Thursday 28 November 2013

வில்லங்கம் பார்த்து வீடு வாங்குங்க...

பழைய வீடுகளை வாங்கும்போது, குடியிருக்கும் வீட்டில் என்ன வில்லங்கம் இருக்கப்போகிறது என நினைத்து கவனக்குறைவாக இருக்கக்கூடாது. பழைய வீடு வாங்கும்போதுதான் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். முதலில், வாங்கப் போகும் பழைய வீட்டின் மீது வில்லங்கம் ஏதாவது உள்ளதா என்பதை பார்க்கவேண்டும். வில்லங்கம் ஏதும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்ட பின்னர் வீட்டின் பத்திரம், பட்டா, மூலபத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை கேட்டுப்பெற வேண்டும். அந்த ஆவணங்களை வக்கீல் மூலம் ஆராய வேண்டும்.

பத்திரம் காணாமல் போய்விட்டால், அந்த வீட்டை வாங்கும்போது உஷாராக இருக்க வேண்டும். ஏனெனில், வீடு கட்டுவதற்காக பத்திரத்தை அடமானம் வைத்து வங்கியிலோ அல்லது தனி நபரிடமோ கடன் பெற்றிருக்கலாம். இந்த சூழ்நிலையில், பத்திரம் காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருந்து நகல் பத்திரம் வாங்கியிருக்க வாய்ப்புண்டு. எனவே, ஒரிஜினல் பத்திரம் இல்லை என்று கூறினால் கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். ஏனெனில், வீடு விற்பனைசெய்த பிறகு ஒரிஜினல் பத்திரம் வைத்திருப்பவர்கள் அந்த வீட்டை எளிதில் தங்களது கஸ்டடியில் எடுத்துக்கொள்ள முடியும்.

மேலும், ஒரிஜினல் பத்திரம் உயிரோட்டத்துடன் இருக்கும்போது நகல் பத்திரம் செல்லுபடியாகாமல் போய்விடும் என்பதை மனதில் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் முந்தைய ஓனர் வீடு மீது வாங்கிய கடனையும் சேர்த்து நாம் சுமக்க வேண்டியதாகி விடும்.

இதேபோல பத்திரத்தில் குறிப்பிடும் நீள, அகல அளவுகளில் வீட்டுமனை உள்ளதா என்பதையும் சர்வேயர் மூலம் அளப்பது நல்லது. ஏனெனில், பத்திரத்தை பொறுத்தவரை பழைய பத்திரத்தில் என்ன அளவு உள்ளதோ அதே அளவு அடுத்தவருக்கு விற்கும்போதும் எழுதப்படுகிறது. ஆனால், இடைப்பட்ட காலத்தில் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் ஆக்கிரமிப்பு செய்திருக்கலாம் அல்லது உள்ளாட்சி மற்றும் நெடுஞ்சாலை துறையினால் கையகப்படுத்தி இருக்கலாம். பொதுச்சுவர் வில்லங்கம் இருக்கிறதா என்பதையும் கவனிக்க
வேண்டும்.

சொத்துவரி, வீட்டுவரி, தண்ணீர்வரி உள்ளிட்ட வரிகள் அனைத்தும் தவறாமல் கட்டி முடிக்கப்பட்டுள்ளதா என்பதை விற்பவர்களை கேட்டு தெரிந்துகொண்டு, அதற்கான ஆவணத்தை பெறவேண்டும்.

வளர்ந்து வரும் புறநகர் குடியிருப்பு பகுதிகளில் குன்றத்தூர்

குடிநீர் வசதி, எங்கு வேண்டுமானாலும் சென்று வர சிறந்த சாலை இணைப்பு, போக்குவரத்து வசதி, பள்ளிகள், கல்லூரிகள், தெரு விளக்குகள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதி, தூய்மையான சுற்றுச்சூழல் இவையெல்லாம் ஒரு பகுதியில் இருந்தால் அப்பகுதியில் அதிகளவிலான மக்கள் குடியிருக்க விரும்புவார்கள். ஜிஎஸ்டி சாலைக்கு மிக அருகில் இருக்கும் புறநகர் பகுதியான குன்றத்தூர் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. சென்னையின் புறநகர் பகுதி என்று கூறப்பட்டாலும் இது சென்னை விமான நிலையத்திலிருந்து வெறும் 10 கி.மீ. தொலைவில்தான் அமைந்துள்ளது. குரோம்பேட்டை ரயில் நிலையம் மிக அருகில் அமைந்துள்ளது.

சமீபத்தில் குன்றத்தூர் சந்திப்பு பகுதியை இணைக்க புதிய மேம்பாலம் அமைக்கப்படும் என அரசு அறிவித்தது. பல்லாவரம் அருகே ஜிஎஸ்டி சாலையிலிருந்து விரைவில் மேம்பால பணி நடைபெறவுள்ளது. கோடம்பாக்கம்,ஸ்ரீபெரும்புதூர் சாலை, குன்றத்தூர் சாலை, முருகன் கோயில் சாலை, பம்மல் முக்கிய சாலை ஆகியவை குன்றத்துரை பல்வேறு பகுதிகளுடன் இணைக்கின்றன. பள்ளிகள், கல்லூரிகளும் இங்கு நிறைந்துள்ளன. 45 ஆண்டுகள் பழமையான சேக்கிழார் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் பல தனியார் பள்ளிகளும், மாதா பொறியியல் கல்லூரி, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி போன்ற கல்லூரிகளும் மிக அருகில் உள்ளன.

இவை மட்டுமின்றி அரசு ஆரம்ப சுகாதார மையம், மாதா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளும் இங்கு உள்ளன. மயிலாப்பூர், மாம்பலம், நங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இடம் பெயர்ந்து வந்தவர்களே இங்கு அதிகம் வசிக்கின்றனர். இப்பகுதியில் குறைந்த விலையில் வீட்டு மனைகள் கிடைப்பதும், எந்த நேரத்திலும் எங்கு வேண்டுமானாலும் சென்று வர முடியும் அளவுக்கு சிறந்த சாலை, போக்குவரத்து வசதிகளும் இருப்பதே இதற்கு காரணமாகும். தாம்பரம், போரூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகியவை மிக அருகில் இருப்பதும் மற்றொரு காரணமாகும்.

2010ம் ஆண்டு முதல் இப்பகுதியில் ஏராளமான வீடுகளும், அடுக்குமாடி குடியிருப்புகளும் பெருகி வருகின்றன. சிறந்த கட்டமைப்பு வசதிகள் இருப்பதால் மக்கள் அதிகம் வரத் தொடங்கியுள்ளனர். அருகில் உள்ள தாம்பரம், நங்கநல்லூர் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பு வீடு தொடக்க விலையே சதுர அடி ரூ.5,500 இருக்கும்போது, இங்கு சதுர அடி ரூ.3,500 முதல் ரூ.5,000 விலையில் கிடைக்கிறது.

எப்போதுமே பில்டரின் ஒப்பந்தம் மீது 2வது நம்பிக்கை கொள்ளுங்கள்


பில்டர் ஒப்பந்தத்தின் வரைவு நகல் என்பது அனைத்து வீடு வாங்குபவர்களும் படிக்க வேண்டிய ஆவணத்தின் முக்கிய பகுதிகளில் ஒன்று. ஒப்பந்தம் பில்டருக்கு சாதகமாக ஒருதலை பட்ச மாக உள்ளதா என்பதை நீங்கள் சரிபார்க்க வேண்டி யது அவசியம். வழக்கமாக கிளப் ஹவுஸ், உட்புற சாலைகள், மொட்டைமாடி மற்றும் திறந்தவெளிகள் மேலும் சங்கம் அமைப்பது ஆகியவற்றின் பாத்யதை உரிமை மீதான தரமான அச்சுபிரதியில் எப்போதும் ஒரு சிறு தெளிவின்மை இருக்கும். வீடு வாங்குவது என்பது வாழ்நாள் முடிவு என்பதால் தொழில்முறை ஆலோசனை மேற்கொள் வது உதவிகரமாக அமை யும். எந்த ஒரு விஷயமும் தவறாக இருக்கக்கூடாது மேலும் அது உங்கள் முழு வாழ்க்கையை வேத னைப்படுத்தும்.

வாங்கும் மனையின் சுற்றுப்புற சூழ்நிலையால் பெறும் பலன்கள்

பிளாட்டுக்கு அருகில் ஆறு அல்லது கால்வாய் இருப்பது நன்மை தரும். இது பிளாட்டுக்கு வடக்குப் பக்கமாகவும் தண்ணீர் மேற்கில் இருந்து கிழக்காக ஓடிவரும் நிலையில் இருந்தால் பலவிதங்களில் நன்மை தரும். மனைக்கு கிழக்கில் இருந்தால் தண்ணீர் தெற்கில் இருந்து வடக்காக செல்வது யோகம் தரும். மனைக்கு தெற்கு அல்லது மேற்கில் ஆறு, ஓடை இருப்பது நலம் தராது. மனைக்கு தெற்கிலோ, தென்மேற்கிலோ, மேற்கிலோ மலை குன்று இருப்பது நன்மை தரும். மனைக்கு முன் அல்லது பின்புறமாக மயானம் புதைகுழி இருப்பது மன நிம்மதி தராது.

மனைக்கு எதிராக திருக்கோயில் இருந்தால் , அங்கு குடியிருப்பவர்களது வயது வளர வளர அவர்களது செல்வமும் குறைந்துகொண்டே வரும். அவ்விதமான வீட்டை பொது உபயோகத்துக்கு உபயோகிப்பது நன்மை தரும். அதாவது நூல் நிலையம், தண்ணீர் பந்தல், பயணிகள் தங்குமிடம், ஆதரவற்றோர் இல்லம் போன்றவற்றை அமைப்பது நன்மை தரும்.

மனைக்கு எதிராக சிவன் கோயில் இருந்தால் , தீராத வியாதி வரும். மனைக்கு எதிராக விஷ்ணு கோயில் இருந்தால் , மன அமைதி கெடும். துர்க்கை கோயில் இருந்தால் , உடல் நலம் பாதிக்கும். திருக்கோயில் நிழல் வீட்டின் மீது விழுவதும் தீராத துன்பங்களை தரும். திருக்கோயில் வீட்டின் வலது பக்கமாகவும், பின்புறமாகவும் இருந்தால் செல்வ இழப்பும், இடது பக்கமாக இருந்தால் முன்னேற்ற தடையும் ஏற்படும். திருக்கோயில், மசூதி, தேவாலயம் ஆகியவற்றிலிருந்து 100 அடி சுற்றளவுக்கு அப்பால் இருந்தால் பாதகம் தராது.

இரண்டு பெரிய வீடுகளுக்கு நடுவில் உள்ள மனையை வாங்குவது கூடாது. அதில் வீடு கட்டினால் நாளாக நாளாக செல்வ இழப்பு ஏற்படும்.
மனைக்கு தென் கிழக் கில், தென் மேற்கில், வட மேற்கில் கிணறு போர்வெல் நீச்சல் குளம் இருந்தால் பல இன்னல்களைத்தரும். ஆனால் அவை வடக்கு, வடகிழக்கில் இருப்பது நன்மை தரும்.

தாழ்வு மனப்பான்மை!

வெற்றி பெற வேண்டும் என்று விரும்பாதவர்களே கிடையாது. நம் பலம் எது, பலவீனம் எது என்பதை உணர்ந்துக் கொண்டால் வாழ்க்கை என்பது இனிமையாகும். ஆனால் சிலர் மட்டுமே இந்தத் தெளிவை அடைவதினால் அந்த சிலருக்கு மட்டுமே வாழ்க்கை வெற்றிகரமாக அமைகிறது. இதற்குக் காரணம் மனம்.

தாழ்வு மனப்பான்மை என்பது முழுக்க முழுக்க மனம் சம்பந்தபட்ட விஷயம். தாழ்வு மனப்பான்மை உள்ளவர்களின் வாழ்க்கையில் செல்வம் இருக்கலாம்; கல்வி இருக்கலாம்; உடல் வலிமை கூட இருக்கலாம்: ஆனால் நிம்மதி இருக்காது.  


தாழ்வு மனப்பான்மை பொதுவாக இளம் வயதிலேயே உருவாகிறது. புறக்கணிக்கப்பட்டவர்கள்,பல முறை தோல்வி கண்டவர்கள், பிறருடன் பழக வாய்ப்பில்லாதவர்கள் இவர்களுக்கெல்லாம் தாழ்வு மனப்பான்மை வர வாய்ப்பு இருக்கிறது. தாழ்வு மனப்பான்மையினால் இவர்களது மனம் அடிக்கடி தங்களை பிறருடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தூண்டும். இவர்களுக்கு என்ன செய்ய வேண்டும்? உடனிருக்கும் நண்பரோ.உறவினரோ இவர்களது தயக்கத்தைத் தக்க நேரத்தில் கண்டுப்பிடித்தல் அதன் பிறகு அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

தாழ்வு மனப்பான்மை வாழ்வின் நிம்மதியை கெடுக்கும். இந்த தாழ்வு மனப்பான்மை ஒழிக்க என்ன செய்யலாம்? அதை தவிர்க்க பல முயற்சிகள் எடுக்கலாம்.பிறகு,பிறருடன் ஒப்பிடுவதைத் தவிர்ப்பதுதான். தற்ப்போது இல்லாத விஷயங்களுக்கு வருத்தபடுவதில் தவறு இல்லை. அந்த வருத்தமே வாழ்க்கை முறையாக மாறுவது தான் தவறு. அதன் தொடர்ச்சியாக என்னால் முடியாது என்று சோர்ந்து போவது தவறு. இந்த தவறுகளே வெற்றிக்கு தடைக்கற்கள்.

இது மாற,வெற்றி நம் வசமாக நாம் எடுக்க வேண்டிய முதல் பயிற்சி தாழ்வு மனப்பான்மையை உருவாக்காமல் பார்த்துக் கொள்வது தான். 



"விழுவது அழுவதற்கு அல்ல: மீண்டும் எழுந்து நடப்பதற்கே".

நம்மை போல், டால்பின்களும் பெயர்கள் மூலம் ஒருவருக்கொருவர் அழைக்கின்றன!

 

உலகின் மிக அறிவார்ந்த விலங்குகளில் ஒன்றாகும் -டால்பின்களுக்கு பெயர்கள் உள்ளன, அவைகளுக்கு பெயர்கள்  மனிதர்களால் கொடுக்கப்பட்டது இல்லை.

முதன் முறையாக, ஆராய்ச்சியாளர்கள் டால்பின்கள் எப்படி 'தனிப்பட்ட பெயர்கள்'  கொண்டு பதிலளிக்கின்றன என்று சோதித்து பார்த்தனர்.

 கடல் பாலூட்டிகள் தனிப்பட்ட விசில் பயன்படுத்தி இதன் மூலம்  ஒருவருக்கொருவர் அடையாளம் கண்டு கொள்ளும் மற்றும் அவர்களது சொந்த அழைப்பை கேட்கும் போது பதிலளிக்கும் என்று  ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கடல் உயிரியல் ஆராய்ச்சியை மேற்கொண்ட ஸ்டீபன் கிங் மற்றும் வின்சென்ட் ஜனிக் பாட்டில்நோஸ் டால்பின்கள் ஒலி  பின்னணி பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

அவர்கள் விசில் பிரதிகளை கொண்டு விலங்குகள் உண்மையில்  அவர்களுக்கு எதிர்செயலாற்றும் என்பதை சோதனை செய்து பார்த்தனர்.

 அணி குழுக்கள் தொடர்ந்து காட்டு டால்ஃபின் வகை  மீன்கள் பயன்படுத்தி, தங்கள் தனிப்பட்ட 'பிரதிகள்' விசில்களையும் பற்றி பதிவு செய்தனர்.

பின்னர் அவர்கள் மீண்டும் அதே  மக்களிடம் இருந்து வேறு ஒரு மக்கள் அல்லது அறிமுகமில்லாத விலங்குகளின் விசில் பிரதிகளை அல்லது கணினி பதிப்பு  வகித்த விலங்கு பிரதிகள்  விசில்களையும் ஆராய்ந்து பார்த்தனர்.

ஒவ்வொரு டால்பின்களும் அதன் சொந்த விசில் பிரதிகளை  கேட்டு தான் பதிலளிக்கும், மற்ற விசில் பிரதிகளுக்கு பதிலளிக்காது என்று கண்டுபிடித்தனர்.

மம்முட்டி படத்தில் விஜய்?

 

மம்முட்டியுடன் இணைந்து விஜய் நடனமாடப் போவதாக செய்தி வெளியாகி உள்ளது.

மலையாளத்தில் மம்முட்டி, ரீமா கல்லிங்கள் நடிக்கவிருக்கும் படம் ‘கேங்ஸ்டர்’. இந்தப் படத்தை ஆஷிக் அபு இயக்குகிறார். இவர்தான் ’22 ஃபீமேல் கோட்டயம்’ என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கியவர். படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்குகிறது.

