Friday 6 September 2013

‘அம்மா’ மினரல் குடிநீர் 15–ந்தேதி அறிமுகம்!


மக்களின் அத்தியாவசிய தேவைகளில் முக்கியமானது குடிநீர். பல இடங்களில் குடிநீர் சுத்தமாக இல்லாத காரணத்தால் ‘மினரல் வாட்டர்’ வாங்கும் பழக்கம் மக்களிடையே அதிகரித்து விட்டது.கடைகளில் 1 லிட்டர் மினரல் வாட்டர் ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்படுகிறது. பாக்கெட் மினரல் வாட்டர் ரூ.1 முதல் 1.50 வரை புழக்கத்தில் உள்ளது.
ரெயில்களில் 1 லிட்டர் மினரல் வாட்டர் (ரெயில் நீர்) ரூ.15–க்கு விற்பனை செய்யப்படுகிறது.


மினரல் வாட்டர் விலை அதிகமாக இருப்பதால் குறைந்த விலையில் தரமான குடிநீர் வழங்க முதல்– அமைச்சர் ஜெயலலிதா திட்டமிட்டார்.இதையொட்டி ஏழை எளிய மக்கள் நலனை கருத்தில் கொண்டு குறைந்த விலையில் பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ‘அம்மா மினரல் வாட்டர்’ உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த ஜூன் மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.


IND1674A.JPG

 


இதை செயல்படுத்தும் வகையில், முதற்கட்டமாக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தினமும் 3 லட்சம் லிட்டர் மினரல் வாட்டர் குடிநீர் தயாரிக்கும் வகையில் ‘அம்மா மினரல் வாட்டர் உற்பத்தி நிலையம் அமைக்கவும், இங்கு உற்பத்தி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டு 1 லிட்டர் பாட்டில் குடிநீர் 10 ரூபாய்க்கு விற்கப்படும் என்றும் இவை அரசு பஸ்களிலும், சென்னையில் உள்ள பஸ் நிலையங்களிலும், மாவட்டங்களில் உள்ள புறநகர் பஸ் நிலையங்களிலும் விற்பனை செய்யப்படும் என்றும் அறிவித்தார்.

இந்த ‘அம்மா மினரல் வாட்டர்’ உற்பத்தி நிலையம் பேரறிஞர் அண்ணா பிறந்த தினமான வருகிற 15–ந்தேதி துவங்கப்பட்டு அன்றைய தினமே மினரல் வாட்டர் விற்பனையும் நடை முறைக்கு வரும் என்றும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

இதையொட்டி கும்மிடிப்பூண்டியில் அம்மா மினரல் வாட்டர் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மினரல் வாட்டர் தயாரிப்பதற்கு தேவையான இயந்திரங்கள் சாலை போக்குவரத்து நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்பட்டு பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

வருகிற 15–ந்தேதி முதல்– அமைச்சர் ஜெயலலிதா இந்த திட்டத்தை தொடங்கி வைத்து மினரல் வாட்டர் விற்பனையை அறிமுகம் செய்கிறார்.எனவே 15–ந்தேதியில் இருந்து பஸ் நிலையங்கள், ஓட்டல்கள், அரசு விரைவு பஸ்கள் நீண்ட தூர பஸ்களில் ‘அம்மா மினரல் வாட்டர்’ 1 லிட்டர் பாட்டில் 10 ரூபாய்க்கு வழங்கப்படும். இந்த திட்டம் பஸ் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.அடுத்த கட்டமாக மேலும் 9 ஊர்களில் அம்மா மினரல் வாட்டர் உற்பத்தி நிலையங்கள் அமைக்கவும் சாலை போக்குவரத்து நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இனி வருமான வரி வங்கிகளில் செலுத்தலாம்!

கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க வங்கிகளில் வருமான வரி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.பெரும்பாலான வங்கிகள் இணையதளம் மூலமாகவும் வரி செலுத்தும் வசதிகளை அளிக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது.


sep 7 -income-tax-department


இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் ஜெ.சதக்கத்துல்லாஹ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,”செப்டம்பர் மாத கடைசியில், வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு சென்னையில் உள்ள தரமதிப்பீடு உடைய வங்கிகளில் வருமான வரி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


அதன்படி, பாரத ஸ்டேட் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் பாடியாலா, அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி, பாங்க் ஆப் பரோடா, பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் மஹாராஷ்டிரா, கனரா வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, கார்ப்பரேஷன் வங்கி, தேனா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, சின்டிகேட் வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, யூகோ வங்கி, விஜயா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஐ.டீ.பி.ஐ. வங்கி, எச்.டி.எப்.சி. வங்கி ஆகிய வங்கிகளில் செலுத்தலாம்.”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் சில உணவுகளைக் பார்ப்போமா?


பொதுவாக உடல் ஆரோக்கியமானது இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதில் தான் உள்ளன. ஏனெனில் உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கு இரத்தமானதுதான் மிகவும் இன்றியமையாதது.

எனவே அத்தகைய இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், உடலில் நச்சுக்களின் அளவு அதிகரித்து, உடலின் உறுப்புக்கள் மெதுவாக பாதிக்கப்படும். இவ்வாறு அதிகப்படியான நச்சுக்கள் இரத்தத்தில் இருந்தால் தான், அலர்ஜி, நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு, தொடர்ச்சியான தலை வலி, சோர்வு போன்றவை ஏற்படும்.

sep 7 - kealth veg food

அதுமட்டுமின்றி, அசுத்த இரத்தமானது உடலில் இருந்தால், உடலில் மட்டுமின்றி, சருமத்திலும் பல பிரச்சனைகள் ஏற்படும். அதில் பிம்பிள், முகப்பரு, கருமைப் படிதல், பொலிவிழந்த சருமம் மற்றும் வறட்சியான சருமம் போன்றவை ஏற்படும்.


