Thursday 21 November 2013

பரிசின் தன்மை!

மனித உறவுகளில் நாம் ஒருவருக்கொருவர் பரிசு கொடுத்துக் கொண்டேயிருக்கிறோம்.

அப்படி இல்லையென்றால் உறவில் விரிசல் வரும்.

இப்படி நாம் கொடுக்கும் பரிசுகள் நமது சகதிக்குள் இருக்கிறவரை பிரச்சினை இல்லை.

நம்மால் கொடுக்க இயலாத பரிசினைக் கொடுக்க்ம்போதுதான் பிரச்சினை வருகிறது.

நண்பர் ஒருவர் உங்கள் ஸ்கூட்டரை ஒருநாள் உபயோகத்துக்குக் கேட்கிறார்.

உங்களுக்கோ கொடுக்க மனதில்லை.

மனம் பதைபதைக்கிறது.தரமாட்டேன் என்று சொன்னால் உங்கள் இமேஜ் பாதிக்கப்படும் என அஞ்சி வேண்டா வெறுப்பாகக் கொடுக்கிறீர்கள்.

அவர் ஸ்கூட்டரைத் திரும்பக் கொடுக்கும் வரை மனதிற்குள் திட்டித் தீர்க்கிறீர்கள்.

அடுத்து இரண்டு நாட்களுக்கு உப்புப் பெறாத விஷயத்துக்கெல்லாம் அவரிடம் சண்டை போடுகிறீர்கள்.

என்ன காரணம்?

 ஸ்கூட்டரை இரவல் கொடுப்பது உங்கள் சக்திக்கு மீறின பரிசு.


ஊனமுள்ள பெண்ணை ஒரு இலட்சியத்திற்காக திருமணம் செய்யலாம்.

அது ஒரு பெரிய பரிசு என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் அந்த மாதிரி பெரிய பரிசைக் கொடுக்குமுன் அதைக் கொடுக்கிற சக்தி நமக்கு உணர்வு பூர்வமாக இருக்கிறதா என யோசித்துப் பார்க்க வேண்டும்.

அவ்வளவு அன்பு இருக்கிறதா என்று நமக்குள் நாமே தேடித் பார்க்க வேண்டும்.

அது சக்திக்கு மீறிய பரிசாக இருக்கும் நிலையில் அந்தப் பரிசை நம்மால் முழுமையாக மனப்பூர்வமாகக் கொடுக்க முடியாது.

எனவே அந்த அன்பு இல்லை என்றால் அந்தப் பரிசை வாங்குபவர்களுக்கும் அது நரகமாகிவிடும்.

அச்சம்!


வாழ்வில் நீங்கள் பிறப்பைக் கண்டு அஞ்சத் தேவையில்லை.

அது நடந்து முடிந்து விட்டது.அதைப்போல் வாழ்வைக் கண்டும் அஞ்சத் தேவையில்லை.

அது நடந்து கொண்டே இருக்கிறது.

அதேபோல் இறப்பைக் கண்டும் அஞ்சத் தேவையில்லை.

ஏனெனில் அது தவிர்க்க முடியாதது.அது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்.

பின்பு எதைக் கண்டு அஞ்ச வேண்டும்?


''நான் பிறக்கும்போது எந்தக் கவலையையும் சுமந்திருக்கவில்லை.

எந்த மாதிரியான தொந்தரவுகளை சந்திக்கப் போகிறோம் என்று எண்ணவில்லை.

 அப்போது நான் என்ற உணர்வு கூட என்னிடம் இருந்ததில்லை.

அதைப்போல இறக்கும் போதும்,அதே உணர்வுடன் தான் இறப்பேன்,''என்று எண்ணுங்கள்.


மென்சியஸ் என்னும்  சீடன் தன குருவான கன்பூசியசிடம்,'இறந்த பிறகு என்ன நடக்கும்?'என்று கேட்டான்.

அதற்கு அவர்,''இதற்குப்போய் உன் நேரத்தை வீணடிக்காதே.

நீ கல்லறையில் படுத்திருக்கும்போது அதைப்பற்றி சிந்தித்துக் கொள்ளலாம்.

இப்போது ஏன் நீ அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டும்?''என்றார்.

நாங்கள் அதிர்ஷ்டசாலிகளா இல்லையா?

1930- 1980 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே

WE ARE AWESOME !!!! OUR LIFE IS A LIVING PROOF
· தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்

· எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.

· கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.

· புத்தகங்களை சுமக்கும்பொதிமாடுகளாகஇருந்ததில்லை.

· சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை.

· பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.

· நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.

· தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.

· ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.

· அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.

· காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.

· சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.

· உடல் வலிமை பெறஊட்டசத்து பானங்கள்அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.

· எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்

· எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல, ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல

· அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.

· உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை

எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லைஉள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.

· எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்

· வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.

· எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.

· உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை

· நாங்கள் எடுத்த புகைபடங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருக்கலாம் ஆனால் அதில் உள்ளவ்ர்களின் எண்ணங்கள் கருப்பாகவே இருக்கின்றன.

· இலவசம் பெறும் பிச்சைகாரர்களாக இருந்ததில்லை.

· இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்டசாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள் .

வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி?

இந்த உலகில் இருக்கும் அனைவருமே ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்க்கையை கழிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், சமயத்தில் அதை எப்படி செயல்படுத்துவது என்று தெரியாமல் குழம்புகிறோம். இத்தகைய குழப்பங்களால் உடல் மற்றும் மனதில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. சொல்லப்போனால், வாழ்க்கையே சிலருக்கு வெறுமையாகிவிடும்.இத்தகைய வெறுமை ஏற்பட்டால், எப்படி உலகில் வாழ வேண்டுமென்ற ஆசை ஏற்படும். எனவே மனதை லேசாகவும், சந்தோஷமாகவும் வைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. சிலர் வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்ள பல முயற்சிகளை மேற்கொள்கிறேன் என்ற பெயரில் தவறான வழியில் சென்றுவிடுகின்றனர். அவ்வாறு சென்ற பின்னர் அதிலிருந்து மீள்வதற்கு மிகவும் கஷ்டப்படுகின்றனர்.

ஆகவே எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்னர், நாம் செய்வது நல்லது தானா என்பதை உறுதிபடுத்திக் கொண்டு, பின்னர் செயல்பட்டால் வாழ்க்கையே சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். இப்போது அந்த வாழ்க்கையை சந்தோஷமாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்ள எப்படி இருக்க வேண்டுமென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, வாழ்வை சந்தோஷமாக வாழுங்கள்.

போதுமான உறக்கம்.

இது உங்களை ஆரோக்கியமாக மட்டுமல்ல மகிச்சியாகவும் வைத்திருக்கும். ஒவ்வொரு இரவும் 8-10 மணிநேரம் உறங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். படுக்கைக்கு போவதற்கு ஒரு மணிநேரம் முன்னதாகவே மனதை லேசாக்கிக் கொள்வது நல்லது. அதிலும் பாட்டு கேட்பது மனதை லேசாக்கும். இதனால் படுத்தவுடன் நல்ல நிம்மதியான தூக்கம் வரும்.

சத்தான உணவு

எல்லா நொறுக்குத் தீனிகளையும் குறைத்து விட்டு, தினமும் உணவில் காய்கறிகள் மற்றும் பழங்களின் அளவைக் அதிகரிக்கவும். இதனால் உடலில் புத்துணர்ச்சியும், மனதில் உற்சாகமும் அதிகமாகும்.

அதிகமான நீர்

தண்ணீரை அதிகம் குடிக்கும் போது, சருமம் பளபளப்பாக இருப்பதால் தோற்றம் பற்றி நம்பிக்கை பெருகுகிறது. மேலும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் தண்ணீர் முக்கிய ஆதாரமாக உள்ளது. எனவே சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க, ஒரு நாளில் 8 டம்ளர் தண்ணீரைக் குடிப்பது அவசியமாகிறது.

உடற்பயிற்சி

வேகமான நடை, மிதமான ஓட்டம், அறையில் நடனம் இப்படி ஏதாவது ஒன்றை உடற்பயிற்சிக்காக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் உடலை உறுதியாகவும், மனதை லேசாவும் உணர வைக்கும் ஒரு மாயமே உடற்பயிற்சியாகும்.

