Sunday 27 October 2013

கூகுளின் இரகசியமான நிலையம்!

பல்வேறு இணைய சேவைகளை வழங்கிவரும் முதற்தர நிறுவனமான கூகுள் தொடர்ந்தும் தொழில்நுட்ப உலகில் பல புதுமைகளை புகுத்தி வருகின்றது.
இதன் மற்றுமொரு அங்கமாக மிதக்கும் தரவுப்பரிமாற்ற நிலையம் ஒன்றினை சன்பிரான்ஸிஸ்கோவில் அமைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மிகவும் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த நடவடிக்கையானது 2011ம் ஆண்டிலே ஆரம்பிக்கப்பட்டதாகவும் இந்த நிலையம் 250 அடிகள் நீளத்தையும், 72 அடிகள் அகலத்தையும் கொண்டுள்ளதுடன் 16 அடிகள் ஆழமானதாகவும் காணப்படுகின்றது என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.


 



 


 


 


 


 


Google 'building secret floating data center in San Francisco Bay'

A mystery structure being built on a barge floating off San Francisco's Treasure Island is fueling speculation that Google is turning its idea of a floating data center into a reality.
While the Internet company won't confirm the development, CNET reports it has evidence suggesting the four-story 'secret project' could be a Google sea-faring data center.

Google patented a 'water-based data center' in 2009, describing an environmentally friendly, sea-powered telecommunications and storage system.

'A system includes a floating platform-mounted computer data center comprising a plurality of computing units, a sea-based electrical generator in electrical connection with the plurality of computing units, and one or more sea-water cooling units for providing cooling to the plurality of computing units,' Google wrote in the patent.

Now, CNET investigative reporter Daniel Terdiman claims the mystery construction site floating in San Francisco Bay could belong to Google, drawing on evidence from lease agreements, expert consultations and interviews with locals.

He said putting data centers inside shipping containers, as he claims Google is doing, is already a well-established practice.

While some commentators have criticized the reporter's evidence as circumstantial, experts say it's plausible that Google would build water-based data facility.

Joel Egan, the principal at Cargotecture, which designs custom cargo container buildings, said the structure looks like a data center.

'The cutouts in the long walls of the containers, when they line up, they make hallways,' Egan told CNET. 'You could put all sorts of mainframes into the containers...It doesn't have enough windows for an office building.'

Egan said that putting a data center on a barge would provide access to abundant water to help cool a large number of servers.

Jonathan Koomey, a Stanford research fellow and expert on data centers, said companies such as Dell, Hewlett-Packard, Sun Microsystems, and Microsoft have been installing specially built data centers in shipping containers for some time because they're easy to deploy.

Meanwhile, KPIX 5 reports that Google is actually building a floating marketing center at Hangar 3 for Google Glass, the cutting-edge wearable computer the company has under development.

KPIX 5 claims sources say Google hopes to tow the completed structure from Treasure Island across the Bay to San Francisco’s Fort Mason, where it would be anchored and open to the public.
The media outlet also reported that construction on the site, near the San Francisco Bay Bridge, stopped several weeks ago because Google does not have a permit to park the barge on the waterfront.

Construction on the site commenced last year, and the work is being shielded by a high security fence.

வரலாறு தந்த பொக்கிஷம் சாம்பானர்- பாவாகத் - சுற்றுலாத்தலங்கள்!


     வரலாறு தந்த பொக்கிஷம் சாம்பானர்- பாவாகத்

சாம்பானர்- பாவாகத் ஆர்க்கியாலஜிக்கல் பார்க்! அழகு தமிழில் சொன்னால் சாம்பானர்- பாவாகத் தொல்லியல் பூங்கா!. குஜராத் மாநிலம் பஞ்ச்மஹால் மாவட்டத்தில் தகதகத்துக் கொண்டிருக்கும் வரலாற்றுப் பொக்கிஷம். சுமார் 800மீட்டர் உயரம் கொண்ட பாவாகத் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பகுதியே சாம்பானர்- பாவாகத் என்றழைக்கப்-படுகிறது. மலை உச்சியில் உள்ள காளிக்கமாதா கோவில் மிகவும் பிரசித்தம். அடிவாரத்தில் உள்ள அரண்மனை கட்டிடங்கள், மசூதிகள் போன்றவை 8 - 14ம் நூற்றாண்டுகளுக்கு இடையே கட்டப்பட்டதாகும்.
 சோலங்கி மன்னர்கள், பிறகு கிக்சி சவுகான்கள் வசம் இருந்து வந்த இந்தப்பகுதியை குஜராத் இளம்சுல்தானாக விளங்கிய மஹமூத் பகாடா 1484ம் ஆண்டு கைப்பற்றியுள்ளார். சாம்பானார் பகுதியை புனரமைத்து நூற்றுக்கணக்கான புதிய கட்டங்களை எழுப்பியுள்ளார். இதற்கு அவர் செலவிட்டது 23ஆண்டுகள். மேலும் இந்தப்பகுதிக்கு முகம்மதாபாத் எனப் பெயரிட்டு அவுரங்காபாத்தில் இருந்து தலைநகரத்தை சாம்பனாருக்கு மாற்றியிருக்-கிறார். இப்படி அழகு பார்த்து அமைத்த சாம்பனார் பகுதி, 1535ம் ஆண்டில் மொகலாய மன்னர் ஹுமாயூன் வசம் சென்றிருக்கிறது.

 இப்படியாக, பல வரலாற்றுப்-பக்கங்களை வசப்படுத்தி-யிருக்கும் சாம்பனார்- பாவாகத்தில் தற்போது எஞ்சி நிற்பது காளிக்கமாதா கோவில், ஐந்து மசூதிகள், மற்றும் சில கட்டடங்கள் மட்டுமே. இந்து, முஸ்லிம் கட்டடக் கலாச்சாரத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வரும் சாம்பனார்- பாவாகத் ஆர்க்கியாலஜிக்கல் பார்க், 2004ம் ஆண்டில் யுனெஸ்கோவின் உலக பண்பாட்டுச் சின்னங்கள் பட்டியலில் இடம் பிடித்தது.
எப்படிப் போகலாம்?
குஜராத் மாநிலம் பஞ்ச்மஹால் மாவட்டத்தில் இது அமைந்திருப்பதால் நல்ல சாலை வசதியைக் கொண்டுள்ளது. ரயிலில் செல்பவர்கள் கோத்ரா ரயில்நிலையத்தில் இறங்கி அங்கிருந்து போகலாம். வடோதராவில் விமானநிலையம் அமைந்திருக்கிறது. பாவாகத் மலைக்கோவிலுக்கு ரோப்கார் வசதி உள்ளது. அதில் பயணிப்பது புதுமை அனுபவம். 

