Monday 16 December 2013

ஆசை.....?



கடினமாக உழைப்பதற்குரிய முயற்சியை ஒருவர் எப்போது உத்வேகப்படுத்துகிறார்? ஒரே ஒரு வார்த்தையில் இதற்கு பதிலைச் சொல்லிவிடலாம் – “ஆசை”.



நாயை பற்றிய ஒரு கதை. ஒரு நாய் தன்னால் மிகவும் வேகமாக ஓட முடியும் என்று எப்போது பார்த்தாலும் பெருமை பேசிக் கொண்டிருந்தது. ஒரு நாள் முயலை துரத்திக் கொண்டு ஓடிய அந்த நாயால் முயலைப் பிடிக்க முடியவில்லை. மற்ற நாய்கள் அதைப்பார்த்து கேலி செய்தன. ஆனால் அந்த நாய் இவ்வாறு சொல்லியது…..



“ஒரு விஷயத்தை நீங்கள் மறந்து விட்டீர்கள். முயல் தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடியது. ஆனால் நான் வேடிக்கைக்காகத்தான் அதை விரட்டிக் கொண்டு ஓடினேன்”. முயலைப் பிடிப்பது எனக்கு ஒரு முக்கியமான விஷயமாக தோன்றவில்லை.



ஆனால் முயலைப் பொறுத்தவரையில் இது வாழ்வா! சாவா!! என்றதொரு போராட்டம். நாயை விட கடுமையாக முயற்சித்தது. வாழ்க்கை அதற்கு மிகவும் முக்கியமான விஷயம். ஒரே வார்த்தையில் மிகவும் சுருக்கமாகச் சொல்லிவிடலாம் வாழ வேண்டும் என்றதொரு “ஆசை”.



மிகச் சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவரான வில்லியம் ஜேம்ஸ் இதனை இவ்வாறு கூறுகிறார். “விளைவைப் பற்றி நீங்கள் போதுமான அக்கறை காட்டினால் அநேகமாக நிச்சயமாக நீங்கள் அதைப் பெற்று விடுவீர்கள். நல்லவராக இருக்க விரும்பினால் நல்லவராக இருப்பீர்கள். நீங்கள் அடைய வேண்டிய விஷயங்களை உண்மையாகவே அடைய ஆசைப்பட வேண்டும் என்பது மட்டும் தான் முக்கியம்”.



“ஒரு விஷயம் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் நீங்கள் செய்கின்ற முயற்சியின் உத்வேகமும் இருக்கும்”.



நீங்கள் விரும்புவதை அடைவதற்கு ஒரு இரகசியம் இருக்கிறது.

    * நீங்கள் போதுமான அக்கறைகாட்ட வேண்டும்.
    * மெய்யாகவே விரும்ப வேண்டும்.
    * ஆசை இருக்க வேண்டும். உங்கள் ஆழ்மனதில் இந்த ஆசை கொழுந்துவிட்டு எரிய வேண்டும்.
    * உங்கள் எண்ணங்களின் மீதும் செயல்களின் மீதும் அதற்குப் பெரிய பாதிப்பு இருக்க வேண்டும்.
    * மேலும், அதை அடைந்தே தீர வேண்டும் என்பது உங்கள் நெஞ்சத்தில் நீங்காத இடம் பெற வேண்டும்.

அந்த அளவுக்கு அது உங்களுக்கு உங்களது வாழ்க்கையில் முக்கியமானதாக இருக்க வேண்டும்.



“அத்தனைக்கும் ஆசைப்படு – ரஜனீஷ்(ஓஷோ)”

ஆஸ்கார் பூனை...



மரணம் ஏற்படுவதை யாராவது முன் கூட்டியே கணித்துக் கூற முடியுமா, அது சாத்தியம் தானா? நிச்சயமாக முடியாது என்பதுதான் நமது பதிலாக இருக்கும். சகலமும் அறிந்த ஜோதிடர்கள் கூட இந்த விஷயத்தில் சற்று தடுமாறத்தான் செய்வர். ஆனால் ஒருவரது மரணத்தை முன் கூட்டியே கணிப்பது மட்டுமல்ல; அவர் இறக்கும் வரை அவர் அருகிலேயே இருந்து அவரை வழியனுப்பி வைத்து விட்டு வருகிறது ஒரு பூனை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. அந்த அமானுஷ்யப் பூனையின் பெயர் ‘ஆஸ்கர்’

அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து பகுதியில் உள்ள ஒரு நகரம்தான் ரோடே ஐலண்ட். இங்கு ஸ்டீரே என்ற இடத்திலுள்ள முதிய நோயாளிகளுக்கான மருத்துவ மற்றும் உயர் சிகிச்சைப் பாதுகாப்பு மையம் மிகவும் புகழ் பெற்றது. அல்சீமர், பக்கவாதம், பர்கின்சன் போன்ற பல நோய்களால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகள் இங்கு தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இங்குதான் ஒரு சிறிய குட்டியாக வந்து சேர்ந்தது அமானுஷ்யப் பூனை ஆஸ்கர். முதலில் அதன் செயல்பாடுகளை யாரும் கவனிக்கவில்லை. அது ஒரு சாதாரணப் பூனை என்றே அனைவரும் எண்ணிக் கொண்டிருந்தனர். ஆனால் ப்ரௌன் யுனிவர்சிடியைச் சார்ந்த ஆல்பர்ட் மருத்துவப் பள்ளியில் பேராசிரியராகப் பணியாற்றுபவரும், அந்த ரோலண்ட் மருத்துவமனையின் மருத்துவர்களில் ஒருவருமான டாக்டர் டேவிட் டோசா, இந்தப் பூனையேச் சற்றே அவதானித்து சில செய்திகளை வெளியிட்ட போதுதான் அனைவரது கவனமும் ஆஸ்கர் மீது திரும்பியது.

அப்படி என்னதான் செய்தது ஆஸ்கர்? வழக்கமாக மற்ற பூனைகளைப் போலவே வலம் வரும் ஆஸ்கர், யாராவது ஒருவர் மரணிக்கப் போகிறார் என்று தனது அமானுஷ்ய ஆற்றலால் உணர்ந்து கொண்டால் உடனே அந்த நபரின் படுக்கையறைக்குச் சென்று விடும். அங்கேயே பல மணி நேரம் அமர்ந்திருக்கும். அப்போது அதன் உடல், கண்கள் என அனைத்தும் ஒரு வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும். அந்த நபர் இறக்கும் வரை காத்திருந்து, அவர் உயிர் பிரிந்ததும் வித்தியாசமான ஒரு குரலை எழுப்பி விட்டு அங்கிருந்து வேகமாக நகர்ந்து சென்று விடும்.

இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல. நூற்றுக்கணக்கான மரணங்களை முன் கூட்டியே கணித்திருக்கிறது ஆஸ்கர். அதனால் இங்கே தங்கியிருப்பவர்களுக்கு ’ஆஸ்கர் பூனை’ என்றால் ஒருவித அச்சம்.

ஒருவர் இறக்கப் போகிறார் என்பதை உணர்ந்து கொள்ளும் ஆஸ்கர் முதலில் அவரது படுக்கை அருகே சென்று வித்தியாசமான ஒரு ஓசையை எழுப்பும். பின்னர் அங்கேயே அமர்ந்து விடும். அதைக் கண்ட மருத்துவர்களும், செவிலிகளும் எச்சரிக்கை உணர்வை அடைந்து மேல் சிகிச்சைகளுக்கு உடனடியாகத் தயாராகின்றனர். நோயாளின் உறவினர்களும் எச்சரிக்கை அடைந்து, முன்னேற்பாடாகச் செய்ய வேண்டிய செயல்களைச் செய்ய ஆரம்பிக்கின்றனர்.

இங்கு பணியாற்றும் மருத்துவர்களோ அதன் செயல்பாடுகளைக் கண்டு வியப்பதுடன், இது எப்படி சாத்தியம் என்றும் புரியாமல் விழிக்கின்றனர். ஆனால் டேவிட் டோஸா இதுபற்றிக் கூறும் போது, “ ஆஸ்கருக்கு கூடுதல் புலனறிவு மிக அதிகமாக உள்ளது. அதன் சக்தியால், இறப்பிற்கு முன் ஓர் உடலில் ஏற்படும் மிக நுணுக்கமான வேதியியல் மற்றும் உயிரியல் மாற்றங்களை அதனால் எளிதாக உணர்ந்து கொள்ள முடிகிறது. அதனால் இறக்கும் நபர் யார் என்பதை முன் கூட்டியே அதனால் கணிக்க முடிறது” என்கிறார்.

”சரி, ஆனால் இறக்கும் நபர் அருகே சென்று ஏன் ஆஸ்கர் அமர வேண்டும். எதற்கு அந்த இறப்பை உற்று கவனித்துக் கொண்டிருக்க வேண்டும்?” என்ற கேள்விக்கு விடையளிக்க அவரால் முடியவில்லை.

பிடிவாதம்.....?



எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும், அனைத்து அதிகாரங்களையும் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் வைத்திருந்தாலும் இறுதியில் அவர்களது அழிவு அவர்களது ‘பிடிவாத’ குணத்தால்தான் நிகழ்கிறது. காலம், சூழ்நிலை, தன்நிலை, பிறர்நிலை, அறிவு சார்ந்த ஆய்வு, மாற்றத்தைப் புரிந்துகொள்ளல், புரிந்ததை ஏற்றுக் கொள்ளல் போன்றவற்றில் கவனம் செலுத்தாதவர்கள் தோல்வியடைகிறார்கள். உலகச் சர்வாதிகாரிகள் அனைவரும் இந்தப் பட்டியலில் இடம் பிடிப்பவர்களாகவே இருப்பார்கள். ஹிட்லர், முசோலினி, இடி அமீன், சதாம் உசேன் போன்றவர்களை உதாரணங்களாகக் கூறலாம்.


ஐரோப்பிய நாடுகள் அனைத்தையும் வென்ற ஹிட்லர், பிரிட்டனை ‘கோழிக்குஞ்சு’ என்று கூறிவிட்டு சோவியத் யூனியனை (ரஷ்யா) பிடித்தால் தான் என் ஆசை தீறும் என்ற ‘பிடிவாத’ குணத்தால் ரஷ்யாவின் மீது போர் தொடுத்தான். கால நிலைகளின் மாறுதல் அறியாமையாலும், அப்போதைய தன் படையின் பலவீனத்தாலும் ‘அவனது சவம்’ அங்கேயே புதைக்கப்பட்டது. பல நாடுகளின் தலைவனாக ஆட்சி செய்த ஹிட்லர் தனது ‘பிடிவாதத்தால்’ இறுதியில் தன்னையே இழந்தார்.


“தான் எடுத்த காரியத்தில் விடாமுயற்சியுடன், சிறதும் விட்டுக் கொடுக்காமல், எந்தத் துன்பம் வந்தாலும் வெற்றி பெறும் நோக்கத்துடன் போராடுவது பிடிவாதம் ஆகாது”.


“அதே சமயத்தில் எது எப்படி இருந்தாலும், எனது நிலையில் இருந்து பின்வாங்க மாட்டேன். அந்த நிலைப்பாடு தவறு என்று தெரிந்தாலும் மாற மாட்டேன் என்று இருப்பதுதான் பிடிவாதம்”.



நாம் பிறர் போற்றத்தக்க அல்லது மிக உயர்ந்த பதவியில் இருந்தாலும் இப்படிப்பட்ட குணம் உடையவர்களைப் பற்றி நம்மூர் மக்கள் கூறுவது:


    * காட்டான். ஒரு விஷயமும் தெரியாது.

    * தான் பிடித்த பிடியிலேயே இருப்பான், புரிய வைக்கவும் முடியாது.

    * பணம் மட்டும் இருக்கிறது, அறிவு கிடையாது.

    * தான் பிடிச்ச முயலுக்கு மூணு கால்னு நிப்பான்.



இலக்கியம் கூறுவது: 


மகாபாரதத்தில், துரியோதனனிடம் கிருஷ்ணர் கடைசியாகக் கேட்டது ஐந்து கிராமங்களையாவது பஞ்ச பாண்டவர்களுக்குத் தர வேண்டும் என்பதைத்தான். ஆனால், அதைக்கூடக் கொடுக்க முடியாது என்ற மூர்க்கத்தனமான பிடிவாதத்தால், துரியோதனன் அனைத்தையும் இழக்க வேண்டியதாயிற்று.

அறிவாளி சிறுவன்...!




அந்த சலூன் கடையை நோக்கி அந்த சிறுவன் வருவதை பார்த்த அந்த கடைக்காரர், தன்னிடம் முடி திருத்திக் கொள்ள வந்தவரிடம் "சார் இப்ப இங்க வர்ற பையன சரியான முட்டாள்னு நீருபிக்கிறேன் பாருங்கன்னு சொல்லிட்டு,


ஒரு கையில் நூறு ரூபாயும் இன்னோரு கையில் இரண்டு ஐந்து ரூபாய் நானயங்களயும் கான்பித்து எது வேனுமோ எடுத்துக்கோ என்றார்.


சிறுவன் இரண்டு ஐந்து ரூபாய்யை மட்டும் எடுத்து சென்றுவிட்டான்.


கடைக்காரர் தன் கஸ்டமரிடம் பெருமையாக சொன்னார் டெய்லி இப்படி தான் சார் ஏமாந்துற்றான்.
முடி வெட்டி விட்டு வெளியே வந்தவர் அந்த சிறுவன் ஐஸ்கிரீம் கடையிலிருந்து வெளியே வருவதை பார்த்தார்.


அவனை கூப்பிட்டு ஏம்ப்பா இந்த வயசுல கூட உனக்கு நூறுக்கும், ஐஞ்சு ரூபாய்க்கும் வித்தியாசம் தெரியாதா என கேட்டார்.


சிறுவன் ஐஸ் கிரீமை நக்கிக்கொன்டே சொன்னான் அந்த நூறு ரூபாய எடுத்திட்டா அன்னையோட இந்த விளையாட்டு முடிஞ்சிறும் அங்கிள்!!


கடைகாரனை பாவமாய் பார்த்து சிரித்துவிட்டு போனார் கஸ்டமர்,

மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?




பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு பிடியுங்கள். பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.


1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.

2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.

3. அவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல்.

4. விரும்பியதைப் பெற இயலாமை.

5. ஒருவரையொருவர் நம்பாமை.

6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.

7. உலலாசப் பயணம் போக இயலாமை.

8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.

9. விருந்தினர் குறைவு.

10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.

11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இலலை.

12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.

13. ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல்.

14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.

கோபத்தை கையாள எளிய வழிகள்..




 1. கோப உணர்ச்சிகள் அதிக இரத்த அழுத்தம், கண் சிவப்பு அமில சுரப்பு, அல்சரை உண்டு பண்ணும் & மிருக குணத்தை உச்ச நிலைக்கு உயர்த்திடும்.

2. தண்ணீர் குடித்திட கோபம் தணியும்.