 எனவே தான், கடைகளில் இரத்தத்தை சுத்திகரிக்கும் பல்வேறு மருந்துகள் உள்ளன. ஆனால் இந்த மருந்துகளால் எந்த நன்மையும் கிடைப்பதில்லை. ஆகவே இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கு கண்ட கண்ட மருந்துகளை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, இரத்தத்தை சுத்தப்படுத்தும் உணவுகளை சாப்பிட்டு வந்தால், இரத்தம் சுத்தமாவதோடு, உடலில் இரத்தத்தை சுத்திகரிக்கும்
கல்லீரல், சிறுநீரகம் மற்றும் நிணநீர் நாளங்கள் நன்கு செயல்பட்டு, இரத்தத்தை சுத்தப்படுத்தி, உடலில் இரத்தத்தை சீராக ஓட வைக்கும்.


இங்கு இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் சில உணவுகளைக் பார்ப்போம். அதைப் படித்து, அவற்றை உணவில் சேர்த்து வந்தால், இரத்தம் சுத்தமாவதோடு, சருமமும் நன்கு அழகாக மின்னும் என்று உறுதிபட கூறுகிறார்கள்.


அதாவது வாரம் 2-3 முறை ஒரு டம்ளர் முட்டைகோஸ் ஜூஸை குடித்து வந்தால், உடலில் உள்ள இரத்தமானது சுத்தமாகும்.

பச்சை இலைக் காய்கறிகளில் ஒன்றான காலிஃப்ளவரில் குளோரோஃபில் என்னும் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் பொருள் அதிகம் உள்ளது. ஆகவே இந்த உணவுப்பொருளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.


கசப்புத் தன்மையுடைய பாகற்காய் அதிகம் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, சர்க்கரையின் அளவையும் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும். அதிலும், பாகற்காயை வேக வைத்து சாப்பிட்டால் தான், அதன் முழு நன்மையைப் பெற முடியும்.


வாரத்திற்கு 2 முறை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வேப்பிலையை தண்ணீரில் போட்டு கொதிக்கவிட்டு, அந்த நீரை பருகி வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் மட்டுமின்றி, கிருமிகளும் அழிந்துவிடும்.
பூண்டு ஒரு சிறந்த ஆன்டி-பயாடிக் மட்டுமின்றி, இரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மையும் கொண்டது. மேலும் இது உடலில் தங்கியுள்ள நச்சுகளை மட்டுமின்றி, தேவையற்ற கொழுப்புக்களையும் கரைத்துவிடும்.


கேரட் கேரட் சாப்பிட்டால், சருமம் பொலிவாக இருக்கும் என்று சொல்வார்களே, அது ஏன் என்று தெரியுமா? ஏனெனில் கேரட் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும் என்பதால் தான். ஆகவே தினமும் காலையில் வெறும் வயிற்றில் கேரட் ஜூஸ் குடித்து, ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருங்கள்.


எலுமிச்சையில் உள்ள புளிப்புத்தன்மை இரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் உள்ள அளவையும் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும். மேலும் இது உடல் எடையை குறைக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்.


பழங்களில் அன்னாசிப் பழம் இரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. ஆகவே அன்னாசியை டயட்டில் சேர்த்து, இரத்தத்தை மட்டுமின்றி, சிறுநீரகத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.


இஞ்சி டீயை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தாலும், இரத்தம் சுத்தமாக இருக்கும்.

சிறுநீரகத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் சுத்தப்படுத்தும் தன்மை பார்ஸ்லியில் அதிகம் உள்ளது. மேலும் இது இரத்தத்தை சுத்தப்படுத்தும் வைத்தியங்களில் மிகவும் பிரபலமான பொருளும் கூட.
நெல்லிக்காயிலும் இரத்தத்தை சுத்திகரிக்கும் பொருள் அதிகம் நிரம்பியுள்ளது. ஆகவே தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு, இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரித்துக் கொள்ளுங்கள்.

தகவல் சுரங்கம் - திலகரின் "விநாயகர் சதுர்த்தி'


சமய விழாவான விநாயக சதுர்த்தியை, சமூக விழாவாக மாற்றியவர் பாலகங்காதர திலகர். 


முதன்முதலில் புனேயில் தான் விநாயகர் சதுர்த்தி, சமூக விழாவாக கொண்டாடப்படும் வழக்கம் தோன்றியது. 

பின் இந்த வழக்கம் மும்பைக்கு பரவியது. சிவாஜியின் சாம்ராஜ்யத்தில் விநாயகர் சதுர்த்தி, அரச விழாவாக கொண்டாடப்பட்டது. 


பேஷ்வாக்களின் குல தெய்வமாக விநாயகர் இருந்தார். பேஷ்வாக்களின் வீழ்ச்சிக்குப் பிறகு விநாயகர் சதுர்த்தி, வீட்டிற்குள் மட்டும் கொண்டாடப்படும் பண்டிகையாக மாறி விட்டது. 


பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், திலகர் இதனை மீண்டும் சமூக விழாவாக மாற்றினார். ஜாதி வேறுபாடுகளை களைய இந்த விழா உதவும் என எண்ணினார். 

பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாக மாற்றினார். 

விநாயகர் சதுர்த்தியை போன்றே, சிவாஜி ஜெயந்தியையும் மகாராஷ்டிராவில் சமூகவிழாவாக திலகர் மாற்றினார்.

இலவச மொபைல் போன், கம்ப்யூட்டர்: மத்திய அரசு பரிசீலனை!


 மத்தியில் மீண்டும் ஆட்சி‌யை கைப்பற்றும் விதத்தில் காங்கிரஸ் இலவச மொபைல் போன் மற்றும் இலவச கம்ப்யூட்டர் வழங்க பரிசீலனை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்காக 10 ஆயிரம் கோடி செலவு செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஆட்சி்யை கைப்பற்ற முயற்சி:


ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த 2004-ம் ஆண்டு முதல் தொடர்ந்து இரண்டு முறை மத்தியில் ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையி்ல் மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றும்நோக்கில் இலவச பொருட்களை விநியோகம் ‌செய்து வாக்காளர்களை கவரும் நடவடிக்கையி்ல் ஈடுபட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2004-ம் ஆண்டில் மத்தியில் பதவியேற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2009-ம் ஆண்டு முடிவுக்கு வரும் நிலையி்ல் அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் மொத்த கடன் அளவான 50 ஆயிரம் கோடி‌யை தள்ளுபடி செய்தார். இதன் பயனாக மீண்டும் 2009-ம் ஆண்டில் அதே ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீண்டும் பதவியேற்றது. மீண்டும் ஆட்சியை கைப்பற்றியதற்கு கடன் தள்ளுபடி திட்டமும் ஒரு காரணியாக கூறப்பட்டது.
இலவச மொபைல் தி்ட்டம்:


தற்போதைய அரசின் பதவி காலம் வரும் 2014-ம் ஆண்டு மே மாதம் முடிவடைகிறது. இருப்பினும் முன்னதாகவே தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பெட்ரோல் டீசல் விலை உயர்வு, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு, நிலக்கரிசுரங்க ஊழல் வழக்கு என பல்வேறு பிரச்னைகள் காரணமாக மீண்டும் ஆட்சி‌யை கைப்பற்ற முடியுமா என்ற அச்ச நிலையி்ல் காங்கிரஸ் உள்ளது.
இதனையடுத்து மீண்டும் ஆட்சியை பி டிக்க அதிரடியாக ரூ 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இலவச பொருட்கள் வழங்க பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கிராமப்புறத்தில் வசிப்பவர்களுக்கு இலவச மொபைல் போன்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஆண்டு ஒன்றிற்கு ரூ.360 மதிப்பு கொண்ட ரீசார்ஜ் உடன், 30 நிமிடம் டாக்டைம், 30 இலவச எஸ்.எம்.எஸ்., 30 நிமிடம் இண்டர் நெட் பயன்பாட்டுடன் கூடிய வகையில் இலவச மொபைல் போன்களை வழங்க முடி வு செய்துள்ளது. இதற்காக 4 ஆயிரத்து 850 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் பயின்று வரும் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வகையில் ( 2 ஆயிரத்து 983 கோடி ரூபாய் செலவி்ல் 60 சதவீத ஊரகப்பகுதிகளை சேர்ந்த மாணவர்களும், ஆயிரத்து 989 கோடி செலவி்ல் 40 சதவீத கிராம புற மாணவர்கள் பயன்படத்தக்க வகையி்ல) கம்ப்யூட்டர்களை இலவசமாக வழங்கவும் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மீ்ண்டும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் அரசு திட்டமிட்டு்ள்ளது. இத்திட்டத்தை நடைமுறை படுத்துவதற்கான சாத்தியக்கூறுகைளை மத்திய அமைச்சரவைக்குழு தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் பதவிநீக்கம்: உடனடியாக அமலுக்கு வருகிறது சுப்ரீம் கோர்ட் உத்தரவு!



  குறைந்தபட்சம் 2 வருடம் தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ., மற்றும் எம்.எல்.சி.,க்களின் பதவிகள் உடனடியாக பறிக்கப்பட வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு உடனடியாக அமலுக்கு வர உள்ளது. இதற்கான உத்தரவை சுப்ரீம் கோர்ட் நேற்று பிறப்பித்தது. தண்டனை பெற்ற உறுப்பினர்களை மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தால் பாதுகாக்கப்பட முடியாது எனவும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவு :


தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ., மற்றும் எம்.எல்.சி.,க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு அவர்களின் பதவிகள் பறிக்கப்படும் எனவும், சிறையில் இருக்கும் உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் ஜூலை 10ம் தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு குரல் எழுப்பின. இதனால் சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசு சார்பில் கோரிக்கை விடப்பட்டது. இதற்கும் சுப்ரீம் கோர்ட் மறுத்ததால், தீர்ப்பிற்கு விலக்கு அளிக்கும் மசோதா நேற்று பார்லி.,யில் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் இந்த மசோதா சட்டமாக மாற, ஜனாதிபதி ஒப்புதல் உள்ளிட்ட பல நடைமுறைகள் உள்ளது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பிற்கு எதிரான மசோதா சட்டமாகும் வரை, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பே நடைமுறையில் இருக்கும்.

பார்லி., சட்ட மசோதா :


பார்லி.,யில் நேற்று நிறைவேற்றப்பட்ட மசோதாவின்படி குற்றம்சாட்டப்பட்ட உறுப்பினர்களும் தேர்தலில் போட்டியிட முடியும். உறுப்பினர்கள், 2 அல்லது அதற்கு மேல் தண்டனை பெற்றால் மட்டுமே அவர்களிடம் இருந்து பதவி பறிக்கப்படும் எனவும், 6 ஆண்டுகள் வரை தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும் எனவும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பதவி நீக்கம் செய்யப்படும் உறுப்பினர்களுக்கு, மீதமுள்ள பதவி காலத்திற்கான இழப்பீடு ஏதும் வழங்கப்படாத எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சிகள் குழப்பம் :


நேற்று மசோதா நிறைவேற்றப்பட்ட போது கடைசி நிமிடத்தி‌லேயே பா.ஜ., ஆதரவு அளித்தது. மசோதா குறித்த விவாதம் நடைபெற்ற போது பா.ஜ., தலைவர் அருண் ஜெட்லி, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது சரியானது அல்ல என தெரிவித்துள்ளார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அரசு தீவிர காட்டி வருவது ஏன் என பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் சந்தேகத்தை கிளப்பின. காமன்வெல்த், 2ஜி, நிலக்கரி உள்ளிட்ட ஊழல் விவரகாங்களில் இருந்து கட்சியையும், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு எதிரான ஊழல்களை மறைப்பதற்காகவும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. 

கேரள கோயில்களில் உள்ள தங்கம் பற்றி விபரம் கேட்கிறது ரிசர்வ் வங்கி!


திருவனந்தபுரம் : கேரள கோயில்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தங்கம் குறித்த விபரங்களை அளிக்குமாறு மத்திய ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக கேரள கோயில் கழகத்திற்கு ரிசர்வ் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

 
ரிசர்வ் வங்கி அனுப்பி உள்ள கடிதம் குறித்து குருவாயூர் தேவஸ்தான் போர்டு தலைமை அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், ரிசர்வ் வங்கியின் இந்த வேண்டுகோள் குறித்த தகவல் கோயில் மேலாண்மை குழுவின் பார்வைக்கு அனுப்பி வைத்துள்ளோம்; கோயில்களின் விதிமுறைகளின் அடிப்படையில் மேலாண்மை குழு தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அதிகாரி தெரிவித்துள்ளார். 
 


