Friday, 20 September 2013

ஜீவார்மித கரைசலில் ஜொலிக்குது "பப்பாளி, திராட்சை'

ஜீவார்மித கரைசல்... அக்னி அஸ்திரம்... என இயற்கை உரமிருக்க... செயற்கைக்கு செல்ல வேண்டிய தேவையில்லை என்கிறார், திண்டுக்கல் காந்திகிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜானகிராமன். காந்திகிராமம் செட்டியபட்டியில் மலையடிவாரத்தை ஒட்டி செழித்திருக்கிறது, இவரது தோட்டம். மதுரையில் ஜவுளி பிசினஸ் செய்தாலும், தினமும் தோட்டத்தைப் பார்க்க தவறுவதில்லை. 21 ஏக்கர் பரந்து விரிந்த பூமியில் பப்பாளி, திராட்சை, சப்போட்டா, மா, கொய்யா ரகங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. தோட்டத்திலேயே...

‘யா யா’ - விமர்சனம்!

சிவா & சந்தானம் ஜோடி சேர்ந்திருக்கிற படம். வழக்கமாகவே சிவா படத்தில் மருந்துக்குக்கூட கதையோ, லாஜிக்கோ, சென்டிமென்ட் விஷயங்களோ எதுவும் இருக்காது. அதைப் போல இந்த படத்திலும் மேலே சொன்ன எதுவும் இல்லை.சந்தானம் படங்களில் கதையை விட சந்தானம் காமெடி என்ற பெயரில் பேசுகிற வசனங்கள்தான் காதை ரணமாக்கும். இதிலும் சந்தானம் பேச்சுக்கு குறைவில்லை.சிவாவுக்கு ஜோடி தன்ஷிகா. சந்தானம் ஜோடி காதல் சந்தியா, கூடவே இளவரசு, ரேகா, சித்ராலட்சுமணன் நடித்திருக்கிறார்கள். டாக்டர்...

முந்திரிக் கொத்து - சமையல்!

என்னென்ன தேவை? பாசிப் பருப்பு - 1 கிலோ, தேங்காய் - 2 (துருவியது),எள் - சிறிது, பச்சரிசி - 1/2 கிலோ, ஏலக்காய் தூள் - சிறிது, கருப்பட்டி அல்லது வெல்லம் - 1/2 கிலோ, மஞ்சள் தூள் - சிறிது, எண்ணெய் - தேவைக்கேற்ப. எப்படிச் செய்வது?பாசிப் பருப்பு, எள், தேங்காய் துருவல் மூன்றையும் தனித் தனியாக நிறம் மாறும் பதத்துக்கு வறுத்துக் கொள்ள வேண்டும்.  கருப்பட்டி அல்லது  வெல்லத்தை கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, கையில் ஒட்டும் பதத்துக்கு கெட்டியாகப் பாகு காய்ச்ச...

மைதா-ரவை கொழுக்கட்டை - சமையல்!

 என்னென்ன தேவை? மைதா மாவு - 1 லு கப் (ஆவியில்  வேக வைத்தது), ரவை - லு கப் (நெய்யில் வறுத்தது), சர்க்கரை - 1 கப், பொடியாக நறுக்கிய முந்திரி, திராட்சை - தலா 1 டேபிள் ஸ்பூன், துருவிய தேங்காய் 1/2 கப், ஏலக்காய் தூள்- சிறிது, நெய் - தேவைக்கேற்ப. எப்படிச் செய்வது?  மைதாமாவை ஒரு சுத்தமான துணியில் கட்டி இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேக விட்டு எடுத்து, ஆறவிடவும். பின் 2 லு கப் தண்ணீரை  கொதிக்க விட்டு அதில் ஒரு சிட்டிகை உப்பு,...

திருநெல்வேலி திரிபாகம்! - சமையல்!

