Sunday 10 November 2013

பேஸ்புக் லைக் வசதியில் மாற்றம்!

தற்போது இணையத்தளங்கள் மற்றும் வியாபார நிறுவனங்கள் தம்மை பிரபலப்படுத்திக்கொள்வதற்காக பேஸ்புக் தளத்தினை பயன்படுத்தி வருகின்றமை மறுக்க முடியாத ஒன்றாகும்.


இதற்காக பேஸ்புக் ஆனது லைக் பேஜ் வசதியினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வசதியில் இதுவரை காலமும் காணப்பட்ட கைவிரல் அடையாளம் தற்போது நீக்கப்பட்டுள்ளது.


நாள்தோறும் சுமார் 22 பில்லியனிற்கும் மேற்பட்டவர்கள் இந்த கைவிரல் அடைய பொத்தானை கிளிக் செய்து வந்ததோடு, 7.5 மில்லியன் வரையான இணையத்தளங்களில் இவை இணைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


குழந்தைகளுக்கு டயப்பர் அணிவிப்பது எப்படி!

 குழந்தைகளுக்கு டயப்பர் அணிவிப்பது எப்படி

குழந்தைகளை எடுத்துக்கொண்டு பொதுநிகழ்ச்சிகளுக்கு செல்கிறவர்கள், பெரும்பாலும் குழந்தைகளுக்கு `டயப்பர்’ அணிவிக்கிறார்கள். எப்போதாவது அதை பயன்படுத்தினால், தொந்தரவு ஏற்படுவதில்லை. தொடர்ந்து அதனை பயன்படுத்தும்போது குழந்தைகளின் மென்மையான சருமத்தில் அலர்ஜி ஏற்படலாம்.

சருமத்திற்கு பாதிப்பு ஏற்படாத அளவிற்கு டயப்பர் அணிவிப்பது எப்படி? டயப்பர் கட்டுவதற்கு முன்பு, துணியை தண்ணீரில் நனைத்து குழந்தையின் உடலை துடைக்கவேண்டும். கால் பகுதிகள், முன் பகுதி, பின் பகுதி எல்லாம் துடையுங்கள். அடுத்து உலர்ந்த துணியால் ஈரப்பதத்தை துடைத்து சுத்தமாக்குங்கள்.

டயப்பர் கட்டும்போது பசைத்தன்மை கொண்ட பின்பாகம், தொப்புளின் சம அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். குறிப்பிட்ட நேரத்தில் டயப்பரை மாற்றவேண்டும். சிறுநீர், மலம் கழித்திருந்தால் அதிக நேரம் டயப்பரை மாற்றாமல் இருக்கக்கூடாது. சிலவகை டயப்பர்கள் குழந்தைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும்.

அதை கட்டியிருக்கும் சருமப் பகுதியில் சிவப்பு திட்டுக்கள் போல் ஏற்பட்டால் அந்த பிராண்டை பயன்படுத்த வேண்டாம்.டயப்பர் இறுகக்கூடாது. இறுக்கமாக இருந்தால், குழந்தையை அது அவஸ்தைக்குள்ளாக்கும்.

கால், இடுப்பு பகுதியில் இறுக்கத்தால் ஏற்படும் பாதிப்பு தென்பட்டால் அதைவிட சற்று பெரிய அளவிலான டயப்பரை பயன்படுத்துங்கள்.சருமத்தில் சிவப்பு திட்டுகள் தென்பட்டால் `ஸிங்க் ஆக்சைடு’ கொண்ட ஆயில்மென்ட் பயன்படுத்தலாம்.

நாள் முழுக்க டயப்பர் பயன்படுத்தக்கூடாது. தினமும் சிறிது நேரமாவது சாதாரண ஆடையுடன் குழந்தையை வைத்திருங்கள். வெளியே குழந்தையை தூக்கி செல்லும்போது காட்டன் துணியை மடக்கி, குழந்தைக்காக பயன்படுத்துவது நல்லது.

குழந்தைகளுக்கான இயற்கை மருத்துவம்!

Natural medicine is growing in recent years. Statistics show that all disciplines of alternative medicine have grown and more people   prefer rather

சமீபத்திய ஆண்டுகளில் இயற்கை மருத்துவம் அதிகரித்து வருகிறது. புள்ளிவிவரத்தை ஆராய்ந்த போது மருந்துகளை விட இயற்கை மருத்துவத்தை  அதிகம் பயன்படுத்தியது தெளிவாகிறது.. அனைவருக்கும் உதவும் இயற்கை மருத்துவம் குழந்தைகளுக்கு மட்டும் விதிவிலக்கல்ல. பல பெற்றோர்கள்  குழந்தைகளுக்கு செய்யப்படும் இயற்கை சிகிச்சைகளை மேற்கொள்வதில்லை. பொதுவாக அனைத்து இயற்கை வைத்தியமும் நான்கு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும் இயற்கை வைத்தியம்.

இருமல்

குழந்தையின் பிஞ்சு உடல்களை எளிதில் தாக்கும் இருமல். இருமல், சளி வந்ததும் அலையாத விருந்தாளியாக வந்து விடுவது மூச்சு பிரச்சனையும் இவை குழந்தைகளின் உடல்நலத்தை அடிக்கடி பாதிக்கும் பொதுவான நோய்தொற்றுகளில் ஒன்று.. குழந்தைகளை தாக்கும் இருமல் பிரச்சனையிலிருந்து  விடுபட ஒமவல்லி இலையை நன்கு கழுவி கொதிக்கும் சுடு தண்ணீரில் போட்டு ஒரு கப் வந்ததும் குழந்தைகளுக்கு குடிக்க கொடுக்கவும் குடிப்பதற்கு  முன்னர் ஒரு சில நிமிடங்கள் ஒய்வு எடுக்க செய்ய வேண்டும். இந்த மூலிகை தண்ணீர் குடித்து வந்தால் இருமல், சளி பிரச்சனை வராமல்  தடுக்கலாம்.

மேலும் இருமல் பிரச்சனைக்கு பெருந்துத்தி பூக்களைக்கொண்டு குளிர்பானம் தயாரித்து குழந்தைகளுக்கு தரலாம். குளிர்பானத்தை வடிகட்டி ஒரு சிறிய  துணியில் ஈரமாக்கி குழந்தையின்  தொண்டை, மூச்சு குழாய், நுரையீரல் போன்ற பகுதிகளில் தேய்க்க இருமல் குணமாகும்.

டயாபர் ஒவ்வாமை

டயாபர் அதிகம் உபயோகிப்பதனால் குழந்தைகளுக்கு அரிப்பு, அலர்ஜி போன்றவை ஏற்படுகிறது. இந்த அலர்ஜியை தடுக்க குழந்தைகளை குளிக்க  வைப்பதற்கு வைத்துள்ள தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று சொட்டு வெள்ளை வினிகர் கலந்து குழந்தைகளை குளிக்க வைக்கலாம்.

குறட்டையை விரட்டும் சிகிச்சை!

 குறட்டையை விரட்டும் சிகிச்சை

குறட்டை என்பது மற்றவர்களால் கேலி செய்யப்படும் விஷயம் அல்ல. அது ஒரு நோய். தூங்கும் போது மூச்சுப் பாதை சிறிதளவோ அல்லது முழுவதுமாகவோ அடைத்துக் கொள்வதால்தான் குறட்டை தோன்றுகிறது. உடல் எடை அதிகரித்தால், அதிக கொழுப்பு சேரும்.

அப்போது நுரையீரலால் தேவையான அளவுக்கு விரிவடைய இயலாது. அதனால் மூச்சை உள்ளே இழுப்பதிலும், வெளியேற்றுவதிலும் சிக்கல் ஏற்பட்டு குறட்டை என்னும் முரட்டுச் சத்தமாக வெளியேறும். குறட்டையால் அருகில் தூங்குபவர்களுக்கு மட்டும்தான் தொந்தரவு என்பதில்லை.

குறட்டைவிடுபவர்களுக்கு தூக்கத்தில் மூச்சுத் திணறல் ஏற்படும். குறட்டையை கட்டுப்படுத்தாவிட்டால் இதய பாதிப்பு, ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற பல நோய்கள் ஏற்படக்கூடும். குறட்டையை கட்டுப்படுத்துவதற்கு குறட்டை விடுபவரை தூக்கத்தில் ஆழ்த்தி, ஆய்வு செய்யவேண்டும்.

அதன் மூலம் தூக்கத்தில் குறட்டை எந்த அளவுக்கு, எந்த நேரத்தில் வருகிறது என்பதை முழுமையாக ஆய்வு செய்யமுடியும். இதற்கென இருக்கும் சிறப்பு ஆய்வுக்கூடத்தில், சிறந்த பரிசோதனை கருவிகளோடு அதை செய்யவேண்டும்.

பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் சிகிச்சை நடக்கும். மேல் தாடை மற்றும் கீழ் தாடைகளை சரியான முறையில் பொருத்துவதன் மூலம் பெரும்பாலான குறட்டை பிரச்சினையை தீர்த்துவிட முடியும்.