கோயம்புத்தூர் மாவட்டத்தின் வரலாறு!


கோயம்புத்தூர், மாநிலத்தில் மூன்றாவது பெரிய நகரம், தமிழ் நாட்டில் ஒரு சிறந்த தொழில் வளர்ச்சி அடைந்த நகரம் ஆகும். இது தென்னிந்தியாவின் நெசவுத் தொழிலின் தலைநகரம் அல்லது தென்னிந்தியாவின் ஜவுளி உற்பத்தியின் தலைநகரம் என்றழைக்கப்படுகிறது. இந்நகரம், நொய்யலாற்றின் கரையில் அமைந்துள்ளது. கோசர்கள் இன மக்கள் கோசம்புத்துர் என்னும் இடத்தை தலைமையிடமாக கொண்டு வசித்து வந்தனர். இவர்கள் வாழ்ந்த இடமான கோசம்புத்துர் காலப்போக்கில் பெயர் மருவி கோயம்புத்தூர் என்றே அழைக்கபடுகிறது.

கோயம்புத்தூர் முற்கால சோழனாகிய கரிகாலனின் ஆட்சிக் காலமான இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே இருந்து வந்துள்ளது. இதனை இராஷ்டிரகுட்டர்கள், சாளுக்கியர்கள், பாண்டியர்கள், ஹோசைளர்கள் மற்றும் விஜயநகர பேரரசுகள் ஆட்சி புரிந்துள்ளன. சுருக்கமாக கோவை என்று அழைக்கப்படுகிறது. தொழில் துறை வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முக்கிய காரணமாக இருப்பது இங்கு தடையின்றி பெறப்படும் குடிநீரும் மின்சாரமும் ஆகும்.

கோயம்புத்தூரின் துவக்க காலம் குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. பழங்குடிகளான இருளர்கள் முதன்மைக் குடிகளாக இருந்தனர். 9ஆம் நூற்றாண்டின் இடையில் இரண்டாவது சோழர் ஆட்சி எழுந்தபோது கோயம்புத்தூரை தன்னாட்சியின் கீழ் கொணர்ந்தது. அவர்கள் கோனியம்மன் கோவிலை மையமாகக் கொண்டு முறையான நகரமைப்பை ஏற்படுத்தினர். இப்பகுதியை பழங்குடி மக்கள்,குறிப்பாக கோசர்கள்ஆண்டு வந்தனர்.கோசன்புத்தூர் என்றிருந்ததே கோயம்புத்தூர் என மருவியது.

1550களில் மதுரையில் விசயநகரப் பேரரசின் தளபதிகளாக இருந்த தெலுங்கு பேசும் நாயக்கர்கள் கோயம்புத்தூர் உள்ளிட்டப் பகுதிகளின் ஆட்சியாளர்களாக, பேரரசின் அழிவின் பின்னணியில், உருவெடுத்தனர். 1700களில் மதுரை நாயக்கர்களுக்கும் மைசூர் மன்னர்களுக்குமிடையே கோயம்புத்தூரில் சண்டை நடைபெற்றன. அப்போது 3000 பேர் வாழ்ந்த கோயம்புத்தூரின் ஆட்சி மைசூர் மன்னர்களின் கீழ் வந்தது.

1760களில் மைசூரின் சிங்காதனத்தை ஹைதர் அலி கைப்பற்றினார்.அவர் பிரித்தானியருக்கு எதிராக செயல்பட்டார். ஆற்காடு நவாப் தோழமையில் பிரித்தானியர் இப்பகுதியில் வேரூன்றுவதை தடுத்தார். இதனை அவரது வாரிசான திப்பு சுல்தான் தொடர்ந்தார். 1799ஆம் ஆண்டு அவரது மறைவு வரை திப்பு சுல்தான் பிரித்தானியருடன் பல போர்களை நடத்தினார். திப்பு சுல்தானின் மறைவிற்குப் பிறகு மைசூர் முந்தைய ஆட்சியாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டது.

அந்த நேரத்தில் கோயம்புத்தூரை பிரித்தானியர் தங்களின் மதராசு மாகாணத்தில் இணைத்துக் கொண்டனர். 1801ஆம் ஆண்டு கொங்குநாட்டு பாளையக்காரரான தீரன் சின்னமலை மலபார் மற்றும் மைசூர் படைகளின் ஆதரவுடன் பிரித்தானியருடன் போர் புரிந்தார். இப்போரின் முடிவில் 1804ஆம் ஆண்டு கோயம்புத்தூர் புதியதாக நிறுவப்பட்ட கோயம்புத்தூர் மாவட்டத்தின் தலைநகராக்கப்பட்டது. 1848ஆம் ஆண்டு நகராட்சி தகுதி வழங்கப்பட்டது. பிரித்தானிய வணிகரும் வள்ளலுமான சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்பவர் முதல் நகரவைத் தலைவரானார். அவரால் 1862ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஸ்டேன்ஸ் பள்ளி இன்றும் கோவை நகரின் முதன்மையான கல்விக்கூடங்களில் ஒன்றாக விளங்குகிறது.

1981ஆம் ஆண்டு அருகாமையிலிருந்த சிங்காநல்லூர் நகராட்சியை இணைத்து மாநகராட்சியாக உயர்வு பெற்றது.

ஒற்றுமை நீங்கின்........(.நீதிக்கதை )



வேடன் ஒருவன் பறவைகளைப் பிடிப்பதற்காக வலையை விரித்திருந்தான்.அவன் எதிர்பார்த்தபடி பல பறவைகள் வலையில் சிக்கின.

அவற்றைப் பிடிக்க அவன் வலையின் அருகே வந்தான்.உடனே அனைத்துப் பறவைகளும் வலையையே தூக்கிக்கொண்டு பறந்தன.

வேடனும்...அப்பறவைகளைத் துரத்திக்கொண்டு ஓடினான்.

