Sunday 17 November 2013

புகை பிடிக்கும் பழக்கம் உங்களிடம் உண்டா?? அவசியம் படிக்கவும்!

 
 
சத்தியமா இல்லவே.. இல்லைனு சொல்றீங்களா....

ஒரு நிமிஷம் இதப்படிங்க..

Colgate, Vicco, Dabur, Himalaya இப்படி 24 Brands எடுத்து சோதனை பண்ணினதுல 7 Brands-ல நிக்கோடின் கலந்து இருக்கறது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கு..

ஒரு சிகரெட்லயே 2...mg தான் நிக்கோடின் இருக்காம். ஆனா Colgate Herbal-ல அதிகபட்சமா 18mg /gm நிக்கோடின் இருக்காம்..

அப்ப நாம ஒரு தடவை இந்த பேஸ்ட்ல பல்லு விளக்கினா... அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்... அவ்வ்வ்....!!!

இந்த ஆராய்ச்சி முடிவு 2011-லயே வந்திருச்சி, ஆனா இதை பத்தி நமக்கு எதுவுமே தெரியாம பாத்துகிட்ட நம்ம பத்திரிக்கை , டி.வி சேனல்களோட சேவையை எப்படிதான் பாராட்றது..?

அதிசயங்களும், மர்மங்களும் கொட்டிக்கிடக்கும் இடங்கள்!

இந்தியாவில் மர்மங்களுக்கும், அதிசயங்களுக்கும் எந்த குறைச்சலும் இல்லை. தஞ்சை பெரிய கோயில் கோபுரத்தின் நிழல் கீழே விழுமா, விழாதா? தாஜ் மஹாலை கட்டியது யார்? என்று இன்னும் விடை அறியப்படாத கேள்விகள் எத்தனையோ தொக்கி நிற்கின்றன.

அந்த வகையில் காற்றில் மிதக்கும் கல், எலும்புக்கூடுகள் நிறைந்த ஏரி, பறவைகள் தற்கொலை செய்யும் இடம், வீடுகளுக்கு கதவுகளே இல்லாத கிராமம் என்று உங்களுக்காக அதிசயமான மர்மங்களும், மர்மமான அதிசயங்களும் காத்துக்கொண்டிருக்கின்றன.


மேக்னடிக் ஹில்

உங்க காரோ அல்லது பைக்கோ இந்த மேக்னடிக் ஹில்லில் பெட்ரோல் இல்லாமல் நின்றுபோய்விட்டால் கவலையே வேண்டாம்.
ஏனென்றால் இந்த மலையில் உள்ள காந்தப் பண்புகளின் காரணமாக வாகனங்களை மலையின் மேலே இழுக்குமாம். எனவே மேக்னடிக் ஹில் வந்தவுடன் நீங்கள் உங்கள் வாகனங்களின் இன்ஜின்களை நிறுத்துவிட்டு பெட்ரோல் இல்லாமலே பயணிக்கலாம்.



இந்த மேக்னடிக் ஹில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக் மாவட்ட தலைநகர் லே அருகே அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 11000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மேக்னடிக் ஹில் கார் பயணம் செய்பவர்களிடம் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது.


கொடிஞ்சி இரட்டையர் கிராமம்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கொடிஞ்சி கிராமம் இரட்டையர்கள் கிராமம் என்றே பிரபலமாக அழைக்கப்படுகிறது.


இந்த கிராமத்தில் 2008-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் போது பல சுவாரசியமான விஷயங்கள் வெளிவந்தன. அதாவது முதலில் 100 இரட்டையர்கள் என்று கணக்கிடப்பட்டு, 200 இரட்டையர்கள் என்றாகி தற்போது 400 ஜோடி இரட்டையர்களை இந்த கிராமம் கொண்டிருக்கிறது.

அதுவும் உலக அளவில் இந்தியா இரட்டையர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பதால் இந்த கிராமம் உலகப் பிரசித்தி பெற்றுவிட்டது.


காற்றில் மிதக்கும் கல்

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஷிவாபூர் என்ற இடத்தில் இந்த காற்றில் மிதக்கும் கல் காணப்படுகிறது. இந்தக் கல்லை 11 பேர் தங்கள் விரல்களால் தொட்டு "கம்மார் அலி தர்வேஷ்" என்று சொன்னால் காற்றில் மிதக்க ஆரம்பித்துவிடுமாம்.

200 கிலோ எடை கொண்ட இந்தக் கல் காற்றில் மிதக்கும் என்பது இன்னும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத கூற்றாகவே இருந்து வருகிறது.

எனினும் கம்மார் அலி என்ற அற்புத சக்தி படைத்த சூஃபி ஞானி இப்பகுதியில் வாழ்ந்ததாகவும், அவருடைய சக்தியால்தான் இந்தக் கல் காற்றில் மிதப்பதாகவும் உள்ளூர் மக்கள் நம்பி வருகின்றனர்.


ரூப்குந்த் லேக்

1942-ஆம் ஆண்டு உத்தரகண்ட்டின் உறைந்த ஏரியான ரூப்குந்த் லேக்கில் ஆய்வில் ஈடுபட்டிருந்த பிரிட்டிஷ் காட்டிலாக்க அதிகாரி ஏரி முழுக்க எலும்புக்கூடுகள் இருப்பதை கண்டு அதிர்ந்து போனார்.

அதோடு அந்த ஆண்டு கோடை காலத்தில் உருகிய ஏரி இன்னுமின்னும் மனித எலும்புக்கூடுகளை கக்கிக்கொண்டிருந்தது. முதலில் இரண்டாம் உலகப்போரில் இந்தியா நோக்கி வந்த ஜப்பானிய சிப்பாய்களின் எலும்புக்கூடுகள் இவையென்று சொல்லப்பட்டன.

ஆனால் அறிவியல் அறிஞர்கள் இந்த எலும்புக்கூடுகள் 9-ஆம் நூற்றாண்டில் இறந்த இந்திய பழங்குடியினரின் கூடுகள் என்று தற்போது கண்டுபிடித்துள்ளனர்.


பறவைகள் தற்கொலை செய்யும் இடம்!

அஸ்ஸாம் மாநிலத்தின் திமா ஹசாவ் மாவத்தில் அமைந்திருக்கும் ஜதிங்கா எனும் கிராமம் பறவைகளின் தற்கொலை பூமியாக மாறி வருகிறது.

இங்கு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் நவம்பர் மாதங்களில் பறவைகள் கூட்டம் கூட்டமாக தற்கொலை செய்துகொள்கின்றன. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.


அதாவது இந்த பருவத்தில் ஏற்படும் வானிலை மாற்றம் காரணமாக நிலத்தடி நீரில் உள்ள காந்தப் பண்புகள் மாறி அது பறவைகளின் உடலியல் இயக்கங்களை பாதித்து தற்கொலைக்கு தூண்டுகிறது என்ற ஒருசாரார் நம்புகின்றனர்.

அதேபோல பறவைகள் கூடு அதிவேக காற்றால் சிதறடிக்கப்பட்டு பறவைகளை ஒரு ஒளியை நோக்கி திருப்பிவிட்டு மூங்கில் கம்புகளை கொண்டு பழங்குடியின மக்கள்தான் அடித்துக்கொள்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.


ஷனி ஷிங்க்னாபூர்

ஷிர்டியிலிருந்து 73 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஷனி ஷிங்க்னாபூர் என்ற கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு கதவுகளே கிடையாதாம்! இங்குள்ள சனி பகவான் கோயிலில் வீற்றிருக்கும் சனீஸ்வரரே தங்கள் வீடு மற்றும் உடைமைகளை திருட்டிலிருந்து காத்து வருவதாக கிராம மக்கள் நம்புகின்றனர்.

திருட்டில் ஈடுபடுபவர்கள் சனீஸ்வரரின் சக்தியால் அன்றைய தினமே கண் பார்வை பறிபோய் குருடாகி விடுவார்கள் என்றும் நம்பப்படுகிறது. இந்த கோயிலுக்குள் ஆண் பக்தர்கள் மட்டுமே சென்று சனீஸ்வரரை தரிசிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

அலுவலகத்தில் வேலை செய்வதை தவிர்க்க சில புதுமையான யோசனைகள்!

உங்களுடைய வேலையிலிருந்து சற்றே கிளம்பிச் செல்லவோ அல்லது அதனை மறக்கவோ ஒரு காரணம் வேண்டும் என்ற நீங்கள் நினைக்கிறீர்களா?

ஏதாவதொரு வேலையை நமக்கு தேவையில்லை என்றோ அல்லது செய்ய முடியாது என்றோ நாம் தவிர்க்க நினைப்போம். வேலைக்காக நம்மை நம்பியிருப்பவர்களும் இருக்கிறார்கள். எனவே, அந்த வேலைகளை செய்யாமல் தவிர்க்க நமக்கு நல்ல காரணங்கள் தேவைப்படுகின்றன.

வேலையை தவிர்க்க உடல் நலம் சரியில்லை, குடும்ப பிரச்சனைகள் மற்றும் சொந்த காரணங்களை சொல்வது மிகவும் தேய்ந்து போன பழைய காரணங்களில் ஒன்றாகும். ஆனால், இந்நாட்களில் இந்த காரணங்களின் உண்மைகளை எளிதில் கண்டறிந்து விட முடியும். எனவே தான், நாம் புதுமையான யோசனைகளின் துணையைத் தேட வேண்டியுள்ளது. அவை மிகவும் எளிதாக நம்பக் கூடியவையாகவும், மாறுபட்டதாகவும் மற்றும் உண்மையாகவும் இருக்க வேண்டும்.

அலுவலகத்தில் வேலை செய்வதை தவிர்க்க சில புதுமையான யோசனைகள்!!!

அது போன்ற சில யோசனைகளை நாங்கள் இங்கே கொடுத்துள்ளோம்.

'தெய்வீக அருள் பெற்றவர்' வருகை - நீங்கள் உங்களுடைய பாஸிடம் சென்று தெய்வீகத்தன்மை கொண்ட ஒருவரை பார்க்கச் செல்வதாகவோ அல்லது உங்கள் நகரத்திற்கு வந்திருக்கும் மிகவும் மத நம்பிக்கை உள்ளவரை பார்க்கச் செல்வதற்காக உங்களுடைய சொந்த நகரத்திற்கு செல்வதாகவும் கூறலாம். இந்த காரணம் பெரும்பான்மையான நேரங்களில் சரிவர வேலை செய்யும். ஆனால், உங்களுடைய பாஸுக்கு கடவுளைப் பற்றி அதிக தகவல்கள் தெரியவில்லை என்றால் மட்டுமோ அல்லது நீங்கள் ஒரு நாத்திகர் என்று அவருக்குத் தெரிந்திருந்தாலோ மட்டும் தான் இந்த காரணம் பயன்படாமல் போகும்.