குறட்டையை சரிசெய்வதற்காக தாடை, நாக்கு, கன்னப்பகுதிகள், அண்ணப்பகுதிகள் மற்றும் சுவாச பகுதியுடன் இணைத்து சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும். குறட்டை இல்லாத நிம்மதியான தூக்கம்தான் ஆரோக்கியமானது.

குழந்தைக்கு கபவாத காய்ச்சலா இயற்கை மருந்து இருக்கு!

 Curankal child in the harsh curamakum kapavata. It will be higher. Severe breathing and pulse are tensions. In the binary is often dry.

குழந்தைக்கு வரும் சுரங்களில் கடுமையானது கபவாத காய்ச்சல். காய்ச்சல் அதிகமாக இருக்கும். சுவாசம் தீவிரமாகவும், நாடி படபடத்துமிருக்கும். அடிக்கடி வறட்சியான இருமலிருக்கும். கோழையும் வெளிப்படும். இருமும் போதே சில சமயம் இழுப்பும் காணும். ஆரம்பத்திலிருந்தே சிகிச்சை செய்து கவனிக்க வேண்யது. இதற்கு வீட்டிலே இயற்கை மருந்து தயாரிக்கலாம்

என்னென்ன தேவை?


நிலவேம்பு – 15 கிராம்

சீந்தில் தண்டு – 15 கிராம்

சிற்றரத்தை – 15 கிராம்

திப்பிலி – 15 கிராம்

கடுக்காய் – 15 கிராம்

கண்டங்கத்திரி வேர் – 15 கிராம்

பூனைக்காஞ்சொறி – 15 கிராம்

கடுகு ரோகிணி – 15 கிராம்

பற்பாடகம் - 15 கிராம்

கிச்சிலிக் கிழங்கு – 15 கிராம்

கோஷ்டம் – 15 கிராம்

தேவதாரு – 15 கிராம்

சுக்கு – 15 கிராம்

கண்டுபரங்கி – 15 கிராம்

இவற்றை எல்லாம் பொடி செய்து சுத்த நீரில் போட்டு கால் லிட்டராகும் வரை சுண்டைக் காய்ச்சிய கசாயத்தில் வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் கொடுக்க குணமாகும். தினசரி 3 வேளை இதை கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் காய்ச்சல் எளிதில் குணமாகும்.

முதுகு வலியை போக்கும் பயிற்சி!

முதுகு வலியை போக்கும் பயிற்சி


 சிலவகை உடற்பயிற்சிகள் விரைவில் பலன் தரக்கூடியவை. அந்த வகையில் இந்த பிலேட்ஸ் பயிற்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த பயிற்சி செய்ய ஆரம்பத்தில் சற்று கடினமாக இருக்கும். ஆனால் செய்ய செய்ய விரைவில் நல்ல பலன் தரக்கூடியது.

இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் கால்களை நீட்டி மல்லாந்து படுத்துக் கொள்ளவும். பின்னர் இயல்பாக சுவாசத்தில் மெதுவாக கால்களை பாதி வரை மேலே தூக்கவும். அப்போது தலை, உடலை தோள்பட்டை வரை மெதுவாக தூக்கவும்.

கைகளை சற்று மேலே படத்தில் உள்ளபடி தூக்க வேண்டும். இந்த நிலையில் 15 விநாடிகள் இருந்தபின்னர் பழைய நிலைக்கு வரவும். இவ்வாறு இந்த பயிற்சியை 20 முறை செய்ய வேண்டும். ஆரம்பத்தில் இந்த பயிற்சி செய்து சற்று கடினமாக இருக்கும்.

அதனால் 10 முறை செய்தால் போதுமானது. பின்னர் நன்கு பழகிய பின்னர் 20 முறையும் அதற்கு மேலும் செய்யலாம். இந்த பயிற்சியை தொடர்ந்து 3 மாதம் செய்து வந்தால் முதுகு வலி பிரச்சனைகள் தீரும். மேலும் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் தொப்பை மற்றும் தொடையில் உள்ள அதிகப்படியான சதை குறையும்.

டார்க் சொக்லேட்டின் மகத்துவங்கள்!

 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒன்று தான் டார்க் சொக்லேட்.

சில சொக்லெட்டில் உலர்ந்த பழங்களும், முந்திரி, பாதாம் போன்ற பருப்புகளும் போட்டு தயாரிக்கப்படுகின்றன.

கருப்பு நிறத்தில் சற்றே கசப்பும் இனிப்பும் சேர்ந்த டார்க் சொக்லெட்டை அனைவரும் உண்ண வேண்டும்.

ஏனெனில் அந்த அளவில் சத்துக்களானது இவற்றில் உள்ளன.

இதை உண்பதால் இதய நோய், மூளை நோய், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவையிலிருந்து எளிதாக விடுதலை பெற முடியும்.

இதயத்திற்கு நல்லது

டார்க் சொக்லெட்டை ஒரு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை எடுத்துக் கொண்டால், இரத்த அழுத்தத்தை போக்கும் என்று ஆய்வு கூறுகின்றது.

ஏனெனில் இதன் தன்மை இரத்தத்தை பெருக்குவதுடன், இரத்தம் உறைவதையும் தடுக்கும்.

அதிலும் இதை அதிக அளவில் எடுத்துக் கொள்வதால், தமனிகள் கடினமாகாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

மூளைக்கு நல்லது

டார்க் சொக்லெட் இரத்த ஓட்டத்தை சீராக்குவதோடு, மூளையையும் சிறப்பாக செயல் பட வைக்கின்றது. அதிலும் இவை மூளைக்கு சிந்திக்கும் திறனை வழங்குகின்றன.

மேலும் வலிப்பு வராமல் காக்க டார்க் சொக்லெட் உண்ண வேண்டும். மூளைக்கு நல்ல ஆற்றலை வழங்கவும், சிந்திக்கும் திறனை வளர்க்கவும் உதவுகின்றது.

இதில் PEA உள்ளது. இதனால் காதல் உணர்வு ஏற்படும் போது கிடைக்கும் ஒருவித மகிழ்ச்சியை போன்று இவற்றை உண்ணும் போது அடைய முடியும்.

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகின்றது

இரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். மேலும் சர்க்கரை நோயின் இரண்டாம் நிலையை போக்கவும் இவை உதவும்.

ஏனெனில் இதில் ஃப்ளேவோனாய்டுகள்(flavonoids) இருப்பதால், இவை செல்களை சீராக செயல்பட உதவுகின்றது.

அதுமட்டுமின்றி, இதில் குறைந்த அளவு க்ளைசீமிக் இண்டெக்ஸ்(glycemic index) இருப்பதாலும், இன்சுலின் அளவை கூட்டி இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை கட்டுப்படுத்துகின்றது.

புற்றுநோயை தடுக்கும்

இதில் ஆன்டி-ஆக்ஸிடண்ட் அதிகமாக உள்ளது. இதனால் செல்களுக்கு பாதிப்பு அளிக்கும் ரேடிக்கல்களை(radicals) போக்கி ஆரோக்கியத்தை அளிக்கின்றது.

இந்த ரேடிக்கல்கள் வயதாவதால் தோன்றும். மேலும் இதன் மூலம் புற்றுநோய் வரும் அபாயமும் உள்ளது. ஆனால் இதை டார்க் சொக்லெட் முற்றிலும் குணப்படுத்துகின்றது.

வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்தது

இதில் அதிகளவில் வைட்டமின் மற்றும் கனிமச்சத்து இருக்கின்றது. இதனால் உடல் ஆரோக்கியத்தை பெற முடியும்.

அதுமட்டுமல்லாமல் இதில் வேறு சில சத்துக்களும் நிறைந்துள்ளன. அவை பொட்டாசியம், காப்பர், மெக்னீசியம், இரும்புச்சத்து போன்றவை ஆகும்.

இதில் பொட்டாசியமும், காப்பரும் இதயத்திற்கு நல்லது. இரத்த சோகை, இரண்டாம் ரக சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவையும் டார்க் சாக்லெட் எடுத்துக் கொள்வதால் குணமாகும்.

பல் பிரச்சனையை போக்கும்

இதில் உள்ள தியோப்ரோமைன் பற்களில் உள்ள எனாமல் தன்மையை பலப்படுத்தும்.

அதவாது மற்ற இனிப்பை போன்று இவை பற்குழியை ஏற்படுத்தாது.

ஆனால் சொக்லெட் சாப்பிட்டவுடன் நன்றாக வாய் கொப்பளித்தால் போதுமானது. குறிப்பாக இந்த தியோப்ரோமைன் சளியையும் குணப்படுத்தும்.

இரண்டாம் உலகில் சந்திக்கும் காதலர்கள்!

