தன்னை தானே முடியாதென்று தாழ்த்த கூடாது :ஒரு நாள் கணித ஆசிரியர் ஒருவர் எல்லா எண்களையும் கலந்துரையாடலுக்கு அழைத்தார்.நிகழ்ச்சி ஆரம்பிக்கும் சமயம் பூஜ்யம் அங்கு இல்லை என்பது தெரியவந்தது.பூஜ்யம் ஒளிந்து கொண்டது, மற்ற எண்கள் அதை ஆசிரியரிடம் கொண்டு வந்தன.ஆசிரியர், ""ஏன் ஒளிந்து கொண்டாய்?'' என்று கேட்டார். ""நான் வெறும் பூஜ்யம்தானே. என்னை பற்றி யார் கவலைப்படுவார்கள்?எனக்கு மதிப்பே இல்லையே,'' என்று வருத்தமாக கூறியது.புன்னகைத்த ஆசிரியர், "ஒன்று' என்ற எண்ணை முன்னே வரச்சொன்னார்.குழுவினரைப் பார்த்து, ""இதன் மதிப்பு என்ன?'' என்றார். ""ஒன்று!''...