இந்நிலையில் படத்தில் விஜய்யை எப்படியாவது ஒரு பாடலுக்கு  ஆடவைத்துவிட வேண்டும் என்று இயக்குனர் ஆஷிக் அபு ஆசைபடுகிறாராம். அதற்கான தீவிர முயற்சியில் இப்போதே இருங்கிவிட்டாராம்.

மலையாளத்தில் விஜய்க்கு நல்ல வரவேற்பு இருப்பது ஊரறிந்த விஷயம். அதனால் மம்முட்டியின் படத்தில் விஜய் டான்ஸ் ஆடினால் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

ஏற்கெனவே விஜய், இந்தியில் ‘ரவுடி ரத்தோர்’ படத்தில் அக்ஷய்குமாருடன் இணைந்து ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது குற்றமோ, பாவமோ அல்ல!- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு!

 

“திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது, இந்தியாவில் சமூகத்தாலோ, சட்டத்தாலோ அங்கீகரிக்கப்படவில்லை.அதே சமயம் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது குற்றமோ, பாவமோ அல்ல.”என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது.

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து பிரிந்துவிட்ட ஒரு பெண், அந்த ஆணிடம் இருந்து ஜீவனாம்சம் கோரி தாக்கல் செய்த மனு மீது நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் விசாரித்து வந்தது.இது தொடர்பாக, நீதிபதி பிறப்பித்த உத்தரவில் “திருமணம் செய்து கொள்வதோ, செய்து கொள்ளாமல் இருப்பதோ ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது, இந்தியாவில் சமூகத்தாலோ, சட்டத்தாலோ அங்கீகரிக்கப்படவில்லை. இருந்தாலும், திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது குற்றமோ, பாவமோ அல்ல. இந்த உறவு, திருமண உறவு போன்றது அல்ல. இத்தகைய உறவை பல நாடுகள் அங்கீகரிக்கத் தொடங்கி உள்ளன.

இந்த உறவில், ஏற்றத்தாழ்வுகள் இருப்பதை நாம் பார்க்காமல் இருக்க முடியாது. இந்த உறவு முறிவடைந்தால், பெண்களும், இந்த உறவின் மூலம் பிறக்கும் குழந்தைகளும்தான் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, பெண்களையும், அவர்களது குழந்தைகளையும் பாதிப்பில் இருந்து பாதுகாக்க பாராளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும். அல்லது, சட்டத்தில் உரிய திருத்தம் செய்ய வேண்டும். திருமண உறவை அங்கீகரித்தது போல இந்த உறவையும் அங்கீகரிக்க வேண்டும்.

அதே சமயத்தில், திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் உறவை பாராளுமன்றம் ஊக்குவிக்க முடியாது. எனவே, பொதுமக்கள் இதற்கு எதிராகவோ அல்லது ஆதரவாகவோ கருத்து தெரிவிக்கலாம்.கள்ளத் தொடர்பு, பலதார மணம் ஆகியவற்றை ‘திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்தல்’ உறவில் சேர்க்க முடியாது.” என்று,நீதிபதி தன் உத்தரவில் தெரிவித்துள்ளார்.

டிசம்பரில் ரஜினி, விஜய், அஜீத், கமல் படங்களின் இசை வெளியீடு!

 

வரும் பொங்கல் தமிழக ரசிகர்களுக்கு மறக்க முடியாத பொங்கலாக இருக்கப் போகிறது. காரணம், அன்றைய தினத்தில் பெரிய ஹீரோக்களின் படங்கள் நேரடியாக மோத உள்ளன. ஜனவரியில் பொங்கலுக்கு பெரிய ஹீரோக்களின் படங்கள் ரிலீஸாக இருப்பதால் அதற்கு முன்பாக சம்மந்தப்பட்ட படங்களின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது. எனவே, பொங்கலுக்கு முன்பாகவே ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டம் காத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

அதன் விவரம் வருமாறு:-

டிசம்பர் 12 – கோச்சடையான்


ரஜினி, தீபிகா படுகோன் நடித்துள்ள படம் கோச்சடையான். முற்றிலும் அனிமேஷன் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தை ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு இசையமைத்திருப்பது ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான்.

டிசம்பர் 15 – ஜில்லா

துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஜய், காஜல் அகர்வால் மீண்டும் ஜோடி சேர்ந்திருக்கும் படம்தான் ஜில்லா. நேசன் இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். படத்தில் விஜய்யும், இமானும தலா ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள். இமான் இசையமைக்கும் பாடல்கள் அனைத்துமே ஹிட் ஆகிவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

டிசம்பர் 18 – வீரம்

அஜீத், தமன்னா முதன்முறையாக இணைந்திருக்கும் படம் வீரம். சிறுத்தை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவா இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். எனவே, படத்தில் மெலடி மற்றும் குத்து பாடலை எதிர்பார்க்கலாம்.

டிசம்பர் 26 – விஸ்வரூபம் 2

‘விஸ்வரூபம்’ படத்தின் தொடர்ச்சியாக அதன் 2ஆம் பாகம் உருவாகியுள்ளது. கமல், தயாரித்து, இயக்கி, நடித்து வரும் இப்படத்திலும் முதல் பாகத்தில் நடித்த நடிகர்களே நடிக்கின்றனர். ஷங்கர் எஹ்சான் லாய் இசையமைத்துள்ளார். இவர்தான் விஸ்வரூபம் படத்தின் இசையமைப்பாளரும் கூட.

டென்ஷன் எதனால்?

டென்ஷன் என்பது, ஏதோ ஒரு சூழ்நிலையில் கோபத்தில் எழுந்து அடங்கும் உணர்வு என்றுதான் பலரும் நினைத்திருக்கிறார்கள். அது தவறு. மனத்தாலும், உடலாலும் அது பல கட்டங்களைக் கடந்த பின்னர்தான் வெளிப்படும்.
ஏதோ ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற முனைப்பு உள்ளுக்குள் எழுகிறது. அதற்கு இடையூறு ஏற்படுவதாக உணர்கிறீர்கள். உடனே, அதைச் சரியாக செய்ய முடியுமோ முடியாதோ என்கிற சந்தேகம் உள்ளுக்குள் வந்துவிடுகிறது. மனம் பதைபதைப்பு அடைகிறது. நெஞ்சு துடிக்கிறது. ஒரு தடுமாற்றம் நடுக்கம் வருகிறது. நிதானம் இழக்கிறது. தவிப்பு ஏற்படுகிறது. இதனால், உடல் திசுக்கள் நிறைய கெடுகின்றன.

உடல்திசுக்கள் கெடக்கெட மனத்திலும், உடலிலும் ஒரு விறைப்பு நிலை உண்டாகிவிடும். இந்தச் சமயம்தான் மனிதர் கண்மண் தெரியாமல் நடந்து கொள்கிறார். அதாவது டென்ஷன் அடைகிறார். எளிதில் டென்ஷன் ஆகிறவர்கள் யார் யார்?

அவர்களுக்கு அடிக்கடி தலைவலி வரும். தலைக்கனமாக இருக்கும். கழுத்துவலி, உடல்வலி இருப்பதாக அடிக்கடி சொல்பவர்கள், திடீர்திடீரென்று இதயத்துடிப்பு அதிகரிப்பதாக உணர்பவர்கள், எடை குறைபவர்கள், உடல் பலவீனமாகவே இருப்பவர்கள், ஞாபகமறதி உள்ளவர்கள், மனதை ஒருமுகப்படுத்த முடியாமல் தவிப்பவர்கள், மனச் சஞ்சலம் உள்ளவர்கள், கைகால்களில் நடுக்கம் உள்ளவர்கள், உள்ளங்கை மற்றும் கால் பாதங்களில் வியர்வை கொண்டவர்கள், தன்னம்பிக்கை குறைந்தவர்கள், எதிலும் ஆர்வமில்லாதவர்கள், எப்போதும் சோகமாகக் காட்சித் தருபவர்கள், பசியின்மை தூக்கமின்மை உள்ளவர்கள், எதன்மீதும் ஒரு முடிவு எடுக்க முடியாமல் இருப்பவர்கள் ஆகியோருக்கு டென்ஷன் எளிதில் வரும்.
இவையன்றி கீழ்வரும் ஐந்து முக்கிய அறிகுறிகள் தென்பட்டால் உடனே ரெட் சிக்னல் காட்டி விட வேண்டும். அது ஓரளவிற்கு டென்ஷனைக் குறைக்க உதவும்.


1. நெஞ்செரிச்சல் (Heartburn):

டென்ஷனால் வயிறானது அமிலத்தை அளவுக்கதிகமாக உற்பத்தி செய்துவிடும். அதோடு எண்ணெய்ப் பதார்த்தம் உள்ளிட்ட சில வகை உணவுகள் உண்ணும்போது, அவை மேலும் தீவிரமடைந்து அமிலம் பின்னோக்கித் தள்ளப்பட்டு, நெஞ்சில் வந்து உட்கார்ந்து கொள்ளும். அப்போதுதான் நெஞ்செரிச்சல் வந்துபடுத்தும். பிறகு டென்ஷனுக்குக் கேட்கவே வேண்டாம்.

விடுபடவழிகள்:

ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் கொஞ்சம் தண்ணீர் குடியுங்கள். இது டென்ஷனைக் குறைப்பது மட்டுமல்ல, உணவுக் குழாயில் தங்கியுள்ள அமிலங்களையும் துடைத்தெடுத்துவிடும். தாற்காலிகமாக நெஞ்சு எரிச்சல் வராமல் இருக்கும். ஃபாஸ்ட் புட், கொழுப்பு அதிகமுள்ள உணவுகள் ஆகியவற்றை உடனே நிறுத்திவிடுங்கள். கூடவே, காபி, தக்காளி சாஸ், வெங்காயம், சாக்லெட், பெப்பர்மிண்ட் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

2. கை நடுக்கம்:

கை நடுக்கம் இருந்தாலே மனிதர் கோபத்தில் இருக்கிறார் என்ற முடிவுக்கு வந்துவிடலாம். தங்களுக்குச் சேர வேண்டிய பாராட்டை வேறு யாருக்காவது மேலதிகாரி தந்தால் முதலில் கையை மேசை மேல் குத்துவது போன்று செயல்படுவதைக் கவனித்து இருக்கலாம். காஃபின் என்ற நச்சு, உடலில் இருந்தாலும், இந்த நிலை ஏற்படும்.

விடுபட வழிகள்:

உங்களுக்குச் சேர வேண்டியதை மேலதிகாரியிடம் கேட்டுப் பெற முயற்சிக்கலாம். உங்களையும் மீறி ஒரு செயல் நடந்து, அதையட்டி கை நடுக்கம் ஏற்பட்டால் பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டுக்கொள்ளலாம். பெண்கள் கைப்பைக்குள் கையை நுழைத்துக் கொள்ளலாம். தொடர்ந்து கை நடுக்கம் இருந்தால் மருத்துவர்தான் நல்லவழி.

3. திடீர் தலைச்சுற்றல்:

 டென்ஷனாக இருந்தால் சிலருக்குத் திடீரென்று தலைச்சுற்றல் வரும். ரத்த ஓட்டம் தடைபட்டிருப்பதற்கும் இது ஒரு அறிகுறியாகும்.

விடுபட வழிகள்:

தலைச்சுற்றல் உள்ளவர்கள் சர்க்கரையின் அளவைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் குடிக்கவேண்டும். உங்களுக்குத் தலைச்சுற்றல் இருந்தால் உடனே கீழே உட்கார்ந்து இந்த மூச்சுப் பயிற்சியைச் செய்யுங்கள். காற்றை நன்றாக ஆழமாக உள்இழுத்து அதை நுரையீரலில் சிறிதுநேரம் தங்க வையுங்கள். பின்னர் மெதுவாக மூக்கின் வழியே காற்றை வெளியேற்றுங்கள். இதனால், போதுமான அளவிற்கு ஆக்ஸிஜன் கிடைத்துவிடும். தலைச்சுற்றல் இருக்காது. மீண்டும் ஒருமுறை தலைச்சுற்றல் வந்தால் உடனே டாக்டரிடம் செல்லுங்கள்.

4. தோல் அரிப்பு:


சிலருக்கு டென்ஷன் ஆரம்பமாகும்போது, ஹார்மோன் உற்பத்தியில் மாற்றம் ஏற்பட்டு, தோல் திசுக்கள் பாதிக்கப்பட்டு அரிப்பு ஏற்படும்.

விடுபடவழிகள் :

அரிப்புக் கண்டவர்கள் உடனே பென்சில் அல்லது கையில் கிடைக்கும் பொருள்களால் உடம்பை சொரியக்கூடாது. பிளாஸ்டிக் பையில் ஐஸ் கட்டிகளைப் போட்டு அரிக்கும் இடத்தில் வைக்கலாம். இதற்கானலோஷன் இருந்தால் தடவலாம்.

5. அதிகப்பணம் செலவழிக்கும்போது:

எதிர்பாராமல் அளவுக்கு அதிகமாக பணம் செலவழிக்கும் நிலை வந்தால் சிலருக்கு டென்ஷனாக இருக்கும். இது உடல் சம்பந்தப்பட்டதல்ல, என்றாலும், மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதே.

ஷாப்பிங் செல்லும்போது, கையில் உள்ள பணத்திற்குத் தக்கபடி என்னென்ன பொருள்கள் வாங்குவது என்று திட்டமிட்டுச் செயல்படுவது டென்ஷனைக் குறைக்க உதவும்.

மூக்கின் அழகை மறைக்கும் தழும்பை போக்க டிப்ஸ்!

 

தற்போது கண்ணாடி அணிபவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. தொடர்ச்சியாக கண்ணாடியை அணிபவர்களுக்கு, மூக்கின் மேல் தழும்புகள் போன்று கருப்பாக காணப்படும்.

இத்தகைய தழும்புகள் ஏற்படுவதற்கு காரணம் கனமான கண்ணாடி மற்றும் மூக்கினை அழுத்தும் படியாக நீண்ட நேரம் கண்ணாடி அணிவது தான்.
இது முகத்தில் ஒருவிதமான அசிங்கமான தோற்றத்தைக் கொடுக்கும். கண்ணாடி அணிவதால் ஏற்படும் தழும்புகளை போக்குவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

1. தினமும் முகத்தை ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி கழுவி, மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும். இவ்வாறு தினமும் 3 முறை செய்து வந்தால், அத்தகைய கருப்பான தழும்புகளை படிப்படியாக மறைவதை காணலாம்.

2. உருளைக்கிழங்கை தழும்புள்ள இடத்தில் தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய்து வந்தால், கண்ணாடியால் ஏற்படும் தழும்புகளை மறையும்.இவ்வாறு வாரம் 4 நாட்கள் செய்ய வேண்டும்.

3. எலுமிச்சை சாறும் கருமையான தழும்புகளை போக்க வல்லது. எலுமிச்சை சாற்றினை பஞ்சில் நனைத்து, தழும்புகள் உள்ள இடத்தில் தடவி மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

அதன் பின்னர் மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கருமை நிறம் மறையும்.

4. கற்றாழை ஜெல்லும் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை போக்குவதற்கு சிறந்த பொருள். ஏனெனில் அதிலும் கிளின்சிங் தன்மை அதிகம் உள்ளது.

ஆகவே இதுவும் தழும்புகள் மற்றும் வடுக்களை போக்குவதற்கு வல்லது.

மலாலா – பிரிட்டனின் செல்வாக்குமிக்க ஆசியர்!

nov 28 -malala_yousafzai_

மலாலா மீது எந்நேரத்திலும் தாங்கள் தாக்குதல் நடத்துவோம் என்று தலிபான் பயங்கரவாதிகள் மிரட்டியதற்கு பதிலடியாக, பயங்கரவாதிகளால், எனது உடலைத் தான் சிதைக்க முடியுமே தவிர, எனது கனவுகளை ஒருபோதும் சிதைக்க முடியாது என்று தெரிவித்த
மலாலா யூசுப்சையை, பிரிட்டனின் செல்வாக்குமிக்க ஆசியர் என்று லண்டனிலிருந்து வெளிவரும் வார இதழ் புகழாரம் சூட்டியுள்ளது.

