Sunday, 24 November 2013

'கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருசன்' - கதையுடன் விளக்கம்!

தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்ற பழமொழி இது. இப் பழமொழியின் தாக்கம் பெண்களிடையே மிகுதி என்றால் அது மிகையாகாது. இந்தப் பழமொழியின் தவறான பொருள் விளக்கத்தால் நேர்ந்த விளைவுதான் இது. இந்தத் தவறுக்குக் காரணம் ஒரே ஒரு எழுத்துப் பிழைதான். அந்தப் பிழை என்ன என்று அறிந்து கொள்ளும் முன்னர் இப்பழமொழிக்கு தற்போது கூறப்படும் பொருள் என்ன என்று காண்போம்.'கல்நெஞ்சன் (முரடன்) ஆக இருந்தாலும் அவன் உன் கணவனே; புல்நெஞ்சன் (கெட்டவன்) ஆக இருந்தாலும் அவன் உன் புருசனே'ஆண்-பெண் இணைந்து வாழ்க்கை நடத்தும் இல்லறத்தில் மணமான ஒரு பெண் தனது கணவனை எந்தெந்த வகைகளில் எல்லாம் அனுசரித்துப்...

கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்?

கல்யாண மோதிரம்' ஏன் நான்காவது விரலில் மட்டும் சூடப்படுகின்றது?இதற்கு  ஒரு அருமையான விளக்கம் உள்ளது.பெருவிரல் - நம் பெற்றோர்களை குறிப்பது.ஆள்காட்டி விரல் - நம் உடன்பிறப்புகளை குறிப்பது.நடுவிரல் - நம்மை குறிப்பது.மோதிர விரல் - நம் வாழ்க்கை துணையை குறிப்பது.சிறுவிரல் - நம் வாரிசுகளை குறிப்பது.முதலில் இரு உள்ளங்கைகளை முகம் நோக்கி விரித்து கொள்ளுங்கள்.இரண்டு நடு விரல்களையும் (நம்மை குறிப்பது) கீழ் நோக்கி வளைத்து நகமும் நகமும் தொட்டு கொள்ளும்படி இறுக்கமாக...

நீங்கள் காதலிக்கிறீங்களா-ன்னு கண்டுபிடி!

12: Late night வரைக்கும் அவங்க கூட phone பேசிட்டு வைச்சு 2 நிமிஷம் தான் ஆகிருந்தாலும்,ரொம்ப miss பண்ணுவீங்க.11: அவங்க கூட நடந்துப்போனா ரொம்ப ரொம்ப slow-வா நடப்பீங்க..10: அவங்க உங்க பக்கத்துல இருக்கிறப்போ ரொம்ப வெக்கப்படுவீங்க..9: அவங்க குரல் கேட்டதும் சந்தோஷப்படுவீங்க.கனவுலகூட8: அவங்களை பார்த்ததும், சுத்தி இருக்கிறவங்க யாரும் உங்க கண்ணுக்கு தெரியவே மாட்டாங்க ....6: அவங்களை பத்தி மட்டும்தான் யோசிச்சுட்டேயிருப்பீங்க. அதிகமான அளவில்5: அவங்களை பார்க்கிறப்போ எல்லாம் நீங்க சிரிச்சுட்டேயிருப்பீங்க..4: அவங்களை பார்க்கிறதுக்காக என்ன வேணுனாலும் செய்வீங்க3:...

பணம் பறிக்க தூண்டில் போடும் இமெயில்கள்!

பணம் பறிக்கத் தூண்டில் போடும் இமெயில்கள் இங்கு வகைப்படுத்தி பட்டியலிடப்பட்டுள்ளன.1. வங்கிகளிலிருந்து (ICICI, HDFC, Axis, PNB, Citi Bank ) வந்தது போல இமெயில்கள் அனுப்பப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலும், உங்களுடைய கணக்கில் சில தொகை விடுபட்டிருப்பது போல உள்ளது. எனவே கீழே உள்ள லிங்க்கில் கிளிக் செய்து தகவல்களைத் தரவும் என்று ஒரு லிங்க் தரப்பட்டிருக்கும். அக்கவுண்ட் இல்லாதவர்களுக்கும் கூட இந்த மெயில் அனுப்பப்படும். லிங்க்கில் கிளிக் செய்தால் அந்த வங்கியின் லோகோ மற்றும் அதன் இணையதள முகப்பு பாணியில் அமைந்த ஓர் இணையதளத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள்....

ஒளவையார் பெருமை - வரலாறு!

