில் கொண்டாடியிருக்கிறோமா ? என்பதை எல்லாம் விட்டு விடுவோம். தனது சொந்த மண்ணில் களமிறங்கும் சாம்பியனை கைத்தட்டி ஊக்குவிக்கும் நேரமிது. 


சதுரங்க ராஜா விஸ்வநாதன் ஆனந்தை கொண்டாடும் வகையில் இந்த சிறப்பு பதிவு:


chess 

ஆனந்துக்கு வாழ்த்து!

கார்ல்சன் சவாலை ஆனந்த் சமாளிப்பாரா என்று செஸ் உலகமே உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கிறது. ஆனந்தோ அமைதியாக இந்த போட்டிக்கு தயாராகி இருக்கிறார். இப்போது நாம் செய்ய வேண்டியது என்ன ? வெல்லுங்கள் என்று வாழ்த்துவது தானே. இதற்காக என்றே பிரத்யேக இணையதளம் விஷ்4விஷி எனும் பெயரில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனந்தின் நீண்ட கால ஸ்பான்சரான என்.ஐ.ஐ.டி இந்த தளத்தை அமைத்துள்ளது.உங்கள் ஒவ்வொரு வாழ்த்தும் முக்கியம் என அழைக்கும் இந்த தளம் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்காக ஆதரவு குரல் கொடுங்கள் என்கிறது. 


வாழ்த்து செல்வதற்காக என்று உள்ள கட்டத்தில் உங்கள் பெயர், இமெயில் முகவரி, போன் நம்பர் ஆகியவற்றை சமர்பித்து சாம்பியனுக்கான வாழ்த்து செய்தியை பகிர்ந்து கொள்ளலாம். வாழ்த்துக்களை டிவிட்டர்,பேஸ்புக்,இன்ஸ்டாகிராம் வழியேவும் பகிர்ந்து கொள்ளலாம்.மிகச்சிறந்த வாழ்த்து செய்தி தேர்வு செய்யப்பட்டு, அதற்கு பரிசாக உலக சாம்பியன்ஷிப் போட்டியை காண்பதற்கான டிக்கெட் காத்திருக்கிறது.


போட்டி நடைபெறும் இடம் , போட்டி அட்டவணை ஆகிய விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. போட்டி முடிவுகளை தெரிந்து கொள்வதற்கான வசதியும் இருக்கிறது. ஆனந்தை வாழ்த்துவோம்.


போட்டியை நேரில் காண !


சென்னை ஹயத் ஹோட்டலில் நடக்கும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை நேரில் காணும் வாய்ப்பு எத்தனை பேருக்கு கிடைக்கும் என்று தெரியவில்லை. ஆனால் ஆர்வம் உள்ளவர்கள் இந்த போட்டியை இணையத்தில் நேரில் காணலாம். அதற்கான வாய்ப்பு உலக சாம்பியன்ஷிப் போட்டிகான அதிகார பூர்வ இணையதளத்தில் செய்யப்பட்டுள்ளது.


எனும் முகவரியிலான இந்த தளத்தில் போட்டி தொடர்பான செய்திகள் மற்றும் தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இரு வீரர்கள் பற்றிய அறிமுகம் மற்றும் அவர்கள் ஆட்ட முறை பற்றிய விவரங்களையும் காணலாம். புகைப்படங்கள் ,டிவிட்டர் குறும்பதிவுகள் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன. போட்டியின் முடிவுகளை ஒவ்வொரு சுற்றுக்கும் தெரிந்து கொள்ளலாம். போட்டி இடம் அட்டவணை, அதிகாரிகள் பற்றிய விவரங்களும் உள்ளன. போட்டிக்கான டிக்கெட்டை முன்பதிவும் செய்யலாம்.


ஆனந்த மொழிகள்.


( பாபி) பிஷர் மற்றும் கார்ல்சன் இருவருக்குமே செஸ் விளையாட்டை மிகவும் எளிமையாக்கும் ஆற்றல் இருப்பதாக நினைக்கிறேன்.
இது செஸ் கடவுள் என்று போற்றப்படும் பாபி பிஷர் மற்றும் தற்போதைய இளம் செஸ் மேதையான கார்லசன் இருவரின் அபார திறமையை அங்கீகரித்து ஆனந்த் தெரிவித்த கருத்து. இது போல் ஆனந்த் பல்வேறு தருணங்களில் தெரிவித்த கருத்துக்கள் மேற்கோள்களாக செஸ்கோட்ஸ் தளத்தில் இடம் பெற்றுள்ளன. 


