Sunday 22 December 2013

தலைமுறைகள் – விமர்சனம்!




சலசலத்து ஓடும் ஆறு. பசுமை போர்த்திய மரங்கள், பரபரப்பின்றி நடமாடும் ஆவினங்கள், புள்ளினங்களின் சங்கீதம், பேரனின் கையைப் பிடித்தபடி நடந்து செல்லும் கிழவர்...

இயற்கையின் அழகு, மண் வாசனை, பரபரப்பற்ற வாழ்க்கை ஆகியவற்றின் கவித்துவமான சித்தரிப்பாகத் திரையில் விரிகிறது பாலுமகேந்திராவின் தலைமுறைகள். நகர வாழ்க்கையிலும் ஆங்கிலத்திலும் ஊறிப்போன ஒரு குடும்பம் இங்கே வந்தால் எப்படி இருக்கும்? அவர்களை இங்கே வரவழைத்த பாசம் இங்கே அவர்களை வாழவைக்குமா?

பழமையிலும் சாதி சம்பிரதாயங்களிலும் ஊறிய அந்தப் பெரியவரால் தன் மகன் வேற்று மதத்தைச் சேர்ந்த அனாதைப் பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. “என் பிணத்தைப் பார்க்கக்கூட வராதே” என்று துரத்திவிடுகிறார். பையனும் அவள் மனைவியும் சென்னையில் பெரிய டாக்டர்களாகிறார்கள். அவர்களுக்கு ஒரு மகன். ஊரோடும் அப்பாவோடும் தொடர்பே இல்லாமல் காலம் கழிகிறது. அப்பாவுக்கு உடல்நலம் மோசமாகிவிட்ட செய்தி வருகிறது. திட்டுவாரே என்னும் அச்சத்தை மீறிப் பாசம் உந்தித் தள்ளுகிறது. ஊருக்குச் செல்கிறார்கள்.

இன்னமும் அதே வீம்புடன் இருக்கும் தாத்தா இவர்களது அன்பினால் சலனம் கொள்கிறார். பேரக் குழந்தையுடன் ஏற்படும் ஒட்டுறவு அவரை இளக்குகிறது. மெல்ல மெல்ல நகரமும் கிராமமும் ஒன்றையொன்று நெருங்குகின்றன.

வழக்கம்போல இயக்கத்துடன் ஒளிப்பதிவைச் செய்திருப்பதோடு, பாலுமகேந்திரா பிரதான பாத்திரம் ஏற்று நடித்தும் இருக்கிறார். கிராமத்து மண்ணோடு ஒட்டியிருக்கும் சாதி, அதே மண் முன்னிறுத்தும் மனித நேயத்துக்கு எதிராக இருப்பதையும் படம் உணர்த்துகிறது.

படத்தின் கதை மிகவும் எளிமையானது. திரைக்கதை அதைவிட எளிமையானது. காட்சிகளில் தெரியும் யதார்த்தம் நிகழ்வுகளின் பயணத்தில் மங்குகிறது. சின்னச் சின்ன சலனங்களில் பெரும் மாற்றங்கள் சாத்தியப்பட்டுவிடுகின்றன. எல்லோருமே அன்புடனும் மாற்றங்களுக்குத் தயாரான நெகிழ்வான மனநிலையுடனும் இருக்கிறார்கள். முரண்பாடுகளின் பரஸ்பர ஊடாட்டத்தி னூடே முகிழ்க்கும் இயல்பான மாற்றங் களைப் பார்க்க முடியவில்லை. விளைவு, மாற்றங்கள் யதார்த்த அனுபவங்களாக மாறாமல் பகல் கனவுகளின் காட்சிகளாகவே தோற்றம் கொள்கின்றன.

பாலு மகேந்திரா நிறைவான நடிப்பைத் தந்திருக்கிறார். தீவிரமான அவரது கண்களும் தளர்வான உடல் மொழியும் மனதில் நிற்கின்றன. மகனாக நடித்திருக்கும் சசி, அவரது மனைவி ரம்யா ஷங்கரும் தேவைக்கேற்ப நடித்திருக்கிறார்கள். ரம்யாவின் கண்கள் பேசும் மொழி வலுவானது. பேரனாக நடித்திருக்கும் மாஸ்டர் காந்த் படத்துக்குப் பெரிய பலம். பாலுமகேந்திராவின் கேமரா கவித்துவமான படிமங்களை உருவாக்குகிறது. இளையராஜா வின் இசைக்கோலங்கள் படம் தரும் அனுபவத்தின் பரிமாணத்தைக் கூட்டுகின்றன.

காலத்துக்குத் தேவை யான ஒரு கனவைத் தனக்கே உரிய திரைமொழியில் முன்வைத்திருக்கிறார் பாலுமகேந்திரா.

பழைய நாடுகளும் அவறின் புதிய பெயர்களும்?




1.டச்சு கயானா --- சுரினாம்.

2.அப்பர் வோல்டா --- புர்க்கினா ஃபாஸோ

3.அபிசீனியா --- எத்தியோப்பியா

4.கோல்டு கோஸ்ட் --- கானா

5.பசுட்டோலாந்து --- லெசதொ

6.தென்மேற்கு ஆப்பிரிக்கா --- நமீபியா

7.வட ரொடீஷியா --- ஜாம்பியா

8.தென் ரொடீஷியா --- ஜிம்பாப்வே

9.டாங்கனீகாம,சன்ஸிபார் --- தான்சானியா

10.கோட்டே டி ஐவோயர் --- ஐவரி கோஸ்ட்

11.சாயிர் --- காங்கோ

13.சோவியத்யூனியன் --- ரஷ்யா

14.பர்மா --- மியான்மர்

15.கிழக்கு பாக்கிஸ்தான் --- பங்க்களாதேஷ்

16.சிலோன் --- ஸ்ரீலங்கா

17.கம்பூச்சியா --- கம்போடியா

18.பாரசீகம்,பெர்ஷியா --- ஈரான்

19.மெஸமடோமியா --- ஈராக்

20.சயாம் --- தாய்லாந்து

21.பார்மோஸ --- தைவான்

22.ஹாலந்து --- நெதர்லாந்து

23.மலாவாய் --- நியூசிலாந்து

24.மலகாஸி --- மடகாஸ்கர்

25.பாலஸ்தீனம் --- இஸ்ரேல்

26.டச் ஈஸ்ட் இண்டீஸ் --- இந்தோனேசியா

27.சாண்ட்விச் தீவுகள் --- ஹாவாய்

28.அப்பர் பெரு --- பொலிவியா

29.பெக்குவானாலாந்து --- போட்ஸ்வானா

இதச் சாப்பிடாதீங்க... மீறிச் சாப்பிட்டா ‘சங்கு’ கன்பார்ம்



சில நேரங்களில் உணவு ஒவ்வாமை மரணத்தில் கூட கொண்டு போய் விட்டு விடுகிறது. அப்படிப்பட்ட சில விபரீதமான உணவுப் பொருட்களைத் தான் இப்போது பார்க்கப் போகிறீர்கள்...



காஜூ மர்சு...



ரோட்டிங் சீஸ் எனவும் அழைக்கப்படும் காஜூ மர்சுவில் உயிருள்ள புழுக்கள் தான் அதிகமான அளவில் அடைத்து வைக்கப்படுகின்றன. இவை நொதித்தலுக்காக சேர்க்கப்படும் காரணிகள் என்றாலும், சமயங்களில் உண்ணப்படும் போதும் இந்த புழுக்கள் உயிருடன் வயிற்றுக்குள் சென்று விடுவதால் வயிற்றுப்போக்கும், வாந்தியும் உண்டாகலாம்.

ஹாட் டாக்ஸ்...



அமெரிக்க குழந்தைகள் நலச் சபை ஹாட் டாக்ஸ்ன் அமைப்பை மாற்றச் சொல்லி பரிந்துரைத்துள்ளது. காரணம், உருளை வடிவில் காணப்படும் இந்த உணவும் பொருளை சாப்பிடும் போது, குழந்தைகள் எதிர்பாரா விதமாக விழுங்கி விடும் அபாயம் உண்டு. சமயத்தில் இது மரணத்தில் கூட முடிந்து விடுகிறது என அச்சபை எச்சரித்துள்ளது.


நம்மூரு கப்பக்கிழங்கு....






அதிகமான கார்போஹைட்ரேட்டைக் கொண்டிருக்கும் கப்பக்கிழங்கை சரியாக வேக வைக்காமல் சாப்பிட்டால், அவை ஒரு விதமான அபாயகரமான நொதியை உடலில் உண்டாக்குவதாக உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

ருபார்ப் இலைகள்...





ருபார்ப் எனப்படும் ஒருவகை கீரை போன்ற இலைகள் அதிகமாக வெளிநாடுகளில் உணவாகக் கொள்ளப் படுகின்றன. அதிக சத்துக்களைக் கொண்ட இந்த இலைகளை அதிகளவில் உட்கொண்டால் வலிப்பு மற்றும் சுவாசப் பிரச்சினைகள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகமாம்.

சன்னாக்‌ஷி...






அதாங்க உயிருள்ள ஆக்டோபஸ் சாப்பாடு. கொரியாவில் அதிகளவில் சாப்பிடப்படும் இந்த உணவால் உயிருக்கே உலை வைக்கும் விஷயங்கள் அதிகம். உயிருள்ள ஆக்டோபஸ்ஸை அப்படியே அந்றுக்கி தட்டில் போட்டு தருவார்கள். சமயத்தில் சரியாக விழுங்காவிட்டால், ஆக்டோபஸ் தவறி மூச்சுக்குழாய்க்குள் குதித்து விடும் அபாயம் உண்டு.


குரங்கு மூளை...






நம்மூரில் ஆடு, மாடு, கோழி, மீன் என வளைத்துக் கட்டுவது போல, சில நாடுகளில் குரங்குகளை வேட்டையாடி உண்ணும் மக்கள் இருக்கிறார்களாம். அப்படி சாப்பிடப்படும் குரங்கின் மூளையால், சாப்பிடப்படுபவரின் மூளை குழம்பும் நிலை உண்டாகலாம் என எச்சரிக்கிறார்கள் உணவியல் வல்லுனர்கள்.



புகு மீன்...




புகு எனப்படும் ஊதி மீன் சாப்பிட்டால் சதைகள் உறைந்து மரணம் விளையலாம் என மூன்றாண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு உறுதி செய்யப்பட்டுள்ளது.


அக்கி பழம்...





ஜமைக்காவின் தேசிய பழமான அக்கியில் மஞ்சள் சதைப் பகுதி மட்டுமே உண்பதற்கு தகுதியுள்ளது. அதில் காணப்படும் கருப்பு நிற விதையையோ அல்லது சிவப்பு வெளிப்புறத் தோலையோ சாப்பிடுவது விஷம்.