நண்பர்கள்

உண்மையான நண்பர்களை அருகில் கொண்டிருப்பதுடன், அவர்களை பாராட்டி உற்சாகப்படுத்தும் வழக்கத்தை கடைபிடியுங்கள். மேலும்நாம் எந்த மாதிரியான அன்பையும், மரியாதையையும் மற்றவர்களிடம் எதிர்பார்க்கிறீர்களோ, அவை அனைத்தையும் அவர்களுக்கு வாரி வழங்குங்கள்.

உதவி


அம்மாவுக்கோ அல்லது மனைவிக்கோ வீட்டு வேலைகளில் உதவுங்கள். வீட்டை ஒழுங்குபடுத்துங்கள். இவையெல்லாம் அவர்கள் உங்களை மேலும் நேசிக்கத் தூண்டும். இதனால் ஒருவித மனநிறைவு கிட்டும்.

பொழுதுபோக்கு

ஏதாவது ஒன்றில் ஆர்வத்தை செலுத்துங்கள். அது இசையோ, ஓவியமோ அல்லது விளையாட்டாகவோ இருக்கலாம். இதில் கவனத்தை செலுத்தினால், சாதனை புரிய முடியும். மேலும் நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையும் வளரும்.

புன்னகையும் சிரிப்பும்

எதற்கும் சோகபாவம் கொள்ளாமல், நகைச்சுவைக்கு முகம் கோணாமல் இருக்க முயலுங்கள். புன்னகையும் சிரிப்பும் எப்போதுமே மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும். சில நேரங்களில் உங்கள் புன்னகை, யாரோ ஒருவரின் சோக தினத்தையே வேறுவிதமாக மாற்றக்கூடும்.

மன அழுத்தத்தை குறைப்பது

ஒருவரின் ஆரோக்கியத்தை கெடுப்பது மனஅழுத்தம். ஆகவே யோகா போன்ற மனப்பயிற்சிகளில் ஈடுபட்டு, மன அழுத்தத்தை குறைக்க வேண்டும். மேலும் எழுதுவது, புத்தகம் படிப்பது, இசை கேட்பது, இயற்கையை ரசிப்பது போன்ற செயல்களாலும் மனதை லேசாக்கலாம்.

வெளியே செல்வது

நண்பர்களோடு வெளியில் செல்வது, நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, உறவினர்களை சந்திப்பது அல்லது சந்தோஷத்திற்காக பைக்கில் வெளியே செல்வது அல்லது செல்லப்பிராணியுடன் வெளியில் செல்வது போன்ற ஏதாவது ஒரு செயலை சாதாரண நேரங்களில் செய்தால், மனதில் கஷ்டம் இல்லாமல், மனமும் லேசாகும். ஏனெனில் இதுப் போன்ற சுற்றுச்சூழல் தான் எப்போதுமே மனதை லேசாக்கும் சக்தி கொண்டது.

நாம் நாமாக இருப்பது

இந்த உலகில் பலர் தம்மிடம் இல்லாத ஒன்றை இருப்பதாக காண்பிப்பது, சுமையே. நம்மிடம் இல்லாததற்காக நாம் மற்றவர்களால் நேசிக்கப்படுவதைவிட, இருப்பதற்காக வெறுக்கப்படுவது எவ்வளவோ மேல். இதனால் எப்போதும் நாம் நாமாகவே பிரகாசிக்க முடியும்.

ஆண்கள் ஏன் தங்களது பொறுப்புகளிலிருந்து விலகிச் செல்கின்றனர் என்று தெரியுமா...?

ஒரு குடும்பம் என்று வந்துவிட்டாலே அதில் பொறுப்புகள் அதிகம் இருக்கின்றன. இதனை வழிநடத்துவது யார்? குடும்பத்தலைவரா அல்லது குடும்பத்தலைவியா? பெரும்பாலான இல்லங்களில் குடும்பத்தலைவனான ஆண் வேலைக்குச் சென்று பணத்தை ஈட்டுவது மட்டுமே செய்து வருகின்றான். குடும்பத்தலைவி தான் வீட்டின் மற்ற பொறுப்புகளை ஏற்று குடும்பத்தை வழிநடத்தி செல்லுகின்றாள்.

முதலாவதாக, எல்லா ஆண்களும் தங்களது பொறுப்புகளிலிருந்து விலகிச் செல்லுவது கிடையாது. ஒரு சிலர் தங்களது மனைவியைவிட சிறப்பாக செயல்படுவார்கள். எனினும், பெரும்பாலான ஆண்கள் தங்களது பொறுப்புகளிலிருந்து விலகிச்செல்லுகின்றனர். இவ்வாறு செய்வதற்கு அவர்களிடம் பல காரணங்கள் உள்ளன. ஒரு சிலர் தங்களது பெற்றோரை வழுவி வந்தவர்களாகவும் அல்லது வளர்ந்து வந்த சூழ்நிலையை பொருத்தும் இவ்வாறு இருக்கின்றனர். பல நேரங்களில் கவனக்குறைவு மற்றும் சோம்பேறித்தனம் போன்றவைகள் காரணமாக இருக்கின்றன.


ஒரு சிலர் அவர்களது வாழ்வில் சில சமயத்தில் இந்த பொறுப்புகளால் ஏற்பட்ட மனநிலை பாதிப்பின் காரணமாக அதனை ஏற்றுக்கொள்ள தயங்குவார்கள். இந்த பொறுப்புக்களை அவர்களது வாழ்வில் ஏற்கனவே ஏற்று வந்ததால் அதனை மீண்டும் ஏற்க மறுப்பார்கள். வலுவான இதயம் உள்ள ஆண்களே பொறுப்பேற்க தகுதி பெற்றவர்கள். எல்லா ஆண்களும் இவ்வாறு அல்ல, ஒரு சிலர் முழுதாக பொறுப்பேற்காமல் சாதுரியமாக சில பொறுப்புகளை மட்டுமே கையாளுவார்கள்.

சிலர் பொறுப்புகளில் ஏற்படும் இழப்புகளுக்கு பயப்படுவார்கள். இதனால் பொறுப்பேற்று அதனை முடிப்பதற்கு பயந்து அதனை விட்டு விலகுவார்கள். தங்களது தலைமையில் பொறுப்பேற்க மறுப்பார்கள். ஒரு ஆண் தன்னை வலிமைஉடையவனாக இவ்வுலகிற்கு காட்டிவந்தாலும் ஒரு சில வேளைகளில் பொறுப்புகளை ஏற்க பயப்படுகின்றார்கள். அப்படிப்பட்ட ஒன்று தான் இந்த பொறுப்பேற்பது ஆகும். இந்த பொறுப்பேற்றல் பயத்தை போக்குவதற்கு ஆதரவும் கடின உழைப்பும் அதிகம் தேவைப்படும். எனினும், எல்லா ஆண்களும் இந்த பொறுப்பேற்பதில் இருந்து விலகுவதில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
 
1. சோம்பேறித்தனம்


சோம்பேறித்தனத்தினால் தான் பெரும்பாலான ஆண்கள் பொறுப்பேற்க மறுக்கின்றனர். வலிமையையும் உறுதியும் ஆண்களிடம் இருந்தாலும் அவர்களிடம் சோம்பேறித்தனமும் மிகையாக இருக்கின்றது. பொறுப்பேற்றல் என்பது கடினமான காரியம். அதனை கையாள மிகுந்த உறுதியும் முயற்சியும் அதிகமாக தேவைப்படும். இது எல்லா ஆண்களாலும் முடியாது.

2. பிறப்பு வழிப் பண்பு

நாம் அனைவரும் ஒரு சில விசியத்தில் நம்முடைய பெற்றோரை வழுவியே வந்துள்ளோம். ஒரு சிலர் துரதிஷ்டவசமாக பெற்றோர்களுக்கு பிள்ளையாக பிறந்ததால், அவர்களின் பொறுப்பேற்றல் குறித்த பயம் இவர்களிடையேயும் இருக்கக் கூடும். சில சமயங்களில் அவர்கள் வளர்ந்து வந்த சூழல் அவர்களை பொறுப்புகளில் இருந்து விலகிச் செல்ல வைக்கும்.