பெண் கல்வியை வலியுறுத்தி பிரசாரம் செய்து வந்த பாகிஸ்தான் சிறுமி மலாலா மீது தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் சர்வதேச நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் லண்டனில் உள்ள பிரபல மருத்துவமனையில் மலாலாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவர் உடல்நலம் தேறியுள்ளார். சர்வதேச நாடுகள், மலாலாவை பாராட்டி பல விருதுகள் வழங்கி வரும் நிலையில், அண்மையில் லண்டனில் நடைபெற்ற கராவி குஜராத்-2 என்ற கூட்டத்தில் தைரியத்திற்காக வழங்கப்படும் ஹேமர் விருதுக்கு, மலாலாவும் அவருடன் சுடப்பட்ட மற்ற இரு சிறுமிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் பிரிட்டனை சேர்ந்த வாரப் பத்திரிக்கை ஒன்று பிரிட்டனில் செல்வாக்கு மிக்க 101 பேரின் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் மலாலா யூசப்சாய் செல்வாக்கு மிக்க முதல் ஆசியராக உள்ளார் என்று தெரிவித்துள்ளது.

இவருக்கு அடுத்தபடியாக, லேபர் கட்சியின் எம்.பி.யும், பாராளுமன்ற விவகாரக்குழு தலைவருமான கீத் வாஸ் இரண்டாவது செல்வாக்கு மிக்க ஆசியராக உள்ளார். ஒருமுறை பிரிட்டனின் மிகப்பெரிய பணக்காரராக இருந்த லட்சுமி மிட்டல் இப்போது இந்த பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார் .

நிம்மதி...!

நிறைவு,நிம்மதி இவையிரண்டையும் தேடியே எல்லோர் வாழ்க்கையும் இயங்குகிறது. சிலருக்கு அனைத்தும் இருந்தும் நிம்மதியும் மன நிறைவும் இருக்காது. ஏன்? நாம் எடுக்கும் எல்லா முடுவுகளுமே சரியானதாக அமைவதில்லை. அதேபோல் நம் வாழ்க்கை குறித்தும்,லட்சியம் குறித்தும் எடுக்கும் முடுவுகளும் சரியானதாக தான் இருக்கவேண்டும் என்பதல்ல. சில நேரங்களில் நாம் விரும்புபவை,நேசிப்பவை கூட நமக்குத் தடையாக இருக்கலாம்.

வாழ்க்கைப் பாதை என்றும் பூந்த்தோட்டமாக தான் இருக்க வேண்டும் என்பதல்ல. முட்களும் குழிகளும் நிரம்பியதாகவும் இருக்கலாம். வாழ்வில் எப்போதும் கவனம் தேவை. அந்த கவனம்,நிதானம் மட்டுமே உன் வாழ்க்கை மலர் போல பூக்க உதவும். நாம் என்ன வேண்டுமானாலும் நம் வாழ்வு குறித்து திர்மானிக்கலாம். ஆனால்,அந்த முடிவே தவறாகக் கூடாது. முடிவெடுத்த வாழ்க்கை முழுமையை வருவது நம் கையில் தான் உள்ளது. பல நேரங்களில் நம்மை பற்றி,நம் தோல்வியை பற்றி,நம் குறை பற்றி,நம் இயலாமை பற்றியே மனம் சிந்திக்கிறது.

வாழ்வில் தொடர்ந்து முன்னேற,நிறைவுகளையும் அடிக்கடி நினைவுக் கூற வேண்டும். இது வரை நடந்தவையே இன்று நடப்பதற்கு பாடம். ஆனால்,எல்லா விசயங்களும் ஒரே தடவையில் மனதில் பதிந்து விடுவதில்லை. கற்றுக்கொள்ளும் ஆர்வம்,நம்முள் நம்மை பரிசிலிக்கும் போதுள்ள இவையே எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள தோன்றும். அதுவே நாளைய விளைவு.

ஒருவர் மன நிம்மதியை அடைய சில வழிகள்:

- தன் உணர்ச்சிகளை புரிந்துக் கொள்வது.

- தன் சூழலை முழுமையை பார்ப்பது.

- மாற்று வழிகள் வாழ்வில் உண்டா என்று தேடுவது.

- வாழ்வின் பாதையை முடிவெடுப்பது.

- திறமைகளை வளர்ப்பது.

- ஒவ்வொரு கால கட்டத்திலும் விளைவுகளை பார்ப்பது.

"கனவு மெய்ப்படவேண்டும்,காரியமாவது விரைவில் வேண்டும்,தரணியிலே பெருமை வேண்டும்"என்று பாரதி கூறியது போல,நம்மை நாம் அறிந்துக் கொள்ள வேண்டும். இதை எல்லாம் செய்தாலே நிம்மதி வரும்.

விடா முயற்சி..!


"எப்போதும் தோற்காதவர்கள் யாரெனில், எப்போதும் முயற்சி செய்யாதவர்களே" - இந்தக் கருத்தைப் பற்றி பார்ப்போம்.

என்னிடம் ஒரு வெற்றியாளரைக் காண்பியுங்கள் 'ஒரே இரவில் வெற்றி' என்பது எவ்வளவு போலியானது என்று நான் காண்பிக்கிறேன்.  ஒவ்வொரு வெற்றியாளனும் தோற்க துணிந்தால்தான் வெற்றி பெறுகிறான்.  பின்வரும் சம்பவங்களைக் கவனியுங்கள்.

இரண்டாம் உலகிப்போரின்போது டொயோட்டோ மோட்டார் கார்ப்பரேஷனில் பொறியாளர் வேலைக்கு நடந்த இன்டர்வியூவில் சொயிசிரோ தேறவில்லை.  ஆனாலும் அவர்நம்பிக்கை இழக்கவில்லை.  ஹோண்டா நிறுவனத்தை ஆரம்பித்தார்.

கவர்ச்சியாக இல்லை என்று டிவென்டியெத் செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்தால் அவர் நிராகரிக்கப்படார். பல ஆண்டுகள் கழித்து மர்லின் மன்றோ எல்லோரும் நேசிக்கும் ஹாலிவுட் நடிகையாக விளங்கப்போகிறார் என்று ஃபாக்ஸுக்குத் தெரியவில்லை.
அவருடைய இசை ஆசிரியர் 'இசையமைப்பாளராக நீ ஜெயிக்க முடியாது' என்று கூறினார். பித்தோவனின் இசை இன்றும் வாழ்கிறது.

இவர்கள் அனைவருமே உலகத்துக்கு ஒரு விஷயத்தை நிரூபித்தார்கள்.  உங்கள் மீது நம்பிக்கை இருந்தால், உலகம் என்னதான் சொன்னாலும், உங்களால் முடியும் என்று நம்புகிற விஷயத்தைத் தொடர்ந்துவிடா முயற்சியோடு செய்தால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.  வெற்றிகரமான மனிதர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் இருக்கும் வேறுபாடு என்பது பலமில்லாதது அல்ல.  அறிவில்லாதது அல்ல, ஆனால் விடாமுயற்சி இன்மைதான்.

உங்களுக்கு நிறைய வேட்கை இருக்கலாம்.  ஒவ்வொரு முறையும் மிகச் சிறப்பாக செயல்படலாம்.  ஆனால் நீண்ட காலத்தில் இதற்கு எந்த மதிப்பும் இல்லை. ஒவ்வொரு முறையும் முடிந்த அளவுக்கு சின்சியராகச் செயல்படுவதே முக்கியம்.  அப்போதுதான் நீங்கள் மிக நன்றாகத் தீட்டப்பட்ட வைரமாக இருக்க முடியும்.  தீட்டப்படுவது என்பதற்கு அர்த்தம், கடின உழைப்பு.

வெற்றி மனப்பான்மை!

வாழ்வின் எந்தவொரு கணத்திலும் நாம் தோல்வியடைய விரும்புவதில்லை. எந்தவொரு போட்டியிலும் வெற்றியைப் பெறுவதற்கும், எந்தவொரு இடத்திலும் முதலாவதாக, உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவதற்கும், முன்னேறுவதற்கும் நாம் விரும்புகிறோம். இது தவறான எண்ணமல்ல. தான் ஒரு திறமை மிகுந்தவனாக ஆகவேண்டும், தன்னால் முடிந்த அளவு வாழ்வில் உயர்ந்த இடத்துக்கு வரவேண்டும் என்ற இலட்சியத்தோடு முயற்சி செய்வது மிகவும் நல்ல விடயம். இவ்வாறாக முன்னேற வேண்டுமென்ற மனப்பான்மையே மனதில் வெற்றிக்கான விதைகளைத் தூவி விடுகிறது. பதவிகளில் உயர்ந்த அந்தஸ்தினை நோக்கி, போட்டிகளில் வெற்றிகளை நோக்கி எனப்பல எதிர்பார்ப்புக்கள் மனதில் வேர்விடத் தொடங்குகின்றன. இதில் தவறேதுமில்லை. வாழ்க்கையினை முன்னேற்றகரமான பாதையில் திருப்புவதற்கான ஒரு உந்து சக்தியாக இவ் எதிர்பார்ப்புக்கள் ஆகிவிடுகின்றன. அது போல எப்பொழுதும் சோர்ந்திருக்கும் மனங்களுக்கு 'வெற்றி பெற வேண்டும்' என்ற எண்ணம் மகிழ்வையும், வாழ்க்கை குறித்தான திருப்தியையும் அளிக்கக் கூடியது.

இவ் வெற்றி குறித்தான எண்ணம் மனதில் தோன்றும்போதே நாம் இன்னொன்றையும் மனதின் மூலையில் இருத்த வேண்டும். அதாவது இவ் எதிர்பார்ப்புக்கள் எல்லாமே எந்தத் தடங்கலுமின்றி நாம் நினைத்தவாறே இலகுவாக ஈடேறாமலிருக்கவும் வாய்ப்புக்களிருக்கின்றன என்பதனையும் மனதில் இருத்த வேண்டும். நமது வாழ்வின் எந்தவொரு போட்டியிலும், முயற்சிகளிலும் முதலாவது, இரண்டாவது என வகைப்படுத்தப்படும் போது எல்லாவற்றிலுமே முதலாவதாக வரும் சாத்தியங்கள் குறைவு. இவ்வாறாகச் சில தோல்விகளைத் தழுவ நேரிடுவதை நமது எதிர்பார்ப்புக்கள் ஈடேறவில்லை எனவும் கொள்ளலாம். ஆனால் எதிர்பார்ப்புக்கள் ஈடேறாமல் போவதற்கு போட்டிகள் மட்டுமே அவசியமென்றும் சொல்லமுடியாது. யாருடனும், எந்தப் போட்டியும் இல்லாதவிடத்தும், தனது மனதில் வேர்விட்ட எதிர்பார்ப்பொன்று ஈடேறாவிட்டால் அவர் மனதளவில் கோழையானவனாக மாறி உயிரற்ற மனநிலைக்கு மாறிவிடக் கூடும்.

ஆகவே போட்டி என்ற ஒன்று இருந்தாலோ, இல்லாவிட்டாலோ தனது எதிர்பார்ப்புக்கள் ஈடேறா விட்டால் அல்லது, தமது இலட்சியத்தை அடைய முடியாமல் போனால் பலர் நிராசையோடு மனதளவில் உடைந்து போகின்றனர். தொலைக்காட்சிகளில், போட்டி நிகழ்ச்சிகளில் பார்த்திருப்பீர்கள். வெற்றியை அறிவிக்கும் போது துள்ளிக் குதிக்கும் அதே வேளை தோல்வியை அறிவிக்கையில் சம்பந்தப்பட்டவர்கள் சிலர் தாங்க முடியாமல் அழுகின்றனர். சிலர் கோபப்பட்டு நடுவர் குழுவினை அநீதம் விளைவித்ததாகத் திட்டுகின்றனர். இப்படியாக மனதில் ஆசையோடு எதிர்பார்த்த ஒன்று கிட்டாமல் போனால் அதற்கான நமது வெளிப்பாடுகள்தான் நமது மன உறுதியினைப் பற்றி வெளியே சொல்கின்றன

உங்களுக்கு இதுபோன்ற அனுபவங்கள் ஏதேனும் இருக்கின்றதா? போட்டியொன்றில் முதலாவதாக வரமுடியவில்லையென்று, வாழ்வில் ஆவலாக எதிர்பார்த்த ஒன்று கிட்டாமல் போனதென்று சோர்ந்து போய் தைரியமிழந்த அல்லது அதிகமாகக் கோபப்பட்ட சந்தர்ப்பங்கள் உங்கள் வாழ்வில் ஏதேனும் உண்டா? சாதாரண மனிதர்களான எமக்கு இது போன்ற உணர்வுகள் ஏற்படுவது இயல்புதான் எனினும் நமது மனதின் மகிழ்ச்சியை நாமே கொன்று விடுவதைப் போன்ற இவ் உணர்வுகள் மிகத் தீங்கானவை. மிகவும் கோழைத்தனமானவை. 'வெற்றி' என்றால் என்னவென்று அறிந்த மனங்கள் இதுபோல தோல்விகளில் பெரிதாக ஆர்ப்பரிப்பதில்லை. உடைந்து போவதுமில்லை.

ஏதாவதொரு சந்தர்ப்பத்தில், ஒரு போட்டியில் வெற்றிபெற முடியாமல் போனதென்பது தோல்விக்கான முழு அர்த்தமல்ல என்பதனை மனதிலிருத்துங்கள். வெற்றி மனப்பான்மையோடு, ஒரு எதிர்பார்ப்போடு தைரியமாக அப் போட்டியில் கலந்து கொண்டீர்களே, அதுதான் வெற்றி. உங்களிடம் இருக்கும் திறமை மற்றும் மற்றப் போட்டியாளர்களின் திறமை இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதற்காக போட்டிகள் நிகழ்த்தப்படுகின்றன எனக் கொண்டாலும் வெற்றி, தோல்வி இரண்டையும் எதிர்கொள்ளும் மனப்பான்மையே உங்கள் உண்மையான திறமையை வெளிக்காட்டுகிறது. வெற்றியில் பெரிதாக ஆர்ப்பரிக்காமலும், தோல்வியில் முழுதாக உடைந்து போகாமலும் இரண்டையும் அமைதியாக, சமமாக எதிர்கொள்வதே உண்மையான வெற்றியெனப்படுகிறது.

ஆனால் நாம் காணும் இன்றைய சமூகத்தில் அநேகமான போட்டிகளில் அடுத்தவர்களைத் தோல்விக்குள்ளாக்கி, அவர்களைக் கீழே அல்லது பின்னால் தள்ளிவிட்டு தான் மட்டும் எல்லா விதத்திலும் எல்லா இடங்களிலும் உயர்ந்த இடத்துக்குச் செல்லவேண்டும் என்ற மனப்பான்மையே மிகைத்திருக்கிறது. அதுவல்ல வெற்றி. அதுவல்ல உண்மையான முன்னேற்றம். ஒருவர் வெற்றியாளராக, இன்னொருவரைத் தோற்கடிக்க வேண்டுமென்பதில்லை. உண்மையான வெற்றியாளரெனப்படுபவர் இன்னொருவரைத் தோல்விக்குள்ளாக்கி, முதலாவதாக வருபவர் அல்லர். தான் பெற்ற வெற்றி, தனது திறமையை உணர்ந்து அவற்றை இன்னும் வளரச் செய்தபடி எந்தவொரு தேவையற்ற வீணான எதிர்பார்ப்புக்களுமின்றி மன உறுதியோடு, தன்னம்பிக்கையோடு, இலட்சியத்தோடு முன்னே செல்லும் மனிதனே உண்மையான வெற்றியாளர் எனப்படுகிறார்.

உலகின் எல்லா மனிதர்களுக்கும் தமக்கென்று ஏதாவதொரு தனித் திறமையாவது இருக்கும். அத் திறமையை மேலும் மேலும் கூர் தீட்டி வளர்த்துக் கொள்வதே வெற்றி மனப்பான்மை எனப்படுகிறது. அதுவல்லாமல் தன்னுடன் போட்டியிட்டுத் தோற்ற ஒருவரிடம் 'எனது திறமை, உனது திறமையை விடவும் அதிகமாக உள்ளது' எனச் சொல்லிக் காட்டுவது அல்ல. அடுத்த போட்டியின் போது இக்கருத்து மாறுபடக் கூடும். இன்றைய வாழ்வில் பலர் போட்டிகளில் வெற்றிபெறக் கூடும். தமது இலட்சியங்களை ஈடேற்றிக்கொள்ளக் கூடும். தமது திறமைகளை வெளிக்காட்டுவதில் பெரும் மகிழ்ச்சி அடையக் கூடும். ஆனால் பெரும்பாலாக இவ் வெற்றிகளைப் பெறுபவர்கள் தமது திறமையைக் குறித்தல்லாமல் அடுத்தவரைத் தோற்கடித்தது குறித்தே மகிழ்ச்சியடைகின்றனர். இது உண்மையில் தோல்வி மனப்பான்மையே தவிர வெற்றிமனப்பான்மை அல்ல.