3. ஒன்று முதல் பத்து வரை எண்ணிடலாம்

4. கோபத்தை இறைவனிடம் சமர்ப்பிக்கலாம்.

5. கோபப்படும் இடம், நபரிடம் இருந்து விலகிச் செல்லலாம்.

6. கோபத்திற்கு காரணமாக சொல், செயல், எண்ணத்தில் இருந்து வேறு செயல் செய்தல்.

7. கோபத்தின் போது முகம் விகாரமாகி, அன்பு, சாந்தம் குறைவதை கண்ணாடி மூலம் உணர்ந்து குறைத்தல்.

8. கோபத்திற்கான காரணத்தை ஒரு பேப்பரில் வரிசையாகப் பட்டியல் இட்டு எழுத கோபம் குறையும்.

9. தியானம், சாந்தி ஆசனம் செய்ய கோபம் குறையும்.

10. வயிறு ஈரத்துணிப் பட்டி, கண் பட்டி, நெற்றிப்பட்டி போடலாம்.

11. நீர்வீழ்ச்சி, ஷவர் பாத், தொட்டிக் குளியல் செய்ய கோபம் குறையும்.

12. தொடர்ந்து இயற்கை உணவுகளை, இயன்ற வரை சாப்பிட்டுப் பழக கோபம் படிப்படியாகக் குறையும்.

13. பழச்சாறுகள், இயற்கை உணவுச் சாறுகள் குடித்து கோபத்தை குறைக்கலாம்.

புகழ்ச்சி....?



புகழ்ச்சி இது ஒரு அதிசய மருந்து. இதனை உருவாக்க எந்த ஒரு கருவியும் தேவையில்லை. நாமே நமது எண்ணத்தால் இதனை உருவாக்கிட முடியும். இந்த மருந்தை மற்றவருக்குக் கொடுப்பதனால் “புகழ்பவரும் மகிழ்ச்சி அடைகிறார்! புகழப்பட்டவரும் மகிழ்ச்சி அடைகிறார்!!”.

இந்த அதிசய மருந்திற்கு வயது வரம்புகள் எதுவும் கிடையாது. நமது ஆழ்மனதில் தோன்றும் எண்ண அலைகளே இதற்குக் காரணம்.

 பயன்கள்:

 உங்கள் குழந்தைகளிடம் தேர்விற்கு முன்னரோ அல்லது தினசரியிலோ சபாஷ்! நீ நன்றாகப் படிக்கிறாய் என்று கூறிப்பாருங்கள். இந்த மருந்தைக் கொடுத்தவுடன் குழந்தை முன்பு படித்ததை விட மேலும் ஆர்வமாக படிக்கத் தொடங்குகிறது. தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகிறது.

வியாபாரத்தில் உங்கள் வர்த்தக பங்குதாரர்கள் புகழ்ச்சியின் காரணமாக ஒத்துழைத்து உங்கள் வெற்றிக்கும் செல்வச் சேமிப்பிற்கும் உறுதுணை ஆகிறார்கள். புகழ்ச்சி அவர்களுக்கு கிடைக்கும்  போது அவர்களுடைய ஒத்துழைப்பு உங்களுக்கு மிகையாகக் கிடைக்கிறது.

இந்த மருந்தை நீங்கள் கொடுக்கும் போது, உங்களுக்கும் அது போதுமான அளவில் கிடைத்து, உங்களை மகிழ்ச்சியாகவும், புகழ்மிக்கவராகவும் மற்றும் செல்வந்தராகவும் ஆக்கிவிடுகிறது.


அதிசய மருந்து பற்றி மூத்த அறிஞர்கள் கூறுவது:

சொல்வேந்தர் சுகி சிவம்: பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள்! பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள்!! பிறர் உங்களைப் பாராட்டாத பொழுதும் நீங்கள் மற்றவர்களைப் பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள்!!!

அமெரிக்காவின் மிகப்பெரிய தத்துவ ஞானியும், மனோ தத்துவ நிபுணரும் ஆன வில்லியம் ஜேம்ஸ் கூறுகையில், “மனித இயல்பின் ஆழமான தத்துவம் என்னவென்றால், பாராட்டைப் பெறுவதற்காக ஏங்குவது தான்”.

நீங்கள் வெளிச்சத்தை மற்றவர்கள் மீது பாய்ச்சும் போது, அதன் பிரதிபலிப்பு உங்கள் மீது அதிகமாக வரத் தொடங்குகிறது. உங்கள் மீது நீங்கள் வெளிச்சம் பாய்ச்சுவதைவிட இது பிரகாசமானது. இறுதியாக, மற்றவர்களை நீங்கள் புகழ்வது வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்குத் தேவையான மனோபாவத்தை உங்களிடம் ஏற்படுத்துகிறது.

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?




1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.
2. காலையில் ஆறு மணிக்கு முன் எழுந்திருத்தல்.
3. எப்போதும் சிரித்த முகம்.
4. நேரம் பாராது உபசரித்தல்.
5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.
6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.
7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.
8. அதிகாரம் பணணக் கூடாது.
9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.
10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.
11. கணவனை சந்தேகப்படக் கூடாது.
12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.
13. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.
14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.
15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.
16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.
17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.
18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.
20. கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.
21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.
23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.
24. தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.
25. அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.
26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.
27. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.
28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
30. உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.
31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.
32. அதிகம் சினிமா பார்க்கக் கூடாது.
33. உடற்பயிற்சி செய்து உடம்பை சிலிம் ஆகவைத்துக் கொள்ள வேண்டும்.

பிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டுங்கள்!




தன்னம்பிக்கை என்பது மனித வாழ்க்கைக்கு ஒரு நெம்புகோல் போன்றது. அது இல்லையேல் வாழ்க்கை இல்லை. இதனைப் பெற்றோர் தம் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும். சுயமாகச் சிந்திக்க, சுயமாகச் செயல்பட குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.


படிப்பில் , அதோடு கூட வீட்டு வேலைகளில் குழந்தைகளுக்குப் பெற்றோர் போதிய பயிற்சி அளிக்க வேண்டும். குழந்தைகளை அச்சுறுத்தி அடித்துக் கண்டிக்கக் கூடாது.


ஆனாலும் அதன் போக்கில் எதேச்சையாக விட்டுவிடக் கூடாது. குழந்தைகளுக்கு அனபுப்பால் ஊட்டி, அரவணைத்துப் பெருமைப் படுத்த வேண்டும்.


'நீ ராசா அல்லவா? ராசாத்தி அல்லவா? ' என்கிற வாசகங்கள் பெற்றோர் வாயிலிருந்து வர வேண்டும். 'மக்கு, மண்டு, மண்டூகம் - போன்ற வாசகங்கள் மலையேற வேண்டும்.


பயம், கூச்சமின்றி, உறுதியான நெஞ்சம், உண்மையான பேச்சு, உயர்வான பண்பு இவை குழந்தைகளுக்கு அமைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

பயன் தரும் இயற்கை மருத்துவக் குறிப்புகள்:-




* காய்ச்சி வேப்ப எண்ணெய் தடவி வர சேற்றுப்புண் குணமாகும்.

* வில்வபழம் சாப்பிட மூளை தொடர்பான நோய்கள் தீரும்.

* வெண்ணீரில் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வர ஞாபகசக்தி பெருகும்.

* யானைக்கால் நோய் குணமாக வல்லாரை கீரை தொடர்ந்து சாப்பிடலாம்.

* நார்த்தங்காய் ஊறுகாய் மலச்சிக்கலைப் போக்கி நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும்.

* பாதாம் பருப்பு வறுத்து அடிக்கடி உண்டு வர கண் பார்வை தெளிவு பெறும்.

* வேப்பம் பூவுடன் மிளகு, சீரகம் சேர்த்து உண்டுவர பித்தப்பை நோய் குணமாகும்.

* சப்போட்டா பழம் தினமும் பகல் பொழுதில் உண்டுவர இரவில் நன்றாக தூக்கம் வரும்.

* சுக்கை அரைத்து நெற்றியில் பற்று வைக்க தலைவலி குணமாகும்.

* காய்ந்த நெல்லிக்காயை பொடியாக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து சுட வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்; முடி உதிர்வது நிற்கும்.

* வாழைத்தண்டுச் சாறு, பூசணிச் சாறு, அருகம்புல் சாறு இவற்றுள் ஏதேனும் ஒன்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம்.

* எருக்கஞ் இலையின் பின்புறம் விளக்கெண்ணெய் தடவி தணலில் காட்டி கட்டிகள் மீது வைத்துக் கட்டினால் கட்டி பழுத்து உடையும்.

* தொடர் வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் பப்பாளிப்பழம் சாப்பிட குணமாகும்.

* இலந்தை மரத்தின் இலையை மைய அரைத்து காயத்தின் மீது போட்டு வர வெட்டுக்காயம் குணமாகும்.

இதுதான் உண்மையான நட்பு..!




கார்கில் போரின் போது இரண்டு நண்பர்கள் களத்தில் இருந்தனர்.எதிரிகள் சுற்றி வளைத்து சுடும்போது ஒருவன் மட்டும் குண்டடி பட்டு விழுந்து கிடந்தான்.

நான் என் நண்பனை எப்படியாவது தூக்கி வந்து விடுகிறேன் எனக்கு உத்தரவு கொடுங்கள் கமேண்டர் என்றான்.மறைந்து இருந்து தாக்குவது தான் சரியான வழி ,நீ அங்கு போவதால் உன் உயிர்க்கு தான் ஆபத்து என்றார் கமேண்டர்.

நீ போவது என்றால் போ, ஆனால் நீ போவதால் எதுவும் நடந்துவிட போவதில்லை என்று கமெண்டர் சொன்னார்.அதையும் மீறி தன் நண்பனை காப்பாற்ற ஓடினான், அவனை தோளில் தூக்கி கொண்டு வரும்போது எதிரிகள் சுட்டனர். இவனுக்கும் அடிப்பட்டது, அதையும் மீறி அவனை தூக்கி கொண்டு வந்தான்.

கமேண்டர் அவனை பரிசோதித்து பார்த்தார் அவன் நண்பன் இறந்து போய் இருந்தான்.நான் அப்போழுதே சொன்னேன் நீ அவனை காப்பாற்றப்போவதால் எந்த உபயோகமும் இல்லை ,இப்போது பார் நீயும் அடிப்பட்டு கிடக்கிறாய் என்றார் கமேண்டர்.

நான் போனது தான் சார் சரி என்றான்.என்ன சொல்கிறாய் உன் நண்பன் இறந்து கிடந்தான் நீ சொல்வது எப்படி சரியாகும் என்று கேட்டார் கமேண்டர்.

நான் அங்கு போகும்போது என் நண்பன் உயிருடன் தான் சார் இருந்தான்.”என்னை காப்பாற்ற நீ வருவாய் என்று எனக்கு தெரியும் நண்பா” என்று சொல்லிவிட்டு தான் சார் இறந்தான் .அந்த ஒரு வார்த்தை எனக்கு போதும் சார் இந்த காயம் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை என்றான்.

இதுதான் உண்மையான நட்பு.

வித்தியாசமான பிறந்தநாள் விழா!




எங்கள் பேத்தியின் பிறந்தநாள் விழாவை, வித்தியாசமாக கொண்டாட விரும்பினோம். வழக்கமாக, அனாதை ஆசிரமங்களுக்கு உணவு அளிப்போம். இம்முறை, அவர்களை ஒரு நாள் சுற்றுலாவாக அழைத்து செல்ல எண்ணி, சென்னை அருகே உள்ள ஒரு முதியோர் இல்லத்தை அணுகினோம். அவர்களும் அனுப்ப சம்மதித்தனர். இல்லத்தில் இருப்போர், 51 பேர் அதில்: 40 பேர் வருவர் என்று கூறினர். தனியார் பேருந்தை ஏற்பாடு செய்து, பேத்தியின் பிறந்த நாளன்று, அவர்கள் இல்லத்தை அடைந்து, பிறந்த நாள் கேக் வெட்டி, எல்லாருக்கும் வழங்கி, சுற்றுலா கிளம்பினோம்.

சுற்றுலா வராமல், இல்லத்தில் இருந்தோருக்கு, வெளியில் இருந்து அவர்கள் விரும்பியதை சாப்பிட, ஏற்பாடு செய்து விட்டு வந்தோம். மொத்தத்தில், அவர்கள் இல்ல கிச்சனுக்கு, அன்று முழுவதும் விடுமுறை.

காலை உணவு, விரும்பியதை விரும்பியவாறு சாப்பிட வைத்து, சென்னையில் உள்ள அஷ்டலட்சுமி கோவிலுக்கு அழைத்து சென்றோம். பிறகு முட்டுக்காடு போட்டிங். விருப்பபட்டவர்கள், 16 பேர் மட்டும் போட்டிங் சென்றனர். பின், மகாபலிபுரத்தில் மதிய சாப்பாடு; சைவம், அசைவம் என, விரும்பியதை சாப்பிட வைத்தோம். பின், 6:00 மணிக்கு கடற்கரை, 7:00 மணிக்கு திருவிடந்தை நித்ய பெருமாள் கோவில் தரிசனம்.

இரவு டின்னரை முடித்து, இல்லம் வந்து, நினைவு பரிசாக அனைவருக்கும் கோ.ஆப்டெக்ஸ் பெட்ஷீட்டை வழங்கினோம். அவர்கள் அடைந்த மகிழ்ச்சி அளவிடற்கரியது. அதை விட, நாங்கள் அடைந்த மகிழ்ச்சி எல்லையில்லாதது. செலவு கொஞ்சம் அதிகம் என்றாலும், வசதி படைத்தோர், ஆதரவு அற்ற முதியோர்களை, அவர்கள் பார்க்க விரும்பும் இடங்களுக்கு அழைத்துச் சென்று அசத்தலாமே!

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?



1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
2. மனது புண்படும்படி பேசக் கூடாது.
3. கோபப்படக்கூடாது.
4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
5. பலர் முன் திட்டக்கூடாது.
6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
17. ஒளிவு மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் 'இது உன் குழந்தை ' என்று ஒதுங்கக் கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா,தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.

நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்!



முதன் முதலாகத் தேர்தலைச் சந்தித்து, தோல்வியடைந்த நேரத்தில், பிராத்தனை கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார் அபிரஹாம் லிங்கன். கூட்டம் முடிந்ததும், “உங்களில் சொர்க்கத்துக்குச் செல்ல விரும்புவர்கள் மட்டும் கையை உயர்த்துங்கள்” என்றார் பாதிரியார். எல்லோரும் கையைத் தூக்க, அபிரஹாம் லிங்கன் மட்டும்  பேசாமல் நின்றார். “அபிரஹாம்! நீ எங்கே போவதாக உத்தேசம்?” என பாதிரியார் கேட்க, தோல்வி அடைந்திருந்த அந்த மன நிலையிலும், “நான் செனட் உறுப்பினராகப் போகிறேன்” என்று உறுதியான குரலில் சொன்னார் அபிரஹாம். “நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்” என புன்னகையுடன் ஆசி வழங்கினார் பாதிரியார்.



