Saturday 14 December 2013

கூந்தல் முடியை அடர்த்தியாக‌ கருமையாக வளர்ப்பது எப்படி?




பெண்களை அழகிய‌ பதுமையாக்க‌, அவர்களின் கூந்தலுக்கும் முக்கியப் பங்கு உண்டு. சிலர் கூந்தலினை அதிக‌ கவனத்துடன் பராமரித்தாலும் அவர்களுக்கு அதற்கான‌ பலன் கிடைப்ப்பதில்லை. கூந்தல் முடி உதிர்தல், மாறான‌ நிறம் மற்றும் நீளமின்மை ஆகியப் பிரச்சனைகள் இயல்பானதாகும். பெண்களின் கூந்தல் முடி உதிர்வதற்கு பல‌ காரணங்களைக் கூறலாம். அக்காரணங்களை ஆராய்ந்து அறிந்து அக்குறை நிறைவுகளை நிவர்த்தி செய்தால் முடி உதிர்வதை எளிதாகத் தவிர்த்து விடலாம். முடி அடர்த்தியானதாக‌ மற்றும் கருமை நிறமாக‌ மாற்றுவதற்கு கீழ்காணும் சில‌ எளிய‌ இயற்கை முறை குறிப்புகளைப் பார்க்கலாம்.

வைட்டமின், 'பி' குறைபாடு

வைட்டமின், 'பி' குறைவினால், சில‌ருக்கு தலைமுடி விரைவில் நரைக்க ஆரம்பித்துவிடும். ஊட்டசத்து மிக்க உணவினை உட்கொள்ளுவதனால் இக்குறைபாட்டை நீக்கலாம். நெல்லிக்காய், ஊற வைத்த வெந்தயம் ஆகியவற்றை நன்றாக அரைத்து, அந்த விழுதைத் தலையில் பூசி, சிறிது நேரம் ஊற வைத்த‌ பின் குளித்தால், உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுவதுடன், கண் எரிச்சலும் குறைந்துவிடும்..
மசாஜ் செய்தல்

*உங்கள் வீட்டில் உபயோகிக்கப்படும் தேங்காயில் ஏதேனும் ஒன்று அழுகிப்போனால் அதைத் தூக்கி எறியாமல், அதனுடன், சிறிது சுடுநீர் சேர்த்து அரைத்து, தலையில் தடவி ஊற வைக்கவும். பிறகு நன்றாக, 'மசாஜ்' செய்தால், முடி வேர்கள் வலுப்பெறும்.

* பொடுகு தொல்லையைப் போக்க‌ இரண்டு ஸ்பூன் வினிகருடன், கடலைமாவைக் குழைத்து, கால் மணி நேரம் ஊறவைத்து, முடி வேர்களில் படும்படி பூசி, அரைமணி நேரம் கழித்து அலசவும்.

* தேங்காயை தண்ணீர் சேர்க்காமல் அரைத்து, பால் பிழியவும். தேங்காய்ப் பாலினை இரும்பு கடாயில் காய்ச்சி அதில் கிடைக்கும் எண்ணெயை, தலையில் தடவவும். சிறிது நேரம் ஊறியபின், சீயக்காய் அல்லது கடலை மாவு தேய்த்து அலசவும்.

* நல்ல மரச் சீப்பினால் தலைமுடியை அழுந்த வாரினால், முடி வேர்களில் ரத்த ஓட்டம் அதிகமாவதோடு, முடி வளர்தலும் தூண்டப்படுகிறது.

* கஞ்சி தண்ணீரில் (சாதம் வடித்த கஞ்சியில்) வெந்தயப் பொடி, பயத்த மாவு கலந்து ஊற வைத்து தேய்த்துக் குளிக்கலாம்.

* உடலுக்கு குளிர்ச்சியூட்டும் விளக்கெண்ணெயை இரண்டு டேபிள் ஸ்பூன் மற்றும் தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து, இலேசாக சுடவைத்து, முடி வேர்களில் நன்றாகப் படும்படி தடவவும். ஒரு பழைய துணியை வெந்நீரில் நனைத்து பிழிந்து, தலையின் மீது சுற்றவும். அந்த சூடு உள்ளே இறங்கும். சற்று ஆறியதும் மீண்டும் அவ்வாறு செய்யவும். பிறகு தலையை ஷாம்பூ போட்டு அலசி விடவும். முடி உதிராமல் இருக்க இவ்வழியினை பின்பற்றுதல் சிறப்பாகும்.

* ஒரு பங்கு சீயக்காய், வெந்தயம் கால் பங்கு, பச்சைப் பயறு அரைப் பங்கு, புங்கங்காய் கைப்பிடி அளவு எடுத்து, மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். ரசாயனப் பொருட்கள் இல்லாத இந்தப் பொடி, எந்த வித தீங்கும் ஏற்படுத்தாது. இதனை ஷாம்பூவுக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம்.

* பித்தம் உடலில் அதிகமானாலும் தலைமுடியில் நரை ஏற்படும். இதற்கு, கசகசாவும், அதிமதுரமும் சம அளவு எடுத்து, பொடி செய்து, பசும்பாலில் குழைத்து, தலையில் தடவி ஊறியபின் குளித்தால், விரைவில் குணம் தெரியும்.

* தேங்காய் எண்ணெயை வீட்டில் தயார் செய்வோர் அல்லது அங்காடியில் வாங்குவோர் அந்த தேங்காய் எண்ணெயை சூடாக்கியபின் அதில் காய வைத்த செம்பருத்திப் பூ மற்றும் ஆலமரத்தின் இளம் வேர்களை பொடி செய்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு தயார் செய்யப்பட்ட‌ எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், முடி கறுப்பாக வளரும்.

* பெரும்பொழுதினை வெயிலில் கழிப்போர், வெயிலில் அலைந்து, வேலை செய்வோர், தினமும் உச்சந்தலையில் விளக்கெண்ணெயை தடவி வந்தால், கண்ணுக்குக் குளிர்ச்சி கிடைக்கும். இப்படி செய்வதனால் முடியும் உதிராது.

இன்டர்நெட் பேச்சு வழக்கு அகராதி




இன்டர்நெட்டில், ஆங்கிலம்தான் அதிகம் பயன்படுத்தப்படுகிற மொழி. சாட்டிங் போதிலும் சரி, நண்பர்களுக்குள் இமெயில் அனுப்பும் போதும் சரி, ஆங்கிலம் கொச்சை வழக்கில் பயன்படுத்தப்படுகிறது. எப்படி வட்டார வழக்கில் சில வார்த்தைகள் நமக்கு புரிவதில்லையோ அதே போல் ஆங்கிலம் தெரிந்தவர்களுக்குக கூட இந்த பேச்சுவழக்கு புரிவதில்லை.



இதை புரிந்து கொள்வதற்காக ஓர் அகராதியையே இப்போது வெளியிட்டிருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.


குழந்தைகள் என்னென்ன வார்த்தைகளை இன்டர்நெட்டில் பேசிக்கொள்கிறார்கள் என்று பெற்றோர்களுக்கு புரிய வேண்டும் என்று நினைத்தால் இந்த வெப்சைட்டுக்கு அவசியம் செல்ல வேண்டும்.


www.noslang.com/index.php


இங்குள்ள சர்ச் பாக்சில் உங்களுக்கு புரியாத அந்த சங்கேத மொழியை கொடுத்தால் அதற்குரிய அர்த்தம் விளக்கப்படுகிறது. குறிப்பாக, lol என்ற வார்த்தைக்கு, laughing out loud என்பது அர்த்தம் என்று தெரிய வரும். இதே போல், 10 - thank you, 10x - thanks, 2b - to be, b4n - bye for now, cb - come back, coz - because


 சில உதாரணங்கள்..

absnt  -  absent

 abt  -  about

 abwt  -  about

 acc  -  account

 acct  -  account

 acgaf -  Absolutely couldn't give a Fuck

  aiadw  -  ALL IN A DAYS WORK

 aiamu  -  and I'm a monkey's uncle

 aicmfp -  and I claim my five pounds

 aight  -  Alright

 aightz  -  alright

 aiic  -  as if I care

 aiid  -  and if I did

 aiight  -  all right

 aim  -  AOL instant messanger

 ain't  -  am not

aite  -  Alright

aitr  -  Adult in the room

aiui  -  as I understand it

aiws  -  as i was saying

ajax  -  Asynchronous Javascript and XML

aka  -  also known as

akp  -  Alexander King Project





உள்ளிட்ட வார்த்தைகள் இன்டர்நெட்டில் அடிக்கடி பயன்படுத்தும் சுருக்க மொழி. இது போன்ற ஏராளமான வார்த்தைகளை இந்த வெப்சைட் தொகுத்துள்ளது.


உங்களுக்கு இதே போன்ற வார்த்தைகள் தெரிந்தால் கூட நீங்களும் இந்த வெப்சைட்டுக்கு வழங்க தனிப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.


அடிக்கடி நாம் தவறாக பயன்படுத்தும் வார்த்தைகள் எவை என்பதை தனிப்பக்கத்தில் காணலாம். இன்டர்நெட்டுக்கு என தனி வட்டார மொழி உருவாகி விட்டது என்பதை இந்த வெப்சைட் மூலம் தெரிந்து கொள்ளலாம்.



Yahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை..!






சிலர் எண்ணலாம் யாரச்சும் Yahoo இப்பொழுதும் பாவிக்கிறார்களா என? ஆனால் பெரும்பாலானவர்கள் அதாவது 2008 தொடக்கம் இணையத்தில் இருப்பவர்களின் Default Email இப்போதும் yahoo தான். அவர்கள் மாற விரும்பினாலும் அவர்களால் முடியவில்லை.

அப்படி yahoo Mail பாவிக்கும் ஒருவரா நீங்களும்? நிச்சயம் இப்பதிவு உதவும்.. இப்பதிவில் yahoo mail தொடர்பான சில சிக்கல்களையும் கட்டணம் செலுத்தாமல் Google போன்ற சேவைகளுக்கு மாறுவது பற்றியும் இரத்தின சுருக்கமாக காணுங்கள்.

அண்மையில் எனக்கும் என் நண்பர்களுக்கும் நடந்த சம்பவங்களே இப்பதிவை எழுத வைத்தது.

நடந்தது என்ன?

IELTS கற்று கொண்டிருக்கும் இவருக்கு அண்மையில் தான் பரீட்சை நடந்து முடிந்தது. இவரின் Default Email ****@yahoo.com . இவரின் பரீட்சை திகதிகள் பற்றி மின்னஞ்சல் அனுப்ப பட்ட போது இவரால் மெயில் box இனை திறக்க முடியவில்லை. பின்பு தான் புரிந்தது இலங்கைக்கான அவர்களின் servers செயல் இழந்து விட்டது. பின்பு ஒரு நாளின் பின்னர் தான் மீள இயங்க தொடங்கி இருக்கிறது.

இன்னொரு நண்பருக்கும் அப்படி தான்… அவரின் iPhone 5 இல் இன்று வரை yahoo mail box இனை configure செய்ய முடியவில்லை.

அதே போல எனக்கும் நடந்தது.. என் yahoo கணக்கு தானாகவே நிரந்தரமாக அழிக்கப்பட்டு விட்டது. இன்றுவரை அவர்களுடன் தொடர்பு கொண்டும் அவர்கள் பதில் அளிக்கவே இல்லை. நல்ல வேளையாக அதன் inbox backup ஒன்று இருந்ததால் அவற்றின் மூலம் பெரும்பாலான Email அனுப்புபவர்களை Gmail க்கு வரவைத்து விட்டேன்.

இவை எல்லாம் தொழில்நுட்ப பிழைகளே.. இவ்வாறு நடக்க என்ன காரணம்?? முன்பு கொடி கட்டி பறந்த Yahoo, Google இன் அபரிமிதமான வளர்ச்சியால் முடிங்கி விட்டது. என்றாலும் இயக்கிய படி தான் இருக்கிறது. இவர்களால் இவர்கள் மெயிலையே கட்டுபடுத்த முடியவில்லை. இது போதாது என்று ovi, nokia mail (இரண்டும் ஒன்று தான்) மெயில் சேவைகளையும் வாங்கி விட்டார்கள்..

Yahoo துரதிஷ்டவசமாக Email forwarding வசதியை இலவசமாக வழங்குவது இல்லை. இது கிடைத்தால் நீங்கள் Yahoo mail க்கு வரும் மின்னஞ்சல்களை இலகுவாக வேறு சேவைக்கு திருப்பி விடலாம்.

நாளை உங்களுக்கும் இப்படி மெயில் காணாமல் அல்லது திறக்க முடியாமல் போகலாம்.
இதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

முடிந்தவரை விரைவாக yahoo இனை விட்டு வெளியேற வேண்டும்.

நண்பர்களுக்கு புதிய மின்னஞ்சல் முகவரியை தெரிய படுத்துங்கள்.

இணைய சேவைகளுக்கு இவர்களின் மின்னஞ்சலின் அடியில் இருக்கும் Update subscription link மூலம் சென்று புதிய முகவரியை பதியுங்கள்.

இதற்கும் மேலாக yahoo க்கு வரும் Mails களை திரட்ட gmx.com இல் சென்று ஒரு புதிய கணக்கை உருவாக்கி கொள்ளுங்கள். அதன் மூலம் உங்கள் yahoo கணக்கு உயிருடன் இருக்கும் வரை அதற்கு வரும் மின்னஞ்சல்கள் பாதுகாப்பாக gmx.com இலும் சேமிக்க படும்.

இதை விட வேறு சில வழிகளும் இணையத்தில் உண்டு…

உங்களுக்கு பிடித்த ஏதோ ஒரு இலகுவான வழி மூலம் உங்கள் மின்னஞ்சல்களை பாதுகாத்து கொள்ளுங்கள்..

பொதுவாக Gmail சிறந்த ஒன்று. Hotmail இல் சில விசேட சேவைகள் கிடைக்கிறது..

பெண்கள் பற்றி 300 தமிழ் பழமொழிகள்- பகுதி 2



இரண்டாம் பகுதி


கட்டுரையின் முதல் பகுதியில் முன்னுரை கொடுத்திருக்கிறேன். முதல் பகுதியையும் ஏனைய பழமொழிக் கட்டுரைகளையும் படிப்பது பயன் தரும்.


வாழுகிற பெண்ணும் வாழாத பெண்ணும்


மேட்டில் ஏறினால் முத்தாச்சி, பள்ளத்தில் இறங்கினால் அத்தாச்சி
மெலிந்தவளுக்கு மெத்தப் பலன், மேனி மினுக்கெட்டவளுக்கு மெத்தக் கசம்
மேலைக்குத் தாலி கட்டுகிறேன்,, கழுத்தே சுகமே இரு என்றார்போல
மேலைக்குத் வாழ்க்கைப்படுகிறேன்,, கழுத்தே சுகமே இரு
மேனி எல்லாம் சுட்டாலும் விபசாரம் செய்கிறவள் விடாள்
மைலங்கி மைலங்கி பூ எங்கே வைத்தாய், வாடாதே வதங்காதே அடுப்பிலே வைத்தேன்
வரப்பு ஏறித் தாண்ட மாட்டாள், அவள் பேர் தாண்டாய் (110)
வர வர மாமியார் கழுதை போல ஆனாளாம்
வருகிற வரும்படி எல்லாம் பூசாரிக்கு, சந்தடியெல்லாம் கங்காளம்மைக்கு
வறுமைக்கு மூதேவியும் செல்வத்துக்குச் சீதேவியும்
வாய் மதத்தால் வழக்கு இழந்தாள்
வாலிபத்தில் இல்லாத மங்கையை வயது சென்றபின் என்ன செய்கிறது?
வாலிபத்தில் தேடாத தேவடியாள் வயது போனபின் தேடப்போகிறாளா?
வாழாத பெண்ணுக்கு மை ஏண்டி, பொட்டு ஏண்டி, மஞ்சள் குளி ஏண்டி?
வாழாத பெண்ணைத் தாழ்வாய் உரைக்காதே
வாழாப் பெண் தாயோடெ
வாழுகிற பெண்ணை தாய் கெடுத்தது போல
வாழைப் பழம் கொண்டுபோனவள் வாசலில் இருந்தாள் (120)
வாயைக் கொண்டுபோனவள் நடுவீட்டில் இருந்தாள்


கைம்பெண்சாதி, எருமையில் கறவை பழகினாற் போல
கைம்பெண்டாட்டி தாலியைக் கூழைக்கையன் அறுத்தானாம்
கைம்பெண்டாட்டி பெற்ற கழிசடை
கைம்பெண்டாட்டி வளர்த்த கழுக்காணி
கைம்பெண்டாட்டி பெற்ற பிள்ளையானாலும் செய்யுஞ் சடங்கு சீராய் செய்யவேண்டும்
எட்டுக் கிழவரும் ஒரு மொட்டைக் கிழவியைக் கட்டிக் கொண்டார்கள்
எட்டும் இரண்டும் தெரியாத பேதை (நாத்தை)
ஒரு வீடடங்கலும் பிடாரி/ பஜாரி
ஏர் உழுகிற பிள்ளை இளைத்துப் போகிறது, பரியம்போட்ட பெண்ணைப் பார்த்து வளர்
ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம் (130)
ஏழைக்கும் பேழைக்கும் காடுகாள் அம்மை
ஏற்கனவே மாமி பேய்க்கோலம், அதிலும் கொஞ்சம் மாக்கோலம்
ஆமுடையானை நம்பி அவசாரி ஆடலாமா?
ஆமுடையானைக் கொன்ற அறநீலி
ஆமுடையான் அடித்ததற்குக் கொழுநனைக் கோபித்துக் கொண்டாளாம்
ஆமுடையான் அடித்ததது பெரிதல்ல; சக்களத்தி சிரிப்பாள் என்று அழுகிறேன்
ஆமுடையான் செத்த பின்பு அறுதலிக்குப் புத்தி வந்தது
ஆமுடையான் செத்தபோதே அல்லலுற்ற கஞ்சி
ஆமுடையான் செத்தவளுக்கு மருத்துவச்சி தயவேன்?


