
அப்பா (நாசர்) இறந்தவுடன், அவருக்கு பாண்டிச்சேரியில் இருக்கும் ஒரு வில்லாவைப் பற்றி தெரிய வருகிறது. உடனே மகன் (அசோக் செல்வன்) அந்த வில்லாவிற்கு செல்கிறார். அங்கு என்ன நடக்கிறது என்பதே மீதிக் கதை.
1 மணி நேரம் 42 நிமிடங்கள் தான் படம் என்பதால், சொல்ல வந்த கதையை தெளிவாக கூறியிருக்கிறார் இயக்குநர் தீபன். லியோ ஜான்பால் எடிட்டிங்கும், சந்தோஷ் நாராயணனின் இசையும் படம் பார்ப்பவர்களை, படத்தோடு ஒன்ற வைக்கிறது.
டைப் ரைட்டரில் சாதாரணமாக டைப் செய்து கொண்டிருக்கும் காட்சிக்கு கூட, தீபக்குமார்பதியின் ஒளிப்பதிவும், பின்னணி இசையும் படம் பார்ப்பவர்களை பதைபதைக்க வைக்கிறது.
வரைந்த ஓவியத்தில் இருப்பது எல்லாம் நிஜமாக நடைபெறுவது போல ஒரு குறும்படம் வெளியானது. அதனை வைத்து தான் இப்படத்திற்கு இயக்குநர் திரைக்கதை அமைத்திருக்கிறார் போலும்.
பீட்சா படத்தைப் போல இப்படத்தில் சுவாரசிய காட்சிகள் இல்லாதது பெரிய குறை. பீட்சா படத்தின் தீம் மியூசிக்கை உபயோகித்தவர்கள், அப்படத்தினைப் போலவே சில சுவாரசியமான காட்சிகளுக்கு மெனக்கெட்டு இருக்கலாம். படம் முடிந்தவுடன், க்ளைமாக்ஸ் காட்சியை பற்றி நீண்ட நேரம் யோசித்த பிறகே புரிகிறது.
பீட்சா படத்தினைப் பார்த்தவுடன் இருந்த ஒரு இனம் புரியாத உணர்வு, ஏனோ இரண்டாம் பாகமான வில்லாவில் இல்லை. மற்றபடி இந்த வில்லாவிற்கு போய் வரலாம்.
0 comments:
Post a Comment