விஷக் காளான்...







ஏழுக்கும் அதிகமான விஷங்களைக் கொண்டுள்ள விஷக் காளான்களை சாப்பிட்டால் அதோ கதி தான். காளான்களை வாங்கும் போது அதிக கவனம் தேவை.

எட்டு வடிவ நடைபயிற்சி செய்யும்முறை?




 ஒரு அறையில் அல்லது வெட்டவெளியில் கிழக்குமேற்காக 10 அடி விட்டு கோடு வரைந்து அதற்குள் எட்டு வடிவில் நடைப்பயிற்சி செய்யவேண்டும். இப்பயிற்சியை தெற்கிலிருந்து வடக்குநோக்கி அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செய்யவேண்டும். 15 நிமிட முடிவில் இருநாசித்துவாரங்களின் மூலம் உள்ளிழுக்கபட்ட முழு மூச்சுக்காற்றையும் உணரலாம்.


பயன்கள் பல...


இளமையாக இருக்கலாம் ...


சர்க்கரை நோய் குறையும்.


தலைவலி, மலச்சிக்கல் தீரும்


சளியிலிருந்து விடுதலை


கண்பார்வை அதிகரிக்கும்


செவிகள் நன்றாக கேட்கும்


இரத்த அழுத்தம் குறையும்...இன்னும் நிறைய இருக்கிறது.

- மரு, கரும்புள்ளியா? கவலையே வேண்டாம்!

   

பப்பாளி பழத்தின் கனிகள், விதைகள், இலைகள் என்று அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிறைந்தவை. அழகை அழகூட்டும் பப்பாளியைப் பற்றி இன்னும் சில அழகு டிப்ஸ்....


* தினமும் காலை, மாலை வேளைகளில் 5 நிமிடம் மூச்சுப்பயிற்சி செய்து வந்தால் அன்றைய தினம் முழுவதும் 'ப்ரெஸ்' ஆக காணப்படுவீர்கள்.

* தினமும் காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வலம் வருவீர்கள். சோர்வு என்பதே எட்டிப்பார்க்காது.

* தினமும் காலையில் எழுந்ததும் பழங்கள் சாப்பிடுவது இளமையை அதிகரிக்கும். குறிப்பாக, ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளிப் பழங்கள் சாப்பிடுவது நல்லது.

* தினமும் காலையில் ஒன்று அல்லது இரண்டு கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் ஒருவித மினுமினுப்பை பெறலாம்.

* கறிவேப்பிலையின் இளம் தளிர்களை காய வைத்து பொடியாக்கி, அதை தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி கருகருவென்று வளரும்.

* தயிருடன் கடலை மாவு சேர்த்து முகத்தில் அப்ளை செய்து வந்தால் முகப்பரு தொல்லை வராது.

* 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு தடவை முல்தான் மெட்டியுடன் பன்னீர் கலந்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளிச்சென்று காணப்படும்.

* 2 டீஸ்பூன் தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு 4 சொட்டு கலந்து குடித்து வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்வது தடுக்கப்படும்.

* பப்பாளி வயிற்றுக்கோளாறுக்கு மருந்தாகப் பயன்படுகிறது, செரிமானத்தை ஊக்குவிக்கிறது, பப்பாளிக் காயின் பால் வயிற்றில் உள்ள பூச்சிகளை அகற்றுகிறது.

* பப்பாளி தோலில் உள்ள மருக்கள் மற்றும் கரும் புள்ளிகளை நீக்குகிறது. இதன் விதைகளும் பூச்சிகளை அகற்றும் மருந்து தயாரிக்க பயன்படுகிறது.

* பப்பாளி இலைகளின் சாறு காய்ச்சலைப் போக்கும் மருந்தாக பயன்படுகிறது. இதய நோயைக் குணப்படுத்தவும் இது உதவுகிறது.

தண்ணீருக்கு நிறமில்லை ! அருவி நீர் வெள்ளையாகத் தெரிவது எப்படி ?



தண்ணீருக்கு நிறமில்லை. பார்ப்பதற்கு அது ஒளி ஊடுருவும் கண்ணாடி போலத்தான் இருக்கிறது. அருவியில் தண்ணீர் கீழே விழும்போது கையில் ஏந்திப் பார்த்தால் கண்ணாடி போலவே இருக்கிறது. ஆனால், அருவியில் தண்ணீர் விழும்போது பார்த்தால், அது கண்ணாடி போலில்லையே. வெண்மை நிறத்தில் இருக்கிறதே. அப்படியானால் மேலிருந்து கீழே வரும் இடைப்பட்ட நேரத்தில், தண்ணீருக்கு வெண்மை நிறத்தைத் தந்தது யார்?

ஒரு பொருளின் மேற்பரப்பு அனைத்து நிறங்களையும் பிரதிபலித்தால் அது வெண்மை நிறமாகத் தோன்றும். அருவிகளில் என்ன நடக்கிறது என்றால், தண்ணீர் காற்றைக் கடந்து கீழே விழுகிறது. அப்பொழுது அது தண்ணீரும் காற்றும் கலந்த, சீரில்லாத ஒரு கலவையாகவே விழுகிறது. வழக்கமாக, தண்ணீருக்கு வெளியே உள்ள அடர்த்தி குறைந்த காற்று ஊடகத்திலிருந்து, அடர்த்தியான நீர் ஊடகத்திற்குள் ஒளி புகும்போது, அதன் மேற்பரப்பு சிறிது ஒளியை எதிரொளிக்கிறது.

எஞ்சிய ஒளி விலகிச் செல்கிறது. இதுவே ஒளிவிலகல் ஆகும். அருவில் என்ன நடக்கிறது? ஒளி அதிக அளவில் எதிரொளிக்கப்படுகிறது. அதேநேரம், ஒளிவிலகலும் மிக அதிகமாக நடைபெறுகிறது.

ஒளிவிலகல் அலகில் ஏற்படும் மாறுபாடே இதற்குக் காரணம் (ஒளிவிலகல் விகிதத்தில் ஏற்படும் மாறுபாடே ஒளிவிலகல் அலகு எனப்படுகிறது). இதன்காரணமாக, அதிக ஒளி எதிரொளிக்கப்படுகிறது. இது எப்படி நடக்கிறது? உச்சத்தில் உள்ள நீர்அடுக்கில் ஏற்படும் ஒளிவிலகல், அதற்கு அடுத்த அடுக்கில் உள்ள நீர்த்துளிகள் ஒளியை எதிரொளிக்க உதவுகிறது. இதன்காரணமாக, அருவியில் பெரும்பாலான ஒளி எதிரொளிக்கப்படுகிறது. இதனால், அருவி வெண்மை நிறத்தில் தோற்றமளிக்கிறது.

மூடுபனி, காகிதம், நீராவி, மேகம், பனி, சர்க்கரை, வெள்ளை பெயின்ட் போன்றவை வெண்மை நிறத்தில் இருப்பதற்கு இதுவே காரணம். இதில் வெள்ளை பெயின்ட் விசேஷமானது.

மற்ற பெயின்ட்டுகளில் உள்ளதுபோல, வெள்ளை பெயின்ட்டில் வெள்ளை நிறமிகள் கிடையாது. எதிரொளிப்பால்தான் வெள்ளை பெயின்ட் அந்த நிறத்தைப் பெறுகிறது.

மேலும், அருவி வெண்மை நிறத்தில் தோற்றமளிக்க, ஒளி ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்து மட்டும் வரக்கூடாது. அப்படி வந்தால், நீர்த்துளிகளால் அந்த ஒளி எதிரொளிக்கப்பட்டு வானவில் ஏற்படும் (மழை பெய்யும்போது இதன் காரணமாகவே வானவில்லைப் பார்க்க முடிகிறது).

இதற்கு மாறாக, எல்லா திசைகளில் இருந்தும் அருவியின் மீது ஒளி பாய்வதால்தான், ஒளி பல்வேறு திசைகளில் இருந்து எதிரொளிக்கப்பட்டு அது வெண்மை நிறத்தில் நமக்குத் தோற்றமளிக்கிறது.

ஆண்கள் பெண்களை ஏமாற்றும் 7 தகவல்கள்..?


பொதுவாக பெண்களை காதலிப்பதாக கூறும் காதலர்கள் தனது காதலிக்கு தெரியாமல் மூன்றாம் நபரையும் காதலிக்க வாய்ப்புண்டு  அப்படிபட்ட நபர்களை கண்டறிய சில டிப்ஸ்


01. காதலன் கடைசி நிமிடத்தில் இருவரும் போக இருந்த பயணத்தை அல்லது வெளியே செல்லுவதை மாற்றுதல் அல்லது கேன்சல் செய்தல்.



காதலாகள் இருவரும் எங்காவது போக திட்டமிட்டு இருந்து, வருகிறேன் என்று இருந்த காதலன் கடைசி நிமிடத்தில் ”எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது. நீ வேண்டுமானால் உன் தங்கையோடு அல்லது தோழியோடு போய்ட்டு வா” என கூறினால் கொஞ்சம் கவனம். ஏனென்றால் மற்றைய காதலியோடு வெளியே போக வேண்டி இருக்கலாம்


02. வெளியே செல்லும் போது சில இடங்களை வேண்டாம் என கூறுதல்.

நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தை கூறி அங்கு போகலாம் என கூறியவுடன் வேண்டாம் அங்கு சரியில்லை. வேறு இடத்துக்கு போவோம் என கூறினால் சில நேரம் அவரது காதலி அந்த பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம்.


03. அவரது சொந்தங்களுடன் பழகுவதை விரும்பாமல் இருத்தல்


அவரது சொந்தங்களான அவரின் தாய், சகோதரி போன்றோரோடு நீஙகள் பழகுவதை அவர் விரும்பாவிடினும் கொஞ்சம் கவனம். தனது மகன் அல்லது சகோதரன் ”வேறு பெண்ணை அல்லவா காதலிக்கிறான்” என உங்களிடம் சொல்லிவிட கூடிய அபாயம் இருக்கிறது. நண்பர்களிடம் ”மச்சான் நான் ரெண்டு பிகர லவ் பண்ணுறேன்” சொல்லும் நம்ம பிரதர்ஸ் தனது தாய், சகோதரிகளிடம் அப்படி சொல்ல மாட்டாங்க.


04. கண்கள் அலைபாய்தல்

உங்கள் காதலன் உங்களோடு நேரத்தை செலவிட்டு கொண்டிருக்கையில் கவனம் வேறு பக்கம் திரும்பினாலும் கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்க. ஏனென்றால் இரண்டு பேரை காதலித்தால் கட்டாயம் அவர் இதை விட நல்லதா யாராவது கிடைக்க மாட்டாங்களா என தேடி கொண்டிருக்கலாம். அல்லது மற்றைய காதலி வந்திடுவாளோ என்கிற பயமும் காரணமா இருக்கலாம்.