1809ம் வருடம் அமெரிக்காவின் சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்த லிங்கனை, “தோல்விகளின் செல்லக் குழந்தை” என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு தொடர் தோல்விகள் அவரைத் துரத்திக் கொண்டே இருந்தன. பிறந்த சில வருடங்களிலேயே தாயை இழந்தார். ஒரு கடையில் எடுபிடி வேலை பார்த்துக் கொண்டே இரவு நேரங்களில் மட்டும் பள்ளிப் பாடத்தை ஆர்வத்துடன் படித்தார். இளைஞனாகி, பக்கத்து நகருக்குப் போனபோது, அங்கே அடிமைகளை வியாபாரம் செய்யும் மனிதச் சந்தையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கறுப்பர்களின் அடிமை வாழ்க்கையைப் பற்றி அவர் கேள்விப்பட்டு இருந்தாலும் காய்கறி போல மனிதர்கள் விற்கப்படுவதை நேரில் கண்டதும் ரத்தம் சூடேற, லிங்கனுக்கு ஒரு புது லட்சியம் பிறந்தது. ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால்தான் இந்த அவலத்தை அகற்ற முடியும் என்று தெரிந்தும், அவசரமாக தனது 22வது வயதில் ஒரு நகராட்சி தேர்தல் வேட்பாளராக களம் இறங்கி, படுதோல்வி அடைந்தார். இந்த நேரத்தில், சொந்தமாகத் தொழில் தொடங்கி, அதில் பெரும் கடனாளியாக மாறியிருந்தார்.



சோர்ந்து போயிருந்த லிங்களை ஒரு போராளியாக மாற்றியது, அவரது வளர்ப்புத் தாய் சாரா புஷ். ‘ஆட்சிப பொறுப்புக்கு வரவேண்டும் என்றால், ஆசைப்படுவதைப் பெறுவதற்கான தகுதிகளை முதலில் வளர்த்துக்கொள்’. “நீ எதுவாக விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்!” என்றார் சாரா புஷ். பாதிரியார் சொன்ன அதே வார்த்தைகள்!



இப்போது லிங்கனுக்கு தன் இலக்கு புரிந்தது. மனதில் தெளிவு பிறந்தது. அடிமை வியபாரத்தை சட்டம் போட்டுத்தானே ஒழிக்க முடியும்? எனவே, முழுமூச்சுடன் சட்டம் படிக்கத் தொடங்கினார் லிங்கன். மக்கள் மனதை மாற்றினால் மட்டுமே சட்டத்தை சுலபமாக அமல்படுத்த முடியும் என்பதால், சட்டப்படிப்புடன் பேச்சுத் திறமையையும் வளர்த்துக் கொண்டார். அடிமை ஒழிப்பைப் பற்றி ஊர் ஊராகக் கூட்டம் போட்டுப் பேசினார். ஒரு தலைவருக்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டு, 1834ல் நடந்த நகராட்சி உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். அதன்பின் நகராட்சித் தலைவர், மாமன்ற உறுப்பினர், செனட் உறுப்பினர், உபஜனாதிபதி, எனப் பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிட்டு சில வெற்றிகளையும், பல தோல்விகளையும் சந்தித்து 1860ம் வருடம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். ஆம், எதுவாக மாற நினைத்தாரோ, அதுவாகவே ஆனார் லிங்கன்!.



இல்வாழ்விலும் அவருக்குத் தோல்விகள்தான்! 1835ல் அவரின் காதலி ‘ஆனி’ விஷக் காய்ச்சலால் மரணம் அடைந்தார். 33வது வயதில் மேரியுடன் திருமணம் முடிந்து நான்கு குழந்தைகள் பிறந்தன. மூன்று குழந்தைகள் சிறுவயதிலேயே மரணமடைந்தார்கள். மனைவிக்கு மனநோய் இருந்தது. இத்தனைத் தோல்விகளையும் மன உறுதியோடு எதிர்கொண்டதால்தான், லிங்கன் வெற்றி பெற முடிந்தது.



அமெரிக்க ஜனாதிபதி ஆனதும், அதிரடி நடவடிக்கை எடுத்து அடிமை அவலத்தை ஒழித்து, மாகாணங்களை ஒன்று சேர்த்து, அமெரிக்காவைத் தலை நிமிரவைத்தார் லிங்கன். அந்தச் சாதனையால்தான், அடுத்த முறையும் அவரே மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1865ல் நாடகம் பார்த்துக் கொண்டு இருந்தபோது ஒரு நிறவெறியினரால் சுடப்பட்டு மரணம் அடைந்தார் லிங்கன்.



மணவாழ்க்கை பற்றி லிங்கன் கூறியது - மணவாழ்க்கை லிங்கனுக்கு அவ்வளவு உவப்பாக இல்லை. பிற்காலத்தில் தம் இல்லற வாழ்க்கை பற்றி குறிப்பிடும் போது “மண வாழ்க்கை மலர்ப் படுக்கை அல்ல; போர்க்களம்” என்று குறிப்பிட்டார்.



“நீ எதுவாக மாற விரும்புகிறாயோ அதுவாக மாறுவாய்” என்பது அபிரஹாம் லிங்கனுக்கு மட்டுமல்ல… நம்பிக்கையைத் தளரவிடாமல், லட்சியத்துக்காக விடாப்பிடியாக போராடும் நம்மைப்போன்ற ஒவ்வொருவருக்கும் அது வெற்றி திருமந்திரம்.

நம்பிக்கை...?



உங்களுக்கு  நான் கூற விரும்புவது பல முறை நாம்  எந்த  விஷயதிட்காகவது தாகம் அடைகிறோம் ஏங்குகிறோம். ஆனால் நாம் நம்பிக்கை நிறைந்தவர்களாக இருப்பதில்லை.தாகமும் ஏக்கமும் நம்பிக்கை இல்லாமல் இருக்கும் பொது நிராசை அடைகின்றது.நிராசையுடன் ஒருவனது முதல் அடி எடுத்து வைக்கும் போது நிராசையுடனே கடைசி அடியும் நிறைவு பெறும். கடைசி அடி வெற்றியிலும் அர்த்தமுள்ளதாகவும் அமைய வேண்டுமெனில் முதல் அடி மிகுந்த நம்பிக்கையுடன் எழ வேண்டும்.

வாழ்க்கை முழுவதற்குமே நம்பிக்கையுடன் கூடிய திருஷ்டிக் கோணம் தேவை என்று உங்களுக்கு வலியுறுத்துகின்றேன். உங்கள் சித்தம் நம்பிக்கையால் நிறைந்து ஒரு வேலையைச் செய்கிறதா அல்லது நிராசையுடனா என்பதைச் சார்ந்தே அனைத்தும் இருக்கின்றன.நம்பிக்கையை இழந்து விட்டால், உங்கள் கைகளினாலேயே நீங்கள் அமர்ந்து இருக்கும் கிளையை வெட்டுகிறீர்கள்.

சாதனை விசயத்தில் நம்பிக்கை நிறைந்து இருப்பது மிகவும் முக்கியம். நம்பிக்கையினால் நிறைந்து இருப்பது என்பதன் பொருள், உலகில் எந்த மனிதனாலாவது   சத்திய நிலையை அடைந்து இருந்தாலோ அல்லது எப்பொழுதாவது ஒரு மனிதன் எல்லையற்ற ஆனந்தத்தையும் அமைதியையும்  அடைந்து இருந்தான் என்றால் நாம் அடைய முடியாததற்கு எந்த காரணமும் இல்லை என்றே நாம்  எண்ண வேண்டும்.

இருள் சூழ்ந்த இலட்சணக்கான மனிதர்களை பார்க்காதீர்கள். எந்த வித நம்பிக்கையும் எந்த  ஒளிக்கிரகணமோ  இல்லாத பிரகாசம் அளிக்காத கோடிக்கணக்கான மனிதர்களை பார்க்காதீர்கள் .
சத்யப்ப்ராப்தி அடைந்த சில மனிதர்களைச் சரித்திரத்தில் நோக்குங்கள். மலர்ச்சி அடைந்து பரமாத்மா வரை சென்ற சொற்ப மனிதர்களை நோக்குங்கள். அந்த விதைகளுக்கு சாத்தியமானது ஒவ்வொரு விதைக்கும் சாத்தியமே. ஒரு மனிதனுக்கு சாத்தியமானது மற்ற மனிதனுக்கும் சாத்தியமே.
விதை உருவில் உங்களிடம் உள்ள சக்தி புத்தர் மகாவீரர் ஜேசு இவர்களுடைய சக்தியின் அளவேதான் என்று உங்களுக்கு கூற விரும்புகிறேன்.

இறைவனின் உலகில் குறைந்த சாத்தியக் கூறு சிலருக்கு அதிக வல்லமை சிலருக்கு என்ற பாகுபாடு கிடையாது. ஆனால் இயற்கை நடப்புக்கள் அனைவருக்கும் சமமானதாக இல்லை.ஏனெனில் நம்மில்  அனேகமாக அனைவரும் தமது சாத்தியங்களை இயற்கை நடப்பாகப் பரிணமிக்கும் பிரயாசையை ஒரு பொழுதும் செய்வதில்லை.

வாழ் நாள் முழுவதும் நிராசையில் சென்று பார்த்தாயிற்று  இப்பொழுது நம்பிக்கையில் சென்று பாருங்கள். நீங்கள் முழு நம்பிக்கை வைக்கும் போது உங்களது ஒவ்வொரு மூச்சும் நம்பிக்கையினால் நிறைகிறது. உங்கள் எண்ணங்களில் நம்பிக்கை ஒளிர்கிறது. உங்களது தனித்தன்மை முழுவதும் நம்பிக்கையுடன் நிறைந்து விடும்பொழுது நீங்கள் ஒன்றைச் செய்ய முடியும் என்ற துவக்கம் ஆரம்பம் ஆகி விடுகின்றது.

இன்று இரவே உறங்கப் போகும் போது மிகுந்த நம்பிக்கையுடன் உறங்குங்கள். நாளைக் காலையில் எதுவும் நேரும், நேர முடியும், எதையாவது செய்து விட முடியும் என்ற பூரண நம்பிக்கையுடன் உறங்குங்கள்.

ஓஷோவின் படிப்படியாக தியானம் என்ற நூலில் இருந்து.

ஆபாச தகவல் Google தேடலில் வராமல் தடை செய்வது எப்படி ?



அன்பு சகோதரர்களே சகோதரிகளே !... அநேகமாக நம் எல்லோரது வீட்டிலும் லேப்டாப் இருக்கிறது இதனை நாம் ,மனைவி பிள்ளைகள் என எல்லோரும் தினசரி உபயோகப் படுத்துகிறோம் . பல தகவல்களை Google ல் நாம் தேடும் போது யதேச்சையாகவோ அல்லது தவறான ஸ்பெல்லிங் ஏற்படும் போதோ ஆபாசமான தகவல்கள், மற்றும் படங்கள் என வந்து மிகுந்த தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விடுகின்றது என்பது உண்மையே , இதனை சீர் செய்ய இந்த பதிவு மிகுந்த உபயோகமாக இருக்கிறது , எனவே முடிந்தவரை பலருக்கும் இதை SHARE செய்யுங்கள் என கேட்டுக் கொள்கிறேன்.



 ஆபாச தகவல் Google தேடலில் வராமல் Lock செய்வது எப்படி..?

நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம் .

 ...முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள்.

பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள்.

அல்லது

http://www.google.com/preferences ஓபன் பண்ணுங்கள்..

Safe serrch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள் ,

அடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள்.

Locking Process நடைபெறும்

 பிறகு Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள்.

அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது.

இதன் பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்த அடையாளமாக வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும் .

நீங்கள் இதனை Unlock செய்ய மீண்டும் Search setting சென்று unlock என்று மாற்றிவிடுங்கள்.

google எவ்வளவு பாதுகாப்பானது பாருங்கள் ....

Setting போய் பாத்துட்டு அட ஆமா இருக்கு'ல ன்னு சும்மா இருக்காம... setting correct'ah பண்ணுங்க...

சற்று சிந்தியுங்கள் அன்பர்களே..



ஆடம்பரத்திற்காக
 பட்டு புடவை வாங்கும்பொழுது பேரம்
 பேசுவதில்லை, நம்
 உடல்நலத்தை கெடுக்கும்
 குளிர்பானம், பீட்சா, பர்கர்,
வெளிநாட்டு கோழிக் கறிகள்
இவற்றை வாங்கும்
 பொழுது பேரம் பேசுவதில்லை,

நம் அந்தஸ்த்தை காட்ட அணியும்
 அணிகலன்கள் வாங்கையில் பேரம்
 பேசுவதில்லை,

ஆனால் நமக்காக
 நம் உடல்நலத்தை மனதில்
 கொண்டு நல்ல
 காய்கறிகளை உற்பத்தி செய்யும்
 ஏழ்மை பட்ட விவசாயிகளிடமும்,
காய்கறிகளை நம்மிடம்
 கொண்டுவந்து சேர்க்கும்
 காய்காரர்கள், கீரை விற்கும்
 பெண்மணியிடமும் பேரம்
 பேசுகிறோம்.

அந்நிய நாட்டில் தயாரிக்கப்
 பட்டது என்றால்
 அது என்னவென்றே தெரியாவிட்டாலும்
 அதிக விலை கொடுத்து வாங்க
 முன்வரும் இந்த சமூகம்
 நம்நாட்டில் தயாரிக்கப் படும்
 தின்பண்ட்களை வாங்க
 மறுக்கிறது.

அந்நிய
 நாட்டு பொருட்களை வாங்கி உன்னை அழித்துக்கொண்டு
 அந்நியர்களை வாழவைப்பதை விட
 நம்
 நாட்டு பொருட்களை வாங்கி உண்டு நீயும்
 வாழலாம் மற்றவர்களையும்
 வாழவைக்கலாம்.

சற்று சிந்தியுங்கள் அன்பர்களே..

பென்டிரைவ் வைத்து உள்ளிர்களா ?




பென்டிரைவ் என்பது கணனி பயன்படுத்துவோர் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட அனைவருமே பயன்படுத்தும் ஒரு REMOVABLE DEVICE ஆகும்.
இத்தகைய பென்டிரைவ்கள்(pendrives) நாம் கணினியில் பயன்படுத்தும்போது சில வேளைகளில் நம்முடைய பொறுமையைச் சோதிக்கும் அளவுக்கு மிகவும் மெதுவாக இயங்கும். அதிலுள்ள தரவுகளை பரிமாற்றம் செய்யும்போது நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். இத்தகைய சூழ்நிலையைத் தவிர்ப்பது எப்படி?

