Thursday, 28 November 2013

வில்லங்கம் பார்த்து வீடு வாங்குங்க...

பழைய வீடுகளை வாங்கும்போது, குடியிருக்கும் வீட்டில் என்ன வில்லங்கம் இருக்கப்போகிறது என நினைத்து கவனக்குறைவாக இருக்கக்கூடாது. பழைய வீடு வாங்கும்போதுதான் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். முதலில், வாங்கப் போகும் பழைய வீட்டின் மீது வில்லங்கம் ஏதாவது உள்ளதா என்பதை பார்க்கவேண்டும். வில்லங்கம் ஏதும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்ட பின்னர் வீட்டின் பத்திரம், பட்டா, மூலபத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை கேட்டுப்பெற வேண்டும். அந்த ஆவணங்களை வக்கீல் மூலம் ஆராய வேண்டும்.பத்திரம் காணாமல் போய்விட்டால், அந்த வீட்டை வாங்கும்போது உஷாராக இருக்க வேண்டும். ஏனெனில், வீடு கட்டுவதற்காக...

தாழ்வு மனப்பான்மை!

வெற்றி பெற வேண்டும் என்று விரும்பாதவர்களே கிடையாது. நம் பலம் எது, பலவீனம் எது என்பதை உணர்ந்துக் கொண்டால் வாழ்க்கை என்பது இனிமையாகும். ஆனால் சிலர் மட்டுமே இந்தத் தெளிவை அடைவதினால் அந்த சிலருக்கு மட்டுமே வாழ்க்கை வெற்றிகரமாக அமைகிறது. இதற்குக் காரணம் மனம். தாழ்வு மனப்பான்மை என்பது முழுக்க முழுக்க மனம் சம்பந்தபட்ட விஷயம். தாழ்வு மனப்பான்மை உள்ளவர்களின் வாழ்க்கையில் செல்வம் இருக்கலாம்; கல்வி இருக்கலாம்; உடல் வலிமை கூட இருக்கலாம்: ஆனால் நிம்மதி இருக்காது.  தாழ்வு மனப்பான்மை பொதுவாக இளம் வயதிலேயே உருவாகிறது. புறக்கணிக்கப்பட்டவர்கள்,பல முறை...

நம்மை போல், டால்பின்களும் பெயர்கள் மூலம் ஒருவருக்கொருவர் அழைக்கின்றன!

 உலகின் மிக அறிவார்ந்த விலங்குகளில் ஒன்றாகும் -டால்பின்களுக்கு பெயர்கள் உள்ளன, அவைகளுக்கு பெயர்கள்  மனிதர்களால் கொடுக்கப்பட்டது இல்லை.முதன் முறையாக, ஆராய்ச்சியாளர்கள் டால்பின்கள் எப்படி 'தனிப்பட்ட பெயர்கள்'  கொண்டு பதிலளிக்கின்றன என்று சோதித்து பார்த்தனர். கடல் பாலூட்டிகள் தனிப்பட்ட விசில் பயன்படுத்தி இதன் மூலம்  ஒருவருக்கொருவர் அடையாளம் கண்டு கொள்ளும் மற்றும் அவர்களது சொந்த அழைப்பை கேட்கும் போது பதிலளிக்கும் என்று ...

மம்முட்டி படத்தில் விஜய்?

 மம்முட்டியுடன் இணைந்து விஜய் நடனமாடப் போவதாக செய்தி வெளியாகி உள்ளது.மலையாளத்தில் மம்முட்டி, ரீமா கல்லிங்கள் நடிக்கவிருக்கும் படம் ‘கேங்ஸ்டர்’. இந்தப் படத்தை ஆஷிக் அபு இயக்குகிறார். இவர்தான் ’22 ஃபீமேல் கோட்டயம்’ என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கியவர். படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்குகிறது.இந்நிலையில் படத்தில் விஜய்யை எப்படியாவது ஒரு பாடலுக்கு  ஆடவைத்துவிட வேண்டும் என்று இயக்குனர் ஆஷிக் அபு ஆசைபடுகிறாராம். அதற்கான தீவிர முயற்சியில் இப்போதே...

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது குற்றமோ, பாவமோ அல்ல!- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு!

 “திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது, இந்தியாவில் சமூகத்தாலோ, சட்டத்தாலோ அங்கீகரிக்கப்படவில்லை.அதே சமயம் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது குற்றமோ, பாவமோ அல்ல.”என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது.திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து பிரிந்துவிட்ட ஒரு பெண், அந்த ஆணிடம் இருந்து ஜீவனாம்சம் கோரி தாக்கல் செய்த மனு மீது நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் விசாரித்து வந்தது.இது தொடர்பாக, நீதிபதி...

டிசம்பரில் ரஜினி, விஜய், அஜீத், கமல் படங்களின் இசை வெளியீடு!

 வரும் பொங்கல் தமிழக ரசிகர்களுக்கு மறக்க முடியாத பொங்கலாக இருக்கப் போகிறது. காரணம், அன்றைய தினத்தில் பெரிய ஹீரோக்களின் படங்கள் நேரடியாக மோத உள்ளன. ஜனவரியில் பொங்கலுக்கு பெரிய ஹீரோக்களின் படங்கள் ரிலீஸாக இருப்பதால் அதற்கு முன்பாக சம்மந்தப்பட்ட படங்களின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது. எனவே, பொங்கலுக்கு முன்பாகவே ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டம் காத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.அதன் விவரம் வருமாறு:-டிசம்பர் 12 – கோச்சடையான்ரஜினி,...

டென்ஷன் எதனால்?

டென்ஷன் என்பது, ஏதோ ஒரு சூழ்நிலையில் கோபத்தில் எழுந்து அடங்கும் உணர்வு என்றுதான் பலரும் நினைத்திருக்கிறார்கள். அது தவறு. மனத்தாலும், உடலாலும் அது பல கட்டங்களைக் கடந்த பின்னர்தான் வெளிப்படும்.ஏதோ ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற முனைப்பு உள்ளுக்குள் எழுகிறது. அதற்கு இடையூறு ஏற்படுவதாக உணர்கிறீர்கள். உடனே, அதைச் சரியாக செய்ய முடியுமோ முடியாதோ என்கிற சந்தேகம் உள்ளுக்குள் வந்துவிடுகிறது. மனம் பதைபதைப்பு அடைகிறது. நெஞ்சு துடிக்கிறது. ஒரு தடுமாற்றம் நடுக்கம் வருகிறது. நிதானம் இழக்கிறது. தவிப்பு ஏற்படுகிறது. இதனால், உடல் திசுக்கள் நிறைய கெடுகின்றன.உடல்திசுக்கள்...

மூக்கின் அழகை மறைக்கும் தழும்பை போக்க டிப்ஸ்!

 தற்போது கண்ணாடி அணிபவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. தொடர்ச்சியாக கண்ணாடியை அணிபவர்களுக்கு, மூக்கின் மேல் தழும்புகள் போன்று கருப்பாக காணப்படும்.இத்தகைய தழும்புகள் ஏற்படுவதற்கு காரணம் கனமான கண்ணாடி மற்றும் மூக்கினை அழுத்தும் படியாக நீண்ட நேரம் கண்ணாடி அணிவது தான்.இது முகத்தில் ஒருவிதமான அசிங்கமான தோற்றத்தைக் கொடுக்கும். கண்ணாடி அணிவதால் ஏற்படும் தழும்புகளை போக்குவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.1. தினமும் முகத்தை ஃபேஸ்...

மலாலா – பிரிட்டனின் செல்வாக்குமிக்க ஆசியர்!

மலாலா மீது எந்நேரத்திலும் தாங்கள் தாக்குதல் நடத்துவோம் என்று தலிபான் பயங்கரவாதிகள் மிரட்டியதற்கு பதிலடியாக, பயங்கரவாதிகளால், எனது உடலைத் தான் சிதைக்க முடியுமே தவிர, எனது கனவுகளை ஒருபோதும் சிதைக்க முடியாது என்று தெரிவித்த மலாலா யூசுப்சையை, பிரிட்டனின் செல்வாக்குமிக்க ஆசியர் என்று லண்டனிலிருந்து வெளிவரும் வார இதழ் புகழாரம் சூட்டியுள்ளது.பெண் கல்வியை வலியுறுத்தி பிரசாரம் செய்து வந்த பாகிஸ்தான் சிறுமி மலாலா மீது தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்....