05. அவரது தொலைபேசி, மடிக்கணனி, பர்ஸ் போன்றவற்றை உங்களிடமிருந்து மறைத்தல்

அவர் தொலைபேசி கணனி போன்றவற்ளை உங்களிடமிருந்து மறைத்து வைத்திருந்தால், மேலும் பாஸ்வேர்ட் போட்டு எல்லாவற்றையும் மூடி வைத்திருந்தால், அவரது பேஸ்புக் போன்ற சமூக வலைபின்னல்களை உங்களிடமிருந்து மறைத்தால். நீங்கள் இருக்கும் போது அவருக்கு வரும் தொலைபேசி அழைப்புகளில் ”அப்புறம் பேசுறேன்” என்று சொல்லிட்டு கட் பண்ணினால் ரொம்பவே கவனம்.


06. உங்களை செல்லப் பெயர் கொண்டு அழைத்தல்

அவர் உங்களை செல்லப் பெயர் அல்லது பொதுப் பெயர் கொண்டு அழைத்தால் கொஞ்சம் கவனம். இதற்கு இரண்டு காரணம் இருக்கலாம். ஒன்று பொதுவான பெயர் கொண்டு அழைத்தால் தவறுதலாக மற்றைய காதலியின் பெயர் சொல்லிவிட தேவையில்லை. இரண்டாவது நீஙகள் தொலைபேசியில் அழைத்தால் மற்றைய காதலி முன்னாலே உங்கள் பொது பெயரை கூறி அது வேறு யாராவது என கூறி மழுப்பலாம்.


07. அவள் எனது முன்னால் காதலி இப்போ நாங்க ரொம்ப நல்ல பிரண்ட்ஸ் என கூறல்

ஏற்கனவே காதலித்து பிரிந்துவிட்டோம் என கூறி அவரோடு தொடர்பில்லை சும்மா கதைப்போம் என கூறினாலும் கவனித்துக் கொள்ளவும்.

எட்டுக்கு இணை ஏதுமில்லை....?


மனிதனை ஆட்டி வைப்பவை ஒன்பது கிரகங்கள் என்பது சோதிடம். உலகத்தையே ஆட்டிப்படைப்பதும் இந்த ஒன்பது எண்கள்தான் என்பது அறிவியல். ஜனநாயகமே இந்த எண்ணிக்கையில்தானே அடங்கியிருக்கிறது. வான்இயற்பியல் (Astro Physics) விஞ்ஞானியைக் கேட்டால் உலகம் காலம் என்பதில் தோன்றி அதிலேயே ஒடுங்குவதாகக் கூறுவார்கள். அந்தக் கால தத்துவத்திற்கும் இந்த ஒன்பது எண்கள்தான் அடிப்படை. கம்ப்யூட்டருக்கு எந்த மொழியும் தெரியாது. அதற்கு 0 என்பது மட்டும்தான் தெரியும். அந்தப் பூஜ்யத்தில் அது சாம்ராஜ்யத்தைப் படைத்துக் கொண்டிருக்கிறது.


எனவே ஒன்பது எண்களுமே சிறப்பானவை தான் இருந்தாலும் நம்மவர்களுக்கு எட்டு என்ற எண்ணைக் கேட்டாலே ஒரு பயம். அந்த எண்ணில் ஏதாவது ஒன்று அவர்களுக்கு அமைந்து விட்டாலோ எப்போது இது வெட்டுமோ? என்ற எண்ணம் வந்து வந்து பயமுறுத்தும். நாட்களிலே அஷ்டமி என்றால் ஐயோ! வேண்டாம் என்பார்கள். இன்னும் சிலருக்கு 8 என்ற எண்ணைப் பார்த்தாலே அச்சம். அதன் கோணலே அவர்களுக்குப் பிடிக்காது. சோதிடர்கள் ஒருவரிடம் உனக்கு அஷ்டமத்துச்சனி என்று சொல்லிவிட்டால் போதும், சனி அவரைப் பாடாய்ப் படுத்துகிறதோ இல்லையோ; அந்த அஷ்டமம் அவர்கள் மனத்தைப் பாடாய்ப் படுத்திவிடும். எட்டைப் பற்றிய உண்மையான செய்திகளைத் தெரிந்து கொண்டால் நம் வீணான அச்சம் தொலையும். எட்டின்மேல் நமக்குப் பாசம் வருகிறதோ இல்லையோ! ஆனால் ஒரு பக்தி தோன்றும். எண்ணிப்பார்த்தால் எல்லாமே எட்டுக்குள்தான் என்ற ஞானம் தோன்றும்.


மனிதப் பிறப்பில் எட்டாம் மாதம் ஒரு திருப்புமுனை. தாயின் கருப்பையில் இருக்கும் குழந்தை அப்போதுதான் முழு வளர்ச்சி பெறுகிறது. அப்போது கருப்பையில் இடம் போதாமல் நெருக்கத்தில் சிக்கி, இருக்கும் இடத்திற்கேற்பத் தன் கைகால்களை மடக்கிக் கொள்கிறது. தன் உடல் உறுப்புகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முதல் அறிவை அப்போதுதான் அது பெறுகிறது. அப்போது அதன் கருப்பை வடிவம் 8 என்ற எண் வடிவம். சைவர்களின் திருமுறைகள் பன்னிரண்டு. அவற்றுள் எட்டாம் திருமுறை திருவாசகம். வார்த்தைகளுக்கு எட்டாத தெய்வ அனுபவத்தை முதன்முதலாக வார்த்தைகளில் வடித்துக் கொடுத்த ஒப்பற்ற நூல். கடல் போன்ற தமிழ் நூல்களில் ஆறு மிகச்சிறந்த நூல்களில் ஒன்று. அதனை இயற்றிய மாணிக்கவாசகர் கருப்பையில் நம் முதல் வடிவத்தை எட்டு திங்களில் கட்டமும் பிழைத்தும் என்று கூறுகிறார். அந்த நெருக்கத்தில் சிக்கித் துன்புற்று இறந்து போகாமல் பிழைத்துப் பிறந்திருக்கிறோமே! இதற்கு நாம் எட்டிற்கு நன்றி சொல்ல வேண்டாமா!


எட்டாம் மாதத்தில் தாயின் கருப்பையில் உடலைக்குறுக்கிக் கொண்டு துன்பப்படும் ஓர் உயிருக்கு, நாம் செய்த தீவினையால் தானே மீண்டும் ஒரு தாயின் கருப்பைக்கு வந்தோம். இந்தப் பிறவியில் நிச்சயம் நாம் தவறு ஏதும் செய்யக்கூடாது என்ற ஞானம் அதற்குத் தோன்றுவதாகக் கீதை ஓரிடத்தில் கூறுகிறது. ஆனால் பிறந்த பின் அந்த ஞானத்தை மனிதன் மறந்து போகிறான். மீண்டும் அந்த ஞானம் அவனுக்கு 80 வயதில் (இருந்தால்) நிச்சயம் தோன்றும். அதனால் எட்டை ஒரு ஞான எண்ணாகக் கூறுவார்கள். எட்டாம் எண் கூட்டுத்தொகை உடையவர்கள் ஒன்று தீவிர பக்தர்களாகவோ, தத்துவவாதிகளாகவோ, சமுதாயத் தொண்டர்களாகவோ இருப்பார்கள். ஒருவர் ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் குருவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்களோ இருந்தால் அவர்கள் இப்பிறவியில் ஞானம் பெற்று முத்தியடைவார்கள் என்று சோதிடம் கூறுகிறது.


பாரதத்தின் ஒப்பற்ற தவஞானி ஆதி சங்கரருக்கு எட்டாம் இடத்தில் குரு; மரணமில்லாமல் பெருவாழ்வை சாதித்துக் காட்டிய வள்ளலார் ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் புதனும், சனியும். சைவ சித்தாந்தத்தின் வேத நூலாக சிவஞானபோதத்தின் எட்டாம் நூற்பா ஞானம் உணர்த்தும் முறையைக் கூறுகிறது. இந்த ஒரு நூற்பாவை மட்டும் ஏதேனும் ஒரு திருமடத்திலோ அல்லது ஒரு துறவியிடமோ தான் பாடங்கேட்க வேண்டும் என்ற மரபு இன்றும் உண்டு. வைணவர்களின் வேதநூல் நாலாயிரத் திவ்விய பிரபந்தம். இதில் உள்ள பாடல்கள் காலப்போக்கில் மறைந்து போயின. வீரநாராயண புரத்தில் வைணவர்கள் சிலர் நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியின் எட்டாம் திருவாய்மொழியின் ஐந்தாம் பத்தைப் பாடியதைக் கேட்ட நாதமுனிகள் பின்னர் நாலாயிரம் பாடல்களையும் மீட்டுக்கொடுத்தார். ஆதலால் எட்டாம் எண் ஞானத்திற்குரிய எண். இந்த எண்ணில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவராக இருந்தாலும் உள்ளத்தளவில் அவர்கள் பக்குவம் பெற்றவர்களாக இருப்பார்கள்.


எட்டாம் எண் யோகத்திற்கும் உரியது. தவமுனிவர்கள் மேற்கொள்ளும் யோகம் எட்டுவகைப்படும். அவை இயமம், நியமம், ஆசனம், பிரணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பனவாகும். இந்த எட்டுவகை யோகங்களும் இடகலை, பின்கலை, சுழிமுனை என்ற மூன்று நாடிகளை அடிப்படையாகக் கொண்டவை. அடி வயிற்றுக்குக் கீழே இடப்புறமிருந்து இடகலைநாடியும் வலப்புறமிருந்து பின்கலை நாடியும் தொடங்கிச் சுழிமுனை என்ற நாடியுடன் சேர்ந்து மீண்டும் பிரிந்து புருவமத்தியில் ஒன்று சேர்கின்றன. இதன் வடிவம் எட்டு.


இந்த யோகமுறையால் நம்மால் பின்வரும் எட்டுவிதமான சித்திகளை அடையமுடியும். நம் உடலை அனுவாகச் சுருக்கலாம். எவ்வளவு பெரிய உருவாகவும் பெருக்கலாம். எந்தப் பொருளையும் ஊடுருவிச் செல்லலாம், உடலை மிகமிக இலேசானதாக மாற்றலாம், தேவைப்படுவதை அடையலாம். எல்லாவற்றிலும் நிறைவானவனாக விளங்கலாம், யார் மீதும் எந்தப் பொருள்மீதும் தன் ஆட்சியைச் செலுத்தலாம்.
எதனையும் தன்வசமாக்கலாம். இதனை யோக முறையில் அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்று கூறுவார்கள். யோகத்திற்குரிய எட்டு உடையவர்கள் யோகம் பயிலத் தொடங்கினால் அதில் எளிதில் முன்னேறிச் செல்வார்கள். அவர்கள் அதைப் பயிலாவிட்டாலும் அவர்களுக்கு நிர்வாகத் திறமை, ஆளுமைப்பண்பு, எவரையும் கவரும் ஆற்றல் இயல்பாக அமைந்திருக்கும்.
மனிதப் பிறப்பில் பல நபர்கள் 8 ஆம் தேதியில் பிறந்து சாதித்துள்ளனர்.