உங்களுடைய பென்டிரைவ் வேகமாகச் செயல்பட என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

1.உங்கள் கணினியில் பென்டிரைவை இணையுங்கள். (win+E)கொடுத்து MY COMPUTER செல்லவும்.

2.அங்கு பென்டிரைவிற்கான டிரைவை வலது கிளிக் செய்து Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

3.தொடர்ந்து திறக்கும் விண்டோவில் HARDWARE என்னும் டேபை கிளிக் செய்யவும். பிறகு Name என்னும் தலைப்பின் கீழுள்ள உங்கள் பென்டிரைவைத் தேரந்தெடுக்கவும்.

4.பிறகு கீழிருக்கும் Properties என்பதை கிளிக் செய்து Ok கொடுக்கவும்.

5.அடுத்து தோன்றும் விண்டோவில் change settings என்பதை கிளிக் செய்யவும்.

6.அதற்கு அடுத்துத் தோன்றும் பெட்டியில் Policies எனும் டேபிள் கிளிக் செய்து அதன் கீழிருக்கும் Better Performance என்பதைத் தேர்ந்தெடுத்து OK கொடுக்கவும்.

இப்போது உங்கள் பென்டிரைவ் முன்பைக் காட்டிலும் வேகமாக இயங்கும். இதை நீங்கள் கண்கூடாக காண்பீர்கள். இந்த அனுபவம் எப்படி இருக்கிறது என்பதை கருத்துரையில் சொல்லுங்கள்.

மறக்காமல் ஒவ்வொரு முறையும் பென்டிரைவை கணினியிலிருந்து நீக்கும்போது Safely remove hardware என்பதைக் கிளிக்செய்து பின்பு உங்கள் பென் டிரைவை கணினியிலிருந்து நீக்கவும். இதை ஒரு தொடர் பழக்கமாக மாற்றிக்கொள்ளுங்கள். இதனால் உங்கள் பென்டிரைவ் சேதமடையாமல் நீண்ட காலம் உழைக்கும்…!

நீரழிவை ஏற்படுத்தும் நான் ஸ்டிக் சமையல் பாத்திரங்கள்!



 ஒட்டும் தன்மையற்ற (நான் ஸ்டிக்), சமையல் பாத்திரங்களில் சமைக்கப்படும் உணவை உண்பதால், நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, ஸ்வீடனில் உள்ள உப்சலா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியுள்ளதாவது,

´நான் ஸ்டிக்´ சமையல் பாத்திரங்களில், ஒட்டும் தன்மை இல்லாமல் இருக்க, சில வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வேதிப்பூச்சுகள், விஷத்தன்மை கொண்டவை. இவ்வகை பாத்திரங்களில் உணவு தயாரிக்கும் போது, வேதிப்பூச்சுகள் உணவில் கலந்துவிடுகின்றன.

இதனால், இவ்வகை உணவுப் பொருட்களை உட்கொள்வதின் மூலம், மனித உடலில் கேடுகளை விளைவிக்கின்றன. இதனால், ´நான் ஸ்டிக்´ பாத்திரங்களில் சமைக்கப்படும் உணவுகளை உண்பவர்களுக்கு, நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

´நான் ஸ்டிக்´ பாத்திரங்களில் சமைக்கப்படும் உணவுகளை உட்கொள்ளும், ஆயிரம் நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், அனைவரின் இரத்தத்திலும், வேதிப் பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் பெரும்பாலானோர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ´நான் ஸ்டிக்´ பாத்திரங்களில் சமைக்கப்படும் உணவுப் பொருட்களை உண்பதின் மூலம், நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நான் ஸ்டிக் பாத்திரங்களில் பயன்படுத்தப்படும் வேதிப்பூச்சுகளே, இவ்வகை பாதிப்புகளுக்கு காரணமாய் இருப்பதால், அவற்றில் சமைக்கப்படும் உணவுப் பொருட்களை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. இவ்வாறு, ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

என் பெயர் என்ன ???.







என் பெயர் என்ன ???.


நீ அழுத போது
 உன்னை தரதரவென்று
 இழுத்துப் போய்
 பள்ளிக் கூடத்தில்
சேர்த்தேன்
 படித்து பெரிய ஆளாக
 வர வேண்டும் என்ற எண்ணத்தில்

 இன்று நான் அழுகிறேன்
 என்னை இழுத்துப் போய்
 முதியோர் இல்லத்தில் சேர்க்கிறாயே
 அங்கே நான் எதை படிக்க வேண்டுமென்று

 பத்துமாதம் உன்னை வயிற்றில்
 சுமந்தபோது பாரமாக
 நான் நினைக்கவில்லை
 உன் பத்தினி வந்ததும்
 உன் வீட்டில் நான் ஒரு ஓரமாக
 இருப்பதையே நீ பாரமாக நினைக்கிறாயே

 நீ ஓடி ஓடி விளையாடிய போது
 நீ செல்லும் இடமெல்லாம்
 உன் பின்னாலே வந்து
 உனக்கு சோறு ஊட்டி
 உன் வயிறு நிறைந்ததில்
 என் வயிறும் மனமும் நிறைந்தது
 எனக்கு வயிறாற உணவு வேண்டாம்
 ஒரு வேளையானலும் உன் வீட்டு சோறு போதும்

 உன் வருங்காலத்திற்காக
 உன்னை பெற்று வளர்த்து
 படிக்க வைத்து,கல்யாணம் முடித்து
 நீ வாழ்வதற்காக உன்னை ஆளாக்கினேன்
 என் எதிர்காலத்திற்காக
 நான் சாவதற்கு என்னை நீ
 பார்த்துக் கொள்ளக் கூட மறுக்கிறாய்

 பிள்ளையேப் பெறாமல்
 இருந்திருந்தால் மலடியாகிருப்பேன்
 யாருமே இல்லாதிருந்தால்
 அனாதையாகிருப்பேன்
 பிள்ளைகளைப் பெற்றும்
 இன்று நான் முதியோர் இல்லத்தில்

 நான் மலடியா
 நான் அனாதையா
 என் பெயர் என்ன..?


பேஸ்புக்கே கதி என்ற நிலைப்பாட்டை மாற்றுவதற்கு.....!



பேஸ்புக்கே கதி என்ற நிலைப்பாட்டை மாற்றுவதற்கு.....!

சில பெற்றோர்களுக்கும் நண்பர்களுக்கும் உதவும் என்று இதை பிரசுரிக்கின்றேன்

 குறித்த கணணியில் பேஸ்புக் இணையத்தளத்தை தடைசெய்வதற்கு

பிரபல சமூகவலைத்தளமான பேஸ்புக் அதன்பயனாளர்களுக்கு சிலவழிகளில் நன்மை தருகின்ற போதிலும், வேறுவிதத்தில் தீமை விளைவிக்கக்கூடியதாக உள்ளது.

எனவே பாடசாலைகள் போன்ற இடங்களிலும் இத்தளத்தை முடக்குவது கட்டாயமானதாக காணப்படலாம்.

இவ்வாறு பேஸ்புக்தளத்தை முடக்குவதற்கு FB Limiter எனும் மென்பொருள் காணப்படுகின்றது.

இம் மென்பொருளைத் தரவிறக்கம் செய்து குறித்த கணணியில் நிறுவியபின் ஒரேஒரு கிளிக்மூலம் பேஸ்புக்தளத்தை முடக்க முடியும்.

இது தவிர கடவுச் சொற்களைக்கொடுத்து முடக்கும் வசதியும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Block Facebook by using following features:

 DOWNLOAD:- http://www.facebooklimiter.com

மூச்சுத்திணறலை விரட்டும்; மூலிகைகள்!





நம் மூக்கை சுற்றியுள்ள காற்று அறைகளை சைனஸ் என்கிறோம். இந்த அறைகள்தான் தலைக்குப் பாதுகாப்பையும், முகத்துக்கு வடிவத்தையும், குரலுக்குத் தனித்தன்மையையும் கொடுக்கின்றன. இவற்றிலிருந்து சளி உற்பத்தியாகி, மூக்கின் வழியே வெளிப்படுகிறது. இந்த பாதையில் அடைப்பு ஏற்படும்போது, மூச்சுத் திணறல், காற்றறைகளில் வலியும், கிருமித் தொற்றும் ஏற்படுகிறது.

அறிகுறிகள்:


காய்ச்சல், உடல்சோர்வு, இருமல், மூக்கடைப்பு, தலைபாரம், மூக்கில் நீர் வடிதல்.

சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:

15 மிலி. துளசி இலைச்சாறுடன் தேன் கலந்து உண்ணலாம்.

ஒரு கிராம் பேரரத்தைப் பொடியை, பாலில் கலந்து பருகலாம்.

ஆடாதொடை இலை, வேர் இரண்டையும் கைப் பிடியளவு எடுத்து நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து, அதை ஒரு பங்காக வற்றவைத்து, தேன் கலந்து அருந்தலாம்.

கசகசாப் பொடியில் அரைஸ்பூன் தேன் கலந்து சாப்பிடலாம்.

கைப்பிடி அளவு கண்டங்கத்திரிச் செடியில் நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து, அதை ஒரு பங்காக வற்ற வைத்து அருந்தலாம்.

பெருஞ்சீரகப் பொடி, மிளகுத் தூள், பனங்கற்கண்டு சம அளவு எடுத்து அதில் ஒரு ஸ்பூன் அளவு உண்ணலாம்.

தவசு முருங்கையிலைச் சாறு 15 மிலி அருந்தலாம்.

ஒரு ஸ்பூன் தும்பைப் பூச் சாறுடன் கற்கண்டு சேர்த்து அருந்தலாம்.

அரை ஸ்பூன் தூதுவளைப் பொடியில் தேன் கலந்து உண்ணலாம்.

சதகுப்பை இலைப் பொடியில் சம அளவு சர்க்கரை சேர்த்துக் கலந்து, அதில் அரை ஸ்பூன் உண்ணலாம்.

15 மிலி. கற்பூர வள்ளிச் சாறைக் கற்கண்டு சேர்த்து அருந்தலாம்.

ஆதண்டைக் காயை வற்றலாகச் செய்து சாப்பிடலாம்.

ஊமத்தையும் சுக்கையும் சம அளவு எடுத்துப் பொடித்து, அதை அரை ஸ்பூன் தேனில் கலந்து உண்ணலாம்.

50 கிராம் மணத்தக்காளி வற்றலை, 200 மிலி வெந்நீரில் ஊறவைத்து வடித்து அருந்தலாம்.

திப்பிலிப் பொடியுடன் பனங்கற்கண்டு சம அளவு சேர்த்து, அரைஸ்பூன் பாலில் கலந்து உண்ணலாம்.

வெற்றிலைச் சாறு 15 மிலி எடுத்து மிளகுத் தூள் கால் ஸ்பூன் அளவு சேர்த்து உண்ணலாம்.

வெளிப் பிரயோகம்:


சுக்கை களியாகச் செய்து நெற்றியில் பற்று போடலாம்.

லவங்கத்தை நீர்விட்டு மைபோல் அரைத்து நெற்றியிலும், மூக்கின் மேலும் பற்று இடலாம்.

செம்பைப் பூவை எண்ணெயில் இட்டுக் காய்ச்சித் தலையில் தேய்க்கலாம்.

அகிற்கட்டைத் தைலத்தைத் தலையில் தேய்க்கலாம்.

கண்டுபாரங்கியைக் கடுக்காய், நெல்லிக்காய் தான்றிக்காய் சேர்த்து அரைத்துப் பற்று போடலாம்.
சுக்கைத் தாய்ப்பாலில் அரைத்து, நெற்றியில் பற்றிட்டு அனல் படும்படி லேசாகக் காட்டலாம்.

சேர்க்க வேண்டியவை:

தேன், மிளகு, பூண்டு, முட்டை, கோழி.

தவிர்க்க வேண்டியவை:

குளிர்ச்சியான உணவுகள், குளிரூட்டப்பட்ட அறை, வாழைப்பழம், திராட்சைப் பழம், தர்பூசணி, ஐஸ்கிரீம்

கனா காண்கிறேன் - கவிதை!





பல்லாங்குழி ஆடிய திண்ணை
 பாண்டி ஆடிய தெரு வீதி

 பட்டம் விட்ட மொட்டைமாடி
 பாடித் திரிந்த வயல் வெளி

துரத்திப் பிடித்த தும்பி
 பிடிக்காமல் விட்ட பட்டாம்பூச்சி

 கையில் ஏந்திய ஆட்டுக் குட்டி
 காத்துக் கிடந்த கனமழை

 விழுந்து விழுந்துக் கற்ற மிதிவண்டி
 விரட்டிச் சென்ற டயர் வண்டி

 திருடித் தின்ன மாங்காய் தோப்பு
 திட்டித் தீர்த்த காவல்காரன்

 அசைந்தாடிய ஆலமர ஊஞ்சல்
 ஆற்றைக் கடந்த பரிசல்

 அல்லி பூத்தக் குளம்
 அரசமரத் தடி பிள்ளையார்

 என அத்தனை நினைவுகளையும் சுமந்து சென்ற
 நெஞ்சம் தேடுது, எங்கே தொலைந்தது? நான் பார்த்த ஊர் என..

கனா காண்கிறேன்.....

உலகை வியக்கவைக்கும் ‘எக்ஸ்-ரே கண்ணழகி’!




உடலிலுள்ள கோளாறுகளை அறிய நவீன மருத்துவ உலகில் எக்ஸ்-ரே, ஸ்கேன் உள்ளிட்ட எவ்வளவோ புதுமையான மருத்துவ பகுப்பாய்வு முறைகள் தோன்றி விட்டன.ஆனால், 1987ம் ஆண்டு ரஷ்யாவில் உள்ள சரன்ஸ்க் என்ற இடத்தில் பிறந்த நிகோலெயவ்னா நடாஷா டெம்கினா என்ற பெண் தனது வெறும் கண்களாலேயே மனித உடலின் உள்ளுறுப்புகளை ஊடுருவி பார்க்கும் பிரமிக்கத்தக்க ஆற்றல் பெற்றவளாய் திகழ்ந்தாள்.


தனது பத்தாவது வயதில் தாயின் உடல் உள்ளுறுப்புகளை ஊடுசக்தி மூலம் வெறும் கண்ணால் பார்க்க தொடங்கிய இவரது புகழ் காலப்போக்கில் உலகம் முழுவதும் படர்ந்து பரவியது.


இதையடுத்து, இவரிடம் உள்ள அற்புத சக்தியை அறிந்த உள்ளூர் மக்கள், இவரது பார்வை பட்டாலே நோய் குணமாகிவிடும் என நம்பத்தொடங்கி டெம்கினாவை வீடுதேடி படையெடுக்க தொடங்கினர்.


டாக்டரின் வயிற்றின் எந்த பகுதியில் ‘அல்சர்’ கட்டி உள்ளது என்றும், மற்றொரு பெண்ணின் உடலில் உள்ளது புற்றுக் கட்டி அல்ல என்றும் தீர்க்கமாக கூறி இவர் மருத்துவ நிபுணர்களையே திகைக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரோக்கியததை உறுதிப் படுத்தும் கீரை வகைகள்!