நிம்மதி...!

நிறைவு,நிம்மதி இவையிரண்டையும் தேடியே எல்லோர் வாழ்க்கையும் இயங்குகிறது. சிலருக்கு அனைத்தும் இருந்தும் நிம்மதியும் மன நிறைவும் இருக்காது. ஏன்? நாம் எடுக்கும் எல்லா முடுவுகளுமே சரியானதாக அமைவதில்லை. அதேபோல் நம் வாழ்க்கை குறித்தும்,லட்சியம் குறித்தும் எடுக்கும் முடுவுகளும் சரியானதாக தான் இருக்கவேண்டும் என்பதல்ல. சில நேரங்களில் நாம் விரும்புபவை,நேசிப்பவை கூட நமக்குத் தடையாக இருக்கலாம்.வாழ்க்கைப் பாதை என்றும் பூந்த்தோட்டமாக தான் இருக்க வேண்டும் என்பதல்ல. முட்களும் குழிகளும் நிரம்பியதாகவும் இருக்கலாம். வாழ்வில் எப்போதும் கவனம் தேவை. அந்த கவனம்,நிதானம்...

விடா முயற்சி..!

"எப்போதும் தோற்காதவர்கள் யாரெனில், எப்போதும் முயற்சி செய்யாதவர்களே" - இந்தக் கருத்தைப் பற்றி பார்ப்போம்.என்னிடம் ஒரு வெற்றியாளரைக் காண்பியுங்கள் 'ஒரே இரவில் வெற்றி' என்பது எவ்வளவு போலியானது என்று நான் காண்பிக்கிறேன்.  ஒவ்வொரு வெற்றியாளனும் தோற்க துணிந்தால்தான் வெற்றி பெறுகிறான்.  பின்வரும் சம்பவங்களைக் கவனியுங்கள்.இரண்டாம் உலகிப்போரின்போது டொயோட்டோ மோட்டார் கார்ப்பரேஷனில் பொறியாளர் வேலைக்கு நடந்த இன்டர்வியூவில் சொயிசிரோ தேறவில்லை. ...

வெற்றி மனப்பான்மை!

வாழ்வின் எந்தவொரு கணத்திலும் நாம் தோல்வியடைய விரும்புவதில்லை. எந்தவொரு போட்டியிலும் வெற்றியைப் பெறுவதற்கும், எந்தவொரு இடத்திலும் முதலாவதாக, உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவதற்கும், முன்னேறுவதற்கும் நாம் விரும்புகிறோம். இது தவறான எண்ணமல்ல. தான் ஒரு திறமை மிகுந்தவனாக ஆகவேண்டும், தன்னால் முடிந்த அளவு வாழ்வில் உயர்ந்த இடத்துக்கு வரவேண்டும் என்ற இலட்சியத்தோடு முயற்சி செய்வது மிகவும் நல்ல விடயம். இவ்வாறாக முன்னேற வேண்டுமென்ற மனப்பான்மையே மனதில் வெற்றிக்கான விதைகளைத் தூவி விடுகிறது. பதவிகளில் உயர்ந்த அந்தஸ்தினை நோக்கி, போட்டிகளில் வெற்றிகளை நோக்கி எனப்பல எதிர்பார்ப்புக்கள்...

காய்ச்சலின் அளவை கண்டறியும் வெப்பமானியை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!

 உங்களுக்குக் காய்ச்சல் வந்தபோது வாயில் ஒரு கருவியைவைத்து வெப்பநிலையை அளவிட்டிருப்பார்களே... அதுதான் வெப்பமானி (Thermometer). தெர்மாமீட்டர் என்பது வெப்பத்தை அளக்கும் கருவி. அதனால், அதற்கு வெப்பமானி என்று பெயர். காய்ச்சலைப் பார்க்கப் பயன்படுத்து கிளினிக்கல் தெர்மாமீட்டர் (Clinical Thermometer). ஜெர்மன் மருத்துவர் கார்ல் உன்டர்லிச் 1868-ல் 'காய்ச்சல் என்பது ஒரு நோயல்ல; நோயின் அறிகுறி என்ற தன் ஆய்வை வெளியிட்டார். அவர், உடல் வெப்பநிலைக்கும் பலவித...