இதில் மன்மோகன் சிங், எம்.ஜி.ஆர், அத்வானி, ஜோதிபாசு, முரசொலி மாறன் உள்பட பல தலைவர்கள் 8ஆம் எண்ணில் பிறந்துள்ளனர்.
எட்டு என்ற எண் தெய்வங்களோடு தொடர் புடைய எண்ணாகும். மனிதர்களைப் போலவே இறைவனுக்கும் குணங்கள் உண்டு. அந்தக் குணங்கள் எல்லாம் அவனுக்கு இருப்பதாக அருளாளர்கள் கூறுவார்கள். உண்மையில் பரம்பொருள் குணங்களும் வடிவங்களும் இல்லாதது. இறைவன் குணாதீதன், அதாவது குணங்களைக் கடந்தவன். இருப்பினும் அவனுக்கு குணங்களைக் கற்பிக்கும்போது எட்டு என்ற எண்தான் எல்லையாக அமைந்தது. இறைவனுக்குத் தன் வயத்தனாதல், தூய உடம்பினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல், பேரருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை, இயற்கை உணர்வினன் ஆதல் ஆகிய எட்டுக் குணங்களை சைவ ஆகமங்கள் எடுத்துக் கூறுகின்றன.


எட்டுக் குணங்களைக் கொண்ட சிவபெருமான் எட்டு இடங்களில் எட்டு வீரச் செயல்களை நிகழ்த்திய தாகவும் கூறுவர். அந்த இடங்கள் அட்ட வீரட்டத் தலங்கள் எனப்படும். இறைவன் வரம்பற்ற ஆற்றல் உடையவனாக இருந்தாலும் அவன் நிகழ்த்திய வீரச் செயல்கள் எட்டுதான். திருவள்ளுவர் இறைவனைப் பற்றிக்கூறும்போது அவனை எண்குணத்தான் என்று எட்டுக்குச் சிறப்பு கொடுத்தே கூறுகிறார். சிவபெருமானுக்குத் தோள்களும் எட்டுதான். இறைவன் வடிவங்கள் கூறுவதும் எட்டுதான். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், உயிர் ஆகிய எட்டும் அவன் திருவடிவங்கள்.


எட்டு எண்ணில் பிறந்தவர்களுக்கு எல்லாம் இருக்கும்; ஆனால் இருக்காது. இறைவன் எல்லாம் உடையவன். இந்த உலகமும், வானமும் அண்டங் களும் அவற்றில் உள்ள அனைத்தும் அவனுக்குச் சொந்தமானவை. எனவே, இறைவனை உடையவர் என்றே வழங்குவார்கள். கல்வெட்டுகளில் அந்தக் கோயில்கள் எழுந்தருளியுள்ள இறைவனை அந்த ஊரின் பெயரைச் சேர்த்து உடையவர் என்றே கூறுகின்றன.


ஆனால், அவனுக்கென்று எதுவுமே இல்லை. அவனுக்குத் தாயும் தந்தையும்கூட இல்லை. அவன் ஓர் அனாதை. இதை மாணிக்கவாசகர் தாயும் இலி; தந்தையிலி; தான் தனியன் கானேடி!.


மாணிக்க வாசகரின் திருவாசகம் உள்ளத்தை உருக்கும்; உடம்பில் கலந்து உயிரில் கலக்கும். மாணிக்க வாசகர் சொல்லச் சொல்லத் தில்லை நடராசப் பெருமானே ஓர் ஏடெழுதும் பிள்ளையாக வந்து தம் திருக்கரத்தால் எழுதிய ஞானநூல். வெளிநாட்டினரின் உள்ளங்களைக் கவர்ந்த ஒப்பற்ற நூல். முத்தியில் பெறும் இன்பம் எப்படி இருக்கும் என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அதை முதன் முதலாக வார்த்தைகளில் வடித்துக்கொடுத்த தெய்வத்திருநூல். இது சைவர்களின் பன்னிரண்டு திருமுறைகளில் எட்டாவதாகத்தான் வைக்கப்பட்டிருக்கிறது.


எட்டுக்கும், மேலுலகத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. தெய்வங்கள் எல்லாம் இந்த உலகத்திற்குத் தேவையான செல்வங்களை மட்டும் கொடுக்கக்கூடியவை. பிறவாமையைக் கொடுக்க அவற்றால் முடியாது. அவனது நடனம் ஆனந்த நடனம். அதைக் கண்டுவிட்டால் போதும் என்றும் ஆனந்தந்தான்.


ரஷியாவில் அணுஉலை ஒன்றில் கொதித்துக் கொண்டிருந்த அணுக்கலவையிலிருந்து ஒரு சிறிய துளி வெளியில் விழுந்து விட்டது. அதைத் தொலைவிலிருந்த கட்டுப்பாட்டு அறையிலிருந்து கணிப்பொறிகள் மூலமாக விஞ்ஞானிகள் பார்த்தார்கள். அந்த ஒரு சிறு துளி வெளியில் வந்து விழுந்தவுடன் ஆடிய ஆட்டம் இதுவரையில் உலகில் கண்டறியாத அற்புத நடனமென்றும், அந்த நடனத்தின் அழகை வார்த்தைகளால் விளக்க முடியாது என்றும் கூறினார்கள். அந்த அணுவிலும் தாண்டவமாடும் தில்லை ஆடலரசன் காலைத் தூக்கி நின்றாடும் கோலத்தைச் சுற்றி நேர்க்கோடுகள் வரைந்தால் அது எண் கோணமாகும். அந்த ஆனந்தக் கூத்தன் அந்த எட்டில் நின்று ஆடித்தான் இந்த உலகத்தைப் படைக்கிறான்; நிலை நிறுத்துகிறான். அழிக்கின்றான். ஆம்;

ஆவதும் எட்டாலே; அழிவதும் எட்டாலே; போவதும் எட்டாலே; வருவதும் எட்டாலே.


எட்டு என்றதைக் கேட்டவுடன் பிடிக்காமல் போவதைப்போல இந்த நடராசனைக் கண்டாலும் யாருக்கும் பிடிக்காது. தப்பித் தவறி வீட்டுக்கு வந்து விட்டாலும் எடுத்துக்கொண்டு ஓடிப்போய் எங்காவது ஒரு கோயிலில் வைத்துவிட்டுத் திரும்பி பார்க்காமல் வந்து விடுவார்கள். எல்லோருமே இறப்புக்குப்பின் சொர்க்கத்துக்குப் போக நினைக்கிறார்கள். அந்தச் சொர்க்கத்திற்குப் போகும் நுழைவாயில் நம் வீட்டு வாசற்காலைப் போல இல்லை; அது எண் கோண வடிவில் இருக்கிறது. கோயில்களில் மூலவர் இருக்கும் கருவறைக்கு உள்ளே அதன் மேல் உள்ள விமானப் பகுதி எண் கோணவடிவில் அமைந்திருக்கும். அதை மூடியிருக்கும் கல்லும் எண்கோண வடிவில் அமைந்திருக்கும். உள்பகுதியில் உள்ள எண் கோணத்தை பிரம்மரந்திரம் என்பார்கள்.


இறைவன் சொர்க்கத்தின் நாயகன்; அவன் போவதும் வருவதும் அந்த எண்கோண வழியில்தான். தஞ்சைப் பெரியகோயிலில் உள்ள மூலவர் மிகவும் பெரிய உருவம். அவருக்குப் பெயரே தஞ்சைப் பெருவுடையார். அதற்குத் தகுந்தாற்போல் உள்கூட்ட எண்கோணம் மிகவும் பெரியது. அதை மூடத்தான் எட்டு டன் எடையுள்ள ஒரே கல் தேவைப்பட்டது. எண் கோண வடிவிலான அதை எப்படித் தூக்கிக் கீழேயுள்ள எண் கோணத்தில் பொருந்துமாறு நிறுத்தியிருப்பார்கள் என்று புரியாமல் இன்றும் வெளிநாட்டுக் கட்டிடக்கலை நிபுனர்கள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை.


எகிப்திய பிரமிடுகளைப் பற்றி அறிந்திருக்கிறோம். அதன் உட்புறம் ஏக்கர் கணக்கில் பெரியது. அதன் நடுநாயகமாக இருக்கும் பகுதியில்தான் இறந்த எகிப்திய மன்னர்களின் பதப்படுத்தப்பட்ட உடல்கள் (மம்மி) அடங்கிய நவரத்தினப் பேழைகள் வைக்கப்பட்டிருக்கும். அதற்கு நேரான மேல் பகுதிதான் வெளியில் தெரியும் கூம்பு வடிவம். பேழைகளுக்கு நேராக மேலே உள்ள பகுதி எண் கோண வடிவில் அமைந்திருக்கும். அதை மேல்புறத்தில் மூடுவதற்கு ஒவ்வொன்றும் எட்டு டன் எடையுள்ள கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மம்மிகளுக்கு மேலேயுள்ள இந்த எண்கோல் வழியாகத்தான் அங்கே தூங்கிக்கொண்டிருக்கும் மன்னர்கள் தங்கள் அரசியருடன் பகலில் சொர்க்கலோகத்திற்குச் சென்று அங்குப் பகலெல்லாம் இருந்துவிட்டு இரவில் அதே எண்கோண வழியாக மம்மிக்குத் திரும்பி விடுகிறார்கள் என்பது அவர்கள் நம்பிக்கை.


குழந்தை பிறக்கும்போது அதன் தலையின் உச்சித் துர தோலால் மட்டுமே மூடப்பட்டிருக்கும். குழந்தை வளர வளரத்தான் மண்டையோடு வளர்ந்து கூடுகிறது. குழந்தை பிறக்கும்போதிருந்த உச்சித்துளை வட்டவடிவமானது அல்ல. அது எண்கோண வடிவிலானது. எனவே, அதையும் யோகித பிரம்மரந்திரம் என்றே கூறுவார்கள். உடலிலிருந்து உயிர் பிரியும்போது உச்சித் துளை வழியாகப் பிரிந்து சென்றால் அந்த உயிர் நேரே சொர்க்கத்திற்கும் மேற்பட்ட பல உயர்ந்த உலகங்களுக்குச் சென்று விடுகிறது. அது மீண்டும் பூமிக்கு வருவதில்லை. யோகிகள் நினைத்தால் தன் உடலில் பெரிய அக்கிணியை உருவாக்கிக் கொண்டு அதைத் தலை உச்சிக்குச் செலுத்திப் பிரம்மரந்திரத்தை வெடிக்கச் செய்து அதன் வழியாக மேலுக்கு மேலான உலகத்திற்கு செல்வார்கள். இதனைக் கபாலமோட்சம் என்பார்கள்.