சட்டம் தொடர்பான காரணங்கள் - நம் நாட்டின் சட்ட அமைப்பு பற்றி அனைவருக்கும் தெரியும். நாம் ஒருமுறை போகாவிட்டால் கூட எந்த வேலையும் நடக்காது. எனவே உங்களுடைய சட்ட ரீதியான ஆவணம் சார்ந்த பணிக்கோ, சான்றிதழ் பெறவோ அல்லது வாக்குமூலம் கொடுக்க செல்வதாகவோ காரணம் சொல்லலாம். உங்களுடைய பாஸை சமாதானப்படுத்துவது தான் நீங்கள் செய்ய வேண்டிய ஒரே வேலை.

கல்யாண வரன் பார்த்தல் - குறிப்பிட்ட வயதுக்கு பின்னர், உங்களுக்கு கல்யாண வரன் பார்க்கும் அறிவிப்புகள் வருவது இயல்பு தான். நீங்கள் இதனை ஒரு சிறந்த காரணமாக சொல்லி வேலை செய்வதை தவிர்க்கலாம். நீங்கள் உங்களுடைய வருங்கால வாழ்க்கைத் துணையை பார்க்கப் போவதாக சொல்லலாம். அடுத்த முறை, அந்த சந்திப்பு எப்படி இருந்தது என்று கேட்டால், ‘சரியில்லை' என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லித் தப்பி விடலாம்.

நண்பரின் இறுதிச் சடங்கு - வேலைக்கு செல்வதை தவிர்க்க உங்களுடைய தாத்தா அல்லது சொந்தக்காரர்களை கொல்வது சாதாரண விஷயமாகி விட்டது. இப்பொழுது, இதில் உங்கள் நண்பர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் யாராவது ஒரு நண்பருடன் வெளியில் செல்ல வேண்டியிருந்தால், நண்பரின் இறுதிச் சடங்கிற்கு செல்வதாக சொல்லுங்கள். 'ஒவ்வொரு நண்பரும் முக்கியமானவரே' என்று சொல்வதைப் போல. ஆனால், மீண்டும் அதே நண்பரின் பெயரை சொல்லி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

'உதவி செய்யப் போகிறேன்' - நீங்கள் விபத்தில் மாட்டிக் கொணட ஒரு பெண்ணுக்கு உதவவோ அல்லது வேறொருவருக்கு உதவிக்காக லிப்ட் கொடுப்பதாகவோ சொல்லி உங்கள் வேலையைத் தவிர்க்கலாம். நீங்கள் அனைவருக்கும் உதவி செய்வது பயனுள்ளதாக இருக்கும், அதே வேளையில் வேலை செய்யாமலும் தவிர்க்க முடியும்.

இவையெல்லாம் உங்கள் வேலையை தவிர்ப்பதற்கான, சற்றே வித்தியாசமான மற்றும் விளையாட்டான யோசனைகளாகும். இதே போன்ற பல புதுமையான யோசனைகளை நீங்களும் வைத்திருப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இவையெல்லாம் புதிய யோசனைகள் மற்றும் பழையனவற்றை விட சற்றே திறன் மிக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை என்பது தான் இவற்றின் சிறப்பு.

விமானத்தின் எப்பகுதியில் அமருவது பாதுகாப்பானது....?

விமானத்தில் பயணம் மேற்கொள்ளும்போது, விமானத்தின் எப்பகுதியில் உள்ள இருக்கையில் அமர்ந்து பயணம் செய்வது விபத்து காலங்களில் சற்றே பாதுகாப்பானதாக இருக்கும் என்பது குறிந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

வானில் பறக்கும் விமானம் பத்திரமாக தரையில் இறங்கும் வரை நம் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பது தான் நிஜம். சுமார் 30000முதல் 50000 அடி உயரத்தில் அதுவும் 800 முதல் 1000 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும்விமானம் ஏதோ காரணத்தினால் கீழே விழும் பொழுது அதில் பயணம் செய்வோர் உயிர் பிழைப்பது என்பது மிக மிக அரிது. இருந்த போதிலும் அது போன்ற இக்கட்டான காலகட்டத்தில் விமானத்தின் எப்பகுதி இருக்கையில் அமர்ந்தால் சற்றே பாதுகாப்பாக இருக்கும் என்பது தான் இந்த ஆய்வின் நோக்கம்.

பிரிட்டனில் இருந்து செயல் படும் ஒரு தனியார் தொலைக்காட்சி போயிங்குடன் இணைந்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. விமானம் ஒன்றில் கேமரா பொருத்தப்பட்டு, விமானத்தினுள் "மாதிரி" மனிதர்கள் அமர்த்தப்பட்டு அந்த விமானம் விபத்துக்குள்ளாகும் போது உள்ளே நிகழும் பாதிப்புகளை கண்டறிந்தனர். இவை மட்டும் இல்லது இதுபோன்ற கடந்த 30 வருடங்களாக பல்வேறு தருணங்களில்நடத்தப்பட்ட ஆய்வும் கருத்தில் கொள்ளப்பட்டது.

அதன்படி விமானம் விபத்துக்கு உள்ளாகும் போது, விமானத்தில் முதல் வகுப்பு வகுப்பு அல்லது பிசினஸ் கிளாஸ் இருக்கைகள் தான் முதலில் மிகுந்த பாதிப்பு உள்ளாகிறது. அதாவது முதல் பதினொன்று இருக்கைகள் தங்கள் கட்டுப்பாட்டை முற்றிலும் இழந்து சிதறி விடுகின்றன. விமானம் வந்த வேகத்தில் தரையில் மோதும் போது முதல் 11 இருக்கைகள் முற்றிலும் சேதம் அடைகின்றன. எனவே இதில் பயணம் செய்தவர்கள் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை என கூறலாம். அதே நேரத்தில் விமானத்தில் பின்புறம் அதாவது எக்னாமிக் கிளாஸ் எனப்படும் இரண்டாம் வகுப்பு இருக்கையில் பயணம் செய்யும் பயணிகள் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என தெரிகிறது.

இந்த ஆய்வு குறிந்து கருத்து தெரிவித்துள்ள போயிங் நிறுவனம், விமானத்தில் எல்லா இருக்கையும் ஒரே அளவு பாதுகாப்பு உடையது தான். விமானம் விபத்துக்குள்ளாகும் போது எவ்வாறு தரையில் படுகிறது என்பதை பொருத்து தான் அதன் பாதிப்பு அமையும். மேலும் பயணிகள் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் அவர்கள் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவு, எனவே பாதுகாப்பான விமான பயணத்திற்கு சீட் பெல்ட் தான் மிக அவசியம் என தெரிவித்துள்ளது.

பாதுகாப்பான விமானம் விபத்துக்குள்ளாவதில்லை என்றும், அதுபோன்ற விமானத்தில் பயணம் செய்வது தான் பாதுகாப்பானது என்று ஏர்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுவரை நடந்த விமான விபத்துக்களில் அதிர்ஷ்ட வசமாக உயிர் பிழைத்தவர்கள் அனைவரும் விமானத்தில் எக்னாமிக் கிளாஸ் எனப்படும் இரண்டாம் வகுப்பு இருக்கையில் பயணம் செய்தவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்தியின் ‘பிரியாணி’ டிசம்பர் 20-ந் தேதி ரிலீஸ்!



பொங்கல் பண்டிகைக்கு ரஜினியின் ‘கோச்சடையான்’, கமலின் ‘விஸ்வரூபம் 2’, அஜீத்தின் ‘வீரம்’, விஜய்யின் ‘ஜில்லா’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ள நிலையில், வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘பிரியாணி’ படத்தையும் பொங்கலுக்கு களமிறக்க திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், பெரிய ஜாம்பவான்களின் படங்கள் அன்றைய தினம் வெளியாகவுள்ளதால், அவர்களுடன் போட்டி போட முடியாது என நினைத்த இப்படக்குழு படத்தை டிசம்பர்-20ந் தேதி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது. அரையாண்டு விடுமுறையை மனதில் வைத்து இந்த படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

‘பிரியாணி’ படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ஹன்சிகா மொத்வானி நடித்துள்ளார். பிரேம்ஜி, ராம்கி உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. இந்நிலையில், படத்தின் மீதும் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

சின்னதாய் யோசித்து பார்ப்போமா ?

*கணவனும் மனைவியும் சண்டை போட்டுக் கொள்கின்றார்கள்
என்பதற்காக அவர்கள் ஒருவரை ஒருவர் நேசிப்பதில்லை என்றாகி
விடுமா? இல்லவே இல்லை, ஏனென்றால் தம்பதியினர் ஒருவரை ஒருவர் மனதார நேசிக்கின்றார்கள்.இருந்தாலும் சில சமயங்களில் ஏன் சண்டை வருகின்றது.இப்படி சண்டை வருவதால் ஒருவரை
ஒருவர் புரிந்து கொள்ளாது மணவாழ்கை தனை முறிந்துக்
கொண்டு போகத்தான் வேண்டுமா என்பதனை சின்னததாய்
யோசித்து சின்னதாய் திருந்தினால் என்ன...............

*பொரும்பாலான தம்பதியினர் ஒருவர் மீது ஒருவர் அன்புடனும்
கனிவுடனும் நடத்தவே விரும்பினாலும் ,எல்லோரும் கருத்து
வேறுபாடு காரணமா, உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல்
தங்கள் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து
வாக்குவாதம் செய்து பெரிதாக கத்தி கூச்சல் போட்டு
கெட்ட கெட்ட வார்தையால் திட்டி கடினமாக நடக்கின்றோமே
இப்படி நடக்கத்தான் வேணுமா ?இப்படி ஒருவரை ஒருவர்
காயப்படுத்துவதால் நாங்கள் எதை சாதிக்கின்றோம்.
என சின்னதாய் இருவரும் யோசித்து பார்த்தால் என்ன?

*கணவனும் மனைவியும் ஒரோ விதமான கருத்துக்களை
பரிமாறிக்கொள்வோம் என்று இல்லை, பெரும்பாலும்
இது நபருக்கு நபர் வேறுபடும். உதரணமாக, ஒருவர்
ஒருவிடையத்தை கூறும் போது விரிவாய் கூறவிரும்பலாம்
மற்றவர் அதனை சுருக்கமாக கேட்க விரும்பலாம், இதனை
புரிந்து கொள்ளாது சண்டை ஏற்படும் போது உங்களை புரிந்து
கொள்ள, உங்கள் மனதை சின்னாய் திறந்து ,சிந்திந்து சின்னதாய்
ஒரு தரம் யோசிந்தால் என்ன?இப்படி யோசிந்து வரும்
வாக்குவதை தவிப்பதற்காக ஒருவர் கலந்து பேசாது தவிர்க்கலாம்.
இதனையும் புரிந்து கொள்ளாது மற்றவர் விடப்பிடியாக
பேசமுயலும் போதும் அப்போதும் சண்டைவரலாம் இப்படி புரிந்து
கொள்ளாது கூட குடும்பங்களில் சண்டை வரலாம்
இதனை இருவரும் சின்னதாய் புரிந்து சின்னதாதய் யோசித்தால் என்ன?