அதைப் பார்த்த ஒருவர்' வேடனே..ஏன் வீணாக ஓடுகிறாய்.ஒற்றுமையாய் வானத்தில் பறக்கும் பறவைகளை உன்னால் பிடிக்க முடியாது' என்றார்.

அதற்கு வேடன்..' ஆம்..ஒற்றுமையுடன் அவை பறக்கும் வரையில் அவற்றை என்னால் பிடிக்க முடியாது.ஆனால் அவை ஒற்றுமையுடன் எவ்வளவு தூரம் பறந்து செல்லும்...விரைவில் அவற்றின் ஒற்றுமை நீங்கிவிடும் ' என்றான்.

அதற்கேற்றாற்போல மாலை நேரம் வந்தது.வலையை தூக்கிக்கொண்டு பறந்த பறவைகள் ஒவ்வொன்றும் தன் கூடு இருக்கும் பக்கமே பிடிக்கவேண்டும் என அதனதன் திசையில் வலையை இழுத்தன....இதனால் வலை கிழிந்து வலையுடன் அவை கீழே விழுந்தன.

வேடனும் தான் நினைத்தது நடந்தது என மகிழ்ந்து பறவைகளை பிடித்து சென்றான்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு...ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் தாழ்வு என்பதை பறவைகள் பின்னரே உணர்ந்தன..

2014 உலக கோப்பை டி20 முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா , பாகிஸ்தான் மோதல்!


 வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலக கோப்பை டி20 தொடரின் சூப்பர் 10 சுற்று தொடக்க லீக் ஆட்டத்தில், இந்தியா , பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த தொடருக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது.


 2012, அக். 8ம் தேதி வரையிலான உலக டி20 தரவரிசையில் முதல் 8 இடத்தை பிடித்த அணிகள், சூப்பர் 10 சுற்றில் நேரடியாக இடம் பெற்றுள்ளன. மீதம் உள்ள 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று போட்டியில் (மார்ச் 16,21) மொத்தம் 8 அணிகள் இரு பிரிவுகளாக லீக் ஆட்டங்களில் மோதுகின்றன. இதில் வங்கதேசம், ஜிம்பாப்வே அணிகளும் அடங்கும்.


இரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணிகள் சூப்பர் 10 சுற்றுக்கு முன்னேறும். மார்ச் 21ம் தேதி மாலை நடக்கும் தொடக்க லீக் ஆட்டத்தில் இந்தியா , பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.


இறுதிப் போட்டி ஏப். 6ம் தேதி நடக்க உள்ளது. எல்லா போட்டிகளும் சிட்டகாங், தாக்கா, சைலெட் மைதானங்களில் நடைபெறும். இதே தேதிகளில் மகளிர் டி20 உலக கோப்பையும் நடக்க உள்ளது. அதில் 10 அணிகள் பங்கேற்கின்றன. சூப்பர் 10 சுற்றில் (ஆண்கள் பிரிவு) இடம் பெற்றுள்ள அணிகள் : பிரிவு 1: இலங்கை, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, தகுதி அணி பி1. பிரிவு 2: இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, தகுதி அணி ஏ1.

இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும்-07



                       இந்திய வரலாறும் பழங்கால இந்திய வரைபடங்களும் என்ற தலைப்பில் ஆறு பதிவுகளை வெற்றிகரமாக கடந்து வந்துள்ளோம் தொடர்ந்து ஆதரவளித்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. வாரம் ஒரு பதிவாவது பதிவிட வேண்டும் என்று தான் முயற்சி செய்கிறேன் வேலைபளு காரணமாக  குறிப்பிட்ட நேரத்திற்குள் பதிவிட இயலவில்லை. ஏழாவது பதிவில் அடிஎடுத்துவைப்பதற்கு முன்பு இது வரை நாம் பார்த்து வந்த வரலாற்றின் காலக்கோடு (timeline) பார்த்து செல்வோம்.
இப்பிரபஞ்சத்தில்,
அண்டங்கள் உருவானது                                                   - 750 கோடி ஆண்டுகளுக்கு முன்பு
சூரிய குடும்பம் உருவானது                                           -  450 கோடி  ஆண்டுகளுக்கு முன்பு
பாக்டீரியா                                                                                    -  350 கோடி  ஆண்டுகளுக்கு முன்பு
முதல் உயிரினம்                                 -  100 கோடி ஆண்டுகளுக்கு முன்பு
டைனோசர் போன்ற ஊர்வன தோன்றியது   - 85 கோடி ஆண்டு 8 கோடி ஆண்டுகள் வரை
எலி போன்ற பாலூட்டிகள் தோன்றியது        - 6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு  
மனிதன் தோன்றியது                  -                                         -6 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு 
இந்தியாவில் மனிதர்களின் குடியேற்றம் தொடங்கியது- 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு
பழைய கற்காலம்                     -                                          -கி.மு 5 லட்சம் முதல் கி.மு 10000 ஆண்டு வரை
இடை கற்காலம்                                                - கி.மு10,000 முதல்  கி.மு6000 வரை
புதிய கற்காலம்                                   -கி.மு6000 முதல்  கி.மு4000 வரை
உலோக காலம்                                   - கி.மு4000 முதல்  கி.மு1500 வரை
வேத காலம்                                       -கி.மு1500 முதல்

                         நிலையான வாழ்க்கை இல்லாமல் நாடோடிகளாக வாழ்ந்த மக்கள் நாகரீக  வாழ்வை பெற்றதும் வேதங்களூம், புராணங்களூம் உபநிதங்களூம் தோன்றியதாக கடந்த பதிவுகளில் பார்த்தோம் அங்கனமெ மதங்களும் தோன்றின. அப்படி இந்தியாவில் தோன்றிய பல மதங்களில் மிகவும் பழமையானது நம் ஹிந்து மதம். ஹிந்து மத்த்தை பற்றி இனி விரிவாக அலசுவோம்.