நம் முன்னோர்கள் பயன்படுத்திய, நூற்றுக்கணக்கான கீரை வகைகளின் பெயர்கள் தெரியாததால் அவை களைச் செடிகளாக மாறி விட்டன. தற்போது மாறி வரும் உணவுப்பழக்கம், சுற்றுச்சூழல் மாறுபாடு, பூச்சிக்கொல்லிகளின் தாக்கத்தால், பயன்பாட்டில் இருக்கும் கீரை வகைகளும், அழிய தொடங்கி விட்டதாம்.இதற்கிடையில் இப்போது மார்க்கெட்டில் கிடைக்கும் கீரையின் மகத்துவத்தை வார்த்தைகளில் அடக்க முடியாது. பழங்காலம் முதலே மனிதனின் ஆகாரத்தில் முக்கிய இடம் பெற்றது கீரை. இதில் பலவகை இருந்தாலும், அனைத்து வகையான கீரைகளும் மனிதனின் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்காற்றுகின்றன. கீரையின் மகத்துவ பலன்களை இங்கே பார்ப்போம்.

 * புதினாக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நாக்கில் சுவை உணர்வு அதிகமாகும். வாய் சுவையற்று இருந்தால் மாறி விடும். வாந்தி போன்ற குமட்டல் நிற்கும். நல்ல பசியும் உண்டாகும். ரத்தத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, சுத்தமாகும். வயிற்று பிரச்சினைகளும் தீரும்.

* அரைக்கீரை என்று அழைக்கப்படும் அறுகீரை காய்ச்சல், ஜன்னி, கபம், வாதம் போன்ற நோய்களை நீக்கும் ஆற்றல் பெற்றது. ஆனால் வாயுக் கோளாறுகளை உண்டாக்கும்.

* முருங்கைக் கீரையில் இரும்புச் சத்து அதிகம். முருங்கைக் கீரையுடன் நெய் கலந்து, தினமும் சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடல் உறுதி பெறும். ஆனால் புளி சேர்க்கக் கூடாது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரையும்.

* கண்களில் பிரச்சினை உள்ளவர்கள் தினமும் சிறு கீரையை சாப்பிட்டு வந்தால், கண்களில் உள்ள சிக்கல்கள் தீர்ந்து விடும். குறிப்பாக கண் புகைச்சல் நீங்கி, பார்வை பிரகாசமாகும்.

* கொத்துமல்லிக் கீரை நல்ல வாசனையை உடையது. தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும். வாந்தி, குமட்டல் போன்றவை நிற்கும்.

* பசலைக் கீரையை, பசறைக் கீரை என்றும் சிலர் அழைப்பார்கள். இது அதிக சுவையை உடையது. அடிக்கடி தண்ணீர் தாகம் எடுப்பவர்களுக்கு, இந்த கீரையை கொடுத்தால் நாவறட்சியை தீர்க்கும்.

* பசி எடுக்காமல் இருப்பவர்களுக்கு வெந்தயக் கீரையை தொடர்ந்து கொடுத்து வந்தால் நன்றாக பசி எடுக்கும். உடல் ஆரோக்கியமாகும். கபம் மற்றும் வாயுக் கோளாறுகள் விலகும். அடிக்கடி வரும் இருமல் நீங்கும். நாக்கில் ருசி இல்லாமல் இருந்தால் மாறி சுவையுணர்வு ஏற்படும். வயிற்றில் ஏற்படும் உப்புசம் போன்றவற்றை நீக்கும். வாதம் மற்றும் காச நோய்களுக்கு வெந்தயக்கீரை மிகவும் நல்லது.

* வயது முதிர்ந்து நாடி, நரம்புகள் தளர்ந்து போனவர்களும், நடுத்தர வயதினரும் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய கீரை முளைக்கீரை. இந்தக் கீரை மிகவும் ருசியாக இருப்பதால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சிறுவர், சிறுமியருக்கும் முளைக்கீரை நல்லது. முளைக்கீரையை சாப்பிட்டால் நல்ல பசி எடுக்கும். காச நோயால் ஏற்படும் காய்ச்சலை நீக்கும் ஆற்றல் உடையது.

* புளிச்ச கீரை என்றழைக்கப்படும் புளிப்புக் கீரையை அடிக்கடி சாப்பிடுவோருக்கு வாத நோய்கள் நீங்கும். ரத்தத்தில் உள்ள உஷ்ணம் மற்றும் சிக்கல்கள் தீர்ந்து, சுத்தமாகும். கரப்பான் என்று அழைக்கப்படும் நோய் அகன்று விடும். பித்தம் தொடர்பான நோய்களும் தீரும். நாக்கில் சுவையுணர்வை அதிகரிக்க வைக்கும். வயிற்றில் உள்ள கோளாறுகளை நீக்கும்.

சூப்பர் பேஸ்மேக்கர் அறுவை சிகிச்சை இல்லாமல்..!.




இதய நோயான மாரடைப்பு ரிஸ்க் அதிகம் உள்ளவர்களுக்கு பைபாஸ் சர்ஜரி மற்றும் அறுவை சிகிச்சை மூலம் இதய ஓட்டத்தை நிறுத்தா வண்ணம் பேஸ்மேக்கர் என்னும் ஒரு சாதனம் பொருத்த படுவது சகஜமான ஒன்றூ. இதன் மூலம் சிறு அதிர்வலைகளை ஏற்படுத்தி இதயம் சற்று நின்று போனாலும் ஒரு உசுப்பு உசுப்பி வேலை செய்ய வைக்கும் ஒரு அற்புத சாதனம். இநிலையில் இப்போது ஆஸ்த்ரியா நாட்டின் மெடிட்ரானிக் என்னும் நிறுவனம் உலகத்திலே அதி சிறிய பேஸ் மேக்கரை உருவாக்கி உள்ளார்கள்.


அதாவது இது பழைய பேஸ்மேக்கரை விட பத்து மடங்கு சிறிது நீளம் வெறும் 24 மில்லி மீட்ட்ர் – அகலம் 0.75 கியூபிக் சென்டி மீட்டர் மட்டுமே கொண்டது


இதில் இன்னொரு மகிழ்ச்சி விஷயம் இதை இம்ப்ளான்ட் செய்ய அறுவை சிகிச்சையெல்லாம் தேவையில்லை. தொடைப்பகுதியில் உள்ள ஒரு ரத்த குழாய் மூலம் இதயத்துக்கு நேராக செலுத்த முடியும் என்பது தான் ஹைலைட்.கடைசியாக இன்னொரு மகிழ்ச்சியான விஷயம் இதன் பேட்டரி லைஃப் சுமார் 10 பத்து வருடங்கள் இதனால் ஹார்ட் அட்டாக் ரிஸ்க் பத்து வருஷத்துக்கு கிடையவே கிடையாது மக்களே……………………டோன்ட் ஒர்ரி.. பீ ஹேப்பி!!!

ஸ்மார்ட்போனின் அப்டேட்டை விரலில் அலர்ட் அனுப்பும் ‘ஸ்மார்டி ரிங்’




இப்போதைய அவசரயுகத்தில் மொபைல் ரிங்டோனை எல்லாம் கவனிக்க நேரமில்லாமல் அவ்வப்போது நம்முடைய முக்கியமான அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை(text) மிஸ் பண்ணி விடுகிறோம். இதைக் கவனத்தில் கொண்டு ஒரு புதிய ப்ளூடூத் செயல்படுத்தப்பட்ட வியரபுள்(wearable) மோதிரம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி பயனர்கள்(users) தங்கள் விரலில் இருந்து ஸ்மார்ட்போனின் இன்கம்மிங் அழைப்புகளை அலர்ட் செய்யவும் மற்றும் அதனை மேனேஜ் செய்யவும் அனுமதிக்கிறது.


பயனர்கள் மொபைல் அப்ளிக்கேஷனில் இருந்து இந்த ஸ்மார்டி ரிங் என்று அழைக்கப்படும் கேஜெட்டின் செட்டிங்களை(settings) மேனேஜ் செய்ய முடியும் மற்றும் வாட்ச், டைமர், அல்லது ஃபோன் தேடல் என்று சாதனத்தை பயன்படுத்தவும் முடியும். பயனர்கள் அவரது ஃபோன் இருக்கும் இடத்திலிருந்து 30-க்கும் மேற்பட்ட அடி கடந்து செல்லும் போது, அவருக்கு பின்னால் ஏதோ விட்டு போய் விட்டார் என்று மோதிரம் அவரை எச்சரிக்கை பீப் செய்து நினைவுப்படுத்தும் .


இதையெல்லாம் விட முக்கியமாக இந்த கேஜெட் குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல் செய்திகளை அலர்ட் செய்யவும் மற்றும் இன்கம்மிங் மற்றும் அவுட்கோயிங் அழைப்புகளின் அறிவிப்புகளையும் பயனர்களுக்கு அப்டேட் செய்து கொண்டே தக்க வைத்திருக்கும். மேலும் இது பேஸ்புக், ட்விட்டர், ஹேங்கவுட் – ஸ்கைபில் இருந்து ரியல் டைமின் அப்டேட்களையும் கொடுக்கிறது. இந்த ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் 24 மணி நேர பேட்டரி ஆயுள் கொண்டுள்ளது. இது ப்ளூடூத் 4.0 திறன்களையும், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் சாதனம் ஆகிய இரண்டுக்கும் இணக்கத்தன்மை கொண்டதாக உள்ளது.


ரஜினிகாந்த் பிறந்த நாள் போஸ்டர் மூலம் மத மோதல்? – சி. எம். செல்லுக்கு போன புகார்!




தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்–அமைச்சர் தனிப்பிரிவில் விசுவ இந்து பரிஷத்தின் தமிழ்நாடு பிரிவின் சார்பில் கொடுக்கப்பட்ட புகார் மனுவில் “12–ந் தேதியன்று நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடும் விதத்தில் சென்னையில் பல இடங்களில் வாழ்த்து போஸ்டர்களை ஒட்டினர். அதில், ஒரு போஸ்டரில் உள்ள படத்தில், ரஜினிகாந்த் அவரது மனைவி, மகளுடன் வாக்குச்சாவடியில் ஓட்டுபோடுவது போலவும், ஓட்டு போடுவதற்கு நிற்கும் ரசிகர் வரிசையில் விநாயகர், விஷ்ணு கடவுள்களும் காத்து நிற்பது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.


இந்து மத தெய்வங்களை அரசியலுடன் ஒப்பிட்டு இழிவுபடுத்தியுள்ளனர். இந்து மதத்தை பின்பற்றுகிறவர்களின் மனதை, தமிழகம் முழுவதிலும் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் புண்படச் செய்துள்ளது. இந்த போஸ்டரை அச்சடித்தவர், ஒட்டியவர்களை உடனே கைது செய்ய வேண்டும். அதில் ஐந்து பேரின் பெயர்கள் உள்ளன.


ரஜினி ரசிகர் போர்வையில் மாற்று மதத்தினர் இதன் பின்னணியில் உள்ளதுபோல் தெரிகிறது. சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, கலெக்டர் மாநாட்டில் கூறியுள்ளதுபோல், மத மோதலைத் தூண்டும் வகையில் செயல்படுபவர்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.”என்று அதில் கூறப்பட்டுள்ளது.

குளிர் கால எச்சரிக்கைகள்!




கோடை காலத்தை விட மழை மற்றும் குளிர் காலத்தில் தான் தொற்றுக்கிருமிகள் எளிதில் பரவும். அதனால் நவம்பர் முதல் மார்ச் வரை உஷாராக இருப்பது நல்லது.ஆங்கிலத்தில், ‘சாட்’ எனப்படும் “சீசனல் அபெக்டிவ் டிசார்டர்’ என்ற பாதிப்பு இந்த குளிர் காலத்தில்தான் அதிகமாக ஏற்படுகிறது. மேலும் இது வைட்டமின் டி’ சத்து குறைவை ஏற்படுத்தி உடல்வலி காய்ச்சல் உட்பட எல்லாவித பாதிப்பையும் ஏற்படுத்தும். அந்த கால கட்டத்தில் வைட்டமின் டி’ சத்து உள்ள உணவு வகைகளை குளிர்காலத்தில், எடுத்துக் கொள்வது முக்கியம்.அது மட்டுமின்றி மழைக் காலங்களில் எளிதில் பரவுவது வைரஸ் தொற்றுக் கிருமிகள் தான். ஜலதோஷம், ப்ளூ காய்ச்சல் போன்றவை மழை மற்றும் குளிர்காலத்தில் பெரும்பாலோருக்கு வரும். அதனால் மழைக்காலத்தில் வெந்நீர் பருகுவது நல்லது. எந்த ஒரு காலகட்டத்திலும் உடலுக்கு எல்லா வகையிலும் நன்மை தருவது குடிநீர். ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்கலாம். இவ்வாறு குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுவதுடன் உடல் பளபளப்பும் ஏற்படும்.


மழை மற்றும் குளிர் காலங்களில் வயதானவர்கள் அதிகாலையில் எழுவதை தவிர்க்க வேண்டும். அதுபோல வெயில் வந்தபின், உடற்பயிற்சி செய்யலாம்.


இதற்கிடையில் இதே குளிர் காலத்தில்தான் மாரடைப்பு, பக்கவாதம், திடீர் மரணம் அதிகமாக ஏற்படுவதை மருத்துவமனை ரிகார்டுகள் மூலம் அறியலாம். வட ஐரோப்பிய நாடுகளில், ஆண்டுக்கு ஆறு மாதங்கள், குளிர் வாட்டி எடுத்து விடும். நம் நாட்டில், பெரும்பாலான மாதங்கள் வெயில்தான். ஆனால், அந்தந்த நாட்டு மக்களின் உடல் நிலை, அதற்கேற்ப மாறிக்கொள்வதால், பாதிப்பு அதிகம் இல்லை. ஆனால், வெயிலில் வாழ்பவர்கள், திடீரென குளிர் பிரதேசங்களுக்குச் செல்லும்போது, அவர்களின் இருதயம், ரத்தக் குழாய்களின் ரத்த ஓட்டத்தின் தன்மை மாறி விடுகிறது.


மாற்றங்களுக்கான காரணங்கள்:


குளிர், ரத்தக்குழாய்களை சுருங்க வைக்கிறது. இதனால், இதயம், அள வுக்கு அதிகமாக வேலை செய்யும் நிர்பந்தத்திற்கு ஆளாகிறது. குளிர் பிரதேசம் மற்றும் மலை பிரதே சங்களில், பிராண வாயு குறைவாக இருக்கும். இதனால் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள்,தட்டை அணுக்கள், பைபர் நோஜன் அதிகரிக்கிறது .கூடவே கொலஸ்ட்ராலும் அதிகரிக்கிறது. இதனால்,அளவுக்கு அதிகமாக ரத்தம் உறைந்து, இதயம், மூளை ஆகியவற்றுக்குச் செல்லும் ரத்தம் குறைகிறது. ரத்தக் குழாயும் சுருங்கி விடுவதால், இப்பகுதிக்கு ரத்தம் செல்வதும் தடைபடுகிறது.