3. பயம்


உறுதியளிப்பின் பயமே ஆண்களை பொறுப்பில் இருந்து விலகிச்செல்ல முக்கிய காரணமாக இருக்கின்றது. கடந்தகாலத்தில் அவர்கள் ஏற்ற பொறுப்பில் வெற்றி கிடைக்காதால் அவர்கள் மீண்டும் அப்பொறுப்பை ஏற்க மறுக்கின்றனர். நாம் எல்லாரிடமும் ஒருவித பயம் இருக்கும். எனினும் சிலர் வலிமைமிக்க ஆண்களாக இருந்தாலும் பொறுப்பேற்பதில் பயம் கொள்ளுவார்கள்.

4. கடந்த காலம்

ஒருசில ஆண்கள் பொறுப்புகளை வேண்டுமென்றே மறுப்பதற்கு அவர்களின் கடந்த கால நிகழ்வுகள் எதாவது இருக்கும். கடந்தகாலத்தில் பொறுப்புகளை ஏற்று அதனால் பெரும் தொல்லையோ அல்லது மன உளைச்சலோ ஏற்பட்டிருக்க கூடும். இவ்விதமான நிகழ்வுகள் நாம் நன்மைகென்றே நினைத்தாலும், ஒரு மெல்லிய தற்காப்பு திரையை நம் மனதில் உருவாக்கிவிடும். இதனால் மீண்டும் அந்த பாதையை கடக்க மறுப்பார்கள்.

5. மனப்பான்மை

பொறுப்புகளை ஏற்பதற்கு உறுதியான மனப்பான்மை அவசியமானதாகும். எதிர்மறையான முடிவை எண்ணும் ஆண்களால் இதனை ஏற்க முடியாது. இத்தகைய எதிர்மறையான எண்ணம் உள்ளவர்கள் தங்களது பொறுப்பில் முதல் அடியை கூட எடுக்க பயப்படுவார்கள்.

6. அனுபவம்


பொறுப்புகளை வெற்றிப்பாதையில் செலுத்த ஒருவர்க்கு கண்டிப்பாக சிறிது அனுபவம் தேவை. அனுபவம் இல்லாத ஆண்கள் இந்த பொறுப்புகளை மறுப்பதோடு மட்டுமல்லாது அதில் வெற்றிபெற தேவைப்படும் அறிவு மற்றும் சிந்தனை இல்லாததால், இதனை ஏற்பதற்கு முற்றிலுமாக மறுக்கின்றனர்.

திருமணக் காப்பீடு... கட்டாயம் எடுக்கணும்!

அண்மையில் நடந்த உண்மைச் சம்பவம் இது. கல்யாண ஹாலில் எல்லோரும் சந்தோஷமாக திருமண ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்க, திடீரென மணப்பெண்ணின் பத்து பவுன் தங்க செயின் காணவில்லை. தங்க செயினை யார் எடுத்திருப்பார்கள் என மணப்பெண் வீட்டார் விசாரிக்க ஆரம்பிக்க, மணமகன் வீட்டைச் சேர்ந்த ஒருவர் மீது சந்தேகம் வந்தது. அவரை பெண் வீட்டார் கேள்வி கேட்க, இது மணமகன் வீட்டாருக்குத் தெரிந்தவுடன் அவர்கள் தாம்தூமென்று குதிக்க, கடைசியில் திருமணமே நின்றுபோகும் அளவுக்கு வந்துவிட்டது. நல்லவேளையாக, அந்தத் தங்கச் செயின் எப்படியோ திரும்பவும் கிடைத்துவிட, நல்லபடியாக திருமணம் நடந்து முடிந்தது. 

எதிர்பாராமல் திருமணம் தடைபட்டு, இழப்பு ஏற்பட்டால், இந்த இழப்பைத் தவிர்ப்பதற்காக என்றே  உருவாக்கப்பட்டதுதான் திருமணக் காப்பீடு. நகை திருட்டுக்கான இழப்பீட்டை பெற மட்டுமல்ல;  திருமணத்திற்கு வந்தவர்களுக்கு விபத்து ஏற்பட்டாலோ, எதிர்பாராமல் நடக்கும்  அசம்பாவிதங்களினால் ஏற்படும் இழப்பு களுக்கோ இந்த பாலிசி கைகொடுக்கும்.

இதுகுறித்து விளக்குகிறார் பஜாஜ் கேப்பிட்டல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர்.


''தமிழகத்தில் திருமணம் என்பதை சென்டிமென்ட்-ஆக பார்க்கிறார்கள். எனவே, இந்த இன்ஷூரன்ஸ் எடுப்பதை பலர் விரும்புவதில்லை. இன்ஷூரன்ஸ் எடுப்பதினாலேயே எந்த அசம்பாவிதமும் நடந்துவிடப் போவதில்லை. அது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான். 

திருமண இன்ஷூரன்ஸ் அதிகபட்சம் ஏழு நாட்களுக்குக் கிடைக்கும். திருமண அழைப்பிதழை அடிப்படையாக வைத்து இன்ஷூரன்ஸ் பெறலாம். திருமணத்திற்கு எவ்வளவு நகை, பணம் எவ்வளவு புழங்கும் என்பது உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்கவேண்டும். மாப்பிள்ளை அல்லது பெண் வீட்டார், திருமணத்திற்கு விருந்தினராக வருகிறவர்கள் என யார் வேண்டுமானாலும் இந்த பாலிசியை எடுக்கலாம்.  திருமணத்திற்கு முதல்நாள்கூட இதை எடுத்துக்கொள்ளலாம்.


எதற்கெல்லாம் கவரேஜ் கிடைக்கும்?

பணம், நகை திருடுபோனால், விபத்து ஏற்பட்டால், நெருங்கிய உறவுகள் இறந்து அதனால் திருமணம் தடைபட்டால், திருமண மண்டபத்தில் ஏற்படும் சொத்து சேதம் ஆகியவற்றிற்கு கவரேஜ் கிடைக்கும்.  திருமண மண்டபத்தில் நடக்கும் நிகழ்வுகளுக்கு மட்டுமே இழப்பீடு பெறமுடியும். வெள்ளம், கனமழை, புயல், நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றத்தினால் திருமணம் நின்றாலும் க்ளைம் கிடைக்கும். அதேபோல ஊரடங்கு உத்தரவு, அவசர காலநிலை, தீவிரவாதத் தாக்குதல் போன்றவை 25 கி.மீட்டருக்குள் நடந்து, அதனால் திருமணம் தடைபட்டால்  க்ளைம் கிடைக்கும்.

எதற்கெல்லாம் கிடைக்காது?

வரதட்சணை பிரச்னை, காதல் விவகாரங்கள் போன்றவற்றால் திருமணம் தடைபட்டால் க்ளைம் பெறமுடியாது. இந்து கோயில்களில் நடக்கும் திருமணத்திற்கு இந்த இன்ஷூரன்ஸ் எடுக்க முடியாது. கிறிஸ்தவ ஆலயத்தில் நடக்கும் திருமணத்திற்கு க்ளைம் கிடைக்க வாய்ப்புள்ளது.

க்ளைம்-ல் கழிவு!


தீ, இயற்கை சீற்றத்தினால் திருமணம் தடைபட்டால் க்ளைம் தொகையில் 5 சதவிகிதம் அல்லது 15,000 ரூபாய், திருமண மண்டபத்தில் ஏதாவது சேதம் ஏற்பட்டிருந்தால் 5 சதவிகிதம் அல்லது 10,000 ரூபாய், பணம் தொலைந்துவிட்டால் 10 சதவிகிதம் அல்லது 5,000 ரூபாய், நகை தொலைந்துவிட்டால் 5 சதவிகிதம் அல்லது 15,000 ரூபாய், பொதுமக்கள் சேதத்திற்கு 5 சதவிகிதம் அல்லது 25,000 ரூபாய். இதில் எது அதிகமோ அதை க்ளைம் தொகையில் கழித்துவிட்டு மீதித் தொகை மட்டும்தான் கிடைக்கும்.

பிரீமியம்!


