
'ராம்போ ராஜ்குமார்' படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஓர் அதிரடி படத்தை இயக்கி வருகிறார் பிரபுதேவா.
'ராமையா வஸ்தாவையா' படத்தைத் தொடர்ந்து ஷாகித் கபூர் - சோனாக்ஷி சின்கா நடிக்கும் 'ராம்போ ராஜ்குமார்' படத்தினை இயக்கி வந்தார் பிரபுதேவா. இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவுற்றது. தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது மீண்டும் ஓர் அதிரடி படத்தை இயக்கத் தொடங்கிவிட்டார். இதில் அஜய் தேவ்கான் நாயகனாக நடித்து வருகிறார். படத்தில் மொத்தம் 3 நாயகிகள். சோனாக்ஷி சின்கா, யாமி கெளதம் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். மூன்றாவது நாயகி தேர்வு நடைபெற்று வருகிறது.
அஜய் தேவ்கான் நடிக்கும் படத்திற்கு 'ஆக்ஷன் ஜாக்சன்' என்று தலைப்பிட்டு இருக்கிறார் பிரபுதேவா. முழுக்க அதிரடி, காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இயக்கி வருகிறார். இப்படத்தில் அதிரடி, நடனம் என இதுவரை பார்க்காத அஜய் தேவ்கானை காட்ட திட்டமிட்டு இருக்கிறாராம்.
'ராம்போ ராஜ்குமார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீஸர் வெளியாகாத நிலையில், பிரபுதேவா தனது அடுத்த படத்தை இயக்கி வருவதை மிகவும் ஆச்சர்யமாக பார்க்கிறார்கள் இந்தி திரையுலகில். இவ்வளவு வேகமாக எப்படி இயக்குகிறார் என்பதுதான் அனைவரது கேள்வியும்.
0 comments:
Post a Comment