என்னென்ன தேவை? கடலை மாவு  - 1 கப், சர்க்கரை - 1 கப், பால் - 1 கப், நெய் - 1 கப். எப்படிச் செய்வது?  கடலை மாவை நெய்யில் வறுக்கவும். பிறகு அதில் பாலை ஊற்றிக் கொதிக்க விடவும். மாவு வெந்தவுடன் சர்க்கரை போட்டுக் கிளறி, நெய்விட்டுக்  கிண்டினால் திரிபாகம் ரெடி.&nb...

மார்ஸ் கிரகத்திற்க்கு பாம்பு ரோபோட்: நாஸா

#tinybox {position:absolute; display:none; padding:10px; background:#fff ; border:10px solid #e3e3e3; z-index:2000}#tinymask {position:absolute; display:none; top:0; left:0; height:100%; width:100%; background:#000; z-index:1500}#tinycontent {background:#fff}.button {font:14px Georgia,Verdana; margin-bottom:10px; padding:8px 10px 9px; border:1px solid #ccc; background:#eee; cursor:pointer}.button:hover {border:1px solid #bbb; background:#e3e3e3}  நாஸா...

செவ்வாய் தான் இப்போதைக்கு மனிதர்கள், மற்ற உயிரினங்கள் வாழ தகுதியாக உள்ளதாம்!

மனிதன் உட்பட உயிரினங்கள் உயிர் வாழும் இந்த பூமியின் ‘உயிர் வாழும்’ காலம் எவ்வளவு தெரியுமா? 175 கோடி ஆண்டுகள் தான். அதன் பின், இந்த பூமி, சூரிய மண்டலத்தின் உச்சகட்ட கொதிக்கும் கிரகமாகி விடுமாம்; தண்ணீர் ஒரு துளி கூட இருக்காதாம். பிரிட்டனில் நம்பர் 1 பல்கலைக்கழகம் யுனிவர்சிட்டி ஆப் ஈஸ்ட் ஆங்கிலியா. இந்த பல்கலைக்கழக வான் உயிரியல் ஆராய்ச்சி குழுவினர், நிபுணர் ஆன்ட்ரூ ரஷ்பி என்பவர் தலைமையில் பல ஆண்டாக பூமி பற்றிய ஆய்வுகளை செய்து வருகிறது. சமீபத்தில்...

ஐ.நா.- இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்க வேண்டும்! மன்மோகன் சிங் வலியுறுத்தல்!

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்த உள்ளார். நியூயார்க்கில் ஐ.நா பொது சபை கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் வரும் 28ம் தேதி உரையாற்ற உள்ளார். அப்போது  ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி வேண்டுமென்ற கோரிக்கையை அவர் முன்வைப்பார் என்று வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதாசிங் தெரிவித்துள்ளார். ஐநா பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்தி,...

பெண்களின் தலையாய பிரச்னையாக மாறி வரும் தைராய்டு!

கழுத்தில் வலி மற்றும் வீக்கம், நிணநீர் திரளையில் வீக்கம், குரல் கரகரப்பாவது, மூச்சு விடுதலில் சிரமம், விழுங்குவதில் சிரமம் ஆகியவையோ அல்லது நல்ல பசியிருந்தும் உடல் எடை குறைதல், இருதயத் துடிப்பு அதிகரிப்பு, உயர் ரத்த அழுத்தம், நரம்புத்தளர்ச்சி, அதிக வியர்வை, மாதவிடாய் சட்டு சட்டென வருதல், குடல் இயக்கம் அதிகரித்தல், கை நடுக்கம். ஆகியவையோ இருந்தாலும் மேலும் உடல் எடைக்குறைப்பிற்கான அனைத்து வேலைகளைச் செய்தும் உடல் எடை குறையாமல் இருப்பது அல்லது உடல் எடை...

முயலும் ஆமையும் (நீதிக்கதை)!