செஸ் என்பது ஒரு மொழி போல ,முன்னணி வீரர்கள் அதில் சரளமாக உள்ளனர். திறமையை வளர்த்தெடுக்கலாம். ஆனால் முதலில் உங்களுக்கு எதில் திறமை அதிகம் என கண்டறிய வேண்டும். இதுவும் ஆனந்த் சொன்ன மொழி தான். 


ஆனந்த் பற்றி மற்ற செஸ் சாம்பியன்களின் மேற்கோள்களும் இந்த தளத்தில் இருக்கிறது. 



டிவிட்டர் பேட்டி.


உலகமே எதிர்பார்க்கும் இந்த மோதலுக்காக ஆனந்த் எப்படி தயாராகி இருக்கிறார் என்று அறிந்து கொள்வதில் எல்லோருக்குமே ஆர்வம் இருக்கிறது. அதிவேக செஸ் பாணியில் ஆனந்திடமே இருந்து இதற்கு பதில் வருவதைவிட விறுவிறுப்பானது எது ? போர்ப்ஸ் இதழ் ஆனந்துடன் டிவிட்டர் மூலம் பேட்டி கண்டு வெளியிட்டுள்ளது. 




anannc 

டிவிட்டரில் ஆனந்த்.


விஸ்வநாதன் ஆனந்தை அவரது ரசிகர்கள் டிவிட்டரில் பின் தொடரலாம். இது ஆனந்தின் டிவிட்டர் முகவரி: 



 பிரபல் கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சுமண் வரைந்த தனது ஓவியத்தை தான் ஆனந்த் டிவிட்டர் படமாக வைத்திருக்கிறார். தி கிங் என்கிறது அவரது சுயசரிதை குறிப்பு.


உலக சாம்பியன்ஷிப் போட்டிக்காக ரசிகர்கள் அனுப்பிய ஒவ்வொரு வாழ்த்துமே விஷேசமானது என சதுரங்க ராஜா ஒரு குறுபதிவு மூலம் நன்றி தெரிவுத்துள்ளார்.



 இது ஆனந்தின் பேஸ்புக் பக்கம். 

சதுரங்க போட்டிகள்.

ஆனந்த் ரசிகர்களுக்கு அவரது முக்கியமான செஸ் ஆட்டங்கள் பற்றியும் அதில் மேற்கொள்ளப்பட்ட காய் நகர்வுகள் பற்றியும் தெரிந்து கொள்வதை விட மகிழ்ச்சி அளிக்க கூடியது வேறு என்ன? ஆனந்தின் செஸ் கேம்களை இந்த இணையதளங்களில் பார்க்கலாம்:






தேசமே உங்கள் பின்னால் இருக்கிறது ஆனந்த், வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான வாய்ப்புள்ளதா எனவும் அங்குள்ள கனிம வளம் மற்றும் வளிமண்டலம் ஆகியவற்றை ஆராய்வதற்காகவும் ஆயிரத்து 340 கிலோ எடை கொண்ட மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு இஸ்ரோ இன்று வெற்றிகரமாக் அனுப்பியது.


                  nov 5 - tec mars


செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் முயற்சியில் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் ஈடுபட்டுள்ளன. அது மனிதன் வாழ தகுதியான கிரகம் என்ற தகவலால் ஆர்வம் அதிகரித்தது. அமெரிக்க தனியார் நிறுவனம் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள கலத்தில் மாதக்கணக்கில் பயணம் செய்து செவ்வாயில் குடியேற பலர் அட்வான்ஸ் புக் செய்துள்ளனர். இவர்களில் சில ஆயிரம் பேர் இந்தியர்கள்.


இந்நிலையில் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் இந்திய முயற்சி இன்று நிறைவேற உள்ளது. மங்கல்யான் என்ற விண்கலத்தை ரூ.450 கோடி செலவில் இந்திய விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா, மனிதர்கள் வாழமுடியுமா போன்ற தகவல்களை இந்த ராக்கெட் ஆராயும். இதற்காக இந்த விண்கலத்தில் பல்வேறு கருவிகள் இடம் பெற்றுள்ளன. இது பி.எஸ்.எல்.வி,சி25 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்று பிற்பகல் 2.38 மணிக்கு ஏவப்பட்டது.