சீதேவியும் மூதேவியும்



சீதை பிறக்க இலங்கை அழிய (140)
சீதேவியுடன் மூதேவி பிறந்தாற் போல
சீராளன் கல்யாணத்தில் முன்றுபேர் பெண்டுகள் மாரோடே மார் தள்ளுது
சீரங்கத்துக்குப் போகிறவன் வழியிலெ பாரியைப் பறிகொடுத்தது போல
சீர்கேடனுக்குக் வாக்குப்பட்டு திரிச்சீலை துணிக்கு வாதைப் படாமல் இருந்தேன், சீராளனைப் பெற்ற பிறகு திரிச்சீலை துணிக்கு வருத்தமாச்சுது
சீலை இல்லை என்று சின்னாயி வீட்டுக்குப் போனாளாம், அவள் ஈச்சம்பாயைக் கட்டிக்கொண்டு எதிரே வந்தாளாம்
நாட்ட ஆளப் பெண் பிறந்தாலும் போட்ட புள்ளி தப்பாது
நாணம் இல்லாத சிறுக்கிக்கு நாலு திக்கும் வாசற்படி
நாணம் இல்லாத வாத்தி நாலு திக்குக்கும் கூத்தி
நாணம் இல்லாத பெண் நகைப்புக்கு இடம் வைப்பாள்
பூவுள்ள மங்கையாம் பொற்கொடியாம் , போன இடமெல்லாம் செருப்படியாம் (150)
பூ விற்றவளை பொன் விற்கப் பண்ணூவேன்


பெண்சாதி


பெண்சாதி இருந்தால் புது மாப்பிள்ளை
பெண்சாதி இல்லாதவன் பேயைக் கட்டித் தழுவியது போல
பெண்சாதி கால் விலங்கு, பிள்ளை சுள்ளாணி
பெண்சாதி கால்கட்டு, பிள்ளை வாய்க்கட்டு
பெண்சாதி சொந்தம், போகுவரத்துப் புறம்பே
பெண்சாதி பேச்சைக் கேட்டவன் பேய் போல அலைவான்
பெண்சாதி முகத்தைப் பார்க்காவிட்டாலும், பிள்ளை முகத்தைப் பார்க்க வேண்டும்
பெண்சாதியைக் குதிரை மேல் ஏற்றி, பெற்ற தாயின் தலையிலே புல்லுக் கட்டை வைத்தடிக்கிற காலம்
பெண்சாதியைத் தாய் வீட்டில் விட்டவனுக்கு ஒரு சொட்டு (160)
பெண்டாட்டி ஆசை திண்டாட்டத்தில் விட்டது
பெண்டாட்டி குதிர் போல அகமுடையான் கதிர்போல
பெண்டாட்டியுடன் கோபித்துப் பரதேசம் போவாருண்டோ
பெண்டுகளுக்கு பெற்றோரிடத்திலும் பிள்ளைகளிடத்திலும் மூப்பில்லை
பெண்டுகள் இருந்த இடம் சண்டைகள் பெருத்திடும்
பெண்டுகள் சமர்த்து அடுப்பங்கரையில்தான்
பெண்டுகள் சோற்றுக்குத் தண்டமில்லை
பெண்டுகள் வைத்தியம்
பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு, பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு
பெண் அரம்பைக் கூத்து போய், பேய்க் கூத்து ஆச்சுதே (170)
பெண் ஆசை ஒரு பக்கம், மண் ஆசை ஒரு பக்கம்
பெண் ஆசை கொண்டு பெருக்கத் தவிக்கிறது
பெண் ஆணையைத் தொடரும் பேரானையைப்போல
பெண்ணின் குணமும் அறிவேன், சம்பந்தி வாயும் அறிவேன்


தங்கமே தங்கம்

பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்
பெண்ணுக்கு ஒரு கும்பிடு வில்லுக்கு ஒரு கும்பிடு
பெண்ணின் குணம்தான் சீதனம்
பெண்ணின் பெண்தான் சீதனம்
பெண்ணுக்கு பொன்னிட்டுப் பார், சுவருக்கு மண்ணிட்டுப் பார்
பெண்ணுக்கு பொன்னாசை கொள்ளும் பேரணங்கு 180
பெண்ணுக்கு போட்டுப் பார், மண்ணுக்குப் பூசிப்பார்
பெண்ணுக்குப் போய்ப் பொன்னுக்குப் பின்வாங்கலாமா?
பெண்ணுக்கு மாமியாரும் பிள்ளைக்கு வாத்தியாரும்
பெண்ணுக்கும் பொன்னுக்கும் தோற்பு உண்டா?
பெண்ணும் இல்லாமல் ஆணும் இல்லாமல் பெருமரம் போல் வளருகிறது
பெண்ணைக் கட்டிக் கொடுப்பார்கள், பிள்ளை பெறுவதற்குப் பிணைபடுவார்களா?
பெண்ணைக் கொண்டு பையன் போனான், பிள்ளை பெற்றுச் சிறுக்கி நாயானாள்
பெண்ணைத் திருத்தும் பொன் (190)
பெண்ணைப் பிழை பொறுக்கப் பெற்ற தாய் வேண்டாமா?
பெண்ணை வேண்டும் என்றால் இளியற் கண்ணை நக்கு
பெண் என்று பிறந்தபோதே புருடன் பிறந்திருப்பான்
பெண்ணோடு ஆணோடு பிறக்காத பெரும்பாவி
பெண் படையும் பலமும் பெருக்கத் தவிக்கிறதோ?
பெண் புத்தி கேட்கிறவன் பேய்
பெண் மூப்பான வீடு பேரழிந்துபோம்
பெண் வளர்த்தி பீர்க்கங் கொடி
பொன்னாலே மருமகளானாலும், மண்ணாலே ஒரு மாமியார் வேண்டும்
பொன்னையும் புடவையையும் நீக்கிடில் பெண் மலக்கூடு (200)
போக்கற்றாள் நீக்கற்றாள், பொழுது விடிந்து கந்தை அற்றாள்...............

பெண்கள் பற்றி 300 தமிழ் பழமொழிகள்- Part 1





பெண்களைப் பற்றிய பழமொழிகள் பெரும்பாலும் அவர்களுக்கு எதிரானதாகவும், அவர்களைக் குறைகூறுவதாகவும் இருக்கின்றன. இதைக் காலத்தின் பிரதிபலிப்பு என்றுதான் சொல்ல வேண்டும். பல கலாசாரங்களிலும் பழங்காலத்தில் இப்படிதான் இருந்தது. வேற்று மொழிப் பழமொழிகள், பொன்மொழிகளைப் பயிலுவோருக்கு இது தெளிவாக விளங்கும்.


சில தமிழ்ப் பழமொழிகள் கடுமையான மொழியில் இருக்கும். வாசகர்கள் என்னை மன்னிப்பார்களாக. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இருப்பதைத்தான் நான் மீண்டும் கொடுக்கிறேன். மிகவும் கடுமையான, பாலியல் தொடர்பான பழமொழிகளையும், படிப்பதற்கு நாராசமாக உள்ள பழமொழிகளையும் கூடுமான அளவுக்கு தவிர்த்துவிட்டேன்.


பெண் பல ரூபங்களில் இருப்பவள். தாயாகவும் மனைவியாகவும், மகளாகவும்,மருமகளாகவும், மாமியாரகவும், மாமியாகவும், அத்தை/சித்தியாகவும், மிக அபூர்வமாக வேசியாகவும் வருகிறாள். பெண்களைப் பற்றிய சுமார் 300 பழமொழிகளை மூன்று பகுதிகளாகத் தருகிறேன். இவைகளை ஆராய்ச்சிப் படிப்பாக எடுப்பவர்களுக்கு இது பயன் தரும். நேரம் கிடைக்கும்போது வேற்று மொழிப் பழமொழிகளுடன் ஒப்பிட்டும் காட்டுவேன்.


முதல் பகுதி


குடியில் பிறந்த பெண் வயிற்றெரிந்தால் கொடியில் உள்ள துணி எரியும்
நார்த்தங்காய்க்குப் போடுகிற உப்பும், நாத்தனாருக்குப் போடுகிற சாதமும் வீண்போகாது
தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறுதான்
மழை வருவதும், பிள்ளை பெறுவதும் மகாதேவனுக்கே தெரியாது
ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே
பெண் என்றால் பேயும் இரங்கும்
பெண் புத்தி பின் புத்தி
ஐந்து பெண்களைப் பெற்றால் அரசனும் ஆண்டியாவான்
பணம் படைத்த சீமாட்டி எஸ் கொண்டையும் போடுவாள் ஒய் கொண்டையும் போடுவாள்
ஆடத்தெரியாத பெண் தெருக்கோணல் என்றாளாம் (கூடம் போதாது என்றாளாம்) 10


அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டாளாம்
அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே என்றானாம்
அரச மரத்தைச்சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தாளாம்
ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டியதாம்
ஒத்த கணவனும் ஒரு சிறு நெல்லும் இருந்தால் சித்திரம் போல் குடித்தனம் செய்வேன் என்றாளாம்
ஓடுகாலி வீடு மறந்தாளாம்
பெண்ணைக் கொடுத்தாயோ கண்ணைக் கொடுத்தாயோ என்பார்கள்
பெண் கொடுத்த மாமியோ கண் கொடுத்த சாமியோ !
ஒய்யாரக் கொண்டையாம் தலக்குள்ளே இருக்குமாம் ஈறும் பேனும்
தாயா ? பேயா ?
பேய்க்கு வாக்குப்பட்டால் புளியமரத்தில் ஏறித்தான் ஆகவேண்டும்
பேயானாலும் தாய் (20)


பெற்றவளுக்கு பிள்ளை பாரமா?
அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா
தாயில் சிறந்ததொரு கோயில் இல்லை
தாய்க்குப் பின் தான் தாரம்
பொம்பளை (பெண்) சிரிச்சா போச்சு பருத்தி விரிச்சா போச்சு
குனிந்து சேவித்து நிமிர்ந்து வாழ்த்திக் கொண்டாளாம்
அத்தை பகையில்லை அம்மாள் உறவில்லை
குறத்தி பிள்ளை பெற்றாளாம் குறவன் மருந்து சாப்பிட்டானாம்
மகள் பிறக்கும் முன் பூட்டிக்கோ, மருமகள் வருவதற்கு முன் சாப்பிட்டுக்கோ
இடுப்பில் குழந்தையை வைத்துக்கொண்டு ஊர் முழுவதும் தேடினாளாம்
கொடுக்காத மகராசி இருக்கவே இருக்கிறாள் கொடுக்கிற மூதேவி கொடுப்பதற்கு என்ன என்றாளாம்
மனம் காவலா மதி காவலா ?(பெண்ணுக்கு)
மருமகளுக்கு தீவளிக்கு தீவளி எண்ணை தேய்ப்பேன், மகளுக்கு வெள்ளியோடு வெள்ளிதான் தேய்ப்பேன் என்றாளாம்
ஆசைக்கு ஒரு பெண்ணும் ஆஸ்திக்கு ஒரு பிள்ளையும் வேண்டும் என்பார்கள்


மகளே உன் சமத்து


மகளுக்கு குடல் பாக்கியம் தவிர மற்ற பாக்கியம் எல்லாம் இருக்கின்றன
மகளுக்கு புத்தி சொல்லித் தாய் அவசாரி போனாளாம்
மகளே வல்லாண்மை
மகள் செத்தாள் தாய் திக்கற்றாள்
மகள் செத்தால் பிணம், மகன் செத்தால் சவம்
மகன் செத்தாலும் சாகட்டும், மருமகள் கொட்டம் அடங்கினால் போதும்
மகாரசன் பெண்சாதி மர்மக்காரி,, யாருடன் சொன்னாலும் திறமைக்காரி
மகாலெட்சுமி பரதேசம் போனாற்போல
மகிமை சுந்தரி கதவை ஒஞ்சரி
மகிமையிலே ஒரு பெண் குவளையிலே வாழுகிறாள், அதில் ஒரு பெண் அறுத்துவிட்டு அழுகிறாள்
மங்கை தீட்டானால் கங்கையிலே முழுகுவாள், கங்கை தீட்டானால் எங்கே முழுகுவாள்?
மங்கை நல்லாள் பெண் பெருமாள், வாழ்ந்ததெல்லாம் எத்தனை நாள், திங்கள் ஒருபொழுது செவ்வாய் பகலறுதி
மச்சத்தின் குஞ்சுவுக்கு இப்படி என்றால் மாதாவுக்கு எப்படியோ?
மஞ்சள் குளித்து மணை மேலே இருக்கும்போது மட்டேன் என்றீரே, பிள்ளை பெற்று நொந்திருக்கச்சே வேண்ட வந்தீரே
மடிப் பிச்சை மாங்கலியப் பிச்சை
போனதினம் போகப் புதனன்றைக்கு வந்தாள்
அடைமழைக்குக் குடை இல்லாதவனுக்கு ஐந்து பெண்டாட்டியாம் (50)
அட்டிகைக்கு ஆசைப்பட்டு எருமைச் சங்கிலியைக் கட்டிக் கொண்டாளாம்
அண்டை வீட்டுக்காரி பிள்ளை பெற்றாள் என்று அயல் வீட்டுக்காரி இடித்துக் கொண்டது போல
அண்டை வீட்டுச் சுப்பிக்கும் எதிர் வீட்டுக் காமாட்சிக்குமா கவலை?
உதறுகாலி முண்டை உதறிப் போட்டாள்
உதறுகாலி வந்தாள், உள்ளதும் கெடுத்தாள்
ஏண்டி பெண்ணே, இளைத்தாய் குதிர் போல
ஏண்டி பெண்ணே குந்தியிருக்கிறாய்? சோறு பற்றாமல்
ஏண்டி பெண்ணே சோர்ந்திருக்கிறாய்? சோறு பத்தியம்
ஏண்டி சிறுக்கி புல்லு ஆச்சா? ஒரு நொடிக்கு முன் கட்டாச்சே
ஏய்த்தால் மதனியை ஏய்ப்பேன், இல்லாவிடால் பரதேசம் போவேன்
மயிர் உள்ள சீமாட்டி வாரி முடிக்கிறாள்
மயிற்கண்ணிக்கு மசக்கை, மாப்பிள்ளைக்கு அவத்தை
மரியாள் குடித்தனம் சரியாய் போச்சு


மருமகள்-மாமியார் மோதல்


மருமகளுக்கு மாமியார் பிசாசு; மாமியாருக்கு மருமகள் பிசாசு
மருமகனுக்கென்று சமைத்ததை மகனுக்கு இட்டு வயிறு எரிந்தாளாம்
மலைபோல பிராமணன் போகிறான், பின்குடுமிக்கு அழுதாளாம்
மலை விழுங்கின மாணிக்கத்தாளுக்குக் கதவு சுண்டரங்கி
மறு மங்கையர்க்கும், மறு மன்னவர்க்கும், மார்பும் முதுகும் கொடாமலிரு
மாதா ஊட்டாத அன்னம் மாங்காய் ஊட்டும்
மாதா செய்தது மக்களுக்கு (மக்களைக் காக்கும்) 70
மாதா மனம் எரிய வாழான் ஒரு நாளும்
மாதவுக்குச் சுகம் இருந்தால் கர்ப்பத்துக்கும் சுகம்
மாமி மெச்சிய மருமகள் இல்லை
மாமி ஒட்டினாலும் பானை ஒட்டாது
மாமியாருக்கு கண் மண்டை பிதுங்கிப் போகிறது
மாமியாருக்கு சுவாமியார் இவள்
மாமியாருக்கும் மாமியார் வேண்டும்
மாமியாரும் ஒரு வீட்டு நாட்டுப் பெண்

மாமியாரும் சாகாளோ, மனக்கவலை தீராதோ
மாமியாரைக் கண்டு மருமகன் நாணுவதைப் போல
மாமியாரோடு போகாத மாபாதகன்
மாமியார் இல்லாத மருமகள் உத்தமி, மருமகள் இல்லாத மாமியார் குணவதி
மாமியார் துணி அவிழ்ந்தால் வாயாலும் சொல்லக் கூடாது, கையாலும் காட்டக்கூடாது
மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்
மாமியார் கை வெல்லத்தைப் பார்க்கிலும் மருமகள் கைத்தவிடு தேவலை
மாமியார் செத்த ஆறாம் நாள் மருமகள் கண்ணில் தண்ணீர் வந்ததாம்
மாமியார் செத்த ஆறாம் மாதம் மருமகள் கண்ணில் தண்ணீர் வந்ததாம்
மாமியார் செத்து மருமகள் அழுகிறது போல
மாமியார் செய்த காரியங்களுக்கு நிந்தை கிடையாது
மாமியார் தலையில கையும் வேலிப் புறத்துல கண்ணும் (90)
மாமியார் தலையில கையும் மாப்பிள்ளை மேல் சிந்தையும்
மாமியார் நன்மையும் வேம்பு இனிப்பும் இல்லை
மாமியார் மெச்சின மருமகள் இல்லை, மருமகள் மெச்சிய மாமியார் இல்லை
மாமியார் வீடு மகா சவுக்கியம்
மாம்பழத்தில் இருக்கும் வண்டே ! மாமியாருக்கும் மருமகளுக்கும் சண்டை


மதனி/ மைத்துனி


மாலை இட்ட பெண்சாதி காலனை (எமனை)ப் போல வந்தாள்
மாலை சுற்றிப் பெண் பிறந்தால் மாமனுக்கு ஆகாது
மாற்றானை நம்பினாலும் மாதரை நம்பொண்ணாது (100)
மேய்த்தால் மதனியை மேய்ப்பேன்
மேய்த்தால் மைத்துனியை மேய்ப்பேன், இல்லாவிட்டால் பரதேசம் போவேன்.....