கேரளாவில் உள்ள பெரும்பாலான கோயில்கள் 5 விதமான தேவஸம் போர்டுகளின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இவைகளில் திருவாங்கூர் தேவஸம் போர்டு தான் பெரியது. கேரளாவின் பிரபலமான வழிபாட்டு ஸ்தலமான சபரிமலை, திருவாங்கூர் தேவஸம் போர்டின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. ரிசர்வ் வங்கி அனுப்பிய கடிதத்தை உறுதி செய்த ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குனர் சலிம் கங்காதரன், புள்ளி விபர சேகரிப்பு அடிப்படையிலேயே இந்த தகவல் கேட்கப்பட்டுள்ளதாகவும், கேரள கோயில்களில் உள்ள தங்கத்தை வாங்கும் திட்டம் ரிசர்வ் வங்கிக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளார். 

 திருவனந்தபுரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலில் உள்ள 6 ரகசிய அறைகளில் உள்ள பொக்கிஷங்களை மதிப்பிட்டு அறிக்கை சம்ர்ப்பிக்க 2011ம் ஆண்ட ஜூலை மாதம் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதன்படி 5 அறைகள் திறக்கப்பட்டு அவற்றின் கருவூலத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த விலைமதிப்பற்ற நகைகளை மதிப்பீடு செய்தனர். இருப்பினும் பி அறை இதுவரை திறக்கப்படவில்லை. 5 அறைகளில் உள்ள நகைகளின் மதிப்பு ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் என மதிப்பிடப்பட்டது. பத்மநாபசுவாமி கோயில் கருவூலத்தை போன்ற மற்ற கோயில்களில் எவ்வளவு தங்கம் உள்ளது என்பதை கண்க்கிடவே ரிசர்வ் வங்கி, இந்த தகவலை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நோக்கியா லூமியா 925 இந்தியாவில் விற்பனை!


 


தன்னுடைய புதிய அறிமுகமான, லூமியா 925 மொபைல் ஸ்மார்ட் போனை, இந்தியாவில், நோக்கியா விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன் அதிக பட்ச விற்பனை விலை ரூ. 34,169 என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில் இது அறிவிக்கப்பட்டு, விற்பனைக்கான முன் பதிவுகள் பெறப்பட்டன. இப்போது விற்பனை மையங்களில் இது கிடைக்கிறது. இதன் சிறப்பம்சங்கள்;

1. 4.5 அங்குல அகலத் திரை. சூப்பர் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன்.


2. போன் மேலாக மெட்டல் கவர்.


3. டூயல் கோர் குவால்காம் ப்ராசசர் 1.5 கிகா ஹெர்ட்ஸ் வேகம்.


4. விண்டோஸ் போன் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம்.


5. ஆப்டிகல் இமேஜ் திறனுடன் கூடிய 8.7 எம்.பி. கேமரா. எல்.இ.டி. ப்ளாஷ். வீடியோ பதிவு நொடிக்கு 30 பிரேம்.


6. 1.2 எம்.பி. திறனுடன் முன்புறக் கேமரா,


7. ஐ.எச்.எப். ஸ்பீக்கர், இரண்டு மைக், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் எப்.எம். ரேடியோ.


8. புளுடூத் மற்றும் வை-பி இணைப்பு.


9. 2000 mAh திறன் கொண்ட பேட்டரி, வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட்டுடன்.


10. ராம் மெமரி 1 ஜிபி. ஸ்டோரேஜ் மெமரி 16 ஜிபி.


வெள்ளை, கிரே மற்றும் கருப்பு வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது.
மேலே அறிவிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் சற்றுக் குறைவான விலையில், சில இணைய தளங்கள் இந்த மொபைல் போனை விற்பனை செய்வதாகக் கூறப்படுகிறது.

பட்ஜெட் விலை மொபைல்கள்!


பட்ஜெட் விலையிட்டு, புதியதாய் வந்த மொபைல் போன்களைப் பார்க்கையில், இரண்டு மொபைல் போன்கள் கண்களில் தட்டுப்பட்டன. இவை விற்பனைக்கு வந்து சில மாதங்கள் ஆனாலும், தற்போது பரவலாக, விருப்பப்பட்டு வாங்கப்படுகின்றன. அவை,

1. நோக்கியா 109


அதிக பட்ச விலை ரூ.1,899 என விலையிடப்பட்டாலும், சில கடைகளில், விலை குறைவாகவும் கிடைக்கிறது. இரண்டு பேண்ட் அலைவரிசைகளில் இயங்கும் இந்த மொபைல் போனில் ஒரு சிம் மட்டுமே பயன்படுத்தலாம். இதன் பரிமாணம் 110 x 46 x 14.8 மிமீ ஆகும். எடை 77 கிராம். பார் டைப் வடிவில் உள்ள இந்த மொபைல் போனில் ஆல்பா நியுமெரிக் எனப்படும் வழக்கமான கீ போர்ட் தரப்பட்டுள்ளது. இதன் திரையில் 1.8 அங்குல டிஸ்பிளே கிடைக்கிறது. லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தக்கூடிய மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், ராம் மெமரி 16 எம்.பி, சிஸ்டம் மெமரி 64 எம்.பி. உள்ளது. கேமரா இல்லை. எம்.பி. 3 பிளேயர் இயங்குகிறது. எப்.எம். ரேடியோ பதிவு செய்திடும் வசதியுடன் கிடைக்கிறது.
800 mAh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி தரப்பட்டுள்ளது. 7.8 மணி நேரம் வரை தொடர்ந்து பேசலாம். ஒருமுறை சார்ஜ் செய்தால், 790 மணி நேரம் தங்குகிறது.