ஆகவே, ஒரு சந்தர்ப்பத்துப் போட்டியில் வெற்றி பெறுவதை மட்டுமே வாழ்வின் இலக்கெனக் கொள்ளாமல் முழு வாழ்வையும் தமது திறமைகளால் வெற்றிகொள்வதே வாழ்வின் உண்மையான வெற்றியெனக் கொள்ள வேண்டும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தோல்வியைத் தழுவ நேரும் பட்சத்தில் அதற்காக மனமுடைந்து சோர்ந்து போகக் கூடாது. எதிர்பார்ப்பு ஈடேறவில்லையென துயரப்பட்டு மனமுடைந்து போகக் கூடாது.

எல்லோருக்குமே அவ்வப்போது சில எதிர்பார்ப்புக்கள் ஈடேறாமல் போவது இயற்கை. ஆனால் அதற்காக நகரும் வாழ்க்கையை நிறுத்தி வைக்க முடியாது. அவ்வாறாக எதிர்பார்ப்பு ஈடேறாச் சமயங்களில் தம்மை வெளிக்காட்டிக் கொள்ளாத வாழ்த்தொன்று உங்களை வந்தடைந்ததாக எண்ணிக் கொள்ளுங்கள். 'அன்று நான் தோற்றுப்போனது நல்லதுதான்' எனப் பின் வரும் காலங்களில் நீங்களே சொல்லக் கூடுமான அளவுக்கு வெற்றியை அவ் வாழ்த்துக்கள் சுமந்து வந்திருக்கும்

எனவே 'தோல்வியடைந்து விட்டோம்' என்ற சோர்வு மனநிலையை முழுவதுமாக மனதிலிருந்து அகற்றி, தொடர்ந்த எதிர்பார்ப்புக்களை இல்லாமலாக்காது 'என்னைத் தோற்கடிக்க நான் விடமாட்டேன்' என்ற தன்னம்பிக்கையோடும் உறுதியோடும் உங்கள் பாதங்களை முன்வையுங்கள். அடுத்தவரை விழச் செய்வதல்ல, தான் விழாமல் முன்னேறுவதே உண்மையான வெற்றி என உணருங்கள்.அவ் உணர்விருக்கும் நீங்களே வெற்றிமனப்பான்மை கொண்ட உண்மையான வெற்றியாளர்.

காய்ச்சலின் அளவை கண்டறியும் வெப்பமானியை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!

 

உங்களுக்குக் காய்ச்சல் வந்தபோது வாயில் ஒரு கருவியைவைத்து வெப்பநிலையை அளவிட்டிருப்பார்களே... அதுதான் வெப்பமானி (Thermometer). தெர்மாமீட்டர் என்பது வெப்பத்தை அளக்கும் கருவி. அதனால், அதற்கு வெப்பமானி என்று பெயர். காய்ச்சலைப் பார்க்கப் பயன்படுத்து கிளினிக்கல் தெர்மாமீட்டர் (Clinical Thermometer). ஜெர்மன் மருத்துவர் கார்ல் உன்டர்லிச் 1868-ல் 'காய்ச்சல் என்பது ஒரு நோயல்ல; நோயின் அறிகுறி என்ற தன் ஆய்வை வெளியிட்டார். அவர், உடல் வெப்பநிலைக்கும் பலவித நோய்களுக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்தார். வெப்பமானியை உருவாக்கியதும் கார்ல் உன்டர்லிச்தான்.


வெப்பமானியைக் கையில் வைத்துக்கொண்டு (ஜாக்கிரதை... கீழே விழுந்துவிடப்போகிறது) உற்றுப்பாருங்கள். என்ன தெரிகிறது? ஒரு முனையில் சற்றே குறுகலாக, பளபளவென்று தெரிகிறதே அதுதான் பாதரசம் (Mercury). மீதமிருக்கிற பகுதியை நன்கு பாருங்கள். நாம் கையில் வைத்துக்கொண்டு பார்க்கிற கண்ணாடிக் குழாய்... அதன்மேல் கோடு கோடாகப் போட்டு, ஏதோ சில எண்கள் தெரியும். இதற்கும் உள்ளே இன்னொரு மிகச்சிறிய குழாயும் இருக்கும்.

வெப்பத்தினால் பாதரசம் விரிவடையும். அப்படி விரிவடையும் பாதரசம், சிறிய இரண்டாவது குழாயில், வெப்பத்தின் அளவுக்குத் தக்கவாறு ஏறும். வெளியில் இருக்கும் கோடுகளும் எண்களும் வெப்பத்தின் அளவைக் குறிப்பவை. எந்த அளவுக்குப் பாதரசம் ஏறுகிறதோ, அந்த இடத்தில் என்ன கோடு, எண் என்பதைப் பார்த்து, அந்த அளவு வெப்பம் என்று கணிக்கப்படுகிறது.

கிளினிக்கல் தெர்மாமீட்டரில் 95 முதல் 110 வரை என்று இருக்கும். இதற்கு அர்த்தம் 95 டிகிரி F முதல் 110 டிகிரி F என்பது. டிகிரி என்பது பாகையைக் குறிக்கும். F என்பது Fahrenheit. சிலவற்றில் இதற்குப் பதிலாக 35 டிகிரி C முதல் 43.5 டிகிரி C வரை குறித்திருக்கும். C என்பது Celsius. அது என்ன, Fahrenheit அல்லது Celsius..? இவை அளவை முறைகள்.

ஃபாரன்ஹீட் அளவு முறையில் தண்ணீரின் உறை (freezing point) நிலை 32 டிகிரி F, தண்ணீரின் கொதிநிலை (boiling point) 212 டிகிரி F ஆகும். உடலின் சாதாரண வெப்பநிலை 98.6 டிகிரி F, இதுவே செல்சியஸ், அளவு முறையில், தண்ணீரின் உறை நிலை 0 டிகிரி C ; கொதிநிலை 100 டிகிரி C; உடலின் சாதாரண வெப்பநிலை 37 டிகிரி C. கேப்ரியல் டேனியல் ஃபாரன்ஹீட் என்ற ஜெர்மானியர் 1724-ம் ஆண்டு தான் அமைத்த வெப்பமானியில் தண்ணீர் பனிக்கட்டியாகும் வெப்பத்தை 32 டிகிரி என்றும், உடலின் வெப்ப அளவை 96 டிகிரி என்றும் நிர்ணயித்தார். இதுவே ஃபாரன்ஹீட் அளவையாகும்.

வெப்பமானியில் ஏன் பாதரசம் பயன்படுத்தப்படுகிறது?

பாதரசம் திரவநிலையில் உள்ள உலோகம். அதனுடைய கொதிநிலை 357 டிகிரி C. அதனால், பிரச்னை இல்லாமல் பயன்படுத்தலாம். தண்ணீரைப் பயன்படுத்துகிறோம் என்று வைத்துக்கொள்வோம். 100 டிகிரி C வெப்பநிலையில் தண்ணீர் கொதித்துவிடும். அதைத் தாண்டி வெப்பம் ஏறினால், சரியாக அளவு காட்டாது.

பாதரசம் எந்த வெப்ப நிலையிலும் (357 டிகிரி C) வரை ஒரே மாதிரியாக விரிவடையும். அதனால், அளவிடுவது எளிது. கண்ணாடிக் குழாயில் பார்ப்பதற்குப் பளிச்சென்று பாதரசம் தெரியும்.

ஏன் கிளினிக்கல் தெர்மா மீட்டரில் 95 டிகிரி F - 110 டிகிரி F அல்லது 35 டிகிரி C - 45.5. டிகிரி C வரையான அளவுகள்தான் உள்ளன?

உடலின் சாதாரண வெப்ப நிலை 98.6 டிகிரி F அல்லது 37 டிகிரி C. காய்ச்சல் ஏற்பட்டால், 104 டிகிரி F அல்லது 105 டிகிரி F (40 டிகிரி C / 40.5 டிகிரி C) வரைதான் அதிகபட்சம் வெப்பம் ஏறும். அதற்குள்ளாகவே பலவித அறிகுறிகள் தோன்றிவிடும். அதையும்விட (சில குறிப்பிட்ட காலங்களில்) வெப்பம் அதிகமானால்கூட 110 டிகிரி F-க்கு மேல் ஏறாது. எனவே, உடல் வெப்பத்தை அளக்கப் பயன்படும் கிளினிக்கல் தெர்மா மீட்டரில் அதற்குமேல் தேவையில்லை.

உடலின் சராசரி வெப்பம் எல்லோருக்கும் 98.6 டிகிரி F தானா?

சிலருக்கு 98.4 டிகிரி F முதல் 99.4 டிகிரி F வரை இது வேறுபடலாம். இதனால் பிரச்னை ஒன்றுமில்லை. காய்ச்சல் இருக்கிறதா என்று பார்க்கும்போது, பெரியவர்களுக்கு வெப்பமானியை வாயில் வைப்பதைப் பார்த்திருக்கிறோம். நாக்குக்கு அடியில் வைத்தால், உடலின் சரியான வெப்ப நிலை (Core Temperature) கிடைக்கும்.

ஆனால் சிறிய குழந்தைகள், அதிகக் காய்ச்சலில் இருப்பவர்கள் - இவர்களால் நாக்குக்கு அடியில் சரியாக தெர்மா மீட்டரை வைத்துக்கொள்ள முடியாது. மேலும், வெப்பமானியைக் கடித்துவிட்டால் பாதரசம் வாய்க்குள் போய்விடும். எனவேதான், அக்குளில் வெப்பமானி வைக்கப்படும். அக்குள் வெப்ப நிலையோடு 1 டிகிரி F அல்லது அரை டிகிரி C கூட்டினால்தான், சரியான உடல் வெப்பநிலை கிடைக்கும். அக்குளில் வெப்பமானி காட்டுவது 99.6டிகிரி F என்றால், அப்போது உண்மையான உடல் வெப்பம் 100.6 டிகிரி F.

நண்பர்களே... பாதரசத்தில் செய்யப்பட்ட பழைய மாடல் தெர்மாமீட்டர்கள் மாறி, இப்போதெல்லாம் காய்ச்சலைக் கண்டுபிடிக்க, நிறம் மாறும் பிளாஸ்டிக் பட்டைகள் வந்துவிட்டன. கலர் கலர் பட்டைகள் - சாதாரணம் ஒரு கலர், காய்ச்சல் ஒரு கலர், அதிகக் காய்ச்சல் ஒரு கலர் - இப்படி வந்துவிட்டன. தற்போது டிஜிட்டல் தெர்மாமீட்டர்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, இந்தியாவில் விற்பனையாகின்றன. உடல் வெப்பநிலை அளவை இது 'எலெக்ட்ரானிக் டிஸ்ப்ளேயில் எண்ணாகவே காட்டிவிடும்.

கலகலப்பு 2' படத்தில் ஸ்ரீதிவ்யா?

 

ஹீரோவாக நடித்துக்கொண்டு இருந்த சுந்தர்.சி மீண்டும் இயக்குநர் அடையாளத்தோடு களம் இறங்கிய படம் 'கலகலப்பு'.

விமல், அஞ்சலி, சிவா, ஓவியா நடித்த இப்படம் காமெடியில் அப்ளாஸ் அள்ளியது.சுந்தர்.சி காமெடிப் படம் எடுத்து மீண்டும் தன் இமேஜை உயர்த்திக்கொண்டார்.

இப்போது திகில் நிறைந்த பேய்ப் படமாக 'அரண்மனை' படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.ஹன்சிகா, ஆண்ட்ரியா, லட்சுமிராய் ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர்,

இதற்கடுத்து 'கலகலப்பு 2' எடுக்கத் திட்டமிட்டு இருக்கிறார் சுந்தர்.சி.

விமல், சிவா, ஓவியா என்று 'கலகலப்பு' படத்தில் நடித்தவர்களே இதிலும் நடிக்க இருக்கிறார்கள். அஞ்சலிக்குப் பதிலாக ஸ்ரீதிவ்யா நடிக்க வாய்ப்பு இருக்கிறதாம்.

ஸ்ரீதிவ்யா ஹோம்லி , கிளாமர் இரண்டுக்கும் செட்டாகிறார். காமெடியும் வொர்க் அவுட் ஆகிவிட்டால், தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தைப் பிடித்துவிடுவார் என்று சொல்லப்படுகிறது.

ஸ்ரீதிவ்யா இப்போது 'பென்சில்', 'ஈட்டி', 'காட்டு மல்லி', 'நகர்புறம்' ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால், 'கலகலப்பு 2' படத்தில் ஸ்ரீதிவ்யா நடிப்பது குறித்து அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

ஃபிட்டான வயிற்றைப் பெறுவதற்கான சில டயட் டிப்ஸ்...


நாம் ஒவ்வொருவரும் நமது உடல் நலத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு இருக்கின்றோம். அதிலும் குறிப்பாக சினிமா ஹீரோக்கள் போன்று சிக்ஸ் பேக் அடைவதற்கு இன்றைய ஆண்கள் பெரிதும் ஆசைப்படுகின்றனர். அதற்காக அவர்கள் தங்களை மிகவும் வருத்தி, சரியாக சாப்பிடாமலேயே, அதனை அடைய முற்படுகின்றனர். அவ்வாறு இல்லாமல் சிறந்த எளிய வகையில் தொப்பையை குறைத்து பிட்டாக மாறுவதற்கு பல வழிகள் இருக்கின்றன.


இது சிக்ஸ் பேக் காலமாக மாறிவிட்டாலும், நம்மை நேர்த்தியாக காண்பிப்பது ஆரோக்கியமான பிளாட் ஆப்ஸ் (Flat Abs) தான். நமது உடலை ஆரோக்கியமாகவும், பிட்டாகவும் வைப்பதற்கும், தட்டையான வயிற்றை பெறுவதற்கும் அதிக முயற்சி தேவைப்படும். மேலும் உடல் மொழியை நேர்மாறான முறையில் மாற்றும் தட்டையான வயிற்றை அடைவதற்கு டயட், வாழ்க்கை முறை, உடல்நலப் பொருத்தம் போன்றவற்றில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.

ஆரோக்கியமான உடல் நலத் தகுதியான ஆண்களையே பெண்கள் அதிகம் விரும்புவார்கள். தொப்பை வயிறு பெண்கள் மத்தியில் உங்கள் மதிப்பைக் குறைக்கச் செய்யும். உங்கள் பிளாட் ஆப்ஸ் உங்களின் அதிக உழைப்புத் தன்மையையும் அழகாக காண்பிக்கும் விருப்பத்தையும் வெளிப்படுத்தும்.
நீங்கள் திருமணமானவராக இருந்தாலும், இது உங்களின் உடல்நலத்தின் உறுதியையும் உங்கள் மனைவியுடன் செல்லும் போது அழகாகக் காண்பிக்கத் தூண்டும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தும். பல கணக்கெடுப்புகளின் படி, பெண்கள் தொப்பை வயிறு உள்ளவர்களை விட, ஒல்லியான உடம்புள்ள ஆண்களையே பெரிதும் விரும்புகின்றனர் என்று தெரிவிக்கின்றது.

நீங்கள் இந்த பிளாட் ஆப்சை பெறுவதற்காக தசைகளை வருத்தியோ அல்லது தினமும் உடற்பயிற்சி கூடத்திற்கோ செல்ல வேண்டாம். உங்கள் வாழ்க்கையில் சில எளிதான ஊட்டச்சத்து நிரம்பிய உணவை சேர்த்து வந்தால், உங்களின் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். கார்போஹைட்ரேட் மற்றும் எண்ணெய் கொழுப்பை குறைத்து, ஊட்டச்சத்து நிரம்பிய உணவை உட்கொள்ள வேண்டும். நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் நிறைந்துள்ள உணவை தண்ணீருடன் சேர்ந்து தினமும் உட்கொள்ள வேண்டும். தொப்பையை குறைக்க உங்கள் உணவில் தினமும் பச்சை காய்கறிகளும், நிறைய பழங்களும் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக வயிற்றில் சேரும் செரிமானமாகாத கொழுப்பை தடுக்க எளிதாக செரிமானமாகும் உணவு வகையை சாப்பிட வேண்டும்.


முட்டையின் வெள்ளைக்கரு

 புரோட்டீன் மற்றும் தேவையான அமினோ அமிலங்களின் மூலமாக இருப்பது முட்டையாகும். முட்டையின் வெள்ளை கருவை உங்கள் காலை உணவில் தினமும் சேர்த்து வந்தால், உங்கள் உடலில் புரோட்டீன் அதிகமாவதோடு, நாள் முழுவதும் பசியைக் கட்டுப்படுத்தும்.

க்ரீன் டீ

 நாள் முழுவதும் சர்க்கரை அல்லாத க்ரீன் டீயை பருகவேண்டும். கிரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளதால் அது உங்கள் மெட்டபாளிசத்தை அதிகரித்து கொழுப்பை குறைக்கச் செய்யும். நீங்கள் எவ்வளவு கொழுப்பை குறைகின்றீர்களோ அவ்வளவு குறைவான உடற்பயிற்சியை செய்தால் போதுமானதாகும்.