கலகலப்பு 2' படத்தில் ஸ்ரீதிவ்யா?

 ஹீரோவாக நடித்துக்கொண்டு இருந்த சுந்தர்.சி மீண்டும் இயக்குநர் அடையாளத்தோடு களம் இறங்கிய படம் 'கலகலப்பு'. விமல், அஞ்சலி, சிவா, ஓவியா நடித்த இப்படம் காமெடியில் அப்ளாஸ் அள்ளியது.சுந்தர்.சி காமெடிப் படம் எடுத்து மீண்டும் தன் இமேஜை உயர்த்திக்கொண்டார். இப்போது திகில் நிறைந்த பேய்ப் படமாக 'அரண்மனை' படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.ஹன்சிகா, ஆண்ட்ரியா, லட்சுமிராய் ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர், இதற்கடுத்து 'கலகலப்பு 2' எடுக்கத் திட்டமிட்டு இருக்கிறார்...

ஃபிட்டான வயிற்றைப் பெறுவதற்கான சில டயட் டிப்ஸ்...

நாம் ஒவ்வொருவரும் நமது உடல் நலத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு இருக்கின்றோம். அதிலும் குறிப்பாக சினிமா ஹீரோக்கள் போன்று சிக்ஸ் பேக் அடைவதற்கு இன்றைய ஆண்கள் பெரிதும் ஆசைப்படுகின்றனர். அதற்காக அவர்கள் தங்களை மிகவும் வருத்தி, சரியாக சாப்பிடாமலேயே, அதனை அடைய முற்படுகின்றனர். அவ்வாறு இல்லாமல் சிறந்த எளிய வகையில் தொப்பையை குறைத்து பிட்டாக மாறுவதற்கு பல வழிகள் இருக்கின்றன.இது சிக்ஸ் பேக் காலமாக மாறிவிட்டாலும், நம்மை நேர்த்தியாக காண்பிப்பது ஆரோக்கியமான பிளாட்...

நகங்களை நீங்களும் கடிக்கிறீர்களா?

அப்படியாயின் இதைத் தொடர்ந்து படிக்கவேண்டிய கட்டாயம் உங்களுக்கு.நகங்களை ஏன் தேவையில்லாமல் கடிக்கிறார்கள்? இது பற்றி ஒரு ஆராய்ச்சியே செய்யும் அளவுக்கு இந்நிகழ்வு வந்திருக்கின்றது. சமீபத்தில் கிடைக்கப்பெற்ற ஆராய்ச்சிகளின் பெறுபேறுகளின்படி, குழந்தைகள், சிறுவர்கள் மட்டுமன்றி, வயது வந்தவர்களும் நகங்களைக் கடிக்கும் பழக்கம் உடையவர்களாக இருந்திருக்கின்றார்கள்.இதில் ஆச்சரியமான விடயம் என்னவெனில் வயது வந்தவர்களில் 20வீதமானவர்கள் நகங்களையோ அல்லது பென்சில் போன்ற பொருட்களையோ கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள்.இதில் கொஞ்சமாவது நாம் ஆறுதலடையவேண்டிய...

பாதாம் சூப் - சமையல்!

 பாதாமைக் கொண்டு சூப் செய்து சாப்பிட்டால், அது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதுடன், உடல் எடையை குறைக்கவும் உதவும்.அதுமட்டுமின்றி இந்த சூப் வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும். இப்போது அந்த பாதாம் சூப்பை எப்படி செய்வதென்று பார்ப்போம்...தேவையான பொருட்கள்:பாதாம் - 1/4 கப் வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் சோள மாவு - 4 டேபிள் ஸ்பூன் தண்ணீர் - 4 கப் பால் - 1 கப் உப்பு - தேவையான அளவு மிளகு...