2. ஸ்பைஸ் எம் 5030


அதிக பட்ச விலை ரூ. 1,149 என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு சிம் பயன்பாடு, இரண்டு பேண்ட் அலைவரிசை செயல்பாடு, பார் டைப் வடிவமைப்பு, 1.8 அங்குல திரை டிஸ்பிளே, லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 4 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், புளுடூத், யு.எஸ்.பி. போர்ட், 0.3 எம்பி திறன் கொண்ட கேமரா, வீடியோ பதிவு, எஸ்.எம்.எஸ். வசதி, 1,600 mAh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி என இதன் சிறப்புக் கூறுகள் உள்ளன. பட்ஜெட் விலையில் போன் தேடுபவர்களுக்கு, இரண்டு சிம் இயக்கம் கொண்ட இந்த போன் உகந்ததாக உள்ளது.

ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு எத்தனை கி.மீ தூரம் எளிதாக கண்டுபிடிக்கலாம்.

வெளி உலகம் தெரியாமல் கணினி மட்டுமே உலகம் என்று எண்ணும் நமக்கு வெளி உலக தகவல்களை அள்ளி கொடுப்பதற்காக பல தளங்கள் உள்ளது அந்த வகையில் இன்று கூகிள் உதவியுடன் ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு எத்தனை கி.மீ தூரம் என்று எளிதாக கண்டுபிடிக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

வெளி ஊருக்கு செல்ல வேண்டி இருந்தால் கூகிள் மேப் உதவியுடன் இடம் மற்றும் செல்ல வேண்டிய இடங்களை எளிதாக கண்டுபிடிபோம் அதே வகையில் செல்லும் இடத்தின் தூரத்தை கி.மீ மற்றும் மைல் அளவில் கொடுக்க ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.distancefromto.net
இத்தளத்திற்கு சென்று From மற்றும் To என்பதில் நாம் எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்பதை கொடுத்து Measure Distance என்ற பொத்தானை சொடுக்கினால் போதும் உடனடியாக வரும் திரையில் நமக்கு இரண்டு ஊருக்கும் எத்தனை கி.மீ என்பதை துல்லியமாகவும் எப்படி செல்ல வேண்டும் என்பதற்கான மேப்-ஐயும் காட்டுகிறது. கூகிள் மேப்-ல் இதைவிட சிறப்பான வசதிகள் இருக்கும் போது நாம் ஏன் இந்தத் தளத்தை பயன்படுத்த வேண்டும் என்றால் கூகிள் மேப் பக்கம் திறக்க எடுத்துக்கொள்ளும் கால நேரத்தை விட இது வேகமாக இருக்கும்.ஓட்டுனர்கள் எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்றாலும் எத்தனை கி.மீ தூரம் என்பதை கூகிள் உதவியுடன் கண்டுபிடிக்க உதவும் இத்தளம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
 

அறிந்துகொள்வோம்!


விஷ உயிரினங்கள் கடித்து விட்டதா...?!

அதற்கான முதல் உதவி:

மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் மட்டுமே, கீழ்க்கண்ட அவசர மருத்துவத்தை பின்பற்றவும்.

பின்னர் மருத்துவர் ஆலோசனை அவசியம்.

கண்ணாடி விரியன்:- பாகல் இலைச்சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுக்கவும்.

நல்ல பாம்பு:- வாழைப்பட்டைகளைப் பாய் போல் பரப்பி படுக்க வைத்து, வாழைப்பட்டைச் சாறு உட்கொள்ளச் செய்க.

தேள்:- கொட்டிய இடத்தில் வெங்காயத்தையும் சுண்ணாம்பையும் ஒன்றாகக் கலந்து தேய்க்கவும்.

வண்டு:- கார வெற்றிலை 2 எடுத்து, 8 மிளகு சேர்த்து உண்க. சாரத்தை விழுங்குக. தெரியாத பூச்சுக்கடிக்கும் இம்மருந்தையே பயன்படுத்துவர்.

சிலந்தி:- ஆடாதொடை இலை, பச்சை மஞ்சள், மிளகு சேர்த்து அரைத்து கடிவாயில் கட்டவும்.

வெறிநாய்:- மஞ்சளையும் பிரண்டையையும் சம அளவாக எடுத்து மைபோல் வைத்து நல்லெண்ணெயில் வதக்கி கடிபட்ட இடத்தில் கட்டவும்.

எலி:- வெள்ளெருக்கம் பாலைத் தடவினால் அந்த இடம் புண்ணாகிவிடும். பின்னர் ஆற்றிவிட விஷம் நீங்கும். நாய்க்கடிக்கும் இது உகந்தது.

பூனை:- தூய்மையாக்கிய குப்பமேனி வேரை அம்மியில் வைத்து, பசும்பால் விட்டு வெண்ணெய் பதமாக அரைத்தெடுத்து காய்ச்சின பசும்பாலில் கரைத்துப் பருகுக. ஒரு வாரம் காலை மாலை பருகுக.

பூரான்:- பஞ்சை மண்ணெண்ணெயில் நனைத்துக் கடிபட்ட இடத்தில் பரபரவென்று தேய்க்கவும். நெருப்புப் பக்கம் போகக்கூடாது.

நட்டுவாக்காலி:- கொப்பரை அல்லது முற்றிய தேங்காயை மென்று விழுங்கவும். குழந்தையாயின் தேங்காய்ப்பாலைப் பிழிந்து தரவும்.