திருமணம் நிறுத்தப்பட்டால், திருமண மண்டபத்திற்கு சேதம் ஏற்பட்டால், விபத்து அல்லது மரணம் ஏற்பட்டால், நகை, பணம் திருடு போனால் ஆகியவற்றிற்கு தனித்தனியாக தலா 2 லட்ச ரூபாயும், பொதுமக்களுக்குச் சேதம் ஏற்பட்டால் ஒரு லட்ச ரூபாயும் மொத்தம் 11 லட்சம் ரூபாய் கவரேஜுக்கு பிரீமியம் சுமார் 3,000 ரூபாய்க்குள்தான்'' என்றார்.

இனி என்ன, திருமண பட்ஜெட்டில் இன்ஷூரன்ஸுக்கும் ஒதுக்கிடலாமே! 

சீதாப்பழ பர்பி - சமையல்!

                             
என்னென்ன தேவை?

சீதாப்பழம் - 4,

தேங்காய் துருவல் - 1 கப்,

முந்திரி - 50 கிராம்,

சர்க்கரை - 1 கப்,

நெய் - சிறிதளவு.


எப்படிச் செய்வது? 

சீதாப்பழத்தின் சதைப் பகுதியை எடுத்து அதனுடன் முந்திரி, தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வைக்கவும். சர்க்கரையை கம்பிப்  பதத்துக்குக் காய்ச்சி, அதில் கலவையை கொட்டி நெய் விட்டு கிண்டவும். சுருள வந்தவுடன் நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போடவும்.

It is part of the flesh citappalat with cashew, coconut and grind put on Mickey.

ஒருமுறை மட்டும் படிக்கக்கூடிய Email அனுப்ப முடியும்!

 

மின்னஞ்சல் என்பது தவிக்க முடியாத ஒன்றாகி விட்டது நாம் ஒவ்வொரு நாளும் நிறைய மின்னஞ்சல் அனுப்புகிறோம்  ஆனால்  அவைகளில் சில முக்கியமான தகவல்களும் அடங்குகின்றது  நம்மை தவிர யாரும் பாத்து விட கூடாது என்கிற தகவல்களையும் அனுப்புகின்றோம் . இணையத்திருடர்களால் நம்முடைய கணக்கு திருடப்பட்டால் கூட  நம்முடைய இரகசியங்களை யாரும் பாத்திடா வண்ணம்  ஒரு முறை பாக்க கூடிய மின்னஞ்சல்களை எப்படி அனுப்பலாம் என்று பார்ப்போம்

 அழகாக மின்னஞ்சல் அனுப்ப மென்பொருள் என்ற பதிவில் எப்படி அழகாக முன்னன்சல் அனுப்புவது என்ற பதிவையும் பாருங்கள்

காதலை சொல்ல கூட இதனை பயன்படுத்தலாம் காரணம் அண்ணாவிடம் போட்டு குடுக்க முடியாது …

சரி இதனை எப்படி செய்வது என்று பார்ப்போம் அதற்கு தீர்வாக தான் ஒரு இணையதளம் உள்ளது. கீழே உள்ள சுட்டியில் சென்றவுடன் தோன்றும் விண்டோவில் சென்று  அனுப்ப வேண்டிய தகவலை தட்டச்சிடவும்.

அதன் பின் தங்களுக்கு ஒரு தொடுப்புக் கிடைக்கும். அதை தகவல் சேர வேண்டியவருக்கு எப்படியாவது அனுப்பிவிடுங்கள்.
அவர் திறந்து வாசிக்கலாம் அதன் பிறகு அவர் மூடி விட்டுத் திறந்தால் மறுபடியும் அங்கே தகவல் இருக்காது.

இணைய முகவரி   https://privnote.com/

காணாமல் போன விளையாட்டுகள்!

village games
அழிந்து போன கிராமத்து விளையாட்டுகளைத் தேடி ‘குங்குமம் தோழி’ மேற்கொண்ட பயணத்தில் கிடைத்த பொக்கிஷத்தை சென்ற இதழில்  பகிர்ந்தோம். அதன் தொடர்ச்சியாக இன்னும் சில அருமையான விளையாட்டுகள் இங்கே... ஆடுவோமே!

உப்புக்கோடு


உத்தி பிரித்தல் மூலம் 2 அணிகள் பிரிக்கப்படும். செவ்வக வடிவில் நீளமாக கோடு கிழிக்கப்படும். நடுவில் ஒரு கோடும், இடையில் ஓரு ஆள் நின்று  கைநீட்டி தொடமுடியாத அளவுக்கு இடைக்கோடுகளும் போட்டுக்கொள்வார்கள். தொடங்கும் அணியின் தலைவர் முதல் கோட்டில் நிற்பார்.  மற்றவர்கள் அடுத்தடுத்த கோட்டில் நிற்பார்கள். எதிரணியினர் இவர்கள் அனைவரையும் ஏமாற்றி கோட்டைக்கடந்து வெளியில் செல்ல வேண்டும்.  முதல்கோட்டில் இருப்பவருக்கு நடுக்கோட்டில் ஓடி எதிராளியை அவுட் செய்யவும் அதிகாரம் உண்டு. இவரது கவனத்தைத் திருப்ப, மற்றொரு  கட்டத்தில் நிற்பவர், நடுக்கோட்டில் கால்வைத்து தண்ணி தண்ணி என்று அழைப்பார். இவர் அவரைத் தொட ஓடவேண்டும். யாராவது ஒருவரைத்  தொட்டாலும் ஆட்டம் முடிந்துவிடும். முதலில் கோடுகளைக் கடந்து வெளியேறும் ஒருவர் கைப்பிடி மண்ணை அள்ளிக்கொண்டு, உப்பு என்று  சத்தமிட்டபடி ஒவ்வொரு கட்டத்திலும் நிற்கும் தம் அணியினரைத் தொட்டு திரும்பவும் கோட்டைக் கடந்து முகப்புக்கு வரவேண்டும். பரபரப்பான  விளையாட்டு!

மெல்ல வந்து கிள்ளிப்போ!

2 அணியினர் எதிரெதிரே அமர்ந்திருப்பார்கள். இரு அணித் தலைவர்களும் தங்கள் அணியினருக்கு ஒவ்வொரு பெயர் வைப்பார்கள். பழத்தின் பெயர்,  பூவின் பெயர், சினிமாவின் பெயர் என எதுவாக இருந்தாலும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். பின்னர் எதிர் அணியில் உள்ள ஒருவரின் கண்களை  இறுக மூடிக்கொண்டு தம் அணிக்கு வைத்த ஒரு பெயரைச் சொல்லி அழைப்பார் (உதாரணத்துக்கு... ‘ரோஜாப்பூவே ரோஜாப்பூவே மெல்ல வந்து
கிள்ளிப்போ...’). ரோஜாப்பூ சத்தமில்லாமல் வந்து கிள்ளிவிட்டு சாதாரணமாக அமர்ந்துவிடும். பின், எல்லோரும் தலையை வெட்டி நாய்க்குப் போடுங்க  என்று ஆணையிடுவார். எல்லோரும் கீழே குனிந்து கொள்வார்கள். அதன்பிறகு கண்களை திறந்து
விடுவார். இப்போது கிள்ளு வாங்கியவர் ரோஜாப்பூ யாரென கண்டுபிடிக்க வேண்டும்!

கள்ளன் வாரான்...  களவாணி வாரான்!

மொத்த பிள்ளைகளில் பெரியவர்களாக இருவர் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள்தான் விளையாடப்போகும் வீரர்கள். மற்ற அனைவரும் ஒரே  வரிசையில் கீழே சம்மண மிட்டு அமர்ந்து கொள்வார்கள். எல்லோரும் கைகளை பின்னால் வைத்திருப்பார்கள். வீரர்களில் ஒருவர் முன்னால் நிற்பார்.  மற்றவர், கையில் ஒரு கல்லை எடுத்துக்கொண்டு,

‘காயே கடுப்பங்கா
கஞ்சி ஊத்தி நெல்லிக்கா
உப்பே புளியங்கா
ஊறவச்ச நெல்லிக்கா
கல்லன் வாரான் காரைக்குடி
கல்லை நீயும் கண்டுபிடி’

என்று பாடியபடி ஒவ்வொருவருடைய கையிலும் கல்லை வைப்பது போல பாவ்லா காட்டி யாராவது ஒருவரின் கையில் வைத்து விடுவார்.  வைத்தபின் எல்லாரும் தலையை வெட்டி நாய்க்குப் போடுங்க என்பார். எல்லோரும் குனிந்து கொள்ள, யாருடைய கையில் கல் இருக்கிறது என்பதை  எதிரில் நிற்பவர் கண்டுபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் கல்லை வைத்தவருக்கு ஒரு மதிப்பெண்!