*கணவனும் மனைவியும் வெவ்வோறு சுழலில் வளர்ந்தவர்களாக
இரு்ப்பதால் தங்களுக்குள் எப்படி பேசிக்கொள்ளவேண்டும்
என்பது குறிந்து வெவ்வேறு கருத்துகளைக் கொண்டிருப்பார்கள் .
உதரணமாக, ஒருவர் அமைதியான வீட்டு சூழலில் வாழ்ந்து
இருப்பார் மற்றவர் கலகலப்பான வீட்டு சூழலில் வாழ்ந்திருப்பார்
இப்படியான வாழ்வியலில் இருந்து வரும் போது ஒருவர் தன்
மனம் திறந்து பேச தெரியாமல் தவிப்பார் .மற்றவர் தன்
மனம் திறந்து வெளிப்டையாக பேசுவார், இதனை புரிந்து
கொள்ளாது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு
ஒருவர் மேல் ஒருவர் கோவம் கொள்வதால் ஏற்படுபடும்
கருத்து வேறுபாட்டால் வரும் சண்டையை தவிர்ப்பதற்கு
சின்னததாய் மனம் திறந்து யோசிந்து பார்த்தால் என்ன?

கழுதை – வரிக்குதிரை கலப்பினச் சேர்க்கையில் அபூர்வ ‘வரிக்கழுதை’

 
உயிரியல் தத்துவத்துக்கு கோட்பாடுகளை வகுத்து தந்த டார்வின் காலத்தில் இருந்தே உயிரினங்களின் வாழ்க்கை ரகசியம் தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அவ்வகையில், பல்வேறு கலப்பின உயிரினங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு கட்டமாக, இத்தாலி நாட்டின் பிளாரன்ஸ் நகரில் ஆண் வரிக்குதிரை மற்றும் பெண் கழுதையின் கலப்பினச் சேர்க்கையின் பலனாக வரிக்கழுதை குட்டி ஒன்று பிறந்துள்ளது.

விலங்கினங்களில் வரிக்குதிரை, கழுதை போன்றவை குதிரை இனத்தின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது. எனினும், உயிர் உற்பத்திக்கு தேவையான ‘குரோமோசோம்’களின் எண்ணிக்கையில் ஒவ்வொரு விலங்கினத்திலும் வேறுபாடு உண்டு.

இந்த வேறுபாடுகளை எல்லாம் கடந்து பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த ஒரு ஆண் வரிக்குதிரை வேலியை தாண்டி தப்பிச் சென்று, வயலில் மேய்ந்துக்கொண்டிருந்த பெண் கழுதையுடன் இனச் சேர்க்கையில் ஈடுபட்டதன் விளைவாக வரிக்குதிரையின் கால் மற்றும் கழுதையின் முகம் மற்றும் உடலமைப்புடன் இந்த அபூர்வ வரிக்கழுதை பிறந்துள்ளது.

இதற்கு முன்னரும், வரிக்குதிரை – குதிரை, ஆண் கழுதை – பெண் குதிரை போன்றவை கலப்பினச் சேர்க்கையில் ஈடுபட்டு குட்டிகளை ஈன்றுள்ளன.

இருப்பினும், ஆண் வரிக்குதிரையும், பெண் கழுதையும் இணைந்து ஒரு குட்டியை ஏற்படுத்தியது இதுவே முதல் முறை என்று விலங்கியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சும்மா’ என்ற சொல் கோபமூட்டும்!

பேசும்போது சிலர் வழக்கமாக ஒருவித சொற்களை உச்சரிப்பார்கள், அது மற்றவர்களுக்கு பிடித்திருக்கலாம்; அல்லது எரிச்சல் தரலாம். அப்படி, நமது உரையாடலில் அதிகம் உச்சரிக்கப்படும் சொற்கள் எவை?, அதில் அதிக எரிச்சலை மூட்டும் சொற்கள் எவை? என்பது பற்றி சமீபத்தில் ஒரு கணக்கெடுப்பு அமெரிக்காவில் நடத்தப்பட்டது.

அந்த ஆய்வில், “வேறு என்ன?”, “அப்புறம்” என்ற சொற்கள் தான் அதிகமாக உறவு முறிவை, மனக்கசப்பை ஏற்படுத்தும் சொல் என்று தெரிய வந்துள்ளது. நியூயார்க் நகரிலுள்ள மாரிஸ்ட் கல்லூரி மாணவர்கள் இந்த கணக்கெடுப்பை நடத்தினார்கள். அந்த ஆய்வில் 10-ல் நான்கு பேர், “வேறென்ன”, “ஏதாவது” என்ற சொற்கள்தான் தங்களுக்கு தொந்தரவு செய்யும் வார்த்தையென்று குறிப்பிட்டுள்ளனர். ஐந்தில் ஒருவர், “இந்த மாதிரி”, “உனக்குத் தெரியுமா” போன்ற வார்த்தைகள் தங்களுக்கு எரிச்சல் தரும் என்று கூறி இருந்தனர்.

அதேபோல, “சும்மா”, “நிஜமாகவே” போன்ற வார்த்தைகள் பொறுத்துக் கொள்ள முடியாத கோபத்தை ஊட்டுவதாகவும் ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டது. நீங்கள், மற்றவர்களுடன் சுமூகமான உறவை நீடிக்க விரும்பினால், “வேறு ஏதாவது பேசு”, “வேற ஒண்ணுமில்லையா?”, “அப்புறம்” என்ற வார்த்தைகளை குறைவாக உச்சரியுங்கள். “நீ இந்த மாதிரி தவறுகளை செய்கிறாய்,” “அவன் இந்த மாதிரிதான்”, “அது உனக்குத் தெரியுமா?” “என்னைப் பற்றித் தெரியுமா”, “அவர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?”, “சும்மாதான் சொன்னேன்,” “விளையாட்டுக்குச் சொல்லவில்லை, சீரியசாகவே சொல்கிறேன்” போன்ற வார்த்தைகள் அதிகம் இடம் பெறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

திருமணங்களை நடத்தி வைக்கும் “ரோபோ’க்களை அடுத்து மாடு மேய்க்கும் ரோபோ ரெடி!




 சமீப காலமாக் ஜப்பானியர்கள் ரோபோக்களை வடிவமைப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் சிறிய ரக கார்களை ஓட்டும் மினி ரோபோக்கள், மனிதனின் கட்டளைகளுக்கு ஏற்ப சிறு சிறு பணிகளை செய்து முடிக்கும் வகையிலான ரோபோக்கள் போன்றவற்றை வடிவமைத்து ஜப்பானியர்கள் உலகின் பார்வையை தங்கள் பக்கம் ஈர்த்துள்ளனர்.

அத்துடன் திருமணங்களில் மணமக்களின் நண்பனாகவும், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பணியாளராகவும் செயல்படும் அதிநவீன ரோபோக்களையும் ஜப்பானிய நிபுணர் வடிவமைத்ததையடுத்து ஜப்பானை சேர்ந்த இளம் ஜோடிகள் பலரும் தங்கள் திருமணத்தில் இந்த அதி நவீன ரோபோக்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.இந்த வகையில், மாடு மேய்க்கவும் ரோபோக்களை ஆஸ்திரேலியாவில் உள்ள சில விஞ்ஞானிகள் வடிவமைத்து அசத்தி இருக்கிறார்கள்,

இதற்காக இந்த ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் நான்கு சக்கரங்கள் கொண்ட ஒரு ரோபோவை தயாரித்துள்ளனர். இந்த ரோபோ மேய்ச்சலுக்கு மாடுகளை கொண்டு செல்லும். அது மட்டுமின்றி இரவில் மாடுகளை கண்காணிக்கும். விவசாயிகளுக்கு பெரும் பயன் அளிக்கும் இந்த ரோபோவிற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ரோபோ முற்றிலும் தானியங்கி முறையில் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 nov 17 - tec robot-roundup.

டீ என்கிற தேநீர் – சூடு பறக்கும் சில உண்மைகள்!

 nov 17 - tea biscut.Mini

பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி பீகார் பொதுக்கூட்டத்தில் பேசியபோது, ஏழை குடும்பத்தில் பிறந்த நான், ரெயில்வே நிலையம் மற்றும் ஓடும் ரெயிலிலும் டீ விற்று இருக்கிறேன் என்று கூறினார்.இதைத் தொடந்து ஒரு கான்ஸ்டபிள் எஸ்.பி.யாக நடந்துகொள்ள முடியாது, டீ விற்றவரெல்லாம் பிரதமராக முடியாது என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் ஒருவர் கமான்ட் அடிக்க மோடி பதிலடியாக “டீ விற்றவரை நாட்டின் பிரதமராக கொண்டு வரலாமா வேண்டாமா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். நாட்டை விற்பதை காட்டிலும் டீ விற்பதே சிறந்தது.” என்றார் இப்படி சூடு பறக்கும் தேநீர் பிரியர்கள் உலகம் முழுமையும் இருக்கிறார்கள். `

கிமு 2737ல் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஒரு புகழ்பெற்ற சீனக் கதையொன்றின்படி, வேளாண்மையையும், சீன மருத்துவ முறையையும் கண்டுபிடித்ததாகக் கருதப்படும் ஷென்னொங் என்னும் சீனப் பேரரசன், ஒரு நாள் சுடுநீர் அருந்திக்கொண்டு இருந்தானாம். அப்போது, காற்று வீச அருகிலிருந்த மரமொன்றிலிருந்து சில இலைகள் அவன் அருந்திக்கொண்டு இருந்த நீருள் விழுந்தனவாம். அப்போது நீரின் நிறம் மாறுவதை அவன் கவனித்தான். புதிய விடயங்களை அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்டிருந்த பேரரசன், அந்த நீரில் ஒரு மிடறு அருந்தி அதன் வாசனையையும், உற்சாகம் தரும் இயல்பையும் அறிந்து வியந்தானாம்.

இப்பேர்பட்ட தேநீரை தினமும் 3 கோப்பை குடித்தால் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறைவு என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். முக்கியமாக தேநீர் குடிப்பது மாரடைப்பு ஏற்படுவதை பெருமளவுக்கு தடுக்கிறது.இப்படி தேநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஏற்கெனவே பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் தினமும் 2 கோப்பைக்கும அதிகமாக தேநீர் குடிக்கும் நபருக்கு வலிப்பு நோய் வரும் வாய்ப்பு 21 சதவீதம் குறைகிறது என்றும தற்போதைய ஆய்வில் தினமும் 3 கோப்பைகளுக்கு மேல் தேநீர் குடிப்போருக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு 70 சதவீதம் அளவுக்கு குறைவது தெரியவந்துள்ளது.