வாழக்கற்றுக்கொள்ளுங்கள்...?

தண்ணீர் ஏன் அழுக்கடைவதில்லை? ஏனென்றால் அது ஓடிக்கொண்டே இருப்பதால். தன்ணீர் ஏன் அழுகிப் போவதில்லை? ஏனென்றால் அது ஓடிக் கொண்டிருப்பதால் நீர் ஆறாக ஒடி, நதியாகி, கடலாகி பிறகு பெரிய சமுத்திரமாக எப்படி மாறுகிறது? அது ஓடிக் கொண்டே இருப்பதால். அதனால் மனிதனே நீ தேங்கி நிற்காதே. ஓடிக்கொண்டே இரு. முன்னேறிக் கொண்டே இரு.பொதுவாக இன்றைய இளைஞர்களிடம் காணப்படும் மிக மோசமான குணம் என்ன வென்றால் சீக்கிரம் மனத்தளர்ச்சியடைந்துவிடுவது தான். தன்னம்பிக்கையுடன் போராடுவதில் சில சமயம் அவர்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விடுகிறது.. வாழ்வு என்பது ஏதோ வந்ததைப் பெற்றுக் கொள்வதல்ல....

பெரிய நம்பிக்கை.........!

உலகில் பெரிய காரியங்களைச் செய்தவர்கள் எல்லோருமே தங்களுடைய நம்பிக்கையை சிறிய செயல்களில் செலுத்தி வீணாக்கி விடவில்லை.இதற்கு மாறாக நம்பிக்கையை பெரிய செயலில் செலவிடுவதே வாழ்வின் நோக்கமாகக் கொண்டிருந்து, அதற் காக ஓயாது பாடுபட்டு முயன்று வெற்றி பெற்றிருக்கிறார்கள்.ஜான் பயர்டு என்பவர் தான் டி.வி.யைக் கண்டு பிடித்தார். அவருடைய நம்பிக்கை எவ்வளவு பெரியதாகவும், அளவு கடந்ததாகவும் இருந்தது என்பதனை உணர்ந்து கொண்டாலே போதும்.நம்முடைய நம்பிக்கையை எதில் வைத்து எப்படி செயல்பட வேண்டும் என்ற உண்மையை உணர்ந்து கொள்ள முடியும்.ஜான் பயர்டின் இளமைப் பருவத்திலே பொறிகளை உருவாக்க...

வாழ்வின் சிறப்பு!

1. பெற்றோரையும், பெரியோரையும் மதித்து நடப்பது சிறப்பு.2. ஒழுக்கம் தவறாத நடத்தையுடன் இருப்பது சிறப்பு.3. அடுத்தவர்களின் மகிழ்ச்சியில் இன்பம் காண்பது சிறப்பு.4. யார் மனதையும் புண்படுத்தி பேசாமல் இருப்பது சிறப்பு.5. எது நடந்தாலும் மனம் கலங்காமல் தன்னம்பிக்கையுடன் இருப்பது சிறப்பு.6. உன்னைப்போல் பிறரையும் நேசித்து வாழ்வது சிறப்பு.7. ஆடம்பர செலவு செய்யாமல் சிக்கனமாகசேமித்து வைப்பது சிறப்பு.8. அடுத்தவர்களைப் பார்த்து பொறாமைப்படாமல் உன்னிடம் உள்ளதை வைத்து மனதிருப்தியுடன் வாழ்வது சிறப்பு.9. அதிகமாக ஆசைப்படாமலும், கோபப்படாமலும், கவலைப்படாமலும் வாழ்வது சிறப்பு.10....

127 ஆண்டுகால தயாரிப்பு இரகசியத்தை பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கும் 'கோக்கோ கோலா

 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தலைவலிக்காக நிவாரணம் தேடி மருந்துக் கடைகளுக்கு வந்தவர்களுக்கு கடைக்காரர்கள் ஒரு ரகசிய பொருளை தண்ணீரில் கரைத்து தந்தனர்.இதை சாப்பிட்ட பலருக்கு உடனடியாக தலைவலி பறந்தே போனது. அந்த 'ரகசிய மருந்து' தான் நாளடைவில் போத்தல்களில் அடைக்கப்பட்டு 'கோக்கோ கோலா' என்ற வணிகப் பெயருடன் உலக நாடுகளில் உள்ள விற்பனை கூடங்களில் பிரபலமடைந்தது.அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் கோக்கோ கோலாவின் தலைமை அலுவலகம் உள்ளது. இங்குள்ள ஒரு பாதுகாப்பு...

வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் கவனத்திற்கு...

 * வெளிக்கதவில் கண்டிப்பாக லென்ஸ் பொருத்துங்கள். மரக்கதவுக்கு முன்னால் ஒரு இரும்புக் கதவும் அமையுங்கள்.  * முன் பின் அறிமுகமில்லாதவர் தண்ணீர் கேட்டால், தண்ணீர் எடுப்பதற்காக கதவைத் திறந்து வைத்து விட்டு வீட்டின் உள்ளே செல்லவே கூடாது.  * ஏதேனும் அவசரத்தில் மறந்துபோய் கதவைத் திறந்து வைத்துவிட்டு பக்கத்தில் எங்காவது சென்று வந்தால், வீட்டில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா, யாராவது இருக்கிறார்களா என்று பார்த்த பிறகே கதவை மூட வேண்டும்.  * மின்சார பொருட்களை ரிப்பேர் செய்பவர்கள், கேபிள் டி.வி ஆபரேட்டர்கள் என்ற பெயரில் யாராவது, "உங்கள் கணவர்...

நோய்களை குணப்படுத்தும் 'தொழுகை' - இஸ்ரேல் - அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

 குறித்த நேரத்தில் இஸ்லாம் விதித்துள்ள ஐங்கால கடமையான தொழுகையை நிறைவேற்றுவதன் மூலம் அல்ஸிமர்ஸ் எனும் ஞாபக மறதி நோயை 50% கட்டுப்படுத்தலாம் என அமெரிக்க-இஸ்ரேலிய விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.டெல் அவீவ், யாபா, அமெரிக்காவின் இதர பல்கலைக்கழகத்தைச் சார்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.நினைவாற்றல் குறையாமலிருக்க பயிற்சி மையங்கள் மற்றும் இதர வழிகளில் பயிற்சி மேற்கொள்பவர்களை விட குறிப்பிட்ட நேரத்தில் தொழுகையை பேணுபவர்களுக்கு அல்ஸிமர்ஸ்...

பெஸ்ட் கன்ட்ரோல் - கரப்பான்பூச்சி, எலி, பல்லி, எறும்பு...

இல்லத்தரசிகளுக்கு தீராத தலைவலிகள் என்று பெரிய பட்டியலே இருக்கும்... அதில் பூச்சிகள் உள்ளிட்டவற்றுக்கும் கட்டாயம் இடமுண்டு. ஆம்... கரப்பான்பூச்சி, பல்லி, எலி, எறும்பு, மூட்டைப்பூச்சி என வீட்டில் வாழும் 'ஜீவன்'களின் தொல்லை... தாங்க முடியாத தொல்லையே.'அடச்சே... என்ன செய்தாலும் இதையெல்லாம் ஒழிக்க முடியலையே' என்று புலம்பிக்கொண்டே இருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு, அவற்றை விரட்டி அடிக்கும் வழிகள்கெட் அவுட் கரப்பான்பூச்சி!''பொதுவாக ஈரம், இருட்டுள்ள இடங்களிலும், சமையலறையிலும் கரப்பான்பூச்சியின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். பூச்சிக்கொல்லி ஸ்பிரே உள்ளிட்ட...

சர்க்கரை நோயாளிகளின் எதிரி மைதா மாவு’ சர்க்கரை நோய் சந்தேகம்!