பூப்பறிக்க வருகிறோம்!


2 குழுவினர் எதிரெதிர் திசையில் நிற்பார்கள். ஒருவரோடு ஒருவர் கைகோர்த்தபடி எதிர் அணியினரை நோக்கி குதித்தபடி பாட்டு பாடி வருவார்கள்.  இரு அணியிலும் சமமான பிள்ளைகள் இருக்க வேண்டும். ‘பூப்பறிக்க வருகிறோம் வருகிறோம் எந்த மாதம் வருகிறீர் வருகிறீர் டிசம்பர் மாதம்  வருகிறோம் வருகிறோம் யாரைத் தேடி வருகிறீர் பூவைத் தேடி வருகிறோம் எந்தப் பூவை தேடுவீர் மல்லிகையை தேடுவோம்’ இப்படி பாடியதும்  ‘மல்லிகை’ என்று பெயர் வைத்த பெண்ணைப் பிடித்து இழுப்பார்கள். அந்த பெண் அந்தப் பக்கம் சென்றுவிடாமல் இந்த அணி இழுக்க, ஒரே  களேபரம்தான்!

கழங்கு

பெண்கள் வட்டமாக அமர்ந்து ஆடும் விளையாட்டு. வட்ட வடிவிலான 7 கூழாங்கற்கள். மேலே தூக்கிப்போட்டு கீழே இருப்பவற்றையும் சேர்த்து அள்ள  வேண்டும். ஒன்றான், இரண்டான், மூன்றான் என அள்ள வேண்டிய கற்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். எல்லாவற்றையும் சரியாக  விளையாடியவர்கள் இறுதியில் பழம் வைப்பார்கள். ஒவ்வொரு காய் ஆடும்போதும் ஒவ்வொரு பாட்டு உண்டு!

ஒன்றான்: அலசல் அலசல் பாட்டிமா
தொட்டுட்டேன் தொடங்கிட்டேன்
தொட்டில் மஞ்சள் அரச்சிட்டேன்
அரச்ச மஞ்சளைப் பூசிட்டேன்
அம்மியிடுக்குல படுத்திட்டேன்
படுத்த பாயில சுருட்டிட்டேன்
ரெண்டான்: ஈரெண்டு எடுக்கவும்
இளந்தம் பழுக்கவும்
பழுத்து தின்னவும்
மூன்றான்: முக்குட்டு சிக்குட்டு
மூன்றாம் படிக்கட்டு
நான்காம்: நாக்கொத்தி செங்கொத்தி
நாகம் பழங்கொத்தி
அஞ்சான்: ஐப்பால் அரங்கு
பம்பாய் சிலுக்கு
ஆறாம்: ஆக்கூர் முறுக்கு
அள்ளிப்போட்டு நொறுக்கு
ஏழாம்: ஏழதாள எங்க நீ போற
எட்டாம் நம்பர் சேல

இப்படி, கொண்டாட்டமும் நட்புணர்வும் நம்பிக்கையும் தவழும் நூற்றுக்கணக்கான விளையாட்டுகள் நம் கிராமங்களில் உண்டு. பல்லாங்குழி, தாயம்,  நாடு பிடித்தல், ஆடுபுலியாட்டம், கொல கொலயா முந்திரிக்கா, டிக் டிக், கண்ணாமூச்சி, நாலுமூலை, ஊதுகாய், கிட்டிப்புள், பளிங்கி, நொண்டியாட்டம்,
ஐஸ்பால், பச்சகுதிரை, குளம்கரை, சின்னப்பானை-பெரியபானை, பரமபதம், கரகரவண்டி, கவன், ராஜா ராணி, பம்பரம் விடுதல், செதுக்கு சில்லு, கல்லா  மண்ணா, நூத்துக்குச்சி, பூப்பந்து எறிதல் என மூளைக்கும் உடலுக்கும் வேலை கொடுக்கும் விளையாட்டுகள் நிறைந்திருந்தன. இன்றுள்ள  பிள்ளைகளுக்கு இந்த விளையாட்டு அனுபவங்கள்
கிட்டுவதேயில்லை!

பிளாக்பெர்ரி பார்ஸ்ச் டிசைன் P'9982 ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம்!


கனடியன் கைப்பேசிகளின் தயாரிப்பு நிறுவனமான பிளாக்பெர்ரி உடன் பார்ஸ்ச்  டிசைன் இணைந்து ஒரு புதிய அனைத்து டச் பார்ஸ்ச் டிசைன் P'9982 லக்சரி  ஸ்மார்ட்ஃபோனை அறிமுகப்படுத்தியுள்ளது. பிளாக்பெர்ரி பார்ஸ்ச் டிசைன் P'9982  ஸ்மார்ட்ஃபோனை நவம்பர் 21-ம் தேதியில் இருந்து பார்ஸ்ச் டிசைன் கடைகளில்  கிடைக்கும்.

வரம்பிடப்பட்ட 500 போர்ஸ் டிசைன் P'9982 ஸ்மார்ட்ஃபோன் சாதனங்கள் மட்டுமே  டிசம்பர் மாத தொடக்கத்தில் உலகளவில் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது.  பிளாக்பெர்ரி பார்ஸ்ச் டிசைன் P'9982 ஸ்மார்ட்ஃபோன் விலை விவரங்கள் இதுவரை  அறிவிக்கப்படவில்லை. P'9982 ஸ்மார்ட்ஃபோன் பிளாக்பெர்ரி 10.2 ஓஎஸ்  பதிப்புகளில் இயங்கும் என்று பிளாக்பெர்ரி குறிப்பிட்டுள்ளது.

P'9982, 1.5GHz டூயல் கோர் குவால்காம் MSM8960 சிப்செட் மூலம்  இயக்கப்படுகிறது. 2GB ரேம், 4.2-இன்ச் டிஸ்ப்ளே உடன் 768x1280 பிக்சல்கள்  தீர்மானம் கொண்டுள்ளது. பிரீமியம் பிளாக்பெர்ரி ஸ்மார்ட்ஃபோனில் 16GB  inbuilt சேமிப்பு வருகிறது மற்றும் 64GB வரை விரிவாக்க கூடிய மைக்ரோ  SD கார்டு உடன் கொண்டுள்ளது.

பிளாக்பெர்ரி பார்ஸ்ச் டிசைன் P'9982 முக்கிய குறிப்புகள்

1.5GHz டூயல் கோர் குவால்காம் MSM8960 சிப்செட்,

4.2-இன்ச் டிஸ்ப்ளே உடன் 768x1280 பிக்சல்கள் தீர்மானம்,

2GB ரேம்,

பிளாக்பெர்ரி 10.2 ஓஎஸ் பதிப்பு

64GB வரை விரிவாக்க கூடிய மைக்ரோ SD கார்டு

ஏ.வி.எம்மின் புது முடிவு!


தமிழ் சினிமாவின் முக்கியத் தயாரிப்பு நிறுவனங்களில்ஏவிஎம் ஸ்டூடியோவைத் தவிர்க்க முடியாதது. தற்போது அந்த நிறுவனம் ஒரு புதிய முயற்சியில் இறங்கத் திட்டமிட்டுள்ளது.

குறும்படங்களின் ஏகோபித்த வரவேற்பால் சின்னச் சின்ன படங்களைத் தயாரிக்க முன்வந்துள்ளது.

ஒரு மணி நேரம் மட்டும் ஓடும் படங்களைத் தயாரித்து இணையதளங்களில் வெளியிடலாம் என்று ஏ.வி.எம் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

தங்களின் முதல் இணையத் தயாரிப்புக்கு ஏவிஎம் நிறுவனம் வைத்துள்ள பெயர் “இதுவும் கடந்து போகும்” .

55 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படத்தில் சிவாஜியின் பேரனான சிவாஜி தேவ், ஷில்பா பட், ரவி ராகவேந்தர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை ஸ்ரீஹரி பிரபாகர் எழுத, அவருடன் இணைந்து இந்த படத்தை அனில் கிருஷ்ணன் இயக்கியுள்ளார்.