அத்துட்ன் தேநீர் குடிப்பது கோப உணர்ச்சியையும், மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது. இதயத்தில் ரத்தக் கட்டு ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் ரத்தக்குழாய்களை சிறப்பாக செயல்படத் தூண்டுகிறது. இதனால்தான் மாரடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

இதையெல்லாம் விட மேலாக தேநீரில் நிறைய புளோரைடு உள்ளது. புளோரைடு பற்களை பாதுகாக்கும் தன்மை கொண்டது. அந்நிலையில் மண்ணில் இருக்கும் ப்ளோரைடை `தேநீர்ச் செடி உறிஞ்சி எடுத்து தனது இலைகளில் சேமித்து வைக்கிறது. எனவே பற்களுக்கான சத்துக்களை வழங்கும் ஒரு இயற்கை பானமாக தேநீர் இருக்கிறது. பற்களில் `காரை’ படிவதையும் தேநீர் தடுக்கிறது.இனி பல்லை பாது காக்க ப்ளோரைடு உள்ள பற்பசையை தேடிப் போக வேண்டிய அவசியம் இல்லை. தேநீர் குடித்தாலே போதும்.

வானில் 28 - 29-ந் தேதிகளில் வால் நட்சத்திரம் தோன்றும்!



நமது சூரிய குடும்பத்தில், புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் உள்பட 8 கிரங்கள் உள்ளன. ஒரு சில கிரங்களைச் சற்றி துணக்கோள்களும் (நிலவு) இயங்குகின்றன.


இவற்றை தவிர ஏராளமான விண்கற்களும் சூழன்று வருகின்றன. இவற்றில் சில வால் நட்சத்திரங்களைப் போன்று தோன்றும் அந்த வகையில் ஐசான் என பெயரிடப்பட்ட வால் நட்சத்திரம் , நவம்பா் 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் காட்சியளிக்க உள்ளது.


இந்த வால்நட்சத்திரம் வினாடிக்கு 50 கி.மீ. வேகத்தில் பறந்து கொண்டிருக்கிறது. இது பூமியை நோக்கி நெருங்கி வருகிறது.


 குறிப்பாக தென்னிந்திய பகுதியை நோக்கி வருவதால்  இப்பகுதி மக்கள் இதை காண முடியும். 2 நாட்களிலும் மாலை 5 மணியளவில் இந்த நட்சத்திரம் காட்சியளிக்கத் தோன்றும்.


 மேகக் கூட்டங்களில் காண்பது கடினம். ஆகவே, சென்னை அறிவியல் மையத்தில் இதை காண்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்னும் 6 சுற்றுகள்; என்ன செய்யப் போகிறார் ஆனந்த்?

 

அடுத்தடுத்த சுற்றுகளில் தோல்வி அடைந்ததன் மூலம் கார்ல்ஸெனை விட 2 புள்ளிகள் பின் தங்கி உள்ளார் ஆனந்த். இன்னும் 6 சுற்றுகள் மட்டுமே மீதி உள்ளது. அதனால், அனுபவம் வாய்ந்த ஆனந்த் எத்தகைய ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்ற ஆவல் மேலோங்கி உள்ளது.

சர்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே) நடத்தும் இத்தொடர் சென்னையில் நடந்து வருகிறது. இதுவரை முடிந்த 6 சுற்றுக்களின் முடிவில், நார்வேயின் கார்ல்ஸென் 4 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளார். 5-வது மற்றும் 6-வது சுற்றுக்களில் அடுத்தடுத்து அவர் 2 வெற்றிகள் பெற்றதே இதற்கு காரணம்.

இத்தொடரில் 6.5 புள்ளிகளை முதலில் பெறுபவரே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். தரவரிசையில் முதல் இடத்திலுள்ள கார்ல்ஸென் இன்னும் 2.5 புள்ளிகள் பெற்றால், உலக சாம்பியனாகி விடுவார்.

ஓய்வுக்குப்பின் திங்கள்கிழமை 7-வது சுற்று தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆனந்த் தன் திறமையை நிரூபித்தாக வேண்டும். இந்த தொடர் தொடங்கும் முன், ஆனந்த் இவ்வளவு எளிதில் சரணடைவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. முதல் நான்கு சுற்றுகள் டிராவில் முடிந்தபோது நம்பிக்கையுடன் இருந்த ஆனந்த், அடுத்தடுத்த தோல்வியால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார். 6-வது சுற்றின் முடிவில் இது கண்கூடாகத் தெரிந்தது.

5-வது சுற்றின் தோல்வி, 6-வது சுற்று ஆட்டத்தில் எதிரொலித்தது என்று ஆனந்த் தெரிவித்திருந்தார்.

அடுத்தடுத்த தோல்விகளைக் கையாளும் விதம் குறித்து நார்வே பத்திரிகையாளர் ஒருவர் ஆனந்திடம் கேள்வி எழுப்பினார். அதற்கு ஆனந்த், ""இன்னும் திறமையாக செயல்பட வேண்டும்'' என்றார்.

பதிலை விரிவாகத் தெரிவிக்குமாறு அந்த நிருபர் வலியுறுத்தினார். அதற்கு ஆனந்த், ""திறமையாக செயல்பட வேண்டும் என்பதற்கு அர்த்தம் திறமையாக செயல்பட வேண்டும் என்பதே. இந்த ஆங்கிலம் ஏன் உங்களுக்குப் புரியவில்லை எனத் தெரியவில்லை'' என்றார்.

இதற்கு முன்பும் தோல்விக்குப் பின் பத்திரிகையாளர்கள் இதுபோல ஆனந்திடம் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், ஆனந்த் அப்போதெல்லாம் நிதானம் இழக்கவில்லை.

7-வது சுற்றில் ஆனந்த் வெள்ளை நிறக் காய்களுடன் விளையாட உள்ளார். கருப்பு மற்றும் வெள்ளை என இரண்டு நிறக் காய்களிலும் கார்ல்ஸென் திறமையை நிரூபித்து விட்டார். குறிப்பாக, கருப்பு நிறக் காய்களுடன் காரோ கான் மற்றும் பெர்லின் தடுப்பு முறைகளில் ஆனந்துக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்தார்.

புள்ளிகள் பட்டியல்

சுற்று ஆனந்த் கார்ல்ஸென்

1               0.5     0.5

2               0.5     0.5

3               0.5     0.5

4                0.5    0.5

5                    0      1

6                     0     1

* டிராவானால் தலா 0.5 புள்ளிகள்.

* வெற்றி பெற்றால் 1 புள்ளி.

நமக்கு ஏற்படும் கோபத்தை குறைக்க சில வழிகள்!

சராசரியாக  எல்லா மனிதருக்குமே இருக்கும் ஒரு குணம், கோபம். இந்த உலகில் கோபப்படாத மனிதரே இருக்கமுடியாது. அப்படி கோபம் இல்லாவிட்டால் அவர் மனிதராகவே இருக்கமுடியாது. எல்லோருக்குமே கோபம் வரும். ஆனால் அது வெளிப்படும் முறையில்தான் வித்தியாசம்.சிலபேர் அழுவார்கள், சிலபேர் கையை பிசைவார்கள், பல்லைகடிப்பார்கள், கையை ஓங்கி குத்துவார்கள் (சுவற்றிலோ அல்லது அடுத்தவர் மூக்கிலோ), காச் மூச்சென கத்துவார்கள், கையில் கிடைத்ததை போட்டு உடைப்பார்கள். சரியோ தவறோ, கோபப்படுவது அவ்வளவு நல்ல குணம் அல்ல. ஆனால் கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது?

1. கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள். மற்றவர்களையும் அன்போடு பாருங்கள். நிதானமாக கோபமூட்டிய நபரின் சூழ்நிலையை சிந்தியுங்கள்.

2. கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள். உடனே உங்கள் மனதை வேறு விசயத்தில் திருப்புங்கள்.

3. அவசரம் ஒருபோதும் வேண்டாம். பொறுமையாக இருங்கள்

4. நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்.

5. செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.

6. அந்த இடத்தை விட்டு நல்ல காற்றோட்டமான இடத்துக்கு சென்று விடுங்கள். அந்த நிகழ்வை பற்றி நினைக்காமல் நன்றாக மூச்சை இழுத்து விடுங்கள். இது உங்களை சாந்தப்படுத்தும்.

7. எனக்குத்தெரிந்து ஒரு மனிதனின் முகம் மிக அசிங்கமாக இருப்பது அவன் கோபப்படும்போதுதான். ஆகவே கோபம் வந்தால் உடனே கண்ணாடியில் முகத்தை பாருங்கள் (கண்ணாடி கைக்கெட்டும் தூரத்தில் இல்லாமல் இருப்பது நலம்). அசிங்கமான நம் முகத்தை பார்க்கும்போது நமக்கு சிரிப்பு வரும். அதன்பின் எப்போது கோபம் வந்தாலும் நம் முகம்தான் ஞாபகத்துக்கு வரும்.

8. கோபத்தில் தொலைவில் இருக்கும் யாரையாவது தாக்கவேண்டும், அல்லது திட்ட வேண்டும் என்றால், அதை கொஞ்சம் தள்ளிப்போடுங்கள். சாயங்காலம் திட்டலாம், நாளைக்கு கச்சேரியை வைத்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போடுங்கள். தள்ளிப்போட்ட எந்த காரியமும் உருப்பட்டதில்லை.

9. உங்கள் மனதுக்கு பிடித்த இசையை கேளுங்கள். வலுக்கட்டாயமாக இல்லாமல், இயல்பாக கேட்க ஆரம்பியுங்கள். இசை கேட்க விருப்பம் இல்லை என்றால் கார்டூன் சேனல் பாருங்கள்.

10. குழந்தைகளோடு உரையாடுங்கள். கோபம் பறந்துவிடும். இல்லை இரண்டு குழந்தைகளுக்கு இடையே நடக்கும் நிகழ்வுகளை கவனியுங்கள். பிறகு உங்களுக்கு அதே போலத்தானே நாமும் செய்கிறோம் என்று வெட்கபடுவீர்கள்.

11. ஜப்பானியர்கள் பொதுவாக கோபத்தை குறைக்க தலையணையை அடித்து துவைப்பார்களாம். ஆகவே தனக்கு காயம் ஏற்படுத்தாத இந்த முறையை பின்பற்றலாம்.

கோபம் உன்னையே அழித்து விடும்:உண்மையான பலசாலி யாரெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே

“ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும்” என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள்…
கோபம் ஏன் ஏற்படுகின்றது?

கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்ச்சிப் பூர்வமான, சுற்றுச்சூழல் சார்ந்த பல விஷயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை காரணமாக உண்டாகிறது.