இரண்டாம் உலகம் படத்தில் நடிகர் ஆர்யா மற்றும் நடிகை அனுஷ்கா

ஆர்யா, அனுஷ்கா நடிப்பில், செல்வராகவன் இயக்கியிருக்கும் படம் 'இரண்டாம் உலகம்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, பி.வி.பி சினிமாஸ் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது. நவ. 22ம் தேதி வெளியாகவிருப்பதால் 'இரண்டாம் உலகம்' படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் படத்தை பற்றி 'இரண்டாம் உலகம்' குழுவினரிடம் விச்சரித்தோம். மது - ரம்யா ரெண்டு பேரும் இந்த பூமியில் அழகான காதலர்கள். அவர்கள் இருவரும் இன்னொரு உலகில் மருவன் - வர்ணா என்கிற பெயரில் இரண்டு பாத்திரங்களாக சந்திக்கிறார்கள். அவர்கள் எப்படி அந்த இரண்டு பாத்திரங்களாக சந்திக்கிறார்கள், அந்த உலகத்துக்கு எப்படி போனார்கள், அவர்களின் அனுபவம் எப்படி இருந்தது என்பதுதான் 'இரண்டாம் உலகம்' படத்தில் செல்வராகவன் சொல்லவரும் கதை.

தனுஷ், ஆண்ட்ரியா நடிப்பில் ஆரம்பிக்கப்பட்ட படம், பின்னர் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தனுஷ் நடிக்க 'மயக்கம் என்ன' படத்தினை இயக்கினார் செல்வராகவன். அப்படத்தினைத் தொடர்ந்து செல்வராகவன் மீண்டும் கையில் எடுத்த கதைத்தான் 'இரண்டாம் உலகம்'.

இப்படத்தில் தனது வேடத்திற்காக உடலமைப்பை எல்லாம் மாற்றியிருக்கிறார் ஆர்யா. அத்துடன் முதன் முறையாக இசைக்கு ஹாரிஸ் ஜெயராஜுடன் கூட்டணி அமைத்து புதியதொரு டீமுடன் களம் இறங்குகிறார் செல்வராகவன். ஒளிப்பதிவிற்கு மட்டும் நெருங்கிய நண்பரான ராம்ஜியை ஒப்பந்தம் செய்தார். முதலில் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கியது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன், படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்ய செல்வராகவன் மற்றும் ராம்ஜி பயணம் செய்தார்கள். இதுவரை தமிழ் சினிமாவில் காட்டாத இடங்களைக் காட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஜார்ஜியாவில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.

இதுவரை இந்திய திரையுலகில் எந்தொரு படமும் அங்கு படப்பிடிப்பு நடத்தியதில்லை. ஸ்பாட்டுக்கு போய் சேரவே சில நாட்கள் ஆகும் என்பதால் படக்குழுவில் முக்கியமானவர்களை மட்டும் அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறார்கள். அங்கு சுமார் 45 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. முக்கிய காட்சிகளை அங்கு படமாக்கிய பின் அதன் கிராபிக்ஸ் பணிகள் மும்பையில் நடந்துள்ளது.

ஜனவரி 2014ல் படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டது அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட படத்தின் டிரெய்லரை பார்த்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் செல்வராகவன். தெலுங்கில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில், "அவதார் மாதிரியான படங்கள் இந்தியாவில் உருவாகும் காலம் வெகு தொலைவில் இல்லை. அதற்கான தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது" என்று அவர் கூற இப்படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தின் ஒரு பாடலை உஸ்பெகிஸ்தான் நாட்டில் படமாக்கலாம் என்று விசாவிற்கு அப்ளை செய்தார்கள். ஆனால் விசா குழப்பத்தில் திரும்பி விட்டார்கள். கடைசியில் அங்கு படமாக்க இருந்த காட்சிகள் அனைத்தையுமே சென்னையில் ECR பகுதியில் பிரம்மாண்ட செட் போட்டு படமாக்கி இருக்கிறார் செல்வராகவன்.

படத்தின் படப்பிடிப்பு அனைத்தையும் முடிப்பதற்குள் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இதர படங்களில் பிஸியாகி விட்டார். இதனால், பின்னணி இசையை மட்டும் அனிருத் அமைத்திருக்கிறார். பின்னணி இசைக்காக ஹங்கேரி நாட்டிற்கு சென்று அங்குள்ள இசை கலைஞர்களை பயன்படுத்திருக்கிறார் அனிருத்.

தற்போது படத்தின் அனைத்து பணிகளும் முடிந்தவுடன், சென்சார் அதிகாரிகள் படத்திற்கு 'யூ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பு அனைத்தையும் முடிப்பதற்குள் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இதர படங்களில் பிஸியாகி விட்டார். இதனால், பின்னணி இசையை மட்டும் அனிருத் அமைத்திருக்கிறார்.

பின்னணி இசைக்காக ஹங்கேரி நாட்டிற்கு சென்று அங்குள்ள இசை கலைஞர்களை பயன்படுத்திருக்கிறார் அனிருத். தற்போது படத்தின் அனைத்து பணிகளும் முடிந்தவுடன், சென்சார் அதிகாரிகள் படத்திற்கு 'யூ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். இப்படம் தனக்கு மிகவும் பிடித்துப் போனதால் அதன் சிங்கப்பூர், மலேஷியா உரிமை வாங்கியிருக்கிறார் நடிகர் ஆர்யா.

ஜப்பானைப் பற்றிய இந்த அழகான தகவல்களை வாசியுங்கள்...

1.ஜப்பானில் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் சேர்ந்து ஒவ்வொருநாளும் பதினைந்து நிமிடங்கள் தங்கள் பாடசாலை மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்கிறார்கள்.

2.ஜப்பானில் நாய் வளர்ப்பவர்கள் அதன் கழிவுகளை அகற்றுவதற்காக வெளியில் செல்லும்போது விசேட பை ஒன்றினை கட்டாயமாக எடுத்துச் செல்வர்.

3. ஜப்பானில் சுகாதார ஊழியர்கள் “சுகாதார பொறியியலாளர்” என அழைக்கப்படுகிறார். அவரது சம்பளம் அமெரிக்க டொலரில் 5000/-இலிருந்து 8000/- வரை ஆகும். ஒரு சுத்தபடுத்துனர் எழுத்து மற்றும் வாய் மொழிமூல பரீட்சையின் பின்னரே தெரிவு செய்யப்படுகிறார்.

4. ஜப்பானில் இயற்கை வளங்கள் என்று எதுவும் இல்லை.அத்துடன் வருடத்திற்கு நூற்றுக்கணக்கான பூமி அதிர்ச்சிகள் அங்கு ஏற்படுகின்றன.ஆனால் ஜப்பான்தான் உலகிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார நாடாகும்.

5. ஜப்பானில் முதலாம் ஆண்டு தொடக்கம் ஆறாம் ஆண்டு வரையான மானவர்களுக்கு மற்றவர்களுடன் எப்படி பழக வேண்டும் என சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

6. ஜப்பான் மக்கள் உலகிலேயே மிகப் பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் தங்களுக்கென்று வேலைக்காரர்கள் வைத்துக் கொள்வதில்லை. பெற்றோரே வீட்டையும் பிள்ளைகளையும் கவனித்துக் கொள்வர்.

7.ஜப்பான் பாடசாலைகளில் முதலாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டுவரை பரீட்சைகளே இல்லை.கல்வியின் நோக்கம் விடயங்களை அறிந்து கொள்ளவும் ஒழுக்க நெறிகளை கற்றுக் கொள்ளவும்தானே தவிர பரீட்சை மூலம் அவர்களை தரப்படுத்தவல்ல என்கிறார்கள்.

8. ஜப்பானில் மக்கள் உணவுக் கடைகளில் எந்தவிதத்திலும் உணவை வீணாக்காமல் தமக்குத் தேவையானதை அளவில் மட்டும் சாப்பிடுகிறார்கள். உணவு வீணாதல் என்பதே அங்கு இல்லை.

9.ஜப்பானில் சராசரியாக ஒரு வருடத்தில் புகையிரதங்கள் தாமதமாக வந்த நேரம் ஆகக் கூடியது சுமார் 7 வினாடிகள் மாத்திரமே.

10. ஜப்பானில் மாணவர்கள் பாடசாலையில் சாப்பிட்ட பின் உடனேயே அங்கேயே பல் துலக்குகிறார்கள்.அவர்களுக்கு சாப்பிடும் உணவு சரியாக சமிபாடு அடைய வேண்டும் என்பதற்காக சாப்பிடுவதற்கு அரை மணித்தியாலம் ஒதுக்கப்படுகிறது.

கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்!

 homemade-tomato-juice-recipe

கற்றாழை

கற்றாழைச் சாற்றினை முகம், கன்னங்கள் மற்றும் மூக்கு பகுதிகளில் தடவி ஊற வைத்து கழுவினால், கரும்புள்ளிகளில் இருந்து விடுபடலாம்.

தக்காளி சாறு

தக்காளிச் சாற்றினை முகத்தில் 20 நிமிடங்களுக்கு ஊற வைத்தால், கரும்புள்ளிகளில் இருந்து விடுபடலாம்.

உப்பு நீர்

கருவளையங்கள் வராமல் இருக்க, முகத்தை தினமும் உப்பு நீரால் சுத்தம் செய்யவும்.

ரோஸ் வாட்டர்

ரோஸ் வாட்டர் கொண்டு முகத்தை தினமும் சுத்தம் செய்யவும். இது கரும்புள்ளிகள் மற்றும் கருவளையங்கள் வராமல் தடுக்கும்.