ஹிந்து மதம்

ஹிந்து மதத்தின் தோற்றம் பற்றி பலவாறான கருத்துக்கள் வரலாற்று ஆசிரியர்களிடம் இருக்கின்றன. அதை எல்லாம் ஒப்பிட்டு பார்க்கும்பொழுது சிந்துசமவெளி நாகரீகத்திற்கு முன்பே ஹிந்து மதம் தோன்றியிருக்கிறது. அதாவது புதிய கற்காலத்தின் இறுதியில். உருவ வழிபாடு ஏதும் இல்லாமல் ஐம்பூதங்கலாகிய நெருப்பு, நீர், நிலம், காற்று, ஆகாயம் கடவுளாக கொண்டு இருந்துள்ளனர். ஹிந்து மத்த்தில் முதன்முதலில் தோன்றிய பிரிவு பிராமணர்கள். கிமு10 நூற்றாண்டில் ஆரம்பித்து கிமு6 நூற்றாண்டு வரை ஹிந்து மத்த்தின் வேதங்கள், மந்திரங்கள் மற்றும் கொள்கைகள் என அனைத்தும் இவர்களாலேயே உருப்பெற்றது. இதற்கு பல சான்றுகள் ரிக் வேத்த்தில் கிடைக்கின்றன. பின்னர் ஹிந்து மதத்தின் இரு பெரும் கிளைகளான சைவமும், வைணவமும் தோன்றியது.






இந்தியாவில் தோன்றியகாலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்று நம் ஹிந்து மதம்ஏறக்குறைய 850 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய சமயமாக விளங்குகிறது. நேபாளம், இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கபூர், அமெரிக்கா, கனடா  மற்றும் பிற பல நாடுகளிலும் இந்துக்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வசிக்கின்றார்கள்.

          பிற சமயங்கள் போல் இந்து சமயத்தை தோற்றுவித்தவர் என்று யாருமில்லைஇதனைக் நெறிப்படுத்த அல்லது கட்டுப்படுத்த என ஒரு மைய அமைப்பு இதற்கு இல்லைபல்வேறு வகையில் பரவலான நம்பிக்கைகள்சடங்குகள்சமய நூல்கள் என்பவற்றைக் உள்வாங்கி உருவான ஒரு சமயமே இந்து சமயம்.





ஹிந்து மத கோட்பாடுகள் ஆறு கிளைகளாக பிரிக்கபடுகிறது

1.சம்க்யா(Samkhya),
2.யோகா(yoga),

3.நியாய(nyaya),

4.வைஷேஷிகா(vaisheshika),

5.மிமாச்யா(mimasya),

6.வேதாந்தா(vedantha)

சம்க்யா(Samkhya)

ஹிந்து மத தந்திரங்களை பற்றி கூறுவது சம்க்யா. கபிலர் இதை தோற்றுவித்தார். இதில் மனம், அக ஆற்றல், ஆத்மா, மோட்சம் பற்றி பல குறிப்புகள் உள்ளன. உள்ளார்ந்த நினைவுகளில் சத்வம், ரஜஸ், தமஸ் எனப்படும் மூன்று நிலைகளும் இதில் வருகின்றன. கடவுள் பற்றியோ மோட்சத்திற்கு பிறகு என்ன என்ற குறிப்புகள் இல்லை.

யோகா(yoga)
யோகா மனித மனதை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும் வழிகாட்டி ஆகும். தியானம் முதல் சமாதி நிலை வரை பல நிலைகள் பதஞ்சலி முனிவரால் எழுதப்பட்டுள்ளது.
அஷ்டாங்க யோகா எட்டு நிலைகளை கொண்டது. இது தியானம் மூலம் மனிதன் முக்தி அல்லது சமாதி நிலையை அடைய வழிவகுப்பதாகும்
1.யாமா(yama- அஹிம்சை, சத்யம், பிரம்மச்சரியம்):

2.நியாமா(niyama- அகபுற தூய்மை, சந்தோசம், தவம், மத சார்பான புத்தகங்களை படித்தல் மந்திரங்களை தொடர்ந்து ஓதுதல், கடவுளிடம் தன்னை ஒப்படைத்தல்)

3.ஆசனா(asana- இயல்பாக சுவாசித்தல், சிரசாசனம், பத்மாசனம்)

4.பிரானயமா(pranayama- மனதையும் சுவாசத்தையும் ஒன்றாக்கி ஒருநிலைப்படுத்துதல்)
பிராணயாமா மூன்று பெரும் நிலைகளை கொண்டது
I) சுவாசத்தை உள்ளிழுத்தல்

II)சுவாசத்தை வெளிவிடுதல்

III)சுவாசத்தை நிலைப்படுத்துதல்
சுவாசத்தை உள்ளிழுத்து நிலைபடுதுதல்
சுவாசத்தை வெளிவிட்டு நிலைப்படுத்துதல்
சுவாசத்தை நிலைபடுத்தி உள்ளிலுதல் வெளிவிடுதல்

5.பிரத்யஹாரா(prathyahara- நினைவுகளிலிருந்து வெளிவருதல்)

6.தர்ணா(dharna- மன ஒருமைப்பாடு)

7.தியானா(dhayana- தியானம்)

8.சமாதி(samathi- சமாதி நிலை)
நியாய(nyaya)
ஹிந்து மத ஆறு தத்துவங்களில் இதுவும் ஒன்று. ஹிந்து மத்த்தின் அடிப்படை நியாய தர்மங்களை பற்றி இது குறிப்பிடுகிறது.
வைஷேஷிகா(vaisheshika)
இது ஹிந்து மத்த்தில் அறிவியல் சம்பந்தமான கோட்பாடுகளை கொண்டது. அணு பற்றிய குறிப்புகள் கூட இதில் உள்ளன.
மிமாச்யா(mimasya)
மிமாச்யா என்பதற்கு விசாரணை என்று பொருள். இது ஹிந்து மதத்தில் உள்ள ஆத்திகம் மற்றும் நாத்திகம் பற்றியதர்க்கான குறிப்புகள் உள்ளன
வேதாந்தா(vedantha)
        ஹிந்து மதத்தில் உள்ள வேதங்களை பற்றி இதில் குறிப்பிடுகின்றனர்
ஆதி சங்கரர் முதன் முதலில் வேதங்களை தோற்றுவித்தார் பின்னர் அது பல கிளைகளாக பல்வேறு முனிவர்களால் பிரிந்தது
இவ்வாறாக ஹிந்து மத தத்துவம் ஆறு கிளைகளாக உள்ளன. ஹிந்து மத தத்துவத்தை அடுத்து ஹிந்து மதத்தின் பிரிவுகளை பற்றி பார்ப்போம்.
ஹிந்து மதம் மூன்று பிரிவுகளாக பிரிக்கபடுகிறது
1.சைவம்
2.வைணவம்
3.ஸ்மார்த்தம்