'இதுவும் கடந்து போகும்' படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.

''திரைப்படம், சின்னத்திரைக்கு இணையான ஊடகமாக இணையமும் வளர்ந்து வருகிறது. அதனை உணர்ந்து, அந்த வளர்ச்சியில் பங்கு பெற ஏ.வி.எம்அதற்கான படங்களைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது.

அதற்கான முதற்படி தான், இதுவும் கடந்து போகும் என்ற ஒரு மணி நேரப் படம்'' என்று ஏ.வி.எம் தெரிவித்துள்ளது.

நெக்ஸஸ் 7 (2013) டேப்லட் நவம்பர் 26-ம் தேதிக்கு பின் இந்தியாவில் அறிமுகம்!


கூகுள் நிறுவனம் இந்தியாவில் நெக்ஸஸ் 7 (2013) டேப்லட்டை  அறிமுகப்படுத்தப்படும். கூகுள் ப்ளே ஸ்டோரில் ஆர்டர்கள் மூலம் நெக்ஸஸ் 7  (2013) டேப்லட்டை வாங்கலாம். நெக்ஸஸ் 7 (2013) டேப்லெட் 16 ஜிபி Wi-Fi  மாடல் ரூ.20.999 விலையில் தொடங்குகிறது. 32 ஜிபி Wi-Fi மாடல் ரூ.23.999 விலையில் கிடைக்கும். 32 ஜிபி, Wi-Fi + 3G (எச்எஸ்பிஏ +, LTE) மாடல் ரூ.27.999 விலையிலும் கிடைக்கும்.

கூகுள் நெக்ஸஸ் 7 (2013) 16 ஜிபி Wi-Fi, டேப்லெட் மட்டும் நவம்பர் 26-ம் தேதிக்கு பின்னர் கிடைக்கும் என்று கூகுள் கூறியுள்ளது. நெக்ஸஸ் 7 (2013) டேப்லெட் 1920x1200 பிக்சல்கள் தீர்மானம் உடன் 7 இன்ச் முழு எச்டி டிஸ்ப்ளே வருகிறது மற்றும் 323ppi பிக்சல் அடர்த்தி கொண்டுள்ளது.

இது கீறல் தடை கொண்ட கார்னிங் கண்ணாடி அம்சங்கள் கொண்டுள்ளது. 1.5GHz க்வாட் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் S4 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 2 ஜிபி ரேம் கொண்டுள்ளது. டேப்லெட் விரிவாக்க கூடிய சேமிப்பு இல்லாமல் 16 ஜிபி மற்றும் 32 ஜிபி ஆகிய இரண்டு சேமிப்பு வகைகளில் வருகிறது.

கூகுள் நெக்ஸஸ் 7 (2013) முக்கிய குறிப்புகள்

1920x1200 பிக்சல்கள் தீர்மானம் உடன் 7 இன்ச் முழு எச்டி டிஸ்ப்ளே

1.5GHz க்வாட் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் S4 ப்ராசசர்

2 ஜிபி ரேம்

ஆண்ட்ராய்டு 4.3 ஜெல்லி பீன்

16 ஜிபி, 32 ஜிபி inbuilt சேமிப்பு

5 மெகாபிக்சல் பின்புற கேமரா

1.2-மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா

ஹீரோக்களிடம் பரவும் வினோத போட்டி!


ஆக்ஷன் படம், மசாலா படம், காமெடி படம் என்று விதவிதமாக தங்கள் கதாபாத்திரங்களை மாற்றிக்கொண்டு நடிக்கும் ஹீரோக்கள் இப்போது போட்டிபோட்டு தாடி வளர்த்து நடிக்கின்றனர். சிங்கம் படத்துக்கு மீசை வைத்து நடித்த சூர்யா அடுத்து லிங்குசாமி இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கு தாடி வளர்த்துள்ளார்.

ஹாலிவுட் படம் ஒன்றில் நடித்து வரும் அலைபாயுதே மாதவன் தாடியும், மீசையுமாக பாலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார். புதிய படமொன்றுக்காக அருவா மீசையுடன் சுற்றிக்கொண்டிருந்த விஜய் சேதுபதி அப்படம் டிராப் ஆனதையடுத்து புதிய படத்துக்காக தாடி வளர்த்துக்கொண்டிருக்கிறார். ஏற்கனவே சூது கவ்வும் படத்தில் இவர் தாடி வளர்த்து நடித்திருக்கிறார். திரு இயக்கத்தில் நடிக்கும் நான் சிகப்பு மனிதன் படத்துக்காக விஷால் தாடி வளர்த்து வருகிறார்.

பட்டதாரி வாலிபன் படத்தில் நடிக்கும் தனுஷ் இப்படத்துக்கும், தொடர்ந்து நடிக்க உள்ள கே.வி.ஆனந்த் படத்துக்கும் தாடி வளர்க்கிறார். இளம் நடிகர்கள்தான் இப்படி என்றால் கோச்சடையான் படத்தில் நடிக்கும் ரஜினியும், விஸ்வரூபம்  2 படத்தில் நடிக்கும் கமலும் தாடி வைத்து நடிக்கின்றனர். ஹீரோக்கள் போட்டி போட்டுக்கொண்டு தாடி வளர்ப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரு பொறியாளருக்குள் தோன்றிய மருத்தவ சிந்தனை! எக்ஸ்குளூசிவ்!

 nov 21 - ravi heart

எல்லீஸ் டேல் கோல்வொர்த்தி என்பவர் ஒரு பொறியாளர். இவருக்கு பிறந்ததில் இருந்து ஒரு குறைப்பாடு இருந்தது. அதாவது இவரால் இயற்கையாய் மூச்சு விட கஷ்டம் அது மட்டுமின்றி தூங்க முடியாது என்பதுடன் ஆக்டிவாக இருக்கவே இயலாது. இவருக்குள்ள இந்த நோய் “மார்ஃபான் சின்ட்ரோம்” (Marfan Syndrome) என்பதாகும்.

மார்ஃபான் சின்ட்ரோம் என்றால் என்ன?இதயம் ரத்ததை பம்ப் செய்யும் முக்கிய வெஸல் அஒர்டா (Aorta) என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த அஒர்டாவின் வேலை ரத்தம் கொண்டு செல்ல விரிந்து தேவையான ரத்ததை ஒவ்வொரு பகுதிக்கு எடுத்து செல்லும் முக்கிய குழாய். இந்த மார்ஃபன் சின்ட்ரோம் வந்தால் இந்த அஒர்டா விரியாமல் ரத்த அழுத்தம் அதிகமாகி வெடிக்கும் நிலை உண்டு. அப்படி வெடித்தால் ரத்தம் மற்ற பாகங்களுக்கு செல்லாமல் உடனே மரணிக்கும் ஒரு அபாயம் உண்டு.

இவருக்கும் தன் இளவயது முதல் தெரியும் என்றாவது ஒரு நாள் இந்த அஒர்டா ரத்த குழாய் வெடிக்கும் என. ரொம்பவும் ஒரு நாள் ரொம்ப முடியாமல் போக டாக்டரிடம் சென்றவுடன் அவருக்கு வழக்கமாக செய்யபடும் அறுவை சிக்கிச்சை மூலம் அந்த ரத்த குழாயை வெட்டி எடுத்து ஒரு உலோக செயற்கை குழாயை பொருத்துலாம் அதன் பிறகு ரத்ததை மெலிதாக்கும் மருந்துகள் சாப்பிட்டால் ஓரளவு நிவாரணமும் இது தான் இந்த நோய்க்கு தீர்வு என குறிப்பிட்டுள்ளனர் ராயல் பிராம்ன்டன் லண்டன் மருத்துவமனை.