ஆயில் மசாஜ்

ஆலிவ் எண்ணெயை கொண்டு முகத்தை அடிக்கடி மசாஜ் செய்து வரவும். இது கரும்புள்ளிகள் வராமல் தடுக்க உதவும். அதனால், முகத்தில் ஆலிவ் எண்ணெயை தடவி கரும்புள்ளிகள் வராமல் தடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக முகத்தில் ஆலிவ் எண்ணெயை தடவி, சூடான நீரில் நனைத்த துணியை முகத்தில் மூடி 15 நிமிடங்கள் காய வைக்கவும். இதனால் இந்த வெதுவெதுப்பான துணி சருமத்தில் உள்ள அழுக்கை நீக்கி, கரும்புள்ளிகளை தளர்வடையச் செய்யும்.

ஆலிவ் ஆயில்

சிறு துளி ஆலிவ் எண்ணெயுடன், எலுமிச்சை சாறு சேர்த்து உபயோகித்தால், அது கரும்புள்ளிகளை நீக்கும். அதற்கு இதனை முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மீது சில நிமிடங்கள் தடவி காய வைக்கவும். பின்னர் முகத்தை அலம்பவும்.

தயிர்

2 மேஜை கரண்டி தயிருடன், 2 மேஜைகரண்டி ஓட்ஸ் பொடி மற்றும் 2 மேஜை கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். இதனை கரும்புள்ளிகள் மீது தடவி 10 நிமிடங்கள் காய விடவும். பின்னர் முகத்தை அலம்பவும். இது நல்ல பலனைத் தரும்.

சர்க்கரை

ஒரு மேஜை கரண்டி சர்க்கரையில் சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து, அதனை மூக்கிலும் கன்னத்திலும் உள்ள கரும்புள்ளிகள் மீது தடவினால், அவை குறையக்கூடும். அதுமட்டுமின்றி இந்த கலவை சருமத்தை பளிச்சிட செய்யவும் உதவும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாற்றினை முகத்தில் தடவினா,ல் கரும்புள்ளிகளை நீக்குவது மட்டுமல்லாமல், அதிகப்படியான எண்ணெய்ப் பசை சருமத்தில் இருந்தும் விடுபடலாம்.

உருளைக்கிழங்கு

கரும்புள்ளிகளை நீக்குவதற்கு முதலில் தேவைப்படுவது உருளைக்கிழங்கு தான். அதில் கருப்பு மற்றும் பச்சை நிறப் புள்ளிகள் இல்லாதவாறு இருக்க வேண்டும். பின் உருளைக்கிழங்கை சீவிக் கொள்ளவும். பின்பு அதனை கரும்புள்ளிகள் மீது 10 நிமிடங்கள் தேய்க்கவும். காய்ந்த பின்பு முகத்தை கழுவவும்.

அஜித் குமார் (நடிகர்) - வாழ்க்கை வரலாறு (Biography)

 Ajit

எந்தவொரு சினிமாப் பின்னணியும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் நுழைந்து, தனது கடின உழைப்பால் முன்னேறி, தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் தனது நடிப்பால் உருவாக்கி, அவர்கள் மனத்தில் ‘தல’ என்று நிலைத்திருப்பவர், அஜீத் குமார் அவர்கள். தெலுங்குத் திரைப்படத்தில், துணைக் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து, தென்னிந்தியத் தமிழ்த் திரைப்பட முன்னணி நடிகர்களுள் ஒருவர் என்று முத்திரைப் பதித்த அவர், ‘அல்டிமேட் ஸ்டார்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

 குழந்தை நட்சத்திரமாக இருந்து, நடிகையாக வளர்ந்து, அவர் நடித்த ‘அமர்க்களம்’ என்ற படத்தில் அவருடன் இணைந்து நடித்த பேபி ஷாலினியை மணமுடித்தார். மூன்று முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதுகளையும்’, இரண்டு முறை ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகளையும்’, மூன்று முறை ‘விஜய் விருதுகளையும்’, இரண்டு முறை ‘தமிழ்நாடு மாநில அரசு விருதுகள்’, எனப் பல்வேறு விருதுகளை வென்றுள்ள அவர், ஒரு கார் பந்தய வீரராகவும் அறியப்படுகிறார். இத்தகைய சிறப்புமிக்க ‘அல்டிமேட் ஸ்டார்’ அஜீத் குமார் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ்த் திரையுலகில் அவர் ஆற்றிய சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு: மே 1, 1971

பிறப்பிடம்: ஹைதராபாத், ஆந்திர பிரதேசம், இந்தியா

பணி: நடிகர், கார் பந்தய வீரர்

நாட்டுரிமை: இந்தியன்



பிறப்பு


அஜீத் குமார் அவர்கள், இந்தியாவில் உள்ள ஆந்திர மாநிலத்தின் தலைநகரமான ஹைதராபாத்தில், பாலக்காடு தமிழ் ஐயரான சுப்ரமணியம் என்பவருக்கும், கொல்கத்தா சிந்தி சமூகத்ததை சேர்ந்த மோகினி என்பவருக்கும் இரண்டாவது மகனாக மே மாதம் 1 ஆம் தேதி, 1971 ஆம் ஆண்டில் பிறந்தார். அவரது அண்ணனான அனூப் குமார் நியூயார்க்கில் பங்குத்தரகராகவும், அவரது தம்பியான அணில் குமார் சியாட்டலில் பணிபுரிகிறார்.

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்

என்னதான் பாலக்காடு வழி தந்தைக்கும், சிந்தி தாய்க்கும் மகனாக, ஹைதராபாத்தில் பிறந்திருந்தாலும், அஜீத் குமார் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் வளர்ந்தார். சென்னையில் உள்ள ஆயிரம் விளக்குப் பகுதியில் இருக்கும் ஆசான் மெமோரியல் உயர்நிலைப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பைத் தொடங்கிய அவர், படிப்பின் மீது பற்றற்றவராகவே காணப்பட்டார். இதனால், 1986ல் தனது உயர்நிலைக் கல்வியைத் தொடங்குவதற்கு முன்பே, பெற்றோர்களின் விருப்பத்தையும் எதிர்த்துத் தனது பள்ளிப்படிப்பை நிறுத்திக்கொண்டார்.

ஆரம்பகாலப் பணிகள்


தனது பள்ளிப்படிப்பைப் பாதியிலே கைவிட்ட அவர், ஒரு இரு சக்கர பைக் மெக்கானிக்காகப் பணியில் சேர்ந்தார். பைக், கார் ஓட்டுவதில் அதிக ஆர்வம் காட்டிய அவர், தானாகவே அவற்றை ஓட்ட கற்றுக்கொண்டு, அதற்கான உரிமத்தையும் பெற்றார். பைக் பந்தயம் தான் தனது தொழில் பாதை என்று தேர்ந்தெடுத்த அவர், அதில் கலந்து கொள்ளப் பணம் வேண்டுமென்பதால், அவ்வப்போது, சிறு சிறு பத்திரிக்கை விளம்பரங்கள் மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்து வந்தார். பைக் பந்தயத்தின் போது ஏற்பட்ட காயத்தினால், அவரைப் பல வணிக முகவர்கள் அச்சு ஊடகங்களின் விளம்பரங்களில் நடிக்க வைக்க அவரைத் தூண்டினர். இதனால், அவருக்குப் பல திரைப்பட வாய்ப்புகள் குவிந்தது. ‘பந்தயமா? சினிமாவா?’ என்று வந்த போது, அவர் பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணத்தினால், சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

திரையுலக வாழ்க்கை


1991ல், தனது 20 வது வயதில், தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமான அஜீத் குமார் அவர்கள், அப்படத்தின் இயக்குனர் மரணமடைந்ததால், அதில் நடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். பின்னர், ஓர் ஆண்டுகள் கழித்து, 1992ல் ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். மேலும், அப்படம் அவருக்கு ‘சிறந்த புதுமுகத்திற்கான விருதைப்’ பெற்றுத்தந்தது. அதே ஆண்டில், செல்வா இயக்கத்தில், ‘அமராவதி’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதுவே, தமிழ்த் திரையுலகில் அவரது முதல் படமாகும். இதைத் தொடர்ந்து, அவர், ‘பாசமலர்கள்’ (1994), ‘பவித்ரா’ (1994), ‘ராஜாவின் பார்வையிலே’ (1995), ‘ஆசை’ (1995) போன்ற படங்களில் நடித்தார். இதில், 1995ல் வெளியான ‘ஆசை’ திரைப்படம் அவருக்குப் பெரும் திருப்புமுனையாக அமைந்ததோடு மட்டுமல்லாமல், தமிழ்த் திரையுலகில், ‘வளர்ந்து வரும் நட்சத்திரம்’ என்ற அந்தஸ்த்தையும் பெற்றுத் தந்தது.