தூக்கம் வரலையா?




ஓர் இரவு முழுவதும் உங்களால் தூங்காமல் இருக்க முடியுமா? யாராக இருந்தாலும் சான்சே இல்லை என்ற பதில்தான் வரும். ஆனால், உலகில் 7  முதல் 18 சதவீதம் பேர் தூங்க முடியாமல் தவிப்பதாகவும் இவர்களில் 3 முதல் 13 சதவீதம் பேர் தூக்கம் மற்றும் மன அமைதிக்கான  மாத்திரைகளை உட்கொண்டால்தான் உறங்க முடிகிறது என்றும் அறிவிக்கிறது மருத்துவ ஆய்வு.

ஒரு நாளில் 7 முதல் 10 மணி நேரம் தூங்கினால், உடல் நல்ல நிலையில் இருக்கிறது என்று அர்த்தம். அது குறைந்தாலோ, கூடினாலோ ஏதோ ஒரு  நோய்க்கான அறிகுறியாக இது இருக்கலாம் என்பதை உணர்ந்து உடனே மருத்துவரை சந்திப்பது நல்லது. குழந்தைகள் அதிகம் தூங்குவதையோ,  முதியவர்கள் மிகக்குறைவாக தூங்குவதையோ பிரச்னையாக கருதத் தேவையில்லை.

குழந்தைகள் 16 மணி நேரம் வரை கூட உறங்குவார்கள். முதியவர்கள் 4 மணி நேரம் ஆழ்ந்து தூங்கினாலே, அது அவர்கள் வயதுக்கு நல்ல  தூக்கம்தான்.

ஸ்கேன் பற்றிய ஸ்கேன் ரிப்போர்ட்





நவீன மருத்துவ உபகரணங்களில் ஸ்கேன் முக்கிய இடம் பெறுகிறது அவற்றின் விபரம் வருமாறு.

டெஸ்டா எம்ஆர்ஐ ஸ்கேன்

காந்த அதிர்வை உடலில் செலுத்தி தேவைப்படும் பாகங்களை குறுக்கு வெட்டாக துல்லியமாக படம் பிடித்து கட்டிகளை கண்டறிய உதவுகிறது.

சிடி ஸ்கேன்

தலைப்பகுதியின் உட்பாகங்களில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை இந்தக் கருவியின் மூலமாக மட்டுமே துல்லியமாக கண்டறியமுடியும். எக்ஸ்ரேயில் தெரியாத தலையின் எலும்பு உள்பாகங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இதன் மூலம் கண்டறிந்து அதற்கேற்ற சிகிச்சை அளிக்க பயன்படுகிறது. இந்த கருவி மிகவும் விலை உயர்ந்தது என்பதால் குறிப்பிட்ட பெரிய மருத்துவமனைகள் அல்லது பெரிய மருத்துவ பரிசோதனை கூடங்களில் மட்டுமே உள்ளன.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்

உடலின் உள் அமைப்புகளை முப்பரிமான முறையில் கண்டறிய முடியும். குறிப்பாக திரவப் பகுதியில் ஊடுருவி உடலில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள், கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சி நிலை போன்றவற்றை கண்டறிய மிகவும் உதவுகிறது.

கலர் டாப்லர் ஸ்கேன்.

ரத்த குழாய்கள் வழியாக ஊசி மூலம் மருந்து செலுத்தி குறைபாடுகளை துல்லியமாக கண்டறிய பயன்டுகிறது.

எக்கோ

இருதய செயல்பாடுகளை கண்டறிய பயன்படும் கருவி, நுண் அதிர்வுகள் மூலம் இருதய திறனை கண்டறிந்து குறைபாடுகள் கண்டறியப்பட்டால் தேவையான சிகிச்சை அளிக்க முடியும்.

டிரெட் மில் டெஸ்ட்(டிஎம்டி)

வயதிற்கு ஏற்ப இருதய துடிப்பு செயல்பாடுகளை இதன் மூலம் கண்டறியமுடியும். டிரட்மில் கருவியில் வேகமாக நடக்க வைத்தும், ஒட வைத்தும் இந்த பரிசோதனை செய்யப்படுகிறது. இதன்மூலம் இருதய பலம், பலவீனம் கண்டறிய முடியும்.

இசிஜி


இருதய துடிப்பு சீராக இருப்பதை கண்டறிய இது பயன்படுகிறது.

டிஜிட்டல் இசிஜி

இருதயத்தின் நான்கு அறைகளில் உள்ள செயல்பாடுகளையும் துல்லியமாக கண்டறிய முடியும்.



டிஜிட்டல் எக்ஸ்ரே

சாதாரண எக்ஸ்-ரே கருவியை விட இது துல்லியமாக உடலின் குறைபாடுகளை சுட்டிக் காட்டுகிறது.

மோமோ கிராம்

பெண்களுக்கு ஏற்படும் மார்பக குறைபாடுகளை கண்டறிய முடியும் குறிப்பாக பெண்களுக்கு அதிகம் ஏற்படும் மார்பக கட்டிகள், மார்பக புற்றுநோய், போன்ற குறைபாடுகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்க பயன்படுகிறது.

மாஸ்டர் ஹெல்த செக் அப்

மாஸ்டர் ஹெல்த் செக்-அப் என்ற பெயரில் பல மருத்துவமனைகளில் ஒரே நேரத்தில் பல உடற்பகுதிகள் பரிசோதனை செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு மருத்துவமனையிலும் பல்வேறு கட்டண விகிதங்களிலும் செய்யப்படுகிறது. உலக இருதய நோய் தினம், நீரிழிவு நோய் தினம், போன்ற சில முக்கிய மருத்துவ தினங்களில் சிறப்பு சலுகை கட்டணங்களில் மாஸ்டர் செக்அப் செய்யும் மருத்துமனைகளும் உண்டு. தேராயமாக 1000 முதல் 5000 வரை முழு உடல் பரிசோதனை செய்யப்படுகின்றன. சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் ரூ10 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் கட்டணங்களில் சிறப்பு மருத்துவ உடற்பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

இந்திய-தென்னார்ப்ரிக்கா:முதல் டெஸ்ட் போட்டி டிரா




ஜோகன்னஸ்பெர்க்: இந்திய-தென்னார்ப்ரிக்கா அணிகளுக்கிடையே ஜோகன்னஸ்பெர்க்கில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 280 ரன்களும், இரண்டாவது இன்னிங்க்ஸில் 421 ரன்களும் எடுத்தது. தென்னார்ப்ரிக்கா முதல் இன்னிங்க்ஸில் 244 ரன்களும் இரண்டாவது இன்னிங்க்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 450 ரன்கள் எடுத்தது. இதனால் போட்டி டிராவில்  முடிவடைந்தது

ஆஷஸ் தொடரை இழந்தது இங்கிலாந்து அணி





பெர்த்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணியை வீழ்த்தியதன் மூலம், அந்த அணியிடமிருந்து ஆஷஸ் பட்டத்தை ஆஸ்திரேலியா பெற்றுள்ளது.

இதுவரை நடைபெற்றுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து மிக மோசமான தோல்வியை தழுவியுள்ளது.

பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 381 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், அடிலெய்டில் 218 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் இங்கிலாந்து தோல்வியடைந்தது.

இன்று(செவ்வாடய்) அதிகாலை லண்டன் நேரம் சுமார் 6 மணி அளவில் முடிவடைந்த மூன்றாவது போட்டியில் இங்கிலாந்தை 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்று தொடரைக் கைப்பற்றியது.

இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் துவக்க ஆட்டக்காராக களமிறங்கிய அணித் தலைவர் அலிஸ்ட்டர் குக் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஆட்டமிழக்க அந்த அணியின் சரிவு தொடங்கியது.

தமது அணிக்காக பி ஏ ஸ்டோக்ஸ் இரண்டாவது இன்னிங்ஸில் 120 ஓட்டங்களைப் பெற்றாலும், இங்கிலாந்து அணியால் தோல்வியை தடுக்க இயலவில்லை.

இந்தத் தொடரில் இதுவரை நடைபெற்றுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடவில்லை என்றும், அதுவே ஆஷஸ் தொடரை இழக்க முக்கியக் காரணமாக இருந்துள்ளது என்றும் பல முன்னாள் பிரபலங்கள் கூறியுள்ளனர்.

நான்கு மாதங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் நடைபெற்ற தொடரில், ஆஸ்திரேலிய அணியை 3-0 எனும் கணக்கில் வென்று ஆஷஸ் தொடரை தக்க வைத்துக் கொண்டது.

இந்த இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி இந்த மாதம் 26 ஆம் தேதி மெல்பர்ண் நகரில் தொடங்கவுள்ளது.

கடைசி டெஸ்ட் சிட்னி நகரில் இடம்பெறுகிறது.

நான் ரஜினியை இயக்கவில்லை : கே.எஸ்.ரவிக்குமார்




ரஜினியை நான் இயக்கவில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

'கோச்சடையான்' படத்தினைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் படத்தை இயக்கப் போவது யார் என்பது பற்றி பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர், கே.வி.ஆனந்த், பி.வாசு என பல்வேறு இயக்குநர்கள் இப்போட்டியில் இருக்கிறார்கள்.

ரஜினியின் அடுத்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குவார் என்று செய்திகள் வெளியாகின. அதற்கு கே.எஸ்.ரவிக்குமார் மறுப்பு தெரிவித்தாலும், தொடர்ச்சியாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில் கே.எஸ்.ரவிக்குமார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், "விரைவில் சுதீப் ('நான் ஈ' வில்லன்) நடிக்கவிருக்கும் படத்தை இயக்க இருக்கிறேன். எந்த ஒரு புதிய படத்திலும் நான் ரஜினியை இயக்கவில்லை.

ரஜினியை வைத்து நான் இயக்கவிருந்த படம் அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நிறுத்தி வைக்கப்படுள்ளது. தற்போது வெளியாகி இருக்கும் செய்திகள் யாவுமே வதந்தி தான். உண்மையில்லை" என்று கூறியிருக்கிறார்.

‘தூம் 3’ தூள் பறக்கிறது..!



சிகாகோவில் ஜாக்கி ஷெராப் சர்க்கஸ் நிகழ்ச்சியை வங்கி மூலம் லோன் வாங்கி நடத்தி வருகிறார். அவருடைய மகன் ஆமிர்கான். ஒரு கட்டத்தில் வாங்கிய லோனை திருப்பி தர முடியாத நிலையில் வங்கியில் இருந்து சர்க்கஸை நடத்துவதை நிறுத்தி விடுகிறார்கள். இதனால் தன் மகன் கண்முன் ஷெராப் தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் அந்த வங்கி மீது கோபம் கொள்கிறார் ஆமிர்கான். இந்த கோபத்தால் ஆமிர்கான் பெரியவனாக வளர்ந்த பிறகு, அந்த வங்கியின் கிளைகளில் உள்ள பணத்தை கொள்ளையடிக்கிறார்.