விண்கலம் செவ்வாய் கிரகத்தை நோக்கில் செல்லும் வகையில் நிலைநிறுத்தப்படுவதால் சுமார் 10 நிமிஷங்களுக்கு விண்கலத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ரேடார்கள் மூலம் பார்க்க முடியாமலிருந்தது. மேலும் விண்ணில் தொடர்ந்து தனது பாதையைப் பெரிதாக்கிக்கொண்டே வரும் விண்கலம் டிசம்பர் 1-ம் தேதி நள்ளிரவு செவ்வாய் கிரகத்தை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கும்.


தொடர்ந்து 280 முதல் 300 நாள்கள் பயணித்து அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் செவ்வாய் கிரக சுற்றுப்பாதையை விண்கலம் அடையும் என இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.

நம் உடலில் இருக்கும் மச்சத்தின் பலன்கள்!

உடல் உறுப்புக்களில் ஆங்காங்கே பரவிக்கிடக்கும் மச்சங்களின் பலன் தெரியுமா உங்களுக்கு….?

நெற்றி நடுவே – புகழ், பதவி, அந்தஸ்து

நெற்றி வலதுபுறம் – தைரியம், பணிவு இல்லாத போக்கு

நெற்றி இடதுபுறம் – அற்ப குணம், டென்ஷன், முன்கோபி

மூக்கின் மேல் – செயல்திறன், பொறுமைசாலி

மூக்கின் இடதுபுறம் – கூடா நட்பு, பெண்களால் அவமானம்

மூக்கின் நுனி – வசதியான வாழக்கை, திடீர் ஏற்றங்கள்

மேல், கீழ் உதடுகள் – ஒழுக்கம், உயர்ந்த குணம்

மேல் வாய் பகுதி – அமைதி, அன்பான கணவர்

இடது கன்னம் – வசீகரம், விரும்பியதை அடையும் போக்கு

வலது கன்னம் – படபடப்பு, ஏற்ற, இறக்கமான நிலை

வலது கழுத்து – பிள்ளைகளால் யோகம்

நாக்கு – வாக்கு பலிதம், கலைஞானம்

கண்கள் – கஷ்ட நஷ்டம், ஏற்றம், இறக்கம்

இடது தோள் – சொத்து சேர்க்கை, தயாள குணம்

தலை – பேராசை, பொறாமை குணம்

தொப்புளுக்கு மேல் – யோகமான வாழ்க்கை

தொப்புளுக்கு கீழ் – மன அமைதியின்மை, பொருள் நஷ்டம்

தொப்புள் – ஆடம்பரம், படாடோபம்

வயிறு – நல்ல குணம், நிறைவான வாழ்க்கை

அடிவயிறு – ராஜயோக அம்சம், உயர்பதவிகள்

இடது தொடை – தடுமாற்றம், ஏற்ற இறக்கங்கள்

வலது தொடை – ஆணவம், எடுத்தெறிந்து பேசுதல், தற்பெருமை

விளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது Google!


HTML5 நிரல் மொழியில் எளிமையாகவும் 3D வடிவிலும் விளம்பரப் படங்களை வடிவமைக்க உதவும் புதிய மென் பொருள் ஒன்றை கூகல் வெளியிட்டுள்ளது.



நயன் தாராவுக்கு தோல் நோய். சினிமாவை விட்டு விலக திடீர் முடிவு!

பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பிறகு வெற்றிகரமாக இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளார் நயன்தாரா. ‘ராஜாராணி’, ‘ஆரம்பம்’ என வரிசையாக படங்களில் நடித்து முடித்துவிட்டார். தற்போது உதயநிதியுடன் ‘இது கதிர்வேலன் காதல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கிலும் நடித்து வருகிறார்.

விதவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தாலும் தனக்கேற்றவாறு கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில் நயன்தாரா பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, சமீபகாலமாக நயன்தரா தோல் சம்பந்தமான பிரச்சினையால் பெரும் அவதிப்பட்டு வருகிறாராம். இதற்கு அதிகமாக மேக்கப் போடுவதுதான் காரணம் என்கிறார்கள். அசைவ உணவு சாப்பிட்டாலே இவரது தோல் அலர்ஜி பிரச்சினை அதிகமாகிவிடுகிறதாம். இதற்காக கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வருகிறாராம். ஆயுர்வேத மருத்துவர்கள் நயன் தாரா கண்டிப்பாக ஆறு மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும், அவருடைய தோலில் சில மாதங்கள் சூரிய ஒளிபடக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர். எனவே தற்போது கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு நயன் தாரா ஆறுமாத காலம் கேரளாவில் ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளார்.

இதேபோல்தான் நடிகை சமந்தாவும் தோல் அலர்ஜி பிரச்சினையால் முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை எல்லாம் இழந்து 3 மாதங்கள் சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரத்ததானம் பற்றிய சில தகவல்கள்

முதன் முதலில் 1667 - ஆம் ஆண்டு டெனிஸ் என்ற மருத்துவர் 15 வயது சிறுவனுக்கு இரத்தத்தைச் செலுத்தினார். ஆனால், பின்னர் 18 - ஆம் நூற்றாண்டு வரை இரத்ததானம் செய்யப்படவில்லை.


காரணம், இரத்தம் சிறிது நேரத்தில் உறைவதாகும். 1907 - ஆம் ஆண்டு ‘கிரில்’ என்ற மருத்துவர் Operation முறையில் இரத்தம் செலுத்தினார். பின்னர் ‘ஆகோட்’ என்பவர் இரத்தத்துடன் சோடியம் சிட்ரேட் சேர்த்தால் உறையாது எனக் கண்டறிந்தார்.

இறுதியாக, 1923 - ஆம் ஆண்டு ‘ஸ்டோரெர்’ ‘சோடியம் சிட்ரேட்’ சேர்க்காமல், பைப்ரினை நீக்கி இரத்தம் உறைதலைத் தடுக்கலாம் எனக் கண்டறிந்தார்.

இன்று, அறுவைசிகிச்சையின் போதும், விபத்துகளினால் ஏற்படும் அதிகபடியான இரத்தக் கசிவின் போதும் ஈடு செய்ய இரத்தம் செலுத்தப்படுகிறது.

&lsquoA’ இரத்த வகை மனிதனுக்கு, &lsquoB’ இரத்த வகையைத் தவறாக செலுத்தினால் &lsquoA’ இரத்தவகை மனிதனின் இரத்த செல்கள் ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டு இரத்தம் கட்டியாகி மரணம் ஏற்படும். இதற்கு ‘அக்ளூடினேஷன்’ என்று பெயர்.

&lsquoO’ இரத்த வகையில் A,B ஆன்டிஜென்கள் இல்லை. அதனால், எவ்வகை இரத்த குரூப்பைச் சார்ந்த உடலில் செலுத்தினாலும், இரத்தச் செல்கள் ஒட்டிக் கொள்வதில்லை.


எனவே &lsquoO’ வகை இரத்தத்தை உடையோர் ‘யுனிவெர்செல்டோனர் (Universal Donor) எனப்படுகின்றனர். இவர்கள் எந்தவகை இரத்த வகையைச் சேர்ந்தவர்களுக்கும் இரத்ததானம் செய்யலாம்.

&lsquoAB’ வகையில் ஆன்டிபாடிகள் கிடையாது. எனவே, அவர்கள் பெறும் இரத்தவகையிலுள்ள ஆன்டிஜென்களுடன் வினைபுரிவதில்லை என்பதால் அவர்கள் ‘யுனிவெர்சல் ரெசிப்பியன்ட்ஸ்’ (Universal Receipients) எனப்படுகின்றனர். இவர்கள் எந்த வகை இரத்தம் உடையவர்களிடமிருந்தும் இரத்தம் பெற்றுக் கொள்ளலாம்.

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது மங்கள்யான்!



செவ்வாய் கிரகத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளும் வகையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தயாரித்துள்ள மங்கள்யான் செயற்கைக் கோள் பி.எஸ்.எல்.வி. சி-25 ராக்கெட் மூலம் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 5) பிற்பகல் 2.38 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது.


செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான வாய்ப்புள்ளதா எனவும் அங்குள்ள கனிம வளம் மற்றும் வளிமண்டலம் ஆகியவற்றை ஆராய்வதற்காகவும் ஆயிரத்து 340 கிலோ எடை கொண்ட மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு இஸ்ரோ அனுப்பியுள்ளது.
மொத்தம் ரூ.450 கோடி செலவிலான இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியனுக்கு அடுத்தபடியாக செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பிய பெருமை இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது..


ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்திலிருந்து இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.


விண்ணில் தொடர்ந்து தனது பாதையைப் பெரிதாக்கிக்கொண்டே வரும் விண்கலம் டிசம்பர் 1-ம் தேதி நள்ளிரவு செவ்வாய் கிரகத்தை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தள்ளனர்.
தொடர்ந்து 280 முதல் 300 நாள்கள் பயணித்து அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் செவ்வாய் கிரக சுற்றுப்பாதையை விண்கலம் அடையும் என இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.


செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் வாயு உள்ளதா என்பதை ஆய்வு செய்ய மீத்தேன் சென்சார்கள், அங்குள்ள மேற்பரப்பை படம் பிடிக்கும் கேமரா, கனிம வளத்தை ஆய்வு செய்ய தெர்மல் இன்ஃபிராரெட் இமேஜிங் ஸ்பெக்ட்ரோமீட்டர், வளிமண்டலத்தை ஆய்வு செய்ய லிமான் ஆல்பா போட்டோமீட்டர், கம்போசிஷன் அனலைசர் போன்ற கருவிகள் மங்கள்யான் விண்கலத்தில் அனுப்பப்பட உள்ளன. இதன் மொத்த எடை 1,340 கிலோ ஆகும்.
இந்தியாவின் முதல் வேற்றுக்கிரக திட்டத்தைப் பொருத்தவரை செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை வெற்றிகரமாக எடுத்துச்சென்றால் அதுவே பெரிய சாதனைதான். உலக அளவில் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட 51 திட்டங்களில் 21 திட்டங்கள் மட்டுமே வெற்றியடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


300 நாள்கள் நீண்ட பயணம்


* பி.எஸ்.எல்.வி. சி-25 ராக்கெட்டுக்கான 56 மணி 30 நிமிட கவுன்ட்டவுன் நவம்பர் 3-ம் தேதி காலை 6.08 மணிக்கு தொடங்கியது.

* நவம்பர் 5-ஆம் தேதி பிற்பகல் 2.38 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

* டிசம்பர் 1-ஆம் தேதி செவ்வாய் கிரகத்தை நோக்கி விண்கலம் பயணம்.

* 280 முதல் 300 நாள்கள் வரை இந்த விண்கலம் பயணிக்கும். பின்னர் 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி செவ்வாய் கிரக சுற்றுவட்ட பாதையில் விண்கலம் செலுத்தப்படும்.

இந்திய எல்லையில் ரேடார் நிலையம அமைத்த சீனாவின் தொடரும் அத்துமீறல்!

இந்திய எல்லைப் பகுதியான லடாக்கில் இந்திய விமானங்களை கண்காணிக்கும் ரேடார் நிலையம் ஒன்றை சீனா அமைத்து வருவது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு அருகே உள்ள தவூலத்பெக்கில் தரையிறங்கும் இந்திய விமானங்களை கண்காணிக்க இந்த ரேடார் நிலையத்தை சீனா அமைத்து வருவதாக கூறப்படுகிறது.




nov 5 - china


எல்லைப் பிரச்சனை தொடர்பாக அண்மையில் நடந்த பேச்சுவார்த்தையின் போது இந்திய தரப்பில் சுட்டிக் காட்டப்பட்டது. ஆனால், தாங்கள் அமைத்தது வானிலை மையம் என்று சீனா விளக்கம் அளித்துள்ளது. எனினும், ரேடார் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை இந்தியா கண்காணித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


China sets up radar stations in Ladakh to spy on Indian warplanes

******************************************************


 With IAF now able to operate C-130 Hercules transport aircraft at high-altitude Daulat Beg Oldie (DBO) sector in Ladakh, China is reported to have built a radar station on its side of the border ostensibly to monitor movement of Indian planes over the area.