குழந்தை வளர்ப்பதில் சில தவறான பழக்க வழக்கங்கள் !

 
 
1. குழந்தை பிறந்தவுடன் குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே தரவேண்டும். வேறு எந்தப் பொருளும் என்ன காரணம் கொண்டும் ஊட்டக்கூடாது.


*
2. பிறந்த சில குழந்தைகளுக்கு மார்பகத்தில் பால் கட்டி தடித்து இருக்கும். இதை குழந்தை வீறிட்டு அழுவதையும் பொருட்படுத்தாது நசுக்கி விட்டு பாலை வெளியே எடுக்கும் பழக்கம் உள்ளது. இது நல்லது அல்ல. மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்.


*
3. பச்சிளங்குழந்தை அழுவதற்கு காரணம் ‘உரம் விழுந்து இருக்கிறது’ என்று எண்ணி ‘உரம் எடுத்தல்’ என்று செய்கிறார்கள். இது தவறான பழக்கம். இப்படியொரு ‘நோய் நிலை’ இல்லை.


*
4. அடிக்கடி பேதியாகும் குழந்தைகளுக்கும் தொக்கம் எடுக்கிறார்கள். அப்படி ஒன்று கிடையாது. பேதியின் காரணம் என்ன என்று அறிந்து அதற்கான வைத்தியம் செய்ய வேண்டுமே தவிர தொக்கம் எடுப்பது தவறு - சில சமயம் விபரீதம் ஏற்படக் கூடும்.



பேதியை உடனே நிறுத்தும் மாத்திரையை கண்டிப்பாக உபயோகிக்கக் கூடாது. வயிற்றில் ஏதோ ஒரு பொருள் ஒதுங்கி உள்ளது என்று ‘தொக்கம் எடுத்தல்’ என்று சொல்கிறார்கள். இது இல்லாத ஒன்று. அது போல் குடல் ஏற்றம் என்று ‘குடல் தட்டல்’ என்று செய்கிறார்கள். இது தவிர்க்கப்படவேண்டும்.


*
5. சில குழந்தைகளுக்கு பிறந்து சில மாதங்களுக்கு தொப்புள் சிறிது வெளியே தள்ளிக் கொண்டு இருக்கும். அதை அமுக்கி காசு வைத்து கட்டும் பழக்கம் கூடாது. மாறாக தொப்புளைச் சுற்றி உள்ள பகுதியில் விரலை வைத்து சிறிது சிறிது அமுக்கி அமுக்கி விடலாம்.


*
6. சாம்பிராணி, கொமஞ்சான் புகை போடுவதால் சில குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்படும் வாய்ப்பு உண்டு. அவை அவசியமில்லை; பயனுமில்லை.


*
7. சில பெரியவர்கள் மூக்கில் ஊதி சளியை எடுக்க முயல்கிறார்கள். இது தவறான பழக்கம். இதனால் இவர்களின் வாயில் உள்ள நுண்கிருமிகள் எளிதில் குழந்தைகளுக்குப் பரவும்.


*
8. தலைக்கு குளிக்க வைக்கும் முன் தலையில் எண்ணெய் தடவும் பழக்கம் உள்ளது. இதனால் எண்ணை தண்ணீருடன் முகத்தில் இறங்கி மூக்கு துவாரம் அருகே வரும்போது மூக்கு அனிச்சை செயலாக அதை உறிஞ்சி உள்ளே இழுத்து அதனால் சளி, நிமோனியா போன்ற நோய் வர வாய்ப்பு உள்ளது.



*
9. தோலில் சிலசமயம் நுண்கிருமிகளின் பாதிப்பால் சிறுசிறு சீழ் வைத்த பரு போன்று கூட்டாக ஏற்படுவதை ‘அக்கி’ என்று சொல்லி அதற்கு அக்கி எழுதுவதாக சிலர் நம்புகிறார்கள். மருந்தை உட்கொண்டாலே ஒழிய வெறும் அக்கி எழுதுவதால் போய் விடாது.

காய்கறி பழங்களில் உள்ள பார்கோடு!




இனி காய்கறி பழங்களில் உள்ள பார்கோடை வைத்து அது என்ன மாதிரி? எனபதை கண்டறிந்து வாங்க முடியும் அதனால் கடைக்காரரின் பேச்சை நம்பாமல் நீங்களே ஸ்பெஸலிஸ்ட் ஆக முடியும்…. இதோ அந்த பார்கோடின் விவரம்:


நான்கு எழுத்துக்கள் 3 அல்லது 4 என்ற எண்ணில் ஆரம்பிக்கும் பழங்கள் காய்கறிகள் – பூச்சிமருந்து தெளீத்து வளர்க்கபட்டது…….உதாரணத்திற்க்கு – 3011/4011


8 என்ற எண்ணுடன் ஆரம்பிக்கும் சில லேபிள்கள் ஐந்து எண்களை கொண்டிருந்தால் அதை ஆர்கனிக் என கூறி அதிக விலையில் விற்பார்கள் ஆனால் உண்மையில் அது மரபணு மாற்றிய காய் மற்றும் பழங்கள்…….உதாரணத்திற்க்கு – 84011


9 என்ற எண்ணுடன் ஆரம்பித்து அதில் ஐந்து எண்களை கொண்டிருந்தால் அது தான் ஆர்கனிக் முறையில் பயிரடபட்ட காய் பழங்கள் ஆகும்……..உதாரணத்திற்க்கு – 94011


அனேக வாழை / ஆப்பிள் / கிவி / மாதுளை மற்றும் சில பழங்களில் இதை பார்த்து வாங்கவும்,3/ 4011 எண்ணுடைய பழங்களில் மெழுகும் இருக்கும் கவனம் தேவை


இப்படி ஒட்டிய ஸ்டிக்கரின் கோந்தும் கூட சாப்பிடும் ரகம்தான் அதனால் பாதகமில்லை ஆனால் ஸ்டிக்கரை அவாய்ட் செய்ய வேண்டும் குழந்தைகள் அதை கவனிக்காமல் சாப்பிட்டால் ’பின்’ விளைவுகள் உண்டு – அதே மாதிரி வாங்கும் போது ஸ்டிக்கரை எடுத்து பாருங்கள் நிறைய இடத்தில் ஸ்டிக்கரை எடுத்தால் நகம் கீறின மாதிரி தெரியும், அப்படி என்றால் -இது கடைக்காரன் ஸ்டிக்கரை மாற்றியிருக்கிறான் என்று பொருள்!

கஷ்டத்தை தூக்கி போடு - குட்டிக்கதைகள்!



ஒரு நாள் காலை ஒரு சிறிய எறும்பு ஒரு இறகை தூக்க முடியாமல் தூக்கி செல்வதை பார்த்தேன்.அது என்னதான் செய்கிறது என்று அதையே பார்த்து கொண்டு இருந்தேன்.


அந்த எறும்பு போகின்ற வழியில் நிறைய தடைகள் இருந்தன அது சில நேரம் தூக்கி கொண்டும் சில நேரம் அந்த இறகை இழுத்து கொண்டும் சென்றது.ஒரு இடம் வந்ததும் சிறிய இடைவெளி ஒன்று இருந்தது,அது தன் முன் காலால் தூக்கி வைத்து பார்த்தது பின்பு பின் காலால் நீட்டி எக்கி பார்த்தது அந்த எறும்பால் முடியவில்லை.


இறகை வைத்து விட்டு சுற்றி சுற்றி வந்தது.பிறகு அந்த இறகை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி இடைவெளி மீது பாலம் மாதிரி வைத்து விட்டு இந்த வழியாக ஏறி அந்த வழியாக இறங்கி விட்டது.மீண்டும் அந்த இறகை தூக்கி கொண்டு நடக்க ஆரம்பித்து விட்டது.


நான் மிகவும் ஆச்சரியப்பட்டு போனேன்.ஒரு சிறிய எறும்பு எவ்வளவு லாவகமாக இந்த பக்கம் இருந்து அந்த பக்கம் சென்றது, ஆனால் ஆறறிவு படைத்த நாம் சிறிய இடர்வந்தாலும் துவண்டு போகிறோம்.


அந்த எறும்பு கடைசியாக அதன் வீட்டை அடைந்தது.அந்த எறும்பின் வீட்டு நுழைவுவாயில் ஒரு சிறிய ஓட்டை மட்டுமே இருந்தது.அது அந்த இறகை உள்ளே எடுத்து செல்ல எவ்வளவோ முயற்ச்சி செய்து பார்த்தது ஆனால் எறும்பால் முடியவில்லை.ஒரு கட்டத்தில் அது அந்த இறகை தூக்கி போட்டுவிட்டு சென்றுவிட்டது.


எறும்பு அந்த இறகை அங்கு இருந்து எடுத்து வரும்போது அது சுமையாக தெரியவில்லை எப்போது அது தனக்கு பயன்படாது என்று தெரிந்ததோ அப்போதே அதை தூக்கி போட்டுவிட்டு தன் வேலையை பார்க்க தொடங்கிவிட்டது.


நம்ம வாழ்க்கையும் இப்படித்தான்.பணம் சம்பாதிக்க கஷ்டப்படுறோம்,வேலை செய்ய கஷ்டப்படுறோம்,குடும்ப பாரத்தை சுமக்க கஷ்டப்படுறோம்.அந்த இறகு மாதிரி தான் நம்ம கஷ்டமும்.கஷ்டத்தை தூக்கி போட்டுட்டு நாம பாட்டுக்கு நம்ம வேலைய பார்த்துகிட்டே போகணும்.

பொருளாதாரத்தை மேம்படுத்துவது எப்படி?



பணக்காரனாக ஆக வேண்டும் என்றால், அது எப்படி சாத்தியாகும் என்பதை ஒரு பணக்காரரிடமிருந்தோ அல்லது பல பணக்காரர்களைப் பற்றிய நூல்களிலிருந்தோ அல்லது அவர்கள் பின்பற்றிய வழிமுறைகளை அறிந்தோ நாமும் பணக்காரனாக ஆகிவிடலாம்.


 இதனை ஒரு பணக்காரரிடமிருந்து நேரடியாக கேட்டும் தெரிந்து கொண்டால் தவறில்லை. ஐந்தாயிரம் கோடிக்கும் மேல் மதிப்புள்ள சொத்துக்களை குவித்துள்ள ஜே. பால் கெட்டி என்கிற கோடீஸ்வரரின் ஆலோசனைகளை நாம் இங்கு அறிவோம்.


ஒரு பேட்டியில் அவரிடம் ஒரு கேள்வி கேட்க்கப்பட்டது. “தங்களுடைய வெற்றியின் ரகசியம் என்ன?”. கோடிக்கணக்கான பணம் சம்பாதித்ததை மூன்று வார்த்தையில் ரகசியமாக அவர் குறிப்பிட்டார்.


“இன்னும் கடினமாக முயற்சி செய்”.  அது தான் அவர் சொன்னது. “இன்னும் கடினமாக முயற்சி செய்” மிக எளிமையானதாக தோன்றுகிறது. ஆனால் அதைப்பற்றி தீர்க்கமாக சிந்தித்து முடிவுக்கு வர வேண்டும்.


முதலில் கடினமாக முயற்சி செய்யுங்கள்… பிறகு அதைவிட கடினமாக முயற்சி செய்யுங்கள்… பிறகு அதைவிட இன்னும் கடினமாக முயற்சி செய்யுங்கள். இவ்வாறு மேலும் மேலும் முயற்சிக்கின்ற போது, “முயற்சி கூடுவதைப் போலவே, முயற்சியின் பலனும் கூடிக்கொண்டே போகும்”.


கூட்டுவட்டி எவ்வாறு அதிவேகமாகப் பெருகிக் கொண்டே போகிறதோ, அதைப் போலவே தொடர்ந்து செய்யப்படும் முயற்சியின் பலன்களும் அதிவிரைவில் அதிகரித்துக் கொண்டே போகும். உங்கள் முயற்சி கோபுரம் போல் உயரும் போது லாபமும் கோபுரம் போல உயரத் தொடங்குகிறது. இலாபத்தின் வேகம் அதிகரிக்கும் போது நமது பொருளாதாரமும் உயர்ந்து கொண்டே செல்லும்.


 “இன்னும் கடினமாக முயற்சி செய்”

காலத்தின் அருமை!



1 வருடம் – தோல்வியடைந்த‌ மாணவனுக்குத் தெரியும்.




1 மாதம் – குறை பிறசவத்தில் குழந்தை பெற்ற குணவதிக்குத் தெரியும்.




1 வாரம் – வாரப் பத்திரிக்கை ஆசிரியருக்குத் தெரியும்.



1 நாள் – ஒரு நாள் முன்னதாகப் பதவியில் சேர்ந்து பதவி உயர்வு


பெற்றவனைய் பார்த்து பதவி உயர்வு பெறாதவனுக்குத் தெரியும்.


1 மணி – பரிட்சை எழுதும் மாணவனுக்குத் தெரியும்.



1 நிமிடம் – இரயிலைக் கோட்டைவிட்டவனைக் கேட்டால் தெரியும்.



1 வினாடி – ஓட்டப் பந்தயத்தில் ஒரு வினாடியில் தோற்றுப் போனவனுக்குத் தெரியும்.

தமிழ் சினிமாக்களில் அடிக்கடி கேட்கிற வசனங்கள்!



1. இன்ஸ்பெக்டர்ர்ர்ர்ர்.. நீங்க யார் கிட்டே பேசிக்கிட்டிருக்கீங்க தெரியுமா??

2. ஸாரி.. எதையுமே இருபத்து நாலு மணிநேரம் கழிச்சுதான் சொல்லமுடியும்.

3. நான் உங்களை உயிருக்குயிராஆஆஆஆ காதலிக்கறேன்..

4. சட்டத்தின் பிடியிலிருந்து யார்ர்ர்ர்ர்ர்ர்ரும் தப்ப முடியாது.

5. இன்னிக்கு ராத்திரி சரியா பனிரெண்டு மணிக்கு சரக்கோட அவன் வருவான்.

6. மிஸ்டர்____________! யூ ஆர் அண்டர் அர்ரெஸ்ட்!!

7. அடடே… யார் வந்திருக்காங்க பாரு..!!

8. நீயில்லாம என்னால ஒரு நிமிஷம்கூட உயிர் வாழ முடியாது.

9. தூக்குடா அவன..

10.நான் யாருங்கறது முக்கியமில்ல. நான் சொல்லப் போற விஷயம்தான்
   முக்கியம்.

11.உன்னப் பெத்து… வளத்து… ஆளாக்கி..

12.என் அன்னையின் மேல் ஆணை..

13.யாரும் அசையாதீங்க..அசைஞ்சா சுட்டுருவேன்.

14.அவன அடிச்சு இழுத்துட்டு வாங்கடா…

15.தாயில்லாத புள்ளையாச்சேன்னு செல்லம் குடுத்து வளத்தேனே…

16.எல்லாமே மேல இருக்கிறவன் பாத்துக்குவான்.

17.நான் கண்ண மூடறதுக்குள்ள இவள யார் கையிலயாவது புடிச்சுக்
   குடுத்தாதான் எனக்கு நிம்மதி.