· நாம் சொல்வதை (நம்மைவிட எளியவர்கள் என்று நாம் நினைக்கும்) மற்றவர்கள் மதிக்காத போது…

· நம்முடைய பிரச்சனைகளை உரியவர்கள் உடனே நிவர்த்தி செய்யாத போது…

· நாம் சொல்வது (தவறாகவே இருந்தாலும்) தவறு என்று பலர் முன்னிலையில் விமர்சிக்கப்படும் போது…

· எதிர்பார்த்த மரியாதை கிடைக்காத போது …இப்படியே பல காரணங்கள் உள்ளன.

ஒருவன் நம்மைப் பார்த்து “கழுதை” என்று திட்டும்போது நாம் “குரங்கு” என்று பதிலுக்குத் திட்டினால் அந்தச் செயல்தான் reaction ஆகும்.

ஆக உடனே சிந்திக்காமல் ஏற்படும் ஒரு வித அதிருப்தியான வெளிப்பாடு தான் கோபம். அல்லது நம்மை நாமே தாழ்த்திக் கொண்டு சிந்திக்கும் போது ஏற்படும் எதிர் விளைவு கோபமாகும்.

கோபம் தன்னையே அழித்து விடும்

ஒரு மனிதனின் வெற்றிக்கு தடையாத இருப்பதில் மிக முக்கியமானது கோபமாகும்.கோபம் கொள்வதால் நமது சிந்தனை, கவனம் போன்றன சிதறடிக்கப்படுகின்றன. சரியான சமயத்தில் செய்ய வேண்டிய செயல்கள் இதனால் பாதிக்படுகின்றன. நம்மை சுற்றி இருப்பவர்களைப் பற்றியும் சூழ்நிலையையும் உணராது நமது செயல்கள் பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. அவற்றுள்…

· வாழ்வின் சந்தோசத்தை பறித்து விடும். (கோபமும் சந்தோசமும் ஒன்றுக்கொன்று எதிரானவைகள்)

· திருமணம் மற்றுமுள்ள தொடர்புகளை அழித்து விடும்.

· தொழிலை முடக்கி விடும். காரணம் தொழில் என்பது தொடர்புகளுடன் சம்பந்தப்பட்டது.

· மன இருக்கத்தை ஏற்படுத்தி இருதய வியாதிக்கு வழிவகுக்கும்.

· முறையாக சிந்தித்து செயல்படுவதை தடுத்து நமது செயல்களை தவறானதாக்கி விடுகின்றது….கோபம், மாரடைப்பு முதலான இருதய நோய்களை உண்டாக்கி உயிரைப் பறித்து விடும் என்று வல்லுநர்கள் கூறுகின்றார்கள. 55 வயதுக்கு கீழே உள்ளவர்கள் கோபப்பட்டால் அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட இருதய வியாதிகளால் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு ஆகும். ஆனால் 55 வயதுக்கு கூடுதலாக இருந்தால் உயிரிழப்பு ஆபத்து 6 மடங்காக உயர்கிறது.

· கோபமானது இதய ரத்த நாளங்களை கடினமாக்கும் அடைப்புகளை திடீரென சிதைப்பதால், அங்கே அடைப்பு வேகமாக உண்டாக வாய்ப்பு ஏற்படும். இது மாரடைப்பில் விட்டு விடும்.

· இதயத் தசைகளில் வலிப்பு, இதயத் துடிப்பில் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், ஆஞ்சைனா எனப்படும் நிலையற்ற நெஞ்சுவலி போன்ற சிக்கல்களும் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் தான்.

· மூளையை தாக்கும் பக்கவாதத்துக்கு கூட கோபம் காரணமாக அமைவதுண்டு. ஆக, கோபம் உங்களை அழிப்பதற்கு முன் நீங்கள் அதை அழித்து விட வேண்டியது முக்கியம்.

கோபத்தைக் கட்டுப்படுத்துதல்:

கோபம் வரும்போது குறிப்பிட்ட மனிதன் தன்னிலை இழக்கிறான். இதனால் தான், கோபத்தில் கொந்தளிப்பவர்களுக்கு வியர்வை, நடுக்கம், மூக்கு விடைத்துக் கொள்தல், தூக்கமின்மை, ஓய்வின்மை, நெஞ்சுவலி, மாரடைப்பு, ரத்த அழுத்தம் திடீரென அதிகரித்தல், எரிச்சல், தசைகள் கெட்டித்தன்மை ஆவது, தலைவலி போன்ற பல பிரச்சினைகள் தோன்றுகின்றன அதனால் கோபத்தை அளவோடு வைத்து கொள்ளுங்கள்

மனிதனின் மனதை ஈர்க்கும் பட்டாம்பூச்சிகள்!

 

மனிதனின் மனதை ஈர்க்கும் அதிசயங்கள் பல அவற்றில் வணணத்துப்பூச்சிக்கு சிறப்பிடம் உண்டு. பல வண்ணங்களில் சிறகடிக்கும் பட்டாம்பூச்சிகள் பார்பவர்களை பரவசப்படுத்திவிடும்.

பட்டாம்பூச்சிகளில் 15,000 முதல் 20,000 வகையான பல்வேறு உள்ளினங்கள் உள்ளன. பட்டாம்பூச்சியின் இறக்கைகளில் காணப்படும் நிறங்கள் மிகப்பலவாகும். அதில் காணப்படும் நிறவடிவங்களும் கோலங்களும் அழகு வாய்ந்தவை. பட்டாம்பூச்சிகள் உலகில் பெரும்பாலான இடங்களில் வாழ்கின்றன.

ஒரு சில பட்டாம்பூச்சி இனங்கள் ஒராண்டு, ஒன்றரை ஆண்டு வரையும் வாழுகின்றன.

சில பட்டாம்பூச்சிகள் வியப்பூட்டும் விதமாக வெகுதொலைவு (3,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவு) பறந்து செல்கின்றன.

அந்த அழகு பட்டாம்பூசியைப் பற்றிய ஒரு கூடுதல் தகவல் இது. வண்ணத்துப்பூச்சிகளுக்கு காதுகள் கிடையாது என்றோ, அதன் உறிஞ்சுகுழல் மூலம் உணர்ந்து கொள்ளும் என்றோ நினைத்துக் கொண்டிருந்தால் அது தவறு.

இங்லாந்தில் உள்ள பிரிஸ்டோல் பல்கலைக்கழக குழு ஒன்று இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டது. அவர்கள் புளுமார்போ இன வண்ணத்துப்பூச்சிகளில் காதுகள் இருக்கும் ரகசியத்தை கண்டுபிடித்தனர். அதன் வண்ணமயமான இறகுகள் உடலோடு இணையும் பகுதியில் இந்தகாதுகள் அமைந்துள்ளன. இது சிறிய புள்ளி போன்ற சற்று மேலேழும்பிய குமிழ் போல காணப்படும். சாயம்போன மஞ்சள் நிறத்தில் இது அமைந்திருக்கும்.

இந்தபகுதியே வண்ணத்துப்பூச்சிகள் ஒலியை கேட்கத் துணைபுரிகிறது. 1000 முதல் 5 ஆயிரம் ஹெர்ட்ஸ் வரையிலான ஒலியை கேட்கும் தன்மையைப் பெற்றிருக்கின்றன. (மனிதனின் ஒலி உணரும் திறன் 20 மிதல் 20 ஆயிரம் ஹெர்ட்ஸ் அளவாகும். நமது பேட்டின் அதிர்வு 100 முதல் 4 ஆயிரம் ஹெர்ட்ஸ் வரை இருக்கும்.)

அதிர்வுகளை காதுகளின் மேற்புற செல்களே அறிந்து கொள்கின்றன. மற்ற ஒலி அலைகளை உட்புற செல்கள் நரம்புகள் கடத்தும் அதிர்வுகளாக மாற்ரி நரம்பு செல்கல் மூலம் அறிந்து கொள்கின்றன.

பறவைகளின் பாட்டுக்களை கேட்கவும், தன்னை நெருங்கிவரும் ஆபத்துக்களை அறியவும், திசைமாற்றி பறக்கவேண்டிய நேரத்திலும் இந்த உறுப்பை அதிகமாக பயன்படுத்துகின்றன.

1912 வரை வண்ணத்துப்பூச்சிகளுக்கு காது கேக்காது என்றே நம்பப்பட்டது. அதன் பிறகு சிலவகை பட்டாம்பூச்சிகள் ஒலி அதிர்வை அறிந்து கொள்வது கண்டுபிடிக்கப்பட்டது.

வண்ணத்துப்பூச்சிகளை கண்டு ரசியுங்கள்.

தோல்வியில் இருந்து மீள...

பொதுவாக தோல்வி என்பது எல்லா வயதினரும் சந்திக்கும் ஒரு துக்கமான விஷயமாகும். ஆனால், இதில் இளம் வயதில், பெண்கள் சந்திக்கும் காதல் தோல்வி அல்லது திருமண முறிவு என்பது சிலரது வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விடுகிறது.

காதல் தோல்வி அல்லது திருமண முறிவு என்ற இரண்டையும் இங்கே ஒரு சேர பார்க்கலாம்.

அதாவது, காதலிக்கும் நபர் நம்மை விட்டு விலகிச் செல்லும் போது ஏற்படும் துக்கம் தாங்கிக் கொள்ள இயலாததுதான். ஆனால், அதில் இருந்து வெளியே வந்து, அதனைத் தாண்டியும் உலகம் உள்ளது என்று வாழ்ந்து காட்டி பலரும் நிரூபித்திருக்கிறார்கள்.

வாழ்க்கையில் நம் துணை என்று மிகவும் நம்பிய ஒருவர் நம்மை கைவிடும் போது, வாழ்க்கையே இருண்டு போனதாக எண்ணி, அதற்குள்ளே சுற்றி சுற்றி வராமல், அதில் இருந்து வெளியே வரும் வழியைத்தான் ஒருவர் தேட வேண்டும்.

அதற்காக அழாமல், ஆறுதல் தேடாமல், அதனை உள்ளத்தில் வைத்து மறைத்து, பார்ப்பவர்களுக்கு தன்னம்பிக்கையோடு இருப்பதாகத் தோன்றி நடிக்க வேண்டாம்.

உங்களுக்கு எந்த வகையில் உங்களது துக்கத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று தோன்றுகிறதோ அந்த வகையில் அதனை வெளிப்படுத்துங்கள். அழுங்கள், தோழியிடம் கூறி ஆறுதல் தேடுங்கள், உரிய நபரை திட்டுங்கள்.. ஏதேனும் ஒரு வகையில் உங்களது துக்கத்தை வெளியே கொட்டிவிடுங்கள்.