அந்த பணத்தை வைத்து சர்க்கஸை தொடங்கி நடத்தி வருகிறார். அப்படி அவர் கொள்ளை சம்பவங்களை நடத்தும்போது ஒவ்வொரு முறையும் இந்தி மொழியில் ஏதோ எழுதி வைத்து வந்துவிடுகிறார். இந்தி மொழியை வைத்து அவர் இந்தியாவை சேர்ந்தவர் என முடிவெடுக்கும் சிகாகோ காவல்துறையினர் ஆமிர்கானை கண்டுபிடிக்க இந்தியாவில் இருந்து அபிசேக் பச்சான் மற்றும் உதய் சோப்ரா ஆகிய இரண்டு பேரை சிகாகோவுக்கு வரவழைக்கின்றனர். ஆமிர்கானை பிடிக்க பல்வேறு வழிகளில் இவர்கள் முயற்சித்தும் பலன் அளிக்காமல் போய் விடுகிறது. ஆமிர்கான் தப்பித்துக் கொண்டே இருக்கிறார்.

ஆமிர்கானை பற்றி கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டும் அபிசேக் பச்சான் மற்றும் உதய் சோப்ரா, ஜாக்கி ஷெராப்க்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் ஒரே மாதிரியான தோற்றத்தைக் கொண்டவர்கள் என்று கண்டுபிடிக்கின்றனர். அதில் ஒருவர் கேத்ரினா கைப்பை காதலிக்கிறார். இதனை தெரிந்துக் கொண்ட போலீசார் கேத்ரினா மூலம் கொள்ளையடிக்கும் ஆமிர்கானை பிடிக்க திட்டம் தீட்டுகிறார்கள்.

இறுதியில் ஆமிர்கானை பிடித்தார்களா? அல்லது தப்பித்தாரா? என்பதே மீதிக்கதை.

ஆமிர்கான் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நடனக்காட்சிகளிலும், ஸ்டண்ட் காட்சிகளிலும் அசத்தவும் செய்கிறார். போலீசாக வரும் அபிசேக் பச்சான் மற்றும் உதய் சோப்ரா, கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். அழகாகவரும் கேத்ரினாவுக்கு காட்சிகள் மிகவும் குறைவு. ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். ப்ரீதம் சக்ரபொர்த்தி இசையில் பாடல்கள் சிறப்பாக இருந்தாலும் பின்னணி இசையில் மிகவும் கலக்கியிருக்கிறார்.

மொத்தத்தில் ‘தூம் 3’ தூள் பறக்கிறது

தமிழ் சினிமா வரலாற்றில் முதன் முறை 68 ஹீரோ 80 ஹீரோயின் அறிமுகம்!




தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு இதுவரை 150 படங்களை தாண்டிவிட்டது. ரிலீசான படங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்த ஆண்டு அறிமுகமான நடிகர், நடிகைகளின் எண்ணிக்கையும் அதிகம். இதில் ஹீரோவாக அறிமுகமானவர்கள் மட்டும் 68 பேர். இவர்களில் கார்த்திக் மகன் கவுதம் (கடல்), சேது (கண்ணா லட்டு தின்ன ஆசையா) ஆகியோர் மட்டுமே அடுத்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக கவுதம் மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். முக்கியமான இளம் ஹீரோக்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். இவர்கள் தவிர மலையாளத்திலிருந்து வந்த நிவின் (நேரம்), சந்தோஷ் (ஆதலினால் காதல் செய்வீர்), ராம் (தங்க மீன்கள்), விக்ரம் ஆனந்த் (நிர்ணயம்), அசோக் ஷெல்வன் (பீட்சா-2) ஆகியோர் தங்கள் நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்தார்கள்.

2013ம் ஆண்டு 80 ஹீரோயின்கள் அறிமுகமாகி இருக்கிறார்கள். இது எந்த ஆண்டிலும் எந்த மொழியிலும் இல்லாத சாதனை அளவாகும். இவர்களில் மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த நஸ்ரியா நாசிம் (நேரம்), ராதா மகள் துளசி (கடல்), நிவேதா தாமஸ் (நவீன சரஸ்வதி சபதம்), மிருத்திகா (555), சுரபி (இவன் வேற மாதிரி) ஆகியோர் கவனிக்கப்பட்டவர்கள். இவர்கள் தவிர, விபா (மதில்மேல் பூனை), அஷ்ரிதா ஷெட்டி (உதயம் என்.எச்-4), சுர்வின் (மூன்று பேர் மூன்று காதல்), ஸ்ரீரம்யா (யமுனா), இஷா தல்வார் (தில்லுமுல்லு) ஆகியோர் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்கள்.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் சிறிய பட்ஜெட்டில் கூட படம் எடுத்துவிட முடிகிற சூழ்நிலை இருப்பதால் புதியவர்கள் சினிமா நோக்கி வருகிறார்கள். நான்கு பேர் சேர்ந்து ஒரு படத்தை எடுத்து விடுகிறார்கள்.

நடிக்கும் ஆசையுடன் இருக்கிறவர்களுக்கு கொஞ்சம் முயற்சி செய்தால் ஏதாவது ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து விடுகிறது. அதனால்தான் புது ஹீரோ, ஹீரோயின்களின் வருகை அதிகமாகி இருக்கிறது. அப்படி அதிகமானாலும் நிலைத்து நின்றவர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கிறது. காரணம் இப்போது சினிமாவில் அறிமுகமாவது எளிது. திறமையால் மக்களை சென்றடைவதும், சென்றடைந்து புகழ் பெற்றால் அதை தக்க வைத்துக் கொள்வதும் கடினம். நிறைய புதுமுகங்கள் வருவது ஆரோக்கியமான விஷம்யம்தான். அப்போதுதான் திறமையாளர்கள் கிடைப்பார்கள் என்கிறார் முன்னணி தயாரிப்பாளர் ஒருவர்.

அழகுக்கு அழகு சேர்க்கும் தேங்காய்!



நமது சமையலில் முக்கிய இடம்பெறும் தேங்காய், நமது தேகத்தை அழகாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. தலை முதல் பாதம் வரை மென்மை, பளபளப்பை தாராளமாய் அள்ளித்தரும் தேங்காய், நம்மை தன்னம்பிக்கையுடன் நடைபோட வைக்கும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.

* வழுக்கை தேங்காயை நன்கு அரைத்து, அதனோடு சிறிதளவு இளநீர் கலந்து முகத்தில் கீழ் இருந்து மேல்நோக்கி பூசி, அது உலர்ந்ததும் நீர் கொண்டு சுத்தம் செய்துகொள்ள வேண்டும். தினமும் இப்படி செய்து வந்தால் மாசு மருவின்றி முகம் மிளிரும். கரும் புள்ளிகள் இருந்தால் கூடிய விரைவில் அவை காணாமல் போய்விடும்.

* வெயில் காலங்களில் சூரியஒளி பட்டு முகம் கருப்பாவது வழக்கம். பலருக்கு வெளியூர் சென்றால்கூட இதுபோன்ற நிலை ஏற்படும். முகம் கருப்பாவதை தடுக்கவும் தேங்காய் உதவுகிறது. தேங்காய் பால் 2 ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து, இரண்டையும் கலந்து பசைபோல ஆக்கிக்கொள்ள வேண்டும். இந்த பசையை முகத்தில் பூசிக்கொண்டு, உலர்ந்ததும் தண்­ணீர் கொண்டு கழுவிவிட வேண்டும். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால் முகம் பிரகாசமாகும்.

- கேரள பெண்கள் ஏன் கொள்ளை அழகுடன் ஜொலிக்கிறார்கள் என்பதற்கான காரணம் இப்போது உங்களுக்கு புரிந்திருக்குமே...!

தோல்வி எதனால் ஏற்படுகிறது ?




1.முதலாவதாக, செய்வதில் ஆர்வமும் ஈடுபாடும் உண்மையாக, முழுமையானதாக இருக்க வேண்டும்.சமீபத்தில் டைம்ஸ் நவ் தொலைக் காட்சியில், சச்சின் டெண்டுல்கருடைய பேட்டி ஒன்று, அவர் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து இருபது ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி ஒளிபரப்பானது. வெறும் விளையாட்டு, கொஞ்சம் அதிகமான ஆர்வம் என்பதையும் மீறி, அதுவே அவரது வாழ்க்கையும், தவமுமாகிப் போனதை அந்தப் பேட்டி மிகவும் அழகாகச் சொன்னது. அதன் ஒருபகுதியைக் கீழே பார்க்கலாம்.
2.இரண்டாவதாக, ஒரு தெளிவான திட்டம் உங்களுக்கு இருக்க வேண்டும். என்னவாக வேண்டும் என்பதைக் குறித்து ஒரு கனவு, அந்தக் கனவு மெய்ப்பட என்னென்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்த தெளிவான பார்வை. நிதியாதாரங்கள் திரட்டுவதும் அதன் ஒரு முக்கியமான பகுதியாக இருக்க வேண்டும்.

3.மூன்றாவதாக, எல்லாவகையிலும் அது முழுமையானதாக இருக்கவேண்டும் என்று காத்திருக்காமல்,சோதனை ஓட்டத்திற்குத் தயாராக வேண்டும். சோதனை முயற்சிகளில் கிடைக்கும் படிப்பினைகளில் இருந்தே உங்களுடைய ஒரிஜினல் ஐடியாவைச் சரி செய்து கொள்ள முடியும். முதல் நாளில் இருந்தே அது முழுமையாக, சரியானதாக இருக்க வேண்டும் என்று நினைப்பது கடைசியில் ஒன்றுமே செய்யாமல் நின்று விடுவதான செயலாற்ற தன்மைக்குக் கொண்டு விட்டு விடும்.
4.நான்காவதாக, கடுமையாக உழைக்கத் தயாராக இருக்க வேண்டும். கட்டுப்பாடுடனும், பொறுமையுடனும் செயல்படுவது நம் வாழ்வில் மிக முக்கியமான ஒன்றாக இருப்பது நல்லது.

5.ஐந்தாவதாக, வளர வேண்டும் என்ற விருப்பமிருந்தால் கற்றுக் கொள்வதை நிறுத்தி விடாதீர்கள். கற்றுக்கொள்வது நிற்கும் போது, வளர்ச்சியும் தேக்கமடைந்து போய் விடுகிறது. முக்கியமாக, தலைமைப் பண்புடன் கூடியவர்களைக் கொண்ட ஒரு குழுவை நிறுவ முயற்சி செய்யுங்கள். குழுவாக செயல்படும்போது, உங்களிடமில்லாத திறமைகளும் சேர்ந்து வெளிப்படும்.