தனது இயல்பான மற்றும் இயற்கையான நடிப்பில் ரசிகர்கள் மனதில் இடம்பெற்ற அஜீத் குமார் அவர்கள், தொடர்ந்து ‘வான்மதி’ (1996), ‘கல்லூரி வாசல்’ (1996), ‘மைனர் மாப்பிள்ளை’ (1996), ‘காதல் கோட்டை’ (1996), ‘நேசம்’ (1997), ‘ராசி’ (1997), ‘உல்லாசம்’ (1997), ‘பகைவன்’ (1997), ‘ரெட்டை ஜடை வயசு’ (1997), ‘காதல் மன்னன்’ (1998), ‘அவள் வருவாளா’ (1998), ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’ (கௌரவ வேடம்) (1998), ‘உயிரோடு உயிராக’ (1998), ‘தொடரும்’ (1999), ‘உன்னை தேடி’ (1999), ‘வாலி’ (1999), ‘ஆனந்த பூங்காற்றே’ (1999), ‘நீ வருவாய் என’ (கௌரவ வேடம்) (1999), ‘அமர்க்களம்’ (1999), ‘முகவரி’ (2000), ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ (2000), ‘உன்னை கொடு என்னை தருவேன்’ (2000), ‘தீனா’ (2001), ‘சிட்டிசன்’ (2001), ‘பூவெல்லாம் உன் வாசம்’ (2001), ‘அசோகா’ (கௌரவ வேடம்) (2001), ‘ரெட்’ (2002), ‘ராஜா’ (2002), ‘வில்லன்’ (2002), ‘என்னை தாலாட்ட வருவாளா’ (கௌரவ வேடம்) (2003), ‘ஆஞ்சநேயா’ (2003), ‘ஜனா’ (2004), ‘அட்டகாசம்’ (2004), ‘ஜீ’ (2005), ‘பரமசிவன்’ (2006), ‘திருப்பதி’ (2006), ‘வரலாறு’ (2006), ‘ஆழ்வார்’ (2007), ‘கிரீடம்’ (2007), ‘பில்லா 2007’ (2007), ‘ஏகன்’ (2008), ‘அசல்’ (2010), ‘மங்காத்தா’ (2011), ‘பில்லா 2’ (2012), ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ (2012) போன்ற படங்களில் நடித்து தனக்கென ஓர் இடத்தைத் தமிழ்த் திரையுலகில் தக்கவைத்துக் கொண்டார்.


பந்தய வாழ்க்கை

தனது இளமைப் பருவத்திலிருந்தே ரேஸ் கார், பைக் ஓட்டுவதில் ஆர்வம் காட்டி வந்த அவர், மும்பை, சென்னை, தில்லி போன்ற இடங்களில் நடந்த கார் ரேஸ்களில் கலந்துகொண்டு வெற்றிப் பெற்றுள்ளார். மேலும் சர்வதேச அரங்கில் ரேஸ்களில் பங்கேற்கும் இந்தியர்களுள் ஒருவர் என்றும், ஃபார்முலா சாம்பியன் போட்டியில் வென்ற ஒரே இந்திய நடிகரென்ற பெருமையைப் பெற்றார். ஜெர்மனி, மலேஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடந்த போட்டிகளில் கலந்துகொண்ட அவர், 2003 ஆம் ஆண்டு ஃபார்முலா ஆசியா BMW சாம்பியன்ஷிப் போட்டியில் போட்டியிட்டார். அது மட்டுமல்லாமல், 2010 ஆம் ஆண்டு ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் பந்தயங்களில் கலந்துகொண்ட மூன்று இந்தியர்களுள் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இல்லற வாழ்க்கை

1999 ஆம் ஆண்டில், சரணின் ‘அமர்க்களம்’ என்ற படத்தில் நடிகை ஷாலினியுடன் இணைந்து நடித்த போது, ஷாலினி மீது அவர் காதல் வயப்பட்டதால், ஜூன் மாதம் அவரிடம் தனது காதலைத் தெரிவித்தார். ஷாலினியும் இதற்கு ஒப்புக்கொண்டதால், இரு வீட்டார் சம்மதத்துடன் இருவரும் ஏப்ரல் மாதம் 2௦௦௦ ஆம் ஆண்டில் சென்னையில் இருமத முறைப்படி திருமண பந்தத்தில் இணைந்தனர். அவர்களது திருமணத்திற்குப் பின்னர், தனது திரையுலக வாழ்வில் இருந்து ஓய்வுபெற்றார் ஷாலினி. அவர்களுக்கு, ஜனவரி மாதம் 3 ஆம் தேதி, 2008 ஆம் ஆண்டில் அனோஸ்கா என்ற மகள் பிறந்தாள்.

விருதுகள்

•2௦௦1 – தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான சிறப்பு திரைப்பட விருதை ‘பூவெல்லாம் உன் வாசம்’ என்ற படத்திற்காக வென்றார்.

•2006 – தமிழக அரசின் எம்.ஜி.ஆர் திரைப்பட விருதை, ‘வரலாறு’ படத்திற்காக வென்றார்.

•விஜய் விருதுகளை 2௦௦6ல் ‘வரலாறு’, 2011ல் மங்காத்தா படத்திற்காக இரண்டு முறையும் பெற்றார்.

•சிறந்த தமிழ் நடிகருக்கான ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருதை’, 1999ல் ‘வாலி’ படத்திற்காகவும், 2௦௦1ல் ‘சிட்டிசன்’ படத்திற்காகவும் வென்றார்.

•சிறந்த தமிழ் நடிகருக்கான ‘சென்னை டைம்ஸ் விருதை’, ‘மங்காத்தா’ படத்திற்காக 2011 ஆம் ஆண்டில் பெற்றார்.

•ஃபிலிம்ஃபேர் விருதுகள் 1999ல் ‘வாலி’ படத்திற்காகவும், 2002ல் ‘வில்லன்’ படத்திற்காகவும், 2006ல் ‘வரலாறு’ படத்திற்காகவும், 2௦௦7ல் ‘பில்லா’ படத்திற்காகவும் அவருக்கு வழங்கப்பட்டது.

காலவரிசை

1971: ஆந்திர மாநிலத்தின் தலைநகரமான ஹைதராபாத்தில், சுப்ரமணியம் என்பவருக்கும், மோகினி என்பவருக்கும் இரண்டாவது மகனாக மே மாதம் 1 ஆம் தேதி, 1971 ஆம் ஆண்டில் பிறந்தார்.

1986: உயர்நிலைக் கல்வியைத் தொடங்குவதற்கு முன்பே, தனது பள்ளிப்படிப்பை நிறுத்திக்கொண்டார்.

1991: தனது 20 வது வயதில், தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமானார்.

1992: ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார்.

1992: செல்வா இயக்கத்தில், ‘அமராவதி’ என்ற படம் மூலமாகத் தமிழ் திரையுலகில் கால்பதித்தார்.

1999: ‘அமர்க்களம்’ படத்தில் நடிகை ஷாலினியுடன் இணைந்து நடித்த போது, ஷாலினி மீது அவர் காதல் வயப்பட்டதால், ஜூன் மாதம் அவரிடம் தனது காதலைத் தெரிவித்தார்.

2௦௦௦: இரு வீட்டார் சம்மதத்துடன் இருவரும் ஏப்ரல் மாதம் 2௦௦௦ ஆம் ஆண்டில் சென்னையில் இருமத முறைப்படி திருமண பந்தத்தில் இணைந்தனர்.

2௦௦1: தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான சிறப்பு திரைப்பட விருதை ‘பூவெல்லாம் உன் வாசம்’ என்ற படத்திற்காக வென்றார்.

2003: ஃபார்முலா ஆசியா BMW சாம்பியன்ஷிப் போட்டியில் போட்டியிட்டார்.

2006: தமிழக அரசின் எம்.ஜி.ஆர் திரைப்பட விருதை, ‘வரலாறு’ படத்திற்காக வென்றார்.

2008: ஜனவரி மாதம் 3 ஆம் தேதி, 2008 ஆம் ஆண்டில் அனோஸ்கா என்ற மகள் பிறந்தாள்.

2010: ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் பந்தயங்களில் கலந்துகொண்டார்.

‘ஜில்லா’ திரைப்பட ஸ்டில்ஸ்!

    

அறிமுக இயக்குனர் நேசன் இயக்கத்தில் விஜய, மோகன்லால், காஜல் அகர்வால், பூர்ணிமா பாக்யராஜ், பரோட்டா சூரி, என நட்சத்திர பட்டாளமே களமிறங்கியுள்ள திரைப்படம் ஜில்லா.


 அரசியல், பஞ்ச் என எதுவும் இல்லாமல் குடும்ப பொழுதுபோக்குப் படமாக உருவாகி வருகிறது.படத்தில் விஜய்க்கு காவல்துறை அதிகாரி வேடம். படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.



இப்படத்துக்காக விஜய், ஸ்ரேயா கோஷலுடன் சேர்ந்து ஒரு பாடலை பாடியுள்ளார். படத்தின் இசையை டிசம்பரில் ஸ்டார் மியூசிக் நிறுவனம் வெளியிடுகிறது.


மதுரையை கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்தப் படத்தில், பெரும்பாலான காட்சிகளை கிட்டத்தட்ட எடுத்து முடித்துவிட்டார்களாம். பாடல்கள் காட்சிகள் மட்டும் தான் இன்னும் பாக்கி இருக்கிறதாம்.