18.என்னங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்க!!!.. எங்களையெல்லாம் ஏமாத்திட்டுப்
   போயிட்டீங்களே..

19.உங்க உப்பைத் தின்னு வளந்தவன் எஜமான். சொல்லுங்க என்ன
   செய்யணும்?

20.ஏய்ய்ய்ய்ய்ய்ய்!

21.என் வயித்துல நெருப்பு அள்ளிக் கொட்டிட்டியேடிஈஈஈஈ பாவி!!

22.என்னமோ தெரியல.. உன்னப் பாத்தா செத்துப் போன என் பையனை
   பாக்கிறமாதிரியே இருக்கு.

23.ச்சே.. நீங்கல்லாம் அக்கா தங்கச்சிகூட பொறக்கலே??

24.ஏ.. யாருடி அவன்..?

25.சார்.. போஸ்ட்..!!

26.கனம் கோர்ட்டார் அவர்களே.. ஒரு குற்றவாளி தப்பிக்கலாம். ஆனால் ஒரு
   நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது.

27.ஒரு பொண்ணு நினைச்சா…

28.இத்துடன் கோர்ட் கலைகிறது.

29.நான் இப்ப எங்கிருக்கேன் ?

30.எங்கப்பாவ கொன்னவன நான் பழிக்குப் பழி வாங்காம விடமாட்டேன்.

31.ஒரு பொண்ணோட மனசு ஒரு பொண்ணுக்குத்தான் தெரியும்..

32.நான் சொல்லப் போறதக் கேட்டு அதிர்ச்சியடையாதீங்க.. அவருக்கு
   வந்திருக்கறது…

அன்பு என்றால் என்ன ?



அன்பு நம்மில் பலர் இறைவனை நம்புகிறோம் சிலர் நம்புவதில்லை. இருப்பினும் நம் அனைவருக்கும் அப்பாற்பட்ட ஏதோ ஒரு சக்தி நம்மை ஆட்டுவிப்பதாக நம்புகின்றோம். அந்த சக்தியை நாம் ஏன் அன்பென்று எண்ண கூடாது ?


பலவிதமான மனித உறவுகளிடமும் நாம் எதிர்பார்ப்பதும், பெற விரும்புவதும் அன்புதான். மனிதர்களான நாம் மட்டுமின்றி விலங்கினங்களும் அன்பை தான் எதிர்பார்க்கின்றது. துன்பமும் பயமும் நிறைந்ததாக நாம் எண்ணுகின்ற வாழ்வில் அன்புதான் நமக்கு இருக்கும் ஒரே ஆறுதல்.


அன்பு என்றால்  என்ன ?


பல அர்த்தங்கள் பொதிந்த வார்த்தை இது. இதுதான் அன்பு என அவ்வளவு எளிதில் சொல்ல முடியாது. மேலும், அந்த அளவிற்கு ஆழமான வார்த்தை அன்பு. அன்பைப் பற்றி பேசாதவர்களே இல்லை.


நம் தாய் தந்தையை நேசிக்கிறோம், சகோதர சகோதரிகளுடம் பாசம் கொள்கிறோம், ஒருவன்/ ஒருத்தியை காதலிக்கிறோம், நட்பு கொள்கிறோம். அன்பு, காதல், பாசம், நேசம்,  நட்பு என்று பல்வேறு பெயர்களில் நாம் அழைத்தாலும் எல்லாமே அன்பு என்பதைத்தான் மையப்படுத்துகிறது.


மனிதனின் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வை அளிக்கக்கூடியது அன்பு மட்டும்தான். இதில் என்ன பிரச்சனையென்றால் அன்பாக இருப்பது எப்படி என்பதை நாம் உணராமலிருப்பதுதான்.


அன்பை நாம் எப்படி உணரப்போகிறோம் ? அன்பாக இருப்பதுதான் அன்பு என்பதை நாம் உணர வேண்டும். பலரிடமும் நாம் அன்பாக இருப்பதாக சொல்கிறோம், பேசுகிறோம். ஆனால் உண்மை என்ன ?


உதடுகள் சிரிப்பதை விடுங்கள். பொய்யாக சிரித்து போலியாக புகழ வேண்டிய கட்டாயம் பலருக்கும் வாழ்வின் பல நிலைகளிலும் ஏற்பட்டிருக்கலாம். நம்மில் எத்தனை பேர் சந்திக்கின்ற அனைவரிடமும் அன்பாக இருந்திருப்போம்?


மனம் நிறைந்த அன்பு மட்டுமே பலனைத் தரும். உள்ளன்போடு செய்யும் எந்தச் செயலும் மன மகிழ்வைத் தரும்.


எவ்வளவு துன்பங்கள், பிரச்சனைகள் இருப்பினும் அனைத்தையும் மறந்து மகிழ்ந்திருக்கச் செய்கிற சக்தி அன்பிற்கு மட்டும்தான் உண்டு. அன்பிற்கு மட்டுமே வாழ்வை இனிமையாக்க கூடிய சக்தி உண்டு.

ஒரு பிறவி பலமுறை வாழ்தல்?



கண்ணதாசனின் பாடல் வரிகளில் சில….


உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்

உலகம் உன்னிடம் மயங்கும் – நிலை

உயரும் போது பணிவு கொண்டால்

உயிர்கள் உன்னை வணங்கும்!

ஆசை கோபம் களவு கொள்பவன்

பேசத் தெரிந்த மிருகம்

அன்பு, நன்றி, கருணை கொண்டவன்

மனிதவடிவில் தெய்வம்!!



மானிடப் பிறவி: அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. அதனின் கூண், குருடு, செவிடு நீங்கி பிறத்தல் அரிது. இப்படியொரு மானிடப் பிறவியைய் பெறுவதற்கு என்ன தவம் செய்திடல் வேண்டும். இந்த அரியதொரு மானிட பிறவியில் பிறந்து பிறவிப் பயனை அடைவதற்குள், தினம் தினம் நமது வாழ்க்கையில் எத்தனை போராட்டங்கள், வேதனைகள், சோதனைகள். இறுதியல் சாதனைகள்! ஒரு பிறவியைய் எடுத்து அதில் ஒரு வாழ்க்கையைய் வாழ்வதில் நாம் இவ்வளவு சோதனைகளை சாதனைகாளக மாற்றுகிறோம். இப்படிப்பட்டதொரு வாழ்க்ககையைய் வாழ்கின்ற நம் மத்தியல் ஒரு பிறவியல் பலமுறை வாழ்ந்தவர்களைப் பற்றிப் பார்ப்போம். இவர்கள் அனைவரும் ‘மனித வடிவில் தெய்வமானவர்கள்’ என்றே கூறலாம்!!


* சர் கிறிஸ்டோஃபர் ரென் 17ம் நூற்றாண்டிலவ் வாழ்ந்தவர். இவர் இந்த 17ம் நூற்றாண்டில் இரண்டு முறை வாழ்ந்திருக்கின்றார்.

முதல் வாழ்க்கை – குழந்தைப் பருவ வளர்ச்சி, நல்ல கல்வி, ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் வான் இயல் பேராசிரியர் வேலை. முதல் வாழ்க்கை நாற்பத்தெட்டு ஆண்டுகள் நீடித்தது. பிறகு புதிய மாறுபட்ட வாழ்க்கை வாழ்வது என தீர்மானித்தார். வானிவியல் நிபுணராக இருந்து தூரத்திலிருந்து ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதை விட, வான் உலகத்தையே பூமிக்குக் கொண்டுவந்து அழகான தேவாலயங்களை நிர்மாணிப்பது என முடிவெடுத்தார்.


இரண்டாவது வாழ்க்கை – அடுத்த நாற்பத்தெட்டு ஆண்டுகளில், ஐம்பத்து மூன்று தேவாலயங்களை நிர்மாணிப்பதில் செலவிட்டார். அந்த தேவாலயங்கள் அவருடைய பெருமையின் நினைவுச் சின்னங்களாக கண்ணதாசன் பாடிய பாடல் வரிகள் போல் “நான் நிரந்தமானவன் அழிவதில்லை! எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை!!” இன்றும் நிலைத்து நிற்கின்றன. அவற்றில் ஒன்று தான் லண்டனில் உள்ள செயின்ட் பால் கதீட்ரல். அந்த மிகப்பெரிய தேவாலயம் இன்றைக்கும் அவருடைய புகழை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.


* டாக்டர் ஆல்பார்ட் ஸ்வைட்ஸர் – தத்துவ சாஸ்திரத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் என்கிற நிலையில் பல அறிவு விளக்க நூல்களை எழுதியிருக்கிறார். இது இவரது முதல் நிறைவான வாழ்க்கையின் அடையாளம்!!!

பிறகு மதத்துறையில் ஒரு புதிய வாழ்க்கையினை தேடினார். மத சம்பந்தப்பட்ட தத்துவங்களை பயின்று டாக்டர் பட்டம் பெற்றார். மத போதகராகி இரண்டாவது புதிய வாழ்க்கையினை தொடங்கினார். பிறகு, சங்கீதத்தை போதித்தார். அதைப் பயின்றார். சங்கீதத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். உலகப் புகழ் பெற்ற ‘சங்கீத மேதை’ என்கிற சிறப்புக்கும் உரியவரானார். சங்கீதத் துறையிலும் சிறப்பினைப் பெற்ற இவர் தனது மூன்றாவது வாழ்க்கையுடன் நிறுத்தவில்லை.


ஆப்பிரிக்க காடுகளில் வாழும் நாகரிகமற்ற மக்களுக்கும், ஏழை எளியவர்களுக்கும் மருத்துவ உதவி செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார். மருத்துவத்துறை பற்றியும் அறுவை சிகிச்சை பற்றியும் பயிலலானார். நான்காவது முறையாக, மருத்துவத் துறையில் டாக்டர் பட்டம் பெற்றார். சங்கீத மேதை என்கிற புகழை உதறி எறிந்து விட்டு நான்காவது வாழ்க்கையினைத் தொடங்கினார். ஆப்பிரிக்காவில் உள்ள லம்போர்னியாவில் உள்ள காடுகளில் நான்காவது வாழ்க்கை ஆரம்பமாயிற்று. மலைப்பாம்புகள், கொரிலாக்கள், முதலைகள், காட்டுமிராண்டிகள் வசிக்கின்ற ராட்சஸ காடுகளை அழித்து அங்கு வசிக்கின்ற மக்களுக்கு மருத்துவவசதி செய்ய மருத்துவமனை ஒன்றையும் கட்டினார். தனது நான்காவது வாழ்க்கையினை அந்த காட்டிலேயே அமைத்துக் கொண்டு தெய்வீக மயமானார்.


“நிகழ்காலத்திலேயே சிக்கித் தடுமாறுகிறீர்கள் என்று பலரும் சொல்வதை நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். அது ஒரு அறிவுப் பூர்வமான வாசகம்”. பலரும் ஒரே ஒரு வாழ்க்கைதான் வாழ்கிறார்கள். அதையும் வெற்றியாக்கிக் கொள்வதில் எத்தனையோ கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள்.


“வாழ்க்கை ஒரு சுகமான அனுபவமே!

வாழக் கற்றுக் கொள்வோம்.

நமது இப்போதைய வாழ்க்கையிலேயே சிக்கித் தடுமாறாமல் இருப்பதற்கான

வாழ்க்கையைய் வாழக் கற்றுக் கொள்வோம்.”!!

நீ...ண்...ட நாள் கேள்விக்கு விடை...!



முட்டையில் இருந்து கோழி வந்ததா? கோழியில் இருந்து முட்டை வந்ததா?



இதுவரை இதற்கு எவருமே சரியான பதில் அளிக்க முடியாமலிருந்து வந்தது. தற்போது இதற்கு விடை காணப்பட்டுள்ளது.

ஆம், இங்கிலாந்து விஞ்ஞானிகள் இதற்கு விடை கண்டு பிடித்துள்ளனர். அதாவது கோழியில் இருந்துதான் முட்டை வந்தது என்று அவர்கள் அடித்துக் கூறுகின்றனர்.

இங்கிலாந்தில் உள்ள ஷெப்பீல்ட், வார்விக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதுபற்றி அண்மையில் ஆய்வு நடத்தினார்கள்.

முட்டையின் செல்களை சூப்பர் கம்பியூட்டர் மூலம் அவர்கள் ஆய்வு செய்தனர். அதில் முட்டையின் செல்கள் 'வோக்லெடின்-17' (ovocleidin (OC-17) என்ற புரோட்டின் மூலம் உருவாகி இருந்தமை தெரிய வந்தது.

இந்த 'வோக்லெடின்-17' (ovocleidin (OC-17) செல் கோழியின் உடலில் உள்ளது. இதுவே முட்டையாக மாறி இருக்கிறது.

'வோக்லெடின்-17' புரோட்டின், 'கிறிஸ்டல்', 'நியூகிளீசா'க மாறி தானாக வளர்ச்சி பெற்று முட்டை செல்களாக மாறுவது இதன் மூலம் கண்டு பிடிக்கப்பட்டது.

எனவே கோழியில் இருந்துதான் முட்டை வந்துள்ளது என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் அறுதியிட்டு உறுதியாகக் கூறுகின்றனர்.

இனிமேல் யாரிடமும் யாரும் "முட்டையில் இருந்து கோழி வந்ததா? கோழியில் இருந்து முட்டை வந்ததா? " என்றெல்லாம் கேட்டு, 'டோச்சர்' பண்ணக்கூடாது. சரிதானா?

10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்!



பொதுவாக பிறந்த புதிதில் குழந்தை கள் அதிக நேரம் தூங்கும். பசி எடுக்கும் போது கண் விழித்து பால் அல்லது திரவ உணவு வகைகளை சாப்பிட்ட பின் மீண்டும் தூங்கும் இயல்பு கொண்டவை.

அதுவே ஒரு வயதானால், குழந்தைகளின் தூக்கம் குறையும்.

ஒரு வயது முதல் 3 வயது வரை அன்றாடம் பகல் நேரங்களில் சுமார் 2 முதல் 3 மணி நேரம் வரை குழந்தைகள் தூங்க நேரிடும்.

பாடசாலைக்குச் செல்லும் குழந் தைகளானால் மாலையில் பாடசாலை இல்லாத நேரங்களில் தூங்கும் பழக்கம் கொண்டிருப்பர். அவர்கள் 12 முதல் 13 மணி நேரம் வரை தூங்கக்கூடும். 5 வயதைத் தாண்டிய குழந்தைகளுக்கு குறைந்தது 9 மணி நேரமாவது தூங்க வேண்டியது அவசியமாகிறது.

வளர்ந்து பெரியவர்களாகி விட் டாலோ, 7 முதல் 8 மணி நேர தூக்கம் கண்டிப்பாகத் தேவைப் படுகிறது.

35 வயதைக் கடந்த வர்கள் 6 மணி நேரமாவது ஆழ்ந்த நித்திரை கொள்ள வேண்டும். அப்போது தான் உடல் நலமும், மன நிலையும் சரிவர செயல்பட்டு உரிய பணிகளை செவ்வனே செய்ய முடியும்.

மன நலத்துடன் தொடர்புடையது தூக்கம் என்றால் அது மிகவும் சரி.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் மருந்து தூக்கம் தான்.

போதிய அளவு தூக்கம் இல்லா ததே பல நேரங்களில் மனோரீதியா கப் பாதிப்புக்குள்ளாக காரணமாகி விடும். மனோநிலை பாதிக்கப்பட் டவர்கள் சில நேரங்களில் புலம்ப நேரிடும். அப்படிப் புலம்புபவர்களு க்கு தூக்கமே மிகச் சிறந்த மாற்று மருந்தாகும்.

எனவே 2, 3 மணி நேர தூக்கம் போதுமானதல்ல. சிலருக்கு இரவு வெகுநேரம் டி.வி. பார்க்கும் வழக்கம் இருக்கும் அதுபோன்ற வர்கள் காலையில் அதிக நேரம் தூக்குவார்கள். பின்னர் அவசரமாக எழுந்து, அலுவ லகத்திற்குத் தாமத மாகச் செல்வர். முதலில் இரவில் வெகு நேரம் கண் விழிப்பதால், அவர்களின் உடல் சூடு அதிகரித்து பல்வேறு தொந்தரவுகள் ஏற்படக்கூடும்.

எனவே தூக்கமின்மையானது பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத் தும் என்பதோடு மனோநிலை பாதிப்படைய முக்கியக் காரண மாகிறது.

தினமும் பத்து மணி நேரம் நன்றாக தூங்கினால், நூற்றாண்டு காலம் வாழ முடியும் என ஆய்வு கள் தெரிவிக்கின்றன. சீனாவில் கடந்த 2005ம் ஆண்டு முதல் 15 ஆயிரத்து 638 முதியவர்களிடம், ஒரு ஆய்வு மேற்கொள் ளப்பட்டது. 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மட் டுமே இந்த ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டனர். 90 முதல் 99 வயது உடைய 3927 பேரும், நூறு வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 2,794 பேரிடமும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நூறு வயதில் வாழ்ந்து வரும் முதியவர்களிடம் கேட்டதில் அவர்கள் தூக்கத்துக்கு குறையே வைப்பதில்லை என, தெரிந்தது. தினமும் 10 மணி நேரம் நன்றாக தூங்குவதாக இவர்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக ஆண்கள் தான், கவலையில்லாமல் தூங்கி அதிக அளவில் சதம் அடித்துள்ளதும், இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. நன்றாக தூங்குவதால் உடல் செல்கள் புதுப்பிக்கப்படுகின்றன. உடலில் உள்ள நச்சுகள் வெளியேற்றப்படுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுகிறது என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

காயத்ரி மந்த்ரம் ...




