Thursday, 14 November 2013

இந்தியப் பெண்களுக்கு வானமே எல்லை – கூகுள் முகப்பில் இடம் பெற்ற இந்திய மாணவியின் ஓவியம்!


                                              nov 14 - doodle_for_google_2013.

இணைய உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள கூகுள் நிறுவனம் விசேஷ நாட்களில் வெளியிட்டு வரும் Doodle-கள் தொடர்பாக ஆண்டுதோறும் சில போட்டிகளை நடத்தி வருகின்றது.குறிப்பாக சிறுவர்களுக்காக நடைபெற்று வரும் Doodle என்ற போட்டியானது இந்த முறை நடைபெறுவது 4-வது முறையாகும். இதில் இதில் GOOGLE- ன் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு வடிவம் கொடுத்து சிறப்பாக வடிவமைக்கப்படும் Doodle – னை தனது சர்ச் தளத்தின் முகப்பு பக்கத்தில் பிரசுரிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தது.அத்துடன் இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு கூகுள் 30,000 அமெரிக்க டாலர்களை பரிசுத் தொகையாக வழங்குவதுடன்.


வெற்றி பெறுபவர்கள் படிக்கும் பள்ளிக்கூடம் அல்லது கல்லூரிக்கு சுமார் 50,000 டாலர்கள் மதிப்புள்ள தொழில்நுட்ப வசதிகளையும் குகூள் நிறுவனம் ஏற்படுத்தித் தர போவதாகவும் அறிவித்து இருந்தது இந்நிலையில் இப்போட்டியில் புனாவைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவி காயத்ரி கேதாராமன் வெற்றி பெற்றார். அவர் வடிவமைத்த சித்திரம்தான் இன்று கூகுள் இந்தியா முகப்புப் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.


இந்த சித்திரத்துக்கு “Sky’s the limit for Indian women”- இந்தியப் பெண்களுக்கு வானமே எல்லை என்று பெயரிட்டுள்ளார் காயத்ரி கேதாராமன்.GOOGLE- ன் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு வடிவம் கொடுத்துள்ள காயத்ரி, அதன் அர்த்தங்களையும் விளக்கியுள்ளார். பெண் நளினமானவள், அழகானவள், வீட்டிலும் அலுவலகத்திலும் தன் வேலையை சீராக சமன் செய்யக்கூடியவள், தாய்மையின் அடையாளம் என்பதை விளக்கும் வகையில் சித்திரத்தை வரைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


கூகுள் நடத்திய போட்டியில், நாடு முழுவதும் இருந்து 12 பேர் இறுதி பட்டியலில் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் வெற்றியாளரை நடிகை கிரொன் கேர் மற்றும் அரசியல் கார்ட்டூன் ஒவியர் அஜித் நினான் தேர்வு செய்தனர் என்பது அடிசினல் தகவல்.

Children’s Day: Pune student’s Doodle 4 Google winning entry on Google India homepage

**********************************************


The Children’s Day doodle on the Google India home page has been designed by a class 10 student from Pune. The doodle titled “Sky’s the limit for Indian women” has been designed by Gayatri Ketharaman for the fifth edition of Doodle 4 Google competition with the theme celebrating Indian women.

‘கோச்சடையான்’ பொங்கல் ரிலீஸ்!

                                         nov 14 - kochadaiyan

இந்தியாவில் வெளிவரும் முதல் முழுமையான MOTION CAPTURE TECHNOLOGY படமான ‘கோச்சடையான்’ ஆடியோ வெளியீட்டு விழா ரஜினி பிற ந்த நாளான 12.12.13 அன்று நடக்கிறது. ஜனவரி 10 ரிலீஸ் என்று படக்குழு அறிவித்திருக்கிறது.அதே தினங்களில்தான் விஜய்யின் ‘ஜில்லா’, அஜித்தின் ‘வீரம்’ ஆகிய படங்களும் வெளியாகும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

                           
ரஜினி, தீபிகா படுகோன், சரத்குமார், நாசர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கோச்சடையான்’. கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்வையில் செளந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தினை இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தில் இடம்பெறும் ‘எங்கே போகுதோ வானம்’ என்று எஸ்.பி.பி பாடிய பாடல், படத்தின் டீஸர் ஆகியவை வெளியாகி விட்டன. வெளியான டீஸரின் முடிவில் இசை வெளியீடு அக்டோபர் 2013 என்று குறிப்பிட்டு இருந்தார்கள்.ஆனால், அக்டோபர் மாதம் படத்தின் இசை வெளியீடு நடக்கவில்லை. இதனால் பட வெளியீடு தாமதமாகும் என்று தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இன்று ‘கோச்சடையான்’ படத்தின் பாடல்கள் ரஜினி பிறந்த நாளான 12-12-2013 அன்று வெளியாகும் என்றும், படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 10, 2014ல் வெளியாகும் என்று படக்குழு அறிவித்து ரஜினி ரசிகர்களை உற்சாகபடுத்தி இருக்கிறார்கள்.

Wednesday, 13 November 2013

குழந்தைகள் தினம் - சிறப்புக் கட்டுரை!

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு தனது பிறந்த நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடச் சொன்னார் .  உலகநாடுகளில் பட்டம் பெற்ற நேருவுக்குள் குழந்தை மனம் இருப்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது .


சிறப்பு தினங்கள் என்று ஏராளமான நாட்கள் கொண்டாடப் பட்டு வருகின்றன . அதில் துக்ககரமான நினைவு நாட்களும் வருவது குறிப்பிடத்தக்கது .

இப்படி சிறப்பு தினங்கள் எல்லாம் எதற்காகக் கொண்டாடப்படுகின்றன ?

மனிதர்கள் , சிறப்பு அம்சங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கும் , அதை மகிழ்ச்சியின் குறியீடாகவும் கொண்டாடுவதற்கும் வழி வகை ஏற்படுகிறது.

அந்த வகையில் , குழந்தைகள் தினத்தை எத்தனை பேர் உணர்ந்து கொண்டாடுகிறார் என்பது தெரியவில்லை . பெரிய ஜம்பவான்கள் எல்லோருக்கும் அவர்களுடைய பெற்றோர்கள்  பெரும் உதவியாக இருந்திருக்கிறார்கள் .

தேவையான வசதிகளையும் சுதந்திரத்தையும் குழந்தைகளுக்கு கொடுப்பதால் அவர்கள் வழி தவறி செல்லாமல் இருக்கிறார்கள் .

இப்போதெல்லாம் நடைமுறையில் குழந்தைகள் சாதிக்கும் விதத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம் . இதற்கெல்லாம் வசதி வாய்ப்புகள் ஊடகத்தில் கொட்டிக் கிடக்கின்றன .

உரிய நேரத்தில் குழந்தைகளை வெற்றிப் பெறச் செய்வதே பெற்றோர்களின் முதல் கடமையாகும்  . ஆனால் , தான்தோன்றியா பிள்ளைகளை விட்டு விடும் பெற்றோர்கள் இருப்பதால் தான் , ஏராளமான இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை தெருவுக்கு வந்து தேடிக்கொண்டு இருக்கிறார்கள் .

கட்டுப்பாடு என்ற பெயரில் குழந்தைகளை கைதிகள் போல வளர்க்கும் போக்கை நிறுத்தி விட்டு குழந்தைகள் மொழியில் திருத்த கூடுதலான திறமை ஒவ்வொரு பெற்றோருக்கும் நிச்சியம் வேண்டும் .

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்று சொல்வதற்காக ஐந்திலே இளம் மூங்கில்களை ஒடித்து விடுகிறார்கள் .

குழந்தைகளை வளர்க்கும் போது குழந்தைகளாகவே மாறினால் மட்டும் தான் , இன்றைய குழந்தைகள் நாளைய வெற்றியாளராக முடியும் .