பாதாம்

 தசை வளர்ப்பிற்கும் பராமரிப்பிற்கும் தேவையான அதிகமான புரோட்டீன், நார்ச்சத்துடன் கூடிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் பாதாமில் உள்ளது. மேலும் இது பசியை சிறந்த முறையில் கட்டுப்படுத்தும் தன்மை வாய்ந்தது.

கெட்டித்தயிர்

 கெட்டித்தயிர் வயிற்றில் உள்ள கொழுப்பை குறைப்பதற்கான உணவு வகைகளில் சிறந்தது ஆகும். கெட்டித்தயிரில் உள்ள ப்ரோபயோடிக் பாக்டீரியா உங்கள் செரிப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்து வயிற்றில் தங்கும் கொழுப்பையும் குறைக்கும்.

கைக்குத்தல் அரிசி

 தொப்பையை குறைக்க நீங்கள் தசை வலுப்படுத்தும் புரோட்டீன் நிறைந்த கார்போஹைட்ரேட்களையும் வைட்டமின்களையும் கொண்ட கைக்குத்தல் அரிசியை அதிகமாக உட்கொள்ள வேண்டும். இதில் நிறைந்துள்ள வைட்டமின் பி கொழுப்புச்சத்தை குறைக்க உதவும்.

கீரைகள்

 தொப்பையை குறைக்க தினமும் உங்கள் உணவில் கீரை வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். பசலைக்கீரை, கேல் மற்றும் லெட்யூஸ் வகைகளில் உள்ள குறைவான கலோரிகள் மற்றும் நார்ச்சத்து உங்கள் பசியை கட்டுப்படுத்தும்.

ஓட்ஸ்

 ஓட்ஸில் அதிக நார்ச்சத்தும் குறைவான கலோரிக்களும் உள்ளது. உங்கள் காலை உணவாக ஓட்ஸ் சாப்பிட்டால் அது நாள் முழுவதும் உங்கள் பசியை கட்டுப்படுத்தி அதிகம் சாப்பிடாதவாறு தடுக்கும்.

தேன் மற்றும் எலுமிச்சை சாறு

 உடலை வலிமையாக்கவும், கொழுப்பைக் குறைக்கவும் தினமும் ஒரு க்ளாஸ் வெந்நீருடன் எலுமிச்சை சாரையும் தேனையும் கலந்து பருக வேண்டும்.

தக்காளி

 உடம்பு எரிச்சல்களை குறைக்கவும், நீர்ச்சத்தை தக்க வைக்கவும் தக்காளி பெரிதும் உதவுகின்றது. லெப்டின் எனப்படும் புரோட்டீன் நிரம்பியுள்ளதால் உங்கள் மெட்டபாலிக் அளவை சரிசெய்து பசியையும் கட்டுப்படுத்த உதவும்.

பூண்டு

 இது செரிமானத்திற்கு மிகவும் நல்லது. உங்கள் வயிற்றை சுத்தமாகவும் கொழுப்புச்சத்து சேர்ந்து விடாமல் தடுக்கவும், செரிமான மண்டலம் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவும்.

நகங்களை நீங்களும் கடிக்கிறீர்களா?

அப்படியாயின் இதைத் தொடர்ந்து படிக்கவேண்டிய கட்டாயம் உங்களுக்கு.

நகங்களை ஏன் தேவையில்லாமல் கடிக்கிறார்கள்? இது பற்றி ஒரு ஆராய்ச்சியே செய்யும் அளவுக்கு இந்நிகழ்வு வந்திருக்கின்றது. சமீபத்தில் கிடைக்கப்பெற்ற ஆராய்ச்சிகளின் பெறுபேறுகளின்படி, குழந்தைகள், சிறுவர்கள் மட்டுமன்றி, வயது வந்தவர்களும் நகங்களைக் கடிக்கும் பழக்கம் உடையவர்களாக இருந்திருக்கின்றார்கள்.

இதில் ஆச்சரியமான விடயம் என்னவெனில் வயது வந்தவர்களில் 20வீதமானவர்கள் நகங்களையோ அல்லது பென்சில் போன்ற பொருட்களையோ கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள்.

இதில் கொஞ்சமாவது நாம் ஆறுதலடையவேண்டிய விடயம் என்னவெனில், தங்களது செயல்களில் வெற்றியடையும் மனிதர்களே அதிகமாக நகங்களைக் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள் என ஆராய்ச்சியாளர்கள் கூறியிருப்பது.

நகங்களைக் கடிக்கும் 109 பேரினை வைத்து ஆராய்ச்சி செய்ததில், தங்களை மற்றவர்கள் மதிக்காமல் ஒதுக்குகிறார்கள் என்ற பயம், தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாக அவர்கள் இருந்திருக்கின்றார்கள்.

மேலும் இவர்கள் தங்களுக்குப் பாதகமான சூழ்நிலைகளில் தீவிரமாக நகங்களைக் கடிக்கும் பழக்கத்தையும் அதே நேரம் தங்களுக்குச் சாதகமான சூழ்நிலைகளில் குறைவாக நகங்களைக் கடிக்கும் பழக்கத்தையோ அன்றி நகங்களைக் கடிக்காமலேயே கூட இருக்கும் தன்மையையும் கொண்டிருந்தார்கள்.

தங்களது கோபங்களை மற்றவர்கள் மீது காட்டமுடியாத ஒரு இயலாமை நிலையிலே தங்கள் நகங்கள் மீது கோபங்களைக்காட்டி விடுபவர்களும் உண்டு.

ஆராய்ச்சியாளர்களின் தகவல்களின்படி பார்க்கும் போது, நகம் கடிப்பவர்களே அதிகமாகப் புகைப்பவர்களாகவும் இருக்கின்றார்கள். நகம் கடிக்கும் பெண்கள் மென்மையாக இருக்கிறார்கள். அதே வேளையில் நகம் கடிக்கும் ஆண்களோ முரட்டுத்தன்மை உள்ளவர்களாக இருக்கிறார்கள். நகங்களைக் கடிப்பதால் நகங்களைச்சுற்றி விரல்களில் கண்களுக்குப் புலப்படாத புண்கள் ஏற்படுகின்றன. எனவே இந்த நிகழ்வை இல்லாமற் செய்வதற்கு மருத்துவக் காப்புறுதிகள் உதவவேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கேட்டிருக்கிறார்கள்.

பாதாம் சூப் - சமையல்!


 பாதாமைக் கொண்டு சூப் செய்து சாப்பிட்டால், அது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதுடன், உடல் எடையை குறைக்கவும் உதவும்.

அதுமட்டுமின்றி இந்த சூப் வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும். இப்போது அந்த பாதாம் சூப்பை எப்படி செய்வதென்று பார்ப்போம்...


தேவையான பொருட்கள்:

பாதாம் - 1/4 கப்

 வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

 சோள மாவு - 4 டேபிள் ஸ்பூன்

 தண்ணீர் - 4 கப்

 பால் - 1 கப்

 உப்பு - தேவையான அளவு

 மிளகு தூள் - 1/8 டீஸ்பூன்

 மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

 குங்குமப்பூ - 1 சிட்டிகை


 செய்முறை:

முதலில் பாதி பாதாமை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். மீதமுள்ளதை பால் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், நறுக்கி வைத்துள்ள பாதாமை சேர்த்து பொன்னறிமாக வறுக்க வேண்டும்.

பின்பு அதில் சோள மாவு சேர்த்து லேசாக கிளறி, பின் தண்ணீரை மெதுவாக ஊற்றி தொடர்ந்து கெட்டி சேரவிடாமல் கிளறி, நன்கு கொதிக்க விட வேண்டும்.

கலவையான நன்கு கொதித்ததும், அதில் பால் சேர்த்து அரைத்து வைத்துள்ள பாதாமை சேர்த்து, உப்பு, மிளகு தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, தீயை குறைவில் வைத்து, 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, மேலே குங்குமப்பூவை தூவினால், சுவையான பாதாம் சூப் ரெடி!!!

வாழக்கற்றுக்கொள்ளுங்கள்...?

தண்ணீர் ஏன் அழுக்கடைவதில்லை? ஏனென்றால் அது ஓடிக்கொண்டே இருப்பதால். தன்ணீர் ஏன் அழுகிப் போவதில்லை? ஏனென்றால் அது ஓடிக் கொண்டிருப்பதால் நீர் ஆறாக ஒடி, நதியாகி, கடலாகி பிறகு பெரிய சமுத்திரமாக எப்படி மாறுகிறது? அது ஓடிக் கொண்டே இருப்பதால். அதனால் மனிதனே நீ தேங்கி நிற்காதே. ஓடிக்கொண்டே இரு. முன்னேறிக் கொண்டே இரு.

பொதுவாக இன்றைய இளைஞர்களிடம் காணப்படும் மிக மோசமான குணம் என்ன வென்றால் சீக்கிரம் மனத்தளர்ச்சியடைந்துவிடுவது தான். தன்னம்பிக்கையுடன் போராடுவதில் சில சமயம் அவர்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விடுகிறது.. வாழ்வு என்பது ஏதோ வந்ததைப் பெற்றுக் கொள்வதல்ல. வாழ்வு நீரோட்டமல்ல வாழ்வு எதிர்நீச்சல். அது ஒரு போராட்டம். வாழ்வு ஒரு துடிப்பு. அடங்கி ஒடுங்கி அமிழ்ந்து போவதல்ல தாங்கள் செய்யும் வேலையில் தான் வேலைபளு, மன அழுத்தம் அதிகமாக உள்ளது என்று கூறிக் கொள்ளும் இளைய சமுதாயம் சிந்திக்க வேண்டியது நிறைய உள்ளது. எதில் தான் இல்லை கஷ்டம். துப்புரவு தொழிலாளி முதல் குளிர்சாதனம் பொருத்தப்பட்ட அறையில் வேலை செய்யும் பெரிய அதிகாரி வரை அவரவர் தொழிலில் கஷ்டம் இருக்கத்தான் செய்கிறது. அதை நாம் எடுத்துக் கொள்ளும் விதத்தில்தான் உளளது.

உண்மையான மகிழ்ச்சி என்பது வெற்றியில் இல்லை. அதைப் பெறுவதற்காக நாம் மேற்கொள்ளு கின்ற கடின உழைப்பிலேயே உள்ளது என்கிறார் பெர்னாட்ஷா. சிரத்தை இல்லாமல் எதையும் அடைய முடியாது. ஓர் இந்தியன் இரண்டு ஜப்பானியனின் மூளைபலம் கொண்டவன். ஆனால் இரண்டு இந்தியர்களின் வேலையை ஒரு ஜப்பானியன் செய்து வருகிறான் என்று ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறுகிறார். காரணம் என்னவென்றால் இந்தியர்களிடம் சிரத்தையோடு வேலை செய்யும் மனப்பக்குவம் இல்லாமலிருப்பதே என்றும் கண்டறிந்தார். தன்மீது நம்பிக்கையும் தான் செய்யப் போகிறகாரியத்தின் மீது உண்மையான ஆர்வமும் இல்லாததுதான் சிரத்தை இல்லாமல் போவதன் காரணம் ஆகும். வெளியில் இருந்து உனக்குள் திணிக்கப்படும் எந்த உந்துதலும் உண்மையான ஆர்வமாக மாறமுடியாது. உன் ஆர்வமும் நம்பிக்கையும் உனக்குள்ளே இருந்து வர வேண்டும்.

வாழ்க்கையில் நமக்கு துன்பங்கள் வருவது அவற்றைநாம் அனுபவிப்பதற்காக அல்ல. அரிசிக்குப் பாதுகாப்பாக உமி இருப்பது போல, பலாப்பழத்துக்குப் பாதுகாப்பாக அதன் தோல் இருப்பது போல, ரோஜா பூவுக்குப் பாதுகாப்பாக முள் இருப்பது போல நாம் அடையக் கூடிய இன்பங்களுக்கு பாதுகாப்பாக இறைவன் துன்பங்களை அமைத்து வைத்திருக்கிறான். இன்று, தற்கொலைகள் அதிகமாகி வருவதற்கு காரணம் தனக்கு வரும் துன்பம்தான் உலகிலேயே பெரியது என்று தாங்களாகவே முடிவு செய்து கொண்டு அவசர அவசரமாக உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். “தம்மிலும் கீழோரை நோக்குக” என்றவரிகளை ஏனோ மறந்து விடுகிறார்கள்.

தேர்வில் தோல்வி என்றால் தற்கொலை. காதலில் தோல்வி-அது வெறும் இனக்கவர்ச்சி யாக கூட இருக்கலாம். இவர்களாகவே அதை தெய்வீகக் காதலாக நினைத்துக் கொண்டு அந்த மாயையிலிருந்து விடுபடாமல் இறைவன் கொடுத்த அற்புதமான மானிடப் பிறவியை அற்பக் காரணங்களுக்காக மாய்த்துக் கொள்கிறார்கள். என்னே! இவர்களின் பரிதாப நிலை! மகிழ்ச்சியைத் தேடி அலையக்கூடாது. துன்பத்தைக் கண்டு ஓடக் கூடாது. இந்த மனப்பான்மையை வளர்த்துக் கொண்டாலே நிம்மதியான வாழ்வு நிலைத்து நிற்கும்.

தள்ளி நின்று பார்க்கும் வரை எல்லாமே பிரச்சனைதான். துணிந்து நெருங்கினால் அது உன் நண்பனாகக் கூட மாறிவிடும். “நான் எதை மேற்கொண்டேனோ அதில் வெற்றி பெற்றேன்”, காரணம் அதை நான் மனப்பூர்வமாக விரும்பினேன், என்றான் மாவீரன் நெப்போலியன். அவனது வளர்ச்சிக்கு அவனது ஈடுபாடே காரணமாக அமைந்திருந்தது. இது வரைதான் என்னால் முடியும். இதற்கு மேல் என்னால் முடியாது என்று மனதை மட்டப்படுத்தி வைத்திருப்பதை விட்டுவிடுங்கள். “வானமே எல்லை” என்று யாராவது சொன்னால், “வானந்தானா எல்லை? என்றகேள்வி கேளுங்கள்.

ஒரே சிந்தையில் ஒரு வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் அந்த வேலையின் தரம் சற்றுக் குறைய நேரிடலாம். அதனால் உங்கள் மனதை கொஞ்சம் வேறு மகிழ்ச்சியான நிலைக்கு மாற்றுங்கள். அதாவது நல்ல இசையைக் கேட்பது, நல்ல புத்தகங்களைப் படிப்பது, கொஞ்சம் காலாற எங்கேனும் நடந்துவிட்டு வருவது போன்றவை. “Learn to Combine relaxation with activity” என்று கூறுகிறார் ஆல்டஸ் என்ற அறிஞர்.

வாழ்க்கை என்பது வாழ்ந்து தீர வேண்டிய ஒரு வி‘யம். அதை இப்படித்தான் வாழணும் என்று மனதில் ஒரு வரைமுறையை, நியதியை, சில கொள்கைகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு வாழ வேண்டுமே தவிர கற்பனையாக மனதில் சஞ்சாரம் செய்வதை ஏற்றுக் கொள்ளக்கூடாது. அந்த கற்பனை நடைமுறைக்கு வராதபோது, மனம் ஏமாற்றம் அடைந்து, அதை தோல்வியாக எடுத்துக் கொள்கிறது.

தன் மீது எறியப்படும் கற்களை தான் கட்டும் வீட்டுக்கு அடிக்கல்லாகப் பயன்படுத்திக் கொள்கிறவன் தொடர்ந்து வெற்றிகளைப் பெற்றுக் கொண்டிருப்பான். வாழ்க்கை சிலருக்கு இனிமையாக இருப்பதற்கு காரணம் அவர்களது அணுகுமுறையும் சூழ்நிலைகளும் தான். சூழ்நிலைகளை நாம் குறைகூறமுடியாது. அணுகுமுறை தவறாக இருக்கலாம்.

நாம் வாழ்க்கையை நேசிக்கப் பழக வேண்டும். அதற்கு முதலில் உங்களையே நீங்கள் நேசிக்கப் பழக வேண்டும். உங்களை நீங்கள் நேசிக்கப் பழகினால் உலகம் உங்களுக்கு இனிமையானதாக காட்சியளிக்கும். அப்பொழுது நீங்கள் எல்லாவற்றையும் ரசிக்க ஆரம்பிப்பீர்கள். உங்களைச் சுற்றி இருக்கும் எல்லாமே உங்களுக்கு ஒரு கவிதையாக தோன்றும்.

துன்பங்கள் வந்து கொண்டே இருக்கும்
 

துணிவால் துன்பங்களை தூளாக்க வேண்டும்
 

உபத்திரவங்கள் வந்து கொண்டே இருக்கும்
 

உழைப்பால் அவைகளை உதைத்து தள்ள வேண்டும்
 

மனக் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும்
 

மதி நுட்பத்தால் அவைகளை மடக்கித்தள்ள வேண்டும்
 

பணக் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும்
 

படாதபாடு பட்டு பணக்கஷ்டத்தை துரத்தி அடிக்க வேண்டும்.