இதனால்தான் நடுவயதினருக்கும், பக்கவாதம், மாரடைப்பு வர வாய்ப்புள்ளது. அதிலும் ஏற்கனவே, ரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்களின் நிலை இது போன்ற காலங்களில் மிகவும் கஷ்டம். எனவே இது போன்ற நிலை ஏற்படாமல் தவிர்க்க தலைக்கு குல்லா, கை, கால்களுக்கு கம்பளியில் ஆன உறைகள் அணிவது ஆகியவற்றை கண்டிப்பாக பின் பற்ற வேண்டும்.


முக்கியமாக மது அருந்துபவர்களும், மலைப் பிரதேசத்திற்குச் செல்லும் போது, கவனமாக இருக்க வேண்டும். மது அருந்தி விட்டு, நடைபயிற்சி மேற்கொள்வதோ, உலவப் போவதோ கூடாது. ஏனெனில், மது அருந்தியவுடன், ரத்தக் குழாய்கள் விரிவடைந்து, உடல் உஷ்ணமாகும்.
பின், திடீரென உடல் வெப்பம் குறைந்து, ஆபத்தை விளைவித்து விடும். மது அருந்திவிட்டு, வெளியே போவதை அறவே தவிர்க்க வேண்டும்.


சமவெளிகளில்கூட மார்கழி, தை மாதங்களில், இதயநோய்கள் ஏற்படுவது சகஜம். குளிர் அதிகம் ஏற்படுவதால், ரத்தக் குழாய்கள் சுருங்கி, ரத்த ஓட்டத்தை தடுக்கிறது. இதனால் நெஞ்சு அழுத்தம், மூச்சு இரைப்பு, படபட ப் பு ஏற்படும். வாந்தி, மயக்கம், அசதி, தாறுமாறான இதயத் துடிப்பு ஆகியவை ஏற்படும். ரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய் உள்ளவர்கள், எப்போதும் கைப்பையில், ‘சார்பிட்ரேட்’ மாத்திரை வைத்திருக்க வேண்டும். மேலே சொன்ன அறிகுறிகள் தெரிந்தால், மாத்திரையை நாக்கு அடியில் வைத்துக் கொள்ள வேண்டும்.


அப்படியும் குணமடையா விட்டால், உடனடியாக டாக்டரிடம் செல்ல வேண்டும். அது போல், ‘ஏசி’ அறைகளில், 20 டிகிரி செல்சி யசில், தொடர்ந்து பல மணி நேரங்கள் அமர்ந்திருப்பதும் தவறு. அவ்வப்போது, அறையின் வெப்ப நிலைக்கு ஏற்றார்போல், ஏசியை அணைத்து வைக்க வேண்டும்.

ஆர்யா, விஜய் சேதுபதிக்கு ஜோடியான கார்த்திகா!




எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் 'புறம்போக்கு' படத்தில் ஆர்யாவும், விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர்.


இது முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாக இருக்கிறது. இப்படத்தை யு.டி.வியுடன், எஸ்.பி.ஜனநாதனின் 'பைனரி பிக்சர்ஸ்'ம் இணைந்து தயாரிக்கவுள்ளது.


இதன் முதற் கட்டப் படப்பிடிப்பு வருகிற ஜனவரியில் குலுமணாலியில் துவங்குகிறது.


இந்நிலையில் இப்படத்தின் ஹீரோயினாக ராதா மகள்  கார்த்திகா ஒப்பந்தமாகியுள்ளார்.


இரண்டு ஹீரோக்கள் படத்தில் இருந்தாலும் , ஒரு ஹீரோயின் தானாம். இதனால் சந்தோஷத்தின் உச்சியில் இருக்கிறார், கார்த்திகா.


ஆர்யா, விஜய் சேதுபதி இருவருடனும் ஒரு டூயட் பாடலாவது இருக்கும் என்பதால்,  அடுத்தடுத்து வாய்ப்புகளைக் கைப்பற்றிவிடலாம் என்று நம்வுகிறாராம் கார்த்திகா.


தற்போது அருண்விஜய்யுடன் 'டீல்' படத்தில் கார்த்திகா நடித்துக் கொண்டிருக்கிறார்.

வெளிநாட்டு வேலைக்கு போறீங்களா? - இதப் படிங்க மொதல்ல!




‘சிங்கப்பூரில் சித்தாள் வேலைக்கு ஆட்கள் தேவை.. சவுதியில் சமையல் வேலைக்கு ஆட்கள் தேவை..’ கண்ணைப் பறிக்கும் கலரில் ஒட்டப்படும் இந்த போஸ்டர்களை நம்பி இன்னமும் பலபேர் போலி ஏஜென்ட்களிடம் ஏமாந்து கொண்டி ருக்கிறார்கள். இப்படி எல்லாம் இஷ்டத் துக்கு போஸ்டர் ஒட்டி, வெளிநாட்டுக்கு ஆள் பிடிப்பது சட்டப்படி குற்றம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் எடுப் பவர்கள் குடிபெயர்வோர் பாதுகாவலரி டம் (Protector Of Emigrants) லைசென்ஸ் பெறவேண்டும். தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா இந்த நான்கு மாநிலங் களுக்குமான குடிபெயர்வோர் பாதுகாவ லர் (பி.ஓ.இ) அலுவலகம் சென்னையில் இருக்கிறது. வெளிநாடு வாழ் இந்தியர் நலனுக்கான அமைச்சகத்தின் கீழ் செயல் படும் இந்த அலுவலகத்தில் ஐ.ஏ.ஏஸ். அதிகாரி பி.ஓ.இ-யாக இருக்கிறார்.

வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட் களை எடுக்கும் நிறுவனங்கள் 45 லட்ச ரூபாய்க்கு சொத்து மதிப்பும் 20 லட்ச ரூபாய்க்கு வங்கி உத்தரவாதமும் கொடுக்க வேண்டும். குறைந்தது 500 சதுர அடியில் சகல வசதிகளுடன் அலுவலகம் இருக்க வேண்டும். இதெல்லாம் இருந்தால் தான் லைசென்ஸ் கிடைக்கும். இந்த லைசென்ஸ் ஐந்தாண்டுகளுக்கு செல்லுபடியாகும். அதற்குள்ளாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பலாம்.

ஆள் பிடிப்பது குற்றம் 

லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள், பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து ஆட்களை இன்டர்வியூவுக்கு அழைக்க லாம். துண்டுப் பிரசுரங்கள் கொடுத்தோ, லோக்கல் சேனல்களில் விளம்பரம் செய்தோ, சுவரொட்டிகளை ஒட்டியோ ஆள் பிடிப்பது சட்டப்படி குற்றம். லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள் தவிர மற்றவர்கள் தனிநபர்களின் பாஸ்போர்ட் களை வாங்கி வைத்திருப்பதே கைதுக்குரிய குற்றம் என்கிறது சட்டம்.

வேலைக்கு ஆட்களை எடுக்கும் வெளி நாட்டுக் கம்பெனியானது பணியாளருக் க்கான குறைந்தபட்ச ஊதியம், விசா, தங்கு மிடம், உணவு, மருத்துவம், போக்கு வரத்து வசதி உள்ளிட்டவைகளை இலவச மாக அளிப்பதுடன், பணியாளர் இறக்க நேரிட்டால் பிரேதத்தை தங்கள் செலவி லேயே இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதாக வும் உத்தரவாதம் தரவேண்டும்.

வங்கி உத்தரவாதம் 


எதிர்பாராத விதமாக வெளிநாட்டில் இந்திய பணியாளருக்கு ஏதாவது அசம்பா விதம் நடந்தால் அதற்கான இழப்பீட்டுத் தொகையை வெளி நாட்டுக் கம்பெனியிட மிருந்து வாங்கிக் கொடுக்கும் பொறுப்பு இங்கி ருந்து ஆட்களை எடுத்து அனுப்பும் நிறுவனத்துடையது. இதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால், அந்த நிறுவனத்தின் வங்கி உத்தரவாதத்தை வைத்து அரசே சம்பந்தப்பட்ட பணியாளருக்கு இழப் பீட்டை வழங்கிவிடும்.

போலிகளை தண்டிக்க முடியும் 

“நிறுவனங்கள் மூலமாக இல்லாமல், சுயமுயற்சியில் வெளிநாட்டு வேலை களுக்கு போகும் நபர்களுக்கு தினமும் நாங்களே இரண்டு மணி நேரம் வகுப்பு எடுக்கிறோம்’’ என்கிறார்கள் பி.ஓ.இ. அலுவலக அதிகாரிகள். “அதெல்லாம் சரி.. ஊர் ஊருக்கு பெட்டிக் கடை போட்டு வெளிநாட்டு வேலைக்கு ஆள் எடுப்பதாகச் சொல்லும் மோசடிக் கம்பெனிகளை தடுக்க முடியாதா?’’ என்று கேட்டால், “தமிழகத்தில் முறைப்படி லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள் 104 மட்டுமே. மற்ற வைகள் எல்லாமே போலிகள் தான். போலிகள் மீது நட வடிக்கை எடுக்க முடியும். ஆனால், எங்களி டம் அதற்கான மேன் பவர் இல்லை; போலீஸைத்தான் நம்ப வேண்டி இருக்கி றது. இதற்கு ஒரே வழி மக்கள் விழிப்புடன் இருப்பது தான்’’ என்கிறார்கள்.

இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு ஏன் இந்த பிடிவாதம்?




இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) சஸ்பெண்ட் செய்யப்பட்டு சரியாக ஓராண்டைக் கடந்துவிட்டபோதிலும், அது தொடர்பான பிரச்சினை இன்னுக்கு முடிவுக்கு வந்தபாடில்லை. சவ்வாக இழுத்துக் கொண்டே போகிறது. இன்னும் எவ்வளவு நாள்கள் இந்த பிரச்சினை ஓடும், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் மீதான சஸ்பெண்ட் எப்போது நீக்கப்படும் என்பது இந்திய மக்களுக்கு மட்டுமல்ல, இந்திய அரசுக்கும் புரியாத புதிராகவே உள்ளது. இந்திய விளையாட்டு வீரர்களோ நமக்கு விடிவுகாலம் பிறக்காதா என காத்திருக்கிறார்கள்.

காமன்வெல்த் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள், இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் மத்திய அரசின் தலையீடு இருக்கிறது என்பது உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி அந்த சங்கத்தை கடந்த ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி சஸ்பெண்ட் செய்த சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐஓசி), இந்திய வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்கும் தடை விதித்தது.

ஐஓஏ மீதான தற்காலிக முடக்கத்தை நீக்குவதற்காக தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்பட்டபோதிலும் அதிலிருக்கும் முட்டுக்கட்டைகள் இன்னும் தகர்ந்தபாடில்லை. இதற்கு யார் காரணம் என்றால், அது ஐஓஏதான் என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை. ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் ஐஓஏ நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட முடியாத வகையில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது ஐஓசி.

நல்ல விஷயம்தானே அப்படியொரு திருத்தத்தைக் கொண்டு வருவதில் என்ன பிரச்சினை என தோன்றலாம். ஆனால், அப்படியொரு திருத்தம் கொண்டு வரப்பட்டால் இந்திய விளையாட்டுத் துறையில் நிர்வாகிகளாக இருக்கும் பெரும்பாலான பெரிய மனிதர்கள் வீட்டுக்குச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை. அதனால்தான் அந்தத் திருத்தத்தை செய்யாமல் இன்று வரை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள் இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள்.

ஐஓசி எச்சரிக்கை 

கடந்த அக்டோபர் 27-ம் தேதி நடைபெற்ற ஐஓஏவின் செயற்குழு கூட்டத்தில் சட்டத்திருத்தம் தொடர்பான கருத்துரு தயாரிக்கப்பட்டு ஐஓசிக்கு அனுப்பப்பட்டது. அதில் இரண்டு ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடலாம் என்றும், அதற்கு மேல் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஐஓஏவின் நீதி நெறிக்குழு முடிவு செய்யும் என்றும் கூறப்பட்டிருந்தது. அதை உடனடியாக நிராகரித்த ஐஓசி, தாங்கள் கூறியபடி சட்டத்திருத்தம் செய்யப்படாவிட்டால் ஐஓஏவின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரித்தது.

இதையடுத்து வேறு வழியில்லாமல் கடந்த 8-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற ஐஓஏ கூட்டத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாதபடி சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. அப்போதே ஐஓஏ தேர்தல் தேதியும் (பிப்ரவரி 9) அறிவிக்கப்பட்டது. ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான லலித் பனோட் மற்றும் அபய் சிங் சௌதாலா ஆகியோர் இந்தத் தேர்தலில் போட்டியிடமாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது.

அப்போது “இந்திய வீரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஐஓஏ தேர்தலில் போட்டியிடுவதில்லை என நாங்கள் முடிவெடுத்திருக்கிறோம்” என சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஒலிம்பிக் சங்கத்தின் தலைவரான அபய் சிங் சௌதாலாவும், பொதுச் செயலரான லலித் பனோட்டும் தியாகிகளாகப் பேசிக் கொண்டார்கள். ஐஓசியின் கிடுக்கிப் பிடியில் இருந்து தப்பிக்க வழியின்றிதான் இவர்கள் இருவரும் தேர்தலில் போட்டியிடமாட்டோம் என கூறினார்களே தவிர, விளையாட்டு வீரர்களின் நலனுக்காக அல்ல என்பது உலகறிந்த விஷயம்.

குளிர்கால ஒலிம்பிக் 

இதனிடையே ஐஓஏவின் சட்டத்திருத்தத்தால் மகிழ்ச்சியடைந்த ஐஓசி தலைவர் தாமஸ் பேச், “ரஷியாவின் சோச்சியில் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்தியர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் அவர்கள் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கொடியின் கீழ்தான் பங்கேற்க வேண்டும். ஒருவேளை அதற்கு முன்னதாக ஐஓஏ தேர்தல் நடைபெற்றுவிட்டால், அதன் மீதான சஸ்பெண்ட் நீக்கப்படுவதோடு, இந்தியர்கள் அவர்களின் தாய் நாட்டு தேசியக் கொடியின் கீழ் பங்கேற்க அனுமதிக்கப்படும்” என அறிவித்தார்.

பிப்ரவரி 9-க்கு முன்னதாக ஐஓஏ தேர்தல் நடைபெறும் பட்சத்தில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக ஐஓஏ மீதான தடை நீக்கப்பட்டுவிடும் என எதிர்பா்க்கப்பட்ட நிலையில் அடுத்த பிரச்சினை ஆரம்பித்திருக்கிறது. கடந்த 8-ம் தேதி சட்டத்திருத்தம் செய்யப்பட்டதில் ஒரு ஓட்டை இருப்பதை கண்டுபிடித்திருக்கிறது ஐஓசி. ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாதபடி சட்டம் திருத்தம் செய்யப்பட்டிருந்தாலும், அது தொடர்பாக ஐஓஏவின் நீதி நெறிக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என்று கூறப்பட்டிருப்பதுதான் அந்த ஓட்டை. இந்த ஓட்டை தெரியாமல் விழுந்ததல்ல, ஊழல்வாதிகள் இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் மீண்டும் நுழைவதற்காக திட்டமிட்டு போடப்பட்டதாகவே கருதப்படுகிறது.

தடை நீக்கப்படாது 

இதனால் கோபமடைந்துள்ள ஐஓசி, உங்களின் சட்டத்திருத்தம் முழு மகிழ்ச்சியளிக்கவில்லை. பிப்ரவரி 9-ம் தேதி இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தலை நடத்துவதற்கு முன்னதாக நாங்கள் கூறியதுபோல் முழுமையான சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும். அப்படியொரு திருத்தம் கொண்டு வராத வரையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் மீதான தடை நீக்கப்படாது என எச்சரித்திருக்கிறது.

சட்டத்திருத்தத்தில் தேவையில்லாத ஊகங்களையும், சந்தேகத்திற்குரிய விளக்கங்களையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ள ஐஓசி, “ஐஓஏ நிர்வாகியாக இருக்கும் ஒருவர் குற்றச்சாட்டுக்கு உள்ளாகும்போது அவர் தானாகவே ராஜிநாமா செய்ய வேண்டும். இல்லாதபட்சத்தில் அவர் சஸ்பெண்ட் செய்யப்படும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட வேண்டும். நீதிமன்றம் நிரபராதி என தீர்ப்பளிக்கும் வரையில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் ஐஓஏவுக்குள் நுழைய முடியாது. ஒருவரை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கவோ, அவரை மீண்டும் பதவியில் அமர்த்தவோ ஐஓஏ நீதி நெறிக்குழுவுக்கு அதிகாரம் கிடையாது” என தெளிவாகக் கூறியிருக்கிறது.

சிலர் 30 முதல் 40 ஆண்டுகள் வரை பதவியில் இருந்துவிட்டபோதும் கூட அங்கிருந்து வெளி யேற அவர்களுக்கு மனமில்லை. தங்களின் பதவியைப் பயன்படுத்தி பல ஆண்டுகள் சுகபோக வாழ்க்கையை வாழ்ந்துவிட்டதோடு, பல்வேறு வெளிநாடுகளையும் இலவசமாக சுற்றிப்பார்த்து விட்டனர். ஒருவேளை அவர்கள் பதவியில் இருந்து விலகினாலும், தங்களின் பிள்ளைகளையோ, பினாமிகளையோதான் அந்தப் பதவியில் அமர்த்த வழி பார்ப்பார்கள். இதுதான் ஆண்டாண்டு காலமாக இந்திய விளையாட்டுத் துறையில் நடந்து கொண்டிருக்கிறது.

மத்திய அரசும், மாநில அரசுகளும் விளையாட்டுத் துறைக்கு பணத்தை ஒதுக்கிவிட்டு, இந்தத் திட்டத்துக்கு இத்தனைக் கோடி ஒதுக்கியிருக்கிறோம் என்று விளம்பரப் படுத்துவதோடு தங்களின் கடமை முடிந்துவிட்டதாக நினைக்கின்றன. கடந்த காலங்களில் விளையாட்டை மேம்படுத்துவதற்கும், விளையாட்டுச் சங்கங்களை முறைப்படுத்தவும் மத்திய அமைச்சர்கள் மேற்கொண்ட முயற்சிகள்கூட ஊழல்பேர் வழிகளின் நெருக்கடியால் தோல்வியில்தான் முடிந்திருக்கின்றன.

தாய் நாட்டுக் கொடி 

இந்திய அரசு செய்யாத நல்ல காரியத்தை இப்போது ஐஓசி செய்திருக்கிருக்கிறது. ஐஓசியின் பிடி இறுகியதால் ஐஓஏவுக்கு நெருக்கடி முற்றியிருக்கிறது.

இந்த வாய்ப்பை விட்டுவிடக்கூடாது. ஊழல்பேர்வழிகளை வெளியேற்றி நேர்மையானவர்களையும், முன்னாள் விளையாட்டு வீரர்களையும் ஐஓஏவுக்கு நிர்வாகிகளாக் கொண்டு வரவேண்டும். இந்திய வீரர்கள் தங்கள் தாய்நாட்டின் தேசியக் கொடியுடன் சர்வதேசப் போட்டிகளில் தலைநிமிர்ந்து பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டிய நேரமிது.

விளையாட்டுத் துறையில் ஊழல்பேர்வழிகள் இல்லாத நிலையை 5 ஆண்டுகளுக்கு முன்பே உறுதி செய்திருந்தால் காமன்வெல்த் ஊழல் என்ற கறை இந்தியாவின் மீது படிந்திருக்காது. இந்தியாவுக்கும் சர்வதேச அரங்கில் தலைக்குனிவு ஏற்பட்டிருக்காது!

டிசம்பர் 17 , 2013 திரையிடப்படும் CIFF படங்களின் முன்னோட்டம்!




தேதி : 17 DEC 2013

திரையரங்கம் : WOODLANDS

11:00 am : Inertia


நீங்கள் உங்கள் காதலியை, துணையை எவ்வளவு நேசிப்பீர்கள்? கடலளவு? கடவுள் அளவு?. ஆனால் நிச்சயமாக சொல்ல முடியும்.. லூசியா அளவு முடியாது. இத்தனைக்கும் பிலிப் அவளை ஏமாற்றி கைவிட்டு ஓடிச் சென்றவன். அந்த பிலிப் இப்போது கிட்னி செயலிழந்து சாகக் கிடக்கிறான். ஒழிந்தான் துரோகி என லூசியா போய்விடவில்லை. நேசிப்பின் இலக்கணம் லூசியா. இசபெல் முனோஸ் என்கிற ஸ்பானிய பெண் இயக்குனரின் படம்.

2:00 pm : What They Don't Talk About Men When They Talk About Love

பேரைச் சொல்லவே அரை நிமிடம் ஆகும் இந்த இந்தோனேசியப் படத்துக்கு உலக அளவில் ஏகப்பட்ட விருதுகள். காதலுக்கு கண் இல்லை என்பார்கள். கண் இல்லாதவர்களுக்கு காதல் இருந்தால். டயானா, மாயா - கண் பார்வையற்றவர்கள். டயானா.. அவளைப் போலவே பார்வையற்றவனைக் காதலிக்கிறாள். மாயாவுக்கோ ஒரு டாக்டர் மீது காதல். அந்த டாக்டர் நான்தான் என்று ஒருவன் அவளை ஏமாற்றுகிறான். அவனுக்கு காது கேட்காது. மாற்றுத்திறனாளிகளின் இதயத்தைக் கொள்ளை கொள்ளும் காதல்.

4:30 pm : Parviz

மஜீத் பர்ஸேகர் இயக்கிய ஈரானியப் படம். நான்கு சுவருக்குள் பாதுகாப்பான வாழ்க்கை, வெளியே சவாலானது. நானூறு வகை மனிதர்களை வெற்றி கொள்ள வேண்டும். சரியான அப்பாக்கோண்டு ( தன் அப்பாவையே சார்ந்திருக்கும் ) அப்பாவி பர்விஸ். இத்தனை நாள் அப்பாவின் கைப்பிடித்து, தோள் அமர்ந்து உலகம் பார்த்தவன், அப்பா இன்னொரு கல்யாணம் செய்து கொள்ள.. தெருவில் வீசப்படுகிறான். இத்தனை நாள் அப்பாவின் விழிவழியே பார்த்த உலகம் அல்ல இது. இது வேறு உலகம். பர்விஸ் இதை ஜெயிக்க வேண்டாம். இதில் ஜீவித்தாலே போதும். இங்கே கவனிக்க வேண்டியது. பர்விசுக்கு 5 வயதோ 10 வயதோ அல்ல.. 50 வயது. 50 வயதுக் குழந்தையின் கதை.

7:00 pm : Wałęsa, Man of Hope


1970களில் போலந்தில் ஒரு அமைதி புரட்சியை நிகழ்த்தியவர் தலைவர் வாலேசா. அவரின் வாழ்க்கைச் சரித்திரம். இயக்கியிருப்பவர் ரஷ்யாவின் ஆந்த்ரே வாஜ்டா. உலகின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர். அவரின் வயது இப்போது 87. வந்த வேகத்தில் களைத்து காணாமல் போகும் கலைஞர்கள் பூமியில் இன்றும் உழைக்கும் ஓர் இளைஞன்.

*****************************

திரையரங்கம் : WOODLANDS SYMPHONY

10:45 am : Beau Travail 


நம்மைவிட திறமையானவர்கள் மீது நமக்கு முதலில் வருவது பொறாமை. கணக்கை போட்டுக் காட்டும் முன் மாணவன் விடை சொன்னால்?. கணக்கு வாத்தியார் அல்ல கலோப்.. ராணுவ வீரர்களுக்கு பயிற்சி தரும் அதிகாரி. செண்டைன் அவரிடம் பயிற்சிக்கு வந்த வீரன். பல விதத்தில் அவன் அவரைவிட மேல். குருவை மிஞ்சிய சிஷ்யன். குருவுக்கு பொறாமை. உருப்படுவானா செண்டைன்?. பிரெஞ்சு படம். இயக்கம்: கிளேர் டென்னிஸ்.

1:45 pm : HONEYMOONS 


நம்மூர் போலவே அல்பேனியாவிலும், செர்பியாவிலும் காதலுக்கு தடையாக ஜாதி, மதம், அந்தஸ்து போன்ற பல சமாச்சாரங்கள் உள்ளன. அத்தனை தடைகளையும் உடைத்து அல்பேனியாவிலிருந்து ஒரு ஜோடி, செர்பியாவிலிருந்து ஒரு ஜோடி மேற்கு ஐரோப்பாவுக்கு ஓடிப் போகின்றன. போகிற இடத்தின் புதுச் சூழல், கலாச்சார சிக்கல்களை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று விளக்குகிற படம். அல்பேனியா, செர்பியா இரு நாடுகளின் கூட்டுத் தயாரிப்பு.

2:00 pm : The Future

ஸ்ரோடின்கரின் பூனை: ஒரு சிறிய நிகழ்வு உங்கள் மொத்த வாழ்வையும் புரட்டிப்போடும் அல்லது போடாது. தாமசும் பியான்காவும் அண்ணன் தங்கை. வசதியான குடும்பம். ஒரு விபத்தில் பெற்றோர் இறந்து போக.. எல்லாம் தலைகீழ் ஆகிறது. இருவரும் இப்போது நடுத்தெருவில். குடிகாரன் விழுந்தால் தடுமாறி எழுந்து விடுவான். தெளிவானவன் விழுந்தால்.. எழுந்தால்தான் உண்டு. இயக்கம்: ஆலிசியா ஷெர்சன்.

6:45 pm : Rock Bottom

வில்லி ஒரு பத்திரிகையாளன். தொழில் பக்தி. கூடவே பயம். ஏனென்றால் அவனுடைய மேலதிகாரி ஹிட்லரும் இடிஅமீனும் கலந்த கலவை. வில்லி பத்திரிகையோடு நின்றிருக்கலாம்.. ஆனால் வயசுக் கோளாறு. அதனால் காதல் வேறு. 'நீ என்ன காதலன்.. எப்பப் பாத்தாலும் வேலை.. வேலை.. ச்சே!' என காதலி எகிற.. 'வரும் வீக்எண்ட் இருநாட்களும் கண்ணே உன்னோடுதான்' என்கிறான் வில்லி. ஹிடலர் சதி செய்கிறான். அந்த இரண்டு நாளுக்கு அவனுக்கு ஒரு அசைன்மென்ட். வேலையா?.. காதலா?.. வில்லிக்கு இரண்டும் வேண்டும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. எப்படி அடிப்பது?. இயக்கம்: போர்கர் கன்னர்சென்.

*******************************************************

திரையரங்கம் : SWARNA SAKTHI ABIRAMI 

11:00 am : EL MUDO 


டேனியல் மற்றும் டியாகோ விகா எனும் சகோதரர்கள் இயக்கியது. நேர்மை நற்பண்பு. ஆனால் நேர்மையாளர்கள்?. நிர்வாண ஊரில் கோவணம் கட்டினால்?. செரேகா கோவணம் கட்டியே தீர்வேன் என்கிறான். இதில் அவன் லாயர் வேறு. விடுவார்களா? அவன் லாயர் லைசன்ஸ் ரத்தாகிறது. கார் கண்ணாடி உடைகிறது. தோட்டா தோள்பட்டையை உரசிச் செல்கிறது. இப்பொழுதும் செரேகா திருந்த மறுக்கிறான். அந்த லாயர்.. லையர் ஆகவே கூடாது. ஆவானா? மாட்டானா?

2:00 pm : The Last Floor

ராபர்ட் வைகிவிஸ்- இளம் போலந்து இயக்குனர். இவருடைய முதல் படம் ஒரு திரில்லர். இந்த இரண்டாவது படமும் ஒரு திரில்லர். திரில்லர் படத்தில் இது வேறு வகை. யுத்தப் பின்னணியில் நிகழும் திரில்லர் இது. கேப்டன் தேர்சின்ஸ்கிக்கு தேசமும் குடும்பமும் இரு கண்கள். போரில் ஜெயிக்க வேண்டும். கூடவே குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும். ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் கடைசித் தளத்தில் அவன் குடும்பத்தைக் கொண்டு போய் மறைத்து வைக்கிறான். அவனால் தேசத்தையும் குடும்பத்தையும் காப்பாற்ற முடிந்ததா?

4:30 pm : THE SHOOTER

கோபன்கேஹனில் ஒரு டிவி நியூஸ் சேனலில் மியாவுக்கு ரிப்போர்ட்டர் வேலை. அரசாங்கம் ஆர்டிக் கடல் பகுதியில் ஓட்டை மேல் ஓட்டைப் போட, அதனால் சுற்றுசூழல் பாதிப்படைகிறது என்று கவரேஜ் பண்ணி திரும்புவபளுக்கு.. ஒரு போன் வருகிறது. 'அரசாங்கம் ஆர்ட்டிக் கடலில் ஆடும் ஆட்டத்தை நிறுத்த வேண்டும். இல்லையேல் தினமும் ஒருவனைக் கொல்வேன்'. மியாவுக்கு இது ஸ்கூப் நியுஸ். மிரட்டலை அரசுக்கும் சொல்கிறாள். மிரட்டியவன் சொன்னதைச் செய்கிறான். தினம் ஒரு கொலை. அரசாங்கம் மியாவை சந்தேகப்படுகிறது. ஆனால் அத்தனை கொலைகளையும் செய்பவன் ஒரு முன்னாள் ஒலிம்பிக் துப்பாக்கி வீரன். சுற்று சூழல் நலன் பேசும் ஒரு திரில்லர்.

