Wednesday, 4 September 2013

பேஸ்புக்கில் நீங்கள் பெண்களை கவர மேலும் ஒரு வசதி அறிமுகம்!

உலகில் அதிக அடிமைகளை வைத்திருப்பவர் மார்க் ஸுக்கர்பர்க் தான் என்று சொன்னால் உங்களால் மறுக்க முடியுமா? பேஸ்புக் அடிக்கடி புது புது வசதிகளை அறிமுகப்படுத்தி நம்மை கவர்வதில் பேஸ்புக்கிற்கு நிகர் அதுவே. அதன் தற்போதைய அறிமுகம் சாட் செய்யும் போது நண்பர்களுக்கு Sticker களை அனுப்பும் வசதி. 


        மொபைல் பயனர்களுக்கு அறிமுகமான இந்த வசதி  கணினி பயனர்களுக்கும் கிடைத்துள்ளது. சாட்டில் அடிக்கடி வெறும் ஸ்மைலிகளை மட்டும் அனுப்பி போரடித்துவிட்டது என்று கூறுபவர்களுக்கு இந்த வசதி ஒரு புதிய அனுபவமாக இருக்கும். இதன் மூலம் ஏற்கனவே உள்ள குட்டி குட்டி படங்களை உங்கள் நண்பர்களுக்கு சாட் மூலம் அனுப்பலாம்.

 நீங்கள் சாட் செய்யும் போது சாட் விண்டோவின் வலது கீழ் மூலையில் ஒரு ஸ்மைலி இருக்கும் அதை கிளிக் செய்தால் கீழே உள்ளது போல Stickers உங்களுக்கு வரும். 

எதை உங்கள் நண்பருக்கு அனுப்ப வேண்டுமோ அதன் மீது ஒரு கிளிக் செய்தால் போதும் அது உங்கள் நண்பருக்கு சென்று விடும். இதில் Free என்பதை கிளிக் செய்தால் குறிப்பிட்ட Sticker உங்கள் சாட்டில் சேர்ந்து விடும். அதன் பின் அவற்றை உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் அனுப்பலாம். தற்போது அனைத்து Sticker களும் இலவசமாக கிடைக்கின்றன. இன்னும் என்னவெல்லாம் போட்டு அடிமைகளின் எண்ணிக்கையை பெருக்க போறாங்களோ ஆண்டவா!!! இதோ அந்த ஸ்டிக்கர்ஸின் இமெஜ்கள்….

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள்: நாசா கண்டுபிடிப்பு!

அமெரிக்க நாசா நிறுவனம் மார்ஸ் ரோவர் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை அனுப்பி செவ்வாய் கிரகத்தை தற்பொழுது ஆராய்ந்து வருகின்றது.

இந்த விண்கலமானது, முன்னர் செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கு அடையாளமான பெர்குளோரேட்ஸ் என்ற உப்பு படிமங்களை கண்டுபிடித்துள்ளது.

இந்த உப்பு கலந்த பாறைத் துகள்களை சூடுபடுத்தும்பொழுதும் இதிலிருந்து குளோரினேட்டட் ஹைட்ரோ கார்பன்கள் வெளியேறியது.
அப்பொழுது கூடவே அதிக அளவிலான ஆக்சிஜனும் வெளியேறுவதை விஞ்ஞானிகள் பார்த்துள்ளனர்.

இந்த பெர்குளோரேட் உப்புகள் மூலம் செவ்வாய் கிரகத்தில் முன்னர் உயிரினங்களின் புழக்கங்கள் இருந்திருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

mars_earth 



கண் கருவிழி மூலம் இனி கோமா நோயாளிகள் தவல்களை பரிமாறிக்கொள்ளலாம்!

news_15213 (1)


ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய ஒரு வெட்டும்விளிம்பு தொழில்நுட்பம் பயன்படுத்தி இதன் மூலம் நகர்த்த அல்லது பேச முடியாத மூளை பாதிக்கப்பட்ட நோயாளிகள் தங்கள் கண் கருவிழி விரிவுபடுத்தி தகவல் பரிமாற்றிக் கொள்ள முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர்.

ஒரு லேப்டாப் மற்றும் கேமரா உதவியுடன் கண் கருவிழி அளவை கொண்டு தொடர்பு கொள்ள முடியாத நோயாளிகள் எளிய முறையில் ஆம் அல்லது இல்லை என்ற கேள்விகளுக்கு நொடிகளுக்குள் பதில் சொல்ல முடியும். இந்த கருவி மக்கள் மனக்கணிதம் செய்யும் போது இயற்கையாகவே ஏற்படும் கருவிழி அளவில் ஏற்படும் மாற்றங்களை பயன்படுத்தி எடுக்கிறது.

இதில் சிறப்பு கருவிகளோ அல்லது பயிற்சியோ தேவையில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கணினியில் தொழில்நுட்ப இடையூறுகள் உள்ளதால் இன்னும் அதன் அமைப்பை வேகம் மற்றும் துல்லியம் வகையில் முன்னேற்றம் அடைந்துகொண்டிருக்கிறது. என்ஹாசர் அவர்கள் இந்த இடையூறுகளை உடனடியாக சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார். உணர்வற்ற நோயாளிகள், கோமா அல்லது மற்ற செயற்படாத நிலையில் உள்ள நோயாளிகளுக்கு எந்த தகவல்தொடர்பும் ஒரு பெரிய முன்னோற்ற நடவடிக்கை ஆகும்,’ என்று அவர் கூறினார்.