பிறகு நம்மைப் பிரிந்து சென்றவரை மறக்க வேண்டும் என்றால், அவரது நினைவை ஏற்படுத்தும் பொருட்களை தூக்கி எறியுங்கள்.

வாழ்க்கையே அவர் தான் என்று எண்ணியிருந்த நாட்களை நினைப்பதை விட்டுவிட்டு, வாழ்க்கையில் புதிதாக என்னவெல்லாம் செய்யலாம் என்று நினைத்துப் பாருங்கள்.

காதலால் அல்லது திருமணத்தால் நீங்கள் விட்டப் பணியை அல்லது படிப்பை மீண்டும் தொடர முடியுமா என்பதை பற்றி யோசியுங்கள்.

பார்ப்பவர்களிடம் எல்லாம் பழைய சம்பவத்தைப் பற்றி பேசி மீண்டும் மீண்டும் அந்த சோகத்துக்குள் மூழ்க வேண்டாம்.

எப்போதும் யாருடனாவது இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். தனியாக இருப்பதை பெரும்பாலும் தவிர்த்துவிடுங்கள்.

உங்களை விட்டுச் சென்றவர் பொறாமைப்படும் அளவுக்கு வாழ்ந்து காண்பிக்க வேண்டும் என்று வைராக்கியம் கொள்ளுங்கள்.

வாழ்க்கையில் நீங்கள் அடைந்த தோல்வியே, உங்களது வெற்றிக்கான அடையாளமாக இருக்குமாறு உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.

உங்களுக்காக வாழ வேண்டும் என்று முடிவெடுத்து, அதனை வெற்றியாக மாற்றுங்கள்.

எந்த தோல்வியும் இறுதியல்ல.. ஒரு முற்றுப் புள்ளி அருகே அடுத்தடுத்து புள்ளிகளை வைக்கும் போது அதுவே தொடர்ச்சியாகிறது. அதை நினைவில் கொள்ளுங்கள். 

மனைவியை வசீகரிக்கும் பரிசு!

மனைவிக்கு, கணவர் பரிசுகள் கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். மனைவிக்கு மனப்பூர்வமாக தரும் பரிசுகள் மரியாதைக்குரியதாகவும், நேசிப்பின் சின்னமாகவும் என்றும் அவள் நினைவில் நிறைந்திருக்கும்.

அந்த பரிசு எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும்?
- உபயோகப்படுத்தக்கூடிய பொருளாக இருக்கலாம்.

- நேரடியாக உபயோகம் இல்லாவிட்டாலும், அழகான பொருளாகவும் இருக்கலாம்.
மனைவிக்கு தேவையான உபயோகப் பொருளை வாங்கிக்கொடுத்தால், அதை உபயோகப் படுத்தும்போதும் கணவரின் நினைவுவரும். அதனால் மனைவி எப்போதும் தன்னை நினைவில் வைத்திருக்கவேண்டும் என்று விரும்பும் கணவர்கள், அவள் அடிக்கடி பயன்படுத்தும் செல்போனை பரிசாக வாங்கிக்கொடுத்துவிடுவார்கள். ஆனால் அடிக்கடி உபயோகப் படுத்தும் பொருட்கள் சீக்கிரமே பழையதாகி, நாளடைவில் செயலற்றதாக ஆகி விடும். அதனால் தான் வாங்கிக்கொடுக் கும் பரிசு, செயலற்றதாகவே ஆகக்கூடாது என்று கருதும் கணவர்கள், கலைப் பொருட்களை வாங்கி பரிசாக வழங்கி விடுகிறார்கள். அழகான அந்த பொருட்கள் எப்போதும் கணவரை பளிச்சென நினைவில் வைத்துக் கொள்ள உதவும்.

மனைவியை மகிழ்வித்துப் பார்ப்பதுதான் தங்கள் கொள்கை என்று நினைக்கும் கணவர் கள் அழகிய புடவையோ, நகையோ பரிச ளித்து நல்ல பெயர் வாங்கி விடுகிறார்கள்.

பரிசுகள், திருமண பந்தத்தை கவுரவித்து மரி யாதை செலுத்துவதாக இருக்கிறது. மனைவிக்கு முதன் முதலாக கொடுக்கப்படும் பரிசுகள் இன்ப அதிர்ச்சிகளை கொடுத்து, நீண்ட நாட்கள் மகிழ்விக்கும் தன்மை கொண்டது. இந்த பரிசுகளை சம்பிரதாயமானது, சராசரி யானது என்று இரண்டு வகையாகப் பிரிக் கலாம்.

சம்பிரதாய ரீதியாக தரப்படும் பரிசுகள் விலை உயர்ந்ததாகவும், குடும்ப கவுரவத்தை வெளிப் படுத்தும் அம்சமாகவும் இருக்கும். அந்த பரிசுகள் தொடக்கத்தில் அதிக ஆச்சரியத் தையும், மகிழ்ச்சியையும் தந்தாலும், அந்த பரம்பரை பரிசுகளை பாதுகாக்கும் பெட்டகம் மாதிரியே அந்த பெண் ஆகிப்போவாள். அந்த பரிசுகளும் பெரும்பாலும் அந்த பெண்ணால் தனிப்பட்ட முறையில் எல்லா இடங்களிலும் பயன்படுத்தக்கூடியதாகவும் இருக்காது. சம்பிர தாய பரிசுகள் பெரும்பாலும் பெட்டகத்தில் வைத்து பூட்டக் கூடியதாகத்தான் இருக்கும். சம்பிரதாயம் இல்லாமல் தனிப்பட்ட முறையில் தரப்படும் பரிசுகள், பயன்பாட்டு அடிப் படையில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. சம்பிரதாய பரிசு எப்போதாவது ஒருசில முறை தான் கிடைக்கும். தனிப்பட்ட பரிசுகள் அடிக்கடி கிடைக்கும். அதனால் இந்த தனிப்பட்ட பரிசுகள் மீது பெண்களுக்கு ஆர்வம் அதிகம். அடிக்கடி அவர்களை சிரிக்கவைக்க இந்த பரிசுகள் உதவும்.

வாழ்க்கையின் வெகுதூரத்தை கடந்த பிறகும் மலரும் நினைவுகளாக, பல பரிசு பொருட்கள் நிலைத்து நிற்கின்றன. பெரும்பாலான நேரங்களில் சாதாரண பரிசு பொருட்கள் கூட, காலங்கடந்து நின்று பெண்களை மகிழ்ச்சியடையச் செய்யும். மிகப்பெரிய பரிசுகள் கிடைத்தபின்பும், அந்த சாதாரண பரிசுகள் பெண்கள் மனதில் நிலைத்து நிற்பதும் உண்டு.

சில பரிசுகள் என்ன பரிசு என்பதைவிட, யார் கொடுத்தது என்பதைவைத்து சிறப்பு பெறும். பிற்காலத்தில் ஏற்படும் சில கசப்பான நினைவுகளை மாற்றியமைக்கும் ஆற்றல்கூட அந்த பரிசுகளுக்கு உண்டு.

முன்பெல்லாம் ஆண்கள் மட்டுமே பெண்களுக்கு பரிசுகளை கொடுத்துக்கொண்டிருந் தார்கள். பெண்கள் உழைப்பதில்லை என்பதால் அந்த நிலை. இப்போது பெண்கள், ஆண்களைவிட அதிகம் சம்பாதிக்கும் நிலை இருந்துகொண்டிருக்கிறது. அதனால் ஆண் களுக்கு நிகராக பெண்களும் அன்புப் பரிசுகளை அள்ளிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

பழைய காலத்தில் பெரிய பெரிய சமஸ்தானங்களில்கூட மனைவிக்கு பரிசு கொடுக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. மன்னர் ஒருவர் தன் மனைவிக்கு அன்னப்பறவையின் இறகை பரிசாக கொடுத்தார். வியந்து போன அரசி, அவரை ஆச்சர்யத்துடன் பார்க்கையில், “இதை நீ எத்தனை காலம் பத்திரமாக வைத்திருக்கிறாய் என்பதைப் பொறுத்துத்தான் என் மீது நீ வைத்திருக்கும் அன்பை நான் புரிந்து கொள்வேன்” என்றார். அரசி அதனை வாழ்நாள் முழுவதும் தங்கப் பேழையில் வைத்துப் பாதுகாத்தார். அன்னப் பறவையின் இறகு என்பது அந்த காலத்தில் பெரிய விஷயம் இல்லை. ஆனால் அந்த மெல்லிய இறகில் அந்த மன்னர் தன் அன்பையும் கலந்துவிட்டதால் அது தங்க பேழைக்கு செல்லும் உயர்ந்த பரிசாகிவிட்டது. நீங்கள் உங்கள் மனைவிக்கு வழங்கும் பரிசும் அன்பு கலந்ததாக இருக்கட்டும். அவள் அதை தங்க பேழை போன்ற தன் மனதுக்குள் வைத்து பாது காப்பாள். அதன் மூலம் உங்கள் ஆத்மார்த்த உறவு மேம்படும்.

வங்காளதேசத்து மீனவர் ஒருவர் தன் மனைவிக்கு வெண் சங்கு ஒன்றை அன்பு பரிசாக அளித்தார். அதை பத்திரமாக வெகுகாலம் பாதுகாத்து வந்தாள் மனைவி. மனைவி இறக்கும் தருவாயில் மீனவர் அந்த வெண் சங்கை வீடு முழுவதும் தேடினார். எங்கும் கிடைக்காமல் போகவே, மனைவியிடம் வந்து நான் கொடுத்த அன்பு பரிசை தொலைத்து விட்டாயா என்று கேட்டார். அவளோ தொலைந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் அதில் வளையல் செய்து கைகளில் அணிந்திருக்கிறேன் இதோ பாருங்கள் என்றாள்.

அன்றிலிருந்து வங்காளதேசத்தில் மணமகளுக்கு மணமகன் வெண் சங்கு வளையல் அணிவிக்கும் வழக்கம் உருவானது. இன்றும் அது தொடர்கிறது!

இவங்கலாம் இன்னமும் இருக்காய்ங்கயா! ! சொன்னா நம்புங்க..

இவங்கலாம் இன்னமும் இருக்காய்ங்கயா! ! சொன்னா நம்புங்க..

1) துப்பட்டாவின் நோக்கம் அறிந்துப் போடற பொண்ணுங்க


2) சரக்க மோந்துப் பார்த்தாலே மயக்கம் போடற பசங்க


3) கை முறுக்கு சுடத் தெரிந்தப் பாட்டிங்க


4) எவ்ளோ பெரிய சிக்கு கோலத்தையும் அசால்ட்டா போடற அம்மாக்கள்


5)அப்பா ஏதாவது கேட்டா நின்று பொறும பதில் சொல்ற பிள்ளைங்க


6) ஒரே ஒரு மொபைல் ,ஒரே ஒரு சிம்கார்ட் ,  ஒரே ஒரு காதல் இருக்கிற பொண்ணுங்க ,பசங்க


7) மல்லிகைப் பூவையும் கண்ணாடி வளையலையும் நேசிக்கும் பெண்கள்


8) பொண்ணுங்க கிட்ட பேச கூச்சப் படற பசங்க. முறைப் பையன பார்த்தா வெட்கப்படறபொண்ணுங்க.