இது அவசர உதவி மட்டுமே பின் வைத்தியரை நாடவும்.
விஷ உயிரினங்கள் கடித்து விட்டதா...?!  அதற்கான முதல் உதவி:  மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் மட்டுமே, கீழ்க்கண்ட அவசர மருத்துவத்தை பின்பற்றவும்.  பின்னர் மருத்துவர் ஆலோசனை அவசியம்.  கண்ணாடி விரியன்:- பாகல் இலைச்சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுக்கவும்.  நல்ல பாம்பு:- வாழைப்பட்டைகளைப் பாய் போல் பரப்பி படுக்க வைத்து, வாழைப்பட்டைச் சாறு உட்கொள்ளச் செய்க.  தேள்:- கொட்டிய இடத்தில் வெங்காயத்தையும் சுண்ணாம்பையும் ஒன்றாகக் கலந்து தேய்க்கவும்.  வண்டு:- கார வெற்றிலை 2 எடுத்து, 8 மிளகு சேர்த்து உண்க. சாரத்தை விழுங்குக. தெரியாத பூச்சுக்கடிக்கும் இம்மருந்தையே பயன்படுத்துவர்.  சிலந்தி:- ஆடாதொடை இலை, பச்சை மஞ்சள், மிளகு சேர்த்து அரைத்து கடிவாயில் கட்டவும்.  வெறிநாய்:- மஞ்சளையும் பிரண்டையையும் சம அளவாக எடுத்து மைபோல் வைத்து நல்லெண்ணெயில் வதக்கி கடிபட்ட இடத்தில் கட்டவும்.  எலி:- வெள்ளெருக்கம் பாலைத் தடவினால் அந்த இடம் புண்ணாகிவிடும். பின்னர் ஆற்றிவிட விஷம் நீங்கும். நாய்க்கடிக்கும் இது உகந்தது.  பூனை:- தூய்மையாக்கிய குப்பமேனி வேரை அம்மியில் வைத்து, பசும்பால் விட்டு வெண்ணெய் பதமாக அரைத்தெடுத்து காய்ச்சின பசும்பாலில் கரைத்துப் பருகுக. ஒரு வாரம் காலை மாலை பருகுக.  பூரான்:- பஞ்சை மண்ணெண்ணெயில் நனைத்துக் கடிபட்ட இடத்தில் பரபரவென்று தேய்க்கவும். நெருப்புப் பக்கம் போகக்கூடாது.  நட்டுவாக்காலி:- கொப்பரை அல்லது முற்றிய தேங்காயை மென்று விழுங்கவும். குழந்தையாயின் தேங்காய்ப்பாலைப் பிழிந்து தரவும்.  இது அவசர உதவி மட்டுமே பின் வைத்தியரை நாடவும்.

கணினியை பயன்படுத்தும் போதெல்லாம் மேல் வரிசையில் உள்ள Function Key



நாம் கணினியை பயன்படுத்தும் போதெல்லாம் மேல் வரிசையில் உள்ள Function Key-க்களை பார்த்து இருப்போம். நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்று F5. மற்ற பதினோரும் கூட மிக அதிகமான பயன்களை தருகின்றனர். அவற்றைப் பற்றி பார்க்கலாம்.

F1
இது பெரும்பாலும் எல்லா ப்ரோக்ராம்களிலும் Help Screen ஐ ஓபன் செய்யப் பயன்படுகிறது. CMOS Setup இலும் பயன்படுகிறது.
Windows Key+ F1 Help Screen ஓபன் செய்ய.

F2
இது Highlight செய்யபட்ட file or folder or Icon க்கு Rename செய்யப் பயன்படுகிறது. CMOS Setup இலும் பயன்படுகிறது. Boot மெனுவுக்கு செல்ல

Microsoft Word இல் இதன் பயன்கள்:
Alt + Ctrl + F2 --> open a new document in Microsoft Word.
Ctrl + F2--> display the print preview window in Microsoft Word.

F3
இது நிறைய ப்ரோக்ராம்களில் Search option ஓபன் செய்ய பயன்படுகிறது. MS-DOS இல் கடைசி வரியை Repeat செய்ய பயன்படுகிறது. MS WORD இல் upper case இல் இருந்து lower case க்கு வார்த்தை முழுவதையும் மாற்ற பயன்படுகிறது.

F4
Find window ஓபன் செய்ய(check in the My Computer ) கடைசியாக நடந்த Action ஐ Repeat செய்ய பயன்படுகிறது.(உதாரணம் MS WORD இல் ஒரு line ஐ தொடர்ந்து Paste செய்ய இது எளிதான வழி.)
Alt+F4 will Close all Programs.
Ctrl+ F4 will close current Program.

F5
Reload or Refresh
Open the find, replace, and go to window in Microsoft Word
PowerPoint இல் Slide Show ஸ்டார்ட் செய்ய.

F6
cursor ஐ address bar க்கு மாற்றும். (IE, Mozilla)
Ctrl + Shift + F6 இது புதிய MS WORD Document ஐ ஓபன் செய்யும்.

F7
MS இல் Spell Check & Grammar Check செய்ய பயன்படும். (Word, Outlook,etc ) Mozilla வில் Caret Browsing ஐ ON செய்ய பயன்படும்.

F8
விண்டோஸ் ஸ்டார்ட் ஆகும் போது நாம் Safe Mode Access செய்ய இது பயன்படும்


F9
Quark 5.0 வில் Measurement toolbar ஓபன் செய்ய பயன்படுவதாக உள்ளது.

F10
இது MS இல் MenuBar ஓபன் செய்ய பயன்படுகிறது. (MS WORD இல் முயற்சி செய்யவும்.)
Shift+F10 - Right Click ஆக செயல்படும்.

F11
இன்டெர்நெட் பிரவுசர்களில் Full Screen கொண்டுவர பயன்படும். nகணினி திரையை முழு ஸ்க்ரீன்க்கு கொண்டு வரவும் பயன்படும்.

