Sunday 20 October 2013

சென்னையிலுள்ள பழமையான கட்டடங்களுக்கு வரைபடங்கள் தயாரிப்பு!

சென்னையிலுள்ள புனித ஜார்ஜ் கோட்டை, சேப்பாக்கத்தில் உள்ள பழமையான கட்டடங்கள் மற்றும் எக்மோர் அருங்காட்சியகம் போன்றவை அனைத்தும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டவை. இந்தக் கட்டடங்களுக்கு உரிய வரைபடங்கள் பொதுப்பணித் துறையிடமோ அல்லது அவற்றை மேற்பார்வை செய்து வரும் பொதுத்துறையிடமோ இதுவரை இல்லை. இதனால் இந்த பில்டிங்குகளின் வரைபடங்களைத் தயாரித்து அளிக்க பொதுப்பணித் துறைக்கு பொதுத் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பழமையான கட்டடங்கள் ஒவ்வொன்றையும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து அவற்றை அளவிட்டு வருகிறார்கள்.



20 Map of fort_st-_george1..mini


தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் நூறு ஆண்டுகளுக்கும் மேலான பழமையான கட்டடங்கள் உள்ளன. இந்தக் கட்டடங்களில் அரசுத் துறைகளின் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. குறிப்பாக, முதல்வர், அமைச்சர்களின் அறைகள் புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்திலும், சேப்பாக்கத்தில் உள்ள பழமையான கட்டடங்களில் சில அரசுத் துறைகளின் அலுவலகங்களும் இயங்கி வருகின்றன.



கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பழமையான கட்டடத்தில் சமூக நலன் மற்றும் சத்துணவுத் துறை இயக்குநரகம் செயல்பட்டு வந்தது. அந்தக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கோப்புகள் பல நாசமாகின. இதைத் தொடர்ந்து, சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை இயக்குநரகம் இடம் மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மற்றொரு பழமையான கட்டடத்தில் செயல்பட்டு வந்த தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் அலுவலகத்தின் மேற்கூரையும் சேதம் அடைந்தது. புனித ஜார்ஜ் கோட்டையில் 3 தளங்களில் செயல்பட்டு வரும் தலைமைச் செயலகக் கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் உயரதிகாரி ஒருவரின் வரவேற்பறை மேற்கூரையும் சேதம் அடைந்தது.


சேதம் அடைந்த அனைத்துக் கட்டடங்களையும் சீரமைத்து புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் அனைத்தையும் பொதுப்பணித் துறை அதிகாரிகள், அலுவலர்கள் மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து, தலைமைச் செயலக அதிகாரிகள் கூறியது: புனித ஜார்ஜ் கோட்டை உள்பட பழமையான கட்டடங்களில் உள்ள ஒவ்வொரு அறைகளின் வடிவமைப்பையும் விளக்கும் வரைபடங்கள் ஏதும் பொதுத்துறையிடம் இல்லை. இதனால், பழமையான கட்டடங்களில் சேதங்கள் ஏற்படும் போது அவற்றின் பழமை மாறாமல் புதுப்பிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இந்தச் சிரமங்களைத் தவிர்க்க வரைபடங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தனர்.

கூகுளில் தேடலின் சுவடே இல்லாமல் தேடிக்கொள்ள ஒரு லிங்க்!

கூகுள் சிறந்த தேடியந்திரம் தான். ஆனால் இது நல்லதொரு தேடியந்திரம் இல்லை என்கின்றனர். நம்பிக்கையோடு தேடி வரும் இணையவாசிகளின் ஒவ்வொரு அடியையும் சேமித்து வைப்பதால் கூகுள் அந்தரங்க ஊடுருவலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.



இதற்கு மாற்றாக டக்டக்கோ போன்ற தேடியந்திரங்கள் முன வைக்கப்படுகின்றன.இந்த நிலையில் கூகுள் தேடல் முடிவுகளை கவலையில்லமல் தேடித்தருவதற்காக ஒரு தேடியந்திரம் அறிமுகமாகியிருக்கிறது. ஸ்டார்ட்பேஜ் எனும் அந்த தேடியந்திரம் தன்னை உலகின் அந்தரங்கமான தேடியந்திரம் என வர்ணித்து கொள்கிறது. இணைய மொழியில் பாதுகாப்பான தேடியந்திரம் என இதை புரிந்து கொள்ளலாம்.





20 - tec Startpage-Home-Page-Virus


ஸ்டார்ட்பேஜ் என்ன செய்கிறது என்றால் கூகுளில் நேரடியாக தேடாமல் தன் மூலமாக கூகுளுக்கு வழிகாட்டுகிறது. இவ்வாறு ஸ்டார்ட்பேஜ் மூலம் கூகுளுக்கு செல்லும் போது வழக்கமாக கூகுளில் தேடும் போது நிகழும், ஐபி முகவரி சேகரித்தல், தேடல் முகவரி சேமிப்பு போன்றவை இல்லாமல் தேடிவிட்டு திரும்பலாம் என்கிறது. அதாவது தேடலில் சுவடு இல்லாமல் நிம்மதியாக தேடிக் கொள்ளலாம் என்கிறது.


அத்துடன் கூகுள் உள்ளிட்ட தளங்கள் இணையவ்ச்சிகள் கம்யூட்டருக்குள் அனுப்பும் குகுகீஸ் சாப்ட்வேரையிம் தடுப்பதாக ஸ்டார்ட்பேஜ் சொல்கிறது. கூகுள் சார்ந்த தேடிய‌ந்திரங்கள் பல‌ உண்டு. அவற்றில் இது சற்றே வித்தியாசமானது.


ஆனால் எந்த அளவு பயனுள்ளது என்று தெரியவில்லை,அதே சமயம் இணைய யுகத்தின் இப்போதைய மிகப்பெரிய பிரச்ச‌னையான இணையவாசிகள் பற்றிய தகவல் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கூடியது.


தேடியந்திர முகவரி:https://startpage.com/

கவிதை............




நெஞ்சில் வீரம் உண்டு

கண்ணில் கருணையும் உண்டு

சொல்லில் அற்புதம் உண்டு

பிறர் மனம் குளிர வாழ்ந்தால்

வாழ்வில் என்றும் வெற்றி உண்டு!

கவிதை.... கவிதை...



அனைத்தும் இருப்பவனிடம்

உதவிட எண்ணம் இல்லை

உதவிட நினைப்பவனிடம்

அனைத்தும் இருப்பதில்லை!