சர்க்கரை நோய் பரம்பரை வியாதியா? ஆம். பெற்றோர் இருவருக்கும் சர்க்கரை நோய் இருந்தால், குழந்தைகளுக்கு வரும் வாய்ப்பு 80 சதவீதம் உண்டு. பெற்றோரில் ஒருவருக்கு இருந்தால் 50 சதவீத வாய்ப்பு உண்டு. பெற்றோருக்கு சர்க்கரை நோய் ஏற்பட்ட வயதில் இருந்து 5 முதல் 10 ஆண்டுகள் முன்பாகவே குழந்தைகளுக்கு வந்து விடுகிறது. சர்க்கரை நோயின் அறிகுறிகள் என்ன? அதிக சிறுநீர்ப் போக்கு. அதிக தாகம் மற்றும் பசி. மூன்று மாதங்களில் முன்பு இருந்த எடையில் இருந்து 10 சதவீதம் வரை, உடல்...

ஆயுளை அதிகரிக்கும் ஆலிவ்..!

சின்ன சின்ன உணவுப் பொருட்கள் மூலம் நாம் சிறப்பான பலன்களை பெறமுடியும். நமது வீட்டில் உள்ள உணவுப் பொருட்களின் மகத்துவத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். * வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும். * உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணையைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல்...

சர்வர் இல்லாமல் / யூ ஆர் எல் இல்லாமல் இனி ஒரு புது வகை இணைய வழி !

இன்டர்னெட் எனப்படும் இணையம் இல்லா வாழ்க்கையை நினைத்து பார்த்தாலே அம்மாடியோனு பல பேர் சொல்ல கேட்டிருப்போம். இது பல சமயம் நடக்கும விஷயம் தான் சர்வர் கிராஷ் / நாட் அவய்லபிள் / ஹேக்கிங் என்று அடிக்கடி சர்வர் செயல் இழந்து போவதால் இந்த ‘அம்மாடி; கிளம்புகிறது. இதற்கிடையில் ஈமெயிலிருந்து / ஈ எஜுகேஷன் வரை பாதிப்பதின் காரணம் உலக வலை எனப்படும் (www ) இது ஒரு வகையில் உலகத்தின் எந்த ஒரு மூலையில் இருந்து ஆக்ஸஸ் செய்யும்படி வடிவமைக்கபட்டிருப்பதால் இதனை அழிக்கவும்...

உலகில் உள்ள மிகவும் புகழ் பெற்ற நடன வகைகள்!!!

நம்மில் பல பேருக்கு உணர்சிகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்த பெரிதும் உறுதுணையாக விளங்குகிறது நடனம். மேலும் நம்முடைய சந்தோஷம், காதல், காயம் மற்றும் வலி போன்ற உணர்வுகளையும் அது வெளிப்படுத்த உதவும். ஒரு வகையில் புத்துணர்ச்சி பெறவும் பொழுதை போக்கவும் நடனம் பயன்படுகிறது. இசைக்கு பிறகு நம்மை சாந்தப்படுத்தி அமைதி படுத்த இன்னொன்றால் முடியும் என்றால் அது தான் நடனம்.இந்த உலகத்தில் பல வகையான நடனங்கள் உள்ளது. ஒவ்வொரு சாதியும் பண்பாடும் தனக்கென ஒரு வகையான நடனத்தை உருவாக்கியுள்ளது. நடனத்தால் பல வகையான நாட்டுப்புற பண்பாடுகள் பிரபலமடைந்துள்ளது. அதன் விளைவாக அதனை...

திட்டிய நாகார்ஜூனா... அழுத சமந்தா...

 நாகேஸ்வரராவ், நாகார்ஜுனா, நாக சைதன்யா என மூன்று தலைமுறை நடிகர்களும் 'மனம்' என்ற படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.இதில் நாகார்ஜூனாவுக்கு ஜோடியாக ஸ்ரேயாவும், நாக சைதன்யாவுக்கு ஜோடியாக சமந்தாவும் நடிக்கிறார்கள். இப்படத்தை நாகார்ஜுனா தயாரிக்கிறார். 45 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் இந்தப் படத்தின் இறுதிக் காட்சியில் ஒரு ட்விஸ்ட் உள்ளது.இந்த ட்விஸ்ட் யாருக்கும் தெரியக் கூடாதென்று  மிக ரகசியமாக படம் பிடித்தனர். அந்த ட்விஸ்ட் காட்சியில் சம்பந்தப்பட்ட...