ஆனால் இவருக்கு அதில் உடன்பாடு இல்லை. ஏன் என்றால் அது மிகவும் வலியை தரும் கடும் அறுவை சிகிச்சை மற்றும் அந்த ரத்ததை மெலிதாக்கும் மாத்திரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் என்றாவது ஒரு சிறு கீரல் உடம்பில் விழுந்தால் கூட குபு குபு என ரத்தம் வெளியேறி இறக்கும் அபாயம் உண்டு. அதனால் இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டு வீட்டுக்கு வந்து யோசனை செய்கையில் தன் தோட்டத்தில் அடிக்கடி தண்ணீர் பாய்ச்சும்போது அந்த தண்ணீர் பைப் டேமேஜ் ஆகி அதற்க்கு செலஃபன் டேப் ஒட்டு போட்ட விஷயம் நினைவில் வந்தவுடன் நேராக சில பொருட்களை தானே வாங்கி ஒரு சிறிய கருவியை செய்து, இதை எனக்கு பொருத்துங்கள் சரியாகிவிடும் என ம்ருத்துவ்ர்களிடம் தெரிவிக்க அவர்களும் உனக்கென்ன தெரியும் நாங்க டாக்டர் என சொல்லாமல் அதை ஆராய்ந்து அவருக்கு மிக சிறிய பேசிக் அறுவை சிகிச்சை மூலம் இதை செய்து இந்த மனிதன் இப்போது பல ஆண்டுகளாய் சாதாரணமாய் இருக்கிறார்

அதுமட்டுமல்ல இதை போல மேலும் 40 பேருக்கும் இதே டெக்னாலஜியை பொருத்தி அவர்களும் நன்றாய் உள்ளனர். இவர் அடுத்து பிரிட்டிஷ் கார்ட் ஃபவுன்டேஷனிலும் – ஜர்னலிலும் இதை இன்னும் அனைத்து உலகத்தில் உள்ள மார்ஃபன் சின்ட்ரோம் நோயாளிகளுக்கு இந்த எளிய அறுவை சிகிச்சையை செய்யுமாறு ரெக்வெஸ்ட் அனுப்பியுள்ளாராம்.

இந்த புதிய செயல்முறை என்ன? அதாவது அஒர்டாவை வெட்டி நடுவில் குழாயை பதிப்பதற்க்கு பதலாய் அஒர்டா குழாயை சுற்றீ ஒரு வழக்கமாய் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்து மெடிக்கல் மெஷ் எனப்படும் ஒரு மெல்லிய மெட்டிரியலை அந்த குழாயை சுற்றீ தைத்துவிடுவதால் அந்த குழாய் பெரிதாகி வெடிக்கும் அபாயம் இல்லையாம். இதனை செய்து முடிக்க 3 ஆண்டுகள் வரை டாக்டர்கள் இவரின் ஒத்துழைப்போடு ஆராய்ச்சி செய்து இதுக்கு காம்பிளக்ஸ் சர்ஜரி தேவையில்லை சிம்பிளாய் செய்தால் போதுமானது என்று உறுதிபடுத்தியிருக்கிறார்கள்.

தொடுதிரை உபகரணங்களால் குழந்தைகளுக்கு பாதிப்பு வருமா?!வராதா??

 nov 21 - tec

டச்ஸ்கிரீன் எனப்படும் கொடுதிரையுள்ள ஸ்மார்ட் போன்களும், டேப்ளட்கள் என்று அழைக்கப்படும் தொடுதிரை கையடக்க கணினிகளும் சிறு குழந்தைகளின் கற்றலுக்கு நல்லது என்று புதிய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இதை சில விஞ்ஞானிகள் மறுக்கிறார்கள்.குழந்தைகள் இது போன்றதொடுகை உணர்வுடைய பல் உபகரணங்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் அவர்களது கைககளால் எழுதுவதற்கான ஒத்துழைப்பை வழங்கக் கூடிய தசைக் கட்டமைப்பு விருத்தி செய்யப்படாமல் போவ்தற்கான சாத்தியம் அதிகரிப்பதாக மேரிலான்ட்டிலுள்ள கற்றல் மற்றும் சிகிச்சை நிலையத்தினைச் சேர்ந்த மருத்துவ நிபுணரான லிண்ட்ஸே மார்கோலி தெரிவித்துள்ளார்.

இப்போதெல்லாம் சிறு குழந்தைகள் மணிக்கணக்கில் தொடுதிரை கணினிகள், கணினிகள், தொலைக் காட்சிகளின் முன்னால் செலவிடுவது தவறு என்றும், இதனால் அவர்களின் மூளையின் கற்றல் திறன் பாதிக்கப்படும் என்றும் விஞ்ஞானிகள் ஏற்கெனவே பரவலாக கவலைகள் வெளியிட்டு வரும் நிலையில் இந்த பிரச்சினை குறித்து விஸ்கான்ஸின் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் முடிவுகள் இந்த கவலைகள் பெருமளவு தேவையற்றவை என்று கூறியிருநதது.

பொதுவாகவே ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இயற்கையிலேயே தொழில் நுட்பத்தை அறிந்துகொள்வதில் கூடுதல் ஆர்வம் இருக்கிறது.எனவே அந்த வயது குழந்தைகளின் கைகளில் ஒரு புதிய தொழில்நுட்பக் கருவியை கொடுத்தால், பெரியவர்களை விட இயல்பாக அந்த கருவியை ஆராய்ந்து அதை கையாள்வதில் அவர்கள் பெரும்பாலும் வெற்றி பெறுவார்கள்.

இந்த பின்னணியில் இரண்டு வயது குழந்தைகளிடம் தொடுதிரை கையடக்க கணினிகள் ஏற்படுத்தும் தாக்கல் குறித்து ஆய்வு செய்த விஸ்கான்ஸின் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், குழந்தைகளின் கற்றலை இந்த தொடுதிரை கணினிகள் ஊக்குவிக்கின்றன என்று தெரிவித்திருநதார்கள்.குறிப்பாக தொடுதிரை கணினிகளில் இருக்கும் கேம் அதாவது விளையாட்டு அல்லது காணொளியானது இண்டர் ஆக்டிவ்வாக, அதாவது குழந்தை அதை தொடத்தொட வெவ்வேறு புதிய தகவல்கள், படங்கள், ஒலிகள் அல்லது காணொளிகள் வரும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தால் அது அந்த குழந்தைகளின் கற்றலை ஊக்குவித்து குழந்தைக்கு உதவுகிறது என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருநதார்கள்.

இரண்டு வயது குழந்தையின் பார்வையில் இந்த தொடு திரை கணினியின் விளையாட்டுக்கள் எவ்வளவுக்கெவ்வளவு இண்டராக்டிவ் ஆக இருக்கிறதோ அந்த அளவுக்கு குழந்தைக்கு இவை பிடிக்கின்றன என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்து
 இந்த தொடுதிரைகளுடன் அதிகம் பழங்கும் குழந்தைகள் வேகமாக அதில் சொல்லப்படும் செய்திகளை உள்வாங்கிக்கொள்கின்றன என்று கூறியிருந்தார். இந்த ஆய்வு நடத்திய விஞ்ஞானிகளில் ஒருவரான மனித வளம் மற்றும் குடும்பநல படிப்புக்களுக்கான துணைப் பேராசிரியர் ஹெதர் கிர்கோரியன்.

மேலும் காண்களால் அறிவதில் மட்டுமல்ல புதிய வார்த்தைகளை கற்பதிலும் இந்த தொடுதிரை கணினிகள் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு உதவுவதாகவும் அவர் தெரிவித்தத்துடன் தொடுதிரை கணினிகள் குழந்தைகளின் கற்றல் திறனுக்கு உதவுகிறதே தவிர அதை எதிர்மறையாக பாதிக்கவில்லை என்றது இந்த ஆய்வு.

அதே சமயம் ‘திரைகள் கற்றலை பாதிக்கின்றன’ ஆனால் இந்த ஆய்வின் முடிவுகளில் இருந்து மாறுபடுகிறார் குழந்தை மனநல மருத்துவர் அரிக் சிக்மன்.தற்கால குழந்தைகள் திரைகள் முன்னால் மணிக்கணக்கில் செலவிடுவதாக கூறும் அரிக் சிக்மன், தொலைக்காட்சி, கணினி, தொடுதிரை கணினி, ஸமாட்ர்போன்கள் என்று சராசரியாக தற்கால குழந்தைகள் ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் திரையின் முன்னால் செலவிடுவது அவர்களின் கற்றல் திறனை பாதிக்கிறது என்கிறார்.

