
படத்தை முழுமையாக பார்த்த பிறகு இளையராஜா இசை அமைத்திருக்கும் படம் ஒரு ஊர்ல. இதுபற்றி இயக்குனர் கே.எஸ்.வசந்தகுமார் கூறியதாவது: கடந்த 1980-90 களில் இளையராஜாவின் இசை, தமிழ் திரையுலகை புரட்டி போட்டது. அந்த கால கட்டத்தை மீண்டும் கொண்டு வரும் வகையில் இப்படத்துக்கு இசை அமைத்திருக்கிறார் இளையராஜா.
உதிரி பூக்கள், என் ராசாவின் மனசிலே, சேது போன்ற படங்கள் முதலில் இசை இல்லாமல் படமாக்கப்பட்டது. பிறகு முழு படத்தையும் இளையராஜாவுக்கு திரையிட்டு காட்டினார்கள். அதன்பிறகே அவர் இசை அமைத்தார். அந்த பாடல்கள் இன்றளவும் பேசப்படுகின்றன.
அதே போல் ஒரு ஊர்ல படமும் முதலில் முழுமையாக ஷூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டு அது இளையராஜாவுக்கு திரையிட்டு காட்டப்பட்டது.
அதன்பிறகு இப்படத்துக்கு இசை அமைத்தார். இதில் வெங்கடேஷ் ஹீரோ. இவர் பருத்தி வீரன் படத்தில் பிரியாமணியின் முறை மாமனாக நடித்தவர். நேகா பட்டீல் ஹீரோயின். இந்திரஜித், அன்னபூரணி உள்பட பலர் நடிக்கின்றனர். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு. பி.வேலுசாமி தயாரிப்பு.
0 comments:
Post a Comment