சைவம்

சைவ சமயம் சிவ பெருமானை முழுமுதற் கடவுளாகக் கொள்ளும் சமயம். பிற சில முக்கிய சமயங்கள் போன்று இச்சமயத்தை ஒரு குறிப்பிட்டவர் தோற்றுவிக்கவில்லை.  இந்து சமயப் பிரிவுகளுள் முதன்மையானதாக கொள்ளப்படுகின்றது. ஆரம்பகால வரலாறு பற்றி சரியான சான்றுகள் இல்லை. பிற்காலத்தில் பாண்டியர்கள் காலத்தில் நாயன்மார்கள் தோன்றி சைவத்தை எழுச்சி பெறச்செய்திருந்தனர். தமிழில்  பதினெண் புராணங்களுள் பத்து புராணங்கள் சிவன் பற்றியவைஇந்தியாஇலங்கைநேபாளம்தென்கிழக்கு ஆசியா ஐரோப்பா முதலான எல்லா நாடுகளிலும் சிவாலயங்கள் காணப்படுகின்றன
      
மொகெஞ்சதாரோ - ஹரப்பா 

அகழ்வாராய்ச்சிகளிலிருந்துஆரியர் வருகைக்கு முன்பே ஒரு நாகரிகம் இந்தியாவில் இருந்த்தென்றும் அது திராவிட நாகரிகம் என்பதற்கும் அறிவியல் பூர்வமான சான்றுகள் கிடைத்தனஇதன் அடிப்படையில் ஜி.யு போப் அவர்கள் ஆரியர் வருகைக்கு முன்பே தெனிந்தியாவில் நிலவிய வரலாற்றுக்கு முற்பட்ட சமயமே சைவம் என்கிறார். அவர் கூறியவை பின்வருமாறு,
சிவனை வழிபடும் சிவநெறியாகிய சைவம் தென்னாட்டில் வரலாற்றுக்காலத்திற்கு முன்பிருந்தே நிலவிய தொன்மைச் சமயமாகும்இதனைச் சைவம் என்ற பெயரால் கி.பிஇரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய மணிமேகலை ஆசிரியர் குறிப்பதால் அறியலாம்.  சைவசமயத்தின் வரலாற்றை நாம் வெளிநாட்டு அறிஞர்கள் எழுதியதை வைத்து பேசுகிறோம்எனது அறிவுக்கு அக்கருத்துகள்வரலாற்று கூற்றுகள் தவறாகப்படுகின்றது. 'சமயமென்பது மனிதர்களை கடவுளின் நிலைகளுக்கு கொண்டு செல்வதுஅதாவது ஆன்மாக்களை பக்குவபடுத்தவே சமயத்தை சதாசிவ கடவுள் உலகம் உண்டாக்கப்பட்டபொழுது உண்டாக்கினான்இதை ஸ்ரீகண்ட உருத்தரர் தனது எட்டு சீடர்கள் மூலமாக உலகமக்களுக்கு போதிக்கபட்டதுஅவர்களின் காலத்தில் இமயமலை பூமியில் இல்லைகைலாயம் மேருமலையின் நடுவில் இருந்துள்ளதுமேருமலையோ பூமியின் மத்தியில் இருந்துள்ளதுஅதாவது பூமத்திய ரேகையின் மீதுமேருமலைக்கு தெற்கே தில்லை இருந்துள்ளது {திருவாசகத்தில் மாணிக்கவாசகர் தென்தில்லை என்று குறிப்பிட்டு உள்ளார்தில்லைக்கு தெற்கே இராவணவன்ன ஆண்ட இலங்கை இருந்துள்ளது. (இதை பட்டிணாத்தார் கூறியுள்ளார் 'தனது தாயின் உடலுக்கு நெருப்பு வைக்க பாடியபாட்டில் முன்னே இட்ட தீ தென் இலங்கை'. அன்று வாழந்த உயிரினங்களில் மனிதர்கள்தேவகள்அரக்கர்கள் என்ற உயிரினங்களும் வாழ்ந்து வந்துள்ளார்கள் (ஆராய்ச்சியாளர்கள் பூமியில் மூன்று விதமான மனிதரகள் வாழந்து வந்தார்கள என்கிறார்கள்அரக்கர்களும்தேவர்களும் தீரா பகையால் சண்டையிட்டு அழிந்து விட்டார்கள் என்கிறது தமிழ்ஆரியன் என்ற சொல் சதாசிவனையும்அவனின் நிலைஅடைந்தவரகளையும் குறிக்கும்செத்து சம்பலாகவும்புழுக்களானவர்களை குறிக்காதுஇன்றோ மடிந்து போன மனிதர்கள் உண்டாக்கிய மதங்கள் இப்பூமியை நரகமாக்கிறதுதிருமந்திரத்தை படித்தால் நான் சொல்லியுள்ள கருத்துகள் உண்மை எனபதை உணர்வீர்கள்.

பழம்பெருஞ் சமயமாகிய சைவத்தில் கடவுள் வழிபாட்டு பண்பும்பயனும் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டுள்ளனவாழ்ந்தே ஆகவேண்டிய தவிர்க்க முடியாத நியதிக்கு உட்பட்டிருக்கும் நமது வாழ்க்கை பதி (கடவுள்), பசு (உயிர்), பாசம் என்ற மூலங்கள் மூன்றின் சேர்க்கையால் ஆனதுஇவற்றில் பதிக்குப் பாசத்தால் ஆவதொன்றுமில்லைபாசத்துக்குப் பதியைத் தொழுது பயன் பெற்றுக் கொள்ளமுடியாதுமூன்றாவதாகிய பசுவே பதியின் இடையறாத உபகாரத்தால் தனது வினைப் பயனாகப் பிறந்து இறந்து பெறும் நீண்ட கால அனுபவத்தில் பாசத்தடையில் இருந்து நீங்கிப் பதியினைச் சார்ந்து விடுதலை பெறுவதற்கான நிலையில் உள்ளதுஇந்த நிலையே ஞானம் எனப்படுகிறதுஇந்த ஞானமே சைவ வழிபாட்டின் தனித்துவப் பண்பாகும்.