சிறப்புதமிழ்மொழியிலேயே முதன்முதலில் தோன்றிய நூலாக "அகத்தியம்" என்னும் நூலைச் சொல்வார்கள். அகத்தியரால் இயற்றப்பட்டு விநாயகரால் எழுதப்பட்ட நூல் என்று அருணகிரிநாதரால் திருப்புகழில் குறிப்பிடப்படுவது இந்நூல்தான். ஆனால் தற்சமயம் நம்மிடம் வழங்கும் தமிழ்நூல்களிலேயே மிகப்பழமையான நூல் தொல்காப்பியம். ஆகையால் இன்று நம்மிடம் இருக்கும் தமிழ்நூல்களில் காலத்தால் முதன்மையான நூல் தொல்காப்பியம். தமிழின் சிறப்புவாய்ந்த நூல்களில் திருக்குறþளே முதன்மை வகிக்கிறது. ஆனால்...

மகிழ்ச்சிக்கு பத்து வழிகள்!

1.சத்தான உணவைச் சாப்பிடுங்கள்கவனியுங்கள்... ருசியான உணவு என்று சொல்லவில்லை. சத்தான, இயற்கையான உணவுவகைகளைச் சாப்பிடும்போது மூளை எப்போதும் சுறுசுறுப்பு நிலையிலேயே இயங்குகிறது. பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது உடல் ஒருவித மந்த நிலையினை அடைகிறது. இதனால் நாம் செய்யும் செயல்களில் நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை.2. நன்றாகத் தூங்குங்கள்நல்ல ஆழ்ந்த தூக்கம் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம். பகலில் நாம் செய்யும் வேலைகளினால் களைப்புறும் உடல் உறுப்புகள் தூக்கத்தில் மட்டுமே Refresh அடைகின்றன. தூக்கத்தில் மட்டுமே ஒரு பகுதி மூளை...

உலகை அதிர வைத்த "மைக்கேல்" ஒரு சகாப்தம்!

 இளசுகள் முதல் பெருசுகள் வரை அனைவரையும் தன் இசையால் கட்டிப்போட்டவர், இவரை எதிலுமே குறிப்பிட்டு சொல்ல முடியாமல் அனைத்திலும் கலந்து கட்டி அடித்தவர். தனது நடனம், இசை, புதுமை என்று அனைத்திலுமே சிறந்து விளங்கினார்.பலரும் தொலைக்காட்சியில் பார்த்து இருப்பீர்கள் மைக்கேலின் பேய் தனமான ஆட்டத்தை ஒரு காட்சியாவது பார்க்காமல் இருப்பவர்கள் மிக சொற்பம், கராத்தே என்றால் எப்படி அனைவரும் இன்றுவரை கிராமம் முதல் கொண்டு ப்ரூஸ் லீ யை கூறுகிறார்களோ, நடனம் என்றால் அது...

உயில் எழுதுவது எப்படி? How to write a will?

 ஒருவர், தான் சம்பாதித்த சொத்துகளை, தன் இறப்புக்குப் பிறகு, தான் விரும்பும் நபர் அல்லது நபர்களுக்கு, எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் போய்ச் சேர்வதற்கு, சுய நினைவுடன் எழுதி வைக்கும் முக்கிய ஆவணம்தான் உயில் (விருப்ப ஆவணம்).உயில் என்பதே உறவுகளைச்சிதற விடாமல் பார்த்துக் கொள்ளும் கவசம்தான்.அதைச் சரியாகப் பயன் படுத்தியிருக்கும் குடும்பங்களில் எந்தச் சிக்கலும் வருவதில்லை.உயில் என்பது சொத்தைப் பிரிப்பதற்கும், பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் மட்டும் எழுதப்படும்...

பண மொழிகள்!

 செல்வம் சேர்ப்பதற்கு அறிவு வேண்டும்; அப்படி சேர்க்கும் செல்வத்தைக் கட்டிகாக்க துணிவு வேண்டும். அறிவு இருக்கிற அளவுக்குப் பலரிடம் துணிவு இருப்பதில்லை. (அதனால் தான் இந்தியா இன்னும் ஏழை நாடாக இருக்கிறது)வாங்குபவனுக்கு நூறு கண்கள் தேவை. விற்பவனுக்கு ஒரு கண் போதும்.கொஞ்சம் வைத்திருப்பவன் ஏழை அல்ல; அதிகம் விரும்புபவனே ஏழை.தேவையற்ற பொருட்களை வாங்கும் வழக்கம், முடிவில் தேவையுள்ள பொருட்களை விற்கும் நிலைக்குக் கொண்டுவந்துவிடும்.எல்லோரும் பணத்தை வெறுக்கிறார்கள்....

மூட்டு வீக்கம் குணமடைய சில வழிகள்?