காயத்ரி என்றால்,எவரெல்லாம் தன்னைக் கானம் பண்ணுகிறார்களோ அவர்களை ரஷிப்பது என்பது அர்த்தம் ..
காயந்தம் த்ராயதே யஷ்மத் காயத்ரி (இ) த்யபிதீயதே

கானம் பண்ணுவதென்றால் இங்கே பாடுவது என்று அர்த்தம் இல்லை
யார் தன்னை பிரேமையுடனும் பக்தியுடனும் ஜபம் பண்ணுகிறார்களோ அவர்களை காயத்ரி மந்த்ரம் ரஷிக்கும் .



ஓம் பூர் புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோன: ப்ரசோதயாத்

என்று ஆரம்பிக்கும் இம் மந்திரத்தில் ஏதோ சக்தி இருக்கிறது என்பதை கட்டாயம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். இதை முறையாக ஒரு முறை செய்து பார்த்தால் வாழ்வில் வரும் மாற்றங்களை வைத்து நீங்கள் உணரலாம். சமைப்பதென்றால் கூட ஒரு முறையிருக்கிறதல்லவா. அப்படித்தான் இதுவும். இதற் கென்றொரு முறையிருக்கிறது.


இம் மந்திரத்தை விசுவாமித்திர முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின் ) மூன்றாவது மண்டலத்தில் (3.62.10 உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். என்று அழைக்கிறார்கள்.


இனி ஓதும் முறையைப் பார்ப்போமா? முதலில் உடல் சுத்தமாக இருக்க வேண்டும். ஒரு தூய இடமொன்றில் நின்றபடியோ அல்லது சப்பாணியிட்டோ அமர்ந்து ஓத வேண்டும்.


தொடங்கும் முன் ஓம்…….ஓம்………ஓம்…… என பிரணவ மந்திரத்தை 3 தரம் சொல்லித் தொடங்க வேண்டும்.
பின் மந்திரத்தை கீழ் சொன்னது போன்று கூற வேண்டும்.


மூச்சை உள்ளெடுத்துக் கொண்டு
ஓம் பூர் புவ: ஸுவ என்ற வரியை சொல்ல வேண்டும்.


பின் மூச்சை தம் கட்டிக் கொண்டு
தத் ஸவிதுர் வரேண்யம் என்ற வரியை சொல்ல வேண்டும்.


பின் மூச்சை வெளிவிட்டபடி
பர்கோ தேவஸ்ய தீமஹி என்ற வரியை சொல்ல வேண்டும்


இறுதியாக சுவாசத்தை நிறுத்தி
தியோ யோன: ப்ரசோதயாத் என்ற வரியை சொல்ல வேண்டும்.

இப்படி 108 தரம் சொல்ல வேண்டும். முடிக்கையிலும் பிரணவ மந்திரம் சொல்லித்தான் முடிக்கணும்.

மன ஒருமைப்பாட்டிற்கு எளிய பயிற்சி!












சிவப்பு நிற புள்ளியை கவனமாக பாருங்கள்.


அதையே உற்று பாருங்கள்.


உங்களுடைய எண்ணங்களை சிதறடிக்க வேண்டாம்.


இப்போது நீல நிறமாக வட்டம் மறைந்து விடும்.


மீண்டும் உங்கள் கவனம் சிதறும் போது நீல நிற வட்டம் தோன்றும்.






 Look at the red dot carefully. 


Just keep looking at it. 

Concentrate and don't think about your crush/love. 


The blue circle will gradually disappear. 


And once you loose focus, the blue circle will start re-appearing

பா.ஜ.வில் சேர்ந்தால் அமைச்சர் பதவி: கங்குலிக்கு மோடி அழைப்பு!




 இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியை பா.ஜனதாவில் சேருமாறு அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.


அவ்வாறு கட்சியில் சேர்ந்தால் வரவிருக்கும் மக்களவை தேர்தலில் போட்டியிட சீட் வழங்குவதாகவும் அக்கட்சி, கங்குலியிடம் தெரிவித்துள்ளது.


இதனிடையே மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி தருவதாக, அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


இந்நிலையில் கங்குலியிடம் இதுகுறித்து கேட்டபோது, தமக்கு பா.ஜ.வில் சேருமாறு அழைப்பு வந்துள்ளது உண்மைதான் என்றும், ஆனால் தாம் அதுகுறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும், விரைவில் இது குறித்த தனது முடிவை தாம் தெரிவிப்பதாகவும் கூறினார்.

  
சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது கொடுத்து அவரது ரசிகர்களை ஈர்க்க காங்கிரஸ் முயற்சித்தாக பா.ஜனதா குற்றம் சாட்டிய நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சிக்கு பதிலடியாக தங்கள் கட்சியில்  கங்குலியை சேர்க்க அக்கட்சி முயற்சிப்பதாக தெரிகிறது.

ஆஸ்துமாவா? அச்சம் வேண்டாம்!




கொட்டும் பனியும், கடும் குளிருமாக, காலையில் கண்விழிக்கும் போதே 'இன்னும் கொஞ்சம் தூங்கலாமே..!’ என போர்வைக்குள் சுருண்டு படுக்கத் தோன்றும் சொகுசான காலம் இது. இந்தப் பருவத்தில் வெயிலும் வெளிச்சமும் குறைந்து காற்றில் அதிக அளவு ஈரப்பதம் இருப்பதால், பல நோய்களும் வரிசைகட்டி வரக் காத்திருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு நோய்களின் பாதிப்பு மிக அதிகமாகும்.


அதிலும் டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான இந்த மூன்று மாதங்கள் ஆஸ்துமா பிரச்னை இருப்பவர்களுக்கு ஒவ்வொரு நாளும் சிம்ம சொப்பனம்தான். இந்தப் பாதிப்பிலிருந்து மீள, இன்ஹேலர், வெந்நீர், மாத்திரைகள், மருந்துகள் என ஏகப்பட்ட தற்காப்புகள் தேவைப்படும்.


இந்தக் காலக்கட்டத்தில் ஆஸ்துமா நோயாளிகள் என்னென்ன தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து விளக்கமாகக் கூறுகிறார் சென்னை, ஆஸ்துமா மற்றும் அலர்ஜி நிபுணர் டாக்டர் ஸ்ரீதரன்.


'பொதுவாக ஆஸ்துமா நோயாளிகள், குளிர்காலம் வந்தால்தான் தடுப்பு நடவடிக்கைகளைப் பற்றி யோசிக்கிறார்கள். எதிர்பாராத ஆஸ்துமா தாக்குதல்களைத் தாக்குப்பிடிக்க, பெரிய அளவில் பிரச்னை வராமல் இருக்க சில முக்கியமான நடைமுறை ஆலோசனைகளை எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும்.


ஆஸ்துமா வந்த பிறகு அதிலிருந்து விடுபடுவதற்கு மருந்துகள் இருப்பது போல, வராமல் தடுப்பதற்கும் தடுப்பு மருந்துகள் உள்ளன'' என்கிற டாக்டர் ஸ்ரீதரன், ஆஸ்துமா ஏற்படுத்தக்கூடிய காரணிகளைப் பற்றி விவரித்தார்.


குளிர்ந்த காற்று: ஆஸ்துமாவுக்கான முக்கியக் காரணங்களில் முதன்மையானது. ஆஸ்துமா என்பது, மூச்சுக்குழல் பாதிப்பு நோய்.  அடுத்தகட்டமாகத்தான் இது நுரையீரலைப் பாதிக்கிறது. காற்றில் குளிர்ச்சி அதிகரிக்கும்போது, மூச்சுக்குழலில் சுருக்கம், வீக்கம், சளி சேர்தல் போன்றவை ஏற்படுகின்றன. இதனால், மூச்சுக்குழலில் அடிப்படைச் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. சுவாசத்துக்கு உதவும் சிறிய காற்றுக்குழாய்கள் வீக்கம் அடைவதால், காற்றுப்பைகளில் அதிகமாக காற்று தங்கி, சுவாசிப்பது கஷ்டமாகிறது. மார்புத் தசைகள் புடைத்துக்கொண்டு விடுவதால், வலி ஏற்படுகிறது.


காற்றின் ஈரத்தன்மை (humidity): காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும்போது, பலவித மாசுக்களும், ஆஸ்துமா நோய்க்கான காரணிகளும் ஈரக்காற்றின் ஈரத்தன்மையோடு ஒட்டிக்கொண்டு, நீடித்திருக்கும். இவற்றால் ஒவ்வாமை ஏற்பட்டு, ஆஸ்துமா வரக் காரண மாகிறது.


காளான்களின் நுண் அணுக்கள் (mold spores): குளிர், மழைக் காலங்களில் காற்றில், கண்ணுக்குத் தெரியாத காளான்களின் நுண் அணுக்கள் இருக்கும். இவையும் ஆஸ்துமா காரணிகளே.


படுக்கை உண்ணி (dust mite): கண்ணுக்குத் தெரியாத இந்த உண்ணியின் கழிவுப்பொருளை சுவாசிக்கும்போது, அலர்ஜி ஏற்படுகிறது. மருத்துவ உலகில் இதை 'யுனிவர்சல் அலெர்ஜென்’ என்று அழைப்பார்கள். பொதுவாக எல்லோரும் 'ஏர்கண்டிஷன்’ சாதனம், ஆஸ்துமாவுக்கு நல்லதல்ல என்பார்கள். ஆனால், 'ஏசி’ ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஏனெனில், காற்றில் ஈரத்தன்மை அதிகமாக ஆக, காளான்களின் நுண் அணுக்களும், படுக்கை உண்ணிகளும் அதிகமாகும். குறைந்தது 50 சதவிகிதமாவது, ஈரத்தன்மை இருந்தால்தான் இந்த உண்ணியால் உயிர் வாழ முடியும். 'ஏசி’ போடும்போது, ஈரத்தன்மை 30 சதவிகிதமாகக் குறைந்துவிடும். படுக்கை உண்ணியின் தொகையும் குறைவாகவே இருக்கும்.


வைரஸ் தாக்குதல்: குளிர்காலத்தில், குறிப்பிட்ட சில வைரஸ் அதிகம் காணப்படும். நுரையீரலைத் தாக்கக்கூடிய ஆர்.எஸ்.வி. (respiratory syncytial virus) போன்ற வைரஸ் வகைகளும் மூச்சுக்குழலுக்கு அதிகப் பாதிப்பைக் கொடுக்கும். அதிலும், ஒரு வயதுக்குள் உள்ள குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த வைரஸ் தொற்றுக்கு 'பிராங்கியோலைடிஸ்’ என்று பெயர். இதன் அறிகுறியும் பாதிப்பும் ஆஸ்துமா போன்றே இருக்கும். வைரஸ் தொற்றா அல்லது ஆஸ்துமா தாக்குதலா என்று கண்டறிவதுகூடக் கடினம். இது மூச்சுக்குழாய்களில் தாக்கும்போது, மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு ஆஸ்துமா வருவதற்கு வாய்ப்பு உண்டு.


கொசு விரட்டிகள்: மழைக் காலம் வந்தால், கொசுக்களுக்குக் கொண்டாட்டம்தான்.  குளிர்காலத்திலும் இது அதிகமாக உற்பத்தியாக ஆரம்பித்துவிடும். கொசுவை விரட்டுவதற்காக, நாம் உபயோகப்படுத்தும் சுருள்களும் மருந்துகளும்கூட ஆஸ்துமாவை அதிகப்படுத்தும்.


ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த பாதுகாப்பான, வீரியமான மருந்துகள் உள்ளன. மூக்குக்குள் உறிஞ்சும், nasal spray வகைகளை மருத்துவரின் ஆலோசனையுடன் உபயோகிக்கலாம்.


மொத்தத்தில், 'ஆஸ்துமா வந்தால் மட்டுமே சிகிச்சை’ என்ற மனோபாவத்தை மாற்றி, எப்போதுமே மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வதன் மூலம், குளிர்காலத் தாக்குதல்களிலிருந்து முழுமையாக விடுபடலாம்'' என்கிறார் டாக்டர்.

காதல் மனைவியைப் பிரிகிறார் ஹ்ரித்திக் ரோஷன்!





பாலிவுட் உலகில் கொடிகட்டிப் பறக்கும் ஹ்ரித்திக் ரோஷன் தன் காதல் மனைவியிடம் இருந்து பிரிகிறார். இது ஹ்ரித்திக் மனைவி சுசன்னேவின் விருப்பமாம்.


நடிகர் சஞ்சய்கானின் மகள் சுசன்னே மீது காதல் பற்றிக் கொள்ளவே, கடந்த 2000ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ல் திருமணம் செய்து கொண்டனர்.


இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.  இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து பிரிந்து வாழ முடிவு செய்துள்ளனர்.


''எங்களது 17 ஆண்டுகால உறவுமுறை முடிவுக்கு வந்துவிட்டது. என்னை விட்டுப் பிரிய அவர்(சுசன்னே) தீர்மானித்துவிட்டார், இது எனது குடும்பத்தினருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதனால் என்  ரசிகர்கள் துவண்டுபோய் விடக் கூடாது. இதிலிருந்து நான் மீண்டுவர தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள்''  என்று ஹ்ரித்திக் தன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


சுசன்னேவின் தந்தை நடிகர் சஞ்சய்கான் ''இதை முடிவு என்று கருதுவது தவறு.  அவர்கள் இருவரும் நிரந்தரமாகப் பிரியவில்லை'' என விளக்கம் அளித்துள்ளார்.

உடம்பெல்லாம் ஒரே வலியா இருக்கா?





ஓடியாடி வேலை செய்த காலம் போய் ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.

குறிப்பாக உடலில் பல வலிகளும் அதிகரித்துவிட்டது. இதற்கு முக்கிய காரணம், போதிய ஓய்வு இல்லாதது, உடற்பயிற்சி செய்யாதது, தூக்கமின்மை என்று சொல்ல ஆரம்பித்தால், சொல்லிக் கொண்டே போகலாம்.

மேலும் இத்தகைய செயலால் உடலில் நாள்பட்ட வலிகள் தங்கி, உடலின் ஆரோக்கியத்தையே கெடுத்து விடுகிறது.

இதற்காக எத்தனையோ மருந்து மாத்திரைகள் கடைகளில் விற்கப்படுகின்றன. இருப்பினும் அவை தற்காலிகமானவையே தவிர, நிரந்தரமானவை அல்ல.

இவ்வாறான மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் வேறு விதமான விளைவுகளும் ஏற்பட வாய்ப்புண்டு.

எனவே நிரந்தரமான தீர்வைப்பெற இயற்கை பொருட்களை பயன்படுத்தலாம்.

தேன்: தொண்டை வலி


 தேன் தொண்டையில் ஏற்படும் வலிக்கு ஒரு சிறந்த நிவாரணியாகும். எனவே தொண்டையில் புண் அல்லது அதனால் ஏற்படும் வலியை போக்குவதற்கு, தேனை தினமும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

காபி: ஒற்றை தலைவலி

 காப்ஃபைனை தினமும் அளவுக்கு அதிகமாக பருகினால் தான் உடலுக்கு ஆபத்தே தவிர, அளவாக பருகினால் ஒற்றை தலைவலியில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

பூண்டு எண்ணெய்: காது வலி


 காதுகளில் வலி ஏற்பட்டால், பூண்டுகளை தட்டி கடுகு எண்ணெயில் போட்டு வெதுவெதுப்பாக சூடேற்றி, அதனை காதுகளில் ஊற்றினால் உடனே வலி நீங்கிவிடும்.

கிராம்பு: பல் வலி


 சொத்தை காரணமாக பற்களில் வலி ஏற்பட்டால், அப்போது கிராம்புகளை அந்த பற்களின் மேல் வைத்து கடித்துக் கொண்டால் பல் வலி போய்விடும்.

வெதுவெதுப்பான நீர் குளியல்: தசைப் பிடிப்பு


 உடலில் ஆங்காங்கு தசைப் பிடிப்புகள் ஏற்பட்டால், அப்போது வெதுவெதுப்பான நீரில் குளியல் எடுத்தால் பிடிப்புக்கள் நீங்குவதோடு உடலுக்கு மசாஜ் செய்தது போன்றும் இருக்கும்.