9) மதிய உணவை ஒன்றாக அமர்ந்துச் சாப்பிடும் குடும்பங்கள்


10)சொந்த மண்ணையும் மொழியையும் மறக்காத மனிதர்கள் என!!


இவங்கலாம் 100 ல 2% தான் இருக்காங்க..

கணவருக்கு சிறுநீரகத்தை தானமளித்து சர்வதேசப் போட்டியில் பதக்கம் வெல்லச் செய்த பெண்!!

 ஹரிகுமார் - சரண்யா

காதல் கணவருக்கு தனது சிறுநீரகத்தை தானம் அளித்ததன் மூலம் அவரை சர்வதேசப் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்லச் செய்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்.

நடுத்தரக் குடும்பம். நல்ல கல்வி. ஐ.டி. நிறுவனத்தில் வேலை. ஐ.டி. நிறுவனத்திலேயே பணியாற்றும் பெண்ணை காதலிக்கும் வாய்ப்பு. காதலித்த பெண்ணுடன் பெற்றோர் சம்மதத்தில் திருமணம். இப்படியாய் மகிழ்ச்சிக் கடலில் நீந்தித் திளைத்தார் ஆர். ஹரிகுமார் (28).

ஆனால் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே இடி விழுந்ததுபோல அதிர்ச்சி தரும் செய்தி.

உடல் நலம் சற்று பாதித்த நிலையில் மருத்துவமனைக்குச் சென்றபோது, அவரை பரிசோதித்த மருத்துவர் ஹரிகுமாரின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாகக் கூறினார்.

சிறுநீரகம் கிடைப்பது கடினம் 


“அவ்வப்போது தலைவலி, தலைச்சுற்றல் ஏற்படும். பணிச் சுமையே காரணம் என நினைத்து அலட்சியமாக இருந்து விட்டேன். ஆனால் எனக்குள் இருந்த ரத்த அழுத்தப் பிரச்னை எனது சிறுநீரகங்களின் செயல்பாட்டை முடக்கி விட்டது என்பதை பிறகுதான் உணர்ந்து கொண்டேன். அதன் பின்னர் ஏராளமான மருத்துவர்கள், பலவித சிகிச்சைகள் என அலைந்தேன். எவ்வித முன்னேற்றம் இல்லை. இறுதியில் நண்பர் ஒருவர் கூறியதன் பேரில் சேபியன்ஸ் அறக்கட்டளையைச் சேர்ந்த டாக்டர் ராஜன் ரவிச்சந்திரனை சந்தித்த பிறகுதான் நம்பிக்கை ஏற்பட்டது.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வது என முடிவாயிற்று. ஆனால் சிறுநீரகம் கிடைப்பது எளிதாக இல்லை. இறுதியில் எனது மனைவி சரண்யாவே தனது ஒரு சிறுநீரகத்தை தானமாகத் தந்து என்னைக் காப்பாற்றியுள்ளார்” என்றார் ஹரிகுமார்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் பங்கேற்கும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் தென் ஆப்ரிக்காவின் டர்பன் நகரில் கடந்த ஜூலை 29-ம் தேதிமுதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை நடைபெற்றது. அதில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட ஹரிகுமார், வட்டு எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று, நம் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

“நம் குடும்பத்தில் ஒருவர் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படும் போது, குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் சிறுநீரகம் தானம் அளிப்பதே சிறந்தது” என தனது அனுபவத்தின் மூலம் கூறுகிறார் ஹரிகுமார் மனைவி சரண்யா (25).

உறுப்பு தான விழிப்புணர்வு குறைவு

“இன்று சிறுநீரக நோயாளிகள் சிறுநீரகங்களைத் தானமாகப் பெற இரண்டு வழிகள்தான் உள்ளன. ஒன்று குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் தானமாகத் தர வேண்டும். இல்லையெனில் விபத்துகளின் காரணமாக மூளைச்சாவு ஏற்பட்டோரின் சிறுநீரகங்கள் தானமாகப் பெறப்பட வேண்டும். எனினும் மூளைச்சாவு ஏற்பட்டோரின் உறுப்புகளை தானம் அளிப்பதற்கான விழிப்புணர்வு நம் நாட்டில் மிகவும் குறைவாகவே உள்ளது. ஆகவே, குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் தானமாக அளிப்பதன் மூலம் விரைவான சிகிச்சை கிடைப்பதோடு விரைவில் நலம் பெறவும் முடியும். நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருப்பவர்கள் சிறுநீரகம் தானம் அளிப்பதால் அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. எனது ஒரு சிறுநீரகத்தை எனது கணவருக்கு தானம் அளித்த நிலையில், மற்றவர்களைப் போல நானும் மிகவும் ஆரோக்கியமாகவே உள்ளேன்” என்கிறார் சரண்யா.

சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படும் மற்றவர்களுக்கு கூற விரும்புவது என்ன என ஹரிகுமாரிடம் கேட்டோம். “நல்ல ஆலோசனை தரும் மருத்துவரை விரைவாக அடையாளம் காண வேண்டும். எந்த வகையில் சிறுநீரகத்தை தானமாகப் பெறப் போகிறோம் என்பதையும் உடனடியாக முடிவு செய்ய வேண்டும். அதே நேரத்தில் சிகிச்சைக்கு தேவையான பணத்தையும் ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் மூலம் நம்மால் விரைவில் சிகிச்சை பெற முடியும். இது தொடர்பாக யாரேனும் என்னுடைய 97911 98017 என்ற செல்பேசி எண்ணில் தொடர்பு கொண்டால் எனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளேன்” என்றார் ஹரிகுமார்.

அரிப்பு நோயை தடுக்க நாட்டு வைத்தியம்!

கொசுக்களை விரட்டுவதற்கு சருமத்தில் க்ரீம்களை தடவுவதால், ஒருவேளை இன்னும் அதிகமாக கொசுக்கடிக்கு உள்ளாகும் சூழ்நிலை ஏற்படலாம். குறிப்பாக வெப்பம் அதிகமாக இருக்கும் சமயத்தில் தூங்குவதற்கு முயற்சிக்கும் போது, சரும அரிப்பு காரணமாக நாம் சொரிய ஆரம்பிக்கிறோம்.

உடனடியாக அரிப்பிலிருந்து சுகம் கிடைப்பதற்கு, பாதிக்கப்பட்ட பகுதியை சொரிவதால், அந்த இடத்தில் இன்னும் வீக்கம் அதிகமாகிறது. இதனால் மேலும் சருமத்தில் அரிப்பு அதிகமாகி இரத்தம் வரும் வரை சொரியும் சமயத்தில், அழுக்கான விரல் நகங்களால் சருமத்தில் கீறல் ஏற்பட்டு, நோய்த்தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து உருவாகும்.

ஆகவே கொசு கடிக்கும் போது, எரிச்சலை உண்டாக்கும் அரிப்பிலிருந்து விடுதலை பெற இதோ சில ஆரோக்கியமான வழி முறைகள் உள்ளன. இவை அதிகமாக நாட்டு மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகின்ற நாட்டு வைத்தியக் குறிப்புகள் ஆகும்.

இவற்றில் அறிவியல் ரீதியான ஆதாரங்களும் அடங்கியுள்ளன. மேலும் இந்த வழிமுறைகளைப் பின்பற்றி பலரும் பயனடைந்துள்ளனர். ஆகவே கொசுக்கடியால் அவஸ்தைப்படுவதற்குப் பதிலாக, இவற்றை பின்பற்றுவதன் மூலம் சுகம் பெறலாம்.

ஆல்கஹால் :

பீர் அல்லது மற்ற மதுவை அருந்துவதால், சருமத்தில் ஏற்படும் அரிப்பை மறந்து விடலாம். ஆனால் இந்த வகையான ஆல்கஹாலைப் பற்றி இங்கு பேசவில்லை. முதலுதவி பெட்டியிலிருந்து கொஞ்சம் ஆல்கஹாலை எடுத்து, கொசுக்கடியால் பாதிக்கப்பட்ட பகுதியில் தேய்த்து சுத்தம் செய்வதால், அரிப்புத் தொல்லையிலிருந்து நிவாரணம் பெற முடியும். ஒருவேளை ஆல்கஹால் இல்லாவிட்டால், சோப்புத் தண்ணீரால் கழுவுவதன் மூலம் பயன் பெற முடியும்.

எலுமிச்சை சாறு :

எலுமிச்சை சாறு ஒரு இயற்கையான ஆன்டி இச், ஆன்டிபயோட்டிக் மற்றும் ஆன்டிமைக்ரோபயல் ஆகும். ஆகவே எலுமிச்சையைப் பிழிந்து, அதன் சாற்றை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுவதன் மூலம், அரிப்பைக் குறைத்து தொற்று ஏற்படாமல் தடுக்கலாம். அதிலும் இதை வீட்டின் உள்ளே பயன்படுத்துங்கள். ஏனென்றால் இதனை தேய்த்துக் கொண்டு, வெயிலில் சென்றால், சூரியக்கதிர்களின் தாக்கத்தால், சருமத்தில் புண்கள் ஏற்பட்ட வாய்ப்பு உண்டு.

ஐஸ் கட்டி :

சரும அரிப்பு காரணமாக ஏற்படக்கூடிய வீக்கம் மற்றும் சரும மதப்பு தன்மையைக் குறைப்பதற்கு ஐஸ் கட்டி பெரிதும் உதவும். அதிலும் கொசுக்கடி அதிகமாக இருக்கும் சமயத்தில், மிகவும் குளிர்ச்சியான தண்ணீரில் குளியுங்கள் அல்லது குளிர்ச்சி நிறைந்த தண்ணீருள்ள குளத்தில் மூழ்கிக் குளியுங்கள்.

பேக்கிங் சோடா மற்றும் விட்ச் ஹாசில் :

செலவில்லாத கொசுக்கடித் தீர்வுக்கு, இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து பேஸ்ட் செய்து, கொசுக்கடி ஏற்பட்ட பகுதியில் தடவி, 15 நிமிடங்கள் உலர விடவும். இதனால் பேக்கிங் சோடாவில் உள்ள ஒரு காரத்தன்மையான (அல்கலைன்) பதார்த்தம் இருப்பதால், இது சருமத்தின் பிஎச் அளவை நடுநிலைப்படுத்த உதவி, வீக்கம் குறைய வாய்ப்புண்டு. விட்ச் ஹாசில் கிடைக்காவிட்டால், அதற்குப் பதிலாக தண்ணீர் பயன்படுத்தலாம்.