முருங்கைப் பட்டை, மூக்கரட்டை வேர், ஊமத்தன் இலை, பூண்டு ஆகியவற்றை சம அளவில் சேர்த்து, அரைத்து மூட்டு வீக்கத்தின் மீது பற்றுப்  போட்டால், மூட்டு வீக்கம் கரையும். மூட்டு வலி குறையும். மூட்டு சம்மந்தப்பட்ட வாயு நோய் குணமாகும்.வாயு தொல்லை நீங்க? முருங்கைக் கீரையை கைப்பிடி அளவு எடுத்து இடித்து, அத்துடன் மிளகு, கொட்டை நீக்கிய கடுக்காய் பாதி, சீரகம், சேர்த்து, ரசம் வைத்து (சூப் போல)  வடிகட்டி, ஒரு டம்ளர் குடித்து வந்தால் பேதி நின்று விடும். மேலும்...

இயற்கை தரும் ஆரோக்கியம்!

 தொண்டைப்புண் குறைய: சித்தரத்தை எடுத்து இடித்து பொடி செய்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் குறையும்.தலைவலி குறைய: கற்பூரவல்லி, நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை கலந்து நன்கு கலக்கி நெற்றியில் பற்று போட்டு வந்தால் தலைவலி குறையும்.மூட்டு வலிகுறைய: கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கடுகு ஆகியவற்றை சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து சுட வைத்து அதை இளம் சூட்டில் சிறிது கற்பூரம் கலந்து வீக்கம்,...

அது என்ன குண்டலினி..?

அது என்ன குண்டலினி..? யோக மார்கத்தில் இருக்கும் ஒருவர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இந்தவொரு வார்த்தையை உபயோகிக்காமல் இருக்க முடியாது. அடிப்படையான உயிராற்றல் அல்லது உயிர் சக்தியை குண்டலினி என்பார்கள். யோகா மற்றும் தியானங்களில் திளைத்தவர்கள் அதன் சக்தியையும் மேன்மையையும் அறிவார்கள்.பாம்பு பெரும்பான்மையான இடங்களில் வணங்கப்படுகிறது. கடவுளர்களும் பாம்புடன் இருப்பதைப் பல இடங்களில் "சிலை"ப் படுத்தியிருக்கிறார்கள். உண்மையில் பாம்பு குண்டலினி சக்தியைக்...

இளையராஜாவுடன் மீண்டும் பணியாற்றுவாரா வைரமுத்து?

 இளையராஜாவுடன் பணியாற்றுவதற்கு காலம் கடந்து விட்டதாக நினைக்கிறேன் என்று பாடலாசிரியர் வைரமுத்து கூறியுள்ளார். விஜய் டி.வியில் 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பாடலாசிரியர் வைரமுத்து கலந்துக் கொண்டார். அப்போது அவரிடம் "மீண்டும் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றுவீர்களா?" என்ற கேள்வி கேட்கப்பட்டது. அக்கேள்விக்கு, "காலம் கடந்து விட்டதாக நினைக்கிறேன். விருப்பங்கள் வேறு, யதார்த்தங்கள் வேறு. இப்போது கூட அவரது இசையை நேசிக்கிறேன். பழைய...

பேஸ்புக் – டுவிட்டர்களை கட்டுபடுத்த சட்டம்!- உளவு துறை யோசனை!

 சமீப காலமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப வேகம் காரணமாக வீட்டில் இருந்த படியே பல சமூக விரோத செயல்கள் பரப்பப்படுகிறது.நாட்டில் பல்வேறு சமூக விரோத செயல்களுக்கு ஒரு காரணமாக இருந்து வருவதும், அவதூறு பரப்புவதும், தேவையற்ற சர்ச்சையை கிளப்புவதுமாக நாட்டிற்கு ஒரு அச்சுறுத்தலாக வளர்ந்து வரும் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகியவற்றை , இந்திய சட்ட வரைமுறைக்குள் கொண்டு வரவேண்டும் என உளவுத்துறை பரிந்துரைத்துள்ளது.இது தொடர்பாக உளவுத்துறை ( ஐ.பி.) பிரதமருக்கு அனுப்பியுள்ள...

செல்போனிலுள்ள எண்களைக் கொண்டு தமிழில் தட்டச்சு – புதுகை தமிழர் சாதனை!