பெரிய நம்பிக்கை.........!

உலகில் பெரிய காரியங்களைச் செய்தவர்கள் எல்லோருமே தங்களுடைய நம்பிக்கையை சிறிய செயல்களில் செலுத்தி வீணாக்கி விடவில்லை.

இதற்கு மாறாக நம்பிக்கையை பெரிய செயலில் செலவிடுவதே வாழ்வின் நோக்கமாகக் கொண்டிருந்து, அதற் காக ஓயாது பாடுபட்டு முயன்று வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

ஜான் பயர்டு என்பவர் தான் டி.வி.யைக் கண்டு பிடித்தார். அவருடைய நம்பிக்கை எவ்வளவு பெரியதாகவும், அளவு கடந்ததாகவும் இருந்தது என்பதனை உணர்ந்து கொண்டாலே போதும்.

நம்முடைய நம்பிக்கையை எதில் வைத்து எப்படி செயல்பட வேண்டும் என்ற உண்மையை உணர்ந்து கொள்ள முடியும்.

ஜான் பயர்டின் இளமைப் பருவத்திலே பொறிகளை உருவாக்க வேண்டும் என்றஎண்ணம் இருந்தது. இந்த எண்ணத்தினால் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து மின் இயல் கல்வியைக் கற்றார்.

பின்பு ஒரு தொழிற்சாலையில் பொறியியல் வல்லுநராகப் பணியாற்றினார். அதன் பின்பு ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆவலில் கால் உறையை தயாரித்தார்.

அத்துடன் காலணிகளுக்கான மையும் உற்பத்தி செய்தார். ஆனாலும் அவற்றில் லாபம் கிடைக்கவில்லை. கடுமையான உழைப்பின் பயனாக உடல் தளர்வுற்று நோய் ஏற்பட்டது.

உடல்நலம் நன்றானதும் மறுபடியும் பழச்சாறு செய்யும் தொழிலை மேற்கொண்டார். அதிலும் எதிர் பார்த்த பலன் கிடைக்கவில்லை.

இனிமேல் தொழில் தொடங்க வேண்டாம் என்றமுடிவில் சில கம்பெனிகளிடம் பணிபுரிந்தார். போதுமான வருவாய் கிடைக்கவில்லை.

அதன் பிறகு எப்படியும் டி.வி.யை கண்டு பிடிக்க வேண்டும் என்று விடாப் பிடியாகச் செயல்பட நம்பிக்கையுடன் ஆரம்பித்தார்.

தேநீர் தயாரிக்கும் ஒரு பாத்திரமும் ஒரு தகர டப்பாவுமே ஆய்வுக்கருவி களாக அமைத்து ஆராய்ச் சியைத் தொடங்கினார்.

இரவு பகலாக ஆராய்ந்தார். எண்ணற்ற இடுக்கண்களையும் ஏமாற்றங்களையும் தோல்வி களையும் தாங்கிக் கொண்டார்.

வெற்றி பெற்றே தீருவது என்றதிடமான நம்பிக்கை யோடு ஆண்டு கணக்கில் ஆராய்ச்சி தொடர்ந்து நடத்தினார்.

இந்தச் சமயத்தில் அவருக்குப் பணம் தேவைப் பட்டது. பலரிடம் உதவி கேட்டார். இவருடைய வெற்றி யில் நம்பிக்கை வைத்து எவரும் பணம் தர முன்வரவில்லை.

ஆனால் அவருக்கோ தன்னுடைய ஆராய்ச்சியில் முழுமையான நம்பிக்கை இருந்தது பசியோடும் பட்டினி யோடும் வேலை செய்தார். இன்னல்களை எல்லாம் பொறுத்துக் கொண்டார்.

தன் முன்னே வைத்து ஆய்வு நிகழ்த்திக் கொண்டிருந்த பொம்மையின் உருவம் மங்கலாகத் திரையில் விழுந்ததும் அவருக்கு எற்பட்ட ஆனந்தத்திற்கு அளவே இல்லை.

பொம்மையை வைத்து ஆராய்ச்சி நடத்தி வெற்றி கண்ட அவர் மனிதனையும் முன்னே நிறுத்தி ஆராய்ச்சியில் வெற்றி காண வேண்டும் என்ற ஆவல் கொண்டார்.

உடனே செயல்பட ஆரம்பித்து மாடிப் படியிலிருந்து கீழே இறங்கி கண்ணில் பட்ட சிறுவனை அழைத்து பொம்மை இருந்த இடத்தில் சிறுவனை நிறுத்தினார்.

கருவிகளை இயக்க ஆரம்பித்தார். என்ன ஆச்சரியம்! சிறுவனின் உருவம் கருவியில் தெளிவாகத் தென்பட்டது.

பயர்டு டி.வி.யை கண்டு பிடித்து விட்டார். பெரிய அளவில் நம்பிக்கை வைத்துச் செயல்பட்டு வெற்றியும் பெற்றார்.

நாமும் இவரைப் போன்று ஏன் பெரிய நம்பிக்கை வைத்துச் செயல்பட்டு வெற்றி பெறக் கூடாது? அவரைப் போன்ற ஆற்றலும் திறமையும் நம்மிடமும் உள்ளது அல்லவா! பின்பு ஏன் செயல்படாமல் சும்மா இருக்க வேண்டும் ?

நாமும் பெரிய நம்பிக்கையை வைத்துச் செயல்பட ஆரம்பித்தால் நிச்சயம் வெற்றி பெறுவோம். இதில் சந்தேகமே இல்லை. நாமும் இன்று முதல் பெரிய நம்பிக்கை வைத்து செயல்படுவோம். வெற்றிகளை குவிப்போம்.

வாழ்வின் சிறப்பு!

1. பெற்றோரையும், பெரியோரையும் மதித்து நடப்பது சிறப்பு.

2. ஒழுக்கம் தவறாத நடத்தையுடன் இருப்பது சிறப்பு.

3. அடுத்தவர்களின் மகிழ்ச்சியில் இன்பம் காண்பது சிறப்பு.

4. யார் மனதையும் புண்படுத்தி பேசாமல் இருப்பது சிறப்பு.

5. எது நடந்தாலும் மனம் கலங்காமல் தன்னம்பிக்கையுடன் இருப்பது சிறப்பு.

6. உன்னைப்போல் பிறரையும் நேசித்து வாழ்வது சிறப்பு.

7. ஆடம்பர செலவு செய்யாமல் சிக்கனமாக
சேமித்து வைப்பது சிறப்பு.

8. அடுத்தவர்களைப் பார்த்து பொறாமைப்படாமல் உன்னிடம் உள்ளதை வைத்து மனதிருப்தியுடன் வாழ்வது சிறப்பு.

9. அதிகமாக ஆசைப்படாமலும், கோபப்படாமலும், கவலைப்படாமலும் வாழ்வது சிறப்பு.

10. பிறர் நம்மீது வைத்திருக்கும் பாசம், நம்பிக்கையை சீர்கெடாமல் வாழ்வது சிறப்பு.

11. மனபலத்தையும், உடல் பலத்தையும் பாதிக்கும்
தீய செயல்களைச் செய்யாமல் வாழ்வது சிறப்பு.

12. தீயவர்களுடன் சேராமலும், நல்லவர்களுடன் நட்புறவு கொள்வது சிறப்பு.

13. அனைவரிடமும் அன்புடனும், பணிவுடனும், புன்னகையுடனும் பழகுவது சிறப்பு.

14. பிறரை ஏமாற்றாமலும், பிறரிடம் ஏமாறாமலும் வாழ்வது சிறப்பு.

15. தீயது என தெரிந்ததை செய்யாமலும், நல்லது
என அறிந்ததை துணிவுடன் செய்து
நல்ல மனசாட்சியுடன் வாழ்வது சிறப்பு.

127 ஆண்டுகால தயாரிப்பு இரகசியத்தை பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கும் 'கோக்கோ கோலா

 

18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தலைவலிக்காக நிவாரணம் தேடி மருந்துக் கடைகளுக்கு வந்தவர்களுக்கு கடைக்காரர்கள் ஒரு ரகசிய பொருளை தண்ணீரில் கரைத்து தந்தனர்.

இதை சாப்பிட்ட பலருக்கு உடனடியாக தலைவலி பறந்தே போனது. அந்த 'ரகசிய மருந்து' தான் நாளடைவில் போத்தல்களில் அடைக்கப்பட்டு 'கோக்கோ கோலா' என்ற வணிகப் பெயருடன் உலக நாடுகளில் உள்ள விற்பனை கூடங்களில் பிரபலமடைந்தது.

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் கோக்கோ கோலாவின் தலைமை அலுவலகம் உள்ளது. இங்குள்ள ஒரு பாதுகாப்பு பெட்டகத்தில் உச்சகட்ட பாதுகாப்புடன் 127 ஆண்டுகால பழமை வாய்ந்த கோக்கோ கோலாவின் தயாரிப்பு ரகசியம் வைக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர், இந்த தயாரிப்பு ரகசியம் தொடர்பான குறிப்புகள் தன்னிடம் இருப்பதாகவும், அவற்றை வெளியிடாமல் இருக்க ஒர் பெருந்தொகையை கோக்கோ கோலா நிறுவனம் தனக்கு தர வேண்டும் என்றும் ஒருவர் மிரட்டல் விடுத்தது நினைவிருக்கலாம்.

1886ம் ஆண்டு தொழில் முறையாக தொடங்கப்பட்ட அட்லாண்டாவில் உள்ள கோக்கோ கோலா நிறுவனம் 1910ம் ஆண்டு ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் பெரும் பாதிப்பை சந்தித்தது.

மெல்ல, மெல்ல அந்த பாதிப்பில் இருந்து விடுபட்டு குளிர்பானங்களின் தயாரிப்பில் முடிசூடா மன்னனாக கோக்கோ கோலா இன்றளவும் திகழ்கிறது. உலகளாவிய அளவில் சிறந்த வர்த்தக அடையாளப் பெயராக 2011ம் ஆண்டு கோக்கோ கோலா தேர்வு செய்யப்பட்டது.

கோக்கோ கோலாவின் தயாரிப்பு ரகசியம் எங்கோ ஓரிடத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது என்பது பலரும் அறிந்த சங்கதிதான். ஆனால், அட்லாண்டாவில் உள்ள தொழிற்சாலையில் உச்சகட்ட லேசர் விளக்குகளின் பாதுகாப்பில் அந்த ரகசியம் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது தற்போது தெரியவந்துள்ளது.

அந்த பாதுகாப்பு பெட்டகத்தை தற்போது நாள்தோறும் ஆயிரக்கணக்கான கோக்கோ கோலா பிரியர்கள் கண்டு களைப்பு நீங்கி, களிப்படைந்து வருகின்றனர்.

வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் கவனத்திற்கு...

 * வெளிக்கதவில் கண்டிப்பாக லென்ஸ் பொருத்துங்கள். மரக்கதவுக்கு முன்னால் ஒரு இரும்புக் கதவும் அமையுங்கள்.

 * முன் பின் அறிமுகமில்லாதவர் தண்ணீர் கேட்டால், தண்ணீர் எடுப்பதற்காக கதவைத் திறந்து வைத்து விட்டு வீட்டின் உள்ளே செல்லவே கூடாது.

 * ஏதேனும் அவசரத்தில் மறந்துபோய் கதவைத் திறந்து வைத்துவிட்டு பக்கத்தில் எங்காவது சென்று வந்தால், வீட்டில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா, யாராவது இருக்கிறார்களா என்று பார்த்த பிறகே கதவை மூட வேண்டும்.

 * மின்சார பொருட்களை ரிப்பேர் செய்பவர்கள், கேபிள் டி.வி ஆபரேட்டர்கள் என்ற பெயரில் யாராவது, "உங்கள் கணவர் அல்லது மகன் அனுப்பினார்" என்று சொல்லிக் கொண்டு வந்தால், கதவைத் திறக்காமலேயே "பிறகு வாருங்கள்" என்று சொல்லி அனுப்பி விடுங்கள்.

 * வீட்டுக்கு தொலைபேசி அழைப்பு வந்தால் சத்தமாக பேசக் கூடாது. வெளியிடங்களுக்கு செல்லும் போது, புதிய நபர்களிடம் உங்களைப் பற்றிய விவரங்களை சொல்லவே கூடாது.

 * எப்போதும் வீட்டு வேலைக்காரர்கள் மற்றும் டிரைவர்களின் புகைப்படம், அவர்களின் உறவினர்களின் முகவரியை கைவசம் வைத்திருப்பது நல்லது.

 * வெளியூர் செல்லும்போது, அருகில் உள்ள காவல் நிலையத்துக்குத் தகவல் தந்துவிட்டு செல்வதே பாதுகாப்பானது". இத்தனையையும் தாண்டி ஒருவேளை திருடர்கள் உள்ளே நுழைந்து விட்டால், அவர்களைப் பார்த்து கூச்சல் போடக் கூடாது.

ஏனென்றால் அவர்கள் நம்மைத் தாக்கலாம். அதனால் மயக்கமாகி விட்டது போல கீழே விழுந்து விட்டு, பின் அவர்கள் கவனம் மாறும்போது வெளியே தப்பி வந்து சத்தம் போடலாம். அவர்களின் பலம் தெரியாமல் அவர்களைத் தாக்க முயற்சிப்பது மிகப் பெரிய தவறு.

நோய்களை குணப்படுத்தும் 'தொழுகை' - இஸ்ரேல் - அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு


 குறித்த நேரத்தில் இஸ்லாம் விதித்துள்ள ஐங்கால கடமையான தொழுகையை நிறைவேற்றுவதன் மூலம் அல்ஸிமர்ஸ் எனும் ஞாபக மறதி நோயை 50% கட்டுப்படுத்தலாம் என அமெரிக்க-இஸ்ரேலிய விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

டெல் அவீவ், யாபா, அமெரிக்காவின் இதர பல்கலைக்கழகத்தைச் சார்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.

நினைவாற்றல் குறையாமலிருக்க பயிற்சி மையங்கள் மற்றும் இதர வழிகளில் பயிற்சி மேற்கொள்பவர்களை விட குறிப்பிட்ட நேரத்தில் தொழுகையை பேணுபவர்களுக்கு அல்ஸிமர்ஸ் நோய் தாக்கும் வாய்ப்பு குறைவாகும் என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

டெல் அவீவ், யாபா, அமெரிக்காவின் இதர பல்கலைக்கழகத்தைச் சார்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.

நினைவாற்றல் குறையாமலிருக்க பயிற்சி மையங்கள் மற்றும் இதர வழிகளில் பயிற்சி மேற்கொள்பவர்களை விட குறிப்பிட்ட நேரத்தில் தொழுகையை பேணுபவர்களுக்கு அல்ஸிமர்ஸ் நோய் தாக்கும் வாய்ப்பு குறைவாகும் என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இத்தகைய நபர்களுக்கு நோயின் கடுமை 24 சதவீதம் குறைவாக இருக்கும் என ஆய்வில் கூறப்படுகிறது. அல்ஸிமர்ஸ் நோயை தடுக்க இதர பயிற்சி வகைகளை விட குறித்த நேரத்தில் தொழுவதால் இரட்டிப்பு பலன் கிடைப்பதாக ஆய்வு கூறுகிறது.

குறித்த நேரத்தில் தொழுகையை பேணுவது அல்ஷிமர்ஸ் நோயிலிருந்து காப்பாற்றுவதுடன் புத்தியாகவும், சிந்தனை ரீதியாகவும் பேசுவதற்கு தேவையான ஆக்கப்பூர்வமான பலன்கள் கிடைப்பதாக இந்த ஆய்வுக் குழுவின் தலைவராக பணியாற்றிய பேராசிரியர் Rivka Inzelberg கூறுகிறார்.

65 வயதுக்கு மேற்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 92 பேருக்கு மட்டுமே ஞாபக மறதி நோய் பாதித்துள்ளது. 300 பேருக்கு சிறிய அளவில் பாதித்துள்ளது. மீதமுள்ளோருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.

பெஸ்ட் கன்ட்ரோல் - கரப்பான்பூச்சி, எலி, பல்லி, எறும்பு...

இல்லத்தரசிகளுக்கு தீராத தலைவலிகள் என்று பெரிய பட்டியலே இருக்கும்... அதில் பூச்சிகள் உள்ளிட்டவற்றுக்கும் கட்டாயம் இடமுண்டு. ஆம்... கரப்பான்பூச்சி, பல்லி, எலி, எறும்பு, மூட்டைப்பூச்சி என வீட்டில் வாழும் 'ஜீவன்'களின் தொல்லை... தாங்க முடியாத தொல்லையே.