6.ஆறாவதாக, நேற்றைய வெற்றிகளில், சாதனைகளில் தேக்கமடைந்து நின்று விடாதீர்கள்.

அப்படித் தேக்கமடைந்துவிடுவதில், காலம் செல்லச் செல்ல, வேகமும் குறைந்து விடும். அப்படி ஒரு நிலை வருமானால், பழையதை விட முடியாமலும், புதியதற்குத் தயாராக முடியாமலும் அந்தரத்தில் தொங்கும் நிலைக்கு ஆளாக நேரிடலாம்.

8.ஏழாவதாக, ஏதோ ஒன்றைச் செய்யாமல் இருப்பது உங்களுக்கு விருப்பமில்லாமல் இருக்கிறதென்றால் அதைக் கவனியுங்கள். உதாரணத்துக்கு, சிகரெட், மது, பெண்பித்து, பேராசை, நாணயக் குறைவு, எதிலும் காலதாமதம் இது போன்ற பலவீனங்கள், கவனத்தைத் திசை திருப்புபவைகளாக, இப்படி எது உங்களுடைய முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கிறது?

அப்படித் தடையாக இருப்பதை மாற்றிக்  கொள்வதில் என்ன தயக்கம் என்பதைக் கவனியுங்கள். படுமுடிச்சுக்கு மேல் படுமுடிச்சாகப் போட்டுக் கொண்டிருப்பது எளிது. முடிச்சுக்களே இல்லாமல், எளிமையாக இருப்பதற்கு, ஒரு ஒழுங்கும் கட்டுப்பாடும் அவசியம். எளிமையாக, ஒழுங்கோடு இருப்பவைகளே வெற்றிக்கு அஸ்திவாரம்.

8.எட்டாவதாக, நீங்கள் உருவாக்கும் குழுவில் இருப்பவர்கள், உங்களுடைய நண்பர்களாக ஏற்கெனெவே இருப்பவர்களாகவோ, அல்லது நண்பர்களாக ஆகப் போகிறவர்களாகவோ இருக்கட்டும்! வேலைக்கு ஆட்களைத் தேர்ந்தெடுப்பது எளிது. ஆனால், உங்களுடைய வாழ்க்கையை உங்களோடு பகிர்ந்து கொள்பவர்களாகவும், காலப்போக்கில், மிகச் சிறந்த உறவுகளாகவும் நண்பர்கள் தான் இருக்க முடியும்! வேலைக்காரர்கள் அல்ல.

சுருக்கமாக, குழுவை உருவாக்குங்கள், ! குழுவில் இருப்பவர்களை உங்களுடைய நல்ல நண்பர்களாக ஆக்கிக் கொள்ளுங்கள்!

9.ஒன்பதாக, உற்றார் உறைக்கச் சொல்வார்கள் ஊரார் சிரிக்கச் சொல்வார்கள் என்ற சொலவடையை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய சோதனையான தருணங்களில், கடுமையாகப் பேசினாலும், சோதனைகளில் இருந்து மீள்வதற்கு உதவும் வகையில் இருக்கும் ஒருவர் அல்லது பலருடைய துணையைக் கைக்கொள்ளுங்கள்.

10.பத்தாவதாக, "அச்சமே கீழ்களது ஆச்சாரம்" என்று சமுதாய வீதி நாவலில் எழுத்தாளர் நா.பார்த்த சாரதி சொல்வது போல, தோல்வியைக் குறித்த பயமே, அடுத்தடுத்த முட்டாள் தனங்களுக்கு அடிகோலுவதாக இருப்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எதிர்மறையான எண்ணங்கள் எதிர்மறையான விளைவுகளைத் தான் தரும்.நமக்குத் தெரிந்த அளவோடு நிறுத்திக் கொண்டாலோ, சராசரியாக அல்லது அதற்கும் கீழே இருந்து விடுவதில் ஒரு சௌகரியத்தைக் கற்பித்துக் கொள்வதிலோ நின்று விடாமல் எவ்வளவுக்கு எவ்வளவு தோல்விகளை எதிர் கொள்கிறோமோ, அந்த அளவுக்கு வெற்றியையும் நம்மால் பெற முடியும்!

ஆமாம்! கொஞ்சம் கூடப் பொய்யில்லை, உண்மையாகவே வெற்றியை நம்மால் பெற முடியும்!

இப்படி, கொஞ்சம் குறிப்பிட்டும், பொதுமைப் படுத்தியும் சில கருத்துக்கள் தன் . இது தன் தோல்விக்கு வழியாக இருக்கும். நான் எதிர்பார்க்கும் முக்கியமான விஷயம் என்னவென்றால், உங்களுடைய அனுபவங்களில் இருந்து நீங்கள் இவற்றில் எவை எவை பொருத்தமாக இருக்கும், அல்லது பொருந்தாது என்றோ, மாற்றுக் கருத்தாக எதை முன்வைக்கிறீர்கள், வைக்கப் போகிறீர்கள்  என்பது தான்!

பதட்டத்தை வெல்ல நினைப்பவர்களுக்கு!


     பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று. ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும்.

எனவே பதட்டம் எதனால் உண்டாகிறது, அதனை எப்படித் தவிர்க்கலாம் என்று அறிய வேண்டும்.

    சிறு குழந்தைகளை நாம் எப்படி நடத்துகிறோமோ, அவர்களுக்கு என்ன கற்றுத்தருகிறோமோ அதுதான் பொதுவாக அவர்களது குண நலங்களுக்கு அடிப்படையாகிறது. எனவே சிறு குழந்தைகளாக இருக்கும்பொழுதே அவர்களைப் பலருடன் பழகவும், பல சூழல்களைக் கையாளவும் கற்றுக்கொடுத்துவிடுவதும், குழந்தைகளை மட்டம் தட்டி, கேலி செய்யாமல் தட்டிக்கொடுத்து வளர்ப்பதும் மிகவும் அவசியம். சிறு குழந்தைகளாக இருக்கையில் பிறருடன் பேச, பழக வெட்கப்படும் குழந்தைகளை அப்படியே விட்டுவிடாமல், மெள்ள மெள்ளப் பலருடன் பழக வாய்ப்பினை உண்டாக்கி, பயிற்சி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், வளர்ந்தபின், பள்ளி அல்லது கல்லூரியில் படிக்கையில், நான்கு பேருடன் பேசவோ, வெளியில் செல்லவோ நேர்கையில் பதட்டத்தால் அவர்கள் ஆக்கிரமிக்கப்பட்டுவிடக்கூடும். இத்தகையவர்கள் தமது ஆசிரியர்களிடன் தமது சந்தேகங்களைக் கேட்கவோ, தமது உடன் படிப்பவர்களுடன் பேசவோ நேரும்பொழுது அதிகக் கூச்சத்தாலும் பயத்தாலும் ஆக்கிரமிக்கப்பட்டுவிடுவர். பொது இடங்களுக்குச் செல்வது, சிறிய குழுவுடன் பேச நேர்வது இவை அவர்களுக்கு அதிகப் பதட்டத்தை உண்டாக்கும்.

    அதேபோல், சிறு குழந்தைகளாக இருக்கையில் கேலிக்கு ஆளாகி வளர்ந்தவர்கள், பெற்றோராலும் மற்றவர்களாலும் திட்டி, மட்டம் தட்டி வளர்க்கப்பட்டவர்கள், பெரியவர்களாகியபின் கூட எந்தச் செயலைச் செய்வதானாலும், குழப்பமும் பதட்டமும் அடைவார்கள். பிறருடன் பேசுகையில் கைகால்கள் நடுங்குதல், உடல் வியர்த்தல், புதிய இடங்களுக்குச் செல்லத்தயங்குதல் இவையெல்லாம் பதட்டமான மனநிலைக்கு அறிகுறி. புதிய சூழலுக்கு ஆட்படுகையில் சிலர் பதட்டத்தால் மயக்கமடைவதும் மாரடைப்பு ஏற்படுவதும்கூட நடப்பதுண்டு.

    இத்தகைய பதட்டமான மனநிலை உடையவர்கள், தாழ்வு மனப்பான்மைக்குள் விழுந்துவிடுவதும் மனச்சோர்விற்கு ஆளாவதும் அதிகம். பதட்டம் என்ற ஒரு குணம் இவர்களது நேரத்தையும் ஆற்றலையும் விழுங்கி, இவர்களது திறமைகளைப் பிரகாசிக்க விடாமல் வீணடிக்கச் செய்கிறது. எனவே, இவர்கள் தம்மையே சுய பரிசோதனை செய்துகொண்டு, தாம் இந்தப் பதட்டம் என்னும் சிறையில் இருந்து விடுபட நினைத்தால் அதற்கு என்ன வழி?

பதட்டத்தை வெல்ல பதினொரு வழிகள்:

1 . முதலில் வாழ்த்துக்கள். நீங்கள் பதட்டத்தை வெல்ல வேண்டும் என நினைப்பதே ஒரு நல்ல அறிகுறி. நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

நமது எண்ணங்களே நாம் வாழ்வின் அடிப்படை. நமது நேர்மறை எண்ணங்கள் நமக்கு நற்பலனையும், எதிர்மறை எண்ணங்கள் தோல்வியையும் உண்டாக்குகின்றன. தவறு செய்துவிடுவோமோ என்ற அச்சத்துடன் செய்யும் வேலைகள் தவறாகவேதான் முடியும். எனவே எதிர்மறையான சிந்தனைகள் (Negetive Thinking) தோன்றும்பொழுது கவனமாக உங்கள் மனத்தை வேறு நேர்மறை எண்ணங்களுக்குத் (Positive Thinking) திருப்புங்கள். ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமாக இருக்கும் என்றாலும் கொஞ்ச நாளில் உங்கள் மனமானது தானாகவே நேர்மறைக்கு மாறிவிடக் காண்பீர்கள்.

2 . ஒரு தாளைக் கையில் எடுத்துக்கொள்ளுங்கள். உங்களிடம் உள்ள குறைபாடுகள் என்னென்ன? எந்தெந்த விஷயங்கள் உங்களுக்குப் பதட்டத்தைத் தூண்டுகின்றன எனப் பட்டியலிடுங்கள். பின் நிதானமாக அக்காகிதத்தைக் கிழித்து குப்பைத்தொட்டியில் எறியுங்கள். இக்குறைபாடுகள் என்னை விட்டு வெகு விரைவில் நீங்கிவிடும் என்றும், இனி இச்சூழல் என்னை அச்சுறுத்தாது. இத்தகைய சூழலை எதிர்கொள்ளும் தெம்பு எனக்கிருக்கிறது என்றும் திடமான குரலில் உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள். சுய அறிவுரை(Autosuggestion) என்ற இந்த முறை ஆழ்மனத்தில் உங்களைப் பற்றி நீங்களே பதித்து வைத்திருக்கும் தவறான பிம்பத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிடும்.