F12
MS Word இல் save as menu வை ஓபன் செய்ய பயன்படும்.
Shift+F12 will Save MS Word
Ctrl+Shift+F12--MS Word print செய்ய பயன்படும்.
நாம் கணினியை பயன்படுத்தும் போதெல்லாம் மேல் வரிசையில் உள்ள Function Key-க்களை பார்த்து இருப்போம். நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்று F5. மற்ற பதினோரும் கூட மிக அதிகமான பயன்களை தருகின்றனர். அவற்றைப் பற்றி பார்க்கலாம்.  F1 இது பெரும்பாலும் எல்லா ப்ரோக்ராம்களிலும் Help Screen ஐ ஓபன் செய்யப் பயன்படுகிறது. CMOS Setup இலும் பயன்படுகிறது. Windows Key+ F1 Help Screen ஓபன் செய்ய.  F2 இது Highlight செய்யபட்ட file or folder or Icon க்கு Rename செய்யப் பயன்படுகிறது. CMOS Setup இலும் பயன்படுகிறது. Boot மெனுவுக்கு செல்ல  Microsoft Word இல் இதன் பயன்கள்: Alt + Ctrl + F2 --> open a new document in Microsoft Word. Ctrl + F2--> display the print preview window in Microsoft Word.  F3 இது நிறைய ப்ரோக்ராம்களில் Search option ஓபன் செய்ய பயன்படுகிறது. MS-DOS இல் கடைசி வரியை Repeat செய்ய பயன்படுகிறது. MS WORD இல் upper case இல் இருந்து lower case க்கு வார்த்தை முழுவதையும் மாற்ற பயன்படுகிறது.  F4 Find window ஓபன் செய்ய(check in the My Computer ) கடைசியாக நடந்த Action ஐ Repeat செய்ய பயன்படுகிறது.(உதாரணம் MS WORD இல் ஒரு line ஐ தொடர்ந்து Paste செய்ய இது எளிதான வழி.) Alt+F4 will Close all Programs. Ctrl+ F4 will close current Program.  F5 Reload or Refresh Open the find, replace, and go to window in Microsoft Word PowerPoint இல் Slide Show ஸ்டார்ட் செய்ய.  F6 cursor ஐ address bar க்கு மாற்றும். (IE, Mozilla) Ctrl + Shift + F6 இது புதிய MS WORD Document ஐ ஓபன் செய்யும்.  F7 MS இல் Spell Check & Grammar Check செய்ய பயன்படும். (Word, Outlook,etc ) Mozilla வில் Caret Browsing ஐ ON செய்ய பயன்படும்.  F8 விண்டோஸ் ஸ்டார்ட் ஆகும் போது நாம் Safe Mode Access செய்ய இது பயன்படும்   F9 Quark 5.0 வில் Measurement toolbar ஓபன் செய்ய பயன்படுவதாக உள்ளது.  F10 இது MS இல் MenuBar ஓபன் செய்ய பயன்படுகிறது. (MS WORD இல் முயற்சி செய்யவும்.) Shift+F10 - Right Click ஆக செயல்படும்.  F11 இன்டெர்நெட் பிரவுசர்களில் Full Screen கொண்டுவர பயன்படும். nகணினி திரையை முழு ஸ்க்ரீன்க்கு கொண்டு வரவும் பயன்படும்.  F12 MS Word இல் save as menu வை ஓபன் செய்ய பயன்படும். Shift+F12 will Save MS Word Ctrl+Shift+F12--MS Word print செய்ய பயன்படும்.

ஐடிஐ-யில் வயர்மேன்/ எலக்ட்ரீசியன் பிரிவில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்க மின்சார வாரியத்தில்பணி!

தமிழக மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் என அழைக்கப்படும் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 4000 களப்பணி உதவியாளர்கள்(பயிற்சி) நேரடி ஆள் சேர்ப்பு வழியாக பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிரிமான கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”தற்போது நடைபெற உள்ள ஐடிஐ கள உதவியாளர் பணி நியமனத்திற்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால், ஐடிஐ-யில் வயர்மேன் அல்லது எலக்ட்ரீசியன் பிரிவில் தேர்ச்சி பெற்று மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிரிமானக் கழகத்தில்(தமிழ்நாடு மின்சார வாரியம்) 1 வருடம் தொழில் பழகுநர் பயிற்சி முடித்தவர்கள், 18 வயது முதல் 57 வயது வரை உள்ள நபர்கள் தகுதி உடையவர்களாவர்.

அவர்கள் தலைமை அலுவலகம், தமிழ்நாடு மின்சார வாரிய வளாகம் 114, அண்ணாசாலை, சென்னை-600002 அலுவலகத்தில் 02.09.2013 முதல் 13.09.2013 வரையிலான காலத்திற்குள் காலை 11 மணி முதல் மாலை 5 மணிக்குள் தங்களுடைய தனிப்பட்ட விவரங்களை தொழில் பழகுநர் அசல் சான்றிதழ்களுடன் வந்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேற்கூறியவாறு இவ்வலுவலகத்தில் பெயரை பதிவு செய்தவர்களுக்கும் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் வழியாக பெயர் பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கும் சேர்த்து நேர்காணல் கடிதம் அனுப்பப்படும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய

 www.tangedco.gov.in,          www.tantransco.gov.in,                   www.tenders.tn.gov.in 

இந்தியாவை உலுக்கப் போகும் இன்னொரு ஊழல் :தோரியம் கடத்தலில் ரூ.60 லட்சம் கோடி:

இந்திய கடல் பகுதிகளிலிருந்து சட்டவிரோதமாக தோரியம் கடத்தப்படும் விவகாரத்தில் ரூ.60 லட்சம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இவ்விவகாரம் அம்பலமாகியுள்ளது. மேலும் பொதுத்துறை ஒன்றையும், அணுசக்தி துறை நிறுவனங்களையும் இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் ஆய்வு செய்தால் மேலும் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் என்று ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

sep 6 - indian money bundle

 

இதன் மூலம் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய ஊழல் நடைபெற்ற இருப்பதை அறியும் முடியும் என்றும் கூறப்படுகிறது. தோரியம் கடத்தலில் மத்திய மண்டல தாது பொருட்கள் கட்டுப்பாடு அதிகாரியாக உள்ள ரஞ்சன் சகாய் என்பவருக்கு முக்கிய பங்கு இருப்பது தெரிய வந்துள்ளது.
தோரியம் கடத்தல் குறித்தும் ரஞ்சன் சகாய் முறைகேடு குறித்தும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட பல்வேறு புகார்கள் கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது. தோரியம் கடத்தலால் நாட்டிற்கு மிகப்பெரிய பெருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது மட்டுமின்றி கதிர்வீச்சு தன்மையுள்ள இந்த பொருட்கள் தீவிரவாதிகள் கைகளில் சிக்கினால் பெரும் நாச வேலைகளுக்கு காரணமாகிவிடும் என்ற நிலையில் அரசு மெத்தனமாக இருப்பது கவலை அளிப்பதாக தகவல் அறியும் உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், தோரியம் கடத்தப்படுவதாக வெளியான தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது.சென்னை விமான நிலையத்தி்ல் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் இ.அகமது, கடல் பகுதியில் தோரியம் கடத்தல் உறுதி செய்யப்பட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Biggest Ever: Thorium Mono-Cyanide Scam: 60 Lakh Crore Worth

*******************************************


 G scam, Coal scam was hearing all around India. Now comes an new shocking scam news much larger than earlier ones. 2G, coal corruption all became smaller on looking this new scam case in India.Currently a new sensational scandal news released. That is Rs.60 lakh crore worth ‘Thorium scam’. This hot scam news says that from the region of Indian Ocean Rs.60 lakh crore worth of Thorium has been exploited.The country’s natural resources are been exploited in a very bad manner. This new Thorium scam is the great example for that.