உப்பு: பாத வலி
 நிறைய மக்களுக்கு இரவில் படுக்கும் போது பாத வலியால் அவஸ்தைப்படுவார்கள். முக்கியமாக கர்ப்பிணிகள் பாத வீக்கத்தால் பாதிக்கப்படுவார்கள். அப்போது வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து, அந்த நீரில் கால்களை சிறிது நேரம் ஊற வைத்தால், வலி நீங்குவதோடு வீக்கமும் குறையும்.

திராட்சை: முதுகு வலி

 முதுகு வலியின் போது திராட்சை சாப்பிட்டால், உடலில் இரத்த ஓட்டமானது சீராக இருந்து முதுகு வலி வராமல் தடுக்கும் என்று ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே நாள்பட்ட முதுகு வலியைக் கொண்டவர்கள், தினமும் திராட்சை சாப்பிட்டால், முதுகு வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.

மஞ்சள்: வீக்கத்தை குறைக்கும்

 மஞ்சளில் எண்ணற்ற ஆன்டி-செப்டிக் தன்மை உள்ளதால், அது பல்வேறு வலிகள் மற்றும் வீக்கங்களை சரிசெய்யும். அதிலும் வீக்கம் அதிகம் உள்ள இடத்தில், மஞ்சளை தண்ணீரில் கலந்து, அந்த பேஸ்ட்டை தடவினால் வீக்கமானது தணியும்.

செர்ரிப் பழங்கள்: மூட்டு வலி


 மூட்டு வலி உள்ளவர்கள் செர்ரிப் பழத்தை அதிகம் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆந்தோசையனின்கள் மூட்டு வலியை குணமாக்கும்.

தக்காளி: கால் பிடிப்பு

 இரவில் கடுமையான கால் பிடிப்பு ஏற்படுகிறதா? அப்படியானால், உணவில் தக்காளியை அதிகம் சேர்த்தால், அதில் உள்ள பொட்டாசியம் கிடைத்து நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

மீன்கள்: அடிவயிற்று வலி


 மீன்களில் சால்மன் அல்லது டூனா போன்ற மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது.இது வயிற்றில் உள்ள புண்களை சரிசெய்யக்கூடிய சக்தி கொண்டவை. எனவே இத்தகைய மீன்களை அதிகம் சாப்பிட்டால், அடிவயிற்றில் ஏற்படும் வலியைத் தணிக்கலாம்.

ஓட்ஸ்: மாதவிடாய் வயிற்று வலி


 மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலியை சரிசெய்ய, ஓட்ஸ் பெரிதும் உதவியாக இருக்கும். எனவே தினமும் 1 கப் ஓட்ஸை காலையில் சாப்பிடுங்கள்.

அன்னாசி: வாயுத் தொல்லை


 வாயுவினால் ஏற்படும் வயிற்று வலியை தவிர்ப்பதற்கு, அன்னாசியை சாப்பிட்டு வந்தால் அன்னாசி வயிற்றில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி வயிற்றில் வாயு சேர்வதைத் தடுக்கும்.

புதினா: தசைப்புண்


 அதிகப்படியான வேலைப்பளுவால் தசைகள் அளவுக்கு அதிகமாக வலிக்க ஆரம்பித்தால், அப்போது வெதுவெதுப்பான நீரில் சிறிது புதினா எண்ணெய் சேர்த்து குளித்தால் அது வலியைக் குறைத்துவிடும்.

நல்ல பாஸ்வேர்டை உருவாக்க எளிய வழி!





பாஸ்வேர்டை மறந்து விடுங்கள். இனி பாஸ்பிரேசை பயன்படுத்துங்கள், இதுவே பாதுகாப்பான பாஸ்வேர்டை உருவாக்குவதற்கான எளிய வழி என்கின்றனர் நிபுணர்கள். அது என்ன பாஸ்பேர்ஸ்? பாஸ்வேர்டு என்றால் கடவுச்சொல்! பாஸ்பிரேஸ் ...என்றால் கடவுவாக்கியம். அதாவது ஒரு வாக்கியத்தில் இருந்து பாஸ்வேர்டை உருவாக்குவது .

உதாரணத்திற்கு நான் இந்த பள்ளியில் இந்த ஆண்டு படித்தேன், என்ற வாக்கியத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த வாக்கியத்தில் ஒவ்வொரு வார்த்தைகளிலும் உள்ள முதல் எழுத்துக்களை மட்டும் எடுத்து வரிசையாக எழுதுங்கள். அதன் நடுவே மானே தேனே பொன்மானே போடுவது போல சில எழுத்துக்களை பெரிய எழுத்தாக எழுதுங்கள். எண்கள் வருவது போல பார்த்துக்கொள்ளுங்கள்:. இப்போது கிட்டத்தட்ட 15-16 எழுத்துக்களைல் பாஸ்வேர்டு தயாராகிவிடும். இந்த எழுத்து வரிசையை யாராலும் அத்தனை எளிதில் ஊகித்துவிடவும் முடியாது. அதன் காரணமாகவே தாக்காளர்களாலும் நடுவே இதனை கண்டறிந்து உடைக்க முடியாது.

இந்த எழுத்து வரிசையை பார்க்கும் போது முதலில் உங்களுக்கே தலை சுற்றும். இத்தனை கடினமானதை எப்படி நினைவில் கொள்வது என மலைப்பாக இருக்கும். ஆனால் நீங்கள் இதை உருவாக்க பயன்படுத்திய அடிப்படை வாக்கியத்தை நினைவில் வைத்திருந்தால் போதுமானது, அதிலிருந்து பாஸ்வேர்டை உருவாக்க பயன்படுத்திய யுக்தியை கொண்டே அதை மீண்டும் எழுதிவிடலாம்.. இதற்கான குறிப்புகளை மட்டும் நினைவில் கொண்டால் போதுமானது.

பாஸ்வேர்டை உருவாக்க பெரும்பாலலும் எல்லோரும் பொதுவான வழிமுறைகல்ளையே கையால்கின்ற்னர். இவற்றை கொண்டே தாக்காளர்கள் பாஸ்வேர்டை யூகித்து விடுகின்றனர். ஆனால் வாக்கியங்கள் கொண்டு பாஸ்வேர்டை உருவாக்கும் போது மற்றவர்கள் அதை யூகிப்பது கடினம். அடிப்படை வார்த்தை தெரிந்தால் கூட அதில் செய்த மாற்றங்களை அப்படியே செய்வது கடிமானது.

எனவே தான் பாஸ்பேரேசை பயனப்டுத்துங்கள் என்கின்றனர்.

சாப்ட்வேர் பாதுகாப்பு சேவை அன்செக்கி!





 எப்போதேனும் உங்கள் இணைய முகப்பு பக்கம் உங்களுக்கு தெரியாமலே மாறியிருப்பதை கவனித்திருக்கிறீர்களா? அதே போல நீங்கள் பயன்படுத்தும் தேடியந்திரம் திடிரென தானாக மாறியிருக்கிறதா ? இவ்வளவு ஏன் உங்கள் பிரவுசரும் மாறியிருக்கலாம், கவனித்திருக்கிறீர்களா?


இந்த மாற்றங்களை நீங்கள் கவனித்து இவற்றுக்கான காரணம் புரியாமல் விழித்திருக்கலாம். அல்லது இந்த மாற்றங்களை கவனிக்கமாலே கூட இருந்திருக்கலாம். அநேகமாக நீங்கள் புதிதாக ஒரு சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்த பிறகு இந்த மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம். ஏனெனில் பல சாப்ட்வேர்கள் , அவற்றை இன்ஸ்டால் செய்யும் போது கூடவே தேவையில்லாத வேறு சில சாப்ட்வேர் துண்டுகள் அல்லது நீட்டிப்புகளையும் சேர்த்தே நிறுவுகின்றன. இந்த அழையா விருந்தாளிகள் தான் உங்கள் கம்ப்யூட்டரில் மாற்றங்களை செய்கின்றன. உங்களை அறியாமலே பின்னணியில் கூட இவை செயல்படலாம்.


பெரும்பாலான நேரங்களில் இன்ஸ்டால் செய்யப்படும் போதே , இவை தேவையா என கேட்கப்பட்டிருக்கலாம். அவற்றை நீங்கள் கவனிக்கமாலும் இருந்திருக்கலாம். எது எப்படியோ, புதிய சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்யும் போது அந்த சாப்ட்வேர் தவிர வேறு எந்த தேவையில்லாத சாப்ட்வேர் பயன்பாடுகளும் உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவப்படாமல் பாதுகாத்து கொள்ள விரும்பினால் அன்செக்கி சேவையை பயன்படுத்தி பார்க்கலாம்.


சாப்டேவேர்டன் நேரடியாக அல்லது மறைமுகமாக நிறுவப்படும் தேவையில்லாத பயன்பாடுகளை கண்டறிந்து அவற்றை தடுத்து நிறுத்துவதாக அன்செக்கி உறுதி அளிக்கிறது. அதே போல ஏதேனும் உபரி சாப்ட்வேர் நிறுவப்படுவதாக் இருந்தால் அது பற்றி எச்சரிக்கையும் செய்வதாக சொல்கிறது. ஆக புதிய சாப்ட்வேரை இன்ஸ்டால் செயவதாக இருந்தால் அதற்கு முன்னர் அன்செக்கியை நிறுவிக்கொள்ளலாம். ( அன்செக்கி வேறு எதையும் நிறுவாது என நம்புவோம்).



இப்படியாக அன்செக்கி சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யும் போது பாதுகாப்பு அளிப்பதோடு , குறிப்பிட்ட சாப்ட்வேர்கள் அப்டேட் செய்யப்படும் போது தானாகவே அந்த மேம்பாடுகளையும் செயலுக்கு கொண்டு வருகிறது.


இணையதள முகவரி:   http://unchecky.com/

ஆன்லைனில் படம் காட்டலாம்; புதிய இணையதளம்.!



லைவ் ரிலே போல இணையத்தில் லைவாக புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும் ? இந்த அனுபவத்தை சோதித்து பார்க்க லைவ்.பிக்ஸ்.இயோ சேவையை பயன்படுத்தி பார்க்க வேண்டும். அடிப்படையில் புகைப்பட பகிர்வு சேவையான இந்த தளம் இணையம் வழி புகைப்படங்களை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள உதவுகிறது. புகைப்பட பகிர்வு சேவை தான் ஏற்கனவே நிறைய இருக்கின்றனவே என்று அலுத்துக்கொள்ளும் முன் கவனிக்க, இந்த சேவை புகைப்பட பகிர்வில் புதுமையை கொண்டு வந்திருக்கிறது .


எல்லா புகைப்பட பகிர்வு சேவை போலவே ,இதிலும் முதலில் பகிரவேண்டிய புகைப்படத்தை பதிவேற்ற வேண்டும். புகைப்படம் என்பதைவிட புகைப்படங்களை பதிவேற்றினால் சிறப்பாக இருக்கும். உடனே உங்கள் புகைப்பட்டத்துக்கான இணைய முகவரி ஒன்று உருவாக்கி தரப்படும். அந்த முகவரியை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த முகவரியை கிளிக் செய்தால் நண்பர்கள் கிளிக் செய்தவுடன் அசந்து போவார்கள்.


காரணம் நீங்கள் அனுப்பிய புகைப்படங்களை அவர்களால் பார்க்க முடியும் என்பது மட்டும் அல்ல: அந்த படங்களின் பின்னே உள்ள கதைகளை நீங்கள் விவரிப்பதை அவர்கள் கேட்கலாம் என்பதால் தான் இந்த அசரல். ஆம் , புகைப்படங்களை கிளிக் செய்ததுமே இந்த சேவை ஒரு தனி அரட்டை அறையை உருவாக்கி கொடுக்கும். இம்ங்கிருந்து நீங்கள் ஒவ்வொரு புகைப்படம் எடுக்கப்பட இடம் பற்றி வரணனை செய்ய நண்பர்கள் கேட்டு ரசிக்கலாம்.


எங்காவது விடுமுறைக்கு போய்வந்ந்தால் விட்டுக்கு வந்த நண்பர்களிடம் ஆல்பத்தை காட்டி சுற்றுலா அனுபவத்தை விவரிப்பது போல , இந்த சேவை ஆன்லைனில் நண்பர்களிடம் புகைப்படம் பின்னே உள்ள கதைகளை பகிர்ந்து கொள்ள உதவுகிறது.


இப்போது சொல்லுங்கள் , புதுமையான புகைப்பட பகிர்வு சேவை தானே.

இணையதள முகவரி: http://live.pics.io/

Xolo Opus Q1000 பேப்லட் ரூ.9,999 விலையில் ஆன்லைனில் கிடைக்கும்!




Xolo- வின் சமீபத்திய பேப்லட்டானா, Opus Q1000, இந்திய சந்தையில் இப்போது கிடைக்கிறது. Xolo Opus Q1000 இ-காமர்ஸ் இணையதளத்தில் ப்ரீ ஆர்டர்கள் மூலம் ரூ.9,999 விலையில் கிடைக்கும். Xolo Opus Q1000 ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் இயங்குகிறது மற்றும் ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம் ஆதரவு கொண்ட இரட்டை சிம் பேப்லட் ஆகும்.

அது 480x854 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் FWVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே. பேப்லட்டில் ரேம் 1GB உடன் 1.2GHz குவாட் கோர் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இது ஒரு எல்இடி ப்ளாஷ் இணைந்துள்ள 5 மெகாபிக்சல் Autofocus பின் கேமரா உள்ளது, மேலும் ஒரு VGA முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.

Xolo Opus Q1000 microSD அட்டை உதவியுடன் 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4GB உள்ளடிக்கிய சேமிப்பு வருகிறது. இது ஒரு 2000mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது. பேப்லட் இணைப்பு விருப்பங்கள் ப்ளூடூத், Wi-Fi,, ஜிபிஆர்எஸ், எட்ஜ், ஜிபிஎஸ் / எஜிபிஎஸ் மற்றும் 3G ஆகியவை அடங்கும். Xolo Opus Q1000 measures 143.3x72.9x8.95mm. மேலும் இந்த பேப்லட் பற்றி Flipkart தளத்திலும் பட்டியலிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே உள்ள Xolo Q500, Xolo Q600, Xolo Q700, Xolo Q800, Xolo Q900, Xolo Q1000, Xolo Q1000S, மற்றும் Xolo Q2000 போன்றே நிறுவனத்தின் Q ஸ்மார்ட்போன் தொடர் வரிசையை விரிவுபடுத்தி புதிய Xolo பேப்லட்டை போன்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். இவை அனைத்தும் குவாட் கோர் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.

Xolo Opus Q1000 பேப்லட் குறிப்புக:


480x854 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் FWVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே,
1.2GHz குவாட் கோர் ப்ராசசர்,
ரேம் 1GB,
5 மெகாபிக்சல் Autofocus பின் கேமரா உள்ளது,
VGA முன் எதிர்கொள்ளும் கேமரா,
microSD அட்டை உதவியுடன் 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4GB உள்ளடிக்கிய சேமிப்பு,
இரட்டை சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்),
ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன்,
2000mAh பேட்டரி.

லெனோவா S650, லெனோவா S930 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்!




லெனோவா அதன் S தொடரை விரிவுபடுத்தி புதிய இடைப்பட்ட ஸ்மார்ட்போன்களான, லெனோவா S650 மற்றும் லெனோவா S930 அறிமுகப்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் புதிய S தொடர் ஸ்மார்ட்போன்கள் அறிவித்துள்ளனர், மற்றும் இந்த புதிய போன்களின் விலையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

லெனோவா S650 மற்றும் லெனோவா S930 ஸ்மார்ட்போன்கள்  உலகளவில் கிடைப்பது பற்றி விரிவாக கொடுக்கப்படவில்லை. லெனோவா S650 11.990 ரஷியன் ரூபிள் (சுமார் ரூ 22,600) கிடைக்கும், லெனோவா S930 13990 ரஷியன் ரூபிள் (ரூ. 26,500 தோராயமாக) கிடைக்கும்.

லெனோவா S650:

ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் இயங்கும் மற்றும் ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம் ஆதரவு கொண்ட இரட்டை சிம் சாதனம் ஆகும். இது 4.7இன்ச் qHD (540x960) டிஸ்ப்ளே வருகிறது. இது 1GB ரேம் உடன் 1.3GHz குவாட் கோர் மீடியா டெக் MT6582 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.

microSD அட்டை வழியாக விரிவாக்கக்கூடிய 8GB உள்ளடிக்கிய சேமிப்பு உள்ளது, அதிகபட்ச சேமிப்பு ஆதரவு பற்றி விரிவாக கொடுக்கப்படவில்லை. 2000mAh பேட்டரி மற்றும் 126 கிராம் எடை, 138x69.8x8.7mm measures. ஆனால் முக்கிய கேமரா மற்றும் முன் கேமரா பற்றி குறிப்பிடவில்லை.

லெனோவா S930:

ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் இயங்கும் மற்றும் ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம் ஆதரவு கொண்ட இரட்டை சிம் பேப்லட் ஆகும். இது 6 இன்ச் HD (720x1280) டிஸ்ப்ளே வருகிறது. மாலி-400 எம்.பி. உடன் 1.3GHz குவாட் கோர் மீடியா டெக் MT6582 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 1GB ரேம் கொண்டுள்ளது.