3 . உங்களிடம் உள்ள திறமைகள் மற்றும் உங்கள் நிறைகள் என்னென்ன என்பதைப் பட்டியலிடுங்கள் (குறைந்தபட்சம் பத்து). எனக்கு எந்தத் திறமையுமே இல்லை என்று பதில் சொல்லாதீர்கள். 'எறும்பும் தன் கையால் எட்டுச் சாண்' என்பார் அவ்வைப்பிராட்டி. இனிமையான குரலா, உயரமா, நினைவு வைத்துக்கொள்ளும் திறமா, கணக்கில் புலியா, வேகமாக ஓட வல்லவரா, சமையலில் திறமைசாலியா, பிறருக்கு உதவும் குணமும் மனமும் உள்ளவரா? என்னென்னவெல்லாம் உங்களுடைய நல்ல குணங்கள் அல்லது திறமைகள் என்று கருதுகிறீர்களோ அவை எல்லாவற்றையும் பட்டியலிட்டுப் பாருங்கள். உங்கள் மனம் சோர்வடைகையில் அப்பட்டியலை எடுத்துப் படித்துப் பாருங்கள்.

4 . நீங்கள் என்னென்ன செய்ய விரும்புகிறீர்கள் அல்லது வாழ்வில் உங்கள் இலக்கு என்ன? இதைச் சற்று ஆழ யோசியுங்கள். இந்தப் பதட்டம் அதற்கு எந்த வகையில் தடையாக இருக்கும் என்பதைச் சிந்தித்து, "இதில் இருந்து நான் வெளியில் வந்தே தீருவேன். என் இலக்கை அடைந்தே தீருவேன்" என்று இரவில் படுக்கைக்குச் செல்லுமுன் உரக்கச் சொல்லிக்கொள்ளுங்கள்.

5 . காலை எழுந்தவுடன் கண்ணில் படுகின்ற மாதிரியான இடத்தில், நல்ல ஆரோக்கியமான பொன்மொழிகள், உற்சாகமூட்டும் சுவரொட்டிகள் இவை இருக்குமாறு ஏற்பாடு செய்துகொள்ளுங்கள். இரவு படுக்கைக்குச் செல்லுமுன், சிறியதோ பெரியதோ, உங்களுக்கு நடந்த நன்மை ஒன்றை நினைவு படுத்திக்கொள்ளுங்கள்.

6 . எப்பொழுதும் ஏதாவது பரபரப்பாகச் செய்துகொண்டு இருங்கள். 'Idle man's brain is devil's workshop' என்பது ஆங்கிலப்பழமொழி. தனியாக இருக்கையிலும், வேலையில்லாமல் இருக்கையிலும் நமது மனக்குரங்கு பல கிளைகளில் தாவித்தாவிச் செல்லும். அவ்வாறு அக்குரங்கு தாவும் பல நினைவுக்கிளைகள் எதிர்மறையானதாக இருக்கும். எனவே மனத்தை அலைபாய விடாமல் ஒரு நிலைப்படுத்தவேண்டுமானால் உடலுக்கும் மனதிற்கும் வேலை கொடுத்துக்கொண்டே இருப்பது அவசியம்.

7 . தியானம் பதட்டத்திற்கு அருமருந்து. தியானமும், மூச்சுப்பயிற்சியும் பதட்டத்தைப் பெருமளவு கட்டுப்படுத்தக் கூடியவை. முடிந்தால் முறையாக ஒரு குருவை நாடி தியானம், யோகா, பிராணாயாமம் முதலியவற்றைக் கற்றுக்கொள்ளுங்கள். முடியாத பட்சத்தில் மெல்லிய இசையை ஒலிக்க விட்டு (ஓம் என்ற ஒலி மனதை ஒருநிலைப்படுத்துவதற்குப் பெரிதும் உதவுகிறது. இல்லையென்றால் தியானத்திற்கென்றே சீராக ஒலிக்கும் இசைத்தட்டுகள் கிடைக்கின்றன, அவற்றையும் பயன்படுத்தலாம்.) கண்களை மூடி இசையினையும் உங்கள் சுவாசத்தையும் மட்டும் கவனித்தவாறு பத்து நிமிடங்கள் அமர்ந்திருங்கள். உங்கள் மனம் உங்கள் கட்டுப்பாட்டை விட்டு நழுவி வேறு எண்ணங்களுக்குச் செல்லத்தான் செல்லும். ஒவ்வொருமுறையும் அதை ப் பிடித்து இழுத்து வருவது உங்கள் பொறுப்பு. நாள்பட நாள்பட தியானம் செய்வது பழகிவிடும். உங்கள் ஒருமுகப்படுத்தும் திறனும் கூடிவிடும்.

8 . உங்களை உணர்ச்சிவசமாக்கும் செய்திகளை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இரவில் படுக்கைக்குச் செல்லுமுன் தவிர்த்துவிடுங்கள். உங்கள் நண்பர்களில் கூட எப்பொழுதும் யாரையாவது எதிர்மறையாக விமர்சிக்கும், கேலி செய்யும் நபர்கள் இருந்தால் அவர்களை விட்டு விலகியே இருங்கள். நேர்மறைச்சிந்தனை, உற்சாகம் இவற்றுடன் இருப்பவர்களுடன் உங்கள் நட்பை உருவாக்கிக்கொள்ளுங்கள்.

9 . உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களில் யார் உங்கள் நம்பிக்கைக்குரியவரோ அவரிடம் உங்கள் மனத்தில் உள்ள சுமைகளை, சந்தேகங்களை, பயங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். புதியவர்களுடன் பழக நேர்ந்தால் எப்படிப்பழகுவது, ஒரு குழுவில் பேசுவது எப்படி என்றெல்லாம் அவருடன் சேர்ந்து பயிற்சி செய்து பாருங்கள். நீங்கள் புதிய இடத்தில் பலருடன் கலகலப்பாகப் பழகுவது, பொது இடத்தில் தைரியமாக உரையாடுவது, ஆய்வரங்கில் கலந்து கொள்வது இவை போல நேர்மறையாகக் கற்பனை செய்து பாருங்கள்.

10. அழகாக, கம்பீரமாக உடையணியுங்கள். நிமிர்ந்து நில்லுங்கள், நடங்கள். உங்களைக் கண்ணாடியில் பார்க்கையில் உங்களுக்கு தன்னம்பிக்கை ஊற்றெடுக்க வேண்டும். கண்ணாடி முன் நின்று பேசிப்பழகுங்கள். நிறைய நகைச்சுவைப் புத்தகங்கள், தன்னம்பிக்கை அளிக்கும் நூல்கள், பொது அறிவை மேம்படுத்தும் புத்தகங்கள் அல்லது இவை தொடர்பான வலைத்தளங்களைப் படியுங்கள்.

11. தண்ணீரில் இறங்காமல் கரையில் நிற்கும்வரை நீச்சல் பழகுவது என்பது முடியாது. நீங்களாகவே பேருந்தில் பக்கத்தில் அமர்ந்திருக்கும் உங்கள் சக பயணியிடம் மெல்லப் பொது விஷயங்களைப் பற்றிப் பேச்சுக் கொடுப்பது, உங்கள் நண்பர்கள் மத்தியில் ஒரு புதிய கதை அல்லது நகைச்சுவைத் துணுக்கைப் பகிர்ந்துகொள்வது என்று மெல்ல மெல்லப் பயிற்சி செய்யுங்கள். உங்கள் அலுவலகக் கூட்டங்களில் குறைந்த பட்சம் ஒரு கேள்வி கேட்பது அல்லது ஒரு யோசனை சொல்வது என்று முடிவு செய்து அதைச் செயல் படுத்திப்பாருங்கள்.

கொஞ்ச நாளில் 'பதட்டமா! போயே போச்சே, போயிந்தி, Its gone' என்பீர்கள்.

மூன்று வகையன குணங்கள்....?


மூன்று வகையன குணங்கள்
 

1. சத்துவ குணத்தின் இலட்சணங்கள்.

2. ரஜோ குணத்தின் இலட்சணங்கள் .

3.  தமோ குணத்தின் இலட்சங்கள்



சத்துவ குணத்தின் இலட்சணங்கள்.

எப்போது இந்த மனித சரீரத்தில் எல்லாப் புலன்களிலும் அந்தக்கணமெனும் உள்ளத்திலும் தூய்மையும் பகுத்தறிவும் வளர்கின்றனவோ, அந்நிலையில் சத்துவ குனப் வளர்வதை உனர்ந்துகொள்ள வேண்டும்.

ரஜோ குணத்தின் இலட்சணங்கள்:

 மனிதரின் அந்தக்கரணத்தில் ( உள்மனம்) பண  ஆசையும், செயலாற்றும் முனைப்பும், சுக போகங்களுக்காகவும் சொத்துக்கள் சேர்க்கவும்.புதுப்புதுக் காரியங்களைத் தொடங்குவதும், மன அமைதி இன்மையும், தீவிர ஆசையும் எப்போது அதிகரிக்கின்றனவோ, அப்போது ரஜோ குணம் தலை தூக்குவதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

தமோ குணத்தின் இலட்சங்கள் :


எப்போது புலன்களிலும் அந்தக்கரணத்திலும் உணர்வுத் தூய்மை இல்லாதிருக்கிறதோ, எக்காரியத்தையும் முறையாகச் செய்ய மனம் ஈடுபடுவதில்லையோ, செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாமலும் செய்யக்கூடாத காரியத்தைச் செய்வதும் அதிகரிக்கிறதோ, உள் மனதில் மோக மயக்கம் பரவியுள்ளதோ, அப்போது தெரிந்து கொள்ளலாம்.தமோ குணம் மேலோங்கியுள்ளது.

 இம்மூன்று குணங்களும் மாறி மாறித் தற்காலிகமாக மேலெழும் நிலையில் மனிதன் மரித்து விட்டால் , அவனுக்கு என்ன கதி கிடைக்கும்?
சத்துவ குணம் மேலோங்கியிருக்கும் போது மனிதன் மரித்தானானால் புன்ணியாத்மாக்கள் மட்டுமே எட்டத்தக்க நிர்மலமான உத்தம லோகங்களுக்குப் போய் சேருகிறான்.

ரஜோ குணம் மேலோங்கியிருக்கும் தருணத்தில் இறந்தால் மனித குலத்தின் மறு பிறவி பெறுகிறான்.

தமோ குணம் மிகுந்திருக்கும் நிலையில் மரித்தால் பிராணிகளாக மிருகம், பறவை முதலியவைகளாகப் பகுத்தறிவு இல்லாத இனத்தில் பிறக்கிறான்.