ஹேக் செய்யப்படும் ஆபத்தில் விண்டோஸ் 8!

ஜெர்மனி அரசாங்கத்தை சேர்ந்த டெக்னாலஜி ஏஜென்சி, மைக்கிரோசாப்டின் வின்டோஸ் 8 ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்ட கம்பியூட்டர்களை எளிதாக ஹாக் செல்லும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது.
ஜெர்மனியின் பெடரல் ஆபீஸ் இன்பர்மேஷன் செக்கியூரிட்டி அமைப்பு கடந்த புதன்கிழமை தனது வெப்சைடில், ஜெர்மனியின் பெடரல் அரகசாங்க ஏஜென்சி இந்த பிரச்சனைக்கு குறிப்பிட்ட கவனம் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளது. இந்ந பிரச்சனை எங்கு ஆரம்பிக்கிறது என்றால் வின்டோஸ்8 கம்பியூட்டரில் டிரஸ்டெட் பிளாட்பார்ம் மாடியூல் (Trusted Platform Module) என்ற சிப் உள்ளது. இது கம்பியூட்டரின் பாதுகாப்புக்காக வின்டோஸ்8 உடன் இணைக்கப்பட்டுள்ளது.
வின்டோஸ்8 மற்றும் TPM சிப் இணையும் பொழுது ஆப்ரேட்டிங் சிஸ்டம் மற்றும் ஹார்ட்வேர்களின் கட்டுபாட்டை இழந்து விடுகிறது இதனால் பிரச்சனை ஆரம்பிக்கிறது என அவர்கள் தெரிவிக்கின்றனர். இதனை மறுத்த மைக்கிரோசாப்ட் நிறுவனம் வின்டோஸ்8 கம்பியூட்டரை பயன்படுத்துபவர்கள் TPM சிப்பை வேண்டுமானால் செயல் இழக்க செய்துவிடலாம் அந்த வசதி அதில் உள்ளதாக தெரிவித்தது.
0 comments:
Post a Comment