லெனோவா S930 8 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் ஒரு 1.6-மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளன. இந்த பேப்லட்டில் 8GB உள்ளடிக்கிய சேமிப்பு, மற்றும் விரிவாக்கக்கூடிய சேமிப்பு ஆதரவு கொண்டுள்ளது. இது 000mAh பேட்டரி திறன் மற்றும் 170 கிராம் எடையுடையது. இது பரிமாணங்களை 170x86x8.65mm வருகிறது.

வீரம் படத்தின் இசை டிச.20 இல் வெளியீடு!




தல அஜீத்தின் பொங்கல் ஸ்பெஷலாக வரும் ஜனவரி 10 ஆம் வெளியாகும் வீரம் படத்தின் இசை வரும் டிசம்பர் 20-ம் தேதி வெளியாகிறது. விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் திருமதி பாரதி ரெட்டி மற்றும் திரு வெங்கட்ராம ரெட்டி தயாரிப்பில்  சிவா இயக்கியுள்ள பிரமாண்டம்மாண படம் வீரம்.


தல ரசிகர்களை கவரும் வண்ணம் தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைப்பபில் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அவரது இசை பயணத்தில் இந்த படம் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்று இயக்குனர் சிவா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் இசை இம்மாதம் 20ஆம் தேதி வெளியாகிறது.


டைம்ஸ் ஆப் இந்தியா குழுமத்தின் ஜுங்கலீ மியூசிக் நிறுவனம், படத்தின் இசையை வெளியிட உள்ளது. அஜீத்துடன், தமன்னா, நாசர், அதுல் குல்கர்னி, ரமேஷ் கண்ணா, விதார்த், பாலா, சந்தானம் , முனீஸ் , சுஹைல் ,தம்பி ராமையா, அப்பு குட்டி , மயில் சாமி, சுமித்ரா, சுஜாதா, ரோஹினி அட்டங்காடி , அபிநயா, மனோ சித்ரா, சூசாகுமார், தேவதர்ஷினி ,வித்யு லேகா, என்று ஒருமிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. வீரம்  படம், பாடல்களில் மட்டுமின்றி, கதை அமைப்பிலும், காட்சி அமைப்பிலும் மிக பிரம்மாண்டமாக , அனைவரும் விரும்பும் வகையில் இருக்கும் என்றும் இயக்குநர் சிவா கூறியுள்ளார்.

இசையில் சர்வதேசத்தையும் அதிர வைக்கும் மானாமதுரை கடம்!




இசையால் வசமானவர்கள், அதை மீட்டும் கலைஞரைப் பாராட்டுவார்கள். இசையை இழையோடவிட்ட இசைக் கருவியைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள். ஆனால் முதல்முறை யாக, இசைக்கருவி தயாரிக்கும் கலைஞர் ஒருவருக்கு விருது அறிவித்து கவுரவித்திருக்கிறது மத்திய அரசு.

மத்திய மனிதவள ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள சங்கீத நாடக அகடமி, 60 ஆண்டுகளை கண்ட அமைப்பு. ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்க ளுக்கு புரஸ்கார் விருதுகளை வழங்கி கவுரவித்து வரும் இந்த அமைப்பு, முதல்முறையாக இந்த ஆண்டு, கடம் தயாரிக்கும் கலைஞரான மானா மதுரை மீனாட்சி அம்மாளுக்கு புரஸ்கார் விருதை அறிவித்திருக்கிறது.

கலக்கும் கடம் 

மண்பாண்டத் தொழிலுக்கு பேர் போன மானாமதுரையில் கடம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஒரே குடும்பம் மீனாட்சி அம்மாளின் குடும்பம் தான். சுமார் 150 ஆண்டுகளாக இந்தத் தொழிலை செய்து வருகிறார்கள். இவர்களின் கைப்பக்குவத்தில் உரு வான ‘கடம்’கள் இந்தியாவில் மட்டு மின்றி ஆஸ்திரேலியா, பெல்ஜியம், அமெரிக்கா, லண்டன், இலங்கை, ஜப்பான், மலேசியா என சர்வதேச இசைக் கலைஞர்களின் கைகளிலும் கிடுகிடுத்துக் கொண்டிருக்கிறது.

‘‘எங்களுக்கு இந்த விருது கிடைச்சது ரொம்ப பெருமையா இருக்கு. இசைக்கருவி தயாரிக் கிறவங்களுக்கு விருது குடுத்திருப்பது இதுபோன்ற தொழிலில் இருக்கறவங் களை ஊக்கப்படுத்தும்’’ என்று தங்களின் மகிழ்ச்சியை ‘தி இந்து’விடம் பகிர்ந்துகொண்டார் மீனாட்சி அம்மாளின் மகன் ரமேஷ்.

“எங்க பாட்டனார் உலகநாத வேளார், தாத்தா வெள்ளைச்சாமி வேளார், அப்பா கேசவன் வேளார்.. அவங்களுக்கு அப்புறம் நானும் எங்கம்மாவும் இப்ப இந்தத் தொழிலை செஞ்சுட்டு வர்றோம். எங்க முன்னோர் கள் இசையிலும் நாடகத்திலும் நாட்டம் உள்ளவங்க. அதனால்தான் எங்களுக்கும் அந்த ஞானம் கொஞ்சம் தொத்திக்கிச்சு.

மூவாயிரம் தடவை தட்டணும் 

கடம் செய்யுறது அவ்வளவு சுலபமான வேலை இல்லைங்க. தட்டுனா ஸ்ருதி சுத்தமா வரணும். இதுக்காக கிராபைட், ஈய செந்தூரம் மாதிரியான பவுடர் களைப் போட்டு மண்ணைப் பக்குவப் படுத்தணும். ஒரு தடவ தட்டுனா சுமாரா 15, 20 நொடிகளாச்சும் அதிர்வு இருக் கணும். அப்படி இருந்தாத்தான் ஸ்ருதி சுத்தமா இருக்கும். அந்தளவுக்கு வரணும்னா, கொறைஞ்சது மூவாயிரம் தடவையாச்சும் மரப் பலகையால தட்டித் தட்டி கடத்தை உருவாக்கணும்.

மண்பாண்டம் செய்யுறது எங்க ளுக்கு குலத்தொழில். அப்பப்ப இடை யிலதான் கடம் செய்யுறோம். மூணு நாள் மெனக்கெட்டோம்னா இருபது கடம் வரைக்கும் செஞ்சு முடிச்சிரு வோம். அந்த இருபதும் சேல்ஸ் ஆன பின்னாடித்தான் அடுத்ததா கடம் செய் வோம். பெங்களூரில் இருக்கிற உ.வே. சாமிநாத அய்யரின் பேத்தி சுகன்யா ராம்கோபால்தான் முதல் பெண் கடம் வித்வான். ஜலதரங்கம் மாதிரி இப்ப அவங்க கடதரங்கம் பண்ணிட்டு இருக்காங்க. அவங்க வாசிக்கிற கடம் அத்தனையுமே எங்க தயாரிப்புத்தான்.

டிரம்ஸ் சிவமணிக்கு… 

பிரபல இசைக்கலைஞர் டிரம்ஸ் சிவமணி, வெளிநாட்டுக்கு போயிருந் தப்ப உதூ, உத்தாங்கோ என்ற ரெண்டு இசைக் கருவிகளை வாங்கிட்டு வந்திருக்காரு. ஃபைபர்ல செஞ்சிருந்த அந்தக் கருவிகள் எப்படியோ உடைஞ்சி போச்சு. ‘இதே மாதிரி களிமண்ல செஞ்சுத் தரமுடியுமா?’ன்னு கேட்டாரு. பத்து பீஸ் செஞ்சுக் குடுத்தேன். அதை வெச்சு இப்பப் பட்டையை கெளப்பிக் கிட்டு இருக்காரு…” என்றார் ரமேஷ்.

புரஸ்கார் விருதுடன் ஒரு லட்சத்துக் கான பணமுடிப்பும் பாராட்டுப் பொன் னாடையும் மீனாட்சி அம்மாளுக்கு வழங்கப்படுகிறது. விருது கிடைத் திருப்பது குறித்து கேட்டபோது, ‘‘எங்க மாமனார், வீட்டுக்காரர் இவங்கெல் லாம் சொல்லிக் குடுத்துட்டுப் போன தைத்தான் நாங்க செஞ்சுட்டு இருக் கோம். அவங்களுக்கு கிடைக்காத பெருமை எனக்குக் கிடைச்சிருக்கு. மொத்தத்துல சந்தோஷம்யா’’ என்று சிரித்தார் மீனாட்சி அம்மாள்.

‘‘உங்களுக்குப் பின்னாடி உங்கள் வாரிசுகள் கடம் பண்ணுவார்களா?’’ என்று ரமேஷிடம் கேட்டபோது, ‘‘குலத் தொழில் என்பதால் எங்க குடும்பத்துல வர்ற எல்லாரும் கட்டாயம் மண்பாண் டம் செய்வாங்க. என்னோட மகளுக் கும் மண்பாண்டத் தொழில் தெரியும். கடம் செய்யுறதுக்கு என்னோட தங்கச்சி மகன் ஹரிஹரனை தயார்படுத் திட்டு இருக்கேன். அதுக்காகவே அவன் சங்கீதம் படிச்சிட்டு இருக்கான்’’ என உற்சாகமாகச் சொன்னார்.

டிசம்பர் 15 , 2013 திரையிடப்படும் CIFF படங்களின் முன்னோட்டம்!




தேதி : 15 Dec 2013

திரையரங்கம் : WOODLANDS

11:00 am : A Long And Happy Life

ரஷ்யாவின் சிறிய கிராமம் ஒன்றில் வசிப்பவன் சாஷ்சா. அவனுக்கு கொஞ்சம் நிலம்.. கொஞ்ச ஒரு காதலி. இப்படி மிக எளிமையாகக் கழிகிற அவன் வாழ்க்கையில் திடீரென புயல். அரசாங்கம் அவன் நிலத்தைப் பறித்துக் கொள்கிறது. சாஷ்சாவுக்கு விவசாயம் தவிர வேறு தொழில் தெரியாது. வேறெங்காவது போ.. கூலி வேலை செய் என்று விரட்டுகிறது அரசு, சாஷ்சா தன் நிலத்தை மீட்பதென முடிவெடுக்கிறான். ஒரு அரசாங்கத்தை எதிர்த்து ஒற்றை மனிதனின் போராட்டம். ரஷ்ய சினிமாவில் அன்று புடவ்கின், ஐசன்ஸ்டீன் காலத்தில் கம்யூனிச ஆதரவு பிரச்சாரம். இன்று அதே சினிமாவில் கம்யூனிச எதிர்ப்பு.

2:00 am : Puppy Love

மனதின் விசித்திரம்.. மாறும் அதன் நிறம், மணம், குணம். இருக்கும் செல்போனை தலையைச் சுற்றி தூக்கி எறிந்துவிட்டு இன்னொன்று வாங்கவே ஏங்கும். டயானாவும் அப்படித்தான். அவள் தூக்கி எறிந்தது செல்போனை அல்ல. இது வரை வாழ்ந்த வாழ்வை. அப்படி அவளை மாற்றியவள் ஜூலியா. ஜூலியா அடல்ட் விசயங்களில் அத்துபடி. இத்தனை காலம் உத்தமபுத்திரியான டயானா இப்போது ஜூலியாவால் பாதை மாறுகிறாள். அழகான ஆண்கள்.. ரசனையான இரவுகள். இயக்கம்: டெல்பீன் லேஹெரிசி.

4:30 pm : A Touch of Sin

கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதை வென்ற படம். இயக்கம்: ஜியா சான்கே. வாழ்வில் விதி விளையாடினால் சரி.. சதி விளையாடினால்?. துரோகம் கழுத்தை நெரித்தால்.. அடுத்த நொடி திமிறி எழுந்தால்தான் வாழ்வு. இது நான்கு பேரின் திமிறல்கள். ஒரு நாடோடி, ஒரு சுரங்கத் தொழிலாளி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒருத்தி, அடிக்கடி இடமாற்றப்படும் அலுவலக ஊழியன். நால்வரும் சமூகத்தின் கடைக்கோடி மக்கள். இவர்கள் கழுத்தை நெரிப்பதோ அதிகாரத்தின் கைகள். சுற்றும் வரை பூமி.. போராடும் வரை மனிதன்.

7:00pm : Young & Beautiful

Francois Ozon என்கிற பிரெஞ்சு இயக்குனரின் படம். இசபெல் என்கிற பெண்ணுக்கு கட்டுக்கடங்காத பாலியல் வேட்கை. அதற்காகவே வேசி ஆகிறாள். இது வீட்டுக்குத் தெரியாது. ஒரு நாள் பலான சமயத்தில் வாடிக்கையாளனாக வந்த ஜார்ஜ் இறந்து விட.. இசபெல் அதிர்ச்சி அடைந்து வீட்டுக்கு ஓடி வந்து விடுகிறாள். தடயங்களை வைத்து போலிஸ் அவளைத் தேடுகிறது. போலிஸ் அவளைப் பிடித்ததா? அவள் விஷயம் வீட்டுக்கு தெரிந்ததா?.

******************************

திரையரங்கம் : Woodlands Symphony

4:15 pm : RECLAMATION 

1979 விடுதலைக்குப் பிறகான ஈரானின் ஒரு மிலிட்டரி தலைவர் சஹாடி. அந்த சஹாடிக்கு ஒரு ஆசைக் கனவு. இரண்டாம் உலகப் போரின் சமயம். ரஷ்யாவுக்கு போன 16 டன் தங்கத்தை தாயகத்தின் கஜானாவுக்கு திரும்பக் கொண்டுவந்து சேர்க்க வேண்டும். மிகப் பெரிய சாகசத்துக்கு கிளமபுகிறார் கேப்டன். ஈரானின் தங்கம் அந்த தங்கத்தை மீட்டதா?. ஈரானியப் படங்கள் என்றாலே பெண்ணியம்தானா? இப்படி 'பொன்'னியமும் உண்டு. இயக்கம்: அலி கஃபாரி.

6:45 pm : THE DOOR 

மாக்டா சாபோ என்கிற ஹங்கேரிய பெண் எழுத்தாளரின் வாழ்வின் ஒரு பகுதி படமாகியிருக்கின்றது. 1960ல் ஹங்கேரியை சேர்ந்த மிகப் பெரிய பங்களா ஒன்றின் கேர்டேக்கர், எம்ரன்ஸ் என்கிற மூதாட்டி. மாக்டாவும் அவள் கணவனும் அந்த வீட்டுக்கு வாடகைக்குக் குடி வருகின்றனர். வந்த நாள் முதல் மாக்டாவுக்கும் எம்ரன்ஸ்க்கும் ஒத்துப் போகவில்லை. இருவருக்கும் இருவேறு சித்தாந்தங்கள். ஒவ்வொரு விசயத்திலும் இருவருக்கும் முட்டிக் கொள்கிறது. அந்த வீட்டில் எம்ரன்ஸ்சின் ஒரு அறை எப்போதும் பூட்டிக் கிடக்கிறது. அந்த அறையில் யூதர்களிடமிருந்து திருடிய விலை உயர்ந்த பொருட்கள் இருப்பதாக மாக்டா சந்தேகப்படுகிறாள். அந்த அறையில் அப்படி என்னதான் இருந்தது?. மாக்டாவாக மார்டினா கெடக், எம்ரன்ஸ்சாக உலகப் புகழ் பெற்ற நடிகை ஹெலன் மிரண்.. இருவரும் நடிப்பில் மிரட்டி உள்ளனர்.

********************************

திரையரங்கம் : SWARNA SAKTHI ABIRAMI

11:00 am : Life Feels Good

It's a wonderful life, Wings of desire போலவே இதுவும் நம்பிக்கை டானிக் படம். சின்ன வயதில் நம்மைப் போல தான் மார்டியசும். ஒரு தவறான மருத்துவ சிகிச்சை அவன் தலைவிதியை மாற்றிவிடுகிறது. மார்டியசால் இன்று நடக்க முடியாது, பேச முடியாது. அவனை இந்த கதிக்கு ஆளாக்கிய மருத்துவமனைக்கோ அவன் மீது இரக்கம் இல்லை. டாக்டர்கள்.. நர்ஸ்கள்.. எவரிடமும் துளி கருணை இல்லை. அவனுக்கு ஆறுதல் அவன் அம்மாவும் குடும்பமும். கூடவே ஒரு ஜன்னலும். வீட்டு ஜன்னலுக்கு வெளியேதான் அவன் உலகம்.

அந்த உலகில் ஒரு புது வரவு. எதிர் வீட்டு அழகி. பார்க்கும் அத்தனை பேரையும் பைத்தியமடிக்கிற அழகு. ஆனால் அவளுக்கு மார்டியஸ் பைத்தியம் வருகிறது. அதுதான் மார்டியசின் சாமர்த்தியம். நம் போன்றவர்கள் தோற்ற போது மார்டியஸ் எப்படி ஜெயித்தான். 'உன்னால் ஜெயிக்க முடியாது.. ஜெயிக்க முடியும் என்று நீ நினைக்காத வரை' எனும் பாப் மார்லி வரிகளின் திரை வடிவம்.