ஒரு மரத்தடியில் ஆமையிடம் ஓட்டப்பந்தயத்தில் தோற்ற முயல் இளப்பாறிக் கொண்டிருந்தது.அதனிடம் வென்ற ஆமை..தனது ஓடும் திறமையில்தான் வென்றோம் என்னும் இறுமாப்பில் முயலைப் பார்த்து'மீண்டும் ஓட்டப் பந்தயத்திற்கு வருகிறாயா?'எனக் கேட்டது.  தனது அலட்சியப் போக்கால் முன்னர் தோல்வியடைந்த முயல்..சரியான தருணத்திற்குக் காத்திருந்தது.ஆமைக் கேட்டதுமே முயல் 'சரி' எனச் சொல்லி விட்டது. இம்முறை தூங்கிவிடாது, ஒரே தாவலாய்த் தாவி வெற்றிக் கோட்டை அடைந்தது...

நடுவுல கொஞ்சம் பாஸ்போர்ட் காணும்…!

அமெரிக்காவின் நியூ யார்க் நகரத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் – 23 பாஸ்போர்ட் புக்குகள் காணவில்லை. இது வெறும் புக்தான் ஆனாலும் இதில் நன்கு தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் புழகத்தில் உள்ள பாஸ்போர்ட் மாதிரி உலகத்தின் எந்த ஒரு மூலையிலும் தேவையான நம்பரை போட்டு பாஸ்போர்ட் தயாரிக்க முடியும். இதன் மூலம் தீவிரவாதிகள் இந்தியாவில் லீகலாய் நுழைய முடியும். இப்படிதான் 2010 ஆம் ஆண்டு இஸ்ரேல் உளவுத்துறை மோஸாட் – ஹமாஸ் தலைவரை துபாயில் கொல்ல கூட இந்திய பாஸ்போர்ட்...

சர்வதேச அமைதி தினம் – செப்டம்பர் 21!

உலக அமைதி நாள் (International Day of Peace International) ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் பிரகடனத்தின் மூலம் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி ஐக்கிய நாடுகளின் சபையில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினம் 1981 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் மூன்றாம் செவ்வாய்க் கிழமை கொண்டாடப்பட்டு வந்தது. 2002 ஆம் ஆண்டிலிருந்து இந்தத் தினம் செப்டம்பர் 21 ஆம் தேதியில் கொண்டாடப்படுகிறது. அமைதி என்பதற்குப் பல அர்த்தங்கள்...

குல்லா வியாபாரியும் ..குரங்கும் - நீதிக்கதை!

 ஒரு ஊரில்  ஒரு குல்லா வியாபாரி இருந்தார். அவர் தலைக்குல்லாய்களை  ஒரு மூட்டையாகக்  கட்டி  தலையில் சுமந்து வியாபாரம்  செய்து வந்தார் . வெயிலில்  அவர் அலைவதால் ..அவரும் ஒரு குல்லா அணிந்திருந்தார்    .ஒருநாள்  குல்லாக்களை  விற்க..தலையில் சுமந்தப்படி  சென்ற அவர் ..ஒரு மரத்தின் கீழ்  மூட்டையை இறக்கி வைத்து விட்டு கண்ணயர்ந்தார்...

அரிய வகை மேஜிக் ட்ரிக்ஸ் ( Magic Tricks ) வீடியோவுடன் சொல்லி கொடுக்கும் தளம்!

சில நிகழ்ச்சிகள் நடக்கும் போது இடையிடையே நடக்கும் மேஜிக் ட்ரிக்ஸ் நமக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும், இது போல் செய்வது எப்படி என்ற கேள்வி நம்மில் பல பேருக்கும் இருக்கும் எப்படி இது போல் மேஜிக் ட்ரிக்ஸ்  செய்கின்றனர் என்பதை வீடியோவுடன் சொல்லிக்கொடுக்க ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.பார்ப்பதற்கு பிரம்மாண்டமாக இருந்தாலும் மேஜிக் செய்வதில் பயிற்சி தான் முக்கியம் சிறிய ட்ரிக்ஸ் தான் என்றாலும் அதைப் பயன்படுத்துவதில் உள்ள நெளிவு சுழிவு முக்கியம் அந்த வகையில் ஒளிவு மறைவு இல்லாமல் மேஜிக் ட்ரிக்ஸ் எப்படி செய்கின்றனர் என்பதை வீடியோவுடன் சொல்லிக்கொடுக்க...

உங்கள் பிறந்த தேதியை வைத்து, உங்களுக்கான நிறத்தை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

நிறம் என்பது ஒருவித மாஜை. நீங்கள் எந்த உடை அணிகிறீர்கள், அதன் விலை என்ன என்பதல்ல முக்கியம். அது பிறரைக் கவர்வதுமில்லை. அணிகிற உடையின் நிறம் தான் மற்றவர்களை ஈர்க்கிறது. ஆயிரக்கணக்கில் கொட்டிக் கொடுத்து வாங்கிய உடையானாலும், அது உங்களுக்கேற்ற நிறமாக இல்லாவிட்டால், யாருமே உங்களைத் திரும்பிப் பார்க்க மாட்டார்கள். யார் யாருக்கு என்ன நிறம் பொருந்தும், எந்த மாதிரி சந்தர்ப்பங்களுக்கு என்ன நிறம் உடுத்தலாம்? இதோ சில குறிப்புகள்!நம் ஒவ்வொருவருக்கும் ஒரு நிற ஈர்ப்பு உண்டு என்பது தெரியுமா? உங்கள் பிறந்த தேதியை வைத்து, உங்களுக்கான நிறத்தை நீங்கள் தெரிந்து...

தென்னையும் நாணலும் - நீதிக்கதை!

  ஒரு ஆற்றங்கரையின் ஓரத்தில் ஒரு தென்னை மரமும்.நாணலும் இருந்தன.தென்னை மரத்துக்கு தான் உயர்ந்தவன் என்ற எண்ணம் இருந்தது.ஆகவே அவ்வப்போது நாணலை அது கேலி செய்து வந்தது. 'நீ மிகவும் சிறியவன்..மழை,காற்று,வெயில் இவற்றை உன்னால் தாங்க முடியாது.நானோ உயர்ந்தவன் ...நான் எல்லாவற்றையும் தாங்குவேன்...  எனக்கு  கவலை இல்லை' என்றது தென்னை நாணலைப் பார்த்து..... சில நாட்கள் கழிந்தன.... மழைகாலம் வர... ஒரு நாள் புயல் ஏற்பட்டது... புயல்...

காது வலி தீர்க்க வீட்டில் இருக்கு மருந்து!

 காது வலி பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் வரும் பொதுவான ஒன்று. இந்த காது வலி பெரும்பாலும் சளி  பிடிப்பதால் வரும்.  மேலும் அதிக இரைச்சல் மற்றும் சிலருக்கு தொண்டையில் ஏற்படும் அழற்சி காரணமாகவும் வரலாம். அப்படி  காதுவலி வந்தால் உடனே காதுக்குள்  எதையாவது போட்டு நுழைக்க கூடாது. இதனால் காதுக்குள் கிருமித்தொற்று தான் ஏற்படுமே தவிர சரியாகாது. மேலும் இந்த காதுவலி இரவிலேயே வருவதால் என்ன  செய்வதென்று  தெரியாமல்...

பல் வலிக்கு என்ன செய்தால் நிவாரணம் கிடைக்கும்!

உங்களுக்கு பல் வலி இருந்தால் அது அதிக விளைவுகளை தருவதற்கு முன்பு மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது சிறந்தது.. சிலருக்கு இரவு நேரங்களில் தான் பல் வலி பாடாய்படுத்தும். அந்த சமயத்தில் வீட்டில் இருக்கும் சில இயற்கை நிவாரணிகளைக் கொண்டு பல் வலியை போக்க முயற்சி செய்யலாம். இந்த பொருட்கள் பல் வலியை போக்கி பற்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. பல் வலியை போக்க சிறந்த ஆறு நிவாரணிகளை பார்க்கலாம்.கிராம்பு பல்வலியை போக்குவதில் சிறந்து விளங்கும் கிராம்பு அனைவரின்...

வீரமிகு செஞ்சிக்கோட்டை - சுற்றுலாத்தலங்கள்!

   வீரமிகு செஞ்சிக்கோட்டை  வீரமிகு செஞ்சிக்கோட்டை. தமிழக வரலாற்றில் செஞ்சிக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு, கோட்டைகள் எல்லாம் கட்டுவதற்கு முன்னரே கோட்டையுடன் வலிமையாக திகழ்ந்த ஊர் செஞ்சி. விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த ஊர் , சென்னையில் இருந்து 160 கிமீ  தொலைவில் அமைந்துள்ள யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரிக்கு அண்மையில் உள்ளது. மராட்டிய மன்னரான சிவாஜி, "இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது"...

பிரபுதேவா வேகத்தைக் கண்டு வியக்கும் பாலிவுட்!

'ராம்போ ராஜ்குமார்' படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஓர் அதிரடி படத்தை இயக்கி வருகிறார் பிரபுதேவா.'ராமையா வஸ்தாவையா' படத்தைத் தொடர்ந்து ஷாகித் கபூர் - சோனாக்ஷி சின்கா நடிக்கும் 'ராம்போ ராஜ்குமார்' படத்தினை இயக்கி வந்தார் பிரபுதேவா. இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவுற்றது. தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.தற்போது மீண்டும் ஓர் அதிரடி படத்தை இயக்கத் தொடங்கிவிட்டார். இதில் அஜய் தேவ்கான் நாயகனாக நடித்து வருகிறார். படத்தில் மொத்தம் 3 நாயகிகள்....

குறிப்பிட்ட தேதிக்கு முன்பாகவே நய்யாண்டி: தனுஷ்!

குறிப்பிட்ட தேதிக்கு முன்பாகவே நய்யாண்டி வெளியாகலாம் என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.‘களவாணி’, ‘வாகை சூடவா’ ஆகிய படங்களை அடுத்து சற்குணம் இயக்கும் நய்யாண்டி. இதில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நஸ்ரியா நசீம் நடிக்கிறார். இவர்கள் தவிர சரண்யா பொன்வண்ணன், சூரி, சத்யன், லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இயக்குனர் சற்குனத்தின் நண்பரான ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். ஏற்கெனவே இவர் ”களவாணி”, ”வாகை சூட வா” ஆகிய படங்களில்...

சினிமா நூற்றாண்டு விழா: கலை நிகழ்ச்சியில், ரஜினிகாந்த்–கமல்ஹாசன்!

              சினிமா நூற்றாண்டு விழா கலைநிகழ்ச்சியில், ரஜினிகாந்த்–கமல்ஹாசன் ஆகிய இருவரும் கலந்து கொள்கிறார்கள். டைரக்டர்கள் பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார் ஆகிய இருவரின் கேள்விகளுக்கு ரஜினிகாந்த்–கமல்ஹாசன் பதில் அளிக்கிறார்கள். நூற்றாண்டு விழா இந்திய சினிமா நூற்றாண்டு விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. விழாவை, முதல்–அமைச்சர்...

மனித ரத்தம் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள்!

விபத்து, இயற்கை பேரழிவு, தீவிரவாதிகள் தாக்குதல் மற்றும் போர்க்காலங்களில் ஏராளமானவர்கள் தங்கள் உயிரையும் உடைமைகளையும் இழக்கின்றனர். ஏராளமானவர்கள் உயிருக்கு பேராடுகின்றனர். சிலர் தங்கள் உறுப்புகளை இழக்கின்றனர். இப்படிபட்ட சூழ்நிலைகளில் அவர்களின் உயிரைக் காப்பாற்ற ரத்தம் அதிக அளவில் தேவைப்படுகிறது. சிலசமயம் தேவைக்கு ஏற்ப ரத்தம் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் ரத்த பிரிவு நோயாளிகளுக்கு பொருந்துவதில்லை. இதனாலும் அவர்களிள் உயிர் இழக்கும் அபாயம்...

+2, டிப்ளமோ தகுதிக்கு AIRPORTS AUTHORITY OF INDIA-வில் பணி வாய்ப்பு!

இந்திய விமான நிலையங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவும், அவற்றின் செயல்பாடுகளை துரிதப்படுத்தும் விதமாக கொண்டுவரப்பட்டதுதான் ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியா. இந்த நிறுவனத்தின் பயர் சர்வீஸஸ் பிரிவில் காலியாக உள்ள 100 ஜூனியர் அசிஸ்டன்ட் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: ஜூனியர் அசிஸ்டன்ட் மொத்த காலியிடங்கள்: 100வயது வரம்பு: 30-க்குள் இருத்தல் வேண்டும்.சம்பளம்: ரூ.12,500 – 28,500கல்வித்தகுதி:பத்தாம்...

தங்க கலவையினால் ஆன ‘டீ’ ஒரு கப் ரூ.925 மட்டுமே!

இந்தியா, சீனா மற்றும் மேற்கத்திய நாடுகளில் தங்க கலவையினால் ஆன ‘டீ’ விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் துபாயில் முதன் முறையாக இந்த ‘தங்க டீ’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இங்குள்ள ’‘மொக்கா ஆர்ட் கபே’ ஓட்டலில் இந்த ‘டீ’ விற்கப்படுகிறது. இது 22 கேரட் தங்கத்தை கலந்து தயாரிக்கப்படுகிறது.இதன் விலை ஒரு கப் ரூ.925 (55 தினார்) மட்டும். ‘மொக்கா ஆர்ட் கபே’யின் நிறுவனர் அஷ்ரப்மக்ரான் (32) எகிப்தை சேர்ந்தவர். ‘தங்க டீ’ குறித்து அவரிடம் கேட்டபோது,”இந்த...

தண்ணீர்ப் பஞ்சத்தை சமாளிக்க தீர்வு சொல்லும் மாணவர்கள்!

நிலத்தடி நீரை சேமித்து தண்ணீர்ப் பஞ்சத்தைச் சமாளிக்க வழி சொல்கிறார்கள் சென்னைக் கல்லூரி மாணவர்கள்.வீணாக சாக்கடையில் கலக்கும் மழைநீரை, பாதுகாத்து பத்திரப்படுத்தி பல்வேறு உபயோகங்களுக்குப் பயன்படுத்தினால் எப்படி இருக்கும்? கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. அதற்கான முயற்சிகளை யார் எடுப்பது?சென்னை ஸ்ரீ சாராம் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக். (சிவில்) படிப்பை சமீபத்தில் முடித்த மாணவர்கள் விக்னேஷ் சந்திரமௌலி, வி.வினோத், எஸ்.நவீன் குமார், ஜி.பிரபு ஆகியோர் ஒருங்கிணைந்து இதற்கான தீர்வைக் கண்டறிந்துள்ளனர்.சென்னை நகர மக்கள் அன்றாடம் சந்தித்து வரும் தண்ணீர்ப்...

குலைகுலையாய்க் காய்க்கும் குட்டைத் தென்னை!