டீட்ரீ ஆயில் :


இது வீக்கத்தைக் குறைக்கும் ஒரு இயற்கை மருந்து என்பதால், பரு மற்றும் சருமத்தில் ஏற்படும் நச்சுப் படலம் ஆகியவற்றுக்கு சிறந்தது. அதிலும் சொரிவதால் ஏற்படக்கூடிய வீக்கத்தைக் குறைப்பதற்கும், நோய்த் தொற்றுகளைத் தடுப்பதற்கும் இந்த எண்ணெய் உதவும்.

டூத் பேஸ்ட் :

கொசுக்கடியால் சருமத்தில் சிறு சிறு வெள்ளைக் கொப்புளங்கள் ஏற்பட்டால், அதன் மீது கொஞ்சம் டூத் பேஸ்ட் தடவுங்கள். இதனால் அரிப்பிலிருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.

உப்பு :

கொசுக்கடியிலிருந்து சீக்கிரம் நிவாரணம் பெறுவதற்கு, உப்புடன் சிறிது தண்ணீர் சேர்த்து, பாதிக்கப்பட்ட இடத்தில் லேசாக தடவுங்கள். அரிப்பிலிருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கும். ஒருவேளை கடற்கரைக்கு அருகில் இருந்தால், உப்பு நீரில் நீச்சலடியுங்கள், சிறந்த பலனைப் பெறுவீர்கள்.

கற்றாழை :

சொரியும் போது சருமத்தில் கீறல்கள் ஏற்பட்டு வலி உண்டாகும். ஆனால் கற்றாழையில் உள்ள குளிர்விக்கும் தன்மை, இந்த வேதனையிலிருந்து சுகம் பெற உதவும்.

ஆப்பிள் சீடர் வினிகர் :

குளியல் தொட்டி நீரில், சிறிது ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து குளிப்பதால், வெயிலால் ஏற்படும் எரிச்சல் குறைவது மட்டுமன்றி, இதில் இருக்கும் ஒருவகை ஆசிட் சரும அரிப்பைத் தணிப்பதற்கும் வழி செய்யும். ஒருவேளை தண்ணீரில் கலந்து குளிக்க முடியாவிட்டால், ஒரு காட்டன் உருண்டையில் சிறிது ஆப்பிள் சீடர் வினிகரை நனைத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் நேரடியாக தடவுவதால் பயன் பெறுவீர்கள்.

வாழைப்பழத் தோல் : 


வாழைப்பழத் தோலில் உள்ள இனிப்புப் பகுதி கொசுக்கடியிலிருந்து நிவாரணம் பெற உதவும். எனவே வாழைப்பழத் தோலின் உள் பகுதியை பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்ப்பதால் சுகம் பெறுவீர்கள்.

எச்சில் :

விரலில் சிறிது எச்சிலைத் தொட்டு, அதை கொசுக்கடி ஏற்பட்ட இடத்தில் லேசாக தடவி உலரவிட்டாலும் சுகம் கிடைக்கும்.

உள்ளங்கையால் லேசாக அடித்தல் :

இது கொஞ்சம் வழக்கத்திற்கு மாறானதாகத் தோன்றலாம். ஆனால், கொசுக்கடி ஏற்பட்ட இடத்தில் லேசாக அடிக்கும் போது, மூளை நரம்புகளுக்கு வலி எது? அரிப்பு எது? என்ற குழப்பம் ஏற்படுவதால், அரிப்பிலிருத்து சுகம் பெற முடியும்.

அரிப்பு நோய் என்பது சராசரி வாழ் மனிதனை பாடாய் படுத்திவிடும். அதற்கு தகுந்த மருத்துவம் பார்க்காமல் இருந்து விட்டால் பக்க விளைவுகள் நம்மையே அழிக்கும் நிலைமைக்கும் கொண்டுபோய் விடும். அத்துடன் அரிப்பு நோயானது தன்னம்பிக்கையையும் குறைத்துவிடும்.

மருந்தில்லா மருத்துவம் என்பது போல் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களை (மேற் கூறப்பட்டவை) தகுந்த அளவு முறையாக பயன்படுத்தி வந்தாலே அரிப்பு நோயில் இருந்து முழுமையாக விடுபடலாம்.

வீட்டில் கற்றாழை ஜெல் தயாரிக்கும் முறை!

 aloe-vera

நன்கு வளர்ந்த கற்றாழையை தேர்வு செய்து கவனமாக மென்மையாக மற்றும் மிக அகலமான கற்றாலைகளை பார்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். 15 நிமிடங்களுக்கு கற்றாலையை நேராக வைத்து அதிலிருந்து வெளியாகும் மஞ்சள் நிற திரவத்தை முழுவதுமாக நீக்கிவிடவேண்டும். பின்னர் கற்றாலையை நன்கு கழுகி முடித்தவுடன் கற்றாலையில் உள்ள ஜெல்லை எடுத்து ஒரு க்யூப்ல போட்டு அடைத்து வைக்க வேண்டும்.

அலோ வேரா ஃபேஸ் பேக்

தேவையான பொருட்கள்:

கற்றாழை

மஞ்சள்

தேன்

பால்

ரோஸ் வாட்டர்

செய்முறை:


மஞ்சள், தேன், பால், ரோஸ்வாட்டர் என அனைத்திலும் ஒரு தேக்கரண்டி சேர்த்து பேஸ்ட் மாதிரி கலந்து கொள்ள வேண்டும். அதனுடன் தயாரித்து வைத்துள்ள அலோ வேரா ஜெல்லைப் போட்டு கலந்தால் பேஸ்ட் தயாராகிவிடும். சுமார் 20 நிமிடங்கள் முகம், கழுத்தில் தேய்த்துக்கொள்ளலாம். பின்னர் முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுகி தூய்மையான முகம் துடைக்கும் டவல் கொண்டு முகத்தை ஒத்தி எடுக்கலாம்.

சன்லெஸ் நீக்க கற்றாழை ஃபேஸ் மாஸ்க்

தேவையான பொருட்கள்:

கற்றாழை

எலுமிச்சை சாறு

செய்முறை:


வெயிலில் அலைந்து விட்டு வீட்டிற்கு வந்தால் முகம் கருப்பாகி விடும். இதை போக்க கற்றாழை ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்தலாம்.

கற்றாலை ஜெல், எலுமிச்சை சாறு கலந்து பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி 10 நிமிடங்களுக்கு பின்னர் முகம் கழுவ வேண்டும்.

தனுஷுடன் ஜோடி சேரும் காஜல் அகர்வால்!

 6008f19d-e2fa-4421-9fe0-f584c6784317_S_secvpf

நடிகர் தனுஷ் தற்போது ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கும் ‘வேலையில்லா பட்டதாரி’, கே.வி.ஆனந்த் இயக்கும் ‘அனேகன்’ ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கும் ‘வேங்கை சாமி’ என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படங்களுக்கு பிறகு தனுஷை வைத்து ‘படிக்காதவன்’, ‘மாப்பிள்ளை’ ஆகிய படங்களை இயக்கிய சுராஜ் இயக்கும் புதிய படமொன்றிலும் தனுஷ் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவிருக்கிறாராம். தனுஷும், காஜல் அகர்வாலும் முதன்முதலாக ஜோடி சேரும் படம் இதுதான்.

தனுஷும், காஜல் அகர்வாலும் இணைந்து போஸ் கொடுத்த படங்கள் இணைய தளங்களில் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இருவரும் இணைந்து எந்த படத்தில் நடிக்கவிருக்கிறார்கள் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்திருந்தது. தற்போது அவர்களின் கேள்விகளுக்கு பதில் கிடைத்துள்ளது

லிப்ஸ்டிக் நீண்ட நேரம் கலையாமல் இருக்க சில டிப்ஸ்!

 natural-organic-lipstick

பெண்கள் உபயோகிக்கும் அழகுப் பொருட்களில் முதன்மையானது தான் லிப்ஸ்டிக். லிப்ஸ்டிக் நீண்ட நேரம் இருக்கவும், லிப்ஸ்டிக் போடும் போது நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்களையும் பார்க்கலாம்.

* லிப்ஸ்டிக் போடும் முன், சிறிது பெட்ரோலியம் ஜெல்லைத் உதட்டில் தடவிய பின் லிப்ஸ்டிக் போட்டால், லிப்ஸ்டிக் நீண்ட நேரம் இருக்கும்

* நீண்ட நேரம் லிப்ஸ்டிக் இருக்க வேண்டுமானால், இரவில் படுக்கும் முன், லிப்ஸ்டிக்கை ஃப்ரிட்ஜில் வைத்து விட்டு தூங்க வேண்டும். பின் காலையில் எழுந்து அந்த லிப்ஸ்டிக்கை போட்டால், அது நீண்ட நேரம் நிலைத்திருக்கும்.

 * லிப்ஸ்டிக் போட்ட பின் பார்க்க சூப்பராகவும், அதிக நேரம் அது நிலைத்து இருக்கவும், உதடுகளுக்கு சிறிது பவுடர் போட்டு, பின்னர் லிப்ஸ்டிக் போட வேண்டும். இதனால் லிப்ஸ்டிக் காபி குடித்தால் கூட போகாமல் அப்படியே இருக்கும்.

 * தற்போது வயதானவர்களும் லிப்ஸ்டிக் போட ஆரம்பிப்பதால், அவர்கள் நல்ல அடர்ந்த நிறமுள்ள லிப்ஸ்டிக்கை தேர்ந்தெடுத்து போடாமல், வெளிர் நிறங்களை தேர்ந்தெடுத்து போட்டால், பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

 * எப்போதும் லிப்ஸ்டிக் போடும் போது, இரண்டு வகையான நிறங்களை ஒன்றாக போடக்கூடாது. இதனால், அவை சில நேரங்களில் அலர்ஜியை ஏற்படுத்தி, உதடுகளின் அழகையே கெடுத்துவிடும்.

முடி மிருதுவாக இருக்க!

 sublimemousse1


முடி மிருதுவாக இருக்க சீத்தாப்பழ விதைகளைப் காயவைத்து பொடியாக்கி,அதை  சீயக்காயுடன் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.

இதை வாரம் இரு முறை  தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி பட்டு போல் மிருதுவாக மாறும்.

பெண்களுக்குப் உள்ள மிக பெரிய பிரச்னை பேன்தான். இதை ஒழிக்க இரவில் தலையணைக்கு அடியில் செம்பருத்திப் பூ இலைகளை வைத்துப் படுத்து வந்தால் பேன்கள் ஒழியும்.

அதேசமயம், இந்த செம்பருத்திப் பூக்களையும் கற்பூரப் பொடி இரண்டையும் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து தலைக்குத் தடவிக் கொண்டால் பேன்கள் ஓடிவிடும்.