வைணவம்

வைணவ சமயம்விஷ்ணுவை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயமாகும்இச்சமயம் வைணவம் என்றும் வைஷ்ணவம் என்றும் அழைக்கப்படுகிறதுமேலும் இச்சமயம் ஹிந்து மதத்தின் உட்பிரிவுகளுள் ஒன்றாகும்தமிழ் மொழிக்கு வைணவம் என்ற பெயருண்டு.



உலகில் தீமைகள் ஓங்கும் போது இறைவன் அவதாரம் எடுத்து அவற்றை அழிப்பார் என்பது வைணவ நம்பிக்கைவைணவக் கடவுளான விஷ்ணு எண்ணற்ற அவதாரங்கள் எடுத்துள்ளதாகவும் நம்புகிறார்கள்விஷ்ணு அவதாரங்களில் மச்சகூர்மவராகநரசிம்மவாமனபரசுராமஇராமபலராமகிருஷ்ணகல்கி என்ற பத்து அவதாரங்கள் தசவதாரங்கள் என்று அழைக்கப்படுகின்றனஉபநிடதங்களில் பதின்மூன்று வைணவ உபநிடதங்களாகும்.


குப்தர் போன்ற அரசர்களின் காலத்தில் செல்வாக்கு பெற்று தென் ஆசிய முழுவதும் வைணவம் பரவியிருந்ததுவைணவத்தில் வடகலைதென்கலை என்று இருபிரிவுகள் உள்ளன.
வைனவர்களிடத்தில் திருமண் இட்டுக் கொள்வதில் இரண்டு யோக முறைகள் உண்டு:
  • வடகலை திருமண்காப்புபாதம் இல்லாமல் போடும் வடகலை நாமம்
  • தென்கலை திருமண் காப்புபாதம் வைத்துப் போடும் தென்கலை நாமம்

    வடகலை
    தென்கலை
    திருமால் தெய்வம்
    திருமகளும் தெய்வம்
    வடமொழி வேத வழி
    நாலாயிர திவ்யபிரபந்தம் நூலும் போற்றப்படும்
    பிராமணர்களுக்கு முதன்மை
    மக்களில் உயர்வு-தாழ்வு இல்லை


    வடக்கிலுள்ள திருப்பதிக்கு தென்கலை நாமம்.
    தெற்கிலுள்ள திருவரங்கம் கோவிலுக்கு வடகலை நாம்ம்
    ஸ்மார்த்தம்
    ஸ்மார்த்தம் என்பது ஹிந்து மதத்தின் ஒரு பிரிவாகும்இதனைப் பின்பற்றுபவர்கள் சிவன்,சக்தி, திருமால், விநாயகர், சூரியன், மற்றும் முருகன் என்ற அறுவரையும் முழுமுதல் கடவுளாக வணங்குகின்றனர்.


    ஸ்மார்த்தம் பழங்காலம் தொட்டே இருந்து வரும் இறைவழிதான் என்றாலும்ஆதிசங்கரர் தான் சீர்தூக்கி ஒரு புதுமுகத்தைக் கொடுத்தார்தனித்தனியாய் அவரவர்க்கு உகந்த இஷ்ட தேவதைகளை வணங்கிக் கொண்டு தனித்தனிப் பிரிவாய் கிடந்தவர்களை அழைத்துஇதோ உங்களுக்கெல்லாம் பொதுவானதொரு ஷ்ணமதம் என அதற்கான முறைகளை சீர்படுத்தினார்இதன் படி சிவன்சக்திதிருமால்கணேசர்சூரியன் மற்றும் முருகன் என்ற அறுவரையும் முழுமுதல் கடவுளாக வணங்கலாம்பொதுவாக இந்த முறையினை பின்பற்றுவர்களுக்கு ஸ்மார்த்தர் என்று இந்நாளில் வழங்கப்படுவாதால்இந்த வழிமுறையை 'ஸ்மார்த்தம்என்றே வழங்கலாம்இந்த வழியில் எல்லா வழிகளையும் ஏற்றுக் கொள்ளும்இலகுவான வளைந்து கொடுக்கும் தன்மையை ஏற்படுகிறதுஇன்று இந்து மதம் என்று நாமெல்லாம் பொதுவாக சொல்லும் ஒரு பொது முகம் உருவாகுவதற்கு இந்த வழிதான் தான் வித்து.
    ஸ்மார்த்தர்களுக்கு ஆதி சங்கரரின் அத்வைதம் தான் அடித்தளம்அதாவது இறைவன் ஈஸ்வரனும்நம் ஜீவனும் உண்மையில் முழுதிலும் பிரம்ம்மே.  மாயையில் சிக்குண்டதால்ஈஸ்வரன் வேறு ஜீவன் வேறு என்பதாகத் தெரிகிறதுஉயர் ஞானம் கிட்டுமாயின்இந்த வேறுபாடு தெளிந்திடும்முக்தி அடைவதற்கு ஒரே பாதை ஞானம் என்பது பெரும்பாலான ஸ்மார்த்தர்களின் நம்பிக்கை. இவ்வாறாக பிரிந்த ஹிந்து மதம் இன்று வரை தனித்தன்மையுடன் தலைதோங்கி நிற்கிறது.

    பின்னர் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பல மன்னர்களால் பின்பற்றப்பட்ட வந்த ஹிந்து மதம். இஸ்லாமியர்கள் வருகைக்கு பின்பு பல்வேறு இன்னல்களை சந்தித்தது. ஒரு மதத்தை தோற்றுவித்தவர் என்று யாரும் இல்லாமல், ஒரு தனி அமைப்பு என்று ஏதும் இல்லாமல் கிட்டத்தட்ட 2000 வருடத்திற்கு மேல் இந்தியாவை முஸ்லிம்கள் ஆண்டும்,  300 வருடங்களுக்கு மேல் பிரிட்டிஷ்காரர்கள் ஆண்டும் ஹிந்து மதத்தை ஒன்றும் செய்ய இயலவில்லை என்பதே அதன் தனி பெருமை.

    ஹிந்து மதத்தின் வரலாற்றை தொடர்ந்து வேதங்கள், வேதகாலத்தில் தோன்றிய புராணங்கள் மற்றும் உபநிடதங்களை பற்றி அடுத்த பதிவில் காண்போம்.

    சினிசிப்ஸ்!