தற்போதும் கூ ட சில செல்போன் நிறுவனங்கள் தமிழில் குறுந்தகவல் அனுப்பும் வசதியைச் செய்திருந்தாலும் அதைப் பயன்படுத்துவதில் சிரமம் உள்ளது. இதற்குத் தீர்வு காணும் வகையில் செல்போனில் உள்ள எண் விசைப் பலகையிலேயே தமிழில் தட்டச்சு செய்யும் புதிய முறையை புதுக்கோட்டையைச் சேர்ந்த டி. வாசுதேவன் வடிவமைத்துள்ளார்.புதுகோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வாசுதேவன் என்பவர் தனது உறவினருடன் சேர்ந்து கடந்த 2008 ஆம் ஆண்டு கைபேசியில் எளிதாக தமிழ் எழுத்துகளை டைப் செய்வதற்கான மென்பொருளை...

ரூபாய் நோட்டின் பின்புறம் உள்ள படம் என்ன சொல்கிறது?

ரூபாய் 5 - விவசாயத்தின் பெருமைரூபாய் 10 - விலங்குகள் பாதுகாப்பு (புலி,  யானை, காண்டாமிருகம்).ரூபாய் 20 - கடற்கரை அழகு (கோவளம்)ரூபாய் 50 - அரசியல் பெருமை (இந்திய பாராளுமன்றம்)ரூபாய் 100 - இயற்கையின் சிறப்பு (இமயமலை)ரூபாய் 500 - சுதந்திரத்தின் பெருமை (தண்டி யாத்திரை)ரூபாய் 1000 - இந்தியாவின் தொழில்நுட்ப மேம்பா...

காதலுக்கு மன ஒற்றுமை போதும் - குட்டிக்கதைகள்!

ஒரு தவளைக்கு தன் குளத்தில் அடிக்கடி நீராடி செல்லும் தேவதை மீது காதல் ஏற்பட்டது ,தன் காதலை அவளிடம் கூறியும் அவள் ஏற்றுக்கொள்ளவில்லை, அவளிடம் காரணம் வினாவியது தவளை,அதற்க்கு அவள் இன வேறுபாடு உள்ளது என்று சொல்லிட்டால்.இதை கேட்ட தவளை அழுது தவித்தது, கோடை காலம் வந்தது ,மழையின்றி அனைத்து குளங்களும் வற்றியது, ஆனால் தேவதை நீராடும் குளத்தில் மற்றும் நீர் வற்றவே இல்லை, ஆச்சரியத்தில் இருந்த தேவதை அந்த குளத்தில் உள்ள தாமரையிடம் கேட்டாள்,அதற்க்கு தாமரை கூறியது,...

முன்பதிவு அவசியம்... பாஸ்போர்ட் பெற அனைத்து சேவை மையங்களிலும்!

 சென்னையில் உள்ள மூன்று பாஸ்போர்ட் சேவை மையங்களிலும் முன்பதிவு மூலமே பாஸ்போர்ட்டுக்கு ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் முறை கட்டாயமாகிறது. இந்த புதிய முறை டிசம்பர் 01/12/2013 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.சாலிகிராமம் பாஸ்போர்ட் சேவை மையத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மட்டுமே முன்பதிவு செய்யாமல் பாஸ்போர்ட் ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும். தாம்பரத்தில் முன்பதிவு செய்யாமலேயே சேவை மையத்துக்குச் சென்று விண்ணப்பம் மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பிக்கும்...

மருதாணியின் மருத்துவக் குணம்!

 சிலருக்கு கழுத்திலும், முகத்திலும் கருந்தேமல் காணப்படும். இதற்கு நல்ல கை மருத்துவம் உள்ளது.மருதாணி இலையுடன் சிறிது குளியல் சோப்பைச் சேர்த்து அரைத்து பூசி வர விரைவில் கருந்தேமல் மறையும்.சில பெண்களுக்கு ஏற்படும் பெரும்பாடு, வெள்ளைப்பாடு ஆகியவை குணமாக, மருதாணி இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு பசும்பாலில் கலந்து இருவேளை வீதம் 3 நாட்கள் சாப்பிட்டால் விரைவில் குணம் கிடைக்கும்.ஆனால், இதனை உண்ணும் போது உணவில் புளியை சேர்த்துக் கொள்ளக் கூடாது.உள்ளங்காலில்...

மனிதன் இறந்து 36 மணி நேரத்தில் நடப்பது என்ன ?

மனிதன் இறந்து 36 மணி நேரத்தில் ஈக்கள் முட்டை இடுகின்றன உடலில் 60 மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன.3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன.4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன.5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை.6 நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு.2 மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது.இறந்த பிறகு இப்படி மனிதனின் உடல் பாகங்கள் சிதைந்து போக,எதற்கு இந்த தலைகணம், கோபம், ஆணவம், ஆடம்பரம், கொலை வெறி,கௌரவம், ஜாதி மத சண்டைகள் …???மனித பிறப்பு மிக அறியப்...