தென்னையில், நெட்டை ரகம் தேங்காய்களுக்காகவும், குட்டை ரகம் இளநீருக்காகவும் சாகுபடி செய்யப்படுகின்றன. சமீப காலமாக, குட்டை தென்னை ரகங்களை விவசாயிகள் விரும்பிப் பயிரிட்டு வருகின்றனர். குறுகிய காலத்திலேயே மகசூல், எளிய பராமரிப்பு, இளநீருக்கு ஏற்பட்டுள்ள மவுசு, நிலையான கொள்முதல் விலை போன்ற காரணங்களால், தமிழகத்தில் குட்டை தென்னந்தோப்புகள் அதிகரித்து வருகின்றன. நெல்லை மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த அந்தோணிச்சாமி, 4 ஹெக்டேர் பரப்பளவில், குட்டை தென்னை மரங்களைப் பயிரிட்டு, நல்ல லாபமடைந்து வருகிறார். அவரது வழிகாட்டல்கள் இங்கே...சமீப காலமாக, கார்பானிக் அமில...

கிணற்று நீரை இறைக்கும் சோலார்!

நான் மூன்று ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறேன். கத்திரி, வெண்டை, கீரை போன்ற பயிர்களைப் பயிரிட்டு வருகிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஆற்றிலும் தண்ணீர் வரவில்லை, மின்சாரத்தை நம்பியும் பயிர் செய்ய முடியாத சூழல். மின்சாரம் விட்டு விட்டு வருவதனால் தொடர்ச்சியாக நீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் கருகி அழிந்தன. டீசல் மூலமாக என்ஜினை இயக்கினால் டீசல் விலை உயர்வால் முதலுக்கே மோசம் வரும் நிலை உருவானது.  விவசாயத்தை மட்டுமே நம்பி நான் குடும்பத்தை நகர்த்தி வருகிறேன். எனக்கு வேறு எந்த வருமானமும் கிடையாது. எனவே நித்தம் காவிரியையும், கரண்ட்டையும் எதிர்பார்த்துக்...

புழுக்களை அழிக்கும் ஒட்டுண்ணி!

தென்னை சாகுபடியில் ஏற்படும் மகசூல் குறைவிற்கு பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பொதுவாக, தென்னை மரங்களை கருந்தலைப்புழு, காண்டாமிருக வண்டு, சிவப்பு கூன்வண்டு, மரப்பட்டைத் துளைப்பான் என 14-க்கும் மேற்பட்ட பூச்சியினங்கள் தாக்குகின்றன. இவற்றில் கருந்தலைப் புழுக்கள் அதிக சேதத்தை விளைவிக்கின்றன. தென்னையின் அனைத்து வயதுடைய மரங்களையும் இந்தப் புழுக்கள் தாக்குகின்றன. வருடம் முழுக்க இதன் தாக்குதல் இருந்தாலும், கோடைக்கலங்களில் தாக்குதல் அதிகமாக இருக்கும்.தென்னைமரக் கொண்டையின் கீழ்ப்புற இலைப்பரப்பில், காய்ந்த திட்டுக்கள் காணப்படுவது...

குடிநீர் கொடுக்கும் வாட்டர் ஏ.டி.எம்கள்! - கலக்கும் சுரேஷ் எம்.பி.!

ஒரு ரூபாய் நாணயம் செலுத்தினால் பத்து லிட்டர் குடிநீர் கொடுக்கும் வாட்டர் ஏ.டி.எம்கள் பெங்களூரு அருகே அமைக்கப்பட்டுள்ளன.ஏ.டி.எம்மில் பணம் கிடைக்கும், தண்ணீர் கிடைக்குமா? கிடைக்கிறது. பெங்களூரு அருகே அமைக்கப்பட்டுள்ள வாட்டர் ஏ.டி.எம்மில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கிறது. ஒரு ரூபாய்க்கு பத்து லிட்டர் குடிநீர் இந்த ஏ.டி.எம்மில் வழங்கப்படுகின்றது.பெங்களூரு அருகே உள்ள கனகபுரா பகுதியில்தான் இந்த வாட்டர் ஏ.டி.எம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் இப்பகுதியில் உள்ள பெண்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சாதாரணமாக சந்தையில் 20 லிட்டர் குடிநீர் 40...