    காமெடி  அதிரடி!
    நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘உத்தம வில்லன்’ படம் கமல் படத்தில் இதுவரை வந்திராத புதிய கதைக்களம் என்கிறார்கள். நல்லதுக்காக வில்லத்தனம் செய்யும் கேரக்டரில் கமல் நடிக்கிறாராம்.
    அப்படியானால் படம் முழுக்க வில்லத்தனம் தான் பிரதானம் என்று எண்ணி விடாதீர்கள். இது காமெடிக்களத்தில் பயணிக்கும் படம்
    என்பதால் சிரிக்கவும் வைக்கப் போகிறார், கமல்.
    ***
    அது தான் காரணமா?
    தமிழில் விஜயகாந்த் நடித்த ‘ரமணா’ படம் இந்தியில் ‘கப்பார்’ என்ற பெயரில் ‘ரீமேக்’காக இருக்கிறது. விஜயகாந்த் நடித்த கேரக்டரில் அக்ஷய்குமார் நடிக்க, சிம்ரன் கேரக்டரில் அமலாபாலும், ஆஷிதா கேரக்டரில் ஸ்ருதி ஹாசனும் நடிக்க தேர்வானார்கள்.
    ஆனால் இப்போது படத்தில் அமலாபால் இல்லை. மொத்தமாக கால்ஷீட் கொடுக்க முடியாது என்று சொல்லி விலகிக் கொண்டதாக தகவல்.
    ***
    எல்லாமே நட்பு தான்!
    தமிழ் சினிமாவின் பிசி ஹீரோக்களில் ஜெய் முக்கியமானவர். திருமணம் என்னும் நிக்கா, நவீன சரஸ்வதிசபதம், வடகறி, தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும், வேட்டை மன்னன், அர்ஜூனன் காதலி என ஒரே நேரத்தில் 6 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித கேரக்டர் என்றவரிடம், ராஜாராணி பட அனுபவம் பற்றி கேட்டபோது...
    ‘‘படத்தில் நயன்தாரா என்காதலி. அவருடன் ஜோடியாக நடிக்க என் எடையை 6 கிலோ அதிகமாக்கினேன். அதுமாதிரி அவரும் தனது உடல் எடையை கணிசமாக குறைத்தார். இந்தப் படம் நடிப்பில் எனக்கு புது வண்ணம் கொடுத்திருக்கிறது...’’
    முகத்தில் உற்சாகம் கொப்பளிக்க சொன்ன ஜெய்யிடம், ‘‘முதலில் அஞ்சலி. இப்போது நஸ்ரியா என உங்களை சுற்றி வரும் கிசுகிசுக்களை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்? ’’
    “சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஆண்களும் பெண்களும் நட்பு ரீதியில் பழகுவதில்லையா? அது மாதிரி தான் இதுவும். உடன் நடிக்கும் நடிகைகளிடம் நட்பு ரீதியில் பழகப்போக, அதற்கு வேறு அர்த்தம் கொடுத்து விடுகிறார்கள்.’’
    ***
    அடுத்த விளையாட்டு!
    சென்னை–28, வெண்ணிலா கபடிகுழு, சுண்டாட்டம் போன்ற விளையாட்டு பின்னணி கதையைக்கொண்ட படங்கள் வெற்றிபெற்றபிறகு அதுமாதிரி படங்கள் கோலிவுட்டில் வரத்தொடங்கி விட்டன. அந்த வரிசையில் இன்டோர் புட்பால் விளையாட்டை மையமாக வைத்து கே.குணா இயக்கி வரும் படமே எதிர்வீச்சு. நாயகனாக ‘சுண்டாட்டம்’ நாயகன் இர்பான் நடிக்கிறார். ‘தெரியாம உன்னை காதலிச்சிட்டேன்’ படத்தின் நாயகியான ரஸ்னா தான் இந்தப் படத்திலும் நாயகி.
    பயிற்சி மட்டுமே வெற்றி தரும் என்று எண்ணும் ஒரு அணியும், பணத்தை வீசினால் வெற்றி ஓடி வந்து மண்டியிடும் என்று நம்பும் இன்னொரு அணியும் மோத, யார் ஜெயிக்கிறார்கள் என்பது அதிரடி கிளைமாக்ஸ்.
    முழுக்க மலேசியாவில் தயாராகும் இந்தப் படத்தில் நாயகன் நடித்திருப்பதும் மலேசிய புட்பால்வீரர் கேரக்டரில் தான்.
    ***
    எல்லாமே தற்செயல்!
    இதுவரை நடித்த 15 படங்களில் தாஸ், குமரன் சன்ஆப் மகாலட்சுமி, பேராண்மை என 3 படங்களில் விளையாட்டு வீரராக பட்டை கிளப்பியிருப்பார் ஜெயம் ரவி. இப்போது நடித்து வரும் பூலோகம் படமும் இந்த ரகம் தான். குத்துச்சண்டை வீரராக இந்தப் படத்தில் நடிக்கும் ஜெயம்ரவி, ‘‘விளையாட்டு வீரன் சம்பந்தப்பட்ட படங்களெல்லாமே தற்செயலாக அமைகிறது என்பது தான் இதில் என் சந்தோஷம்’’ என்கிறார்.
    ‘‘சிறு வயதில் இருந்தே என்னுள் ஒரு விளையாட்டு வீரன் இருப்பதை உணருகிறேன். அந்த மன நிலையில்தான் வெற்றி தோல்வி இரண்டையும் எதிர்கொள்கிறேன். இந்த விளையாட்டு ஆர்வம்தான் நடிப்புக்கு மிகவும் உதவியது. பூலோகம் படத்தைத் தொடர்ந்து விளையாட்டுத்துறைக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் எனது கணிசமான நேரத்தையும் சக்தியையும் செலவிட முடிவு செய்திருக்கிறேன் என்கிறார்.
    இது ஒண்ணும் பூலோகம் பட வசனம் இல்லையே..!
    ***