2:00 pm : White Lie 

ரிச்சர்ட் நெம்பர் ஒன் எழுத்தாளன். அவனிடம் 8 வருடமாக வேலைபார்ப்பவள் சிட்னி. பூவோடு சேர்ந்த நாறும் மணக்குமே. அவளும் எதோ எழுதுவாள். தன் முதல் புத்தகத்தை எழுதி ரிச்சர்டிடம் காட்ட.. இதெல்லாம் ஒரு எழுத்தா என்று அவள் முகத்தில் தூக்கி எறிகிறான். உன் வேலையே வேண்டாம் என சிட்னி வெளியே வருகிறாள். கொஞ்ச நாளில் ரிச்சர்டின் அடுத்த புத்தகம் வந்து செமையாக போகிறது. புத்தகத்தில் அப்படி என்ன இருக்கிறது என வாங்கிப் பார்க்கும் சிட்னிக்கு அதிர்ச்சி. அது அவள் எழுதிய நாவல். ரிச்சார்ட் விட்டெறிந்த அவளுடைய எழுத்து. சிட்னியின் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்?.. ஆனால் சிட்னி ஒரு காரியம் செய்தாள்?. இமா கார்டியர் எனும் பிரெஞ்சு பெண் இயக்குனரின் முதல் படம்.

4:30 pm : THE Wild Ones

நம் பெற்றோரை விட நம் மீது அன்பும் அக்கறையும் யாருக்கு உண்டு?. ஆனால் சில சமயம் நாம் அதிகம் வெறுப்பது நம் பெற்றோரைத்தான். பெற்றோருக்கு தம் குழந்தைகள் என்றும் குழந்தைகள்தான். வளர்ந்த பின்னும் அவர்களை குழந்தைகளாகவே பார்ப்பார்கள். அலெக்ஸ், கேபி, ஓஜி மூவரும் நண்பர்கள், இளைஞர்கள். எப்போதும் குடி, பெண்கள், ஊர்சுற்றித் திரிவது. பொதுவாக எல்லா இளைஞர்களும் செய்யும் காரியம்தான். ஆனால் மூவரின் பெற்றோரும் குமுறுவது.. 'நம் குழந்தை இப்படி செய்யலாமா?'. பெற்றோர்-பிள்ளை உறவின் உளவியல் சிக்கலை அலசும் ஸ்பெயின் நாட்டுப் படம்.

7:00 pm : The Amazing Catfish

கிளாடியா ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதி. ஹாஸ்பிடல் ஹாஸ்பிடலாக செல்பவள். பல நோயாளிகளைப் பார்ப்பவள். அன்று அவள் சந்தித்தது மார்த்தாவை. மார்த்தா மரணத்துக்கு காத்திருக்கிற ஒரு எய்ட்ஸ் நோயாளி. கிளாடியாவின் நடப்பால் ஏறக்குறைய செத்துவிட்ட மார்த்தாவுக்குள் உயிர் துளிர்க்கிறது. சக மனிதனிடம் குறிப்பாக ஒரு நோயாளியிடம் நாம் காட்ட வேண்டிய நேசத்தைப் பேசுகிற படம். டொரான்டோ திரைப்பட விழாவில் பாராட்டுக்களை அள்ளிய கிளாடியா லுஸ் என்கிற மெக்சிக பெண் இயக்குனரின் முதல் படம்

**************************

திரையரங்கம் : ROBOT BALA ABIRAMI

10:45 am : Don Jon 

டான் ஜுவான் பல பெண்களை மயக்கும் உமனைசர். ஒரு ஸ்பானிய புனைவு கதாபாத்திரம். இந்த டான் ஜூவான் மொசார்ட் முதல் பெர்னார்ட் ஷா வரை பாதித்திருக்கிறான். எல்லோரும் அவனைத் தழுவியிருக்கிறார்கள். அந்த டான் ஜுவானின் கலியுக அவதாரமே இந்த டான் ஜான். ஜான் அமெரிக்காவின் மன்மதன். அதனாலேயே அவனை டான் ஜான் என்று அவனது நண்பர்கள் செல்லமாக அழைக்கின்றனர். டான் ஜானுக்கு காதல் என்பது வெறும் ஒரு சொல்.. அவ்வளவுதான். அப்படிப்பட்டவனும் ஒரு பெண்ணுக்காக கடைசியில் மாய்ந்து மாய்ந்து உருகினான். காதல் என்கிற வார்த்தையின், முழு அர்த்தத்தை உணர்ந்து கொண்டான். பிரபல ஹாலிவுட் நடிகர் ஜோசப் கார்டன் லெவி இயக்கிய முதல் படம்.

1:45 pm : Strangers In the House

பால்ய வயதில் துள்ளி திரிந்த வீட்டைக் கடந்து செல்லும் போது.. உங்கள் மனநிலை எப்படி இருக்கும், உடனே உங்கள் மனைவியிடமோ அல்லது குழந்தைகளிடமோ அந்த வீடு பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்வீர்கள்தானே?. 70 வயது அகபிக்கும் தான் வாழ்ந்த வீட்டைப் பற்றி சொல்ல பல கதைகள் உள்ளன. ஆனால் அந்த வீட்டுக்கு சொந்தக்காரி இப்போது வேறு ஒருத்தி. அவள் வேறு யாரும் அல்ல.. சொந்தப் பேத்தி எல்பிடா. எவ்வளவோ கேட்டும் எல்பிடா கிழவிக்கு அந்த வீட்டைத் தர மறுக்கிறாள். அவளுக்கு அதை இடித்து ஒரு பள்ளிக்கூடம் கட்ட வேண்டும். அந்த வீடு என்ன ஆனது?. பாட்டி-பேத்தி வீட்டை விட்டுக் கொடுத்தது யார்?. உணர்ச்சிமிகு குடும்ப காவியம்.

4:15 pm : Hide Your Smiling faces

டாமி அண்ணன், எரிக் தம்பி. இந்த இரண்டு சிறுவர்களும் இப்போது வசிக்கும் இடம் ஜெர்சி நகரத்தின் ஒரு காட்டுப் பகுதி. பக்கத்து வீட்டு சிறுவனுக்கோ இவர்களுடன் எப்போதும் சண்டை. ஒரு நாள் காட்டுக்குள் ஏரிக்கரையில் அந்த பக்கத்து வீட்டுச் சிறுவன் செத்துப்போய் கிடக்கிறான். அருகிலே அவன் அப்பாவும் செத்துப் போய் கிடக்கிறார். அவர்களைக் கொன்றது காட்டுக்குள் இருக்கும் ஒரு அதிபயங்கர அரக்கன். அப்படித்தான் அண்ணனும் தம்பியும் நம்புகின்றனர். அந்த அரக்கன் தங்களையும் கொன்று விடுவானோ?. வீட்டை விட்டு வெளியே வரவே பயம். தற்கொலை செய்து கொண்டு செத்துப் போகலாம் போல் இருக்கிறது. சிறுவர்களின் கனவுலகம் எழில் மிகுந்ததும், வண்ணமயமானது மட்டும் அல்ல. சில நேரம் கலவரமானதும் கூட.

**************************************

திரையரங்கம் : Inox 2

4:15 pm : Floating Skyscrapers

கூபா ஒரு நீச்சல் வீரன். சில்வியா அவன் காதலி. எவ்வித சிக்கலும் இன்றி வானவில்லாய் கழியும் வாழ்க்கை. ஒரு ஓவியக் கண்காட்சியில் சிக்கல் வருகிறது, மிக்கேல் உருவில். மிக்கேலுக்கும் கூபா வயது அழகன். கூபா - மிக்கேல் நண்பர்கள் ஆகின்றனர். கொஞ்ச நாளில் அவர்கள் நட்பு அதையும் தாண்டி அபுனிதமாகிறது. இது சில்வியாவுக்கு தெரிய வருகிறது. இது முக்கோண காதல் கதையில் சேருமா? பார்த்துவிட்டு முடிவு சொல்லுங்கள்.

6:45 pm : The Tree and The Swing

லண்டன் காலேஜில் எலினா ஓர் ஆசிரியை. விடுமுறையில் ஊர் வருபவளுக்கு அதிர்ச்சி. அப்பாவின் அருகே ஒருத்தி. அவள் அப்பாவின் புது மனைவி. கொஞ்ச நாளில் தெரிந்து விடுகிறது. சித்திகாரி சூழ்ச்சிக்காரி என்று.. சித்தியின் நோக்கம் அப்பாவின் சொத்து. எலினா இப்போது சித்தியுடன் போராடத் தயார். அந்த கால மனோகரா.. இந்தக் கால மெகா சீரியல். இயக்கம்: மரியா டௌசா.

*********************************

திரையரங்கம் : INOX 3

11:00 am : SPECIAL TREATMENT

நம்மூர் மருத்துவமனைகள் போலத்தான் செர்பியாவிலும். சின்ன தலைவலிக்கே எக்ஸ்ரே, ஸ்கேன் வரை எடுத்து வரச் சொல்லி நம்மை 'ரமணா' விஜயகாந்த் ஆக்க அலைகழிப்பார்கள். வணிக மயமாகிவிட்ட செர்பியாவின் மருத்துவச் சூழலை நையாண்டி செய்யும் படம். BLACK HUMOUR GENREக்கு சிறந்த எடுத்துக்காட்டு இப்படம். குடிப் பழக்கத்திலிருந்து மீள ட்ரீட்மென்ட்க்கு வரும் 6 பேஷண்ட்களை ஆராய்ச்சி எலிகளாய் சாடிஸ்ட் டாக்டர் படுத்தி எடுப்பதைப் பார்க்க வேண்டுமா? இப்படம் பாருங்கள். இயக்கம்: Goran Paskaljevic.

2:00 pm : The Future

ஸ்ரோடின்கரின் பூனை: ஒரு சிறிய நிகழ்வு உங்கள் மொத்த வாழ்வையும் புரட்டிப்போடும் அல்லது போடாது. தாமசும் பியான்காவும் அண்ணன் தங்கை. வசதியான குடும்பம். ஒரு விபத்தில் பெற்றோர் இறந்து போக.. எல்லாம் தலைகீழ் ஆகிறது. இருவரும் இப்போது நடுத்தெருவில். குடிகாரன் விழுந்தால் தடுமாறி எழுந்து விடுவான். தெளிவானவன் விழுந்தால்.. எழுந்தால்தான் உண்டு. இயக்கம்: ஆலிசியா ஷெர்சன்.

4:30 pm : Let Me Survive

தகுதியுள்ளதே உயிர்வாழும். இல்லாதது செத்துப் போகும். 'சர்வைவல் ஆப் த ஃபிட்டஸ்ட்' டார்வினின் பரிணாமக் கோட்பாடு. கூட்டிப் பெருக்கும் வேலையா? அதற்கும் தகுதி இல்லையா? பெருக்கித் தள்ளிவிடுவார்கள். இன்று வேலை என்பது உயிர் போல.. இந்தப் படத்தில் ஒரிஜினல் உயிர் பிரச்சினையே வருகிறது.

கேட் - அம்மா. அவளுக்கு 14 வயது மகள் எமிலி. அம்மாவுக்கு ஒரு புதுக் காதலன் கிடைக்க.. அம்மா, மகள், காதலன் மூவரும் பிக்னிக் போகின்றனர். பிக்னிக் கடலில். சொந்தப் படகில் பயணம். திடீரெனப் புயல். அலைகடல் நடுவே ஜீவமரணப் போராட்டம். படகிலோ கொஞ்சம் ரொட்டி, கொஞ்சம் தண்ணீர். தகுதியானதே உயிர் வாழும். பிரான்சில் நடந்த நெஞ்சை உறைய வைக்கும் உண்மைக் கதை.

**************************

திரையரங்கம் : CASINO

11:00 am : THE PHOTOGRAPH

ஆடம் வயது 16. அம்மா அப்பாவுடன் வாழ்ந்து வருகிறான். மகிழ்ச்சி ததும்பும் அவன் வாழ்வை ஒரு புகைப்படம் கெடுக்கிறது. அந்தப் படத்தில் அவன் அம்மா கர்ப்பமாக இருக்கிறாள். அவள் அருகே ஒரு ஆள் இருக்கிறான். யார் அந்த ஆள்?. அவன்தான் ஆடமின் உண்மையான அப்பாவா?. அந்த கேள்விக்கு விடை தேடி புறப்பட்ட ஆடமுக்கு கிடைக்கிறது ஒரு காதல், ஒரு நட்பு. அது சரி.. தேடிப்போன விடை கிடைத்ததா?.இயக்கம்: மைக்கிஜ் அடாமெக்.

2:00 pm : Northwest

கோபன்ஹேகன் குற்ற பூமி. மாஃபியா, கொலைகாரர்கள், புரோக்கர்கள் திரியும் அந்த அழுக்கு சாம்ராஜ்யத்தின் இளவரசன் 18 வயது கேஸ்பர். கொலை, கொள்ளை என கலவரக் கலவையாகக் கழியும் வாழ்க்கை. ஒரு நாள் கதை மாறுகிறது. சாம்ராஜ்யத்தின் துப்பாக்கி இளவரசன் தம்பியை குறி வைக்கிறது. இது வரை மற்றவர்களை துரத்திய கேஸ்பர். இப்போது ஓட ஆரம்பிக்கிறான். துடிப்பான திரில்லர் படம்.

4:30 pm : ANOTHER HOUSE 

ஹென்றி 86 வயது கிழவன். அவன் முதுமையே அவன் நோய். அவனுக்கு எப்போதும் ஒரே கனவு வருகிறது. அந்தக் கனவில் ஒரே ஒரு வீடு. மிக அழகான வீடு. கிழவனுக்கு தினமும் இதே கனவு.. இதே வீடு, அந்த வீட்டைக் கண்டுபிடித்தே தீர்வேன் என அலைபவனை முதியோர் இல்லத்தில் கொண்டுபோய் சேர்க்கின்றனர். ஹென்றிக்கு இரண்டு மகன்கள். ஒருவன் பத்திரிகையாளன், இன்னொருவன் ராணுவ வீரன். இருவரும் அப்பாவைப் பார்க்க வருகின்றனர். கிழவனின் ஒரே ஆசை அவன் கனவு வீட்டை பார்க்க வேண்டும். வீட்டைக் காட்டிவிடுவதென மகன்கள் முடிவெடுக்கின்றனர். உங்களுக்கு இப்படி எதாவது கனவு வருகிறதா?. இயக்கம்: மேத்திவ் ராய்.

7:00 pm : Thou Gild'st The Even

ஓனர் அனலு இயக்கிய துருக்கி ஃபாண்டஸிப் படம். கதை ஆனடோலியா நகரத்தில் நடக்கிறது. செமால் ஒரு கால்பந்தாட்ட ரெஃப்ரீ. யாசெமின் முட்டை பாக்டரியில் வேலை பார்ப்பவன். டெப்னீ புத்தகங்கள் விற்பவள். இர்பான் ஒரு டாகடர். இந்த நால்வரும் நம்மைப் போல் இல்லை; நமக்கும் மேல். வினோத விசித்திர சக்தி அவர்களுக்கு உண்டு. செமால் சுவற்றை துளைத்து நடப்பான். யாசமின் நினைத்தாலே பொருட்கள் நகரும். டெப்னீ காலத்தை நிறுத்துவாள். துருக்கியின் எக்ஸ் மென்.

****************************

திரையரங்கம் : RANI SEETHAI HALL

11:00 AM : காதல் மன்னன் (இயக்குநர் : அசோக் குமார்)

2:00 PM : தங்க மீன்கள்

4:00 PM : கும்கி

7:00PM : Spooks And Spirits

ஆனாவும் இங்கியும் காதலர்கள். ஆனாவுக்கு ஒரு பூர்வீக வீடு. அந்த வீட்டை விற்க வேண்டும். ஆனால் அதை யாரும் வாங்கத் தயாராக இல்லை. காரணம் ஆனாவின் அப்பா ஃபைக். குடிகாரன், சிடுமூஞ்சி & பெண்பித்தன். ஃபைக் இறந்து பல ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இப்போதும் ஃபைக் அதே வீட்டில் ஆவியாகத் திரிகிறான். பேயாகியும் பயல் திருந்தவில்லை. அதே கெட்ட ஃபைக்தான் இப்போதும்.

மகள் ஆனா முடிவெடுத்து விட்டாள்.இந்த பேயை ஓட்டினால்தான் வீட்டை விற்க முடியும். இப்போது புது சிக்கல் இப்போது ஃபைக்கோடு இன்னொரு பேயும் சேர்ந்து கொள்கிறது. அது ஃபைக்கின் முன்னாள் காதலி. பேய் கலாட்டா. சிரித்து ரசிக்க ஒரு பேய்ப் படம்.