'அடச்சே... என்ன செய்தாலும் இதையெல்லாம் ஒழிக்க முடியலையே' என்று புலம்பிக்கொண்டே இருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு, அவற்றை விரட்டி அடிக்கும் வழிகள்

கெட் அவுட் கரப்பான்பூச்சி!

''பொதுவாக ஈரம், இருட்டுள்ள இடங்களிலும், சமையலறையிலும் கரப்பான்பூச்சியின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். பூச்சிக்கொல்லி ஸ்பிரே உள்ளிட்ட ரசாயன பொருட்களை உபயோகித்து விரட்ட முயற்சிக்கும்போது, அந்த ரசாயனங்கள் காற்றில் கலந்து... அரிசி, மாவு, மசாலா பொருட்கள் போன்றவை திறந்திருந்தால், அதில் கலந்துவிட அதிக வாய்ப்பு உண்டு. காற்றை கிரகிக்கும் தன்மையுள்ள மாவுப்பொருட்கள், இந்த ரசாயனங்களின் தன்மையை இழுத்துக் கொள்ளும் அபாயமும் இருக்கிறது. எனவே, கரப்பான்பூச்சிகளை அழிக்க... ரசாயன ஸ்பிரேக்கள் வேண்டாம்.

தற்போது புதிய வகை ஜெல், சந்தைக்கு வந்துள்ளது. கரப்பான்பூச்சிகளின் நடமாட்டம் இருக்கும் இடங்களில் இதை பொட்டு போல ஆங்காங்கே வைக்க வேண்டும். நேரம் ஆக ஆக இது இறுகும். உணவு வேட்கையில் வரும் கரப்பான்பூச்சிகளை இந்த ஜெல்லின் நறுமணம் ஈர்க்க, இறுகி இருக்கும் இந்த ஜெல்லை தன் எச்சிலால் அவை இளக்கி சாப்பிட, அந்த நிமிடமே இறந்துபோகும். உடைந்த கடலைப்பருப்பு, துவரம்பருப்பு போன்ற பொருட்களை அரைத்து, ஊசிப்போக வைத்து, அதனுடன் ரசாயனங்களைக் கலந்து உருவாக்கப்படும் இந்த ஜெல், நம் கிச்சன் பொருட்களைப் பாதிக்காது. மேலும், இதை சாப்பிட்ட உடனேயே கரப்பான்பூச்சி இறந்துபோவதால், மற்ற பொருட்களிலும் ரசாயனங்கள் கலந்துவிடுமோ என்கிற கவலையும் இல்லை.

பை பை பல்லி!
கடைகளில் விற்கும் கெமிக்கல் ஸ்பிரேக்களை பல்லியின் மீது அடித்து, அதை அழித்துவிடலாம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், அதை உபயோகிக்கும் நுணுக்கம் அறிந்துகொள்வது அவசியம். பல்லியின் மேல் தோலானது, மெழுகு போன்ற தன்மை கொண்டது என்பதால், நாம் அடிக்கும் ஸ்பிரே அதனை பாதிக்காது. மாறாக, பல்லியின் முகத்துக்கு நேராக கெமிக்கல் ஸ்பிரேவை அடிக்கும்போது, பல்லியின் நாக்கில்பட்டு உட்செல்லும்போது, அது இறந்துபோகும்.

ஒழிக எலி!

சுண்டெலி, மளிகைக் கடைகளில் இருக்கும் எலிகள், பெருச்சாளி என்று எலிகளில் மூன்று வகைகள் உள்ளன. இதில் மளிகைக் கடைகளில் இருக்கும் வகையறா எலிகள், குட்டி போடும் சமயத்தில் மட்டும்தான் ஒரே இடத்திலோ... அல்லது வீட்டிலோ இருக்கும். மற்றபடி எந்த ஓர் இடத்திலும் நிரந்தரமாக இருக்காது. சுண்டெலி, எந்த வீட்டில் இருக்கிறதோ அங்கு மட்டும்தான் நிரந்தரமாகக் குடியிருக்கும். அந்த வீட்டின் ஓர் அறையில் இருந்து மற்றோர் அறைக்கு தாவிக்கொண்டே இருக்கும். பெருச்சாளி வீட்டுக்குள் வராது. வீட்டைச் சுற்றி ஓடும் அல்லது சாக்கடைப் பொந்துகளில் குடியிருக்கும்.

வீட்டில் குடியிருக்கும் சுண்டெலியை விரட்ட, 'கம் பேட்' (Gum pad) என்கிற புதுவித பொறி கடைகளில் கிடைக்கிறது. நோட்டுப் புத்தகத்தை விரித்து வைத்ததுபோல இருக்கும் இந்த பேட். அதன் மேல் வெள்ளை நிறத்தில் கம் இருக்கும். எலி நடமாட்டம் அதிகம் இருக்கும் இடத்தில் இந்த பேடை வைத்துவிடுங்கள். ஓடி வருகிற எலி இதில் கால் வைக்கும்போது, நகர முடியாத அளவுக்கு ஒட்டிக் கொண்டுவிடும். காலையில் அப்படியே தூக்கி வெளியே போட்டுவிடலாம். ஒருவேளை இந்த பேடில் உள்ள கம் கீழே கொட்டிவிட்டால்... கெரசின் கொண்டுதான் துடைத்தெடுக்க முடியும். தப்பித் தவறி இதில் கை, கால் என்று நம்முடைய உடல் பாகங்கள் பட்டாலும் ஒட்டிக்கொள்ளும். அப்படி ஒட்டிக்கொண்டு விட்டால்... நெயில் பாலிஷ் ரிமூவரை பயன்படுத்தி நீக்கிவிடலாம். பிறகு, சோப்பு கொண்டு உடல்பாகத்தை சுத்தமாக கழுவிவிடுவது முக்கியம். இந்த கம் பேட், இரவு நேர உபயோகத்துக்குத்தான் நல்லது. ஆட்கள் அதிகம் நடமாட்டமிருக்காது என்கிற நிலையில், பகலிலும் பயன்படுத்தலாம். என்றாலும் வீட்டில் உள்ள அனைவருக்கும் அதைப்பற்றி அறிவித்துவிடுவது நலம்.

அடுத்ததாக, மளிகைக் கடையில் இருக்கும் எலிகள் வீட்டில் இருந்தால், ஸ்பிரிங் எலிப்பொறி (மர எலிப்பொறியைவிட இது சிறந்தது) வைத்துப் பிடிக்கலாம். ஆனால், எலிகளுக்கு ஞாபகசக்தி அதிகம். முதல் நாள் எலிப்பொறியை பார்த்து அதில் மாட்டாமல் தப்பிவிட்டால், மறுநாள் அந்தப் பக்கம் செல்லாது. எனவே, எலிகள் அதிகம் புழங்கும் இடத்தில் ஒன்றுக்கும் அதிகமான எலிப்பொறிகளை வைத்து, அது எந்தப் பக்கம் நகர்ந்தாலும் மாட்டுவது போல ஏற்பாடுகள் பலமாக இருக்க வேண்டும்.

பெருச்சாளிகள் வீட்டுக்குள் வருவது அபூர்வமே. அதேசமயம், கடைகளையட்டி சர்வசாதாரணமாக நடமாடும். பெருச்சாளிகளைப் பொறுத்தவரை எலி பாஷாணம் ஒன்றுதான் தீர்வு. விஷம் தோய்ந்த சின்ன கேக் வடிவத்தில் இது விற்கப்படுகிறது. பெருச்சாளி நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் இதை வைத்துவிட்டால்... உணவுப் பொருள் என்று நினைத்து சாப்பிடும் பெருச்சாளிகள், இறந்துவிடும்.
   
எறும்புத் தொல்லை நீங்க..!

எறும்புத் தொல்லையைத் தவிர்க்க, சாப்பாடு அயிட்டங்கள் கீழே சிதறாமல், இனிப்பு அயிட்டங்களை இறுக மூடி வைத்து, குப்பைக் கூடையை உடனுக்குடன் சுத்தம் செய்து, மில்க் மெயிட், நெய் என பாட்டிலைச் சுற்றி வழிந்திருப்பவற்றை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து... இப்படி கிச்சனை பராமரித்தாலே போதும். ஒருவேளை அதிகமான எறும்புத் தொல்லை இருந்தால், எறும்பு சாக்பீஸ் பயன்படுத்தலாம். கெட்டுப் போன உணவு வகைகளைத் தேடி ஈக்கள், கொசுக்கள் குழுமும் என்பதையும் மனதில் வையுங்கள்.

மூட்டைப்பூச்சியை நசுக்கலாமா?

மூட்டைப்பூச்சியை நசுக்கும்போது, அதன் வயிற்றில் இருக்கும் முட்டைகள் வெடித்து, குட்டிகள் வெளிவந்துவிடும். இதெல்லாம் நம் கண்களுக்குத் தெரியாது. எனவே, மூட்டைப்பூச்சியைக் கண்டால் அதை எடுத்து தண்ணீரில் அல்லது எண்ணெயில் போட்டுவிடுங்கள். மூச்சுத் திணறி இறந்துவிடும். பொதுவாக சினிமா தியேட்டர் போன்ற இடங்களில் மூட்டைப்பூச்சி அதிகம் இருக்கும். அதுபோன்ற இடங்களுக்கு சென்று வந்த உடன், அந்த உடைகளை வெந்நீரில் மூழ்க வைத்து, துவையுங்கள். மூட்டைப்பூச்சிக்கு ஒரே தீர்வு, அதற்குண்டான ஸ்பிரே மட்டுமே.''

சர்க்கரை நோயாளிகளின் எதிரி மைதா மாவு’ சர்க்கரை நோய் சந்தேகம்!




சர்க்கரை நோய் பரம்பரை வியாதியா?

ஆம். பெற்றோர் இருவருக்கும் சர்க்கரை நோய் இருந்தால், குழந்தைகளுக்கு வரும் வாய்ப்பு 80 சதவீதம் உண்டு. பெற்றோரில் ஒருவருக்கு இருந்தால் 50 சதவீத வாய்ப்பு உண்டு. பெற்றோருக்கு சர்க்கரை நோய் ஏற்பட்ட வயதில் இருந்து 5 முதல் 10 ஆண்டுகள் முன்பாகவே குழந்தைகளுக்கு வந்து விடுகிறது.

சர்க்கரை நோயின் அறிகுறிகள் என்ன?

அதிக சிறுநீர்ப் போக்கு. அதிக தாகம் மற்றும் பசி. மூன்று மாதங்களில் முன்பு இருந்த எடையில் இருந்து 10 சதவீதம் வரை, உடல் எடை இழப்பு. ஆறாத புண், அதிக தூக்கம், பாத எரிச்சல். அத்துடன் கை, கால் குடைச்சல், இடுப்பு வலி, நெஞ்சுவலி, பல்வலி, பல்வேர் வீக்கம், பல்லில் ரத்தக்கசிவு, தலைவலி, வலிப்பு நோய், தோள்பட்டை வலி, ஆண் உறுப்பில் தோல் வெடிப்பு, வெள்ளைப்படுதல், படர்தாமரை, அதிக வியர்வை, குதிங்காலில் வலி, முழங்கை வலி, காது நரம்பு பாதிப்பு ஆகியவை ஏற்படும்.


சர்க்கரை நோயை கண்டறிவது எப்படி?

எட்டு மணி நேரம், சாப்பிடாமல் வெறும் வயிற்றில் எடுக்கப்படும் போது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 126 மி.கி., க்கு குறைவாக இருக்க வேண்டும். 82.5 கிராம் "குளுக்கோன் டி’ யை, 300 மி.லி., அளவு தண்ணீரில் கலந்து குடித்து, 2 மணி நேரத்திற்குப்பின் எடுக்கப்படும் சர்க்கரையின் அளவு, 200 மி.கி.,க்கு குறைவாக இருக்க வேண்டும்.

சாதாரணமான நேரத்தில் பரிசோதிக்கும்போது, சர்க்கரையின் அளவு 180 மி.கி.,க்கு கீழ் இருக்க வேண்டும். "ஏ 1 சி’ எனப்படும் பரிசோதனையின் அளவு, 6.5 சதவீதத்திற்கு மேல் இருக்க வேண்டும். இவற்றில், ஏதாவது 2 மட்டும் அல்லது இவற்றில் ஏதாவது ஒன்றுடன், அதிக சிறுநீர் போக்கு, தாகம், பசி, 10 சதவீதத்திற்கும் மேலான எடை இழப்பு ஏற்படுவதன் மூலம் அறியலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு மைதா மாவு கூடாது என்கிறார்களே, ஏன்?

மைதா மாவு, கோதுமையில் இருந்து பெறப்படுகிறது. கோதுமையில் உள்ள நார்ச்சத்து முழுவதும், இயந்திரத்தால் நீக்கப்பட்டு, மாவுச் சத்து மட்டுமே உள்ளது. இதனால், மைதா உணவு வகைகளை சாப்பிட்ட உடன், மிகவேகமாக, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயர்கிறது. இந்த வேகத்திற்கு, "இன்சுலின்’ ஊசியோ அல்லது மாத்திரையோ ஈடுகொடுக்க முடிவதில்லை. மைதா வகைகளை தவிர்ப்பது நல்லது. மைதாவில் உள்ள "மைக்ரோகிராம்’ அளவு, கெமிக்கல் சர்க்கரை வரும் வாய்ப்பை அதிகரிக்கிறது.

சர்க்கரை நோயாளிகள் எந்த வகை பழங்களை சாப்பிடலாம்?

ஆப்பிள், மாதுளை, பப்பாளி, கொய்யா, ஆரஞ்சு, தர்ப்பூசணி, பேரிக்காய், நாவல்பழம், அத்திப்பழம் போன்றவைகளை சாப்பிடலாம். அதேசமயம் பழச்சாறு குடித்தால், அது உடனே உடலில் சர்க்கரை அளவை அதிகப்படுத்துவதால், தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள் நிலக்கடலை, முந்திரி வகைகளை (நட்ஸ்) பயன்படுத்தலாமா?

செரிமானத்தை தாமதப்படுத்துவதன் மூலம், சாப்பிட்ட உடனேயே அதிகரிக்கும் சர்க்கரையின் அளவை (30-50 சதவீதம்), அவை குறைக்கின்றன. மேலும், இதில் உள்ள ஆர்ஜினின், இருதயத்திற்கு ஊறு விளைவிக்கும் சி.ஆர்.பி., அளவை குறைக்கிறது. எனவே, அவற்றை பயன்படுத்தலாம். வாரத்தில் 3 நாட்கள், ஒரு கைப்பிடி அளவு வேகவைத்த வேர்க்கடலை, முந்திரி, பாதாம் பருப்பு பயன்படுத்தலாம்.

காபி, டீ- இவற்றில் எது சிறந்தது?

காபி சிறந்தது. டீ விரும்புவோர் எலுமிச்சை டீ அல்லது கிரீன் டி குடிக்கலாம். காலையில் ஒரு கப் காபி, மாலையில் ஒரு கப் டீ, பால் அளவை குறைத்து, எலுமிச்சை சேர்த்து குடிக்கலாம். இவை மாரடைப்பு வருவதை தவிர்க்கிறது.

 "ஓட்ஸ்’ சாப்பிடுவது எந்தளவு பலனை தரும்?

 "ஓட்ஸ்’ என்பது அரிசியைப் போல ஒரு தானியமே. ஆனால், அரிசியைப் போல இல்லாமல் கஞ்சி, களி மட்டும் தயாரிக்க முடியும். இவை விரைவில் செரிமானம் ஆகிவிடுவதால் சீக்கிரமே பசியெடுக்கும். எனவே மறுபடியும் சாப்பிட வேண்டியிருப்பதால் சர்க்கரையின் அளவு மேலும் அதிகரிக்கும். ஆனால், "ஓட்ஸை’ சிறிது கெட்டியாக செய்து காலை உணவாக சாப்பிடலாம்.

ஆயுளை அதிகரிக்கும் ஆலிவ்..!


சின்ன சின்ன உணவுப் பொருட்கள் மூலம் நாம் சிறப்பான பலன்களை பெறமுடியும். நமது வீட்டில் உள்ள உணவுப் பொருட்களின் மகத்துவத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

 * வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

 * உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணையைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம். இதனால் ஆயுள் அதிகரிக்கும்.

 * வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் என்றால் ஆகாது. அதனால், முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் ஆறும்.

 * ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி, அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.

 * சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் நன்றாகத் தேய்த்து வர உடம்பு வலி நீங்கும்.

 * துளசி மனித மூளைக்கு வலிமையைக் கொடுக்கக்கூடியது. அதற்கு, துளசி இலையை ஒரு டம்ளரில் பறித்துப் போட்டு ஊற வைத்து, அந்தத் நீரைக் குடித்து வந்தால் மூளை பலம் பெறும்.