7:00 pm : A Touch of Sin

கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதை வென்ற படம். இயக்கம்: ஜியா சான்கே. வாழ்வில் விதி விளையாடினால் சரி.. சதி விளையாடினால்?. துரோகம் கழுத்தை நெரித்தால்.. அடுத்த நொடி திமிறி எழுந்தால்தான் வாழ்வு. இது நான்கு பேரின் திமிறல்கள். ஒரு நாடோடி, ஒரு சுரங்கத் தொழிலாளி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒருத்தி, அடிக்கடி இடமாற்றப்படும் அலுவலக ஊழியன். நால்வரும் சமூகத்தின் கடைக்கோடி மக்கள். இவர்கள் கழுத்தை நெரிப்பதோ அதிகாரத்தின் கைகள். சுற்றும் வரை பூமி.. போராடும் வரை மனிதன்.

*******************************

திரையரங்கம் : ROBOT BALA ABIRAMI

10:45 am : Club Sandwich 


பணமும் சரி, பாசமும் சரி.. பங்குக்கு யாரும் வந்துவிடக்கூடாது. முழுமையாக நமக்கே வேண்டும். அதுதான் மனித மனம். 35 வயது பலோமாவுக்கு தன் 15 வயது மகன் ஹெக்டர் மீது அளவில்லாப் பாசம். அம்மாவுக்கு மகன்.. மகனுக்கு அம்மா. இடையில் முளைக்கிறாள் ஜாஸ்மின். ஹெக்டர் வயதுப் பெண். ஹெக்டர் இப்போது அம்மாவை விட்டுவிட்டு அம்மணி பின்னால் ஓடுகிறான். பாவம் அம்மா.. உலகெங்கும் இந்த அம்மாக்களே இப்படித்தான். ஃபெர்னாண்டோ எம்பெகே இயக்கிய மெக்சிகோ நாட்டுத் திரைப்படம்.

6:45 pm : The Tree and The Swing
லண்டன் காலேஜில் எலினா ஓர் ஆசிரியை. விடுமுறையில் ஊர் வருபவளுக்கு அதிர்ச்சி. அப்பாவின் அருகே ஒருத்தி. அவள் அப்பாவின் புது மனைவி. கொஞ்ச நாளில் தெரிந்து விடுகிறது. சித்திகாரி சூழ்ச்சிக்காரி என்று.. சித்தியின் நோக்கம் அப்பாவின் சொத்து. எலினா இப்போது சித்தியுடன் போராடத் தயார். அந்த கால மனோகரா.. இந்தக் கால மெகா சீரியல். இயக்கம்: மரியா டௌசா.

******************************

திரையரங்கம் : INOX 2

10:45 am : Arrows of the Thunder Dragon


குஹென்பென் அண்ணன். ஜம்யங் தங்கை. இருவருக்கும் தாத்தாவிடம் வில் வித்தைப் பயிற்சி. இருவரும் தேர்ச்சி. உடனே குஹென்பென் உலகம் சுற்றக் கிளம்புகிறான். ஜம்யங்கோ சமையல் அறைக்குப் போகிறாள். கல்யாணம் வரை வீட்டைப் பார்த்துக் கொள்ள வேண்டும். கல்யாணத்துக்குப் பின் கணவனைப் பார்த்துக் கொள்ள வேண்டும். அவளோ நான் வில்லையும் அம்பையும்தான் பார்ப்பேன் என்கிறாள். அண்ணனுக்கு ஒரு சட்டம்.. எனக்கு ஒரு சட்டமா?. அம்பறாத்தூணி.. அம்புகள் சகிதமாக அவளும் ஒரு குதிரை ஏறி கிளம்பி விட்டாள். படம் முழுக்க இமயமலையின் வனப்பும் வசீகரமும். இயக்கம்: கிரெக் ஸ்னேடான்.

1:45 pm : Coming Forth By Day


ஹலா லாஃப்டி எனும் ஈரானியப் பெண் இயக்குனரின் முதல் படம். சோட் எனும் பெண்ணின் ஒரு நாள் வாழ்க்கையே கதை. சோட்டின் பெற்றோர் வயதானவர்கள். அம்மாவுக்கு ஒரு ஆஸ்பத்திரியில் நர்ஸ் வேலை. அம்மா இரவுப் பணிக்கு கிளம்பி சென்றுவிட்டாள். நோயாளியான அப்பாவை இரவு முழுக்கப் பார்த்துக் கொள்வது சோட்டின் வேலை. சோட்டின் தனிமையைப் பேசுகிற படம்.

4:15 pm : Sunlight, Moonlight, Earth

ஈரான் மொழிப் படம். அந்த விவசாய கிராமத்துக்கு புது வரவு ஷேக் எனும் ஒரு நாடோடி. ரத்தினக் கம்பளம் விரித்து, அவனை வரவேற்பார் அந்த ஊரில் யாரும் இல்லை. இவனொருத்தன்.. ஏன் வந்தான்? என்கிற எரிச்சல்தான். அந்த ஊர்ப் பெண்ணொருத்தி ஷேக்கை காதலிக்கிறாள். ஆனால் அவளைக் காதலிப்பவனோ வேறு ஒருத்தன். சொந்த ஊர்க்காரனை விட்டுவிட்டு, எங்கிருந்தோ வந்தவனை காதலிப்பதா? ஷேக்குக்கு எதிராக ஒட்டு மொத்த கிராமத்தையே திருப்புகிறான். இதில் ஒரு விசித்திரம்.. ஷேக் ஒருத்தன்தான் அந்த ஊர்க்காரன்.. மற்றவர்கள் எங்கிருந்தோ வந்தவர்கள். இயக்கம்: அலி கவிட்டான்.

6:45 pm : The Illusion
ஆசைப்படாதே- இது புத்தன். அத்தனைக்கும் ஆசைப்படு- சத்குரு. எப்படியோ.. ஆசைகளால் ஆனது உலகம். கலர்கலரான ஆசைகள். வீடுகட்ட ஆசை, எதிரியை வீடுகட்டி அடிக்க ஆசை. 24 மணிநேர மின்சாரம் பேராசை. பிடித்த மீனை மறுபடியும் ஆற்றுக்குள் விடும் பைத்தியக்கார ஆசை. ஆசைகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம். ஓர் இரவு 6pm டூ 6am நீங்கள் நினைத்தது நடக்கும். ஆசைப்பட்டது கிடைக்கும். அதற்கு நீங்கள் ஜெர்மனியில் இருக்கும் அந்த குறிப்பிட்ட பாருக்கு செல்ல வேண்டும். அங்கே உங்கள் கனவை நனவாக்கும் ஒரு மந்திவாதி இருக்கிறான், இதோ இப்போது அந்த பாருக்குள் இருக்கும் அந்த 8 பேரின் ஆசைகளை நிறைவேற்ற அவன் ரெடி. ரோலான்ட் ரீபர் இயக்கிய ஃபாண்டசி ஜெர்மன் படம்.

கோதுமை தோசை - சமையல்!




தேவையானவை:

கோதுமை மாவு - 1 கப், வெள்ளை ரவை - 4 டீஸ்பூன், பச்சரிசி மாவு - 3 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு, சின்ன வெங்காயம் - 10, பச்சை மிளகாய் - 2, மல்லித்தழை - 4, கேரட் - 1, சீரகம் - அரை டீஸ்பூன், கெட்டி மோர் - கால் டம்ளர்.

செய்முறை:

 ரவையை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஊற வைக்கவும். வெங்காயத்தையும் மல்லித்தழையையும் பொடியாகவும் பச்சை மிளகாயை சிறு வளையங்களாகவும் நறுக்கிக் கொள்ளவும். கேரட்டை கழுவி, துருவிக்கொள்ளவும். கோதுமை மாவு, உப்பு, சீரகம், பச்சரிசி மாவு, ஊறிய ரவை, மோர் மற்றும் தண்ணீர் சேர்த்து சாதா தோசை மாவை விட சற்று தளர்வாக கரைத்துக் கொள்ளவும். அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மல்லித்தழை சேர்த்து கலக்கவும். சூடாக இருக்கும் தோசைக்கல்லில், ஒரு கிண்ணத்தால் மாவை எடுத்து அள்ளித் தெளித்த மாதிரி தோசையை ஊற்றி அதன் மேல் துருவிய கேரட்டை தூவவும். கரண்டியால் அதை அழுத்திவிட்டு சுற்றி வர எண்ணெய் விட்டு மூடி, வெந்ததும் தோசையை திருப்பி மறுபுறம் எண்ணெய் விட்டு மொறுமொறுவென வெந்ததும் எடுத்து விடவும். இதற்கு வரமிளகாய், பூண்டு சட்னி மேலும் சுவையைக் கொடுக்கும்.

அழகு குறிப்புகள்:பட்டுப் போன்ற மேனிக்காக ஏக்கமா?



சில பெண்களுக்கு எத்தனை வயசானாலும் தோல் சுருங்காது. வழவழவெனச் சின்னப் பெண்ணைப் போலவே இருக்கும்!

தோல் வறட்சி, கட்டம் கட்டமாகத் தோலின்மீது மெலிதான வெடிப்பு எதுவுமில்லாத பட்டுப் போன்ற மேனி வேண்டுமா? "ம்ஹும், அதுக்கெல்லாம் கொடுத்து வைக்கணும்பா" - இப்படி ஏக்கப் பெருமூச்சு விடுகிறீர்களா?

அம்மணி.... பொறுங்கள். இதைப் படியுங்கள் முதலில்!

தண்ணீர் மருந்து

"தண்ணி கிடைக்காத காலத்துல மருந்து மாதிரிதான் தண்ணியைக் குடிக்க வேண்டியிருக்கு" - நீங்கள் முனகுவது காதில் விழுகிறது.

ஆனால், ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர் முதல் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்துபவர்களுக்கு வயிற்றுப் பிரச்சினை அவ்வளவாக வருவதில்லை!

வயிறு நலமாக இருந்தால், நமது உடம்பின் சருமமும் சுத்தமாக இருக்கும்.

எலுமிச்சை உடம்புக்கு நல்லது!

குளிப்பதற்கு முன் - ஒரு வாளித் தண்ணீரில் ஒரு மூடி எலுமிச்சையைப் பிழிந்து கொள்ளுங்கள். சோப்பு தேய்த்துக் குளித்த பின், கடைசியாக ஒரு 'லெமன் பாத்' எடுங்கள் (எலுமிச்சை சாதமில்லீங்க... குளியல்).

இதன் புத்துணர்வையும் சரும மினு மினுப்பையும் அனுபவித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

தேமலை விரட்டுங்க!

நாட்டுமருந்துக் கடைகளில் கார்போக அரிசி என்று கேட்டால் தருவார்கள். இதைப் பொடி செய்து, மெல்லிய துணியில் சலித்து, ஒரு டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

தினமும் இதில் கொஞ்சம் எடுத்துத் தண்ணீர் விட்டு பேஸ்ட் மாதிரி செய்து தோலில் தடவுங்கள். விரைவில் தேமல் இருந்த இடம் தெரியாமல் போகும்!

மெருகுக்கு பப்பாளி!

நன்கு பழுத்த பப்பாளியை நறுக்கி, மிக்ஸியில் போட்டு அடித்து, அத்துடன் ஒரு மூடி எலுமிச்சை சாறை விட்டுக் கலந்து, உடம்பில் தேய்த்து, ஒரு மணி நேரம் போல ஊறியபின் குளிக்கலாம்.

"காத்து உள்ளபோதே தூத்திக்கொள்" - பழமொழி விளக்கம்



"காத்து உள்ளபோதே தூத்திக்கொள்"


நேர் விளக்கம்

காத்து அடிக்கும்போது பதரோடுள்ள நெல்லை மேலிருந்து கீலாக கொட்டினால் பதர் நெல்லை விட்டு பிரிந்து காத்திலே பறக்க நெல் மட்டும் தணியாக கிழே சேகரிக்கப் படும். காத்து அடிக்கும் பொழுது இதை செய்து கொள்ள சொல்லி அன்றைய விவசாயிகளுக்கு சொன்னது. ( இப்போது நவீன நெல் ஆலைகளில் ராட்சத மிண்விசிறிகள் மூலம் இது நடக்கிறது)

அறிந்த விளக்கம்
:
சாதகமான சூழ்நிலையை தவறாமல் பயன் படுத்திக்கொள்ள வேண்டும்.

அறியாத விளக்கம் :

1. காத்து [ காத்திருந்து ], உனக்கு இதை உணர்த்தும் பெரியோர் உள்ளபொழுதே, அறியாமையை தூத்திக்கொள்ள (போக்கிக்கொள்ள) வேண்டும்.

2. உனக்கு காத்து [ உயிர் ] உள்ளபொழுதே, அறியாமையை தூத்திக்கொள்ள (போக்கிக்கொள்ள) வேண்டும்.

3. உனக்கு இதை உணர்த்தும் பெரியோருக்கு காத்து [ உயிர் ] உள்ளபொழுதே, அறியாமையை தூத்திக்கொள்ள (போக்கிக்கொள்ள) வேண்டும்.

முள்ளம் பன்றியும் ஓநாய்யும்! - குட்டிக்கதைகள்!



தன் முன்னாள் வந்து நின்ற ஓநாயை கோபமாக பார்த்து தன் முட்களைச் சிலிர்த்து நின்றது முள்ளம் பன்றி. ஓநாய் உடனே பதற்றத்துடன், பயப்படாதே முள்ளம் பன்றி, உன் அழகை ரசிக்கத்தான் வந்திருக்கேன் என்றது. என்னது? நான் அழகா? ஆமாம். நீ செம அழகு. ஆனா உன் உடம்புல இருக்கிற முல்லுதான் உன் அழகை கெடுக்குது, என்றது ஓநாய்.



ஆனா, அதுதானே என்னைப் பாதுகாக்குது என்றது முள்ளம்பன்றி, உண்மைதான். ஆனா, அதை எடுத்துட்டினா, நீ இன்னும் அழகாயிடுவே, யாருக்கும் உன்னை கொல்லனும்னு மனசே வராது. ஓநாயின் பசப்பு வார்த்தையில் மயங்கிய முள்ளம்பன்றி, தன் முட்களை எல்லாம் மழித்துவிட்டு ஓநாய் முன் வந்து நின்றது.



இப்போ நான் இன்னும் ஆழகாயிருக்கேனா? என்று கேட்டது. அழகாய் மட்டும் இல்லை, அடிச்சு சாப்பிடுவதற்கு வசதியாகவும் இருக்கு, என்றபடி முள்ளம்பன்றி மேலே பாய்ந்தது ஓநாய்.



நீதி:              "வீண் புகழ்ச்சிக்கு மயங்காதே".