    மாணவர் பிரச்சினை
    வியாபார நோக்கில் மட்டுமே எடுக்கப்பட்டு வரும்
    படங்களுக்கு மத்தியில் எப்போதாவது நல்ல சமூக சிந்தனையுள்ள படங்களும் வந்து ஹிட்டடிக்கின்றன. எங்கள் தயாரிப்பில் புதுமுகங்கள் நடிக்க ஜேப்பிஅழகர் இயக்கி வரும் ‘பிரமுகர்’ அப்படியொரு படம் என்கிறார், டி.டி.சுரேஷ்.
    ‘‘அப்படியென்ன கதை?’’ கேட்டால், ‘‘மாணவர்களின் இன்றைய அத்தியாவசிய பிரச்சினையை மையமாக வைத்து இதுவரை யாரும் சொல்லியிராத திரைக்கதை. கொஞ்சமும் எதிர்பார்த்திராத கிளைமாக்ஸ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கும். தொடர்ந்தும் இம்மாதிரி சமூக அக்கறையுடன் கூடிய படங்களே என் சாய்ஸ்!’’ என்கிறார்.
    அப்படீன்னா சமூக சீர்கேட்டை களையும் திரைக்கதை வைத்திருக்கும் இயக்குனர்களுக்கு அதிர்ஷ்டம் அடிச்சாச்சுன்னு சொல்லுங்க!
    ***
    ஆல்பம் பார்த்து...
    ‘அம்மா அம்மம்மா’ படம் மூலம் இசையமைப்பாளராக அடியெடுத்து வைக்கும் எம்.வி.ரகு, தொடக்கத்தில் கீபோர்டு பிளேயராகவே வெளிப்பட்டார். இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், சங்கர்–கணேஷ் ஆகியோரிடம் கீபோர்டு வாசித்தவர், அப்படியே கர்நாடக இசை, மேற்கத்தியஇசை இரண்டிலும் தேறி, இசைக்களத்தில் தன்னை இசையமைப்பாளராக அங்கீகரித்துக் கொண்டிருக்கிறார். இந்த காலகட்டத்தில் இவர் இசையில் வெளியான நூற்றுக்கணக்கான இசை ஆல்பங்கள் ‘யார் இவர்?’என்று கேட்க வைக்க, அதேநேரம் ‘அம்மா அம்மம்மா’  படத்தின் தயாரிப்பாளர் பார்வைக்கும் இந்த ஆல்பம் போக, அப்போதே  கைகூடியதுதான் இசையமைப்பாளர் வாய்ப்பு.
    இந்தப் படம் முடிவதற்குள் தரிசுநிலம் உள்ளிட்ட 3  படங்களில் வாய்ப்பு கனிய,  உற்சாகமாகி விட்டார், ரகு.
    ‘அம்மா அம்மம்மா’ படத்தின் இசை அனுபவம் பற்றிக்கேட்டால், ‘‘அது அம்மா–மகன் பாசப்போராட்டக் கதை. அதற்கேற்ற பாசப்பின்னணியில் ‘குக்கூ குயில் பாட்டு’ என்ற மெலடி பாடலுக்கு இசையமைத்தபோது யூனிட்டே ரசித்தது. அப்போதே இந்தப் பாடல் ஹிட் ஆகும். நானும் பேசப்படுவேன் என்ற நம்பிக்கை வந்து விட்டது’’ என்கிறார்.
    நல்ல இசை நாடறிய வைக்கும் தானே!
    ***
    சின்னத்திரை சிநேகா!
    திருமணத்துக்குப் பிறகு ‘உன் சமையலறையில், பண்ணையாரும் பத்மினியும்’ என 2 படங்களில் நடித்துவரும் சிநேகா, மிக விரைவில் சின்னத்திரை நிகழ்ச்சி  ஒன்றிலும் கலக்கவிருக்கிறார். இதற்காக அவருக்கு பேசப்பட்ட தினசரி சம்பளம் தான் கேட்பவர்களுக்கு தலையை சுற்றும்.
    ***
    மறுபடியும் தமிழ்!
    ‘அத்திரண்டிக்கு தாராதி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தெலுங்கில் நடிகை பிரணிதாவுக்கு வாய்ப்புகள் வரிசை கட்டுகின்றன. தமிழில் ‘சகுனி’ படத்தில் நடித்தவர், அந்தப்படம் எதிர்பார்த்த அளவுக்கு கைகொடுக்காததில் நொந்து போய்த்தான் தெலுங்குப் படஉலகம் போனார்.அப்படியே கன்னடத்திலும் நடிக்கத் தொடங்கினார்.
    இப்போது மீண்டும் தமிழ்ப்பட வாய்ப்புகளும் எட்டிப் பார்க்கத் தொடங்கி இருக்கின்றன.
    ஜெயிச்சாத்தான் நம்மவர்கள் அள்ளிக்குவாங்களே!
    ***
    ராசியான ஜோடி!
    காஜலுடன் ஜோடி சேர்ந்த ‘நான் மகான் அல்ல’ படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்தே ‘ஆல்இன்ஆல் அழகுராஜா’ படத்திலும் சென்டிமென்டாக அவருடன் ஜோடி சேர்ந்தார், கார்த்தி. இப்போது படம் எதிர்பார்த்தபடி திருப்தியாக வந்திருப்பதில், புதிய படத்தில் காஜல் ஜோடி என்றாலும் ஓ.கே. என்கிறாராம்.
    ராசியான ஜோடி என்றால் எத்தனை படங்களில் நடித்தாலும் ஜெயித்துக் கொண்டே இருக்கலாமே. நமக்கு வெற்றி தானே முக்கியம்.
    ***
    மறுப்பேனா, நான் மறுப்பேனா..!
    காஜல்அகர்வால் தமிழில் முன்னணி நடிகை. விஜய்யுடன் சேர்ந்து ‘துப்பாக்கி’ தூக்கியவர், அவரது அடுத்த படமான ‘ஜில்லா’வுக்கும் ராணியாகி விட்டார். இப்போது கார்த்தியுடன் ‘ஆல்இன்ஆல் அழகுராஜா’வை முடித்தவர், தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடிக்கிறார். கூடவே கைகோர்த்துக் கொண்டு ஒரு தெலுங்குப் படமும் வந்திருக்கிறது.
    இதற்கிடையே கமல் படத்தில் நடிக்க கேட்டதாகவும், காஜல் மறுத்ததாகவும் ஒரு தகவல். அதுபற்றி காஜலிடம் கேட்டால், ‘‘கமல் படத்தில் நடிக்க என்னிடம் யாரும் பேசவில்லை. அப்படியொரு வாய்ப்பு தேடி வந்தால் அதை எப்படி விடுவேன்’’ என்கிறார்.
    இதுவும் நடிப்பு இல்லையே!
    ***