 * தொண்டையில் புண், வலி ஏற்பட்டால் கொஞ்சம் சித்தரத்தைப் பொடியுடன் தேன் கலந்து சாப்பிடவும். தொண்டைப் புண் பாதிப்பு குணமான பிறகு கொஞ்சம் மிளகைத் தூளாக இடித்து, அதில் வெல்லம், நெய் கலந்து உருட்டி விழுங்கி வந்தால் அந்த பாதிப்பு முற்றிலும் குணமாகும்.

 * அஜீரணம் மற்றும் மந்தத்திற்குச் சிறந்தது கொய்யாவின் கொழுந்து இலை. அதனை சாப்பிட்ட உடனேயே பலனை எதிர்பார்க்கலாம்.

• ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும்.

• உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில் போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து வந்தால் போதும்.

• அவரை இலையை அரைத்து தினமும் காலையில் முகத்தில் தடவி வந்தால், முகத்தில் இருக்கும் தழும்புகள், முகப்பருக்கள் நீங்கிவிடும்.

• பால் கலக்காத தேநீரில் தேன் விட்டுக் குடித்தால் தொண்டைக்கட்டு சரியாகும்.

• சுக்கைத் தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம் குறையும்.

• மூட்டு வலியா? தேங்காய் எண்ணெய் - எலுமிச்சைச் சாறை கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும்.

• துளசி இலை போட்ட நீரை தினசரி குடித்து வந்தால் ஞாபகமறதி நீங்கி மூளை பலம் பெறும்.

• மிளகுத் தூளுடன் நெய், வெல்லம் கலந்து உருண்டையாக்கி சாப்பிட்டுவர தொண்டைப்புண் குணமாகும்.

• வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, பனங்கற்கண்டு சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

• பொடித்த படிகாரத்தை தூள் செய்து அதைக் கொண்டு வாரம் மூன்று முறை பல் தேய்த்து வந்தால் பற்களின் கறை, இரத்தம் வடிதல், வாய் துர்நாற்றம் நீங்குவதோடு பல் ஈறுக்கும் வலு கொடுக்கும்.

• வயிற்றுப் போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை சாதம் போல வேகவைத்து மோரில் கரைத்து உப்பு போட்டு சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும். வயிற்றில் வலியும் இருக்காது.

• உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள், தினசரி ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டு வந்தால் உடம்பு பலம் பெறும்.

• வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கலாம். தினமும் காலையிலும் மாலையிலும் தேங்காய் பாலில் தேனை விட்டுச் சாப்பிட்டால் புண் ஆறிவிடும்.

• அஜீரணத்திற்கு இரண்டு ஸ்பூன் கருவேப்பிலைச்சாறை ஒரு டம்ளர் மோரில் கலந்து குடித்தால் அஜீரணம்
 நீங்கும்.

• அதிக தலைவலி இருக்கும்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மூடிக் கொதிக்க வைத்து இறக்கி இரண்டு ஸ்பூன் காபி பவுடர் போட்டு ஆவி பிடித்தால் தலைவலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.

சர்வர் இல்லாமல் / யூ ஆர் எல் இல்லாமல் இனி ஒரு புது வகை இணைய வழி !


nov 28 - ravi url

இன்டர்னெட் எனப்படும் இணையம் இல்லா வாழ்க்கையை நினைத்து பார்த்தாலே அம்மாடியோனு பல பேர் சொல்ல கேட்டிருப்போம். இது பல சமயம் நடக்கும விஷயம் தான் சர்வர் கிராஷ் / நாட் அவய்லபிள் / ஹேக்கிங் என்று அடிக்கடி சர்வர் செயல் இழந்து போவதால் இந்த ‘அம்மாடி; கிளம்புகிறது.

 இதற்கிடையில் ஈமெயிலிருந்து / ஈ எஜுகேஷன் வரை பாதிப்பதின் காரணம் உலக வலை எனப்படும் (www ) இது ஒரு வகையில் உலகத்தின் எந்த ஒரு மூலையில் இருந்து ஆக்ஸஸ் செய்யும்படி வடிவமைக்கபட்டிருப்பதால் இதனை அழிக்கவும் உலகம் முழுவதும் எங்கிருந்து வேன்டுமாணாலும் செயல்பட முடியும். இதனால் சர்வர் ஹேக் அல்லது சர்வரை கிராஷும் செய்ய முடியும்.

இதை கவனத்தில் கொண்டு இப்போது WWW இல்லாமல் / சர்வர் இல்லாமல் / யூ ஆர் எல் – URL இல்லாமல் ஒரு புதுவகை இணைய வழியை கேம்பிரிட்ஜ் பல்கலைகழகம் உருவாக்கியுள்ளது. இது என்ன?

இதன் பேர் பர்ஸூட் இன்டர்னெட். இதுக்கு இணையம் முகவரியான வெப் தள முகவரி அல்லது சர்வர் தேவையில்லை.. சாதாரணமாக இப்போது யாஹூ என்னும் இணையதளத்துக்கு செல்ல நீங்கள்www.yahoo.com என டைப் செய்தால் அதன் யூஆர் எல் என்னும் யூனிவர்ஸல் ரிஸோர்ஸ் லொக்கேட்டர் அந்த முகவரிக்கு தேடி எடுத்து செல்லும். அங்கே சர்வர் சரியாக இருக்கும் பட்சத்தில் உங்களின் தேடுதல் அது இன்டர்னெட் பாக்கெட்களாய் மாறி அங்கே போகும். இது தலையை சுத்தி மூக்கை தொடுவது போல் ஆகும்.

நிறைய பேர் நினைக்கிறார்கள்www.XXXX.in போட்டால் இந்தியாவிலே இந்த சர்வர் இருக்கிறது என்று ஆனால் இந்த முகவரிக்கு கூட அமெரிக்காவில் தான் அனேக சர்வர் இருக்கும் என்று பலருக்கு தெரிவதில்லை. இது இந்தியாவின் வியாபாரம் செய்கிறேன் என்ற‌ இணைய அடையாளதுக்கு மட்டும் தான் இந்த முகவரி. இந்த பர்ஸூட் இன்ட்டர்னெட் கிட்ட தட்ட டோரன்ட் வகையில் தான் வேலை செய்யும் இதில் உள்ள பாக்கெட் wwwஎன்று இல்லாமல் தேவையான ஆட்களுக்கு மட்டும் செல்லும்.

அது போக தேடு வரிசையில் உலகில் எங்கு எங்கு இதை தேடுகிறார்களோ அவர்களுக்கு காட்டும் முறை இந்த எளிய முறை வீடியோவை பார்த்தால் இது எவ்வளவு பாதுகாப்பு மற்றும் வேகம் என உணர்வீர்கள். இது இருந்தால் இந்தியன் ரயில்வே – இந்திய அரசின் இணையசேவைகள் சாரி ஓவர் லோடு அல்லது 404 எரர் காட்ட சான்ஸ் இல்லை. இதயெல்லாம் விட முக்கியமாக உளவு / களவு நிறைய குறையும் சான்ஸ் மற்றும் இணைய வேகம் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும்.

– Video Link -

http://vimeo.com/37299318

உலகில் உள்ள மிகவும் புகழ் பெற்ற நடன வகைகள்!!!

நம்மில் பல பேருக்கு உணர்சிகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்த பெரிதும் உறுதுணையாக விளங்குகிறது நடனம். மேலும் நம்முடைய சந்தோஷம், காதல், காயம் மற்றும் வலி போன்ற உணர்வுகளையும் அது வெளிப்படுத்த உதவும். ஒரு வகையில் புத்துணர்ச்சி பெறவும் பொழுதை போக்கவும் நடனம் பயன்படுகிறது. இசைக்கு பிறகு நம்மை சாந்தப்படுத்தி அமைதி படுத்த இன்னொன்றால் முடியும் என்றால் அது தான் நடனம்.

இந்த உலகத்தில் பல வகையான நடனங்கள் உள்ளது. ஒவ்வொரு சாதியும் பண்பாடும் தனக்கென ஒரு வகையான நடனத்தை உருவாக்கியுள்ளது. நடனத்தால் பல வகையான நாட்டுப்புற பண்பாடுகள் பிரபலமடைந்துள்ளது. அதன் விளைவாக அதனை உலகத்தில் பலரும் பின்பற்ற ஆரம்பித்துள்ளனர். இவ்வகையான பல நடனங்கள் புகழை பெற்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி புகழை பெற்று உலகம் முழுவதும் அதனை பின்பற்றுவதால் இனி எந்த ஒரு நடனமும் ஒரு தனிப்பட்ட இடத்தை மட்டும் சார்ந்திருப்பதில்லை. அதே போல் ஒவ்வொரு நடனத்தின் ஸ்டைல்களையும் எங்கிருந்து வேண்டுமானாலும் கற்று கொள்ளும் வசதியும் இப்போது வந்து விட்டது.

உலகில் உள்ள மிகவும் புகழ் பெற்ற நடன வகைகள்!!!

ஹிப்-ஹாப், கிளாசிகள், சல்சா, பெல்லி, பாலே என எண்ணிலடங்கா பல வகை நடனகள் உலகம் முழுவதும் புகழ் பெற்று விளங்கி வருகிறது. நம் நாட்டையே எடுத்துக் கொள்வோம்; பரதநாட்டியம், கத்தக், ஒடிஸி, குச்சிப்பிடி, கத்தக்களி என பல வகைகள் உள்ளது. இது போக புகழ் பெற்ற குத்து டான்ஸை யாரும் மறக்க முடியாது. இப்படி ஒவ்வொரு நடனமும் ஒவ்வொரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்துள்ளதாக விளங்குகிறது.
   
ஹிப்-ஹாப் நடனம்

புகழ் பெற்ற நடன வகையான இதனை ஸ்ட்ரீட் டான்ஸ் (தெரு நடனம்) என்றும் அழைக்கின்றனர். 1970-ஆம் ஆண்டில், அமெரிக்காவில் ஹிப் ஹாப் இசை கலாச்சாரத்தால் உருவாக்கப்பட்டதே இவ்வகை நடனம். இவ்வகை நடனம் இன்று உலகத்தில் உள்ள அனைவராலும் பழகி ஆடப்படுகிறது. லாகிங் மற்றும் பூப்பிங் நடன ஸ்டைல்கள் இந்த நடனத்திலேயே அடங்கும். ஹிப்-ஹாப் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி ஆடும் நடனமாக புகழ் பெற்று விளங்குகிறது.

சல்சா

ஈர்ப்புள்ள ஆற்றல் நிறைந்த இவ்வகை நடனம் முதன் முதலில் க்யூபாவில் தான் தொடங்கிற்று. இன்று ஒவ்வொரு இளம் ஜோடிகளும் இவ்வகை நடனத்தை விரும்பி ஆடுகின்றனர். காதல், மனக்கிளர்ச்சி மற்றும் உணர்ச்சிகளை மிகவும் நேர்த்தியான முறையில் வெளிப்படுத்த உதவும் இந்நடனம். ஜோடிகள் ஆடும் இந்நடனம் உலகம் முழுவதும் புகழ் பெற்று விளங்குகிறது. லத்தீன் அமெரிக்க இசையோடு மிகவும் பொருத்தமாக அமையும் இந்த நடனம். இருப்பினும் இன்றைய காலகட்டத்தில் அனைத்து இசை வகைகளுக்கும் இந்த நடனம் ஆடப்படுகிறது.

கத்தக்

இந்திய நடனக் கலையான கத்தக், மேலோங்கி ஈடுகொடுக்கும் ஒரு நடன வகையாகும். தென் இந்திய மாநிலங்களில் உருவாக்கப்பட்ட இவ்வகை நடனம் இந்தியாவில் உள்ள 8 கிளாசிகள் நடன வகைகளில் ஒன்றாகும். இந்நடனம் அதன் தோரணைகள் மற்றும் முத்திரைகளுக்காக புகழ் பெற்று விளங்குகிறது. பண்டைய காலங்களில் கதைகள் மற்றும் புராணங்களை விளக்க இவ்வகை நடனம் பயன்படுத்தப்பட்டது. மிகவும் கடினமான இந்த நடனத்தில் தேர்ச்சி பெற தீவிரமான பயிற்சி தேவைப்படும். இந்த நடனத்திற்கு பல பரீட்சைகளும் உள்ளது. இந்த நடனத்தில் தேர்ச்சி பெற பல வகையில் உள்ள இந்த தேர்வுகளில் தேற வேண்டும். பொதுவாக இந்திய கிளாசிக் இசையோடு கத்தக் நடனம் ஆடப்படும்.

பெல்லி நடனம்

கவர்ச்சிகரமான பெண்கள் ஆடும் இந்த நடனம் மேற்காசிய நாடுகளில் உருவாக்கப்பட்டது. ப்கழ் பெற்ற நடன வகைகளில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது. இவ்வகை நடனத்தில் உடம்பில் உள்ள அத்தனை பாகங்கள் ஈடுபட்டாலும் கூட இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதிக்கு அதிகமாக முக்கியத்துவம் அளிக்கப்படும். முதலில் இவகை நடனம் எல்லோராலும் அங்கீகாரப் படுத்தப்படவில்லை. இருப்பினும் காலப்போக்கில் இது அனைவராலும் ஏற்கப்பட்டு விட்டது. சரியான நேரத்தில் சரியான அசைவுகளை கொடுக்க வேண்டியுள்ளதால் பெல்லி நடனம் என்பது லேசுபட்டதில்லை.

லைன் நடனம்

இவ்வகை நடனம் கண்டுப்பிடிக்கப்பட்டு நீண்ட காலமாகவில்லை. இவ்வகை நடனத்தில் ஒரு குறிப்பிட்ட நடன அசைவுகளை நடன கலைஞர்கள் ஒரு கோட்டில் நின்று ஆடுவார்கள். இவ்வகை நடனம் அவர்களால் தினமும் கூட ஆடப்படுகிறது. இவ்வகை நடனத்தை ஏரோபிக்ஸ் மற்றும் ஜூம்பா போன்ற நடனங்களை போல உடற்பயிற்சி மற்றும் உடல் எடை குறைப்புக்கு பயன்படுத்தலாம்.

இவைகள் போக, இன்னமும் கூட புகழ் பெற்ற நடன வகைகள் இருக்கத்தான் செய்கிறது. பீ பாயிங், டாப் நடனம், பாலே மற்றும் புகழ் பெற்ற கங்க்னம் ஸ்டைல் நடனம் போன்றவற்றை உதாரணமாக சொல்லலாம். இவ்வகை நடனங்கள் அனைத்துமே உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த உதவும். அதனால் உங்களை நற்பதத்துடனும் ஆரோக்கியத்துடனும் வைத்திடும். இதில் ஏதாவது சிலவற்றை அல்லது அனைத்தையுமே ஆடினால், உங்கள் மனதும் உடலும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

நடனம் என்பது தூய்மையான ஒரு கலையாகும். அதனை இதயத்திலிருந்து ரசித்து அனுபவிக்க வேண்டும். நீங்கள் ஆடினால் அமைதியில் கிடைக்கும் ஆனந்தத்தை விட உங்கள் இதயம் கண்டிப்பாக ஆனந்தமாக இருக்கும்.

திட்டிய நாகார்ஜூனா... அழுத சமந்தா...

 

நாகேஸ்வரராவ், நாகார்ஜுனா, நாக சைதன்யா என மூன்று தலைமுறை நடிகர்களும் 'மனம்' என்ற படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

இதில் நாகார்ஜூனாவுக்கு ஜோடியாக ஸ்ரேயாவும், நாக சைதன்யாவுக்கு ஜோடியாக சமந்தாவும் நடிக்கிறார்கள்.

இப்படத்தை நாகார்ஜுனா தயாரிக்கிறார். 45 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் இந்தப் படத்தின் இறுதிக் காட்சியில் ஒரு ட்விஸ்ட் உள்ளது.

இந்த ட்விஸ்ட் யாருக்கும் தெரியக் கூடாதென்று  மிக ரகசியமாக படம் பிடித்தனர்.

அந்த ட்விஸ்ட் காட்சியில் சம்பந்தப்பட்ட நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் தவிர வேறு யாரையும் ஸ்பாட்டில் இருக்க அனுமதிக்கவில்லை.

ஆனால், சமந்தா இந்த ரகசியத்தை சூசகமாக டுவிட்டரில் தெரிவித்துவிட்டாராம்.

இதனால் கடும் கோபமான நாகார்ஜூனா சமந்தாவை அழைத்து கடுமையாக திட்டித் தீர்த்துவிட்டாராம். சமந்தா அழுதுகொண்டே நாகார்ஜுனா அறையில் இருந்து ஓடி வந்து விட்டாராம்.

இந்தப் படம் முடியும்வரை  யாரும் ஃபேஸ்புக், டுவிட்டர் பக்கமே போகக்கூடாது என்று சொல்லிவிட்டாராம் நாகார்ஜுனா.