மீண்டும் சர்ச்சையில் சிக்குகிறதா கமலின் ‘விஸ்வரூபம் – 2′…!

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பலமுகங்களை கொண்ட கமல்ஹாசனின் சமீப கால படங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கமான நிகழ்வாகிவிட்டது.கடந்த ஆண்டு விஸ்வரூபம் என்ற பெயரில் அவர் வெளியிட்ட படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பெரும் போராட்டத்திற்கு பிறகு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இஸ்லாமியர்களை அந்த படத்தில் தவறாக சித்தரித்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்தே படத்திற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அதன்பிறகு தமிழக அரசு தலையிட்டு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு விஸ்வரூபம் படம் வெளியானது.அந்த படம் வெளியான சில நாட்களிலேயே ‘விஸ்வரூபம் -2′ படம் விரைவில் வெளியாகும் என்ற தகவல் பரவியது. காரணம், விஸ்வரூபம் படத்திற்கு ஆரம்பத்தில் ஏற்பட்ட எதிர்ப்பும்… பின்னர் படம் வெளியானதும் கிடைத்த வரவேற்பும் விஸ்வரூபம்&2 படம் உருவாக காரணமாக அமைந்தது என்கிறார்கள்.

sep 6 = viswaroop 1

 

இந்த சூழலில், ‘விஸ்வரூபம் -2′ படம் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்தில் நடித்திருந்த பூஜாகுமார் முதல் படம்போல இதில் எந்த சர்ச்சையான காட்சிகளையும் குறிப்பிடமுடியாது. மிகவும் யதார்த்தமாக படம் வந்திருக்கிறது என பல்வேறு பேட்டிகளில் குறிப்பிட்டிருந்தார்.

கமல்ஹாசனும் தன் பங்குக்கு ‘விஸ்வரூபம்&2′ படம் அனைத்து தரப்பு மக்களும் ஏற்கும்விதமாக அமையும் என கூறியிருந்தார். இதன் மூலம் படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து காத்திருந்த கமல் ரசிகர்களுக்கு திடீரென இஸ்லாமியர் அமைப்பு ஒன்றின் அறிக்கை மூலம் மீண்டும் கமல் படம் சர்ச்சையில் சிக்குமா என்ற பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாநில தலைவர் ஜவஹர்அலி வெளியிட்டுள்ள அறிக்கையில்”கமலஹாசன் நடித்து இயக்கி வரும் விஸ்வரூபம் பார்ட்-2 தீபாவளிக்கு வர இருப்பதாகவும், விஸ்வரூபம் படத்தை போன்று இப்படத்திலும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து முஸ்லிம்களின் மனம் புண்படும்படியான காட்சிகள் இருப்பதாகவும் தகவல் வந்துள்ளதை கண்டு மிகவும் வேதனை அடைந்துள்ளோம். சகோதரர் கமலஹாசன் தொடர்ந்து முஸ்லிம்களை காயப்படுத்தி படம் எடுத்து வருவதும் பிறகு கருத்து சுதந்திரம் என்று பேசி அதன் மூலம் படத்தை விளம்பரப் படுத்தி கொள்வதும் நல்ல கலைஞனுக்கு அழகல்ல.

யார் மனதையும், காயப்படுத்தி திரைப்படம் எடுப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும். டாம் 999 மற்றும் மெட்ராஸ் கபே போன்ற திரைப்படங்கள் ஏன் தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை படைப்பாளி புரிந்து கொள்ள வேண்டும். எனவே முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ‘விஸ்வரூபம்2′ திரைப் படத்தில் முஸ்லிம்களை காயப்படுத்தும் காட்சிகள் இல்லாதவாறும் சமூக ஒற்றுமையை பறைசாற்றும் விதமாகவும் திரைப்படத்தை எடுத்து காயப்பட்டுள்ள இஸ்லாமியர்களின் நெஞ்சங்களில் மருந்து தடவ வேண்டும் என்று கமலஹாசனை இந்திய தேசிய முஸ்லிம் லீக் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்’ என கூறியிருக்கிறார்.

இந்த அறிக்கை வெளியானதால் கமல் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

இதையடுத்து ஜவஹர் அலியின் அறிக்கைக் குறித்து படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனிடம் கேட்டபோது,”விஸ்வரூபம்&2 படம் அனைத்து தரப்பு மக்களுக்குமான கதையாக இருக்கிறது. அதில் எந்த இடத்திலும் இஸ்லாமியர்களின் மனது புண்படும்விதமான காட்சிகளோ, வசனங்களோ இல்லை. அதிலும் முந்தைய படத்தில் ஏற்பட்ட காயங்களை திரையுலக்மே இன்னும் மறக்காத நிலையில் மீண்டும் சர்ச்சை காட்சி அல்ல்து வசனங்களை யாராவத்கு வைப்பார்களா?இவ்வளவிற்கும் இந்த பார்ட் 2 படத்தில் அனைத்து மத மக்களும் சகோதரர்களே என குறிப்பிடும் விதமான காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. படத்தை பார்த்தால் அவர்களுக்கே புரியம். மற்றபடி சர்ச்சையான விஷயங்கள் எதுவும் இல்லை.. இல்லை.. இலலவே இல்லை” என்கிறார்.

சும்மா இருந்தாலே சினிமாவில் கிசுகிசுவும், பரபரப்பும், வதந்தியும் பரவுவதை தடுக்க முடியாது… போததற்கு இதுபோன்ற செய்திகள் வெளியானால் படம் குறித்த விஷயங்களும்… செய்திகளும் றெக்கை கட்டி பறப்பதை யாரும் தடுக்க முடியாது…