   


டெக்னாலஜி வில்லனா? நண்பனா?

ஹன்ஸா காஷ்யப் வழக்கறிஞர். அறிவுசார் சொத்துரிமைச் சட்டத்தில் முதுகலையும், சைபர் லா சட்டமும், காபிரைட் தொடர்பான சட்டத்தில் ஐக்கிய நாடுகள் அகாடமியின் டிப்ளமோவும் பெற்றவர். இசையில் முதுகலை எம்.ஏ., எம்.ஃபில் பட்டதாரியான இவர் ஆன்லைன் இசைப் பகிர்வு பற்றி ஆராய்ந்து வருகிறார்.

- எஸ்.ஹன்ஸா காஷ்யப்

ஆன்லைன் குற்றங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள பல செக்யூரிடி சாஃப்ட்வேர்கள், அப்ளிகேஷன்கள் வந்துவிட்டன. ஆனால், வெறும் புத்திசாலித்தனத்தை மட்டும் வைத்து எப்படியெல்லாம் நாம் ஏமாற்றப்பட முடியும், நம்மை எப்படியெல்லாம் காத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்த விரும்பியதே இந்தத் தகவல் கைடின் நோக்கம்.

மொபைல் ஃபோன்:

* நான் ஒரு முறை வெளியூருக்குக் கிளம்பினேன். போய்ச் சேர்ந்ததும்தான் தெரிந்தது என் மொபைலை மறந்து விட்டுக் கிளம்பியிருக்கிறேன். என் கணவருக்கு என் மொபைல் எண்ணிலிருந்தே எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். (எப்படி முடியும் என உங்கள் மகனை/மகளைக் கேளுங்கள். சொல்வார்கள்.) கணவர் குழம்பிவிட்டார். உங்களைப் போலவே. (பார்க்க பெட்டிச் செய்தி)

பெட்டிச் செய்தி:

அப்படி அனுப்ப நிறைய சைட்கள் உள்ளன. என் மொபைல் எண்ணை, அந்த சைட்-இல் பதிந்து வைத்தால், அவர்கள் ஒரு பாஸ்வோர்டை என் எண்ணுக்கு அனுப்புவார்கள். எங்கிருந்தாலும், இன்டர்நெட் மூலம், அந்த பாஸ்வோர்டை உபயோகித்து, என் எண்ணிலிருந்து எஸ்.எம்.எஸ். அனுப்ப முடியும்.

ஆனால், என் பாஸ்வோர்ட் தெரிந்த மற்றொரு நபரும், என் எண்ணிலிருந்து எஸ்.எம்.எஸ். அனுப்ப முடியும் அல்லவா?

உங்கள் மகள், கல்லூரியில் படிக்கிறாள். ஹாஸ்டல் அறைத்தோழி, நம் மகள் மொபைலில் இருந்து பாஸ்வோர்டைத் திருடியோ அல்லது மகளின் எண்ணை அந்த சைட்-ல் பதிந்துவிட்டு, ‘ஒரு நிமிஷம் உன் மொபைலைத் தாடி’ என சொல்லி, அந்த நிமிடம், அவர்கள் அனுப்பும் பாஸ்வோர்டைக் குறித்துக் கொண்டு, அதை மொபைலில் இருந்து அழித்துவிட்டு, உங்கள் மகளின் எண்ணிலிருந்து யாருக்கு வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் மெசேஜ் அனுப்ப முடியுமே. இதுபோன்ற சைட்களின் வழியாக வரும் செய்திகளை நாம் புறக்கணிக்கலாம் என்றால், எந்த செய்தி அப்படி வந்தது என அறிய முடியாது. அந்த செய்திகளும், நம் மொபைல் மெசேஜ் சென்டர் வழியாகவே வரும். ஏன்?… உங்கள் எண்ணிலிருந்து கூட உங்கள் மகளுக்கு செய்தி அனுப்ப முடியும். அல்லவா?

* அதற்கும் மேலாக, பிரபல பத்திரிகையின் மொபைல் எண் எனக்குத் தெரியும். பத்திரிகையிலிருந்து, தோழியின் எண்ணுக்கு வாழ்த்துச் செய்தியுடன், கால் வந்தது போல காட்ட முடியும். அவளை ஏமாற்றவும் முடியும். அதற்கும் டெக்னாலஜி துணை போகிறது.

இப்போது சொல்லுங்கள்….

இதற்கு என்ன செய்வது? இதுபோன்ற குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட முடியும்தான். ஆனால் அதற்கு முன்…?

மொபைல் என்பது உங்கள் உள்ளாடையைப் போல மிகமிக பர்சனலானது. அதைப் பகிர்ந்து கொள்ளல் வேண்டாமே. முக்கியமான எஸ்.எம்.எஸ். வரும் போதெல்லாம், தொடர்பு கொண்டு செய்தியைக் கேட்டு விடுவதே நல்லது.

* இரண்டாவது, ஒருவர் தான் அனுப்பிய எஸ்.எம். எஸ்ஸையே, தான் அனுப்பியது அல்ல எனக்கூறி அதை நிரூபிக்கவும் முடியும். அதாவது நான் சொன்ன முதல் திருட்டுத் தனத்தின் எதிர் வடிவம். ஒரு ஈ-மெயிலை அனுப்பிவிட்டு, ஏதும் பிரச்னை வரும்போது, அதை நான் அனுப்பவில்லை, யாரோ, இன்டர்நெட்டைப் பயன்படுத்தி விளையாடி இருக்கிறார்கள், எனச் சொல்ல முடியும்.

* Ways2sms இல், நண்பரின் பிறந்த நாள் தேதியைப் பதிந்து வைத்திருந்தேன். அந்த தேதியில், அவருக்கான என் வாழ்த்து, அந்த தளத்திலிருந்து தானாகவே வருடா வருடம் அனுப்பப்பட்டுவிடும்.

நன்றாகத்தான் இருக்கிறது இந்த வசதி. ஆனால், இதில் என்ன தவறு நடக்க வாய்ப்பிருக்கிறது…?

அ. அவருடனான நட்பு நமக்கு மறந்து இருவரும் தூரப்போன பிறகும் நம் வாழ்த்து அவருக்குக் கிடைப்பது நட்பை பலப்படுத்தும்.

ஆ. அவரது பிரிவு, மனக் கசப்பினால் எனில், நம் வாழ்த்தை அவர் வேறுவிதமாகவும் பார்க்கக் கூடும் அல்லவா…? எனில், நாம் மறக்காமல் அந்த வாழ்த்துப் பதிவை நீக்க வேண்டும்.

* ரமாவின் மேனேஜர் அவளிடம் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து, அதை குறிப்பிட்ட அக்கௌண்ட்டில், கட்டி விடுமாறு சொன்னார். மறுநாள், அவள் நிச்சயதார்த்தம். லீவு வேறு கேட்டிருந்தாள். மேனேஜர் நாளை மறுநாள் அதைக் கட்டினால்போதும் எனச் சொல்லி விட்டார். ரமாவுக்கு சந்தோஷம். மறுநாள், போலீஸ் அவளைத் திருடிய குற்றத்துக்காகக் கைது செய்தது. பணம் கொடுத்ததை மானேஜர் மறுத்துவிட்டார். அது அவர் பொக்கணக்கு சொல்லி எடுத்த பணம். அவர் தான் கொடுத்தார் என்பதற்கு சாட்சி ஏதும் இல்லை.

அவள் என்ன செய்திருந்திருக்க வேண்டும்? அவர் பணம் கொடுத்ததும், ‘நீங்கள் கொடுத்த ரூபாய் இவ்வளவு பணத்தை நாளை மறுநாள் கட்டிவிடுகிறேன்; லீவு கொடுத்ததற்கு நன்றி’ என ஈ-மெயிலிலும், எஸ்.எம்.எஸ்ஸிலும், லீவுக்கு நன்றி சொல்லும் சாக்கில் சாட்சியங்களை ஏற்படுத்தியிருந்தால், பிரச்னையைச் சமாளிக்க சுலபமாக இருந்திருக்கும். அல்லவா?

பெட்டி செய்தி

‘ஈ-மெயில்களை, மறைக்க, மறுக்க, மாற்ற முடியும் எனும் பட்சத்தில், ரமா ஆதாரம் ஏற்படுத்துவதில், என்ன பிரயோசனம்?’ எனும் கேள்வி எழுகிறதா? ரமாவின் அந்த ஆதாரம், அவளுக்கு உதவியாக இருக்கக் கூடிய பலவற்றில் ஒன்று. ரமா, மானேஜர் இருவரின் மற்ற செயல்பாடுகள், மற்ற ஆதாரங்கள், இவற்றைப் பொறுத்து உண்மை நிரூபிக்கப்படும்.