இவரது ஆய்வில் தற்போது பிறக்கும் ஒரு குழந்தை ஏழு வயதாகும் போது அதில் ஒரு ஆண்டு காலத்தை திரைக்கு முன்னால் செலவிட்டிருக்கும் என்று கணக்கிட்டிருக்கிறார். அதாவது இன்று பிறக்கும் குழந்தை தொலைக்காட்சி, கணினி, தொடுதிரை கணினி, ஸ்மார்ட்போன் என்று தினசரி அது ஏதோ ஒரு திரையின் முன்னால் செலவிடும் மொத்த நேரத்தையும் கணக்கிட்டால், அந்த குழந்தைக்கு ஏழு ஆண்டு ஆவதற்குள், அது ஒரு ஆண்டை திரைக்கு முன்னால் கழித்திருக்கும் என்பது இவரது கணக்கு.இது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் கற்றல் திறனுக்கும் நல்லதல்ல என்பது இவரது வாதம்.

இந்நிலையில்தான் குழந்தைகள் இது போன்றதொடுகை உணர்வுடைய யல் உபகரணங்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் அவர்களது கைககளால் எழுதுவதற்கான ஒத்துழைப்பை வழங்கக் கூடிய தசைக் கட்டமைப்பு விருத்தி செய்யப்படாமல் போவ்தற்கான சாத்தியம் அதிகரிப்பதாக மேரிலான்ட்டிலுள்ள கற்றல் மற்றும் சிகிச்சை நிலையத்தினைச் சேர்ந்த மருத்துவ நிபுணரான லிண்ட்ஸே மார்கோலி தெரிவித்துள்ளார்

அதே சமயம் இந்த வாதத்தை மறுக்கும் சில ஆய்வாளர்கள் பெற்றோர்களுக்கு இரண்டு யோசனைகளை அளிக்கிறார்கள்.முதலாவது சிறு குழந்தைகள் சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்திற்கு அதிகமாக திரை முன்னால் இருக்க அனுமதிக்காதீர்கள் என்பது முதல் யோசனை அதாவது தொலைக்கட்சி கணினி, தொடுதிரை கணினி என்று எல்ல வகையான திரைகளின் முன்பும் சேர்த்து குழந்தைகள் ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு மணிகளுக்கு மேல் இருக்க அனுமதிக்கக்கூடாது என்பது முதல் யோசனை.

இரண்டாவது தொடுதிரை கணினியில் இருக்கும் விளையாட்டுக்கள் மற்றும் அப்ளிகேஷன்கள் போன்றவற்றை தேர்வு செய்வதில் பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று இவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

தொடுதிரை கணினியில் குழந்தை செலவழிக்கும் நேரத்தைப் போலவே அது இந்த திரையின் முன்னால் என்ன செய்கிறது என்பது முக்கியம் என்பதை எல்லா விஞ்ஞானிகளுமே வலியுறுத்துகிறார்கள்.தொடுதிரை என்கிற புதிய தொழில்நுட்பம் எதிர்கால தலைமுறையினரின் வாழ்வில் பிரிக்கப்பட முடியாத அங்கமாக மாறி வருவதை சுட்டிக்காட்டும் ஆய்வாளர்கள், இதை தங்களின் குழந்தைகளுடைய நன்மைக்கு பயன்படுத்தும் ஒட்டுமொத்த பொறுப்பும் பெற்றோர்களின் கையிலேயே இருக்கிறது என்பதை வலியுறுத்துகிறார்கள்.

உலக ஹலோ தினம் = இன்று

 nov 21 - world hello

ஹலோ..-இது ஒரு வார்த்தை இல்லை உணர்வின் வெளிப்பாடு..
அன்பை சொல்ல, அபிமானத்தை வெளிப்படுத்த ,நம்மை அறிமுகப்படுத்திக்கொள்ள, ஆசையாய் பேச, நலம் அறிய ,இப்படி எத்தனையோ உணர்வு பரிமாறங்களுக்கான ஒரு மந்திரச்சொல்தான் ஹலோ ..

இன்றைய நவீன உலகில் விஞ்ஞானமும், விவசாயமும், பொருளாதாரமும், மனிதனின் வாழ்க்கைத்தரத்தையும், வசதிகளையும் வேண்டுமானால் அதிகமாக்கி விட்டிருக்கலாம் ..
ஆனால்,மனித கலாச்சாரத்தின் மிக முக்கிய அம்சமாக உள்ள ‘உறவுகளின்‘ உன்னதத்தை மறந்து மனிதன் எந்திரமாய் வாழும் வேதனை நிலை இன்று..

ஒரு தட்டில் பிணைந்து அன்பொழுக சோறு தந்து பாசத்தை உணவில் ஊட்டி வளர்த்த அம்மா ..இன்று பாட்டியாக மாறிய பின், அதே வீட்டில், அதே குடும்பத்தில் நான்கு அடுப்பில் தனித்தனி சமையல் ..ஒரு பாயில் உறங்கிய ,ஒருதாய் வயிற்று பிள்ளைகள் இன்று ஒருவருக்கொருவர் பேசக்கூட நேரமின்றி , அடுத்த தேசத்து விரோதிகளாய் அண்ணன் தம்பிகளை பார்க்கும் கொடுமை ..

இப்படி… நம் அன்பை, அபிமானத்தை, அக்கறையை, அடுத்தவரிடம் சொல்லாத இடங்களில் எல்லாம் இதே நிலைதான் ..இந்தநிலை மாற நான் என்ற அகங்காரம் இல்லாத அன்பின் வார்த்தையான ‘ஹலோ’ வை சொல்வோம் அனைவரிடமும்..

“ஹலோ” ஒரு ஆனந்தத்தின் ஆரம்பம்..

“ஹலோ” இது ஒரு மொழியின் சொல் அல்ல ..இது மற்றவர் கவனத்தை தன் மீது ஈர்க்கச் செய்யும் ஒரு வசிகர ஓசை ..

இப்படி “ஹலோ’ என்ற வியப்பிடைச் சொல்லை தினமும் பலமுறை உபயோகிக்கிறோம். ஹலா, ஹொலா என்ற பழங்கால ஜெர்மன் மொழி வார்த்தைகளில் இருந்து “ஹலோ’ வந்துள்ளது. இது தமிழில் வணக்கம், அழைத்தல், நலம் போன்ற அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது. இச்சொல் முதன்முதலில் எழுத்து வடிவத்தில் 1833 ம் ஆண்டு டேவிட் கிரக்கட் எழுதிய “”தீ ஸ்கெட்சஸ் அண்ட் எசென்ட்ரிசிட்டியஸ் ஆப் கால்” என்ற அமெரிக்க புத்தகத்தில் வெளியானது.இந்நிலையில் எகிப்து மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் 1973ம் ஆண்டு, தங்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டை முடிந்த தினத்தை, உலக ஹலோ தினமாக கொண்டாடினர். அதன் பிறகு தற்போது 180 நாடுகளில் இத்தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தின் முக்கிய நோக்கம்,

இன்று கொண்டாடப்படும் உலக ஹலோ தினத்தில், குறைந்தது 10 பேரிடம் “ஹலோ’ சொல்வதன் மூலம், இத்தினத்தில் நீங்களும் பங்கேற்கலாம். சக மனிதர்களுடனான உறவை மேம்படுத்துவதன் மூலமாக, உலக மக்களிடம் அமைதியை நிலை நாட்ட முடியும். அமைதிக்கான நோபல் பரிசு வென்ற சாதனையாளர்களும், “ஹலோ’ தினத்தின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.

நவம்பர் 21: உலக தொலைகாட்சி நாள்.

 

நவம்பர் 21: உலக தொலைகாட்சி நாள்.

நவம்பர் 21, 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்துலகத் தொலைகாட்சிக் கருத்தரங்கத்தின் பரிந்துரையின் பேரில் ஐக்கிய நாடுகள் அவை நவம்பர் 21 ஆம் நாளை உலகத் தொலைக்காட்சி நாளாக அறிவித்தது.

உலக நாடுகள் அமைதி, பாதுகாப்பு, பொருளாதாரம், சமூக மாற்றங்கள் மற்றும் தமது கலை, கலாசார தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தமக்கிடையே பரிமாறிக் கொள்ள இந்நாள் சிறப்பான நாளாகக் கருதப்பட்டது. இதன்படி முதல் தொலைக்காட்சி நாள் 1997-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது.