Showing posts with label உடற்பயிற்சி! யோகா!. Show all posts
Showing posts with label உடற்பயிற்சி! யோகா!. Show all posts

Saturday, 4 January 2014

கொள்ளுப்பால்---உணவே மருந்து..!





கொள்ளுப்பால்---உணவே மருந்து!

இயற்கைப்பால் பற்றி அனைவரும் அறிந்ததே. ”கொழுத்தவனுக்கு கொள்ளு” என்பது முதுமொழி. அதாவது உடல் கொழு கொழு என்று இருப்பவர்கள் கொள்ளைப் பயன் படுத்தினால் அது உடல் எடையைக் குறைத்து உடலில் உள்ள உப்புகளை வெளியேற்றும். உப்புதான் மிக முக்கிய காரணம் உடலில் ஊளை சதை போடுவதற்க்கு, அது நீரை சேர்த்து வைத்துக் கொள்ளும் குணமுடையது.

100 கிராம் கொள்ளை நன்கு சுத்தப்படுத்தி, அதன் பின் அதை முளைக்கட்ட வேண்டும். ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களில் முளைவிடும். (இது சூரிய சக்தியின் அடிப்படையில் தான் இருக்கும், குளிர் காலத்தில் மூன்று நாட்கள் கூட ஆகலாம்) அதாவது போதுமான சூரிய சக்தி அதற்கு கிடைத்தால்தான் அதன் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டு முளைவிடும்.

முளைவிட்ட (1-1.5 Cms முளைவிட்டப் பின்) சிறிது தேங்காய் துருவலையும் சேர்த்து மிக்ஸியில், ஓட விட்டு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்க்க வேண்டும். தேங்காய் சட்னிக்கு அரைப்பது போல் பதம் வந்ததும் அதை இறக்கி துணி அல்லது வடிகட்டி உதவியுடன் பால் பிழிந்து கொள்ளவும்.

பலன்கள்: சிறுநீர் நன்றாக வெளியேறும். (அத்துடன் தேவையில்லாத உப்புகளும் வெளியேறி உடல் எடை குறையும்). சளித்தொல்லை நீங்கும். பக்க வாதத்தால் கை, கால் விழுந்து போனவர்களுக்கு இந்த கொள்ளுப்பால் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். உடலுக்கும் நல்ல சக்தி கொடுக்கும். ஒரு நாளைக்கு ஒரு தடவைக்கு மேல் குடிக்கவேண்டாம். ஒரு நபருக்கு 100 கிராம் கொள்ளில் இருந்து வரும் பால்தான் மருந்தின் அளவு.

இப்படியும் பெண்கள்...!



கணவரின் சிகிச்சைக்கு பரிசுப்பணத்தை சேகரிப்பதற்காக 3 கி.மீ. ஓட்டப்போட்டியில் பங்குபற்றி முதலிடம் பெற்ற 61 வயது பெண் ...?

மூன்று கிலோமீற்றர் வீதியோட்டப் போட்டியில் 61 வயதான பெண்ணொருவர் முதலிடம் பெற்ற சம்பவம் இந்தியாவில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
சேலை அணிந்த நிலையில் வெறுங்காலுடன் இப்பெண் ஓடி முதலிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மஹாராஷ்ட்டிரா மாநிலத்தின், பராமத்தி நகரில் நடைபெற்ற பராமத்தி மரதன் எனும் போட்டியில் இப்பெண் முதலிடம் பெற்றுள்ளார்.

தனது கணவரின் எம்.ஆர்.ஐ.ஸ்கேன் பரிசோதனைக்கு பணம் தேவைப்பட்ட நிலையில,; இந்த மரதன் ஓட்டப் போட்டியில் முதலிடம் பெறுபவருக்கு 5000 இந்திய ரூபா பரிசு வழங்கப்படும் எனக் கேள்விப்பட்டவுடன் இப்போட்டியில் பங்குபற்ற லதா பக்வான் கரே எனும் இப்பெண் தீர்மானித்தாராம்.

இவருடன் போட்டியில் பங்குபற்றிய ஏனையோர் பயிற்சிப் பெற்ற ஓட்டப் போட்டியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சேலையொன்றை அணிந்துகொண்டு வெறுங்காலுடன் ஓட்டக்களத்தில் வந்து நின்ற தன்னைப் பலரும் வித்தியாசமாகப் பார்த்ததாக லதா பக்வான் கரே கூறுகிறார். ஆனால், போட்டி ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே ஒவ்வொருவராக முந்தத் தொடங்கினார்.

இறுதியில் முதலிடத்தைப் பெற்று பராமத்தி மரதன் ஓட்டப்போட்டியின் அதிவேகமான நபர் என்ற பெயரையும் தட்டிக்கொண்டார் அவர். லதா பக்வான் ஓட ஆரம்பித்ததையே வித்தியாசமாக பார்த்தவர்கள் அவர் முதலிடம் பெற்றதை அறிந்து பெரும் வியப்படைந்தனர்.

பண்ணையொன்றில் தொழிலாளியாக பணியாற்றுபவர் லதா பக்வான். இது குறித்து லதா பக்வான் கரே கூறுகையில், 'இதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள எனது கணவருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டுமென மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதற்காக நாம் 15,000 - : 20,000 ரூபாவை திரட்ட வேண்டும்.

எனது அயலவர் ஒருவர்தான் இந்த மரதன் போட்டி குறித்த தகவலை எனக்குத் தெரிவித்தார். இதில் கிடைக்கும் பரிசுப்பணம் மூலம் எனது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கலாம் என மற்றொரு அயலவர் தெரிவித்தார். அதனால் நான் இப்போட்டியில் பங்குபற்றத் தீர்மானித்தேன்.

எனது மகனிடம் இவ்விருப்பத்தை தெரிவித்தபோது, எனது வயதை கருத்திற்கொண்டு அவர் ஆச்சரியமாகப் பார்த்தார். இது சாத்தியமில்லாத செயல் என அவர் எண்ணினார். ஆனால் நான் உறுதியாக இருந்ததால் இறுதியில் அவர் சம்மதித்தார். போட்டியில் ஓடும்போது நான் வெற்றி பெற வேண்டும் என எனக்கு நானே கூறிக்கொண்டேன்' என்றார்.

புல்தனா எனும் இடத்திலிருந்து 3 வருடங்களுக்குமுன் தொழில் தேடி பிம்பிலி எனும் கிராமத்துக்கு இவரின் குடும்பம் இடம்பெயர்ந்தது. ஆனால் அங்கும் நல்ல தொழில் எதுவும் கிடைக்கவில்லை. பண்ணையொன்றில் பணியாற்றி 80 - 100 ரூபாவை சம்பாதித்தார் இவர்.

இந்த ஓட்டப்போட்டிக்குமுன் தினமும் காலையில் காலையில் தனது கிராமத்திலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரம் நடந்து செல்வாராம் லதா பக்வான். ஆனால் ஒருபோதும் ஓடியதில்லை. 'நான் ஓடினால்' மற்றவர்கள் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். சங்கடமான கேள்விகளைக் கேட்பார்கள்' என என்கிறார் அவர்.

போட்டி ஏற்பாட்டாளரான சச்சின் சதாவ் கூறுகையில், 'பராமத்தி பகுதியைச் சேர்ந்தவர்களுக்காக இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் தடவை என்பதால் நாம் சிறிய அளவில் 4 பிரிவாக இப்போட்டியை நடத்தினோம். லதா பக்வான் சிரேஷ்ட போட்டியாளர்களுக்கான பிரிவில் பங்குபற்றினார். இது 3 கிலோமீற்றர் தூரம் கொண்ட போட்டி. ஏனைய போட்டியாளர்கள் முழுமையான தயார் நிலையில் ஓடினார். ஆனால் லதா கரே முதல் தடவையாக ஓட்டப் போட்டியொன்றில் பங்குபற்றிய நிலையிலும் முதலிடம் பெற்றுள்ளார். இரண்டாமிடம் பெற்றவர் அவரைவிட 2:3 நிமிடங்கள் பின்னால் இருந்தார். முறையான ஆடையோ பயிற்சியோ இன்றி லதா பக்வான் வெற்றிபெற்று ஆச்சரியமளித்துள்ளார்' என்றார்.

லதா பக்வானின் மகன் சுனில் கருத்துத் தெரிவிக்கையில், 'எனது தாயார் உடற்திடமானாவர் என்பது தெரியும். நானும் அவருக்குத் துணையாக ஓட நினைத்தேன். ஆனால் முதுகில் ஏற்பட்ட வலி காரணமாக என்னால் பங்குபற்ற முடியவில்லை.

ஆனால், போட்டிக்கு முதல்நாள் இரவு அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அதனால் இந்த போட்டியில் பங்குபற்றும் திட்டத்தை மறந்துவிடுமாறு கூறினேன். ஆனால் அவர் காலையில் குளிசையொன்றை அருந்திவிட்டு என்னிடமும் கூறாமல் சென்றுவிட்டார். அவர் வெற்றிபெற்றதை பின்னர்தான் அறிந்தேன்' என்றார்.

'எனது கணவரின் சிகிச்சைக்காகவும் குடும்பத்துக்காகவும்தான் நான் ஓடினேன். சமூகத்திடமிருந்து சில உதவிகளை நான் எதிர்பார்க்கிறேன். எனது மகனுக்கு ஒரு வேலை வேண்டும். அப்போது எமது குடும்பத்தை நடத்திச் செல்ல முடியும்' என லதா பக்வான் தெரிவித்துள்ளார்.

Sunday, 22 December 2013

எட்டு வடிவ நடைபயிற்சி செய்யும்முறை?




 ஒரு அறையில் அல்லது வெட்டவெளியில் கிழக்குமேற்காக 10 அடி விட்டு கோடு வரைந்து அதற்குள் எட்டு வடிவில் நடைப்பயிற்சி செய்யவேண்டும். இப்பயிற்சியை தெற்கிலிருந்து வடக்குநோக்கி அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செய்யவேண்டும். 15 நிமிட முடிவில் இருநாசித்துவாரங்களின் மூலம் உள்ளிழுக்கபட்ட முழு மூச்சுக்காற்றையும் உணரலாம்.


பயன்கள் பல...


இளமையாக இருக்கலாம் ...


சர்க்கரை நோய் குறையும்.


தலைவலி, மலச்சிக்கல் தீரும்


சளியிலிருந்து விடுதலை


கண்பார்வை அதிகரிக்கும்


செவிகள் நன்றாக கேட்கும்


இரத்த அழுத்தம் குறையும்...இன்னும் நிறைய இருக்கிறது.

Tuesday, 17 December 2013

யோகா,யோகா என்று சொல்கிறார்களே, யோகா என்றால் என்ன..?




பதில்:

யோகா என்பது உடல் பயிற்சி அல்ல.

உங்கள் உடலை முறுக்கிக் கொள்வது,

மூச்சைப் பிடித்துக் கொள்வது,

தலையில் நிற்பது,

இவையெல்லாம் யோகா அல்ல.


யோகா என்ற வார்த்தைக்கு ஒன்றிணைதல் என்று பொருள்.

அதாவது

உடல்,

மனம்

இவைகளை ஒன்றிணைக்கும் செய்யும் பயிற்ச்சியே யோகா பயிற்ச்சி ஆகும்.

மற்றும்,

யோகா என்றால்,

நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சமும்,

நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்,

நாம் செய்யும் ஒவ்வொரு செயலும்,

நாம் உள்ளே இழுக்கும் ஒவ்வொரு மூச்சும்,

நம் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும்,

நம்முடைய வளர்ச்சியின் ஒரு செயல்முறையாக இருக்க வேண்டும் என்பதுதான்.

அப்படி இருந்தால் அதுதான் யோகா.

எனவே யோகத்தின் செயல்முறையில் இல்லாதவர்கள் என்று இந்த உலகில் யாருமே இல்லை.

கேள்வி..

யோகா என்பது எல்லோருக்குமானதா..?

இல்லை இது இந்து மதத்திற்கு மட்டும் உரித்ததா..?



நிச்சயமாக இது எல்லோருக்கும் பொதுவானதுதான் ஆனதுதான்.

ஏனென்றால்,

ஒவ்வொரு மனிதருக்கும் அவருக்குள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற ஏக்கம் இருக்கிறது.

ஒவ்வொருவரும் தாங்களாகவே சில யோகங்களை,

அவர்கள் தங்களுக்கு தெரியாமலேயே செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

தங்களது புத்திசாலித்தனத்தின் மூலமாகவோ,

உணர்ச்சியின் மூலமாகவோ,

தங்கள் உடலின் மூலமாகவோ,

தங்களின் சக்தியின் மூலமாகவோ,

ஏதோ ஒருவிதமான யோகாவை அவர்கள் நாள்தோறும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

அதை சற்று முறைப்படுத்தி செய்தால் பலனுடையதாக இருக்கும்.

மற்றும்,

மக்களுக்கு யோகா என்பது ஒரு புதிய விஷயம் அல்ல.

கேள்வி...

பிராணாயம் என்றால்..?


மூச்சை கட்டுப்படுத்தி அதன் மூலம் மனம்,உயிர் ஆற்றலை கட்டுப்படுத்தும் பயிற்ச்சிக்குத்தான் பிராணாயாமம் ஆகும்.

கேள்வி...

தியானம்.....?


ஏதாவது ஒரு பொருளின் மீது மனதை குவித்து
உள் ஆற்றலை பிரபஞ்ச ஆற்றலோடு கலக்கும் பயிற்ச்சியால் மனதை விரிக்கும் முயற்ச்சியே தியானம் ஆகும்.

Saturday, 14 December 2013

மன ஒருமைப்பாட்டிற்கு எளிய பயிற்சி!












சிவப்பு நிற புள்ளியை கவனமாக பாருங்கள்.


அதையே உற்று பாருங்கள்.


உங்களுடைய எண்ணங்களை சிதறடிக்க வேண்டாம்.


இப்போது நீல நிறமாக வட்டம் மறைந்து விடும்.


மீண்டும் உங்கள் கவனம் சிதறும் போது நீல நிற வட்டம் தோன்றும்.






 Look at the red dot carefully. 


Just keep looking at it. 

Concentrate and don't think about your crush/love. 


The blue circle will gradually disappear. 


And once you loose focus, the blue circle will start re-appearing

Wednesday, 11 December 2013

தியானம் செய்வது எப்படி? தியானம் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன?



தியானம் என்பது அலைபாயும் நம் மனதை ஒருநிலை படுத்தும் நிலையே தியானமாகும். தியானம் இப்படி தான் செய்யவேண்டும் என்ற எந்த வரைமுறையும் கிடையாது பலபேர் பலமுறையில் சொல்வார்கள்.

 ஆனால் அமைதியான சூழலில் (அதிகாலை உகந்தது) இரு கால்களையும் மடக்கி உட்கார்ந்து இரு கண்களையும் மூடிய நிலையில் அமைதியாக நம்முடைய மனம் அலைபாய்வதை நிறுத்தி ஒருநிலைப்படுத்தி உட்கார்ந்து இருப்பதே தியானம் என அழைக்கப்படுகிறது.


இந்த தியானம் செய்வதனால் மனிதனுக்கு பல்வேறு நன்மைகள் உள்ளது. அதில் சில குறிப்பிட்ட நன்மைகளை கீழே கொடுத்துள்ளேன்.


• ஆக்சிஜன் உபயோகத்தை கட்டுக்குள் வைக்கிறது.

• இதய துடிப்பு வேகமாக இருந்தால் அதை கட்டு படுத்துகிறது.

• உயர் ரத்த அழுத்த பிரச்சினையை குறைக்கிறது.

• உங்கள் மனதை பரப்பரப்பில் இருந்து நிம்மதி அடைய செய்கிறது.

• நம்முடைய உடல் பகுதிகள் சீராக இயங்க உதவுகிறது.

• உடல் எடையை குறைக்கலாம்.

• உடலிற்கும் மனதிற்கும் புத்துணர்ச்சியை கொடுக்கும்.

• உடல் சக்தி வீணாவதை தடுக்கும்.

• தன்னம்பிக்கையை ஏற்ப்படுத்தும்.

• மூளை செயல்பாட்டை அதிகரிக்கும்.

• ஞாபக சக்தி அதிகரிக்கும்.

• தேவையில்லாமல் கோபப்படுவதை குறைக்கும்.

• மாணவர்களின் படிக்கும் சக்தி அதிகரிக்கும்.

• பேராசையை தவிர்க்கும்.

• உடலின் சக்தி,வேகம் அதிகரிக்கும்.

• கண்பார்வை அதிகரிக்கும்.

• அமைதியான மன நிலையை கொடுக்கும்.

• மனதிற்கு சந்தோசத்தை கொடுக்கும்.

• முடிவு எடுக்கும் திறனை அதிகபடுத்தும்.

• மற்றவர்களிடம் இருந்து உங்களின் நிலையை அதிகரிக்கும்.

• போதை பொருளுக்கு அடிமையாகி இருந்தால் மீண்டு வர துணை புரியும்.

• ஓயாமல் எதையாவது யோசித்து கொண்டிருப்பதை தடுத்து மனதை ஒருநிலை படுத்தும்.

• சுவாச பிரச்சினைகளை தீர்க்கும்.

• புகை பழக்கத்தில் இருந்து மீள முடியும்.

• எதிர்காலத்தை சிறப்பாக அமைக்க உதவும்.

• லட்சியங்களை எளிதில் அடைய உதவும்.

• ஒரு தகவலை உள்வாங்கும் திறனை அதிகரிக்கும்.

• எந்த விஷயத்தையும் பெரிது படுத்தாமல் மன்னிக்க மனதை தயார் செய்யும்.

• நீங்கள் கடவுள் நம்பிக்கை உடையவராக இருந்தால் தங்களுக்கும் இறைவனுக்கும் இடையே இனம் புரியாத ஆழமான உணர்வை உருவாக்கும்.

• நண்பர்கள் வட்டம் பெருகும்.

• தக்க சமயத்தில் தகுந்த முடிவை எடுக்கும் திறனை அதிகர்க்கும்.

• சமூகத்தில் தங்களின் நிலை உயரும்.

• கிடைத்தை வைத்து சந்தோசப்படும் அறிவை கற்று கொடுக்கும்.

• மன அழுத்தம், மனநோய் உள்ளவர்கள் அதிலிருந்து விடுபட உதவி புரியும்.

• சமூக அக்கறை அதிகரிக்கும்.

• எதுக்காவும் யாரிடமும் கோபப்படுவதை தவிர்க்கும்.

• தூக்கம் வராமல் கஷ்ட படுபவர்கள் படுத்த உடனே தூக்கம் நன்றாக வரும்.

• தூக்கத்தில் கண்ட கனவுகள் வருவதை தவிர்த்து நிம்மதியாக தூங்க முடியும்.

• மருத்துவமனைக்கு செல்லும் தேவையை குறைக்கும்.

• மருந்து மாத்திரைகளிடம் இருந்து உங்களை விடுவிக்கும்.

• மாணவர்கள் பாடங்கள் கவனிக்கும் திறனை அதிகர்க்கும்.

• தற்காப்பை உருவாக்கும்.

• வாழ்க்கையின் மேடு,பள்ளங்களை பக்குவமாக கையாள மனதை தயார்படுத்தும்.

• வயதிற்கேற்ற மன முதிர்வை உருவாக்கும்.

• இசையில் நாட்டமுள்ளவர்களுக்கு கலைத்திறனை அதிகரிக்கும்.

• ரத்த சுத்திகரிப்பை அதிகரிக்கும்.

• நீங்கள் மறந்துவிட்ட சில முக்கிய நிகழ்வுகளை ஞாபகபடுத்தும்.

• உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ்களை நீக்கும்.

• உடலில் உள்ள கொழுப்பு சக்தியை குறைக்க உதவும்.

• இதய நோய்களை கட்டுபடுத்தும்.

• உடலில் உள்ள ஹார்மோன்களின் செயல்பாட்டை சீர்படுத்தும்.

• வியர்வை அதிகம் வெளியேறுவதை சீர்படுத்தும்.

• தலைவலி பிரச்சினை உள்ளவர்கள் அதற்க்கு தீர்வு காணலாம்.

• ஆஸ்மா நோயிலிருந்து பூரண குணமடையலாம்.

• தீய பழக்கங்களை ஒழிக்கும்.

• நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

• கற்பனை திறன் அதிகரிக்கும்.

• மற்றவர்கள் கூறும் அறிவுரையை தட்டி கழிக்காமல் பொறுமையோடு கேட்டு அதன்படி நடக்கும் மனநிலையை உருவாக்கும்.

• உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் உண்டாகும்.

• உங்களின் அறிவுத்திறன் வளரும் விகிதம் அதிகமாகும்.

• பெரியவர்களை மதித்து நடக்கும் உயரிய மனம் உருவாகும்.

• உங்களுக்கு இருக்கும் கடமைகளை உணர செய்யும்.

• கடமைகளில் வெற்றியும் பெறச்செய்யும்.

Sunday, 10 November 2013

முதுகு வலியை போக்கும் பயிற்சி!

முதுகு வலியை போக்கும் பயிற்சி


 சிலவகை உடற்பயிற்சிகள் விரைவில் பலன் தரக்கூடியவை. அந்த வகையில் இந்த பிலேட்ஸ் பயிற்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த பயிற்சி செய்ய ஆரம்பத்தில் சற்று கடினமாக இருக்கும். ஆனால் செய்ய செய்ய விரைவில் நல்ல பலன் தரக்கூடியது.

இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் கால்களை நீட்டி மல்லாந்து படுத்துக் கொள்ளவும். பின்னர் இயல்பாக சுவாசத்தில் மெதுவாக கால்களை பாதி வரை மேலே தூக்கவும். அப்போது தலை, உடலை தோள்பட்டை வரை மெதுவாக தூக்கவும்.

கைகளை சற்று மேலே படத்தில் உள்ளபடி தூக்க வேண்டும். இந்த நிலையில் 15 விநாடிகள் இருந்தபின்னர் பழைய நிலைக்கு வரவும். இவ்வாறு இந்த பயிற்சியை 20 முறை செய்ய வேண்டும். ஆரம்பத்தில் இந்த பயிற்சி செய்து சற்று கடினமாக இருக்கும்.

அதனால் 10 முறை செய்தால் போதுமானது. பின்னர் நன்கு பழகிய பின்னர் 20 முறையும் அதற்கு மேலும் செய்யலாம். இந்த பயிற்சியை தொடர்ந்து 3 மாதம் செய்து வந்தால் முதுகு வலி பிரச்சனைகள் தீரும். மேலும் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் தொப்பை மற்றும் தொடையில் உள்ள அதிகப்படியான சதை குறையும்.

Monday, 7 October 2013

இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி !

இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி


இன்றைய பெண்கள் தொப்பை மற்றும் இடுப்பின் அதிகப்படியான சதையால் பெரிதும் கவலைப்படுகின்றனர். இதற்காக உடற்பயிற்சி கூடத்திற்கு போய் தான் பயிற்சி செய்ய வேண்டும் என்பதில்லை. வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய உடற்பயிற்சியை பார்க்கலாம்.


இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் 3 மாதத்தில் இடுப்பு சதை குறைவதை காணலாம். பயிற்சி செய்முறை   விரிப்பில் நேராக படுத்துக் கொள்ளவும். பின்னர் வலது பக்கமாக திரும்பி படுத்துக் கொள்ளவும். வலது காலின் மேல்  இடது கால் இருக்க வேண்டும்.


மெதுவாக வலது கையை தரையில் ஊன்றி உடலை மெதுவாக மேலே உயர்த்தவும். இடது கையை இடுப்பில் (படத்தில் உள்ளபடி ) வைத்துக் கொள்ளவும். சில விநாடிகள் இந்த நிலையில் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும்.


இவ்வாறு வலது பக்கம் 20 முறை செய்யவும். பின்னர் அடுத்த பக்கம் திரும்பி இடது பக்கம் இதே போல் 20 முறை செய்யவும். இவ்வாறு மாறிமாறி செய்ய வேண்டும்.


ஆரம்பத்தில் 10 முறை செய்தால் போதுமானது. பின்னர் எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 20 முறைக்கு மேல் செய்யலாம். இந்த பயிற்சியை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Thursday, 12 September 2013

சசாங்காசனம்!

சசாங்காசனம்

செய்முறை:

விரிப்பில் வஜ்ராசனத்தில் அமரவும்.  பின்னர் நிமிர்ந்து இயல்பான சுவாசத்தில் மெதுவாக உடலை முன் புறமாக குனியவும். உங்கள் தலை படத்தில் உள்ளபடி கால்களுக்கு இடையே இருக்க வேண்டும்.

கைகள் இரண்டையும் பின்புறமாக கொண்டு சென்று கால் பாதத்தின் பின்புறத்தை தொடவும். இந்த நிலையில் 15 வினாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும்.இவ்வாறு இந்த ஆசனத்தை 3 முதல் 5 முறை செய்ய வேண்டும்.

பயன்கள்:

முதுகுத்தண்டுக்கு மேலும் புதிய ரத்தம் கிடைக்க வழி செய்கிறது. நரம்பு மண்டலத்திற்கு ஆக்சிஜன் கிடைக்க வழி செய்கிறது. தைராய்டு, மூலம், ஜலதோஷம், சைனஸ் பிரச்சனை போன்ற நோய்களை குணமாக்குகிறது. தூக்கமின்மை, சர்க்கரை நோய் மற்றும் மனநோய் தீருகிறது.

ஃப்ரன்ட் அண்ட் சைடு லெக் ரைஸ்!


ஃப்ரன்ட் அண்ட் சைடு லெக் ரைஸ்



சுவருக்கு அருகே நேராக நின்று கொள்ளவும். வலது கையை சுவரில் வைத்துக்கொண்ட இடது கையை இடுப்பில் வைக்கவும். இந்த நிலையில் இடது காலை முடிந்த வரை முன்னால் உயர்த்தவும்.

பின்பு பழைய நிலைக்கு வந்த பின் இடது பக்கம் உயர்த்தவும். இது போல் 15 முறை செய்தவுடன் இடது கையை சுவரிலும் வலது கையை இடுப்பிலும் மாற்றி வைத்து 15 முறை செய்ய வேண்டும். இது ஒரு செட். சில விநாடிகள் ரிலாக்ஸ் செய்த பின் மேலும் 2 செட்கள் செய்ய வேண்டும்.

பலன்கள் :

இடுப்புத் தசைகள் வலுவடையும். கோர் மசில்ஸ் எனப்படும் வயிற்றைச் சுற்றியுள்ள அனைத்துத் தசைகளும் வலுப்பெறும். பெண்களுக்கு, அடி வயிற்றுப் பகுதிகள் வலுவடையும். கால்கள் வலுப்பெறும். 

அபானாசனம்! செய்முறை!



 அபானாசனம்



செய்முறை :

முதுகு தரையில் படும்படி விரிப்பில் படுக்கவும். கால்களை மடித்து சற்று உயர்த்திய நிலையில் முட்டிகளை உள்ளங்கைகளால் பிடித்துக்கொள்ளவும். இருமுட்டிகளுக்கும் இடையில் சிறிது இடைவெளி இருக்கட்டும். மூச்சை உள்ளிழுத்துக்கொள்ளவும்.



பிறகு, மூச்சை வெளியே விட்டபடி முட்டிகளை மார்புப் பக்கம் கொண்டு செல்லவும். பிறகு, மூச்சை உள்ளிழுத்தபடியே பழைய நிலைக்குக் கொண்டு வர வேண்டும். இவ்வாறு ஆறு முறை செய்யவும்.



பலன்கள்: 

வயிறு நன்றாக அமுக்கப்படுவதால் அப்பகுதி மசாஜ் செய்யப்பட்ட உணர்வு ஏற்படும். முதுகு, தோள்பட்டையில் ஆரோக்கியம் பெறும். வயிறு சம்பந்தமான பிரச்னைகள் குறைந்து, அடிவயிற்றில் தேங்கி இருக்கும் கழிவுகள் நீங்கும். 

Wednesday, 11 September 2013

உடல் உறுதியாகும் பயிற்சி!


உடல் உறுதியாகும் பயிற்சி


உடலில் உறுதி அடைய பல்வேறு பயிற்சிகள் உள்ளது. அதிலும் இந்த பயிற்சி மிகவும் எளிமையானது. இந்த பயிற்சியை வீட்டில் தொடர்ந்து தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தினமும் இந்த பயிற்சி செய்ய 20 நிமிடம் இருந்தால் போதுமானது.

இப்போது இந்த பயிற்சியை பார்க்கலாம். முதலில் தரையில் வசதியாக நிற்கவும். காலை லேசாக அகட்டி, மூச்சை உள் இழுத்தபடி ஐந்து விநாடிகள் இருக்கவும். பிறகு லேசாக முதுகைப் பின்னால் நகர்த்தவும். இப்போது மூச்சை உள் இழுத்தபடி இடது காலைப் பின்னால் மடக்கி இடது கையால் பிடிக்கவும்.

மூச்சை வெளியே விட்டபடி மீண்டும் காலைப் பழைய நிலைக்கு கொண்டு வரவும். அடுத்து கால் மாற்றி இதேபோல் செய்யவும். இப்படித் தொடர்ந்து ஐந்து முறை செய்ய வேண்டும்.

பலன்கள்... இந்த பயிற்சி அடிவயிற்றுப் பகுதிகளுக்கு மிகவும் நல்லது. இந்த பயிற்சி தொடர்ந்து செய்து வந்தால் உடல் உறுதியாகும்.


வயிற்றுக்கான எளிய பயிற்சி!


வயிற்றுக்கான எளிய பயிற்சி

வயிற்றுப்பகுதியில் உள்ள சதை குறைய எளிய பயிற்சிகள் பல உள்ளன. அவற்றுள் இதுவும் ஒன்று. இந்த பயிற்சியை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஆனால் அதிக தொப்பை உள்ளவர்களுக்கு இந்த பயிற்சி பலன் தராது. தரையில் நன்றாக காலை நீட்டி உட்காரவும். வலது காலை இடது தொடையில் உள் பக்கமாக வைக்கவும். மூச்சை உள் இழுத்தபடி வலது கையை மேலே உயர்த்திய படி, இடது கையால் இடது கால் பாதத்தை முடிந்த வைர தொட முயற்சிக்கவும்.

கைகளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருகையில் மூச்சை வெளியே விடவும். கால்கள் மாற்றி மீண்டும் இதேபோல் செய்யவும். இப்படி பத்து முறை தொடர்ந்து செய்ய வேண்டும்.  

ஆரம்பத்தில் இந்த பயிற்சியை 10 முறை செய்தால் போதுமானது.படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 25 முதல் 30 வரை செய்யலாம்.இந்த பயிற்சியை தொடர்ந்து 3 மாதம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பலன்கள்.....அடிவயிற்றுபாகங்களுக்கு அழுத்தம் கிடைக்கும். கல்லீரல், கணையம், பித்தப்பை போன்ற உறுப்புகளின் செயல்பாடுகள் சீரடையும். 


தொப்பை குறைய உதவும் க்ரஞ்சஸ் பயிற்சி!


 தொப்பை குறைய உதவும் க்ரஞ்சஸ் பயிற்சி


இன்றைய இளைஞர்களை அனைவரையும் பாடாய் படுத்தும் பிரச்சினை எதுவென்றால் அது தொப்பை. இந்த தொப்பையை குறைக்க அவர்கள் எந்த விதமான முயற்சியும் எடுக்க நேரம் கிடைப்பதில்லை.

அப்படிப்பட்டவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய எளிய பயிற்சியை தெரிந்து கொள்ளுங்கள். இந்த பயிற்சியை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் 3 மாதத்தில் தொப்பை படிப்படியாக குறைவதை காணலாம்.

செய்முறை: 


முதலில் விரிப்பில் கால்களை நேராக நீட்டி படுத்துக் கொள்ளவும். கைகளை உடலோடு ஒட்டி வைக்கவும். பின்னர் கால்கள் இரண்டையும் முட்டி வரை மடக்கவும். இயல்பான சுவாசத்தில் இருந்தபடி மெதுவாக முன்னோக்கி வந்து கைகளால் கால் முட்டியை தொடவும். இவ்வாறு எழும் போது முதுகு வளைய கூடாது. படத்தில் உள்ளபடி தான் செய்ய வேண்டும்.

அப்போது தான் முழுபலனையும் பெற முடியும். இவ்வாறு இந்த பயிற்சியை தினமும் 30 முறை செய்ய வேண்டும். பார்க்க எளிமையாக தெரிந்தாலும் செய்யும் போது இந்த பயிற்சி சற்று கடினமாக தான் இருக்கும்.

ஆரம்பத்தில் இந்த பயிற்சியை குறைந்த எண்ணிக்கையில் உங்களால் முடிந்த அளவு செய்தால் போதுமானது. பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 50 முறை கூட செய்யலாம். செய்யும் எண்ணிக்கையின் அளவை பொறுத்து விரைவில் பலன் கிடைக்கும். 

இடை மெலிய எளிய உடற்பயிற்சி!


 இடை மெலிய எளிய உடற்பயிற்சி


இருபது வயதிலேயே இடை பெருத்து நடை தளர்ந்து போகின்றனர் இன்றைய இளம் பெண்கள். ஃபிட்டான தோற்றம் என்பது பெண்களுக்கு பெரும் சவாலாகவே இருக்கிறது. அதிலும் திருமணம், குழந்தைப்பேறுக்கு பிறகு, தங்களின் உடல் உருமாற்றத்தை பார்த்து பல  பெண்கள் பதட்டத்துக்கு ஆளாகின்றனர். 


மெல்லி இடைக்கான சிறப்பு பயிற்சி இதோ... முதலில் தரையில் குப்புறப்படுக்கவும். இரண்டு கைகளையும் தரையில் ஊன்றிய நிலையில் கால்களை லேசாக அகட்டவும். பிறகு மெதுவாக மூச்சை உள் இழுத்தபடி உடம்பை மேலே உயர்த்தவும். 



முகத்தை இடது பக்கம் திருப்பி, வலது கால் பாதத்தை பார்க்கவும். பத்து எண்ணும் வரையில் அதே நிலையில் இருக்கவும். மூச்சை வெளியே விட்டபடி திரும்பவும் பழைய நிலைக்கு திரும்பவும். இதே போல் மூசசை உள் இழுத்தபடி வலது பக்கம் திரும்பி இடது கால் பாதத்தை பார்க்கவும். 



பத்து எண்ணியவுடன் மூச்சை வெளியே விட்டபடி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும். இதுபோல் தொடர்ந்து 10 முறை செய்யவும்.

பலன்கள்:

முதுகு வலி நீங்கும். முதுகுதண்டு வலுப்பெறும். மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்யும். மலச்சிக்கல் குணமாகும். வயிற்று பகுதியில் சதை நீங்கி ரத்த ஓட்டம் அதிகரிக்கும். முதுகு தண்டுவடத்தில் உள்ள வலி நீங்கும். தைராய்டு பிரச்சனைகளுக்கு இந்த பயிற்சி ஏற்றது.