* கல்லூரியில் படிக்கும் என் தங்கைக்கு எப்போது, தொலைபேசினாலும், ‘நீங்கள் அழைத்த எண்… பிஸி …பிறகு தொடர்பு கொள்ளவும்’ என்றே பதில் வரும். ஒரே நாளில் சுமார், 20 கால்களுக்குப் பிறகு, எனக்கு பொறி தட்டியது… ஆம்…பிஸி எனும் செய்தியையே காலர் ட்யூனாக வைத்துள்ளாள். ‘ஏன்டீ..?’ என்ற கேள்விக்கு அவள் சொன்ன பதில், ‘இல்லக்கா… யாராவது ஃபோன் பண்ணி எடுக்கலைன்னா கோச்சுக்கறாங்க… பிஸி…ன்னு தெரிஞ்சா ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. நாமளும் முக்கியமான அழைப்புகளை மட்டும் அட்டென்ட் பண்ணிணாபோதும்… அதான்…" என்றாள்.

ஈ-மெயில்:

* உங்கள் நண்பர் நீங்கள் அனுப்பிய ஈ-மெயிலைப் படித்துவிட்டாரா, இன்னும் படிக்கவில்லையா, எனத் தெரிந்து கொள்ள வேண்டுமா? அல்லது, நீங்கள் அனுப்பிய மெயிலைப் படித்துவிட்டு அதன்படி நடக்கப் பிடிக்காமல், ‘இன்னும் படிக்கவில்லை சார்’ எனச் சாக்குப் போக்கு ஸோல்லும் ஊழியரா?

அவர்கள் படித்ததை அவர்களுக்குத் தெரியாமலேயே அறிந்து கொள்ள SPYPIG உதவி செய்கிறது. நீங்கள் அவர்களைக் கண்காணிப்பதை தெரியப்படுத்த விரும்பினால், நீங்கள் படித்தது எனக்குத் தெரியும்" எனும் வாசகம் அவர்கள் படித்ததும் அவர்கள் ஸ்க்ரீனில் இடம் பெறும் படியும் செய்யலாம்.

* இப்போது உங்களுக்கு உங்கள் பாஸ் இதேபோல ஸ்பைபிக் உதவியுடன் ஒற்று வேலை மெயில் அனுப்புகிறார் எனக் கொள்வோம். அதை எப்படிக் கண்டுபிடிப்பது…?

எந்த மெயில் அப்படி இருக்க வாய்ப்புள்ளது என நீங்கள் சந்தேகிக்கிறீர்களோ அந்த மெயிலின் டெக்ஸ்டை காபி செய்யுங்கள். அப்படிச் செய்யும் போது, அந்த காபி செய்த பகுதிகள் எழுத்து உள்ள பகுதிகள் நீல நிறமாகும் அல்லவா..? ஆனால், ஒரு இடத்தில் மட்டும், எழுத்து இல்லாமல், நீல நிற சதுரம் இருக்கும். அப்படி இருந்தால் அந்த மெயிலில் ஒற்று அனுப்பப்பட்டிருக்கிறது எனக் கொள்ளலாம்.

* என் தோழி எனக்கொரு ஈ-மெயில் அனுப்பியிருந்தாள். அவள் பிக்னிக் சென்ற புகைப்படங்கள் அதில் இடம் பெற்றிருந்தன. மறுநாள் அதை என் மற்றொரு தோழிக்கு காட்டுவதற்கு தேடினேன். ஈ-மெயில் வந்த தடயமே இல்லை. கால் செய்து கேட்டதும்தான் தெரிந்தது. அந்த ஈ-மெயிலை ஒரு முறைதான் பார்க்க முடியும் என்று. புகைப்படங்கள் இன்டர்நெட்டில் தவறாகப் பதிவிறக்கப்படுவதால், அப்படி செய்ததாகக் கூறினாள் (அதற்கென தனி சாஃப்ட்வேர் அப்ளிகேஷன்ஸ் உண்டு.)

நன்று.

ஆனால், இதே முறையை எப்படியெல்லாம் தவறாக உபயோகிக்க முடியும்? ஈ-மெயிலில் ஒன்றைக் கூறி விட்டு பின் இல்லை என மறுக்கலாமே?

இதற்கு என்ன செய்வது?

முக்கியமான ஈ-மெயில்களைக் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத வேறு பெயரில் ஒரு ஃபோல்டரில் போடலாம்.

(காபி செய்து cut and paste செய்து ஃபைலை வேறெங்காவது வைத்துக் கொள்வதில், தொடர்பு இழக்கப்படும்(continuity miss) என்பதை நாம் அறிய வேண்டும். பிரச்னை ஏதும் வரும்போது, நாம் அதை ஒரு சாட்சியாகப் பயன்படுத்த முடியாது என நாம் அறிந்திருக்க வேண்டும்.)

* ஏன்? ஈ-மெயில் அனுப்பியவர்(தவறானவராக இருக்கும் பட்சத்தில்,) முன்பு சொன்னது போல் "hiding facility’ஐ உபயோகிக்காவிட்டால், தான் அனுப்பிய ஈ-மெயில்களை உங்களிடமிருந்து அழிக்க முயலக்கூடும். அழிக்கவும் முடியும். அப்போது அவர் உங்கள் இன்-பாக்ஸில் தான் கவனம் வைப்பார். அதில்தான் தன் மெயிலைத் தேடுவார்.

* ஒவ்வொரு சிஸ்டத்துக்கும் தோராயமாக… ஒரு (முகவரி போல எனச் சொல்லலாம்) ‘IP Address’ உண்டு. ஒரு ஈ-மெயில் எந்த சிஸ்டத்திலிருந்து வருகிறது என அதை வைத்து சொல்லலாம். ஒரு சிஸ்டமிலிருந்து ‘ஒரு மாதிரியான’ ஈ-மெயில் உங்களுக்கு வருகிறது என்றால் கூட அந்த குறிப்பிட்ட சிஸ்டமிலிருந்து வந்தது என அறியலாம்; ஆனால், பலபேர் உபயோகிக்கும், அந்த சிஸ்டமின் உரிமையாளர் மேல் வேண்டுமானால் குற்றம் சாட்டலாம். எந்த நபர் என நிரூபிப்பது கடினம். அல்லவா? அது தவிர IP Address ஐயும், hack and crack செய்ய முடியும். தவறாகப் பயன்படுத்த முடியும். எனவே, ‘ஜாக்கிரதை’… இதைத் தவிர வேறென்ன சொல்ல?

* வியாபார ஈ-மெயில்களுக்கு ’Certifying Authorities’ உண்டு. அவர்கள் மெயிலின் source-ஐ, அதன் நம்பகத் தன்மையை check செய்து certify செய்து தருவார்கள். ஆனால், இதற்கான செலவு நிறுவனங்களுக்கு மட்டுமே கட்டுப்படியாகும். உங்களுக்கும், எனக்கும் அல்ல.

* என் வீட்டிலிருக்கும், என் கணினியை, என் மிகமிக நெருங்கிய தோழியைக் கூட தொட விடுவதில்லை என அவளுக்கு வருத்தம்தான். என்ன செய்ய? டெக் உலகம் அப்படி இருக்கிறதே? உங்கள், கணினி ஒரு சில நிமிடங்கள் தவறானவர் கைகளுக்குச் சென்றால்…

ஒரு மென்பொருள் உண்டு. அதை அடுத்தவர் கணினியில் install செய்து விட்டால், அந்த அடுத்த நபர் தன் கணினியில், என்னவெல்லாம் செய்கிறார்… பார்க்கிறார்… என பார்க்க முடியும். அது அவருக்குத் தெரியவே தெரியாது. (remote administration tools)

ஹையோ… என இருக்கிறதா?… சிந்தியுங்கள்.

* என் கணினியில், அடிக்கடி ஒரு விளம்பரம் வரும். கணினியை வைரஸ்ஸிலிருந்து பாதுகாக்க அந்த anti-virus மென்பொருளை வாங்கும்படி சொல்லும் விளம்பரம் அது. தினம் ஏழெட்டு முறையாவது அந்த விளம்பரம் வரும்.

திடீரென்று, என் கணினியில் ஒரு அவசரச் செய்தி… என் கணினி பழுதுபட்டுவிட்ட"தென்று. கணினியை முழு scan செய்து பார்த்தேன். பழுதொன்றுமில்லை. அவசரச் செய்தியின் படபடப்பில், தினம் நான் பார்க்கும், அந்த anti-virus software பதற்றத்தில், உடனே ‘buy / install’ என click செய்து விடுவேன் என அந்த anti – virus software விற்கும் நிறுவனத்தின் கணிப்பு / ஏற்பாடு… ‘எங்கிட்ட மோதாதே’… என நான் தப்பித்தேன்.

* நானென்ன பிஸினெஸ் பெண்ணா? என்னிடம் மொபைலிலும், ஈ-மெயிலிலும் திருட என்ன இருக்கிறது என எண்ணாதீர்கள். உங்களைப்பற்றிய, எந்தத் தகவலும் யாரோ ஒருவருக்குத் தெரிவது கூட, உங்களுக்கு ஊறு விளைவிக்கும். நம்புங்கள். ஈ-மெயில் அனுப்ப, புதிதாக வந்த ஒரு IM-இல் என் பெயர் முகவரியைப் பதிந்தேன். அவ்வளவுதான். என் மொபைல் எண், நான் அதிகம் விரும்பும் தகவல்கள், தேடும் விஷயங்கள்… என என்னைப்பற்றி அத்தனையும் அதில் பார்க்க முடிந்தது.

