Sunday 26 May 2013

இன்னும் சில வாரங்களில் வரப் போகுது ‘ இதய வாட்ச்மேன்’!






               அமெரிக்காவின் பாஸ்டன் சயின்டிஃபிக் நிறுவனம் கண்டுபிடித்திருக்கும் இந்தப் புதிய கருவியின் பெயர் ‘வாட்ச்மேன்’.



               பெரும்பாலும் முறையற்ற இதயத் துடிப்பு பிரச்னை உள்ளவர்களுக்கு ஸ்டிரோக் தாக்கும் அபாயம் உள்ளது;அச்சமயம் ரத்தக்குழாய்களில் ரத்தம் உறைந்துவிடும் ஆபத்தும் உண்டு.








               இதனால் ஆபத்தில் உள்ளவர்கள், எந்த நேரமும் துரத்தும் மரணத்தைத் தவிர்க்க மாத்திரை சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.










                    இதற்கு பதிலாக இதயத்தில் பொருத்திக் கொள்ளும் கருவியாக இதை உருவாக்கியுள்ளனர்.










              முதற்கட்ட பரிசோதனையில், இது பாதுகாப்பானது என்று உறுதியாகிவிட்டது. எனவே இன்னும் சில வாரங்களில் இது இறுதி வடிவம் பெற்று விற்பனைக்கு வரக் கூடும்.












Watchman Device Finally Superior:-



            The Watchman device saved lives and prevented stroke in atrial fibrillation better than warfarin (Coumadin) alone, longer-term results from the PROTECT AF trial showed.

கொட்டிக்கிடக்கிறது யுரேனியம் - புது தகவல்








                கடல் நீரில் இருந்து யுரேனியம் தயாரிக்க முடியும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.




               அணு உற்பத்திக்கு பயன்படுத்தும் பொருட்களில் யுரேனியத்துக்கு முக்கிய பங்கு உள்ளது. 



              யுரேனியம் தாது பூமியில் இருந்து வெட்டி எடுக்கப்படுகிறது.






 
          அவை கடல்நீரில் ஆயிரம் மடங்கு கொட்டிக்கிடப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்




           எனவே, அவற்றை பிரித்தெடுக்கும் ஆய்வில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர்.





 
          இந்நிலையில் அமெரிக்காவின் சேப்பல் ஹில்லில் உள்ள வடக்கு கரோலினா பல்கலைக் கழகத்தின் ரசாயன துறை பேராசிரியர் வென்பின்லின் தலைமையிலான விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.









 
           இந்த ஆய்வில் கடல் நீரில் இருந்து யுரேனியம் பிரித்தெடுக்கப்பட்டது. ஆய்வகத்தில் வைத்து நவீன தொழில் நுட்ப முறையில் இந்த பரிசோதனை நடத்தப்பட்டது.

உலகத்தின் மிக லேசான பொருள்( கார்பன் ஏரோஜெல் ) இதுதான்!! பார்க்க வேண்டியது.






                 சீன விஞ்ஞானிகள் உலகின் மிக லேசான பொருளை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். கார்பன் ஏரோ ஜெல் என அழைக்கப்படும் இப்பொருள் காற்றின் எடையை விட 6ல் ஒரு பங்கே எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.














                சீனாவின் ஜி ஜியாங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உலகின் மிக லேசான பொருளை உருவாக்கியுள்ளனர். காற்றின் எடையில் 6ல் ஒரு பங்கு எடையே கொண்ட இந்த ஏரோஜெல் எனப்படும் பொருள் 0.16 மி.கி/கன செ.மீ., எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 












                இதற்கு முன்பாக மிகவும் எடை கொண்ட பொருளாக கருதப்பட்ட கிராபைட் ஏரோஜெல் எடையை விட கார்பன் ஏரோ ஜெல் மிகவும் எடை குறைவானதாகும்.








                முன்னதாக, கடந்த ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கிராபைட் ஏரோஜெல்லை உருவாக்கினர். இதன் எடை 0.18 மி.கி/கன செ.மீ., ஆகும். இத்தகைய ஏரோஜெல்கள், செமி சாலிட் ஜெல்லை காயவைத்து உருவாக்கப்படுகின்றன. இதன்காரணமாக இவற்றின் உட்பகுதிகள் காற்றால் நிரம்பியிருப்பதால், இவை மிகவும் எடை குறைந்ததாக உள்ளன. 









                 கார்பன் ஏரோஜெல்கள் மிகவும் நீட்சித்தன்மை கொண்டவை. கார்பன் ஏரோஜெல்லை அழுத்தும் போது அதற்கு மீளும் தன்மை உண்டு. எண்ணெய் உறிஞ்சும் தன்மை மிக அதிகம் கொண்ட பொருள் கார்பன் ஏரோஜெல். 







                  தற்சமயம் உபயோகத்தில் இருக்கும் எண்ணெய் உறிஞ்சும் கொண்ட பொருட்கள் தனது எடையில் 10 மடங்கு அளவு உறிஞ்சும் தன்மை கொண்டவை.







                    ஆனால் கார்பன் ஏரோஜெல் தனது எடையில் 900 மடங்கு அதிக அளவு எண்ணெய் உறிஞ்சும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 



                        இந்த பண்பு காரணமாக, மாசு கட்டுப்பாட்டில் இந்த பொருள் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.