Saturday, 23 November 2013

எச்சரிக்கை.... எச்சரிக்கை.... எச்சரிக்கை....


எச்சரிக்கை.... எச்சரிக்கை.... எச்சரிக்கை....

பேரூந்தில் பயணம் செய்யும்போதோ அல்லது வெளியிலோ யாரேனும் முகம் தெரியாதவர்கள் உங்களது செல்போனை கேட்டால் கொடுப்பதை தவிர்ப்பதே நலம்.

கடந்த மாதம் பாம்பேயில் ஒரு பயணியிடம் அடுத்திருந்த ஒருவர் தனது போனில் சார்ஜ் இல்லையென கூறி வாங்கி 2..3 ..முறை
 யாருடனோ பேசியுள்ளார்...

இச்சம்பவம் நடந்து 3 நாட்களுக்கு பின்னர் இந்த
 செல்போன் காரரின் வீடு தேடி போலிஸ் வந்து
 கைது செய்துள்ளனர், ஒரு பெண் கொலை
 செய்யப்பட்டுள்ளதாகவும் அவளின் செல்போனில்
 இவரது நம்பர் இலிருந்தே கடைசி 3 கால்கள் வந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு.

போன்காரர் காவல்துறையினரிடம், தனது போனை வாங்கி 2, 3முறை ஒருவர் பேரூந்தில் வாங்கி பேசியதை கூறியும் காவல்துறையினர் சந்தேகம் முழுவதுமாக நீங்கிய பாடில்லை.

பிறகு பேசியவரின் குரலை பதிவு செய்து சோதனை
 செய்ததில் பேசியவர்கள் மராத்தி மொழியில் பேசியுள்ளார்கள்.

ஆனால் இந்த போன்காரருக்கோ மராத்தி மொழியே
 தெரியாது, இன்னமும் வழக்கிலிருந்து பூரணமாக
 இவர் விடுபடவில்லை.

உதவி செய்யப்போய் உபத்திரவமா?

ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?

ஒரு ஆண் கடுமையா உழைச்சா... பொண்டாட்டியைக் கண்டுக்க மாட்டேங்கறான்னு மட்டம் தட்டுவாங்க.

பொண்டாட்டியை கவனிச்சுக்கிட்டா.. அவளையே சுத்தி சுத்தி வரான். வேலை வெட்டி இல்லாத பயன்னு கட்டம் கட்டுவாங்க..

அது போகட்டும்.. ஒரு பொண்ணைப் பார்த்து அழகா இருக்கேன்னு சொன்னா அது ஈவ் டீசிங்..ன்னு கெளப்பி விடுவாங்க.

கண்டுக்காம போனா அழகை ரசிக்கத் தெரியாத ஜடம்..!ன்னு அமுக்கி வைப்பாங்க.

எதுக்காச்சும் அழுதோம்ன்னா பொம்பள மாதிரி அழறான் பாரும்பாங்க..

திடமா இருந்தா நெஞ்சுல ஈவு இரக்கம் இல்லாத அரக்கன்னு வாருவாங்க..

பொண்டாட்டியை கேட்டு முடிவெடுத்தா தானா முடிவெடுக்கத் தெரியாத முட்டாள்..ன்னு பட்டம்.

சரின்னு நாமளே ஒரு முடிவு எடுத்தா தான் ஆம்பிளைங்கற அகங்காரம்..ன்னு திட்டும்.

ஏதாவது பிடிச்சது வாங்கிட்டுப் போய் கொடுத்தா "என்னத்துக்கு இப்போ காக்கா பிடிக்கிறீங்க..?" அப்படின்னு ஒரு நக்கல்.

ஒன்னும் வாங்கிட்டுப் போகலேன்னா "ஒரு முழம் பூவுக்கு விதியத்துப் போயிட்டேனே..!" ன்னு மூக்கை சிந்திக்கிட்டு விக்கல்..

ஒரு குறிக்கோளோடு உழைச்சா, " வேலையைக் கட்டிகிட்டு மாரடிக்க வேண்டியதுதானே.. எதுக்கு உங்களுக்கு பொண்டாட்டி..?" ன்னு ஏசல்.

சரின்னு சினிமாவுக்கு அழைச்சுட்டுப் போனா, " அந்த ஹீரோ மாதிரி ஒரு லட்சியம் வேணுமுங்க மனுஷனுக்கு.. எப்படி உழைச்சு முன்னேறி கார் பங்களா வாங்கினான் பாத்தீங்களா..?" ன்னு பூசல்..

இந்த கருத்து ஒஹோ என்று இருக்கிறதுன்னு எழுதினா, ஆனாதிக்க உலகம் அப்படின்னு சொல்லுவாங்க.

இது தப்பு பெண்கள் நல்லவர்கள்ன்னு எழுதினா உலகம் தெரியாத பைத்தியம்ன்னு சொல்லுவாங்க.


இது தான் காரணங்களாம் ஆண்கள்  சீக்கிரம் சாகறத்துக்கு... இது உண்மையா நண்பர்களே?

த்ரிஷாவின் கழுதை பாசம்!

நாய் பாசத்தையடுத்து கழுதை மீதும் பாசம் காட்டத் தொடங்கி இருக்கிறார் த்ரிஷா. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை காதலித்து மணந்த அமலா, விலங்குகள் நலம் காக்கும் தொண்டு அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். விலங¢குகள் மீது பாசம் காட்டி அவைகளுக்கு சேவை செய்து வந்தார். அதேபோல் நாய்களை காக்கும் சேவையில் ஈடுபட்டு வருகிறார் த்ரிஷா.

கேட்பாரற்று திரியும் தெரு ஓர நாய்கள் மீது இவர் காட்டும் பாசத்தால் பல நாய்கள் காக்கப்பட்டிருக்கின்றன. விலங்குகள் அமைப்பான பீட்டாவின் சார்பில் தனது சேவையை அவர் தொடர்ந்து வருகிறார். தற்போது நாய் பாசத்துடன் கழுதைகள் மீது பாசம் காட்டத் தொடங்கி இருக்கிறார்.

நாய்கள் தினம் கொண்டாடும் அவர் கழுதைகள் தினம் என்ற தலைப்பில் தனது இணையதள பக்கத்தில் கழுதைகளுக்கு உணவு தருவதுபோல் படம் வெளியிட்டிருக்கிறார். கழுதையின் வால் பகுதியில் தகரங்களை கட்டி நடுரோட்டில் ஓடவிட்டு அதன் கஷ்டத்தை ரசிக்கும் சிலரின் குரூர மனப்பான்மைக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் கருத்தும் வெளியிட்டிருக்கிறார்.

கழுதைகளுக்கு த்ரிஷா உணவு தருவது போன்ற படங்களையும் வெளியிட்டிருக்கிறார். ரசிகர்கள் அவரது அன்புக்கு பாராட்டு தெரிவித்திருக்கின்றனர். தற்போது த்ரிஷா தமிழில் என்றென்றும் புன்னகை, பூலோகம், பாண்டியன் இயக்கும் படம் என 3 படங்களில் நடித்து வருகிறார்.