ஆனால், இதில், என் தவறுதான் அதிகம்.

‘நான் பதிந்த site-இன் related site-களுக்கு என்னைப் பற்றிய தகவல்களைத் தரத் தயார்’- என நான் முழு contract / disclaimer-ஐ சரியாகப் பார்க்காமல் ஒப்புக் கொண்டிருக்கிறேன்.

சரி. இப்படிப் பார்க்கலாம். உங்கள் முழு பெயரையும் url bar – இல் டைப் செய்யுங்கள். உங்களைப் பற்றிய நீங்கள் கணினியில் எங்கெல்லாம் பதிந்திருக்கிறீர்கள்… அத்தனை தகவல்களும் screen-இல் விரியும். இப்போது சொல்லுங்கள் உங்களைப் பற்றிய இத்தனை தகவல்கள் அடுத்தவருக்குத் தெரிவது அவசியமா?

இதற்கு என்ன செய்வது?

Contract / disclaimer களை நன்கு படித்து பின், Accept ஐ click செய்யவும்.

சமூக வலைதளங்கள்.

* நீங்கள் ஃபேஸ்புக் பார்த்துக் கொண்டே வெவ்வேறு சைட்களைத் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் எனக் கொள்வோம். அந்த பல site-களில் ஏதாவது ஒன்று, ஸ்பை சைட்" (ஒற்று வேலை) ஆக இருக்கக் கூடும்.

உதாரணமாக கரன்ட் செய்தி ஒன்று பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள்… அன்றைய அரசியல் கிசு கிசு பற்றி…!

அந்தத் தகவல் குறித்த வார்த்தைகளை டைப் செய்து தேடுவீர்கள். அது குறித்த தகவல்களுடன், ஒரு site உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பீர்கள் தகவல்களை…!

இடையே ஃபேஸ்புக் பக்கம் வருவீர்கள். பின் கொஞ்சம் ஆஃபிஸ் வேலை அல்லது வேறெதாவது சைட்.

அதற்குள் அந்த ஸ்பை சைட் தன் வேலையைத் தொடங்கும், பாஸ்வோர்டுடன் உங்களது எந்தப் பக்கமாவது திறந்திருக்கிறதா என நோட்டமிடும். (அதற்கு பாஸ்வோர்ட் கிடைக்காது தான். ஆனால், ஃபேஸ்புக், ஈ-மெயில் போல ஏதோ ஒன்று திறந்திருக்கிறதா என நோட்டமிடும்.)

இப்போது அந்த ‘ஸ்பை சைட்’இன் தலைப்பு உடனே மாறி ஃபேஸ்புக் அல்லது ஈமெயில் என வரும் (உங்களது எந்த பக்கம் ஓபனாகி உள்ளதோ அந்த பக்கத்தின் பெயர் வரும்) ஆனால், அது உங்கள் கவனத்துக்கு வராது.

பல சைட்கள் ஓபனாகி இருக்க எந்த சைட்டின் தலைப்பில் ஃபேஸ்புக்/ஈ-மெயில் என்றிருக்கிறதோ அந்த பக்கத்தை க்ளிக் செய்வீர்கள். (அது ‘ஸ்பை சைட்டாக’ இருக்கலாம்)

அது மறுபடி கேட்கும்…லாக்-இன் செய்யச் சொல்லி…! அவசரத்தில் நாமும் லாக் -இன் செய்ய ஐடி பாஸ்வோர்டை டைப் செய்வோம். முடிந்தது ஜோலி.

இந்த ஐடி பாஸ்வோர்டை அவர்கள் உடனே உபயோகிக்க மாட்டார்கள். அதனால் உங்களுக்கு சந்தேகம் கூட வராது.

* ஒரு ஐந்து நிமிடம், உங்கள் ப்ரபொஃபைல் படத்தைப் போட்டு, உங்கள் பெயரில் அக்கவுன்ட் (ஃபேஸ்புக் போன்ற) ஆரம்பித்து, பின் (உங்கள்) அக்கவுன்டிலிருந்து, தனது அக்கவுன்டுக்கு ‘ஒரு மாதிரி’ டயலாக்குகளை அள்ளிவிட்டு, பின் அந்த இன்பாக்ஸ் மெஸேஜை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து (அந்தப் பக்கத்தை அப்படியே புகைப்படம் போல காப்பி எடுப்பது), பின் அந்த மெஸேஜை ஷேர் பண்ணி.." அவரு (நீங்கள்) இப்படியெல்லாம் அசிங்கமாக பேசறாரு…!" என பொய் சொல்ல முடியும். ஒரு வேளை அந்த மாதிரி பிரச்னை வந்தால், அது பொய் என கண்டுபிடிக்க முடியும் தான். ஆனால், அந்தப் பொய்த் தகவல் நமக்குத் தெரியும் வரை எத்தனை பேருக்குப் பகிரப்பட்டதோ…?

* உங்களுக்கு, இது நீங்களா..?" என்றோ உங்கள் துறை பற்றிய வேலை வாய்ப்புச் செய்திகள்..!" என்றோ உங்களுக்கு ஆசை காட்டும் கேள்விகளுடன் பாப்-அப் வந்தால் அவற்றைத் திறக்க வேண்டாம். அவை உங்கள் நண்பரிடமிருந்து வந்திருந்தாலும்…!

அவை நண்பரிடமிருந்து அவருக்கே தெரியாமல் வந்திருக்கக் கூடும்.

அவற்றைத் திறந்தால், அப்போது முதல் அது ஆக்டிவேட் ஆக ஆரம்பிக்கும். உங்கள் அக்கவுன்டிலிருந்து, செய்திகளைப் படங்களை அனுப்ப ஆரம்பிக்கும். அவை ஒரு ‘மாதிரி’ யானவைகளாகவும் இருக்கக்கூடும். உஷார்!

* ஆன்லைன் செக்யூரிட்டி பற்றி சொன்ன இவை எவையுமே யாரையும் பயப்படுத்த அல்ல…! ரோட்டில் எப்படியெல்லாம் விபத்துக்கு வாய்ப்புள்ளது எனச் சொல்ல மட்டுமே…!

சாலை விதிகளைப் பின்பற்றுங்கள்; ஹெல்மெட் அணியுங்கள்; பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்கிறேன்.

அவ்வளவே…!

முன்பெல்லாம் மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களில் ‘பக்கத்தில் திருடன் இருக்கலாம். ஜாக்கிரதை…’ என போலீஸ் மைக் போட்டு கூவுவார்கள். ஆனால், இப்போது…‘நீ திருட /திருடனாக வாய்ப்பு … இதோ… உன் வீட்டுக்குள்’ எனும் நிலைமை. திருடும் களமே வீட்டினுள். என்ன செய்ய?

ஐரோப்பிய விண்கலம் நாளை பூமியில் விழக்கூடும்: விஞ்ஞானிகள் தகவல்!

 

ஜியோசி எனப்படும் கடல் நீரோட்டத்தை ஆராயும் ஐரோப்பிய செயற்கை கோள் ஒன்று செயல் இழக்க செய்யப்படுகிறது. இன்று அல்லது நாளை அது பூமியில் விழக்கூடும் என விஞானிகள் கருதுகின்றன.

கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கடல் நீரோட்ட ஈர்ப்பு பற்றி ஆயவு செய்ய இது விண்ணில் செலுத்தபப்ட்டது. ஆனால் அக்டோபர் 21ம் தேதி எரிபொருள் பிரச்சனையால் பராமரிப்பு இன்றி சக்தி இழந்தது. சுமார் 80 கிலோமீட்டர் உயரத்தில் இந்த விண்கலம் உடைந்து  160 கி.மீ உயரத்தில் இருந்து வெற்றுப்பாதையில் விழக்கூடும் என ஐரோப்பிய விண்வெளி ஏஜென்ஸி தெரிவிகிறது.

அதோடு இந்த விண்கல துண்டுகள் எந்த நேரத்தில் எந்த இடத்தில் விழும் என கணிக்கமுடியாது என்றும் ஐரோப்பிய விண்வெளி ஆராச்சியாளர் ஒருவர் தெரிவித்தார். மேலும் ஒரு மனிதன் விண்கலம் தாக்கி இறந்தான் என்பது இதற்கு முன் நடந்ததில்லை.  மின்னல் தாகுவதை விட விண்கலம் தாக்குவது 65 ஆயிரம் மடங்கு குறைவு.

1997ம் ஆண்டு துல்சா, ஒக்லஹோமாவில் ஒரு பூங்காவில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது வில்லியம்ஸ் எனபவர் மீது ஒரு உலோக துண்டு விழுந்து தாக்கியது. அப்போது அது டெல்டா ராக்கெட் துண்டு என உறுதி செய்யப்பட்டதாக உள்ளூர் செய்தி தெரிவித்தது.

இந்த சம்பவத்தில் வில்லியம்ஸ் காயம் அடைந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.